Showing posts with label இந்திய சினிமா. Show all posts
Showing posts with label இந்திய சினிமா. Show all posts

Sep 13, 2013

சூப்பர் ஸ்டாரால் ஏமாற்றப்பட்ட தயாரிப்பாளர்.

நண்பர்களே...
இருபதுக்கும்  மேற்பட்ட உலகசினிமாக்களை பார்த்து விட்டேன்.
எழுதுவதற்கு, ஒரு படம் கூட தேறவில்லை.
நேற்று சில மலையாளப்படங்கள் டிவிடி வாங்கினேன்.
அதில் ஒன்று... ‘செல்லுலாய்ட்’.


பதிவுலக நண்பர் கோவை ஆ.வி.
இப்படம் பற்றி விதந்தோதி என் காதில் சங்கு ஊதியும்...
‘மாற்றுத்திறனாளியாகத்தான்’ இருந்தேன்.
நேற்றிரவு 11 மணிக்கு  ‘செல்லுலாய்ட்’ பார்த்து முடித்தேன்.
விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தூங்க முடிந்தது.
காரணம்...மலையாளத்தில் முதல் சினிமாவை தயாரித்த
J.C. டேனியல் நாடார்.


மலையாள சினிமாவின் பிதாமகன் J.C. டேனியல் நாடார், 
வாழ்க்கை வரலாற்றை... மிக நேர்த்தியான திரைக்கதையின் மூலம்...  காவியம் படைத்திருக்கிறார் இயக்குனர் கமல்.
இவரது இயக்கத்தில் வந்த ‘பெருமழைக்காலமும்’ என் தூக்கத்தை கரைத்திருக்கிறது.
சினிமாவின் வலிமையான ஆயுதங்களை பிரயோகித்து பார்வையாளர்களை வீழ்த்துவதில் சூரன் இயக்குனர் கமல்.
இவரது ஆளுமைக்கு... சமீபத்திய கட்டியம் ‘செல்லுலாய்ட்’.


ஹிந்தியில்  ‘தாதா சாகேப் பால்கே’...
தமிழில் ‘நடராஜ முதலியார்’ போன்றவர்கள்...
திரைப்பட தயாரிப்பில் ‘முதன் முதல்கள்’.
இவர்களின் தாக்கத்தால்... மலையாளத்தில் முதன் முதலாக திரைப்படம் தயாரிக்க ஆசைப்படுகிறார் பி.சி.டேனியல் நாடார்.
தலித் வகுப்பை சேர்ந்த ரோஸம்மாவை ‘ரோஸியாக்கி’  கதாநாயகியாக்குகிறார்  டேனியல் நாடார்.
கேரளாவில், தலித்தை விட தாழ்த்தப்பட்ட சமூகமாக...
மிதிக்கப்பட்ட நாடார் வகுப்பை சார்ந்தவர் ’டேனியல்’.
உயர் ஜாதி வகுப்பை சார்ந்த நாயர்களும், நம்பூதிரிகளும் படத்தை ஓட விடாமல் தடுத்து ’டேனியல் நாடாரை’ நடுத்தெருவில் நிறுத்துகின்றனர்.
கடனும்...வறுமையும்...கைகோர்த்து துரத்த..
தமிழ்நாட்டிலுள்ள ‘அகஸ்தீஸ்வரத்துக்கு’ புலம் பெயர்ந்து அங்கேயே மரித்துப்போகிறார் டேனியல் நாடார்.


இப்படத்தின் திரைக்கதை  ‘தங்கமீன்களை’ போல தறி கெட்டு ஓடவில்லை.
ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது.
சினிமா எடுத்து நலிந்து போன டேனியல் நாடார்,
பல் மருத்துவம் படித்து பிரபலமான மருத்துவராக புதுக்கோட்டையில் வாழ்ந்ததை சொல்கிறது.
புதுக்கோட்டையில் ‘ஓகோவென’ வாழும் போது...
அன்றைய  ‘சூப்பர் ஸ்டார்’ பி.யூ.சின்னப்பாவால் ஏமாற்றப்பட்டு மீண்டும் வீழ்ந்ததை  ‘விழுமியமாக்குகிறது’.
மலையாளத்தில் முதல் சினிமாவாக...
தயாரிப்பாளர் + இயக்குனர்  ‘மாடர்ன் தியேட்டர் சுந்தரம் அய்யர்’ உருவாக்கிய  ‘பாலன்’ திரைப்படம் கொண்டாடப்பட்ட போலித்தனத்தை  ‘போட்டுத்தாக்குகிறது’.
ஒரு பத்திரிக்கையாளன்,
பசியால் பரிதவிக்கும் டேனியல் நாடாருக்காக...
அரசு அதிகார வர்க்கத்திடம் போராடி...
ஜாதீய காரணங்களால் தோற்றுப்போகும் துயரத்தை துணைக்கதையாக்குகிறது.


படத்தின் கதாநாயகி ரோஸம்மாவை...படத்தை பார்க்க விடாமல் துரத்தியடிக்கின்றனர் மேல் ஜாதி இந்துக்கள்.
ஜாதிக்கொடுமையின் கொடூர கூச்சலை உக்கிரமாக காட்டி...
பார்வையாளர் இருதயத்தில் ஆணியடிக்கிறது ‘திரைக்கதை’.
இத்திரைக்கதையின் மிக வலுவான பக்கங்கள் இவை.


இத்திரைப்படத்தின் தாக்கமும்...
தமிழ் திரைப்பட பிதாமகன்கள் வரலாறு படமாக்கப்படாத ஏக்கமும்...
இன்னும் சில தூக்கமில்லா இரவுகளை...உருவாக்கும்.

Aug 21, 2013

இதுதாண்டா ‘கிளைமாக்ஸ்’.

நண்பர்களே...
சமீபத்தில் பார்த்த இரண்டு படங்களின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் ஆகர்ஷித்தது.
1 . ஆதலால் காதல் செய்வீர்.


இப்படம் இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
எனவே இப்படத்தின் கிளைமாக்சை பிறிதொரு சந்தர்ப்பத்தில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
[ மூளை புடைத்து வெளியே கீரிடம் போல் காட்சியளிக்கும்
அதி[ஷா] புத்திசாலிகளுக்கு...
இப்படத்தின் கிளைமாக்ஸ் வேறு அனுபவங்களை கொடுக்கலாம்.]


2 . ஷிப் ஆப் தீசியஸ்


இப்படத்தின் கிளைமாக்ஸ் முதல்முறை பார்க்கும் போது ஒன்றுமே புரியவில்லை.
மூன்று முறை இந்த படத்தை பார்த்தேன்.
அறிஞர் பெருமக்களிடம் விவாதித்தேன்.
 ‘பிளாட்டோஸ் கேவ்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

 ‘தத்துவங்களின் பேராசான்’ பிளாட்டோ பற்றி தெரிந்து கொள்ள எனது முந்தைய பதிவுக்கு செல்லவும்...

பிளாட்டோஸ் கேவ் பற்றிய விக்கிப்பீடியா தகவலை கொஞ்சம் வெட்டி இங்கே தருகிறேன்.

The Allegory of the Cave— also known as the 
Analogy of the Cave
Plato's Cave, (or) the 
Parable of the Cave—is presented by the
Greek Philosopher Plato in his work The Republic (514a-520a) to compare "..
the effect of education and
the lack of it on our nature." 

It is written as a dialogue between
Plato's brother Glaucon and his mentor Socrates,
narrated  by the latter. 
The Allegory of the Cave is presented after the 
metaphor of the sun (508b–509c) and  the analogy of the divided line (509d–513e).

 All three are characterized in relation to dialectic
at the end of Book VII and VIII (531d–534e).
Plato has Socrates describe
a group of people who have lived chained to the wall of a cave all of their lives,
facing a blank wall. 

