Dec 30, 2011

நாளை நமதே!


நண்பர்களே! வணக்கம்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2012ல் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்...
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவிஞரின் வார்த்தைகளில் வாழ்த்தி புதிய ஆண்டில் புதிய உலக சினிமாவோடு சந்திக்கிறேன்.நன்றி.வணக்கம். 

Dec 16, 2011

மயக்கமென்ன...செல்வராகவனின் Beautiful mind


கடந்த ஒரு மாதமாக உலக சினிமா எதுவுமே பார்க்கவில்லை.
பார்க்கும் மன நிலையிலும் இல்லை.
கடந்த ஒரு மாத நிகழ்வை இரண்டு உலக சினிமா எடுத்து விடுவேன் என்னிடம் பணம் இருந்தால்.
இப்போது கூட நெருக்கடியில் இருக்கிறேன்.
சொந்த வீட்டில் வசிக்கும் இரண்டு பேர் எனக்கு ஜாமீன் தர முன் வர வேண்டும்.
உயர் நீதி மன்ற உத்தரவு அப்படி.
இப்போதுதான் தெரிகிறது எனக்கு உதவ முன் வருபவர்கள் யாருக்குமே சொந்த வீடு கிடையாது.
இருப்பவர்களுக்கு மனம் கிடையாது.
எனக்கு வாய்த்த நீதிபதி மிகவும் நேர்மையானவர்.
போலியான நபர்களை ஜாமீந்தாரர்களாக காட்டினால் என்னை உள்ளே தள்ளி விடுவார்.
இந்த நெருக்கடியில் என்னை உயிரோடு வைத்திருக்கும் நல்லவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

முதலில்திரு.ரகுநாதன் அவர்கள்.
எனது வாடிக்கையாளர்.
எனது பதிவை உடனே படிப்பவர்.
கூப்பிட்ட குரலுக்கு ஒடிவராதவர்கள் மத்தியில் கூப்பிடாமல் ஒடி வந்தவர்.
இவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் உலகசினிமாவால் வந்தது.
உலக சினிமாவின் அடிமை என்றே இவரைச்சொல்லலாம்.
இவருக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இன்னும் நல்ல உலக சினிமாவை
 தேடித்தேடி கொடுப்பதாகத்தான் இருக்க முடியும்.
நன்றி ரகு.

இரண்டாவது.... ரகுவின் நண்பர் கோவை ஆனந்தாஸ் ஹோட்டலில் பங்குதாரர்.
என்னை ஒட ஒட விரட்டிய போலிசை தடுத்து நிறுத்திய கண்ண பரமாத்மா.
இவரை ஒரே ஒரு தடவைதான் எனது கடையில் ரகுவோடு பார்த்திருக்கிறேன்.
ஒரு மாதமாக மூடிக்கிடந்த எனது கடையை திறந்த அப்பர் பெருமானாக இவரை பார்க்கிறேன்.
இவரது முகம் நினைவில் இல்லை.
ஒரு தடவைதானே பார்த்திருக்கிறேன்!
அட... அவரது பெயர் கூட எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறதே!
சமீப காலமாக மூளை வேலை நிறுத்தம் செய்து வருவதை நானறிவேன்.
பிளாக் படத்தில் வரும் அமிதாப்....தன்மாந்த்ரா படத்தில் வரும் மோகன்லால் போல் நான் மாறும் சாத்தியக்கூறுகள் என்னிடம் தென்படுவதை அவதானித்து வருகிறேன்.
அவரிடமே பெயரைக்கேட்டு நாளை தெரிவிக்கிறேன்.
அது வரை அவர் கோவை ஆனந்தாஸ் ஹோட்டல் பங்குதாரராகவே இருக்கட்டும்.
நன்றி ரகுவின் நண்பரே!

மூன்றாவது எனது நண்பன் உயர்நீதி மன்ற வக்கீல் முபாரக்.
உயிர் காப்பான் தோழன் என்ற மூதுரைக்கு வடிவம் கொடுத்தவன்...கொடுத்துக்கொண்டிருப்பவன்.
இவனுக்கு பீஸ் 12 Angry Man  டிவிடி வழங்க வேண்டும்....அவ்வளவே.
சென்னை உயர்நீதி மன்ற வக்கீல்களிலேயே அழகானவன்...
திறமையானவன்.
நடிகை ரோஜா செக் மோசடி வழக்கில் சிக்கி திணறிய போது காப்பாற்றியவன்.
ஆபத்பாந்தவன்.
அரபி தெரியும் என்பதால் அரபு நாடுகளில் துன்புறும் தமிழர்களுக்கு உதவ அடிக்கடி பறக்கிறான்.
நன்றி நண்பா...

நான்காவது கோவை நீதி மன்ற வக்கீல் ஆர்.கே.ராஜன்.
அதிமுகவில் பொறுப்பில் இருக்கிறார்.
புரட்சித்தலைவருக்கும்...தலைவிக்கும் பக்தர்.
முப்பதாண்டு கால நண்பர்.
தமிழ் மட்டுமே எழுத...படிக்க....பேசத்தெரிந்த மலையாளி.
இது வரை பீஸே வாங்கவில்லை.
வேறொரு வக்கீல் என்றால் முப்பதாயிரம் சுளையாக்கியிருப்பான்.

இவரது மகன் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக சேர.... அனைத்து தகுதிகளோடும்.... ஆசைப்படுகிறான்..
இவனை நீங்கள் விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் தொடரில் காணலாம்.
அச்சு... அசல்... அக்னிநட்சத்திர படத்தில் ஒரு பாடலில் மின்னி மறையும் பிரபுதேவாவை போலவே இருப்பான்.
தமிழ் சினிமாவில் இவனுக்கு ஒரு சிம்மாசனம் காத்திருக்கிறது.
அதற்க்கு அணிலாக உதவுவதே ராஜனுக்கு நான் தரும் பீஸ்.


