Mar 30, 2012

வெங்காயம்-தமிழ் சினிமாவின் சிகரம்...


சென்னை தேவிகலாவில் வெங்காயம் திரைப்படம் பார்த்தேன்.
தமிழ் சினிமாவின் வாந்தி,பேதி,அஜீரணம்...
ஏன்... சொறி ,சிரங்கு,படை ...
அதைக்கூட குணமாக்கும் சர்வரோக நிவாரணியாக இப்படம் வந்திருக்கிறது.
பிரம்மாண்டமான விளம்பரம் கொடுத்து இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விலை மதிப்பற்ற முயற்ச்சி எடுத்துள்ள இயக்குனர் சேரனின் கலைப்பாதங்களில் சாஷ்டங்கமாக விழுந்து....
எனது நன்றியையும்,வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

சேலம் மாவட்டத்தின் சங்ககிரி அருகில் உள்ள செட்டிப்பட்டி கிராமத்திலிருந்து புறப்பட்டு உலகமெல்லாம் தமிழ் சினிமா ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்க்கு தனது குடும்பத்தார்...
நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் துணையோடு....
படையெடுத்த சக்ரவர்த்தி...
சங்ககிரி ராச்குமார்...
உன்னை பூரண கும்ப மரியாதையோடு வரவேற்க்கிறேன்.

முதல் படத்திலேயே இந்த இயக்குனரை நான் மகேந்திரன்,பாரதிராஜாவுக்கு மேலாக மதிக்கிறேன்.
ஏனென்றால் அவர்கள் கூட நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்களைத்தான் நடிக்க வைத்து தங்கள் படைப்பை வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப்பையன் சர்வசாதரணமாக தங்களது குடும்பத்தார் அனைவரையும் நடிக்க வைத்து ....
தப்பு...தப்பு....
கதாபாத்திரங்களாக வாழ வைத்திருக்கிறான்.

தமிழ் சினிமா முதன் முதலாக அச்சு அசலான கிராமத்து முகங்களை பிரதிபலித்திருக்கிறது.
போலித்தனமில்லாத...பாசாங்கில்லாத....கிராமம் வெள்ளித்திரையில் வெளிப்பட்டிருக்கிறது.
மக்களுக்கான சினிமா.... முதன் முதலாக அம்மக்களை கொண்டே படைக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தான் சத்யஜித்ரே,ரித்விக் கதக் போன்ற ஜாம்பவன்கள் செய்தார்கள்.

கிராமத்து மக்களிடம் மூட நம்பிக்கைகளை விதைத்து...
 அதன் மூலம் கொழுத்து வாழும் போலிச்சாமியார்களை சாடி இருக்கிறது படம்.
தமிழக அரசு இப்படத்தை விலைக்கு வாங்கி கிராமம்..கிராமமாக காட்ட வேண்டிய படம்.
நூறு பெரியார் செய்ய வேண்டிய வேலையை இப்படம் ஒன்றே செய்து காட்டும்.

இப்படத்தில் குறைகள் இல்லையா! என்று நினைப்பீர்கள்.
இருக்கிறது.
இப்படி ஒரு படம் வராதா ஏன ஏங்கி தவிச்ச வாய்க்கு....
 தண்ணீர் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அதனால் குறையை என் வாயால சொல்ல மாட்டேன்.
குறையே இல்லாத படம் உலகிலேயே இல்லை.

அமெரிக்காவில் ஜான் கேஸவட்ஸ் என்ற உலக சினிமா இயக்குனர் ஒருவர்தான் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை வைத்து தரமான கலைப்படைப்புகளை தந்தவர்.
எனக்குத்தெரிந்து இந்திய சினிமாவில் நீ ஒருவன் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தி உள்ளாய்.

தமிழ் சினிமா ஹீரோக்கள் எனக்கு படம் செய்து கொடு என வலை விரிப்பார்கள்.
அந்த மாய வலையில் வீழ்ந்து விடாதே!

ஆட்டோ கிராப் படம் பார்த்த ரசிகர்கள்...
அனைவரும் பார்த்தாலே போதும்...
இப்படம் வசூலில் சாதனை படைக்கும்.
 ஆனால் காலன்,எமன்,தூதன் மூன்றும் சேர்ந்த... 3 என்ற கொலை வெறிப்படம் வெங்காயத்திற்க்கு சமாதி கட்ட வெளியாகி உள்ளது.
என்ன நடக்குதுன்னு பார்ப்போம்?????????.

இந்த வார ஆனந்த விகடன் பாருங்கள்.
மிக முக்கியமான இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன



Mar 26, 2012

Jalsaghar-[The Music Room]இசையை ரசித்து...வறுமையை ருசித்தவன்.


கோண்ங்கள் பிலிம் சொசைட்டியில் மார்ச் 25 ஞாயிறு... பவர்கட் மாலையில்... சத்யஜித்ரேயின் ஜல்சாகர் திரையிடப்பட்டது.
படத்தின் பிரிண்ட் குவாலிட்டி பார்த்து அதிசயித்துப்போனேன்.
கிரைட்டீரியான் நிறுவனத்தார் வெளியிட்ட டிவிடி அது...
அப்பா...என்னா குவாலிட்டி....
பிரேம் டூ பிரேம் ஜொலிக்குது.
ரேயின் பதினேழு படங்களை இதே மாதிரி டிஜிடல் ரீ மாஸ்டர் செய்து வெளியிட்டுள்ளார்களாம்.
எப்பா... கிரைட்டீரியா...நீ வாழ்க...உன் குலம் வாழ்க...

