Nov 4, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம்-மாற்ற வேண்டாம் தாயே


1977 லிருந்து என்னுடைய ஒட்டு உதய சூரியனுக்குத்தான்.
முதன்முறையாக கலைஞரின் மேல் வந்த எனது கோபத்தை இரட்டை இலைக்கு போட்டு எனது கோபத்தை தணித்து கொண்டேன்.

இரட்டை இலைக்கு ஒட்டு போட்ட உரிமையில் கேட்கிறேன்...
தாயே...

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.

இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...
                  


                   
                                               
பத்து மாநகராட்சியை தங்கள் காலடியில் சமர்ப்பித்த தமிழக மக்களுக்கு பரிசாகத்தாருங்கள்....

பத்தும் பத்தாயிரம் ஆண்டுகள் உங்கள் புகழைச்சொல்லிக்கொண்டே இருக்கும்
எங்கள் வேலு நாச்சியாரே!

உலகின்... டாப் 10 நூலகங்கள் எது? என கூகுளில் கேட்டால் ...
நீங்கள் உருவாக்கிய பத்து நூலகங்களைத்தான் அது காட்ட வேண்டும்.
உங்களால் முடியும்....உங்களால் மட்டும்தான் முடியும்.

நண்பர்களே!
நமது முதல்வர் அம்மாவிற்க்கு வேண்டுகோள் விடுத்து பின்னூட்டமிடுங்கள்.
அதை நான் இந்தப்பதிவிலேயே உடனுக்குடன் இணைத்து விடுகிறேன்.
தயவு செய்து விமர்சித்து பின்னூட்டம் இட வேண்டாம்.
மிக நாகரீகமாக ...நயமாக...பணிவாக ...பண்பாக உங்கள் பின்னூட்டம் அமையட்டும்.

முதல் கருத்தாக...  சுந்தர்ஜீ கூறியது....


please let it be a USEFUL LIBRARY lot of hospitals are there outnumbering libraries moreover it was built and meant for library so let it be a USEFUL LIBRARY to all.

please do not convert it into a multi speciality hospital instead facilities can be improved at GH, stanley and even in rural villages which has zero medical facilities. anti-snake venom, anti-rabies and other life saving medicines are required at many of the out of reach hilly rural villages of gullible people please do something which will be helpful for them. chennai is already a MECCA OF MEDICAL MIRACLES so please please no more hospitals but improve their standard, pathetic condition, good maintenance of all drugs and environment and the workers there. 
LET IT BE A USEFUL LIBRARY. 
ANBUDAN
SUNDAR G ( RASANAI )
********************************************************************************************
சூர்யஜீவா கூறியது....


இந்த போராட்டம் குறித்து எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், பெருவாரியான மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளேன்... மேலே இணைப்பு கொடுத்திருக்கிறேன்... இந்த இணைப்பில் அம்மையாருக்கு உங்கள் கோரிக்கையை வைக்க வழி வகுத்து உள்ளார்கள்... போராடுவோம்.. இன்குலாப் ஜிந்தாபாத் 
*********************************************************************************************
நிரூபன் கூறியது....


நல்லதோர் வேண்டுகோள், ஒருமித்த மக்கள் பலத்தின் மூலமும், மக்களின் வேண்டுகோள் மூலமும் ஜெயலலிதாவின் மனதில் இக் கோரிக்கையையினை நிறைவேற்றும் எண்ணத்தினைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன்.


***********************************************************************************************
அபிமன்யூ கூறியது

நல்ல ஒரு தொடக்கம் நண்பரே.. இதை முழுமனதோடு வரவேற்கிறேன். நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.


*************************************************************************************************

arivin kuttai kalaithu vida vendam.

*****************************************************************************************************************************

நல்ல முயற்சி, என்னது பாராட்டுகள் உங்களுக்கு. அந்த கட்டிடம் மருத்துவமனைக்கு ஏற்ற கட்டிடமாக கண்டிப்பாக இருக்க முடியாது. ''அம்மா'' இதனை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். நல்ல எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எல்லாம் நல்லதே நடக்கும், இந்த பதிவு அனைவரிடமும் சென்று சேரவேண்டும் , அனைவரும் பரிந்துரையுங்கள்.

*****************************************************************************************************************************************

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா. இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்... கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே... உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது சகோதரரே .நிட்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் .ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம் .இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத் தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.அதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன் சகோதரரே .மிக்க நன்றி பகிர்வுக்கு .

*********************************************************************************************************************************************


நல்ல ஒரு ஆக்கம் நண்பரே... என்னையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறேன். நம் அனைவருடைய கோரிக்கையும் அம்மையாரின் மனதை மாற்றும் என முழு நம்பிக்கையுடன் இயங்குவோம். அனைவருக்கு அறிவை வழங்கும் ஒரு (நூலகத்தை) கலஞ்சியத்தை போஸ்ட்மாடம் செய்யவேண்டாம் என்பதே எங்களின் தாழ்மையான வேண்டுகோள்...

***************************************************************************************************************************************
நானும் உங்களோடு சேர்கிறேன்,,,,

*****************************************************************************************************************************************
நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்... எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!
By Kousalya 

********************************************************************************************************************************************

கட்டாயம் நீங்கள் கூறிய கருத்தினை ஏற்றால் கட்டாயம் இந்த தலைவியால் பத்து நூலகங்கள் உருவாக்கி பத்தையும் கூகிள் முதல் பத்து இடத்தினை கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு அறிவும் அதிகாரமும் இருக்கிறது. செய்யலாம். செய்வார்கள் என்று நம்புவோமாக இப்பொதைக்கு முதலில் அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை கைவிட கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் இது போல குழந்தைகள் மருத்துவமனை கட்ட நிறைய இடம் இருக்கிறதே. அங்கு கட்டலாமே வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்

**************************************************************************************************************************************************
நல்ல ஐடியாதானே இது. . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.

