Oct 27, 2012

Hey Ram - 2000 \ India \ 'சட்டம்... லீவுல போயிருக்கு’ \ ஹேராம் = 027

நண்பர்களே...
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.



‘கல்கத்தா கலவரத்தின்’ வெறியாட்ட விளைவுகளை...
ஹேராமில் சித்தரிக்கப்பட்ட விதத்தை ஆய்வு செய்து வருகிறோம்.

 'History is a fragment of Biology' = Will Durant.

டார்வினின் விஞ்ஞான கோட்பாடான,
Natural Selection = Survival of the Fittest ஐ...   
கண்டு வியந்தார்  ‘மாமேதை காரல் மார்க்ஸ்’.
எனினும் மனித குலம், உழைக்கும் வர்க்கத்தின் சகோதர சமத்துவத்தால் அதனை கடந்து...  ‘மனித மேம்பாடை’ அடையும் என  நம்பிக்கையும் கணிப்பும் கொண்டிருந்தார்  ‘ மாமேதை காரல் மார்க்ஸ்’.
இதன் வெளிப்பாடாக, தனது  ‘டாஸ் கேப்பிடல்’ என்ற சமூக ஆய்வு நூல்களை டார்வினுக்கு அர்ப்பணம் செய்ய விரும்பினார்.

ஆனால் மனித குலத்தின் தோல்வி...Social Darwinism.
அதன் குழந்தை...Fascism.

 ‘சோசியல் டார்வினிசம்’ என்பதின் எளிய விளக்கம்...
ஒருவர்  ‘அம்பானி’...
மற்றொருவர்  ‘அருக்காணி’.

‘பாசிசம்’ என்பது,
இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்போ...
புதிய உருவாக்கமோ அல்ல.
எல்லா காலங்களிலும் இன,மத அழிப்பும்,
சமூக ஒழிப்பும் நிகழ்ந்தே வந்துள்ளன.
மன்னர்களை அடுத்து மதநெறியாளர்களும், மத வெறியாளர்களும் தொடர்ந்து பாசிச போக்குகளை  கடைப்பிடித்து வந்துள்ளனர்.
Human History is Simply a Compendium of violence.
ஆனால் இருபதாம் நூற்றாண்டில்,
பாசிச போக்குகள் அகிலம் பரவிய கொடூரமாக மாறியது மட்டும் 
புதிய நிகழ்வு.

சாகேத்ராம் அபயங்கரைத்தேடி வரும்போது,
பின்னணி சப்தமாக ‘எக்ஸ்டர்னல் கம்போசிஷனில்’...
ஒரு ஆட்டுக்குட்டியின் குரல் ஒலிக்கிறது.
‘ஒரு ஆடு, பலியாகச்செல்கிறது’ என்பதன் குறியீடு.

ஹேராமில் சாகேத்ராமும் அபயங்கரும் மீண்டும் சந்தித்து உரையாடுவதில்  ‘பாசிச வழி’ பசப்பு வார்த்தைகளை கேட்கலாம்.

அபயங்கரின் உரையாடல்களையும்...
சாகேத்ராமின் உரையாடல்களையும்...
தனித்தனி வண்ணத்தில் கொடுத்துள்ளேன்.


Are you looking for me?

So are they. Come on

Why haven't you washed?

You are not a Bengali, are you?

-No, No.

What is your mother tongue?

-Tamil.

Tamil!
Where are you from?

-Thanjavore

l don't believe this!
l am a Thanjore Marata.

இந்த உரையாடலின் தாத்பர்யம் புரிய தஞ்சை மராத்தியர்களின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.
தெரியாதவர்கள் கீழ்க்கண்ட பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்.

அழகுத்தமிழில் மராத்தி மன்னர்கள் வாழ்க்கையை படிக்க ‘கிளிக்’கவும்.

How many did you
kill yesterday?

l am a murderer.

ln anger l have
the guts to kill people.
But l can't pick up
the courage to kill myself.

You have your reasons,
your faith, your philosophy.

l have no excuses. Half my life,
half my soul is dead! Gone!

l am not a man like this, Sir!

My wife! ln front of me, they...

My sister. 20 men
enjoyed raping her.

After they were done,
they killed her.

There are so many like me...
so many mothers, so many sisters.
ls your wife dead?

அபயங்கர்,
தனது சகோதரி கற்பழித்துக்கொல்லப்பட்டதை சொல்லும் போது
முக பாவத்திலும், வார்த்தை உச்சரிப்பிலும் 
எந்த உணர்ச்சி பிரவாகமும் இருக்காது.
சித்தாந்தத்தில் ஊறிய குரலாக பிரதிபலிக்கும்.

அதே நேரத்தில் சாகேத்ராம்,
தனது மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதை...
‘சொல்ல முடியாத தொனியில்’ விவரிக்கையில் சோக உணர்ச்சி பெருக்கெடுத்து இருப்பதை காண முடியும்.
தனி மனிதத்துயரத்தின் அவலக்குரலாக ஓலிக்கும்.

‘வசன உச்சரிப்பு மாடுலேஷன் + உடல்மொழி’ மூலம்
இரண்டு கதாபாத்திரங்களின் முரண்பாட்டை  சித்தரித்ததில் ஜொலிக்கிறார் இயக்குனர் கமல். 