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் முதன் முதலாக பெருமை தேடித்தந்த பிதாமகன் சத்யஜித்ரே.
அவரது மாஸ்டர்பீஸ் வரிசையில் பதேர் பஞ்சலி,அபராஜிதோ,
அபு சன்சார்,சாருலதா மட்டுமே அடுக்கியிருந்தேன்.
இந்த நிமிடம் முதல்....  ஜல்சாகரையும் சேர்த்து விட்டேன்.


ஒரு ஊரிலே...ஒரு ஜமீந்தார்...
நாட்டிலுள்ள இசை கலைஞர்களை வரவழைத்து...
 தனது அரண்மனையில் கச்சேரி செய்ய வைத்து...
 நண்பர்களோடு கூடி குடித்து...இசையை ரசிப்பதே முழு நேர தொழில்.
வறியவர்களுக்கு வாரி வளங்குவது உப தொழில்.
உட்கார்ந்து சாப்பிட்டா இமயமலையே காணாம போயிரும்.
சொத்தும் போய்...மனைவியும், மகனும் வெள்ளத்தில் போய்...
 ஜமீந்தார் தனி மரமாகிறார்.
ஆசை மகன் மரணித்த அதிர்ச்சியில் கச்சேரி கொண்டாட்டங்களை நிறுத்தி விடுகிறார்.
ஜமீன் வாழ்க்கையின் எச்சமாக...
 இரண்டு விசுவாச வேலைக்காரர்களும்,
மகனால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு யானையும்,ஒரு குதிரையும்,
 300 ரூபாய் பணமும் மிச்சமாக இருக்கிறது.
சரஸ்வதியும்...மகா லட்சுமியும் வெளியேறி...வவ்வாலும்..சிலந்தியும் குடி புகுந்த  அரண்மனையில் மீண்டும் இசை ஒலித்ததா?
படம் பாருங்கள்.

ரே ஒவியராக இருப்பதால் அவரது படங்கள் ஷாட் பை ஷாட் ஒவியங்களாக இருப்பதை நீங்கள் உணர முடியும்.
பதேர் பஞ்சலியில் ரேவுடன் இணைந்த ஒளிப்பதிவாளர் சுபர்ணோ மித்ரா.... ஜல்சாகரிலும் தனது கை வரிசையை காட்டி உள்ளார்.
ரேவும் சுபர்ணோ மித்ராவும் இணைந்ததில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.
அடிப்படையில் சுபர்ணோமித்ரா ஸ்டில் காமிரா கலைஞர்.
ஒரு திருமணத்தில் மித்ரா எடுத்த புகைப்படங்களை பார்த்து வியந்த ரே தனது பதேர் பஞ்சலி படத்தில் பணி புரிய அழைத்தார்.
அதற்க்கு மித்ரா...
“எனக்கும் ரொம்ப நாளா மூவி கேமராவை பார்க்கணும்னு ஆசை”என்றார்.

என் வாழ்நாளில்... இனி மறக்க முடியாத திரைப்படத்திலிருந்து....
 மறக்க முடியாத ஒரு காட்சி...
ஜமீந்தார் தனது அரண்மனையில் மொட்டை மாடியில் நின்று பார்க்கிறார்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மருந்துக்கு கூட ஒரு மரம் இல்லை.
வறிய பிராமணனின் மார்பில் வளைந்து ...திரிந்து ...நைந்து கிடக்கும் பூணுல் போல...
 ஒரு மணல் பாதை மட்டும் கிடக்கிறது.
தொலை தூரத்தில் அவருக்கும்...அவரது மகனுக்கும் பிரியமான யானை நின்று கொண்டிருக்கிறது.
அப்போது ஒரு புது பணக்காரனது கார் புழுதி பறக்க வேகமாக செல்கிறது.
அப்போது கிளம்பும் புழுதிப்புயலில் அவரது யானை மறைந்து விடுகிறது.
இத்தனை நிகழ்வுகளையும் ரே சிங்கிள் ஷாட்டில் அடக்கி இருக்கிறார்.
நான் இத்தனை வார்த்தைகளை செலவு செய்தும் அந்த ஷாட்டின் கவித்துவத்தை ஒரு சதவீதம் கொண்டு வர முடியவில்லை எழுத்தில்.....
ஏனென்றால் சினிமா...பவர்புல் விசுவல் மீடீயா.

“சூரிய உதயத்தை பார்த்து ரசிக்காதது எவ்வளவு பெரிய குற்றமோ....
அதை விடப்பெரிய குற்றம் ரேயின் படங்களை பார்க்காமலிருப்பது”
நான் சொன்னது அல்ல...
உலகசினிமாவின் பிரம்மா அகிரா குரோசுவா சொன்னது.

விக்கிப்பீடீயா உபயத்தில் இப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் விபரம் :
(On screen) - Begum Akhtar, Roshan Kumari, Ustad Waheed Khan, Bismillah Khan
(Off screen) - Dakhshinamohan Thakur, Ashish Kumar, Robin Mazumdar, Imrat Khan

Mar 23, 2012

மார்லன் பிராண்டோ-நிஜத்தில் நடிக்காதவன்


மார்லன் பிராண்டோ தனது நடிப்பால் என்னை வசீகரித்ததை விட அவரது சுய சரிதத்தை படித்ததின் மூலமாக என்னை முழுக்க ஆட் கொண்டார்.
படிக்க...படிக்க.... என்னுள் எழுந்த அவரது உயரம் இமயமலையை கடுகாக்கும் கம்பீரம் கொணடது.
தனது பலகீனங்களை,தவறுகளை அப்பட்டமாக சுய சரிதத்தில் சொன்ன நடிகன் வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன்.