********************************************************************************************************************************************************

புதிய மருத்துவமனைக; துவக்குவது வரவேற்கத்தக்கதுதான்! ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்??? எனக்கொரு சந்தேகம்- புதிய மருத்துவ மனைகள் துவக்குகிறேன் என்கிறீர்கள். தற்போது இயங்கிவரும் மருத்துவமனைகளின் நிலை அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதா?இல்லை புதிய தலைமைச்செயலகத்தில் துவக்கப்படுவதாக அறிவித்த மருத்துவமனைக்கான செயல்முறைகள் எந்த நிலையில் இருக்கிறது?
By கோகுல்
****************************************************************************************************************************************************************

//அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.// எனது தாழ்மையான வேண்டுகோளும் இதுவே . நூலகங்களை உருவாக்குங்கள் வருங்கால சமுதாயம் உங்களை போற்றிபாராட்டும் .
By angelin 

**********************************************************************************************************************************************************************
நூலகம் மாற்றப்படக்கூடாது, அறிவுலகின் நுழைவாயிலாம் நூலகம் அதை உருவாக்க எவ்வளவு சிரமம், அழிப்பது எளிது, தயை கூர்ந்து மக்களின் கூக்குரலை கேட்டருள வேண்டும். மருத்துவமனை கட்ட ஆயிரம் இடங்கள் கிடைக்கலாம். நூலகத்தை விட்டு விடுங்கள்.

****************************************************************************************************************************************************************************
நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே....
********************************************************************************************************************************************************************************
அதை மிகச் சிறப்பாக அமைந்த ஒரு நூலகமாக மட்டுமே பாருங்கள், கலைஞரின் முயற்சியில் எழுந்த நூலகமாக தயவு செய்து பார்க்க வேண்டாம் "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது."
**************************************************************************************************************************************************************************************
Ungalathu Korikkayai Vinnapika Naanum Serkiraen.Like to join in this effort to be made as a Library in the name of Our Great Leader Kamarajar.
*****************************************************************************************************************************************************************************************
நான் மெயில் அனுப்பிவிட்டேன் ...

*******************************************************************************************************************************************************************************************
ஏற்கனவே செயல்படும் நூலகத்தை மாற்றிதான் மருத்துவமனை உருவாக்க வேண்டுமா? இந்த ஆட்சி நினைத்தால் கண்டிப்பாக எத்தனையோ மருத்துவமனைகள் புதிதாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கட்ட முடியுமே?

********************************************************************************************************************************************************************************************
நூலகம் ஒரு இனத்தின் அடையாளம்.யாழ் நூலகத்தின் கொடுமை கண்ணுக்குள் தெரிகிறது.ஏன் இப்படியான விஷயங்களில் கை வைக்கிறார்கள்.உங்கள் ஆதங்கம் சரியே.ஒன்றுபட்ட குரல்களுக்கு ஆரோக்கியம் அதிகம்.தொடருங்கள் !

************************************************************************************************************************************************************************************************
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டாம் அம்மா. இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்... கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் ... சகோதரரே, உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது . நிச்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் . ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம். இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத் தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.? ஆதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். சகோதரரே. மிக்க நன்றி பகிர்வுக்கு . வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
By VANJOOR 

********************************************************************************************************************************************************************************************
நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்... எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!// என் கருத்தும் இதுதான்...

************************************************************************************************************************************************************************************************
நல்ல ஐடியாதானே இது. . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.

**************************************************************************************************************************************************************************************************

கண்களை விற்று ஒவியம் வேண்டாம்!! நல்லது நடந்தால் நல்லது!!

*****************************************************************************************************************************************************************************************************
நூலகத்தை மாற்ற வேண்டாம் என்ற உங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே. மருத்துவமனைக்கு வேறு இடம் பார்க்க வேண்டிக்கொள்கிறேன்.

********************************************************************************************************************************************************************************************************
எப்போதும் விழித்திருப்போம்' நமது எதிர்ப்பை உடனுக்குடனே சூடாக சொல்லிவிட்டோம். உங்களைப் போன்ற அல்லது நம்மை போன்ற எண்ணற்ற தன்னார்வ ஆர்வலர்களின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. இன்னும் 5 வருடங்கள் நமக்கு இதைபோன்று நிறைய வேலையிருக்கிறது. ஆகவே, நண்பர்களே 'எப்போதும் விழித்திருப்போம்' நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.
************************************************************************************************************************************************************************************************************
நல்லதொரு முயற்சி நண்பரே வெற்றி பெற வாழ்த்துக்கள். அறிவு கடலை வற்றவிட வேண்டாம்
*************************************************************************************************************************************************************************************************************
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவேண்டிய அவசியம் என்ன?அரசால் ஒரு மருத்துவமனை தனியாக உருவாக்க முடியாதா?மக்களின் எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் நடைமுறைபடுத்தினால் அது மக்களிடம் உங்கள் மேல் வெருப்பு வராதா?சிந்தியுங்கள் அதிமுக தோழர்களே..!அம்மாவிடம் தெரிவியுங்கள் அது போதும்... உலகசினிமா ரசிகன் ரசிகனுக்கு நன்றி
By veedu
****************************************************************************************************************************************************************************************************************
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே... >>> ரிப்பீட்டு
********************************************************************************************************************************************************************************************************************
மக்களுக்கான நல்ல விஷயங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அதற்க்கு மிகச் சிறந்த உதாரணம், 'சமச்சீர் கல்வித் திட்டம்'. கண்டிப்பாக இந்த அரசால் அண்ணா நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமமனையாக மாற்ற விடமாட்டார்கள் பொதுமக்கள்.

