Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Apr 12, 2012

சுனாமி வந்திருக்க வேண்டும்!


அடடா...ஏமாற்றி விட்டாயே! சுனாமி...

வந்திருக்க வேண்டும்...
கூடங்குளம் அணு உலையை சுருட்டியிருக்க வேண்டும்...
ஆபத்தில்லை என முழங்கிய எத்தர்களை விழுங்கியிருக்க வேண்டும்...

மின் வெட்டுக்கு காரணம் நீதான்...நீதான்...என மாற்றி மாற்றி சூ*******கள்
கு***யில் சுண்ணாம்பு பூசியிருக்க வேண்டும்...

அக்கா...அக்கா...அக்கா...
என்னடி... தங்கச்சி.... தங்கச்சி.... தங்கச்சி....
பசப்பும் பாச மலர்களை பொலி போட்டிருக்க வேண்டும்....

இதயம் இனித்த.....கண்கள் பனித்த...
 கோடீஸ்வர கோமான்களை வதைத்திருக்க வேண்டும்....
தீக்குளிப்பேன்...எனக் குதிக்கும் பராசக்தி பரந்தாமனை ...
எமனையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் எழுத்தாளனை ...
கொண்டு போயிருக்க வேண்டும்.

ஒண்ணுமே செய்ய... உன்னால் கூட, முடியாமல் போனால்...
ஷார்ட் கட்டில்... கோவை வந்து....
 உலகசினிமா ரசிகனையாவது கொண்டு போ...
வெந்ததை தின்று... விதி வந்து சாக அவனால் முடியாது.


May 14, 2011

விடுதலைப்பொழுது

                                                                 விடுதலைப்பொழுது
எழுந்திரு பிள்ளாய்
இது விடுதலைப்பொழுது

இருளின் துயில் கலைகிறது
நீயோ
இழுத்துப்போர்த்தபடி
இன்னம் உறங்குதியோ?
எழுந்திரு

இதோ
விடியலில் கீழ் வானம்
ஒளி முடி தரிக்கும் உன்னதம்
உனக்குத்தரிசனமாகவில்லை

அதோ
உன் வீட்டு வாசற்படியில்
ஒளிக்குழந்தை
தொற்றித்தவழ்கிறது
ஒற்றிக்கொள் கண்களில்

கதவிடுக்கின் ஊடாக
உட் செல்லத்துடிக்கிறது
திறந்து விடு முற்றாய்
உனதகம் ஓளி பெறட்டும்

கவிதை உபயம்:சு.வில்வரத்தினம்
நூல்:உயிர்த்தெழும் காலத்திற்காக
வெளியீடு:விடியல் பதிப்பகம்

தேர்தல் நாள் அறிவித்த பின் கீழ்க்கண்ட இந்தக்கவிதையை
நெல்லை ஹோசிமின் என்றப்பெயரில் பதிவிட்டேன்.
                                                       
                                               இரத்தத்தில் எழுதியது

இனியும் எங்களால் தாங்க முடியாது.
இனியும் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
எங்களுடைய குதிரைகளை தின்றுவிட்டோம்.
எங்களுடைய பறவைகளையும் தின்று விட்டோம்;
எலிகளையும் பெண்களையும் தின்றுவிட்டோம்...
இன்னும் எங்கள் வயிறு காய்ந்து கொண்டுதானிருக்கிறது.

எங்கள் அரண்களை மொய்த்திருக்கிறார்கள் எதிரிகள்.
அவர்கள் நாலாயிரம் பேர்களுக்கும் மேல்;நாங்கள் நானூறு பேர்.

இனியும் வில்லிழுத்து,வசைகளல் அவர்களைத்தாக்க
வலு இல்லை எங்களிடம்;அவர்களைக் குதறத்
துடிக்கும் பற்களைக்கடித்துக்கொள்ள மட்டுமே வலு உள்ளது
எங்களிடம்.

பற்றி எரியும் இக்கவிதையை விதைத்தவர் சு.வில்வரத்தினம்.

விடியல் வெளியீடான “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற கவிதை நூலில் இது போன்ற வெடிமருந்துகள் கொட்டிக்கிடகிறது