அஜயன் பாலா மொழி பெயர்ப்பில் எதிர் பதிப்பகத்தார் வெளியிட்ட மார்லன் பிராண்டோ என்ற நூலில் எனக்கு பிடித்த அம்சங்களில் சிலவற்றை மட்டும் உங்களொடு பகிர்ந்து கொள்கிறேன்.

சூப்பர்ஸ்டார் இமேஜில் மிதக்கும் நடிகர்கள் கட்டாயம் இதை படிக்க வேண்டும்...

‘மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை தேவ தூதராக கருதுகின்றனர்.
அந்த ஒருவருக்கு இந்த தேவதூதப்பதவி பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் மக்கள் அதை வலுக்கட்டாயமாக அவர்களிடம் திணித்து விடுகின்றனர்.
தங்களுடைய உணர்வுகளின் தேவைகளில் அந்த நபருக்காக ஆழமான ஒரு இடத்தை உருவாக்கி தருகின்றனர்.
ஏனெனில் நாம் கடவுளைப்போல சாத்தான்களை குறித்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்’.

வளர்ச்சியடைந்த நாடுகள்.... வளரும் நாடுகளுக்கு உதவி செய்வது எத்தனை போலியான நாடகம் என்பதை தோலுரித்து காட்டுகிறார் தனது எழுத்தில்....

 “பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து,இந்தோனேசியா போன்ற தெற்க்காசிய நாடுகளுக்கு படப்பிடிப்பு நிமித்தம் சென்ற போது...
காலனியாதிக்கம் முடிந்த பின்னும்.... வளர்ச்சியந்த நாடுகள்...
அந்நாட்டின் பொருளாதாரங்களை சீரழிப்பதை என்னால் கண்கூடாக உணர முடிந்தது.
வெளிநாட்டு உதவி என்ற பெயரால் அந்த நாடுகளை வளர்ந்த நாடுகள் தங்களது அரசியல் சுய காரியங்களுக்கு பயன்படுத்தி சுரண்டி வருகின்றன”.

பிராண்டோவின் வார்த்தைகள் எத்தனை சத்தியம் என்பதற்க்கு...
கூடங்குளம் இன்றைய சாட்சி.

 “அதிகாரத்தில் இருக்கும் தனி மனிதனோ அல்லது அரசாங்கமோ மக்களை தேசம் என்னும் பெயரால் எவ்வளவு தூரம் அடிமைகளாக்கி தன்னிஷ்டத்திற்க்கு தவறான பாதைகளில் அவர்களை அழைத்து செல்கிறது”....
பிராண்டோவின் இந்த வரிகள் கடும் மின் வெட்டை ஏற்ப்படுத்தி தமிழெகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையை ஞாபகப்படுத்தியது என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

இந்தியாவில் பீகாரில் பயணித்து அங்கு நிலவும் சாதீயக்கொடுமைகளை ஆவணப்படமாக்கி உள்ளார் பிராண்டோ.
அதை அமெரிக்க திரையரங்குகளிலோ...தொலைக்காட்சியிலோ வெளியிட முடியவில்லை.
தனது விரக்தியை...கோபத்தை தனது வைர வரிகளில் பதிவு செய்துள்ளார்.
 “அமெரிக்க மனம் இதர மக்களின் துன்பங்களின் மீது ஒரு போதும் அக்கறை கொள்வதில்லை”.


காட்பாதர் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்க பிராண்டோ போகாமல் சச்சின் லிட்டில் பெதர் என்ற அமெரிக்க பூர்வீகக்குடிமகளை அனுப்பி புரட்சி செய்தார் பிராண்டோ...
இத்தனை காலமாக இனத்தின் பெயரால் அமெரிக்க பூர்வீகக்குடிமக்கள் எவ்வளவு தூரம் பழி வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிக்கையாக ஆஸ்கார் அரங்கில் வாசிக்க வைத்து உலகின் கவனத்துக்கு கொண்டு சென்ற மாபெரும் போராளி பிராண்டோ.
அது மட்டுமல்ல.... அந்த மக்களுக்காக தனது வாழ் நாளை செலவழித்துள்ளார் பிராண்டோ என்பதை அறிந்து கொள்ள முடிகிறது இந்நூலால்.

மது...மங்கை என கொண்டாட்டத்துடன் இருந்தாலும்...
உண்மையான புரட்சி கலைஞர் மார்லன் பிராண்டோதான்.

நூலின் பெயர் : மார்லன் பிராண்டோ
மொழி பெயர்ப்பு : அஜயன் பாலா
வெளியிடு : எதிர்
விலை :  ரூ.250.00
தகவல் தொடர்புக்கு : 04259 226012, 98650 05084.
   

Mar 21, 2012

கூடங்குளம் தீவிரவாதிகள்


கூடங்குளம் பாக்கிஸ்தானின் ஒரு பகுதி என நேயர்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.
ஆயிரக்கணக்கில் இருக்கும் ஒரு சிறு தீவிர வாத கூட்டம் அறவழியில் மிக மோசமான முன்னுதாரணங்களோடு போராடி வருகிறது.
இதை எப்படி அனுமதிக்க முடியும்?.
முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்தது போல் இந்த கூட்டத்தையும் ஒழிக்க வேண்டும்.
இந்தக்கலையில் வல்லவரான ராஜபக்‌ஷேவின் ஆலோசனையை அவசியம் பின்பற்ற வேண்டும் நமது அரசுகள்.