***********************************************************************************************************************************************************************************************************************
தெரியாத உண்மையில்லை..கலைஞர் கட்டிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அதை மாற்ற துடிக்கும் நீங்கள் அவர் ஆண்ட மண்ணை மட்டும் ஆளத் துடிக்கிரீரே? இம்முறை உங்கள் ஆட்சியில் கரை இருக்காது என்பது தெரியும்..ஆனாலும் இது போன்ற கலகங்களும் செய்யாமல் இருந்தால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறி மாறி ஓட்டு குத்தும் தமிழகம் ஒருவேளை உங்கள் ஆட்சியைத் தொடர செய்யலாம்.. பிற மாநில மக்களும் சிகிச்சைக்கு வரும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சில காலம் பணியாற்றியவன் என்ற முறையில் அங்குள்ள குறைபாடுகளை அறிவேன்..அதை நேர்த்தியாக சரி செய்தாலே தாங்கள் மக்களுக்கும்,சீரிய மருத்துவ சேவைக்கும் பேருதவி செய்ததாய் இருக்கும்.. எங்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதே,..ஓட்டையும் போட்டுவிட்டு கெஞ்சவும் வேண்டியுள்ளது...

*****************************************************************************************************************************************************************************************************************************

அப்பா ஒருவழியா நீதிமன்றம் தடை போட்டுட்டாங்க..
*******************************************************************************************************************************************************************************************************************************
அண்ணா நூலகத்தை மாற்ற வேண்டாம் என்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துத்தான்... இதில் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு வேண்டுமென்றால் மாற்றுக் கருத்து இருக்கலாம். நீங்கள் சொல்லியிருப்பது போல் அண்ணாவோ அல்லது காமராஜரோ யார் பெயரில் வேண்டுமானாலும் மாநகராட்சிகளில் மட்டுமல்ல... மாவட்டம் தோறும் அமைக்கட்டும்... எல்லோரும் வாழ்த்துவோம்... நண்பர் சொல்லியிருப்பது போல் நூலகம் என்பது கல்விக் கண் திறக்கும் ஆலயம்... உங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள்.
*********************************************************************************************************************************************************************************************************************************
நூலகம் இல்லா ஊரில் ககுடி இருக்காதே...என்பது புது மொழி. நூலகம் ஒரு தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும். ஆகையால் உங்கள் ஆக்கத்திற்கு பூரண ஆதரவு என்றும் உண்டு.
************************************************************************************************************************************************************************************************************************************
நூலகத்திற்கு செல்லும் பழக்கம் நம் மக்களிடம் மறைந்து வரும் வேளையில் இது போன்ற அறிவிப்புகள் இன்னும் கிலியூட்டுகின்றன. சென்னையில் உள்ள நூலகம் போல நம்ம மதுரையிலும் வராதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் சென்னை நூலகமே மருத்துவமனையாக மாறப்போகிறது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. அதிர்ச்சி வைத்தியம் வேண்டாம். இனி நாங்கள் நூலகத்திற்கு அடிக்கடி செல்கிறோம். தயவுசெய்து இந்த எண்ணத்தை கைவிடுங்கள். பகிர்விற்கு நன்றி. நல்லது நடக்கும்.
***************************************************************************************************************************************************************************************************************************************
I Just remember this "Prevention is better than cure" Hospital is a place to cure the patients. Library is a place where Doctors and healthy people are created. So, Im not saying that a Hospital is not essential but the library is more essential. Future healthy people will be from present learning. let them learn...
By jiff0777 
*******************************************************************************************************************************************************************************************************************************************
பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் அதன் பக்கத்தில் அதை விட பெரிய கோடை போட்டு பெரிய கோட்டை சின்னத்தாக்கிய மாதிரி அம்மாவும் செய்வார்கள் என்று நம்புவோம்.நூலகமும்,குழந்தைகள் மருத்துவமனையும் ஊர் தோறும் அமையட்டும்!அம்மாவின் புகழ் நிலைக்கட்டும்!!
********************************************************************************************************************************************************************************************************************************************
தங்கள் கருத்து நிச்சயமாக சிந்திக்க தகுந்தது. நம் முதல் அமைச்சரும் மக்கள் விருப்பத்தை புரிந்து கொள்வார். நூலகம் மூடியவர் என்று ஒரு போதும் சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்ப மாட்டார். நானும் பணிவன்பாக கேட்டு கொள்கின்றேன். நூலகம் சென்னையில் மட்டுமல்ல மாவட்டங்கள் தோறும் திறக்கப்பட வேண்டும். அது போன்றே நாட்டின் செல்வங்களான குழந்தைகள் பாதுகாக்கப் பட மருத்துவ ம்னைகளும் சிறந்த வசதியுடன் சுகாதாரத்துடன் கிராமங்கள் தோறும் திறக்க அம்மா ஆட்சியில் வழி திறக்க வேண்டும். நன்றி வணக்கம்!
*************************************************************************************************************************************************************************************************************************************************
ஊட்டியில் நயாகரா மின்சார உற்பத்தி உட்பட உங்களின் பல நல்ல திட்டங்களை ( 2001 - 2006 ) அப்போதைய தி.மு.க சுற்றுப் புற சூழல் அமைச்சர் ராஜா செயல்படவிடாமல் செய்திருந்தாலும் , அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நீங்கள் மக்களுக்காக செயல்படுத்த வேண்டுமென்பதே என்னைப் போன்ற பல கோடி தமிழர்களின் வேண்டுகோள் ...
******************************************************************************************************************************************************************************************************************************************************

































50 comments:

  1. please let it be a USEFUL LIBRARY lot of hsopitals are there outnumbering libraries moreover it was built and meant for library so let it be a USEFUL LIBRARY to all.

    please do not convert it into a multi speciality hospital instead facilities can be improved at GH, stanley and even in rural villages which has zero medical facilities. anti-snake venom, anti-rabies and other life saving medicines are required at many of the out of reach hilly rural villages of gullible people please do something which will be helpful for them. chennai is already a MECCA OF MEDICAL MIRACLES so please please no more hospitals but improve their standard, pathetic condition, good maintenance of all drugs and environment and the workers there.
    LET IT BE A USEFUL LIBRARY.
    ANBUDAN
    SUNDAR G ( RASANAI )

    ReplyDelete
  2. இந்த போராட்டம் குறித்து எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், பெருவாரியான மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளேன்... மேலே இணைப்பு கொடுத்திருக்கிறேன்... இந்த இணைப்பில் அம்மையாருக்கு உங்கள் கோரிக்கையை வைக்க வழி வகுத்து உள்ளார்கள்... போராடுவோம்.. இன்குலாப் ஜிந்தாபாத்

    http://www.mathavaraj.com/2011/11/blog-post_03.html

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கம் பாஸ்,

    நல்லதோர் வேண்டுகோள், ஒருமித்த மக்கள் பலத்தின் மூலமும், மக்களின் வேண்டுகோள் மூலமும் ஜெயலலிதாவின் மனதில் இக் கோரிக்கையையினை நிறைவேற்றும் எண்ணத்தினைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல ஒரு தொடக்கம் நண்பரே.. இதை முழுமனதோடு வரவேற்கிறேன். நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.

    ReplyDelete
  5. புதிய மருத்துவமனைக; துவக்குவது வரவேற்கத்தக்கதுதான்!
    ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்???

    எனக்கொரு சந்தேகம்- புதிய மருத்துவ மனைகள் துவக்குகிறேன் என்கிறீர்கள். தற்போது இயங்கிவரும் மருத்துவமனைகளின் நிலை அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதா?இல்லை புதிய தலைமைச்செயலகத்தில் துவக்கப்படுவதாக அறிவித்த மருத்துவமனைக்கான செயல்முறைகள் எந்த நிலையில் இருக்கிறது?

    ReplyDelete
  6. நல்ல ஐடியாதானே இது.

    . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.

    ReplyDelete
  7. கட்டாயம் நீங்கள் கூறிய கருத்தினை ஏற்றால் கட்டாயம் இந்த தலைவியால் பத்து நூலகங்கள் உருவாக்கி பத்தையும் கூகிள் முதல் பத்து இடத்தினை கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு அறிவும் அதிகாரமும் இருக்கிறது. செய்யலாம். செய்வார்கள் என்று நம்புவோமாக இப்பொதைக்கு முதலில் அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை கைவிட கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் இது போல குழந்தைகள் மருத்துவமனை கட்ட நிறைய இடம் இருக்கிறதே. அங்கு கட்டலாமே வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்

    ReplyDelete
  8. நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்...

    எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!

    ReplyDelete
  9. நானும் உங்களோடு சேர்கிறேன்,,,,

    ReplyDelete
  10. நல்ல ஒரு ஆக்கம் நண்பரே... என்னையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறேன்.
    நம் அனைவருடைய கோரிக்கையும் அம்மையாரின் மனதை மாற்றும் என முழு நம்பிக்கையுடன் இயங்குவோம்.

    அனைவருக்கு அறிவை வழங்கும் ஒரு (நூலகத்தை) கலஞ்சியத்தை போஸ்ட்மாடம் செய்யவேண்டாம் என்பதே எங்களின் தாழ்மையான வேண்டுகோள்...

    ReplyDelete
  11. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.

    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...

    உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது சகோதரரே .நிட்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் .ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம் .இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத்
    தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.அதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு
    என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன் சகோதரரே .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  12. நல்ல முயற்சி, என்னது பாராட்டுகள் உங்களுக்கு.
    அந்த கட்டிடம் மருத்துவமனைக்கு ஏற்ற கட்டிடமாக கண்டிப்பாக இருக்க முடியாது.
    ''அம்மா'' இதனை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.
    நல்ல எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எல்லாம் நல்லதே நடக்கும், இந்த பதிவு அனைவரிடமும் சென்று சேரவேண்டும் , அனைவரும் பரிந்துரையுங்கள்.

    ReplyDelete
  13. நூலகம் மாற்றப்படக்கூடாது,
    அறிவுலகின் நுழைவாயிலாம் நூலகம்
    அதை உருவாக்க எவ்வளவு சிரமம்,
    அழிப்பது எளிது,
    தயை கூர்ந்து மக்களின் கூக்குரலை
    கேட்டருள வேண்டும்.
    மருத்துவமனை கட்ட ஆயிரம் இடங்கள் கிடைக்கலாம்.
    நூலகத்தை விட்டு விடுங்கள்.

    ReplyDelete
  14. //அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.//


    எனது தாழ்மையான வேண்டுகோளும் இதுவே . நூலகங்களை உருவாக்குங்கள் வருங்கால சமுதாயம் உங்களை போற்றிபாராட்டும்
    .

    ReplyDelete
  15. வணக்கம் 
    இப்ப எதில அரசியல் செய்வதுன்னு விவஸ்தையே இல்லாமல் போச்சு அங்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை எரிச்சவனுக்கும் இந்த செயலுக்கும் வித்திதாசம் இல்லை என்ன அங்கு எமது எதிரிகள் அதை செய்தார்கள் ஆனால் இங்கு நாங்களே எங்களுக்கு குழி தோண்டுகிறோம்.. 

    ReplyDelete
  16. நல்ல ஐடியாதானே இது.

    . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.

    ReplyDelete
  17. நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்...

    எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!//

    என் கருத்தும் இதுதான்...

    ReplyDelete
  18. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டாம் அம்மா.

    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்... கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் ...

    சகோதரரே, உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது . நிச்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் .

    ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம்.

    இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத் தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.?

    ஆதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    சகோதரரே. மிக்க நன்றி பகிர்வுக்கு .

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  19. இப்ப எதில அரசியல் செய்வதுன்னு விவஸ்தையே இல்லாமல் போச்சு அங்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை எரிச்சவனுக்கும் இந்த செயலுக்கும் வித்திதாசம் இல்லை என்ன அங்கு எமது எதிரிகள் அதை செய்தார்கள் ஆனால் இங்கு நாங்களே எங்களுக்கு குழி தோண்டுகிறோம்...ennudaia karuthum ithuvae....

    ReplyDelete
  20. நூலகம் ஒரு இனத்தின் அடையாளம்.யாழ் நூலகத்தின் கொடுமை கண்ணுக்குள் தெரிகிறது.ஏன் இப்படியான விஷயங்களில் கை வைக்கிறார்கள்.உங்கள் ஆதங்கம் சரியே.ஒன்றுபட்ட குரல்களுக்கு ஆரோக்கியம் அதிகம்.தொடருங்கள் !

    ReplyDelete
  21. ஏற்கனவே செயல்படும் நூலகத்தை மாற்றிதான் மருத்துவமனை உருவாக்க வேண்டுமா? இந்த ஆட்சி நினைத்தால் கண்டிப்பாக எத்தனையோ மருத்துவமனைகள் புதிதாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கட்ட முடியுமே?

    ReplyDelete
  22. நான் மெயில் அனுப்பிவிட்டேன் ...

    ReplyDelete
  23. Ungalathu Korikkayai Vinnapika Naanum Serkiraen.Like to join in this effort to be made as a Library in the name of Our Great Leader Kamarajar.

    ReplyDelete
  24. அதை மிகச் சிறப்பாக அமைந்த ஒரு நூலகமாக மட்டுமே பாருங்கள், கலைஞரின் முயற்சியில் எழுந்த நூலகமாக தயவு செய்து பார்க்க வேண்டாம்
    "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது."

    ReplyDelete
  25. நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே....

    ReplyDelete
  26. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே...
    >>>
    ரிப்பீட்டு

    ReplyDelete
  27. கண்களை விற்று ஒவியம் வேண்டாம்!! நல்லது நடந்தால் நல்லது!!

    ReplyDelete
  28. என் வேண்டுகோளுக்கு வார்த்தைகளால் வலு சேர்த்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  29. நல்லதொரு முயற்சி நண்பரே வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    அறிவு கடலை வற்றவிட வேண்டாம்

    ReplyDelete
  30. 'எப்போதும் விழித்திருப்போம்'

    நமது எதிர்ப்பை உடனுக்குடனே சூடாக சொல்லிவிட்டோம். உங்களைப் போன்ற அல்லது நம்மை போன்ற எண்ணற்ற தன்னார்வ ஆர்வலர்களின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.

    இன்னும் 5 வருடங்கள் நமக்கு இதைபோன்று நிறைய வேலையிருக்கிறது. ஆகவே, நண்பர்களே 'எப்போதும் விழித்திருப்போம்' நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.

    ReplyDelete
  31. நூலகத்தை மாற்ற வேண்டாம் என்ற உங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே. மருத்துவமனைக்கு வேறு இடம் பார்க்க வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  32. அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவேண்டிய அவசியம் என்ன?அரசால் ஒரு மருத்துவமனை தனியாக
    உருவாக்க முடியாதா?மக்களின் எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் நடைமுறைபடுத்தினால் அது மக்களிடம் உங்கள் மேல்
    வெருப்பு வராதா?சிந்தியுங்கள் அதிமுக தோழர்களே..!அம்மாவிடம் தெரிவியுங்கள் அது போதும்...
    உலகசினிமா ரசிகன் ரசிகனுக்கு நன்றி

    ReplyDelete
  33. நூலகத்திற்கு செல்லும் பழக்கம் நம் மக்களிடம் மறைந்து வரும் வேளையில் இது போன்ற அறிவிப்புகள் இன்னும் கிலியூட்டுகின்றன. சென்னையில் உள்ள நூலகம் போல நம்ம மதுரையிலும் வராதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் சென்னை நூலகமே மருத்துவமனையாக மாறப்போகிறது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. அதிர்ச்சி வைத்தியம் வேண்டாம். இனி நாங்கள் நூலகத்திற்கு அடிக்கடி செல்கிறோம். தயவுசெய்து இந்த எண்ணத்தை கைவிடுங்கள். பகிர்விற்கு நன்றி. நல்லது நடக்கும்.

    ReplyDelete
  34. நூலகம் இல்லா ஊரில் ககுடி இருக்காதே...என்பது புது மொழி. நூலகம் ஒரு தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும். ஆகையால் உங்கள் ஆக்கத்திற்கு பூரண ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
  35. அண்ணா நூலகத்தை மாற்ற வேண்டாம் என்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துத்தான்... இதில் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு வேண்டுமென்றால் மாற்றுக் கருத்து இருக்கலாம்.
    நீங்கள் சொல்லியிருப்பது போல் அண்ணாவோ அல்லது காமராஜரோ யார் பெயரில் வேண்டுமானாலும் மாநகராட்சிகளில் மட்டுமல்ல... மாவட்டம் தோறும் அமைக்கட்டும்... எல்லோரும் வாழ்த்துவோம்...
    நண்பர் சொல்லியிருப்பது போல் நூலகம் என்பது கல்விக் கண் திறக்கும் ஆலயம்...
    உங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  36. அப்பா ஒருவழியா நீதிமன்றம் தடை போட்டுட்டாங்க..