The people watch shadows projected on the wall
by things passing in front of a fire behind them, and
begin to ascribe forms to these shadows. 
According to Plato's Socrates,
the shadows are as close
as the prisoners get to viewing reality. 

He then explains
how the philosopher is like a prisoner
who is freed from the cave and comes to understand that
the shadows on the wall do not make up reality at all,
as he can perceive the true form of reality
rather than the mere shadows seen by the prisoners.

The Allegory may be related to Plato's Theory of Forms
according to which
the "Forms" (or "Ideas"), and
not the material world of change known to us through sensation, 
possess the highest and most fundamental kind of reality. 

Only knowledge of the Forms constitutes real knowledge.
[1] In addition,
 the Allegory of the Cave is
an attempt to explain the philosopher's place in society:
to attempt to enlighten the "prisoners."

Plato's Phaedo contains similar imagery
to that of the Allegory of the Cave; 
a philosopher recognizes that  
before philosophy, 
his soul was "a veritable prisoner fast bound within his body... 
and that
instead of investigating reality by itself and in itself
it is compelled to peer through the bars of its prison."[2]


'பிளாட்டோஸ் கேவ்’ தத்துவத்தை...
 எனக்கு தெரிந்ததை...புரிந்ததை...எனது பாணியில் சொல்லி விடுகிறேன்.

ஒரு குகையில் நிறைய பேரை சங்கிலியால் பிணைத்து வைக்கப்படிருக்கிறது.
தலையை கூட திருப்பி பார்க்க முடியாதவாறு கட்டப்படுகிறது.
கட்டப்பட்டவர்கள், கண்ணுக்கு தெரியும் நிழல்களை வைத்து...
தங்கள் சிந்தனையால்... தங்கள் கருத்துக்களை...கட்டமைப்பார்கள்.
அவை உண்மையாகவோ...உண்மைக்கு நெருக்கமாகவோ...
அல்லது முற்றிலும் விலகி நேர்மாறாகவோ இருக்கக்கூடும்.

உதாரணமாக கோவைப்பதிவர்கள் ஒரு குகையில் கட்டி வைக்கப்படுகிறார்கள்.
சூட்டிங்கில் பயன்படுத்தப்படும் எச்.எம்.ஐ. லைட்டை பின்னால் வைத்து எரிய விடுகிறார்கள்.
லைட்டின் முன்னால், லேட்டஸ்ட் டாப் ஸ்டார்களை ஒருவர் பின் ஒருவராக நடக்க விடுகிறார்கள்.

முதலில் ஒரு நடிகை வருகிறார்.
அந்த நிழலை பார்த்து...கணித்து...‘பெரிய பண்ணிக்குட்டி வருதுடோய்’ என்கிறேன் நான்.
பதிவர் ‘இனியவை கூறல்’ கலா குமரன்... ‘நியாண்டர்தால் மனுஷி !’ என வியக்கிறார்.
பதிவர் ‘கோவை நேரம்’ ஜீவா ...‘ஹை...ஹன்சிகா’ என்கிறார்.


இரண்டாவது ஒரு நடிகை வருகிறார்.
நான், ‘என்னய்யா இது...கத்தரிக்கா ஒண்ணு... கை கால் முளைச்சு வருது’ என்கிறேன்.
பதிவர் கோவை ஆ.வி. ‘நல்லாப்பாருய்யா...அது நஸ்ரியா’ என நறநறக்கிறார்.
அவர் கண்களில் ‘அகோரி பாபா’ உக்கிரம்.
நல்ல வேளை அவரை கட்டி வைத்திருந்தார்கள்.
இல்லையேல் இந்தப்பதிவை நான் எழுதி இருக்க முடியாது.
இந்நேரம் ஜீரணமாகியிருப்பேன்.


மூன்றாவது ஒரு நடிகை வருகிறார்.
அனைவருமே அலறுகிறோம்.
ஆஹா...அனுஷ்கா.



நாங்கள் கண்டு உணர்ந்தது சரியா...தவறா...என்பது கட்டவிழ்க்கப்பட்டு வெளியேறும் போதுதான் தெரிய வரும்.
ஒரு வேளை முதலில் வந்தது நமீதாவாக இருந்தால்...
இறுதியில் வந்தது காஜலாக இருந்தால்...
இந்த குழப்பத்தை தீர்த்து வைப்பவரே...தத்துவ ஞானி.
குகைக்கு வெளியில் இருக்கும் தத்துவஞானியால்தான் உண்மையை  உரைக்க முடியும்.
உண்மையை உலகுக்கு சொல்வது ஒரு தத்துவ ஞானியின் கடமையும் கூட...
இதைத்தான் ‘பிளாட்டோ கேவ்’ தத்துவம் சொல்கிறது.

இப்போது ‘ஷிப் ஆப் தீசியஸ்’ இறுதிக்காட்சிக்கு போவோம்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மூவரும்...வேறு சிலரும்...
ஒரு ஆவணப்படத்தை பார்க்க வருகிறார்கள்.
இவர்கள் அனைவருமே...வெவ்வேறு வயது...மொழி..இனம்...நாடு என வேறுபட்டு இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அனைவருமே  ‘ஒரு புள்ளியால்’ இணைக்கப்பட்டவர்கள்.
ஆவணப்படத்தை எடுத்தவர் கொடுத்த ‘உடல் உறுப்பு தானத்தால்’ உயிர் வாழ்பவர்கள்.

ஆவணப்படம் ஓடுகிறது.
ஒரு குகைக்குள் புகுந்து படமாக்கப்பட்ட காட்சி திரையில் விரிகிறது.

பெண் போட்டாகிராபர் கண்கள் கலங்க இக்காட்சியை பார்க்கிறாள்.
இந்தக்கண்கள்தான் இந்த குகையை தரிசித்து படமாக்கி இருக்கிறது.
படமாக்கிய கண்கள்...படமாக்கப்பட்டதை...பார்க்கிறது.
படைப்பாளியின் கண்கள்...இப்போது பார்வையாளரின் கண்களாக...
உருமாறி பார்க்கிறது.

குகையை படமெடுப்பவனின் நிழல்...குகையில் பரவுவதை ‘ஆவணப்படம்’ காட்டுகிறது.
அவன் நிழலை மட்டுமே...அவனால் பயன் பெற்றவர்கள் பார்க்கிறார்கள்.

இத்தனை பேரை வாழ வைத்த...
அவன் யார்?
எப்படி இருப்பான் ?
ஏன் இறந்தான்?
எப்படி இறந்தான்?
அவன் சிந்தனை என்ன ?
என எத்தனையோ கேள்விகள் எழும்.
அத்தனையும் அந்த  ‘நிழல் பிம்பத்தை’ வைத்துதான்  ‘கட்டுகிறோம்’.

லேடி போட்டா கிராபர் ஆவணப்படத்தை பார்க்கும் போது ஞானக்கண் பெறுகிறாள்.
தன் ஊனக்கண்ணால் பெற முடியாத தரிசனத்தை...
தன் ஞானக்கண் கொண்டு தரிசிக்கிறாள்.

இக்காட்சியில்  ‘இயக்குனர் ஆனந்த் காந்தி’ செய்த மேஜிக் என்ன?

படத்திலுள்ள கதாபாத்திரம்...படம் பார்க்கும் நாம்...
என எல்லோரையும் கட்டி ‘பிளாட்டோஸ் கேவிற்குள்’...
அடைத்து விட்டார் இயக்குனர்.

டேய் வெண்ணைகளா...
எல்லாம் தெரியும்னு ஆடாதீங்கடா.
எல்லோருமே  ‘பிளாட்டோஸ் கேவிற்குள்தான்’ இருக்கிறோம்... நொண்ணைகளா...என்கிறாரோ இயக்குனர்?.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Aug 18, 2013

இயக்குனர் ரிதுபர்ண கோஷ் - கோவையில் நினைவேந்தல் விழா.