பிந்திரன்வாலேயின் தாயாதி வழி சொந்தக்காராரம் உதயகுமார் என சிபிஐ குறிப்பு சொல்கிறது.
இப்போது சாகும்வரை உண்ணாவிரதம் எனும் கொடிய பேரழிவு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.
இந்த ஆயுதத்தை கண்டு பிடித்தவர் காந்தி எனும் படு பயங்கர தீவிரவாதி.
இதிலிருந்தே தெரிய வில்லையா! இந்தக்கும்பல் யாரை பின்பற்றுகிறது என்று...
இவர்களை அழித்தொழிக்கும் அறப்போராட்டத்திற்க்கு இந்தியர்களாகிய நாம் அணி திரள்வோம்.
அணு உலையை விட ஆபத்தானவர்கள் அணு உலை எதிர்ப்பாளர்கள்.
ஒரு நாளைக்கு 28 மணி நேரமும் தமிழ் நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் தரும் கூடங்குள அணு உலையை ஆதரிப்போம்....அணி திரள்வோம்....


Mar 18, 2012

கர்ணன்-காலத்தால் அழிக்க முடிந்த காவியம்


கர்ணன் வெளியான காலத்தில் வசூலில் நஷ்டத்தை ஏற்ப்படுத்திய படம்.
இருந்தாலும் 70,80,90 வரை எப்போது தியேட்டரில் போட்டாலும் லாபத்தை வாரிக்குவித்த படம்.
தனியார் தொலைக்காட்சி ஆதிக்கம் வந்த பிறகு இது போன்ற பழைய படங்கள் திரையிடுவது வழக்கொழிந்து போனது.
தீடிரென்று கர்ணன் படத்தை புதுப்படங்களுக்குறிய ஆரவாரத்துடன் ரீலிஸ் செய்யப்பட்டதும் என்னுள் இருந்த சிவாஜி ரசிகன் சிங்கமென கர்ஜித்து கிளம்பி விட்டான்.
ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் பார்க்க குடும்பத்தோடு புறப்பட்டு விட்டேன்.

புதிய படங்கள் ஹவுஸ்புல்லுக்கு திணறியபோது சர்வசாதரணமாக ஹவுஸ்புல்லாகி வசூல் மன்னனாக திகழ்ந்தான் கர்ணன்.
90 சதவீதம் மேட்டுக்குடி மக்களே நிறைந்த கூட்டத்தில் லுங்கி அணிந்து...  கம்பீரமாக வந்து கவனத்தை கவர்ந்தார் ஒரு சிவாஜி ரசிகர்.

டிஜிடலில் கர்ணனை பார்க்கப்போன எனக்கு டைட்டிலிலேயே ஏமாற்றம் தொடங்கி விட்டது.
கலரெல்லாம வெளிறிப்போய் மிகவும் பலகீனமாக காட்சியளித்தது படம்.
பழுதாகிப்போன நெகட்டிவை டிஜிட்டலுக்கு மாற்றும் போது பிரேம் பிரேமாக வேலை பார்த்து படத்தை தகதகவென மின்னச்செய்திருக்க முடியும்.
ஒன்றுமே செய்யாமல் அப்படியே படத்தை வெளியிட்டு காசு பார்த்து விட்டார்கள் வியாபாரிகள்.

கர்ணன் படத்தின் திரைக்கதை அமைப்பு பிரமிப்பு ஏற்ப்படுத்தியது.
சிவாஜியின் நடிப்பு இன்றும் என்னை வசீகரித்தது....
தனது மாமனாரால் அவமானப்படும்போது கையறு நிலையில் கர்ஜிப்பார் பாருங்கள்....இப்படி நடிக்க உலகில் எவனுமேயில்லை.
படத்தின் இறுதிக்காட்சிகளை ஆக்ரமித்தது என்.டி.ஆர்தான்...
அத்தை..அத்தை என குந்தி தேவியை அவர் அழைக்கும் அழகே தனிதான்.

மெல்லிசை மன்னர்கள் இசையில்... கண்ணதாசனது கற்பனையை....
 டிடிஎஸ் ஒலியில் கேட்க பரம சுகமாக இருக்கிறது.

சிவாஜியின் தேவர்மகன்,முதல் மரியாதை,வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற முக்கியமான படங்களை தெளிவாக டிஜிட்டலில் உருமாற்றம் செய்யப்படவேண்டும்.
நூறாண்டுகள் கழித்தும் ரசிகர்களால் அவை கொண்டாடப்படும்.

Mar 15, 2012

காவல் கோட்டம்-காவலும்...காதலும்...[பாகம் இரண்டு]


வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்ட பின் ஊமைத்துரையை பாளையங்கோட்டை சிறையில் அடைத்து வைத்தனர்.
2-2-1801 அன்று இரவு திருச்செந்தூர் முருகனுக்கு காவடி எடுப்பது போல் வந்த பக்தர் கூட்டமும்,ஊமைத்துரை உறவினர்களும் காவலர்களை தாக்கி ஊமைத்துரையை விடுவித்து வல்லநாட்டு மலைக்கு தப்பித்து சென்றுள்ளனர்.
பாஞ்சாலக்குறிச்சியில் காவலில் இருந்த கும்பினிச்சிப்பாய்களை கொன்று ஒரே வாரத்தில் அங்கு ஒரு மண் கோட்டையை எழுப்பி உள்ளார்.
மேலும் ஐந்து பாளையங்களில் வெள்ளையரை அழித்து கோட்டைகள் கட்டியுள்ளார்.
இப்படி பல இடங்களில் ஊமைத்துரை வெற்றிக்கொடி நாட்டிய சாகஸத்தை காவல் கோட்டம் படம் பிடித்து காட்டுகிறது.