    ReplyDelete
  37. தெரியாத உண்மையில்லை..கலைஞர் கட்டிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அதை மாற்ற துடிக்கும் நீங்கள் அவர் ஆண்ட மண்ணை மட்டும் ஆளத் துடிக்கிரீரே? இம்முறை உங்கள் ஆட்சியில் கரை இருக்காது என்பது தெரியும்..ஆனாலும் இது போன்ற கலகங்களும் செய்யாமல் இருந்தால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறி மாறி ஓட்டு குத்தும் தமிழகம் ஒருவேளை உங்கள் ஆட்சியைத் தொடர செய்யலாம்.. பிற மாநில மக்களும் சிகிச்சைக்கு வரும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சில காலம் பணியாற்றியவன் என்ற முறையில் அங்குள்ள குறைபாடுகளை அறிவேன்..அதை நேர்த்தியாக சரி செய்தாலே தாங்கள் மக்களுக்கும்,சீரிய மருத்துவ சேவைக்கும் பேருதவி செய்ததாய் இருக்கும்..
    எங்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதே,..ஓட்டையும் போட்டுவிட்டு கெஞ்சவும் வேண்டியுள்ளது...

    ReplyDelete
  38. மக்களுக்கான நல்ல விஷயங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அதற்க்கு மிகச் சிறந்த உதாரணம், 'சமச்சீர் கல்வித் திட்டம்'. கண்டிப்பாக இந்த அரசால் அண்ணா நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமமனையாக மாற்ற விடமாட்டார்கள் பொதுமக்கள்.

    ReplyDelete
  39. I Just remember this "Prevention is better than cure" Hospital is a place to cure the patients. Library is a place where Doctors and healthy people are created. So, Im not saying that a Hospital is not essential but the library is more essential. Future healthy people will be from present learning. let them learn...

    ReplyDelete
  40. பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் அதன் பக்கத்தில்
    அதை விட பெரிய கோடை போட்டு பெரிய கோட்டை சின்னத்தாக்கிய மாதிரி அம்மாவும் செய்வார்கள் என்று நம்புவோம்.நூலகமும்,குழந்தைகள் மருத்துவமனையும் ஊர் தோறும் அமையட்டும்!அம்மாவின் புகழ் நிலைக்கட்டும்!!

    ReplyDelete
  41. ஊட்டியில் நயாகரா மின்சார உற்பத்தி உட்பட உங்களின் பல நல்ல திட்டங்களை ( 2001 - 2006 ) அப்போதைய தி.மு.க சுற்றுப் புற சூழல் அமைச்சர் ராஜா செயல்படவிடாமல் செய்திருந்தாலும் , அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நீங்கள் மக்களுக்காக செயல்படுத்த வேண்டுமென்பதே என்னைப் போன்ற பல கோடி தமிழர்களின் வேண்டுகோள் ...

    ReplyDelete
  42. தங்கள் கருத்து நிச்சயமாக சிந்திக்க தகுந்தது. நம் முதல் அமைச்சரும் மக்கள் விருப்பத்தை புரிந்து கொள்வார். நூலகம் மூடியவர் என்று ஒரு போதும் சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்ப மாட்டார். நானும் பணிவன்பாக கேட்டு கொள்கின்றேன். நூலகம் சென்னையில் மட்டுமல்ல மாவட்டங்கள் தோறும் திறக்கப்பட வேண்டும். அது போன்றே நாட்டின் செல்வங்களான குழந்தைகள் பாதுகாக்கப் பட மருத்துவ ம்னைகளும் சிறந்த வசதியுடன் சுகாதாரத்துடன் கிராமங்கள் தோறும் திறக்க அம்மா ஆட்சியில் வழி திறக்க வேண்டும். நன்றி வணக்கம்!

    ReplyDelete
  43. என்னுடைய வேண்டுதலும் இது தான்,தயவுச் செய்து இதைவிட பெரிய நூலகத்தை ஆராய்ச்சி மையத்துடன் திறந்து தமிழனை தழைக்க விடுங்கள்,வெளி மாநில மாணவனும் எழுத்தாளனும் கூட இங்கே அதை தேடி வர செய்யுங்கள்,இதை இந்த பொக்கிஷத்தை விட்டுவிடுங்கள் அம்மா.

    ReplyDelete
  44. கீழே பிரபல எழுத்தாளர்கள் விகடனில் சொல்லுவதைக் கேளுங்கள்.

    சா.கந்தசாமி: சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது இந்த நூலகம். நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, 'இப்படி தமிழ்நாட்டில் ஒரு நூலகம் இல்லையே’ என்று ஏங்கியிருக்கிறேன். அண்ணா நூலகம் தமிழகத்தின் கனவு. எங்கே காற்று வேண்டும், எங்கே வெளிச்சம் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து, படிப்பதற்கும் எழுதுவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை, எப்படி மருத்துவமனையாக்க முடியும்? மருத்துவம் அவசியம்தான். ஆனால், அது சென்னைக்கு மட்டும்தானா? வேறு எந்த நகரத்திலும் குழந்தைகள் இல்லையா?

    பொன்னீலன்: மருத்துவமனை கட்ட இடமா இல்லை? இந்த அரசுக்குக் கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நடவடிக்கை. இது அறிவுல கத்துக்கு விடப்பட்டுள்ள சவால். எழுத்தாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தியுள்ளது. அறிவுலகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக ஒடுக்குமுறைக்கான ஒத்திகை. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது, சகிக்க முடியாதது.