நண்பர்களே...
இன்று கோவையில்,
இயக்குனர் ரிதுபர்ண கோஷ் நினைவேந்தல் விழாவை...
கோணங்கள் திரைப்பட இயக்கம் நடத்துகிறது.
கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மை கல்வி கல்லூரி வளாகத்தில்
உள்ள திரையரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
ரிதுபர்ண கோஷ் இயக்கத்தில் வெளி வந்த இரண்டு திரைப்படங்களை திரையிடுகிறார்கள்.
சரியாக மாலை 3.15 மணிக்கு திரையிடல் தொடங்கும்.
கோவை உலகசினிமா ரசிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
நிகழ்ச்சியின் விபரம் கீழே...

18 ஆகஸ்ட், ஞாயிறு பிற்பகல் 

ரிதுபர்ணோ கோஷ் நினைவேந்தல்


[1] UNISHE APRIL 





[2] ABOHOMAN




இரு திரைப்படங்கள் திரையிடல்


3.15 pm - 8.30 pm Convention Hall, 


PSG Institute of Management, 

பீளமேடு, கோவை.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இயக்குனர் ரிதுபர்ண கோஷ்... ‘திருநங்கை’ என்பதை பெருமைக்குரிய செய்தியாக பகிர்ந்து கொள்கிறேன். 
விழாவுக்கு வாருங்கள்...சந்திப்போம்.

Aug 15, 2013

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் !




           சு         சுதந்திர தின வாழ்த்துக்கள்                             

இன்று காலையில் ஜெயா ப்ளஸ்ஸில் ‘பாரதி’ திரைப்படம் திரையிட்டார்கள்.
இயக்குனர் ஞான சேகரன் அற்புதமான குறியீடுகளை உருவாக்கி படைத்துள்ளார்.


# பாரதியின் உணவை அஹ்ரகாரத்து அக்கிரமக்காரர்கள், 
தடுத்து  உண்டு விடுகிறார்கள்.
ஊரை விட்டு ஒதுக்குப்புறத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பார். 
தனது உணவை தட்டிப்பறித்த சேதி கேட்டதும்...
அருகில் கால்நடைகளை மேய்த்து கொண்டு இருக்கும் சிறுவர்களிடம் சாப்பிட வருகிறேன் என்பார்.
அவர்கள் சம்மதித்ததும் கன்றுக்குட்டி போல் துள்ளி எழுந்து 
‘ஒரு குட்டிச்சுவரை’ அலட்சியமாக ஜம்ப் பண்ணி தாண்டிச்செல்வார்.
அய்யா பாரதி.... ‘குட்டிச்சுவரை’ இன்னும் உயரமாக வளர்த்து விட்டார்கள் எங்கள் அரசியல் வியாதிகள்.
## சொந்த ஊரில் பாரதியை வெள்ளைகாரர்களுக்கு அஞ்சி புறக்கணிப்பார்கள் சொந்த மக்கள்.
அப்போது இளையாராஜா பின்னணி இசையை அற்புதமாக குறியீடாக்குவார்.
பின்னணி இசை = நல்லதோர் வீணை செய்தே நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ...

### காந்திஜியை சந்தித்து தனது பொதுக்கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைப்பார் பாரதி கம்பீரமாக.
மகாத்மா, ‘நாளை வேண்டுமானால் வருகிறேன்’ என்பார்.
‘அது முடியாது...உங்கள் போராட்டத்தை நான் ஆசிர்வதிக்கிறேன்’ என சிங்கம் போல் பீடு நடை போட்டு வருவார். அப்போது ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் பாரதியை விஸ்வருபமாக கம்போஸ் செய்து பாரதியின் பிம்பத்தில் மகாத்மாவை மறையச்செய்திருப்பார்.
வாவ்...

பாரதி படம் உருவாக காரணமாக இருந்த என் ஆசான் சுஜாதாவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Aug 8, 2013

ஷிப் ஆப் தீசியஸ் >>> பிளாட்டோ தத்துவம் >>> காமராஜர்.


நண்பர்களே...
நல்ல படம் நம்மை அலைக்கழிக்கும்.
தேட வைக்கும்.
 ‘ஷீப் ஆப் தீசியஸ்’ என்னை ‘பிளாட்டோ’ தத்துவத்திற்குள் துரத்தியது.

என் கையில் வைத்திருக்கும்  ‘பிளாட்டை’ விற்க படாதபாடு பட்டுக்கொண்டு
இருக்கிறேன்.
இச்சூழலில்,
‘பிளாட்டோவை’ தேடிப்படிக்கும் முரண்சுவை... சுவாரஸ்யமாக இருக்கிறது.
‘பிளாட்டோ’  என்ற தத்தவஞானியின் பெயரிலிருந்துதான்...
‘பிளாட்’ என்ற பெயரே உருவாகி இருக்கிறது.


*********************************************************************************
பிளாட்டோ பற்றிய அறிமுகமாக தமிழ் விக்கிப்பீடியா குறிப்பை அப்படியே தருகிறேன்.

பிளாட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். 
பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார். 
இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். 
இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். 
பிளாட்டோவின் உரையாடல்கள், தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளை கற்பிக்க பயன்பட்டது.
*********************************************************************************

பிளாட்டோ பற்றி படிக்கும் போது அவர் உருவாக்கிய முக்கிய கருத்தாக்கம் என்னை பிரமிக்க வைத்தது.

"மக்களை ஆளும் அரசாங்கம் நேர்மை தவறாதிருக்க வேண்டும்.

அரசாங்கத்தில் மக்களின் சார்பாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு கடுமையான சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

 அவர்களுக்கென்று சொத்துக்கள் வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது. 

சம்பளமும் கிடையாது.

பொது உணவு நிலையங்களில் உணவும்,
அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்க கட்டடத்தில் தங்கவும், 
தூங்கவும் அனுமதிக்க வேண்டும்.

அப்படி செய்வதால் சுயநலம் அவர்களிடம் இருக்காது. 

இலஞ்சங்களுக்கு விலை போகமாட்டார்கள். 

அவர்களுடைய குறிக்கோள் சமூதாயத்தில் ´நேர்மை´ என்னும் அறத்தை நிலைநாட்டுதல் ஒன்றையே குறியாக கொண்டு செயல்பட வேண்டும்." 



நமது பெருந்தலைவர் காமராஜர் இந்த தத்துவத்தை படித்தாரா என எனக்குத்தெரியாது.
ஆனால் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அந்த படிக்காத மேதைக்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.




அடுத்தப்பதிவில் சந்திப்போம்.




Aug 2, 2013

‘ஷிப் ஆப் தீசியஸ்’ போல படமெடுப்போம்...வாருங்கள்.



நண்பர்களே...
கோவை உலகசினிமா பக்தர்கள் தவத்தை மெச்சி,
‘ஷிப் ஆப் தீசியஸ்’ கோவைக்கு விஜயம் செய்துள்ளது.
 ‘உலகசினிமா பக்தர்கள்’ அனைவரையும்...
கோவை ப்ரூக்ஃபீல்டு மாலில் உள்ள ‘சத்யம் சினிமாஸ் கோவிலுக்கு’
வந்து  ‘ஷிப் ஆப் தீசியஸ்ஸை’தரிசிக்க வேண்டுகிறேன்.
தரிசன நேரம் தினமும் சரியாக மாலை 6 மணி 45 நிமிடத்திற்கு தொடங்கும்.

 ‘சிங்கத்தால்’ சீரழிந்தவர்கள்...
 ‘மரியானால்’ மரித்தவர்கள்...
 ‘பட்டத்து யானையிடம்’ பட்டவர்கள்...
 ‘வழக்கு எண்ணால்’ வசியமானவர்கள்...
 ‘பரதேசியை’ பரிந்துரைத்தவர்கள்...
 ‘விஸ்வரூபத்தை’  வியந்தவர்கள்...
அனைவரும் வாருங்கள்...பாருங்கள்.
இது உங்களுக்கான சினிமா.