தன்னை சரணடைந்த பரங்கிததளபதியின் மனைவி வேண்டுக்கோளை ஏற்று அவர்கள் உடமைகளோடு வெளியேற அனுமதித்த மாண்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஊமைத்துரையை வீழ்த்திய அக்னியூவின் வார்த்தைகள்....
 “காது கேளாத,வாய் பாச முடியாத ஒரு இளைஞனின் சாகஸங்கள் பிரமிப்பூட்டுகின்றன.
அவர் சைகைகளை தேவ கட்டளைகளாக ஏற்று எல்லோரும் கீழ்ப்படிகின்றனர்.
எல்லா தாக்குதல்களிலும் அவர் முன்னால் நிற்கிறார்.
தன்னை விட நூறு மடங்கு எதிரிகளை கண்டு அவர் அஞ்சவில்லை.
அவரது படையின் சக்தியைவிட.... சாதனைகள் பல மடங்கு பெரியவை”

மதுரை நகரத்தை தாதனூர்க்காரர்கள்தான் காவல் காத்து வந்திருக்கிறார்கள்.
அதற்க்காக ஒவ்வொரு வீட்டிலும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் மதுரை நகருக்குள் புதிய கட்டிடம் கட்டியுள்ளான்.
அதற்க்கும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள் தாதனூர்க்காரர்கள்.
அந்த புதிய கட்டிடம் போலிஸ் ஸ்டேசன்.

மதுரைக்கு முதன்முதலாக ரயில் வந்த போது மதுரை மக்களின் கமெண்ட்...
“அதுக்கு வடக்க காவிரி ஆத்துல தண்ணிய பிடிச்சு மூக்கு வழியா நெறையா ஊத்தி விட்றாங்ய...
நம்ம நாட்டு ஒட்டகம் எப்படி தண்ணிய உள்ள வச்சிருக்குமோ அதப்போல இந்த வெள்ளக்கார வண்டி...தண்ணியப்பூரா உள்ள வச்சுகிட்டு கரிய்ய தின்னுகிட்டு எவ்வளவு தூரம் வேணும்னாலும் ஒடும்”

“அப்ப நம்ம நாட்டு ஒட்டகம் மாதிரின்னு சொல்ற...
அது சரி...இது தலையிருக்கிற பக்கம்தான் குசு விடுதாமே... ஏன்?”

தாதனூர் கிழவிகள் பேச்சு அத்தனையும் அடல்ட்ஸ் ஒண்லி.
புதுமாப்பிள்ளைக்கு சொல்லும் அறிவுரை இது...
“ஏலேய்...மொட்டு கெட்ட பயலே...நீ என்ன தீத்தவளையா சரடு கட்டி கூட்டி வந்த?
இது உழுகாத வயக்காடுடா...எடுத்த எடுப்புல அமுக்கி உழுகணும்னு நெனச்சின்னா கலப்பையும் சேதப்பட்டு போகும்...மண்ணும் பெறளாது.
பதம் போயிரும்.
மே ஓட்டா ஓட்டி,அப்புறம் கலப்பய எடுத்து கட்டி,மேழிய அமுக்கி பிடிக்காம... மெல்ல பிடிச்சுகிட்டு.... அது நோக்கத்துக்கு... மாட்ட போக வுடு...
போறப்போ... அதுவா கிழிச்சுகிட்டு போகும்.
ரெண்டு ஓட்டு.. மூணு ஓட்டுல தன்னால புழுதி கிளம்பிரும்...
அத வுட்டுட்டு எடுத்த எடுப்புல...அமுக்கிதான் உழுவேன்னா எதுக்கும் ஆகாம போயிரும்”

“அவ எதுக்கு தீத்துட்டுப்போனா?”
 “அவ புருசன் சேவ மாதிரி ஏறுனதும் எறங்கிர்றானாம்....”
“அட தட்டு கெட்ட சிறுக்கி!ஆழம் பாத்தாதுன்னு அழுதுகிட்டு கிடந்தவ...
 ஒத்த வருசத்துல நீளம் பத்தாதுன்னு தீத்துகிட்டு போயிட்டாளா!”

 “ஓம்புருசன் பெரிய கெட்டிக்காரனாம்லடீ”
“அவங்கிடக்கான் தூமச்சீல...எடங்கண்டுபிடிக்கவே எட்டு நாளாச்சு”

காவல் கோட்டையில் இது போன்ற டயலாக்குகள் வெள்ளமெனெ பரவிக்கிடக்கிறது.
700 ஆண்டு பயணத்தை களைப்பிலாமல் கடக்க உதவும் வயகரா இவைகள்தான்.

Mar 14, 2012

காவல்கோட்டம்-வலிமை...பெருமை...[பாகம் ஒன்று]

ஜனவரியில் வாங்கிய காவல்கோட்டம் இப்போதுதான் படிக்க முடிந்தது.
சரித்திர நாவல் என்றாலே கல்கியும்...சாண்டில்யனும்தான் நமக்கு முன்னோடி தெய்வங்கள்.

சுஜாதா முதன்முறையாக ரத்தம் ஒரே நிறத்தில் புதிய பாதையை காட்டினார்.
சரித்திரமும் புதினமும் அற்ப்புதமாக கலந்து அவர் செய்த ரஸவாத வித்தையால் பிரிட்ஷ் காலத்து சென்னையை தரிசிக்க முடிந்தது.