கடந்த நவம்பர் மாதம் 2011ன் கறுப்பு மாதம்.
எதிர்பாராத துன்பங்கள்...துயரங்கள்...சுனாமியாக வந்து தாக்கியது.
ஒரே மாதத்தில் நாலு சுனாமி.
மூன்றை கடந்து விட்டேன்.
இரண்டாவதாக வந்த சுனாமியை மட்டும் உங்களிடையே இந்தப்பதிவில் பகிர்கிறேன்.
கடந்த நவம்பர் 18 அன்று பெங்களூரூ புத்தகக்கண்காட்சிக்கு ஸ்டால் போடப்போனேன்.
அன்று காலையிலேயே எனது டிவிடி கடையை போலீஸ் சோதனை செய்வதாக தகவல் கிடைத்தது.
கடையில் இருக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட டிவிடிக்களை சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஒரு தமிழ்ப்படமோ, ஃபுளூ பிலிமோ கிடைக்கவில்லை.
அவற்றை நான் விற்ப்பது இல்லை.
இருந்தாலும் 500க்கும் மேற்ப்பட்ட ஆங்கில படங்களை பறிமுதல் செய்து கடை ஊழியரை கைது செய்து....
 என்னையும் குற்றவாளியாக சேர்த்து வழக்கு பதிவு செய்து விட்டார்கள்.
ஒரிஜினல் காப்பி ரைட் டிவிடி விற்க்க நான் தயார்தான்.
ஆனால் அதன் விலை?
599 ரூபாய்!.
35 ரூபாய்க்கு தமிழ்ப்படம் விற்க்கும் மோசர்பெயர் நிறுவனம் உலகசினிமாவை 500 ரூபாய்க்கு மேல் விற்க்கிறது.
என்ன கொடுமை இது?.
நல்லசினிமாவை நடுத்தரவர்க்கம் பார்க்க விடக்கூடாது என்ற அரக்கத்தன சிந்தனையே இந்த அதிக விலை.
நேற்று வந்த அவதாரும் 500 ரூபாய்.
1959ல் வந்த பென்ஹரும் 500 ரூபாய்.
கமர்சியல் குப்பை படங்களை 99 ரூபாய்க்கு விற்க்கும் கம்பனி....
 தரமான படங்களை மட்டும் 500 ரூபாய்க்கு....
 விற்க்கும் அயோக்கியத்தனத்திற்க்கு சட்டம் துணை போகலாமா?
99ரூபாய்க்கு உலகசினிமாவை தாருங்கள்.
நானும் விற்க்கிறேன்.
மக்களும் வாங்குவார்கள்.

நான் எனது கொள்கையை விட்டு தமிழ்ப்படமும், ஃபுளு பிலிமும் விற்க்க ஆரம்பித்தால் ஒரே வருடத்தில் கோடீஸ்வரனாக முடியும்....
 போலிசில் சிக்காமலே.....அதற்க்குறிய தந்திரங்கள் அனைத்தும் அறிவேன்.

பியூட்டி புல் மைண்ட் திரைப்படத்தின் உரிமம் பெறாத டிவிடி விற்றதால் என் மீது வழக்கு.
அதே படத்தின் கதையை உரிமம் பெறாமல் திரைப்படம் எடுத்த செல்வராகவனுக்கு பாராட்டு....பரிசு.

பியூட்டி புல் மைண்ட் படத்தை அப்பட்டமாக காப்பியடிக்காமல் தனது
கற்பனை வளத்தால்....
மயக்கமென்ன படத்தை.... ஒரு புதிய படம் மாதிரி....
 மயக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டார் செல்வ ராகவன்.
பியுட்டி புல் மைண்ட்டை அணுஅணுவாக ரசித்தவன் நான்.
நானே.... மயக்கமென்ன படத்தில் மயங்கினேன்.

தனுஷின் நடிப்பும்...ஜி.வி.பிரகாஷின் பாடல்களும்...படமாக்கப்பட்ட விதமும் அனுபவித்து ரசித்தேன்.

செல்வராகவன் கிளிஷேக்கள் சற்று தூக்கலாக இருந்தது.
தவிற்த்திருந்தால் படம் ஒரு ஆடு களமாக பரிணமித்திருக்கும்.
இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி 300 ரூபாய் பிளாக்கில் வாங்கி பார்த்தேன்.
இரண்டரை மணி நேரம் என்னை குஷிப்படுத்தியதற்க்கு அந்த கட்டணம் குறைவுதான்.

Dec 14, 2011

கேரளாவில் நான் பட்ட பாடு

டிசம்பர் 2லிருந்து 19 வரை எர்ணாக்குளத்தில் கொச்சி புத்தகக்கண்காட்சியில் இருந்தேன்.
ஊடகங்கள் முல்லைப்பெரியார் பிரச்சனையை, தினமும் தலைப்பு செய்திகளாக்கி வெடிமருந்தை நிரப்பிக்கொண்டே இருந்தது.
மேடைகளில் பேச்சாளர்கள் மனிதவெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் பேப்பர்களை பார்த்தால் இங்குள்ளவர்கள் அதே வேலையை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
தமிழ்நாட்டிலிருந்து பத்து பேர் ஸ்டால் போட்டிருந்தோம்.
உள்ளூர பயம் ரம்பம் போல் அறுத்து கொண்டிருந்தது.
ஆனால் கேரள மக்கள் எங்கள் பயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.
யாருமே எங்களை விரோதி போல் பாவிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஸ்டாலில்நல்ல கூட்டம்...
நல்ல வியாபாரம்.
‘கேரள கவுமதி’என்ற நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னை பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்து என் ஸ்டாலை பிரபல்யபடுத்தி விட்டார்.

கேரளாவில் இன்றும் ஆட்டோ 15ரூபாய்க்கு வருகிறார்கள்.
அதே தூரத்திற்க்கு சென்னையில் 30ரூபாயும்...கோவையில் 40ரூபாயும் உரித்து விடுவார்கள்.
 தியேட்டரில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் 50ரூபாய்க்கு புல் ஏசி போடுகிறார்கள்.