இந்தப்படம்...
என்னைப்போன்ற ‘கத்துக்குட்டிகளுக்கு’...
போதி மரம்.


‘பதினைந்து லட்சத்தில் படமெடுக்கலாம்’
என்ற சிந்தனைக்கு உரமேற்றி இருக்கிறது இப்படம்.

இப்படத்திற்கு விரிவான விமர்சனத்தொடர்..
‘ஆமென்’ தொடரை முடித்து விட்டு தொடர்கிறேன்.

இப்படத்தை பார்க்க சென்னை போன போது,
பதிவர்களான
நண்பர் மெட்ராஸ்பவன் சிவா,
நண்பர் கே.ஆர்.பி.செந்தில் ஆகியோர் என் மீது காட்டிய அன்பும் அக்கறையும் நெகிழ வைத்தது.
அவர்களோடு கலந்துரையாடியதில் நிறைய கற்றுக்கொண்டேன்.
அப்போது மெட்ராஸ் பவன் சிவா கீழ்க்கண்ட கருத்தை வெளியிட்டார்.
 ‘ஷிப் ஆப் தீசியஸ்’ போன்ற படங்களுக்கு...
அமீர்கான் போன்ற ஹிந்தி திரைப்பட  ‘செலிபிரிட்டிகள்’ குரல் கொடுக்கிறார்கள்.
கூவி அழைக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் செய்வார்களா?

முதலில் நாம் இப்படி ஒரு படமெடுப்போம்.
எடுத்து விட்டு அவர்களை அழைப்போம்.
நிச்சயம் வருவார்கள்  ‘நம்மவர்’கள்.

பதினைந்து லட்சத்தில் படமெடுக்க தகுதியான திரைக்கதையுடன் காத்திருக்கும் படைப்பாளிகள் என்னை தொடர்பு கொள்க.
திரைக்கதையும்...உங்கள் படைப்பாக்க திறனும் என்னை கவர்ந்தால்,
நானே தயாரிக்கிறேன்.
இரு கரம் நீட்டி அழைக்கிறேன்.
[ எனது அலைபேசி எண் : 90039 17667.]

பதினைந்து லட்சத்தில், 
சில்ட்ரன் ஆப் ஹெவன், வே ஹோம், நாட் ஒன் லஸ், 
ஷிப் ஆப் தீசியஸ் போன்ற படங்களின் தரத்தில் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
 [ ‘பதேர் பஞ்சலி பாட்டி போல்’ ஒருவரை ஹீரோயினாக்கி பின்னப்பட்ட திரைக்கதையாக இருந்தால் உடனே  டபுள் ஓ.கே சொல்லி விடுவேன்.] 


பதினைந்து லட்சத்தில் படமெடுக்க என்னிடம் இப்போது திரைக்கதை தயாராக இல்லை.
எனவே, நான் ஒரு தயாரிப்பாளராக இருந்து  ‘திரைப்படக்கலையை’
‘மேலும் மேலும்’ கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

 ‘ஷிப் ஆப் தீசியஸ்’ திரைப்படம் காண நான் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாளும் தொடர்ந்து வருவேன்.
கோவை உலகசினிமா ரசிகர்களை நேரில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jul 27, 2013

உலகசினிமா ரசிகர்களே...ஒன்று கூடுவோம்.






நண்பர்களே...இந்த உலகசினிமா சென்னைக்கு வந்திருக்கு.
மிஸ் பண்ணாம போய் பாருங்க.
இந்தப்படத்தை ஹவுஸ்புல்லாக்குவோம்.
இயக்குனர் ஆனந்த் காந்திக்கு கை கொடுப்போம்.



இந்தப்படம் வெளியாகி உள்ள நகரங்கள்...திரையரங்குகள் அடங்கிய பட்டியல் இதோ...


கோவையில் இப்படத்தை திரையிடவில்லை.
எனவே நான் இப்படத்தை பார்ப்பதெற்கென்றே சென்னை வருகிறேன்.


இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை ‘திரு.மாமல்லன் கார்த்தி ’ அவர்கள் பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.
மாமல்லன் கார்த்தியின் விமர்சனத்தை இந்த இணைப்பில் சென்று படிக்கவும்.

இப்படத்தை இணைய தள ஊடகம் மூலமாக நாம் அனைவரும் கொண்டு செல்வோம்.

நான்  ‘எள்’ என்பதற்குள் ‘எண்ணையை’ கையில் வைத்து விட்டார்
நண்பர்+ பதிவர் ‘மெட்ராஸ்பவன்’ சிவா.
டிக்கெட்டை எக்ஸ்பிரஸ் வேகத்தில்... அனுப்பிய சிவாவுக்கு நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 18, 2013

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரம்.


நண்பர்களே...
இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமை ரித்விக் கட்டக்.
திரைப்படம், நாடகம், சிறுகதைகள் என பன்முகம் கொண்டவர்.
உலகம் முழுக்க,
திரைப்படக்கலையை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களில்,
அவரது திரைப்படங்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

ரித்விக் கட்டக் படைப்பில் மாஸ்டர் பீஸ் ‘மேக தக்க தாரா’.
இப்படத்தின் பாதிப்பில்தான்‘அவள் ஒரு தொடர் கதையை’
கே.பாலச்சந்தர் உருவாக்கினார்.


தெலுங்கிலும் இக்கதையை படமாக்கி வெற்றி கண்டார்.
அவள் ஒரு தொடர் கதை \ 1974 \ தமிழ் \ இயக்கம் : கே.பாலச்சந்தர்.
அந்துலேனி கதா \ 1974 \ தெலுங்கு \ இயக்கம் : கே.பாலச்சந்தர்.

அவள் ஒரு தொடர் கதையை பின்னர் வங்காளம், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் பிற இயக்குனர்கள் படைத்து வெற்றி கண்டார்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமான மேக தக்க தாராவையும்,
ரித்விக் கட்டக்கையும் யாருமே கண்டு கொள்ளவில்லை.
Kabita \ 1977 \ Bengali \ Directed by : Bharat Shamsher.


கமல், தமிழில்  அவள் ஒரு தொடர் கதையில் ஏற்ற கதாபாத்திரத்தை... தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஏற்று சிறப்பித்தார்.
[இந்தியில் மட்டும் செய்யவில்லை.]

ரித்விக் கட்டக்கின் படங்கள்,
அவரது வங்காள நாட்டிலேயே புறக்கணிக்கப்பட்டது.
சத்யஜித்ரே கொண்டாடப்பட்டார்.
ரித்விக் கட்டக் புறக்கணிக்கப்பட்டார்.


ரித்விக் கட்டக்கின் மூன்று படங்களை
ஒரே நாளில் திரையிட்டது...‘கோணங்கள் பிலிம் சொசைட்டி’.
அந்நாள்  ‘கோவை சினிமா ரசிகர்களுக்கு’ பொன்னாள்.

[ 1 ] மேக தக்க தாரா \ 1960 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 2 ] கோமல் கந்தார் \ 1961 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


[ 3 ] சுபர்ண ரேகா \ 1962 \ வங்காளம் \ இயக்கம் : ரித்விக் கட்டக்.


மூன்று படங்களும் அவரது ‘டிரையாலஜி’.
வங்காளப்பிரிவினையை மையமாக கொண்டது.
கிழக்கு வங்காளத்தில் பிறந்து, பிரிவினையின் போது...
மேற்கு வங்காளத்தில் நடப்பட்டவர் ரித்விக் கட்டக்.
எனவே அவரது படங்களில் பிரிவினையின் சோகம் அடிநாதமாக இருக்கும்.