பிரபஞ்சனது ‘வானம் வசப்படும்’... ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரியை உள்வாங்கி... பிரெஞ்சு காலத்து புதுவையை படம் பிடித்து காட்டியது.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் கிபி1370 க்கு இழுத்துச்செல்கிறது.
கிட்டத்தட்ட 700 ஆண்டு வரலாற்றில் நாம் பயணிக்க முடிகிறது.

காவல் கோட்டத்தின் சிறு பகுதிதான் அரவான்.
காவல் கோட்டத்தின் ஆன்மாவை அரவானில் தரிசிக்க முடியாது.
 பசுபதி காரெக்டர் கிணற்றில் விழுந்து மாட்டிக்கொள்கையில் ஆதி காரெக்டர் கிராபிக்ஸ் மாடுகளுடன் பவனி வந்து.... விஜய் பட ரேஞ்சில்....
 ஆக்‌ஷன் காட்சி தூள் பறக்க தப்பித்து போவார்கள்.

காவல் கோட்டத்தில் சு.வெங்கடேசன் சித்தரிந்ததை காட்டியிருந்தால் யதார்த்தம் வாழ்ந்திருக்கும்.
சின்னான் கோஷ்டியினர்.... பக்கத்து கிராமத்தில் போய்....
 வேகமாக ஒடக்கூடிய மாடுகளை தேர்வு செய்து... திருடி ஒட்டிக்கொண்டு வருவார்கள்.
மாட்டு வாலின் அமைப்பை வைத்து... மாடு ஓடும் திறத்தை கணிப்பதாக.... மாட்டு சாஸ்த்திரத்தை நுழைத்திருப்பார் வெங்கடேசன்.

களவு போன ஊரில்... காவலிருப்பவர்களிடம்...
மாட்டு வியாபாரிகள் என நம்ப வைத்து... இரவில் தங்கிச்செல்ல அனுமதி பெற்று தங்கி...கிணற்றுக்குள் கட்டிலை இறக்கி...காப்பாற்றி விடிவதற்க்குள் தப்பித்து செல்வதாக சித்தரித்திருப்பார்.

காவல் கோட்டத்தில் சின்னானுக்கு ஜோடி இன்னொருத்தன் மனைவி.
இவன் மேல் கொண்ட காதலால்...தாலி கட்டிய தாய் மாமனை அறுத்து ஒதுக்கி விட்டு...அதே தாய்மாமன் தலைமையில்... சின்னானது அரை ஞாண் கொடியை தாலியாக ஏற்று மனைவியாக வாழ்கிறாள்.
இவை படமாக்கப்பட்டிருந்தால் அரவான் டெம்ப்ளேட் காதல் காட்சிகள்...
பாடாவதி பாடல் காட்சிகள்... இம்சையில்லாமல் ஒரு புது அனுபவம்....
ஒரு பரவசம் கிட்டியிருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஒ.ஏ.கே.தேவர் ஊமைத்துரையாக வந்து கர்ஜிப்பார்.
காவல் கோட்டம் இவர் பிறவி ஊமை என்கிறது.
நமது பாடப்புத்தகத்தில் கட்டபொம்மன் வர்லாற்றில்....ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்துச்சென்ற போது வெள்ளையரால் கொல்லப்பட்டார் என்று ஒரு வரிச்செய்தியாக...வரலாறு சொல்லப்படும்.
அவரது வீரதீரச்செயல்கள் பக்கம் பக்கமாக காவல்கோட்டம் சித்தரிக்கிறது.
அவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன்.

Mar 13, 2012

சிதம்பர ரகசியம்

பிப்ரவரி 24 முதல் மார்ச் 4ம்தேதி வரை சிதம்பரம் புத்தகக்கண்காட்சி... அண்ணாமலை பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
நானும் பங்கு பெற்றேன்.
உலகசினிமாவா!கிலோ என்ன விலை?எனக்கேட்டனர் சிதம்பரம் மக்கள்.
அது போக சிதம்பரத்தில்500ரூபாய்,1000 ரூபாய்க்கு கடுமையான தட்டுப்பாடு.
எல்லா ஊரிலும் 10 ரூபாய் நோட்டுக்குத்தான் சிரமப்படுவோம்.
சிதம்பரத்தில் 10 ரூபாய் நோட்டு மட்டும்தான் பார்க்க முடிந்தது.


சரி வந்தது வந்தோம்...
புண்ணியத்தை தேடுவோம்....
என சிதம்பரம் நடராஜப்பெருமானை தரிசிக்க ....
பவுர்ணமி இரவு அர்த்த ஜாம பூசைக்கு சென்றேன்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் வரும் நேரம் அது என ராம கிருஷ்ணா மட ஸ்டால் நண்பர் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
மிக அளவான கூட்டம்தான்.
வாத்தியங்கள் முழங்க பெருமான் பள்ளியறைக்குப்போகும் காட்சி சிலிர்ப்பை ஏற்ப்படுத்தவில்லை.
பவர்கட்டில் கோயிலே இருட்டாக....
பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில்...
குளிர்ந்த சூழலில்...
அந்தப்பிரகாரத்தில் தெய்வீகம் இருந்தது.
பிரசாதமாக தம்ளரில் பால் கொடுத்தார்கள்.
என் வாழ் நாளில் கண்டிராத சுவை அந்தப்பாலில் இருந்தது.