சரவணபவன் மாதிரி ஏ கிளாஸ் ஹோட்டலில் 45 ரூபாய்க்கு புல் மீல்ஸ் சாப்பாடு.
மொத்த கேரளாவே மிடில் கிளாஸ் சொர்க்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கேயிஸ் என்ற ஹோட்டல் பிரியாணி உலகின் டாப்10ல் அடங்கும்.
அவர்கள் உணவையே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
சாம்பார்,ரஸம் எல்லாவற்றிலும் பெருங்காயம்.
மீன் குழம்பில் இஞ்சி...
பாயாஸத்தில் சுக்கு...
இறால் வறுவலில் பூண்டு என சாமர்த்தியமாக இணைத்து விடுகிறார்கள்.

என்னடா ஒரே பாராட்டு மயமா இருக்கே....தலைப்புக்கு சம்பந்தம் இல்லியேன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே தலைப்புக்கு வந்துட்டேன்.
புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.
இன்னும் அவர்கள் அகிரா குரோசுவா,சத்யஜித்ரே போன்ற இயக்குனர்களை தாண்டி வரவில்லை.
சமீபத்திய இயக்குனர்களில் கிம்கிடுக் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்.
ரோடு ஹோம்,வே ஹோம் டிவிடி விற்ப்பதற்க்கு கதகளி ஆடவேண்டி வந்தது.
தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் புண்ணியத்தால் சர்வ சாதரணமாக உலக சினிமா அறிவுப்புரட்சியே நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

கடைசி நாள் கேரளத்து பைங்கிளி ஒன்று வந்து, ஹிரோசிமா மான் அமர் இருக்கா என்று கேட்டாள்.
சந்தோசமாக தேடி எடுத்து கொடுத்தேன்.
விஸ்காம் ஸ்டூடண்டா? எனகேட்டேன்.
ஆமாம் என்றாள் பெருமிதம் பொங்க...

மேன் வித் எ மூவி கேமரா டிவிடியை இலவசமாகக்கொடுத்தேன்....
வருங்கால மீரா நாயருக்கு... 

Dec 9, 2011

Beautiful-[Malayalam] 2011 சோதனையை சாதனையாக்கு...


நீண்ட நாட்களாக எழுத முடியவில்லை.
காரணம் விதி ஹெட் ஸ்பிரட்டிங்&டேன்சிங்.
பராசக்தி சிவாஜி கணேசனைப்போல ஒடினேன்...ஒடினேன்...வாழ்க்கையின் ஒரத்திற்க்கே ஒடினேன்.
அந்த துலாபார துயரத்தை தனிப்பதிவாக்குகிறேன்.
துன்ப தொடர் ஒட்டத்திலும் மூன்று சினிமா பார்த்து விட்டேன்.
1 மயக்கமென்ன
2 போராளி
3 பியூட்டிஃபுல்
மூன்றுமே என் துன்பத்தை கடக்க உதவிய காரணிகளாக இருந்த போதிலும்...
மொத்தமாக என் துன்பத்தை துடைத்து போட்டது பியுட்டிஃபுல்.
இப்படத்திற்க்கு மூலம்
Divingbell and the butterfly [நான் இப்படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்...காண்க]
My Left Foot [செழியன் ஆனந்த விகடனில் உலகசினிமா தொடரில் எழுதி உள்ளார்.] இருந்தாலும் அப்பட்டமாக காப்பியடிக்காமல்...சூரிய உதயத்தை பார்த்து ஒவியம் படைப்பது போல் காவியமாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ்.

ஐம்பது நாட்களை கடந்து விட்ட போதிலும் திங்கள் கிழமை இரவுக்காட்சியை ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்க்கின்றனர் கேரள மக்கள்.

படத்தின் நாயகன் ஜெய சூர்யா.
பல நூறு கோடி சொத்துக்களை படுத்திருந்து அனுபவிக்கிறான்.
ஆம்....கழுத்துக்கு கீழே எந்த பாகமும் இயங்காது.
பிறவிக்கோளாறு.
தன் நிலைமைக்கு கழிவிரக்கம் கொள்ளாமல் வாழ்க்கையை ரசித்து ருசித்து சாப்பிடுகிறான்.
அவனைக்கண்டு காலன்,எமன்,தூதன் மூவருமே பயந்து நடுங்கி ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.

படுத்துக்கொண்டே ஜெயசூர்யா அடிக்கும் சிரிப்பு சிக்ஸர்கள்
மொத்த தியேட்டரை அதிர வைக்கின்றன.
தனக்கு நர்சாக பணி புரிய...
இண்டர்வியூக்கு வரும் பெண்களை...
 தலையிலிருந்து மார்பு வரை மட்டுமே பார்க்கிறான்.
 பார்ப்பவரை திணற வைக்கும் கவர்ச்சியான பெண்ணின்...
வெளியே தெரியும் பிரா பட்டையை பார்த்து....
 “கருத்த பிரா போட்ட பெண் தவிர மற்றவர்கள் போகலாம்”

ஏமாந்து திரும்பும் பெண்களில் ஒருத்தியின் கமெண்ட் இது...
 “20,000 சம்பளம் கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கருத்த பிரா வாங்கி வெளியே தெரியிற மாதிரி மாட்டியிருப்பேன்”
இக்காட்சிக்கு நரசிம்மராவ் கூட சிரித்திரிப்பார்.

இறந்து போன நண்பனின் குரலின் பிரதியாக ஒலிக்கும்... வருமானமற்ற...ஆனால் தன்மானமிக்க பாடகன்[நடிகர் அனுப் மேனன்] ஒருவனை பிரத்யேகமாக பாட பணிக்கிறான்.
பாடகன், ஜெயசூர்யாவின் கட்டற்ற அன்பில் கரைந்து போகிறான்.

கருத்த பிரா ஒடிப்போக... புதிய புயலாய் பாய்ந்து வருகிறாள் கதாநாயகி.... வேலைக்காரியாக....

அவளின் காதலை பெறுவதில் நண்பர்களுக்கிடையே போட்டி நடப்பது போல்... சொத்துக்காக... சொந்தங்கள் ஜெயசூர்யாவை தீர்த்து கட்ட போட்டி போடுகின்றனர்.
உணவில் விஷம் வைத்து கொல்லும் முயற்ச்சியில் சிக்கி உயிருக்கு போராடும் ஜெய சூர்யா தப்பித்தானா?
குற்றவாளி யார்?
என்று பறக்கும் திரைக்கதை...
இயக்குனருக்கு தியேட்டரில் ஸ்டேண்டிங் ஒயேஸ்
பாராட்டை பெற்று தருகிறது.