இந்தியாவின் முதல் நியோ ரியலிசப்படமான ‘சின்னமோல்’ திரைப்படத்தில் அதை உருவாக்கிய நிமோய் கோஷுக்கு உதவியாளராக பணி புரிந்தார்.
அவரிடம் திரைப்படக்கலையை கற்றார்.
குருவைப்போலவே ‘ரஷ்ய படைப்பாளிகளின்’ படைப்புகளை ஆராதித்தார்.
ரித்விக் கட்டக் இயக்கி எட்டு படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ரித்விக் கட்டக் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் துணை முதல்வராக பணியாற்றினார்.
அவர் உருவாக்கிய சிஷ்யர்கள்தான் இந்திய சினிமாவின் புகழை உலகறியச்செய்து வருகிறார்கள்.
அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள்,
அடூர் கோபாலகிருஷ்ணன், மீரா நாயர், மணி கவுல், ஜான் ஆப்ரஹாம்,
குமார் சஹானி, சயீத் அக்தார் மிர்ஸா.

அவரது முக்கிய சீடரான திரு.ஹரிகரன் அவர்கள் தனது குருவை பற்றி
கூறியதை பார்ப்போம்.
[ திரு.ஹரிகரன் அவர்கள் ‘ஏழாவது மனிதன்’ என்ற சிறந்த படத்தை உருவாக்கியவர்.
தற்போது பிரசாத் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தலைவராக இருக்கிறார்.

“ இந்திய சினிமாவின் மிகவும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால்,
அது ‘ரித்விக் கட்டக்’ காகத்தான் இருக்க முடியும்.
அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்தியக்கலைஞர்களிலேயே மிகவும் புதிராக, புரிந்து கொள்ள முடியாதவருமாக விளங்கியவரும்
ரித்விக் கட்டக்தான்.

சிலரின் பார்வையில், ரித்விக் கட்டக் ஒரு வினோத மேதை.
ஆனால் அவர்கள் பார்க்கத்தவறுவது,
கீழ்மட்ட ஏழை மக்களின் மீது அவருக்கிருந்த அன்பும், அக்கறையும்,
ஆழமான நேசமுமாகும்.

இன்னும் சிலரின் பார்வையில், அவர் சோகம் மற்றும் நாடகத்தின் வல்லுனன்.
ஆனால், இவர்கள் தெரிந்து கொள்ளாதது...
அவரது ஒவ்வொரு ‘ஷாட்டின்’ பின்னால் உள்ள அன்னியோன்யமும், ஆழமான ஒழுங்கு முறையும் ஆகும்.

மற்றும் சிலருக்கோ, அவர் ஒரு கலைப்பட இயக்குனர்.
ஆனால் அவர்கள் அறியாதது,
தன்னுடைய படங்கள் பற்றிய சாதாரண மனிதனின் கருத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறை.

அவர் எப்போதுமே, தன் படங்களைப்பற்றி பேசுவது...
தன் படங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அவரின் ‘மேக தக்க தாரா’ அல்லது ‘சுபர்ண ரேகா’ படத்தை இன்றும் ஒருவர் பத்தாவது முறை பார்க்கும் போதும் கண்கள் குளமாகும்.
அப்போது  ‘படங்களை பற்றி படங்கள்தான் பேச வேண்டும்’ 
என்ற அவரின் கருத்து நமக்கு புரிகிறது.

அதிர்ஷ்டவசமாக அவரின் மறைவுக்கு பின்பாவது இப்போது அவரது படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
உலகெங்குமுள்ள சினிமா ரசிகர்கள் எத்தகைய ஒரு இந்திய சினிமா மேதையை அவரது சொந்த வாழ்நாளின் போது இழந்து விட்டோம் என்பதை உணர்கின்றனர்.
அவர் இருந்திருந்தால் இந்திய சினிமாவுக்கு இன்னும் செழுமை ஊட்டி இருப்பாரோ ?
நிச்சயம் செய்திருப்பார்”. - கே.ஹரிகரன் 
30 - 1 - 1990
சென்னை.

நூல் : ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை \
முதல் பதிப்பு \ 1990.
வெளியீடு : சென்னை பிலிம் சொசைட்டி.

ரிதவிக் கட்டக் இயக்கிய படங்கள்,மற்றும் மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவை அணுகவும்.

ரித்விக் கட்டக் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயா செல்க...

ரித்விக் கட்டக்கின் படைப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும்...

ரித்விக் கட்டக் - இந்திய சினிமாவின் அஸ்திவாரமாக இருந்து விட்டார்.
அஸ்திவாரங்கள் தெரிவதில்லை.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 11, 2013

கமலின் கான்செப்ட்...இரண்டு மனைவிகள்.


HEY RAM \ 2000 \ INDIA \ DIRECTED BY : KAMAL HASSAN \ ஹேராம் = 036

“ கமல் திரைக்கதை எழுதிய படங்களில் திரும்பத்திரும்ப வெளிப்படும் ஒரு விஷயம், அப்பா என்கிற படிமம்.
குறிப்பாக, அப்பாவிடமிருந்து விலகிப்போக விரும்பும் ஒருவன் எப்படி அப்பாவின் ஆளுமையிலிருந்து விலக முடியாதவனாக இருக்கிறான் என்பதே
அவரது ஆதார பிரச்சனை.
குடும்பத்திலிருந்து வெளியேற விரும்புவம் ஒருவனே அவரது கதாநாயகன்.
அவன் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண்ணோடு பழகுகிறான்.
அவளைக்காதலிக்கிறான்.
திருமணம் செய்து கொள்ளும் முன்பே அவளோடு நெருக்கமாக பழகி சேர்ந்திருக்கிறான்.
பிறகு சூழலின் காரணமாக அவளை கைவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறான்.

இது தேவர் மகனில் மட்டுமில்லாது, ஹேராமிலும் இடம் பெறுகிறது.
ஒரு வகையில் இந்த ஒப்புமை ஆச்சரியப்படக்கூடியது.
தேவர் மகன், ஹேராம்...
இரண்டிலுமே இரண்டு நாயகிகள் இடம் பெறுகின்றனர்.
ஒன்று, அவன் காதலி.
மற்றொன்று, அவன் மனைவி.
காதலி... அவன் விரும்பித்தேடிக்கொண்டது.
மனைவி...அவன் முழு விருப்பமின்றி மணந்து கொள்ளப்பட்டவள்.
தேவர் மகனில்...செங்கமலமும் [ ரேவதி ],
ஹேராமில்...மைதிலியும் [ வசுந்தரா தாஸ் ],
தனது கணவனோடு உள்ள உறவைப்புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.” - எஸ்.ராமகிருஷ்ணன்.
நூல் : கமல் நம் காலத்து நாயகன் \ முதல் பதிப்பு \ 2011.
தொகுப்பு : மணா.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
[ நூலில் எஸ்.ரா ஹேராம் பற்றிய கட்டுரைக்கு, 
எழுதப்பட்ட காலமும், 
கட்டுரை இடம் பெற்ற ஊடகமும் குறிப்பிடப்படவில்லை ] 

நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒப்பீட்டு ஆய்வை இப்பதிவின் முன்னுரையாக இடம் பெறச்செய்தது மிகப்பொருத்தமான ஒன்றே.

இனி ஹேராம் திரைக்கதைக்குள் செல்வோம்.
_________________________________________________________________________________

தன் மகளை முதலிரவு அறைக்குள் அனுப்ப வந்த...

அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...

அறையினுள் ராம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து,
காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ ஆங்கிலப்புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறான்.

மைதிலி : [ என்ன பேசுவது என்றே புரியாமல் ] பால் அங்கே இருக்கு.

ராம் : இல்ல...நான் பாலே சாப்பிடறதில்ல.

மைதிலி : ஏன் ? டாக்டர்... ப்டாதுண்ட்டாரா ?

[ ராம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை பார்த்து ]

மைதிலி : இண்ட்ரஸ்டிங் இல்ல ?

ராம் புருவம் உயர்த்தி அவளைப்பார்க்கிறான்.

மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான்.

ராம் : ஓ !...ஸாரி.

புத்தகத்தை கீழே வைக்கிறான்.