    தொ.பரமசிவம்: தமிழ் அடையாளத்தை அழிப்பதே யாழ்ப்பாண நூலகத்தை அழித்ததன் நோக்கம். அண்ணா நூலகக் கட்டடத்தை மருத்துவமனை ஆக்குவதும், தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல்தான்!

    அசோகமித்திரன்: நன்றாகச் செயல்படும் ஒரு அமைப்பை கலைக்கக் கூடாது. படிப்பதற்குரிய உற்சாகமான ஒரு சூழலைத் தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கட்டப்பட்ட நூலகம் அது. பராமரிப் பில்லாத ஒரு அரசு மருத்துவமனையாக்குவதை விட இந்த நூல கத்தை நூலகமாகவே வைத்துக் கொள்ளலாமே.

    மேலாண்மை பொன்னுசாமி: முந்தைய அரசின் சாதனைகளை முறியடிப்பது என்பது சரி. ஆனால், அவற்றை ஒழித்துக் கட்டக்கூடாது. இது மிகவும் தவறான அணுகுமுறை. ஷாஜஹானுக்குப் பிந்தைய மன்னன் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு தாஜ்மஹால் இருந்திருக்காது. ராஜராஜசோழனுக்கு அடுத்து வந்த மன்னன் நினைத்திருந்தால்... தஞ்சை பெரிய கோயில் இருந்திருக்காது. கரிகால சோழனைத் தொடர்ந்தவன் அப்படி நினைத்திருந்தால் கல்லணை இருந்திருக்காது.

    கீரனூர் ஜாகீர் ராஜா: நூலகம் திறக்கப்படுகிறபோது, 'ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது’ என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் நடக்கிற கதை வேறு. ஏற்கெனவே, வாசிப்பில் பின்தங்கி உள்ள சமூகமாகவே தமிழ் சமூகம் மதிக்கப்படுகிறது. அரசின் இதுபோன்ற அதிரடியான செயல்பாடுகள் அதற்கு ஒரு மறைமுகக் காரணியாக அமைந்துவிடக் கூடாது.

    சல்மா: மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட, அண்ணா படிப் பதில் ஈடுபாட்டோடு இருந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரின் பெயரில் அமைந்துள்ள நூலகத்தை இடமாறுதல் செய்வது அநீதியானது. அரசியல் விரோதம் அறிவை விருத்தி செய்யும் விஷயத்தில் தலையிடக் கூடாது.

    வண்ணதாசன்: இது இன்னொருவித 'யாழ் நூலக’ எரிப்பன்றி வேறில்லை. உயர் மருத்துவம் உடனடி யாகத் தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல; இந்த அரசுக்குத்தான். அசுரப் பெரும்பான்மை என்பது, சொல்லுக்கு சொல் உணரப்படுகிறது; பிணம் தின்னல் தொடர்கிறது.

    ReplyDelete
  45. கலாப்ரியா: நூலகத்தை மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதை 'கெட்டிக்காரத்தன மான’ செயலாக நினைக்கலாம் முதல்வர். ஆனால், நல்ல செயல் இல்லை. கெட்டிக்காரராக இருப்பது சுலபம், நல்லவராக இருப்பது கடினம். இது தப்பு, தவறு இல்லை. ''தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்..'' நான் சொல்லவில்லை எம்.ஜி.ஆர். சொன்னது.

    சிவகாமி: நூலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் இப்போது அரசுக்கு என்ன? கருணாநிதி காலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையாவது அரசால் சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் இந்தள வுக்கு அராஜகமாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?

    நாஞ்சில் நாடன்: நூலகம் சமுதாயத்தின் அத்தியா வசியமான ஓர் உறுப்பு. நம் மக்களுக்கு அதை பயன் படுத்தத் தெரியவில்லை என்பது உண்மை. அதனால் வாசிப்புப் பழக்கத்தை அதிக ரிக்க என்ன செய்யலாம் என்றுதான் ஒரு அரசாங்கம் யோசிக்கவேண்டும். அதை விட்டு, நூலகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுப்பது ஒரு சமூக அவலம்

    ஆ.சிவசுப்பிரமணியன்: நூலகம், மருத்துவமனை இரண்டின் உள்கட்டமைப்பு களும் வெவ்வேறு மாதிரி யானவை. ஒரு நூலகம் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இருந்தால் மட்டும் போதாது, அங்கு அமைதியான சூழல் வேண்டும். மேலும் புத்தகங்கள் என்பவை சிமென்ட் மூட்டைகளோ, வெங்காய மூட்டைகளோ அல்ல... நினைத்தால் இடம் மாற்றி விடுவதற்கு. எல்லா விஷயங்களையும் அரசியல் நோக்கத்துடனேயே பார்ப்பதும் அணுகுவதும் ஆபத்தானவை.

    சு.வெங்கடேசன்: இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்வில் எடுக்கப்பட்ட முடிவு. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. டி.பி.ஐ. வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட போதுமான இடங்கள் இல்லை. எப்படி லட்சக் கணக்கான புத்தகங்களைப் பராமரிக்கப் போகிறார்கள்?

    வ.கீதா:மன்னர் ஆட்சிக் காலங்களில் கூட, ஒரு மன்னன் வெற்றி பெற்ற பிறகு, பழைய அரசனின் கட்டடங்களை உடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஜெயலலிதா, முடியாட்சியை விட மோசமாக நடந்துகொள் கிறார்.

    அழகிய பெரியவன்: ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் வாசிப்பு குறைந்திருக்கிறது என்கிற ஆதங்கம் உண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த குறைபாடுகளுக்கு ஒரே மருந்து புத்தகங்கள்தான். ஆனால், தான் ஆட்சி செய்யும் மக்கள் அறிவுமயப் படுத்தப்பட்ட சமூகமாக மாறி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க அரசு. இருக்கிற மருத்துவமனைகளையே இன்னும் சிறப் பாகப் பராமரிக்காத தமிழக அரசு, மேலும் மருத்துவமனைகளை உருவாக்கப் போவதாகச் சொல்வது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் கூடிய அபத்தம்.