கட்டாயம் பார்க்கவேண்டிய கமர்சியல் கவிதை.

Nov 10, 2011

FAT GIRL-[A Ma Soeur ! -french] 2001 உலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.

                        எச்சரிக்கை
21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்....
21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் படிக்க வேண்டிய XXX பதிவு...

சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதியில் காட்சியமைத்ததில் படத்தை உலகசினிமா தரத்துக்கு உயர்த்தியுள்ளார் ‘பிரான்ஸ் தீபாமேத்தா’ Catherine Breillat.

12 வயது குழந்தை அனயீஸ்.
உருவத்தில் நம்ம ஹன்சிகா சைஸ்.
இவள் மட்டும் எனது கல்லூரி நாட்களில் எதிரில் வந்திருந்தால்... வழக்கமான எனது கேள்வியை கேட்டு கிண்டலடித்திருப்பேன்.

 “நான் பி.ஏ எக்கானமிக்ஸ் படிக்கிறேன்.
பரிட்சையில விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? ....
என்ற கேள்வி வந்தால்....
உங்க பெயரை எழுதினால் அதிக மார்க் கிடைக்கும்.
உங்க பெயர் என்ன? ”
என கேட்டு நண்பர்களை சிரிக்க வைத்திருக்கிறேன்.
எனது சாகசங்கள் அந்தப்பெண்களை எப்படிக்காயப்படுத்தி இருக்கும் என்பதை இப்படம் எனக்கு உணர்த்தியது.
அவர்கள் இட்ட சாபங்கள்தான்....
அன்று நாகேஷ் போல் இருந்தவன்....
இன்று இன்றைய பிரபு போல் இருக்கிறேன்.


அனயீசின் அக்கா எலினா டீனேஜ் குயின்.
அசின் மாதிரி அழகு தேவதை.
இந்த ஒல்லிப்பிசாசு தனது அழகாலும்...பேச்சாலும்....செயலாலும் அனயீசுக்கு இழைக்கும் கொடுமைகள்...வன்முறைகள் படம் முழுக்க தொடர்ந்து வருகின்றன.

பாய்பிரண்டுகளே இல்லாத தனது உலகத்தில் தனக்கென கற்பனை கதாநாயகர்களை உருவாக்கி கொஞ்சி விளையாடுகிறாள் அனயீஸ்.
காமத்தை கிளர்ந்தெழச்செயவதில்...
 நீச்சல் குளத்துக்கு....
 அலாதி சுகம் எப்போதுமே உண்டு.

அனயீஸ் நீச்சல் குளத்தில்,
இறங்க ....வெளியேற...
 உதவும் எவர்சில்வர் குழாயை கொஞ்சுகிறாள்.

 “எப்பவுமே அவசரப்படுற...
இதுதான்...உங்கிட்ட எனக்கு பிடிக்காத ஓண்ணு....
பொறுமையா...
நிதானமா....”
என தனது பூவிதழ்களால் முத்தமிடுகிறாள்.

ஆசை தீர முத்தமிட்டதும் அப்படியே நீச்சலடித்து மற்றொரு பக்கம் காத்திருக்கும் காதலனை தேடி போகிறாள்.
“ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் செல்லம்...
என்னோட ஸ்வீட் பாய்”
என அழுத்தி ஒரு கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அடிக்க அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மரக்கட்டையாக இருக்கும் அவளது காதலன்......யார்?
டைவிங் போர்டை தாங்கி நிற்கும் மரக்கம்பம்!!!!!


படத்தில் அப்பட்டமான உடலுறவுக்காட்சிகள் XXX தரத்தில் இருக்க...
என்னைக்கவர்ந்தது இந்த உடலுறவுக்காட்சிதான்.
காமத்தை அடக்க முடியாமல்....
அலைகள் விளையாடும் கடற்கரையில்...
 இரு கால்களையும் விரித்து பரப்பி உட்கார்ந்திருக்கிறாள் அனயீஸ்.
 கடலை ஆண்மகனாகவும்...
அலைகளை ஆண்குறியாகவும்...
உருவகப்படுத்தி இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து செய்த கலவிக்கவிதை எந்த உலக சினிமாவிலும் நான் பார்த்திராத ஒவியம்.

படத்தின் கிளைமாக்ஸ் ஏற்ப்படுத்திய அதிர்வு இன்னும் அடங்கவில்லை.
சாலை ஒரக்காட்டுக்குள்...
ஒரு காமக்கொடூரன் அனயீசை கற்ப்பழித்து சிதைத்து விடுகிறான்.
கண்டெடுத்த போலிஸ்...
உயரதிகாரியிடம் கூறுகிறான்...
"She was in the woods...
She says he didn't rape her"
வார்த்தைகள் வர்ணிக்க முடியாத உணர்ச்சி பிழம்புகள்....
முகத்தில் கொப்பளிக்க...
"Don't believe me...
If you don't want to"
என வார்த்தைகளை அமிலத்தில் கரைத்து ஊற்றும்.....
 அனயீசின் குளோசப் முகத்தை....
 ப்ரீஸ்ஸாக்கி...
புதிய மோனாலிசா ஒவியம் படைத்திருக்கிறார் இயக்குனர்.
அவருக்கு திருக்குறளின் காமத்துப்பாலை பரிசளிப்போம்.

இப்படத்தின் டிவிடி கோடம்பாக்கம் கரங்களில் சிக்காமல் போகட்டும் என சாபமிடுகிறேன்.
படம் பெற்ற விருதுகள்:
In 2001 the film won the Manfred Salzgeber Award at the Berlin International Film Festival and the France Culture Award at the Cannes festival.
நன்றி விக்கிப்பீடீயா...