மைதிலி : நோ...நோ...படிங்கோ.
‘டிட் யூ லைக் த புக்’

ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.

மைதிலி : நான் பொடவையை மாத்திண்டு வந்துட்றேன்.
பட்டுப்பொடவய கட்டிண்டு தூங்க வேண்டானுட்டா...அம்மா. 

பீரோவிலிருந்து வேறு புடவையை எடுத்துக்கொண்டு மைதிலி குளியலறைக்குள் போகிறாள்.
குளியலறைக்குள் புகுந்த மைதிலி, கதவை தாழ்ப்பாள் இட்டு விட்டு,
புடவையை களையத்துவங்குகிறாள்.
ஒரு பல்லி அவள் தோள் மீது விழுகிறது.
மைதிலி அலறி விடுகிறாள்.

மைதிலி : ஆ...ஆ...ஆ....

பல்லி கீழே விழுந்து ஓடுகிறது.
காலில் ஏறி விடுமோ என பயத்தில் கத்திக்கொண்டே குதிக்கிறாள் மைதிலி.
குளியலறைக்கு வெளியிலிருக்கும் ராம் குழப்பமைடைகிறான்.
மைதிலியின் அலறல், ராமை கல்கத்தா சூழலுக்குள் நினைவினில் உந்தித்தள்ளி விடுகிறது.

ராமின் கண்கள் திறந்திருந்தும், எதையும் பார்க்காத கண்களுடன்...
தூக்கத்தில் நடப்பவன் போல் பாத்ரூம் கதவை அடைந்து தட்டுகிறான்.

ராம் : அபர்னா...அபர்னா...

 ‘நிஜத்திற்கும்’... ‘நினைவிற்கும்’...பிரித்து பார்க்க முடியவில்லை ராமால்.  மைதிலி கதவை திறக்கிறாள்.
ராம், குரல் கொடுப்பதை நிறுத்தி விடுகிறான்.
ஜாக்கெட் தெரியும் கோலத்தில் இருக்கும் மைதிலி அவசரமாக புடைவையை
போர்த்தி மறைக்கிறாள்.

மைதிலி : அபர்னா யாரு ?

ராம் பதில் சொல்லாமல் குளியலறைக்குள் சென்று, மூடித்தாழிட்டுக்கொண்டு
நினைவில் சூழ்ந்துள்ள ‘கல்கத்தா துயரங்களுக்கு தலை முழுக’
குளிக்க ஆரம்பிக்கிறான்.
மைதிலி வெளியே குழப்பத்தோடு காத்திருக்கிறாள்.

நனைந்த உடலுடன், ராம் நிர்வாணமாக ஒரு மூலையில் போய் ஒடுங்குகிறான்.
மெய் மறந்த நிலையில் ராம் இருக்கிறான்.

[ வெளியிலிருந்த ] மைதிலி : ஏன்னா...உங்களுக்கு ஒண்ணுமில்லியே.
ஆர் யூ ஆல் ரைட்?

நிஜ மைதிலியின் குரலுடன் கலந்து,
நனவோடை கல்கத்தா அபர்னா - கற்பழிப்பாளர்களின் குரலும் கலந்து கேட்கும் பிரமை ராமுக்கு ஏற்படுகிறது.

அல்தாப் : [ குரல் மட்டும் ] மேம் சாப்...தார்வாசா கோலோ மூம்சாப்...
மெய்ன் அல்தாப் மேம்சாப்...ஆப்கா புரானா டெய்லர் மேம்சாப்...
நையா நாப் லேனே ஆயாஹூன்.

அபர்னா : [ குரல் மட்டும் ] ராம்...ஆர் யூ ஆல் ரைட் ராம் ?

ராம் தன் செவிகளை அடைத்துக்கொள்கிறான்.
கல்கத்தாவில் இறந்தவர்கள் உருவங்கள் பாத்ரூம் தரையில் தோன்றி மறைகின்றன.

அபர்னா, கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறாள்.
இரத்தம் குளமாக தேங்கி கிடக்கிறது.
ராமால் கொல்லப்பட்ட அனைவரும் அங்கே இருக்கிறார்கள்...
அவனது முதலிரவுக்கு வருகை தந்தவர்கள் போல...

பல்லி ரத்தம் குடிக்கிறது...
ராம் துடிக்கிறான்.
ரத்தச்சகதியின் மீது பல்லி ஊர்ந்தும்...நடந்தும் செல்கிறது.

_________________________________________________________________________________

திரைக்கதையை முழுக்க விவரித்ததன் மூலமாக,
நீங்கள் இக்காட்சியை மறுபடி மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்திருப்பீர்கள்.

\\\ அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...\\\

இந்தியத்தாய்க்கும் - மகளுக்கும் இருக்கும் உறவு நெருக்கம்...
பாலியலுக்கு பக்குவப்படுத்துதல்...
இரண்டையுமே, இந்த  ‘ஒரு வரி வசனத்தில்’ வெளிப்படுத்தி... 
நம் குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு முதலிய பெருமைகளை உலகறியச்செய்துள்ளார் படைப்பாளி கமல்.
மேல் நாட்டு ‘டேட்டிங்’ கலாச்சாரத்தை இங்கே பரப்ப நினைக்கும் பன்னாடைகளுக்கு இக்காட்சி பாடம் புகட்டும்.


\\\  மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான். \\\

இந்த வசனத்தை உச்சரிக்கும் போது மைதிலியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிவதைக்காணலாம்.

\\\ ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.\\\

ராமின் குரலில் அலட்சியம் மேலோங்கி இருக்கும்.

‘காந்திஜீ பயாகிரபியை’... ‘செமி பிக்‌ஷன்’... என ராம் நக்கலடிப்பதை விரும்பாமல் மைதிலி அந்த இடத்திலிருந்து நகருவாள்.
இந்தக்குணம்... இந்தியப்பெண்களுக்கே உரித்தான பராம்பரிய குணம்!
காந்தியையும் விட்டுக்கொடுக்க முடியாமல்,
புருஷனையும் திட்ட முடியாத...
மைதிலியின் ஷண நேரத்தவிப்பை மிக அற்புதமாக தனது முகத்தில் பிரதிபலித்து காட்டியிருப்பார் வசுந்தரா தாஸ்.

பாத்ரூமிற்குள் மைதிலி,
பல்லிக்கு பயந்து அலறுகிறாள்.
ராமிற்கு, மைதிலியின் அலறல்,
நனவோடையினால் [ Stream Of Consciousness ]...
அபர்னாவின் கதறலாக கேட்கிறது.

பார்வையாளராகிய நமக்கு இருவரது அலறலும் கேட்கிறது.
திரையில் விஷுவலாக காட்டப்படும் மைதிலியின் அலறலுக்கு பின்னணி இசை அமைக்காமல்,
ராமின் நனவோடையில் ஒலிக்கும் அபர்னாவின் கதறலுக்கு ...
பின்னணி இசை கொடுத்து...
ரசிகர்களை நனவோடையில் ஆழ்த்தி ‘கல்கத்தாவுக்கு’ அழைத்து செல்கிறார் இளையராஜா.
இரண்டு ஜீனியஸ்கள் ஒன்றாக சங்கமித்ததால் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இந்தக்காட்சி.


அவலத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் ராஜாவின் இசை,
மைதிலி கதவைத்திறந்ததும்...நொடி நேரத்தில் மெல்லிசையாக மாறி சாந்தமாக ஒலிக்கும்.
மீண்டும் ராம் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு கதவடைத்ததும்,
ராஜாவின் ‘துன்பியல் இசை’ ...
காட்சியில் இடம் பெறும் சப்தங்களுக்கு...
இடையூறு செய்யாமல் ரசிகனுக்கு அவலச்சுவையை கூட்டுவதில்
தன் பங்கை செவ்வனே செய்கிறது.

அடித்துச்சொல்கிறேன்..
உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ்,
ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா.
இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க,
கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு.

ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள்,
தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.



அபர்னா நினைப்பு, கல்கத்தா துயரம் இவைகள் ஏற்படுத்திய  உள்ளக்கொதிப்பை தணிக்க ராம்  ‘தலை முழுகுகிறான்’.
இறுதியாக  ‘கரண்ட் ஷாக்கில்’ உடம்பு உதறுவது போல் உடல் மொழியை ஏற்படுத்தி நம்மை ஆகர்ஷிக்கிறார் கமல்.
இக்காட்சியில்  நடிகர் கமலை பாராட்டுவதா !
வடிவமைத்த இயக்குனர் கமலை பாராட்டுவதா !!
ஒரே வார்த்தை...கொன்னுட்டீங்க கமல்.

‘நனவோடைக்காட்சிகளை’ படமாக்குவதில் உலகிலேயே
ஈடு இணையற்ற மாஸ்டர் ‘ இயக்குனர் மாமேதை இங்மர் பெர்க்மன்’ மட்டுமே.
ராமின் குளியலறைக்காட்சியின் மூலமாக  ‘பெர்க்மனுக்கு’ இணையாக உயர்ந்து விட்டார் கமல்.


மைதிலியின் மீது விழுந்த பல்லியும்...
இரத்த சகதிக்குள் துடிக்கும் பல்லியும்...
ஒன்றல்ல.
ஏனென்றால் ராம் பார்க்கும் போது வெற்றுத்தரையாக இருப்பது...
மெல்ல மெல்ல இரத்தக்குளமாக உருவெடுக்கும்.
அதில் ஊர்ந்து போய் இரத்தத்தை குடிக்கிறது ‘பல்லி’.
இக்காட்சி சரியான ‘பெர்க்மன்தனம்’.

பல்லி = நனவோடை.
இரத்தம் = கல்கத்தா துயரம்.

இது போன்ற காட்சியை பாமர ரசிகன் புரிந்து கொள்வான் என நம்பி 2000ல் படமெடுத்த கமலுக்கு...
ராயல் சல்யூட்.

‘பெர்க்மனை’  உண்மையாக புரிந்து கொண்ட ரசிகன்,
இக்காட்சியை அமைத்த கமலைக்கொண்டாடுவான்.

‘நனவோடை’ பற்றி ஹேராமின் முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியுள்ளேன்.

ஹேராம் = 031 பதிவிற்குச்செல்ல...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Jun 10, 2013

பதிவுலக பண்ணையார்கள் பற்றி எரியட்டும்.


நண்பர்களே...
பேட்டரி, ஊமத்தை, அரளி விதையை போட்டுக்காய்ச்சிய கள்ளச்சாராயத்தை வாசகனிடம் விற்று விட்டு ‘ரெமி மார்ட்டினுக்கு’ வழியில்லையே எனப்புலம்பும் ‘லகுட பாண்டி’ இருக்கும் நாட்டில்தான்...
தாய்ப்பாலை பருக வைக்கும் எழுத்தாளனாக,
வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
இந்த ‘கள்ளச்சாராயம்’...  ‘தாய்ப்பாலை’ தொடர்ந்து தாக்கி வரும் மர்மத்தையும் நாடறியும்.
எஸ்.ரா அவர்கள் ஹேராமுக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததை,
வாசிக்கும்  ‘ஒரு சில பதிவுலக பண்ணையார்கள்’ பற்றி எரிவதை பற்றி கவலையில்லை.
என் கடன்  ‘உலக சினிமாவுக்கு’ பணி செய்து கிடப்பதே.

Heyram \ 2000 \ India \ Directed by Kamal Hassan \ Part = 035


“  ஹாலிவுட்டின் 3 அங்கங்கள் கொண்ட திரைக்கதை அமைப்பு 
தமிழுக்கு பொருந்தாது.
அதற்குக்காரணம், தமிழில் கதை சொல்லும் முறைகள் ஏராளம். 
இங்குள்ள ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், நாட்டார் கதைகள் போன்றவை நூற்றுக்கணக்கான கதை சொல்லும் முறைகளை கொண்டிருக்கின்றன.
ஆகவே,தமிழ் திரைக்கதை... 
‘சிட்ஃபீல்டு’ சொல்லும் 3 அங்கங்கங்களை கொண்ட திரைக்கதை அமைப்பிற்கு 
ஒத்து வராது.
இதற்கு உதாரணமாக கமலின் திரைக்கதைகளையே சொல்லலாம்.
அவரது கதைகள் சம்பிரதாயமான ஹாலிவுட் திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தாதவை.

ஹேராம் இந்திய சுதந்திரத்தின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டிய முதல் படம்.
காந்தி எப்போதுமே ஒரு புனித பிம்பமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அதை விலக்கி காந்தியை முன் வைத்து நடந்த அரசியல் சம்பவங்களையும்,
அதன் விளைவுகள் இன்றுவரை இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை விவரிக்கிறது ஹேராம்.
இதை ஒரு கமர்சியல் சினிமாவிற்கான கதையாக தேர்வு செய்வது என்பதிலே...
கமலின் துணிச்சலும் ஆர்வமும் வெளிப்பட்டுள்ளது.

ஹேராமின் திரைக்கதை விரிந்த தளத்தில் இயங்கக்கூடியது.
பொதுவில் திரைக்கதையின் முக்கியப்பிரச்சனையாக கதை நடைபெறும் கால மற்றும் வெளியைச்சொல்வார்கள்.
ஹேராம் ஒரு நாவல் போல சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் முன்பின்னாக நகர்ந்து செல்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்,
அதன் எதிர்விளைவுகளாக உருவான வன்முறையும்,
இந்திய சமூகத்தில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் பாதிப்புகளின் மீதான ஒரு கலைஞனின் பார்வையே ஹேராம்.

சினிமாவில் சரித்திரத்தை மறு உருவாக்கம் செய்யும்போது சந்திக்கும் முதல் சவால் உரையாடல்.
எது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்;
எப்படியான மொழியில் வெளிப்படுத்தினார்கள் என்பது.
ஹேராமில் ஐம்பது வருடங்களுக்கு முன்புள்ள பிரயோகங்கள்,சொற்கள்,
உரையாடல்களில் கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அது போல பல்வேறு கதாபாத்திரங்கள் அவரவர் மொழியில் பேசிக்கொள்கிறார்கள்.
இத்தனை வேறுபட்ட மொழிப்பிரயோகங்கள் கொண்டிருந்த போதிலும்,
ஆதாரக்கதை சொல்லல்...காவியத்தன்மை மிக்கதாகவே தொடர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமாவை தொடர்ந்து அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு முன்னோடி கலைஞன் என்ற அளவில் கமலின் படைப்புகள் ஒவ்வொன்றும் விரிவாக விவாதிக்கப்படவேண்டியவை.
கமல் தமிழுக்கு கிடைத்த 
ஒரு ‘ழான் கிளாட் கேரியர்’. 
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நூல் : கமல் நம் காலத்து நாயகன்.

தொகுத்தவர் : மணா.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

[ எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள் எழுதிய காலமும், வெளியிட்ட ஊடகம் பற்றிய தகவல் நூலில் இல்லை.] 



ழான் கிளாட் கேரியர் பற்றி தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவுக்கு செல்க...
நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கல் வெட்டை’ கண்டு களித்திருப்பீர்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
    

May 28, 2013

ஹேராமில், சென்சார் நீக்கிய காந்தி பற்றிய வசனங்கள்.


Hey Ram \ 2000 \ INDIA \ ஹேராம் = 034 
‘கமல்ஹாசன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவோடு பேசிக்கொண்டிருக்கிறார்...
சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்...
சூதாடிக்கொண்டு இருக்கிறார்...
இடர்கள் மிகுந்த அதன் ஒவ்வொரு குகையாகத்தட்டி திறந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் சினிமா மொழியை உருவாக்குவதற்காக,
அதன் கலா பூர்வமான வேர்களை உயிர்பிப்பதற்காக அவர் தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மாதிரிகளாக கருதப்படும் அனைத்தும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கமல்ஹாசன் பரிசோதித்து பார்த்ததின் நீட்சியே’ - மனுஷ்ய புத்திரன். 