    புனிதபாண்டியன்: சட்டசபைக் கட்டடத்தையும் தலைமைச் செயலகத்தையும் தன் ஆணவப் போக்கினால் மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், அப்போது 'இது ஏதோ கருணாநிதியின் சொந்தப் பிரச்னை’ என்பதைப் போலப் பலரும் மௌனமாக இருந்ததால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கை வைக்கிறார். சமச்சீர்க்கல்வி, அறிவை விரிவு செய்யும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது போன்ற தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களைச் சீர்குலைப்பது ஆகியவை ஜெயலலிதாவின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்!

    ReplyDelete
  46. நல்ல முயற்சி...எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்

    ReplyDelete
  47. மிக அருமையான, அவசியமான பதிவு...........

    கொஞ்சமாவது இது அவர்களின் முடிவை அசைத்து பார்க்கும் என்பது நிச்சயம்....

    ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றை எதற்காக மாற்ற வேண்டும் என்ற லாஜிக்தான் புரியே மாட்டேங்குது..............

    ReplyDelete
  48. நானும் வந்துவிட்டேன். நூலகப் பிரச்னையில், எனது கருத்து, கொஞ்சம் வேறு மாதிரியானது. என்னைவிட, அதனை சாரு மிக அருமையாக நேற்று எழுதியுள்ளார். அது - இங்கே.

    //பல ஆண்டுகளுக்கு முன்பு மூர் மார்க்கெட் எரிந்தது போல் நூலகத்தை யாரும் எரித்து விடவில்லை. இடமாற்றம் செய்கிறேன் என்று மட்டுமே சொல்கிறார் ஜெயலலிதா. இதுபற்றிக் கூச்சல் போடும் பலரும் சும்னாச்சுக்கும் தங்களைப் போராளிகளாகவும் சமூக அக்கறை உள்ளவர்களாகவும் காட்டிக் கொள்ள மட்டுமே விரும்புகிறார்கள். உண்மையில் அவர்கள் மழைக்காகக் கூட நூலகத்தின் பக்கம் ஒதுங்கியவர்கள் அல்ல. நான் எல்லோரையும் சொல்லவில்லை. கூச்சல் போடுபவர்களில் பலர் அப்படி.

    தமிழ்நாட்டிலிருந்து தமிழை விரட்டி அடித்தவர் திரு கருணாநிதி. இன்றைய இளைஞர்கள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆங்கிலம்தான் படிக்கிறார்கள். தமிழ் அல்ல. தமிழ்நாட்டில் குடிசைத் தொழிலைப் போல் கான்வெண்ட் பள்ளிகள் திறக்கப்பட்டு தமிழ் புதைகுழிக்குப் போனது கருணாநிதி ஆட்சியில்தான். அவர்தான் இன்று அண்ணா நூலகத்துக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அந்தக் கோட்டூர்புர இடம் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம். அதைத்தான் கருணாநிதி நூலகமாக மாற்றினார். அதை இப்போது ஜெ. இடமாற்றம் செய்கிறார். இதில் என்ன பிரச்சினை? இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவிக்கும் பல எழுத்தாளர்கள் திமுக தொண்டர்களை விட தீவிர திமுக பற்று உள்ளவர்கள். அவர்களுக்குத் தங்கள் திமுக விசுவாசத்தைக் காட்ட இது ஒரு சாக்கு. அவ்வளவுதான்…

    இன்றைய நிலையில் மிக அடிப்படையான தேவை, மாணவர்களுக்கு நல்ல தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டும். அதற்கடுத்ததுதான் நூலகம் எல்லாம். தமிழே படிக்கத் தெரியாமல் ஒரு தலைமுறையை வளர்த்து வைத்து விட்டு நூலகம் கட்டினால் என்ன பயன்? மேலும், அண்ணா நூலகத்துக்கு ஒன்றும் மூடுவிழா நடத்தி விடவில்லை. இடமாற்றம் மட்டுமே செய்கிறார்கள். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஏன், கன்னிமாரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் எல்லாம் என்ன ஆயிற்று?

    முதலில் தமிழர்களாகிய நாம், சினிமா கலாச்சாரத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும். புத்தகம் வாங்கக் காசு இல்லை என்பது வீண்வாதம். காசு இல்லை என்று சினிமா பார்க்காமலா இருக்கிறோம்? சினிமாவை விட புத்தகம் மலிவானதுதான். நூலகத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை, தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நூலகங்களுக்குச் செல்வதுதான். அப்படிச் செய்தால்தான் சினிமா தியேட்டர்களை விட நூலகங்கள் பெருகும். வெறுமனே வாய்ப்பேச்சில் வீரம் காண்பிக்கக் கூடாது.//

    இது - http://charuonline.com/blog/?p=2602 என்ற லிங்க்கில் உள்ளது.

    இதுவேதான் என கருத்தும். நன்றி.

    ReplyDelete
  49. புத்தகம் என்பது அனுபவ பதிவு. வாழ்கை வழிகாட்டி. உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ மனை என்றால், மன ஆரோக்கியத்திற்கு புத்தகம். எனவே அய்யா சொன்னது போல பத்து மா நகராட்சிகளில் மட்டுமல்லாமல் எல்லா ஊர்களிலுமே நல்ல கட்டமைப்பு வசதி கொண்ட சிறந்த நூலகங்களை அமைத்தால் சமூக அமைதி ஏற்பட வழி கிடைக்கும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.