Nov 6, 2011

அம்மாவுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவர்களின் கோரிக்கை


அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றப்படக்கூடாது என ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பதிவர்கள் அம்மாவுக்கு கோரிக்கை விடுத்து பின்னூட்டமிட்டார்கள்.
நமது பதிவர்கள் வெகு அழகாக...கண்ணியத்தோடு வெளியிட்ட கருத்துக்களையே இந்த பதிவாக்கியுள்ளேன்.
கோரிக்கைக்கு வலு சேர்த்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் இதயங்கனிந்த ந்ன்றி தெரிவித்து கொள்கிறேன்.
பத்து மாநகராட்சியிலும் தமிழரது சொத்தாக பத்து நூலகங்கள்அமையும்.

புரட்சித்தலைவி அம்மாவை முழு மனதோடு நம்பியவர்கள் நன்மைதான் அடைந்திருக்கிறார்கள்.
நமக்கும் நன்மையே நடக்கும்.   

www.rasanai.blogspot.com said...
please let it be a USEFUL LIBRARY lot of hsopitals are there outnumbering libraries moreover it was built and meant for library so let it be a USEFUL LIBRARY to all. please do not convert it into a multi speciality hospital instead facilities can be improved at GH, stanley and even in rural villages which has zero medical facilities. anti-snake venom, anti-rabies and other life saving medicines are required at many of the out of reach hilly rural villages of gullible people please do something which will be helpful for them. chennai is already a MECCA OF MEDICAL MIRACLES so please please no more hospitals but improve their standard, pathetic condition, good maintenance of all drugs and environment and the workers there. LET IT BE A USEFUL LIBRARY. ANBUDAN SUNDAR G ( RASANAI )
suryajeeva said...
இந்த போராட்டம் குறித்து எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், பெருவாரியான மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளேன்... மேலே இணைப்பு கொடுத்திருக்கிறேன்... இந்த இணைப்பில் அம்மையாருக்கு உங்கள் கோரிக்கையை வைக்க வழி வகுத்து உள்ளார்கள்... போராடுவோம்.. இன்குலாப் ஜிந்தாபாத் http://www.mathavaraj.com/2011/11/blog-post_03.html
நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ், நல்லதோர் வேண்டுகோள், ஒருமித்த மக்கள் பலத்தின் மூலமும், மக்களின் வேண்டுகோள் மூலமும் ஜெயலலிதாவின் மனதில் இக் கோரிக்கையையினை நிறைவேற்றும் எண்ணத்தினைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
அபிமன்யு said...
நல்ல ஒரு தொடக்கம் நண்பரே.. இதை முழுமனதோடு வரவேற்கிறேன். நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.
கோகுல் said...
புதிய மருத்துவமனைக; துவக்குவது வரவேற்கத்தக்கதுதான்! ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்??? எனக்கொரு சந்தேகம்- புதிய மருத்துவ மனைகள் துவக்குகிறேன் என்கிறீர்கள். தற்போது இயங்கிவரும் மருத்துவமனைகளின் நிலை அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதா?இல்லை புதிய தலைமைச்செயலகத்தில் துவக்கப்படுவதாக அறிவித்த மருத்துவமனைக்கான செயல்முறைகள் எந்த நிலையில் இருக்கிறது?
Lakshmi said...
நல்ல ஐடியாதானே இது. . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.
Vadivelan R said...
கட்டாயம் நீங்கள் கூறிய கருத்தினை ஏற்றால் கட்டாயம் இந்த தலைவியால் பத்து நூலகங்கள் உருவாக்கி பத்தையும் கூகிள் முதல் பத்து இடத்தினை கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு அறிவும் அதிகாரமும் இருக்கிறது. செய்யலாம். செய்வார்கள் என்று நம்புவோமாக இப்பொதைக்கு முதலில் அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை கைவிட கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் இது போல குழந்தைகள் மருத்துவமனை கட்ட நிறைய இடம் இருக்கிறதே. அங்கு கட்டலாமே வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்
Kousalya said...
நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்... எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!
சண்முகம் said...
நானும் உங்களோடு சேர்கிறேன்,,,,
ராஜா MVS said...
நல்ல ஒரு ஆக்கம் நண்பரே... என்னையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறேன். நம் அனைவருடைய கோரிக்கையும் அம்மையாரின் மனதை மாற்றும் என முழு நம்பிக்கையுடன் இயங்குவோம். அனைவருக்கு அறிவை வழங்கும் ஒரு (நூலகத்தை) கலஞ்சியத்தை போஸ்ட்மாடம் செய்யவேண்டாம் என்பதே எங்களின் தாழ்மையான வேண்டுகோள்...
அம்பாளடியாள் said...
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா. இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்... கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே... உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது சகோதரரே .நிட்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் .ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம் .இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத் தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.அதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன் சகோதரரே .மிக்க நன்றி பகிர்வுக்கு .
Arun J Prakash said...
நல்ல முயற்சி, என்னது பாராட்டுகள் உங்களுக்கு. அந்த கட்டிடம் மருத்துவமனைக்கு ஏற்ற கட்டிடமாக கண்டிப்பாக இருக்க முடியாது. ''அம்மா'' இதனை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். நல்ல எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எல்லாம் நல்லதே நடக்கும், இந்த பதிவு அனைவரிடமும் சென்று சேரவேண்டும் , அனைவரும் பரிந்துரையுங்கள்.