Who do you think
is responsible for all this?

Bengal Premier Suhrawardy?

No.

Barrister Mohammed Ali Jinnah?

No!

There is only one man,
my friend.
Barrister Mohandas Karamchand Gandhi.

‘பாரிஸ்டர் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்ற பெயரை,
அபயங்கர் நிறுத்தி நிதானமாக உச்சரிக்கும் போது...
‘திருவின் காமிரா’ மிட் ஷாட்டிலிருந்து மெல்ல நகர்ந்து...
அபயங்கரின் குளோசப்பாக மாறும் ஷாட் அர்த்தபுஷ்டியானது.

From the very beginning,
he has been appeasing them.
Beginning with the Khilafat movement..
he has watered this trend

the small green sapling...
and now lt is huge tree!

“ஆரம்பத்தில இருந்து...
கிலாபத் இயக்கம்... அது இதுன்னு
அந்த பச்சை செடிக்கு
தண்ணி ஊத்தி...தண்ணி ஊத்தி மரமா ஆக்கிட்டாரு”

அபயங்கரின் இந்த டயலாக்,
காந்திஜியின் செயல்பாடுகள்...
அவரது கொள்கைக்கு மாறுபட்ட அணியிலிருந்தவர்களை
எவ்வாறு கடுப்பேற்றி இருக்கிறது
என்பதை உணர்த்துகிறது.

Where are you going?

To the police.
l won't lead them to you.

l go to seek punishment
for my crimes.

Punishment?
Who is to punish whom?

இந்த உரையாடல்,
‘ரஷ்ய இலக்கிய மாமேதை’  'தஸ்தாவ்யெஸ்கியின் குற்றமும் தண்டனையும்’ [ Crime & Punishment ] என்ற இலக்கியத்தை ஞாபகப்படுத்தவில்லையா !

The law has taken leave.
But we are still at work.

“ சட்டம் லீவுல போயிருக்கு...
   நாமதான் இருக்கோம் ”
என்ற உரையாடல்...
‘அதிகாரமில்லாத  அங்குசம்’...
‘மதம் பிடித்த யானை’... 'Metaphor'க்கு  விளக்க உரை எழுதி விட்டது.
அபயங்கருக்கு பின்னணியில் ‘ மதம் பிடித்த யானையை’
காட்சி படுத்தி  ‘விஷுவல் உரை’ எழுதி விட்டார் இயக்குனர் கமல்.

இக்காட்சியின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம்.


11 comments:

  1. #சோசியல் டார்வினிசம் என்றால்...
    ஒருவர் அம்பானி...
    மற்றொருவர் அருக்காணி.#

    அருமையான விளக்கம். நிறைய படிக்கத்தூண்டுகிறது உங்களின் விளக்கங்கள்

    ReplyDelete
  2. சோசியல் டார்வினிசத்திற்கு... ‘கரெண்ட் விளக்கமாக’ சின்மயியையும்...சின்ன மாயியையும் உதாரணம் காட்ட விரும்பினேன்.

    களி தின்னவும் விருப்பமில்லை.

    எனவே வசதியாக அம்பானிக்கு தாவி விட்டேன்.

    பாராட்டுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. இப்போ களி எல்லாம் போடறது இல்லையாம் !! ;-)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே !
      வெளிநாட்டுப்பயணம் சுகமாக அமைந்ததை கோவைநேரம் ஜீவா பதிவைப்பார்த்து தெரிந்து கொண்டேன்.

      லைட்டா பொறாமை.

      Delete
  4. superb sir.........am a huge fan of hey ram.........am proud of it..........

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வினோத் அவர்களே...
      பெருந்தலைவரின் படத்தை தாங்கள் புரோபைல் படமாக வைத்திருப்பது எனக்கும் மிகவும் பிடித்தமாக இருக்கிறது.

      Delete
  5. அருமையா தொகுத்து தந்து இருக்கீங்க பாஸ். தேங்க்ஸ்

    ReplyDelete
  6. பாசிசச்சிங்கம் வேட்டையாடிய தேசத்திலிருந்து வந்திருக்கும் பாராட்டு என்னை நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  7. மதம் பிடித்த யானையில் இருந்து ஒரு பாசுரம் தொடங்கி(மதம் கொண்ட வேழம் மாவுத்தன் அவனும் இன்றி?)கட்டுக்குள் இருக்கும் யானைக்கு காட்சி மாறும் என்பது போல ஞாபகம். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  8. ”அதிகாரமில்லாத அங்குசம்’...
    ‘மதம் பிடித்த யானை’... 'Metaphor'க்கு விளக்க உரை எழுதி விட்டது.
    அபயங்கருக்கு பின்னணியில் ‘ மதம் பிடித்த யானையை’
    காட்சி படுத்தி ‘விஷுவல் உரை’ எழுதி விட்டார் இயக்குனர் கமல்.”




    மதம் கொண்ட வேழம் மாவுத்தன் அவனும் இன்றி என தொடங்கும் பாடலுடன் கட்டுக்குள் இருக்கும் யானைக்கு காட்சி மாறுவது போல ஞாபகம்,அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. அண்ணே ஹேராம் படத்தை வச்சு ph.d பண்ண போறிங்களா???? அருமையான அராய்ச்சி கட்டுரைகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.