நண்பர்களே...
ஹேராமில்,  ராம் - மைதிலி திருமணக்காட்சிகள்,
அய்யங்கார் திருமணச்சடங்குகளை மிகச்சிறப்பாக பதிவு செய்ததை,
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மிகவும் சிலாகித்து பாராட்டி எழுதி இருக்கிறார்.
அம்புஜம் கதாபாத்திரத்தில் ஹேமமாலினி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கண்ணாலேயே கணவனுக்கு கட்டளை பிறப்பிப்பதும்,
கட்டளைகளை சரியாக உள்வாங்கி உப்பிலி அய்யங்கார் ‘ஆடுவதும்’ ...
கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

‘வைஷ்ணவோ ஜனதோ...
தேனே கஹியேஜெ...
பீடு பராயி ஜானேரே’
என, பெண் பார்க்கும் படலத்தில்...
மைதிலி, காந்திக்கு பிரியமான பாடலைப்பாட,
மைதிலியின் பெற்றோர் பெருமிதத்தில் பூரிப்பார்கள்.
மைதிலியின் குடும்பமே காந்தியின் பக்தர்கள் என்பதை இக்காட்சியிலேயே
எஸ்டாபிளிஷ் செய்திருக்கிறார் இயக்குனர் கமல்.

ராம் - மைதிலி கண்கள் கலந்து திருமணம் நடக்கிறது.


சாப்பாட்டுப்பந்தி நடக்கும் போது,
மொட்டை மாடியில் நண்பர்களோடு உரையாடுகிறான் ராம்.
ராமின் முகத்தில் கல்யாணக்களையே இருக்காது.

வேதா : என்ன...கல்யாண மாப்ள யோசிச்சிண்டிருக்கே ?

ராம் : இங்க சாவகாசமாக என் கல்யாணம் நடந்திண்டிருக்கு.
டெல்லியில ஒரு பெரிய விவாகரத்தே நடந்துண்டிருக்கு.
‘வேர்ல்டு பிக்கஸ்ட் பொலிட்டிக்கல் டிவ்வோர்ஸ்’

யக்ஞம் : சரி...தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு.
இந்த பாக்கிஸ்தான் பிரிஞ்சது நல்லதுங்கறேன் நானு.
அந்த ரேட் கிளிஃப் செறங்கை நறுக்கி எறியற மாதிரி 
சர்ஜரியே பண்ணிட்டான்.

வேதா : யாருடா அந்த ரேட் கிளிஃப் ?

யக்ஞம் : என் சித்தப்பா.

வேதா : ஓஹோ...

யக்ஞம் : என்னடா ஒத்துக்கறான்.

வேதா : சரி...ஒத்துக்கல. யாருடா அது ?

ராம் : இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் பிரிக்கிற கோடு எதுன்னு
நிர்ணயம் பண்ணின மகானுபாவன்.

இக்காட்சியில் உள்ள வசனத்தின் மூலம் ராம்-மைதிலி திருமணக்காலத்தை கணக்கிடலாம்.
மேலும் பிரிவினையை ஆதரிக்கும் பாத்திரமாக ‘யக்ஞம்’ காரெக்டரையும்,
பிரிவினையில் உடன்பாடில்லாத பாத்திரமாக‘ராம்’ காரெக்டரையும் படைத்துள்ளார் படைப்பாளி கமல்.
பிரிவினையில் முரண்பட்ட கருத்துக்கள் இந்துக்களிடம் நிலவியதை இக்காட்சி சித்தரிக்கிறது.
முஸ்லீம்களிடமும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்த்தை  ‘அம்ஜத்’ காரெக்டர் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதை பின்னால் பார்க்க இருக்கிறோம்.

 இந்திய - பாக்கிஸ்தான் எல்லைக்கோட்டை வகுத்த ரேட் கிளிஃப் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவை அணுகவும்.

ரேட் கிளிஃப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு....


வசந்தா மாமி மயக்கமாகிறார்.
யக்ஞம் டாக்டர் என்பதால் பரிசோதிக்கிறான்.
இக்காட்சியில்  ‘ஸ்கிரிப்ட்டில்’ உள்ள சில வசனங்கள்,
சென்சாரால் நீக்கப்பட்டு உள்ளது.
அந்த வசனங்களை  ‘அடித்து’ அடையாளப்படுத்தி உள்ளேன்.

யக்ஞம் : மாமி, 24 மணி நேரம் இருக்குமா...
நீங்க கடைசியா சாப்டு ?...
ம்...பட்னி...
உங்களுக்கு எதுக்கு இந்த வயசில காந்தி விளையாட்டெல்லாம் ? வேலையெல்லாம் ?

அம்புஜம் : காந்தி வெளயாட்டா ?

யக்ஞம் : அவர்தான் உபவாசம், பாஸ்ட்ன்னு கடைசி நிமிஷம் வரைக்கும்,
எல்லோரையும் இழுத்தடிச்சுட்டு காரியம் ஆனதும் ,
ஒடம்பு கெடாம டக்குன்னு நிறுத்திடுவார்.

அம்புஜம் : என்ன சொல்றார் ? 
மஹாத்மாவை கேலி பேசற மாதிரி இருக்கே ?

பாஷ்யம் : இவா வம்சமே அப்படித்தான்.
லோகம் பூரா ஒண்ண ஒத்துண்டாலும்...இவா ஒத்துக்க மாட்டா.
என் ஒறவுக்காரன்.
ம்...காந்தி என்ன...பகவானையே கேலி பேசுவான்.

யக்ஞம் : ம்...உறவுக்காரரே... ‘ஐ யாம் ஜஸ்ட் பீயிங் பிராக்டிகல்.
மாமி...நான் மகாத்மாவை கேலி பேசல.
‘ஆஸ் எ டாக்டர்’...இந்த மாதிரி ஒடம்ப கவனிச்சுக்காம பட்னி கெடக்கறது தப்புன்னு சொல்றேன். அவ்வளவுதான்.

அம்புஜம் : நானும் நீங்களும் பட்னி கெடந்தா, 
மாமி மாதிரி மயக்கம்தான் வரும்.
மஹாத்மா பட்னி கெடந்தா சுதந்திரம் வரும்.
நீங்க சாப்பிட்டேளா ?

யக்ஞம் : [ நக்கலான விமர்சனம் புரிந்தவனாய்...அசடு வழிய ]
வயிறு திம்முன்னு நெறஞ்சுடுத்து.

அம்புஜம் : அது ‘கேஸ்’ஆ இருக்கும்...போய் சாப்ட்றுங்கோ.

வசந்தா மாமி கலகலன்னு சிரிக்க இக்காட்சி நிறைவு பெறுகிறது.

இக்காட்சியில் காந்தியின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை
கமலின் கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
காந்தியின் உண்ணாவிரதப்போரட்டம்,
அந்தக்காலத்திலேயே விமர்சிக்கப்பட்டதை...
யக்ஞம் கதாபாத்திரம் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது.
காந்தியை எந்த விமர்சனமும் இல்லாமல் பக்தர்கள் போல்,
அவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதை அம்புஜம் கதாபாத்திரம் மூலம் எடுத்துக்காட்டி உள்ளார் கமல்.

இக்காட்சியில் போட்டி போட்டு யக்ஞமாக நடித்த ஒய்.ஜி. மகேந்திரனும்,
அம்புஜமாக நடித்த ஹேமமாலினியும்,
பாராட்டுக்குறியவர்கள்.

வைஷ்ணவோ ஜனதோ & வாரணம் ஆயிரம் பாடலையும்... திருமணக்காட்சிகளையும் காணொளியில் காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.