எஸ்.கார்த்திகேயன். (S.Karthikeyan.) said...
arivin kuttai kalaithu vida vendam.
மகேந்திரன் said...
நூலகம் மாற்றப்படக்கூடாது, அறிவுலகின் நுழைவாயிலாம் நூலகம் அதை உருவாக்க எவ்வளவு சிரமம், அழிப்பது எளிது, தயை கூர்ந்து மக்களின் கூக்குரலை கேட்டருள வேண்டும். மருத்துவமனை கட்ட ஆயிரம் இடங்கள் கிடைக்கலாம். நூலகத்தை விட்டு விடுங்கள்.
angelin said...
//அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.// எனது தாழ்மையான வேண்டுகோளும் இதுவே . நூலகங்களை உருவாக்குங்கள் வருங்கால சமுதாயம் உங்களை போற்றிபாராட்டும் .
காட்டான் said...
வணக்கம் இப்ப எதில அரசியல் செய்வதுன்னு விவஸ்தையே இல்லாமல் போச்சு அங்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை எரிச்சவனுக்கும் இந்த செயலுக்கும் வித்திதாசம் இல்லை என்ன அங்கு எமது எதிரிகள் அதை செய்தார்கள் ஆனால் இங்கு நாங்களே எங்களுக்கு குழி தோண்டுகிறோம்.. 
துரைராஜ் said...
நல்ல ஐடியாதானே இது. . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.
MANO நாஞ்சில் மனோ said...
நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்... எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!// என் கருத்தும் இதுதான்...
VANJOOR said...
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டாம் அம்மா. இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்... கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் ... சகோதரரே, உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது . நிச்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் . ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம். இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத் தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.? ஆதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். சகோதரரே. மிக்க நன்றி பகிர்வுக்கு . வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
Elamparuthi said...
இப்ப எதில அரசியல் செய்வதுன்னு விவஸ்தையே இல்லாமல் போச்சு அங்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை எரிச்சவனுக்கும் இந்த செயலுக்கும் வித்திதாசம் இல்லை என்ன அங்கு எமது எதிரிகள் அதை செய்தார்கள் ஆனால் இங்கு நாங்களே எங்களுக்கு குழி தோண்டுகிறோம்...ennudaia karuthum ithuvae....
ஹேமா said...
நூலகம் ஒரு இனத்தின் அடையாளம்.யாழ் நூலகத்தின் கொடுமை கண்ணுக்குள் தெரிகிறது.ஏன் இப்படியான விஷயங்களில் கை வைக்கிறார்கள்.உங்கள் ஆதங்கம் சரியே.ஒன்றுபட்ட குரல்களுக்கு ஆரோக்கியம் அதிகம்.தொடருங்கள் !
ஆமினா said...
ஏற்கனவே செயல்படும் நூலகத்தை மாற்றிதான் மருத்துவமனை உருவாக்க வேண்டுமா? இந்த ஆட்சி நினைத்தால் கண்டிப்பாக எத்தனையோ மருத்துவமனைகள் புதிதாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கட்ட முடியுமே?
NAAI-NAKKS said...
நான் மெயில் அனுப்பிவிட்டேன் ...
MyKitchen Flavors-BonAppetit!. said...
Ungalathu Korikkayai Vinnapika Naanum Serkiraen.Like to join in this effort to be made as a Library in the name of Our Great Leader Kamarajar.
rufina rajkumar said...
அதை மிகச் சிறப்பாக அமைந்த ஒரு நூலகமாக மட்டுமே பாருங்கள், கலைஞரின் முயற்சியில் எழுந்த நூலகமாக தயவு செய்து பார்க்க வேண்டாம் "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது."
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே....
சி.பி.செந்தில்குமார் said...
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே... >>> ரிப்பீட்டு
கிருபாகரன் said...
கண்களை விற்று ஒவியம் வேண்டாம்!! நல்லது நடந்தால் நல்லது!!
உலக சினிமா ரசிகன் said...
என் வேண்டுகோளுக்கு வார்த்தைகளால் வலு சேர்த்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.
டிலீப் said...
நல்லதொரு முயற்சி நண்பரே வெற்றி பெற வாழ்த்துக்கள். அறிவு கடலை வற்றவிட வேண்டாம்
-தோழன் மபா, தமிழன் வீதி said...
'எப்போதும் விழித்திருப்போம்' நமது எதிர்ப்பை உடனுக்குடனே சூடாக சொல்லிவிட்டோம். உங்களைப் போன்ற அல்லது நம்மை போன்ற எண்ணற்ற தன்னார்வ ஆர்வலர்களின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. இன்னும் 5 வருடங்கள் நமக்கு இதைபோன்று நிறைய வேலையிருக்கிறது. ஆகவே, நண்பர்களே 'எப்போதும் விழித்திருப்போம்' நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.
அப்பாதுரை said...
நூலகத்தை மாற்ற வேண்டாம் என்ற உங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே. மருத்துவமனைக்கு வேறு இடம் பார்க்க வேண்டிக்கொள்கிறேன்.
veedu said...
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவேண்டிய அவசியம் என்ன?அரசால் ஒரு மருத்துவமனை தனியாக உருவாக்க முடியாதா?மக்களின் எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் நடைமுறைபடுத்தினால் அது மக்களிடம் உங்கள் மேல் வெருப்பு வராதா?சிந்தியுங்கள் அதிமுக தோழர்களே..!அம்மாவிடம் தெரிவியுங்கள் அது போதும்... உலகசினிமா ரசிகன் ரசிகனுக்கு நன்றி
சித்திரவீதிக்காரன் said...
நூலகத்திற்கு செல்லும் பழக்கம் நம் மக்களிடம் மறைந்து வரும் வேளையில் இது போன்ற அறிவிப்புகள் இன்னும் கிலியூட்டுகின்றன. சென்னையில் உள்ள நூலகம் போல நம்ம மதுரையிலும் வராதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் சென்னை நூலகமே மருத்துவமனையாக மாறப்போகிறது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. அதிர்ச்சி வைத்தியம் வேண்டாம். இனி நாங்கள் நூலகத்திற்கு அடிக்கடி செல்கிறோம். தயவுசெய்து இந்த எண்ணத்தை கைவிடுங்கள். பகிர்விற்கு நன்றி. நல்லது நடக்கும்.
வெண் புரவி said...