அடுத்த நாள் காலையில் கோயிலுக்குப்போனேன்.
முக்கிய சன்னிதானங்களில் அர்ச்சகர்கள் பெரிய நோட்டை வைத்துக்கொண்டு  பெயர்,முகவரி,பிறந்த நாள்,நட்சத்திரம் என... இறந்த நாளைத்தவிற மீதி எல்லா டேட்டாவையும் கேட்டு...
 விபூதி பிரசாதம் அனுப்ப...
 சர்வீஸ் சார்ஜாக 1000 ரூபாய் கேட்கிறார்கள்.
 “1000 ரூபாயா! நான் அதை சிதம்பரத்தில் பார்க்கவேயில்லை” என தப்பித்து வந்தேன்.
ஆளரவமற்ற மண்டபத்தில் ஒரு வெள்ளைக்காரன் மட்டும் அங்குள்ள தூண்களை சுற்றி சுற்றி வந்தான்.
அவனோடு நானும் இணைந்து பார்த்தேன்.
நம் முன்னோர்கள் செதுக்கி வைத்த பொக்கிஷங்களை கண்டேன். நாட்டியக்கலையின் அத்தனை அம்சங்களையும் சிற்பமாக்கி வைத்துள்ளார்கள்.
அதன் அழகை வர்ணிக்க கண்ணதாசன் பிறக்க வேண்டும்.


சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் பாண்டியன்... “ பகல் உணவுக்கு புத்தூர் என்ற கிராமத்துக்கு போவோம்” என்றார்.
டவுண்பஸ்ஸில் ஏறி புத்தூர் சென்றோம்.
கொள்ளிடம் தாண்டி இருக்கிறது புத்தூர் என்ற சிற்றூர்.
ஏகப்பட்ட கார்கள்...வேன்கள் என மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
பொறுமையாக காத்திருந்து இடம் பிடித்தோம்.
தலை வாழை இலை போட்டு சோற்றை கொட்டினார்கள்.
மிரண்டு போனேன்.
சைட் டிஷ்ஷாக சிக்கன்,இறால்,வஞ்சிர மீன் வறுவல் வாங்கி சாப்பிட்டேன்.
இதற்க்கு ஈடு இணையான சுவை உலகிலேயே இருக்காது எனச்சொல்லலாம்.
இன்றும் ஒலைக்கொட்டகையில் அமைந்திருக்கும் ஜெயராமன் சாப்பாட்டுக்கடை சுவையின் ரகசியத்தை கேட்டு தெரிந்து கொண்டேன்.
ஜெயராமன் சொந்தமாக படகு வைத்துள்ளார்.
அதில் போய் பிடித்து வரும் இறால்,மீன் மட்டுமே சமையலுக்கு உபயோகிக்கிறார்கள்.
அதனால்தான் பிரஷ்&ஸ்பெஷல் டேஸ்ட் கிடைக்கிறது.

சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சிதம்பரம் கீழ ரத வீதியில் கிருஷ்ண விலாஸ் ஒன்றே கதி... 

Mar 11, 2012

A SEPARATION-2011[Iran]கோழி ஒரு கூட்டிலே...சேவல் ஒரு கூட்டிலே...

ஆர்ட்டிஸ்ட் படம் ஆஸ்கார் வெல்லாது என நம்பினேன்.
எனது நம்பிக்கை பொய்த்து போனதில் மிகவும் மகிழ்ந்தேன்.
ஆனால் செப்பரேசன் கட்டாயம் வெல்லும் எனச்சொல்லி நூற்றுக்கணக்கான டிவிடிகளை சென்னை,திருப்பூர் புத்தகக்கண்காட்சிகளில் விற்றேன்.
என் வாக்கு பொய்த்துப்போகாமல் ஆஸ்காரை வென்று காட்டியது செப்பரேசன்.
ஈரான் படங்கள் பல தடவை ஆஸ்கார் இறுதி வரை போய் தோற்றது வரலாறு.
செப்பரேசன் ஆஸ்கார் மட்டுமல்ல...உலகில் உள்ள எல்லா அவார்டுகளையும் அள்ளி புதிய சரித்திரம் படைத்துள்ளது.

ஒரு சாதாரண குடும்பக்கதையை திரைக்கதை அமைப்பினால் சூப்பர் பாஸ்ட் திரில்லர் வேகத்தில் படத்தை ரசிகனிடம் கடத்துகிறார் இயக்குனர் Asghar Farhadi .

அல்சைமர் வியாதியால் அவஸ்தைப்படும் முதியவர்....
அவரை பேணிப்பாதுகாக்கும் அருமை மகன்....

கெடக்குறான்...கிழவன்...நாம வெளிநாடு போய் சுகித்திருக்கலாம் என ஆசைப்படும் மனைவி....
ஆசை நிராசையானதால் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கே போய் விடும்
 தர்ம பத்தினி....

இருவரின் பிரிவினையால் அல்லலுறும் டீனேஜ் மகள்....

இவர்களோடு...

கோடி ரூபாய் வேண்டாம்....
குரான் காட்டும் நல்லொழுக்கமே வாழப்போதுமானது...
என வாழும் வேலைக்காரி....

அவளது கோபக்கார கணவன்...

தெய்வவடிவான இவர்களது பெண் குழந்தை....

இவர்களை....
மோத விட்டு ஈரக்காவியம் அல்லது ஈரான் காவியம் படைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் கிளைமாக்சை நம்மை எழுத வைத்து ரசிகனை படைப்பாளியாக்கியிருக்கிறார் இயக்குனர்.