நூலகம் இல்லா ஊரில் ககுடி இருக்காதே...என்பது புது மொழி. நூலகம் ஒரு தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும். ஆகையால் உங்கள் ஆக்கத்திற்கு பூரண ஆதரவு என்றும் உண்டு.
சே.குமார் (மனசு) said...
அண்ணா நூலகத்தை மாற்ற வேண்டாம் என்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துத்தான்... இதில் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு வேண்டுமென்றால் மாற்றுக் கருத்து இருக்கலாம். நீங்கள் சொல்லியிருப்பது போல் அண்ணாவோ அல்லது காமராஜரோ யார் பெயரில் வேண்டுமானாலும் மாநகராட்சிகளில் மட்டுமல்ல... மாவட்டம் தோறும் அமைக்கட்டும்... எல்லோரும் வாழ்த்துவோம்... நண்பர் சொல்லியிருப்பது போல் நூலகம் என்பது கல்விக் கண் திறக்கும் ஆலயம்... உங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள்.
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அப்பா ஒருவழியா நீதிமன்றம் தடை போட்டுட்டாங்க..
மயிலன் said...
தெரியாத உண்மையில்லை..கலைஞர் கட்டிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அதை மாற்ற துடிக்கும் நீங்கள் அவர் ஆண்ட மண்ணை மட்டும் ஆளத் துடிக்கிரீரே? இம்முறை உங்கள் ஆட்சியில் கரை இருக்காது என்பது தெரியும்..ஆனாலும் இது போன்ற கலகங்களும் செய்யாமல் இருந்தால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறி மாறி ஓட்டு குத்தும் தமிழகம் ஒருவேளை உங்கள் ஆட்சியைத் தொடர செய்யலாம்.. பிற மாநில மக்களும் சிகிச்சைக்கு வரும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சில காலம் பணியாற்றியவன் என்ற முறையில் அங்குள்ள குறைபாடுகளை அறிவேன்..அதை நேர்த்தியாக சரி செய்தாலே தாங்கள் மக்களுக்கும்,சீரிய மருத்துவ சேவைக்கும் பேருதவி செய்ததாய் இருக்கும்.. எங்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதே,..ஓட்டையும் போட்டுவிட்டு கெஞ்சவும் வேண்டியுள்ளது...
N.H.பிரசாத் said...
மக்களுக்கான நல்ல விஷயங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அதற்க்கு மிகச் சிறந்த உதாரணம், 'சமச்சீர் கல்வித் திட்டம்'. கண்டிப்பாக இந்த அரசால் அண்ணா நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமமனையாக மாற்ற விடமாட்டார்கள் பொதுமக்கள்.
jiff0777 said...
I Just remember this "Prevention is better than cure" Hospital is a place to cure the patients. Library is a place where Doctors and healthy people are created. So, Im not saying that a Hospital is not essential but the library is more essential. Future healthy people will be from present learning. let them learn...
சீனுவாசன்.கு said...
பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் அதன் பக்கத்தில் அதை விட பெரிய கோடை போட்டு பெரிய கோட்டை சின்னத்தாக்கிய மாதிரி அம்மாவும் செய்வார்கள் என்று நம்புவோம்.நூலகமும்,குழந்தைகள் மருத்துவமனையும் ஊர் தோறும் அமையட்டும்!அம்மாவின் புகழ் நிலைக்கட்டும்!!
ananthu said...
ஊட்டியில் நயாகரா மின்சார உற்பத்தி உட்பட உங்களின் பல நல்ல திட்டங்களை ( 2001 - 2006 ) அப்போதைய தி.மு.க சுற்றுப் புற சூழல் அமைச்சர் ராஜா செயல்படவிடாமல் செய்திருந்தாலும் , அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நீங்கள் மக்களுக்காக செயல்படுத்த வேண்டுமென்பதே என்னைப் போன்ற பல கோடி தமிழர்களின் வேண்டுகோள் ...
J.P Josephine Baba said...
தங்கள் கருத்து நிச்சயமாக சிந்திக்க தகுந்தது. நம் முதல் அமைச்சரும் மக்கள் விருப்பத்தை புரிந்து கொள்வார். நூலகம் மூடியவர் என்று ஒரு போதும் சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்ப மாட்டார். நானும் பணிவன்பாக கேட்டு கொள்கின்றேன். நூலகம் சென்னையில் மட்டுமல்ல மாவட்டங்கள் தோறும் திறக்கப்பட வேண்டும். அது போன்றே நாட்டின் செல்வங்களான குழந்தைகள் பாதுகாக்கப் பட மருத்துவ ம்னைகளும் சிறந்த வசதியுடன் சுகாதாரத்துடன் கிராமங்கள் தோறும் திறக்க அம்மா ஆட்சியில் வழி திறக்க வேண்டும். நன்றி வணக்கம்!
|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
என்னுடைய வேண்டுதலும் இது தான்,தயவுச் செய்து இதைவிட பெரிய நூலகத்தை ஆராய்ச்சி மையத்துடன் திறந்து தமிழனை தழைக்க விடுங்கள்,வெளி மாநில மாணவனும் எழுத்தாளனும் கூட இங்கே அதை தேடி வர செய்யுங்கள்,இதை இந்த பொக்கிஷத்தை விட்டுவிடுங்கள் அம்மா.
|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
கீழே பிரபல எழுத்தாளர்கள் விகடனில் சொல்லுவதைக் கேளுங்கள். சா.கந்தசாமி: சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது இந்த நூலகம். நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, 'இப்படி தமிழ்நாட்டில் ஒரு நூலகம் இல்லையே’ என்று ஏங்கியிருக்கிறேன். அண்ணா நூலகம் தமிழகத்தின் கனவு. எங்கே காற்று வேண்டும், எங்கே வெளிச்சம் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து, படிப்பதற்கும் எழுதுவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை, எப்படி மருத்துவமனையாக்க முடியும்? மருத்துவம் அவசியம்தான். ஆனால், அது சென்னைக்கு மட்டும்தானா? வேறு எந்த நகரத்திலும் குழந்தைகள் இல்லையா? பொன்னீலன்: மருத்துவமனை கட்ட இடமா இல்லை? இந்த அரசுக்குக் கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நடவடிக்கை. இது அறிவுல கத்துக்கு விடப்பட்டுள்ள சவால். எழுத்தாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தியுள்ளது. அறிவுலகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக ஒடுக்குமுறைக்கான ஒத்திகை. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது, சகிக்க முடியாதது. தொ.பரமசிவம்: தமிழ் அடையாளத்தை அழிப்பதே யாழ்ப்பாண நூலகத்தை அழித்ததன் நோக்கம். அண்ணா நூலகக் கட்டடத்தை மருத்துவமனை ஆக்குவதும், தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல்தான்! அசோகமித்திரன்: நன்றாகச் செயல்படும் ஒரு அமைப்பை கலைக்கக் கூடாது. படிப்பதற்குரிய உற்சாகமான ஒரு சூழலைத் தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கட்டப்பட்ட நூலகம் அது. பராமரிப் பில்லாத ஒரு அரசு மருத்துவமனையாக்குவதை விட இந்த நூல கத்தை நூலகமாகவே வைத்துக் கொள்ளலாமே. மேலாண்மை பொன்னுசாமி: முந்தைய அரசின் சாதனைகளை முறியடிப்பது என்பது சரி. ஆனால், அவற்றை ஒழித்துக் கட்டக்கூடாது. இது மிகவும் தவறான அணுகுமுறை. ஷாஜஹானுக்குப் பிந்தைய மன்னன் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு தாஜ்மஹால் இருந்திருக்காது. ராஜராஜசோழனுக்கு அடுத்து வந்த மன்னன் நினைத்திருந்தால்... தஞ்சை பெரிய கோயில் இருந்திருக்காது. கரிகால சோழனைத் தொடர்ந்தவன் அப்படி நினைத்திருந்தால் கல்லணை இருந்திருக்காது. கீரனூர் ஜாகீர் ராஜா: நூலகம் திறக்கப்படுகிறபோது, 'ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது’ என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் நடக்கிற கதை வேறு. ஏற்கெனவே, வாசிப்பில் பின்தங்கி உள்ள சமூகமாகவே தமிழ் சமூகம் மதிக்கப்படுகிறது. அரசின் இதுபோன்ற அதிரடியான செயல்பாடுகள் அதற்கு ஒரு மறைமுகக் காரணியாக அமைந்துவிடக் கூடாது. சல்மா: மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட, அண்ணா படிப் பதில் ஈடுபாட்டோடு இருந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரின் பெயரில் அமைந்துள்ள நூலகத்தை இடமாறுதல் செய்வது அநீதியானது. அரசியல் விரோதம் அறிவை விருத்தி செய்யும் விஷயத்தில் தலையிடக் கூடாது. வண்ணதாசன்: இது இன்னொருவித 'யாழ் நூலக’ எரிப்பன்றி வேறில்லை. உயர் மருத்துவம் உடனடி யாகத் தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல; இந்த அரசுக்குத்தான். அசுரப் பெரும்பான்மை என்பது, சொல்லுக்கு சொல் உணரப்படுகிறது; பிணம் தின்னல் தொடர்கிறது.
|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
கலாப்ரியா: நூலகத்தை மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதை 'கெட்டிக்காரத்தன மான’ செயலாக நினைக்கலாம் முதல்வர். ஆனால், நல்ல செயல் இல்லை. கெட்டிக்காரராக இருப்பது சுலபம், நல்லவராக இருப்பது கடினம். இது தப்பு, தவறு இல்லை. ''தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்..'' நான் சொல்லவில்லை எம்.ஜி.ஆர். சொன்னது. சிவகாமி: நூலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் இப்போது அரசுக்கு என்ன? கருணாநிதி காலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையாவது அரசால் சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் இந்தள வுக்கு அராஜகமாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு என்னதான் வழி? நாஞ்சில் நாடன்: நூலகம் சமுதாயத்தின் அத்தியா வசியமான ஓர் உறுப்பு. நம் மக்களுக்கு அதை பயன் படுத்தத் தெரியவில்லை என்பது உண்மை. அதனால் வாசிப்புப் பழக்கத்தை அதிக ரிக்க என்ன செய்யலாம் என்றுதான் ஒரு அரசாங்கம் யோசிக்கவேண்டும். அதை விட்டு, நூலகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுப்பது ஒரு சமூக அவலம் ஆ.சிவசுப்பிரமணியன்: நூலகம், மருத்துவமனை இரண்டின் உள்கட்டமைப்பு களும் வெவ்வேறு மாதிரி யானவை. ஒரு நூலகம் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இருந்தால் மட்டும் போதாது, அங்கு அமைதியான சூழல் வேண்டும். மேலும் புத்தகங்கள் என்பவை சிமென்ட் மூட்டைகளோ, வெங்காய மூட்டைகளோ அல்ல... நினைத்தால் இடம் மாற்றி விடுவதற்கு. எல்லா விஷயங்களையும் அரசியல் நோக்கத்துடனேயே பார்ப்பதும் அணுகுவதும் ஆபத்தானவை. சு.வெங்கடேசன்: இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்வில் எடுக்கப்பட்ட முடிவு. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. டி.பி.ஐ. வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட போதுமான இடங்கள் இல்லை. எப்படி லட்சக் கணக்கான புத்தகங்களைப் பராமரிக்கப் போகிறார்கள்? வ.கீதா:மன்னர் ஆட்சிக் காலங்களில் கூட, ஒரு மன்னன் வெற்றி பெற்ற பிறகு, பழைய அரசனின் கட்டடங்களை உடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஜெயலலிதா, முடியாட்சியை விட மோசமாக நடந்துகொள் கிறார். அழகிய பெரியவன்: ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் வாசிப்பு குறைந்திருக்கிறது என்கிற ஆதங்கம் உண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த குறைபாடுகளுக்கு ஒரே மருந்து புத்தகங்கள்தான். ஆனால், தான் ஆட்சி செய்யும் மக்கள் அறிவுமயப் படுத்தப்பட்ட சமூகமாக மாறி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க அரசு. இருக்கிற மருத்துவமனைகளையே இன்னும் சிறப் பாகப் பராமரிக்காத தமிழக அரசு, மேலும் மருத்துவமனைகளை உருவாக்கப் போவதாகச் சொல்வது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் கூடிய அபத்தம். புனிதபாண்டியன்: சட்டசபைக் கட்டடத்தையும் தலைமைச் செயலகத்தையும் தன் ஆணவப் போக்கினால் மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், அப்போது 'இது ஏதோ கருணாநிதியின் சொந்தப் பிரச்னை’ என்பதைப் போலப் பலரும் மௌனமாக இருந்ததால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கை வைக்கிறார். சமச்சீர்க்கல்வி, அறிவை விரிவு செய்யும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது போன்ற தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களைச் சீர்குலைப்பது ஆகியவை ஜெயலலிதாவின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்!
jayaram thinagarapandian said...
நல்ல முயற்சி...எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்

Post a Comment