ரசிகர்கள் மேதமையை மனதில் வைத்து படமாக்கும் இந்த இயக்குனருக்கு பாலபிஷேகமே பண்ணலாம்.
ரசிகனை முட்டாளாக நினைத்து... அதி முட்டாளாக்க....படமெடுக்கும் கோடம்பாக்க ஜெராக்ஸ் கடைக்காரர்களை என்ன பண்ணலாம்?

செப்பரேசன் வென்ற விருதுப்பட்டியல்....
[ விக்கிப்பீடீயாவுக்கு நன்றி]
YearGroupAwardResult
2011Berlin International Film Festival[32]Golden Berlin BearWon
Prize of the Ecumenical JuryWon
Reader Jury of the "Berliner Morgenpost"Won
Silver Berlin Bear – Best ActorWon
Silver Berlin Bear – Best ActressWon
Durban International Film Festival[33]Best FilmWon
Best ScreenplayWon
Fajr Film Festival[34]Audience Award – Best FilmWon
Crystal Simorgh Award – Best CinematographyWon
Crystal Simorgh Award – Best DirectorWon
Crystal Simorgh Award – Best ScreenplayWon
Crystal Simorgh Award – Best Sound RecorderWon
Diploma of Honor – Best Actor in Supporting RoleWon
Diploma of Honor – Best Actress in Supporting RoleWon
Pula Film Festival[35]Golden Arena Award – International CompetitionWon
Sydney Film Festival[36]Official Competition Award – Best FilmWon
Yerevan International Film Festival[37]Grand Prix: Golden Apricot – Best FilmWon
World Cinema Amsterdam Festival[38]Parool Audience Award – Best FilmWon
Saint Petersburg International Film Festival "KinoForum"[39]Grand Prix – Best FilmWon
Melbourne International Film Festival[40]Most Popular Feature FilmWon
15th Iran Cinema Celebration[41]Best FilmWon
Best DirectorWon
Best Original ScreenplayWon
Best Supporting ActorWon
San Sebastian International Film Festival[42]Another Look AwardWon
Fukuoka International Film Festival[43]Audience Award – Best FilmWon
Riga International Film Festival[44]FIPRESCI prizeWon
Vancouver International Film Festival[45]Rogers People's Choice AwardWon
British Independent Film Awards[46]Best Foreign Film AwardWon
BBC Four World Cinema Awards[47]Best FilmWon
Asia Pacific Screen Awards[48]Best Feature Film AwardWon
Achievement in DirectingNominated
Best Performance by an ActorNominated
Best ScreenplayNominated
New York Film Critics Circle[49]Best Foreign Language FilmWon
National Board of Review[50]Best Foreign Language FilmWon
International Film Festival of India[51]Best Director AwardWon
Satellite Award[52]Best Foreign Language FilmNominated
The International Film Festival of the Art of Cinematography CAMERIMAGE[53]The Silver FrogWon
Independent Spirit Awards[54]Best International FilmWon
Boston Society of Film CriticsBest Foreign Language FilmRunner-up
Los Angeles Film Critics Association[55]Best ScreenplayWon
Best Foreign-Language FilmRunner-up
New York Film Critics Online[56]Best Foreign-Language FilmWon
Broadcast Film Critics Association Awards[57]Best Foreign-Language FilmWon
Chicago Film Critics Association Awards[58]Best Foreign-Language FilmWon
Best ScreenplayNominated
Dallas-Fort Worth Film Critics Association Awards[59]Best Foreign-Language FilmWon
Southeastern Film Critics AssociationBest Foreign-Language FilmWon
Women Film Critics CircleBest Foreign Film by or About WomenNominated
London Film Critics' Circle[60]Film of the YearNominated
Foreign-Language Film of the YearWon
Director of the YearNominated
Screenwriter of the YearWon
Supporting Actress of the YearWon
Utah Film Critics AssociationBest Foreign-Language FilmWon
Abu Dhabi Film Festival[61]Special Jury AwardWon
2012Online Film Critics Society[62]Best Film Not in the English LanguageWon
Best Original ScreenplayNominated
Dublin Film Critics Circle[63]Best Foreign Language FilmWon
Vancouver Film Critics Circle[64]Best Foreign Language FilmWon
Denver Film Critics Society[65]Best Foreign Language FilmWon
National Society of Film Critics[66]Best PictureThird place
Best ScreenplayWon
Best Foreign Language FIlmWon
North Texas Film Critics Association[67]Best Foreign Language FilmWon
Kansas City Film Critics Circle[68]Best Foreign FilmWon
Bodil AwardsBest Non-American FilmWon
Alliance of Women Film Journalists[69]Best Non-English Language FilmWon
Golden Globe Award[4]Best Foreign Language FilmWon
British Academy Film Awards[70]Film Not in English LanguageNominated
International Cinephile Society[71]Best PictureWon
Best DirectorNominated
Best Original ScreenplayWon
Best ActorNominated
Best ActressNominated
Best Supporting ActorNominated
Best Supporting ActressNominated
Best Foreign-Language PictureWon
Best EditingNominated
Best EnsembleWon
Guldbagge Award[72]Best Foreign FilmWon
Academy Award[5]Best Foreign-Language FilmWon
Best Original ScreenplayNominated
César Award[73]Best Foreign FilmWon
Chlotrudis Society for Independent Film[74]Best DirectorPending
Best Supporting ActorPending
Best Performance By An Ensemble CastPending
Jaipur International Film Festival[75]Best DirectorWon
Best ActressWon

[edit]