Showing posts with label மலையாளம். Show all posts
Showing posts with label மலையாளம். Show all posts

Dec 9, 2011

Beautiful-[Malayalam] 2011 சோதனையை சாதனையாக்கு...


நீண்ட நாட்களாக எழுத முடியவில்லை.
காரணம் விதி ஹெட் ஸ்பிரட்டிங்&டேன்சிங்.
பராசக்தி சிவாஜி கணேசனைப்போல ஒடினேன்...ஒடினேன்...வாழ்க்கையின் ஒரத்திற்க்கே ஒடினேன்.
அந்த துலாபார துயரத்தை தனிப்பதிவாக்குகிறேன்.
துன்ப தொடர் ஒட்டத்திலும் மூன்று சினிமா பார்த்து விட்டேன்.
1 மயக்கமென்ன
2 போராளி
3 பியூட்டிஃபுல்
மூன்றுமே என் துன்பத்தை கடக்க உதவிய காரணிகளாக இருந்த போதிலும்...
மொத்தமாக என் துன்பத்தை துடைத்து போட்டது பியுட்டிஃபுல்.
இப்படத்திற்க்கு மூலம்
Divingbell and the butterfly [நான் இப்படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்...காண்க]
My Left Foot [செழியன் ஆனந்த விகடனில் உலகசினிமா தொடரில் எழுதி உள்ளார்.] இருந்தாலும் அப்பட்டமாக காப்பியடிக்காமல்...சூரிய உதயத்தை பார்த்து ஒவியம் படைப்பது போல் காவியமாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ்.

ஐம்பது நாட்களை கடந்து விட்ட போதிலும் திங்கள் கிழமை இரவுக்காட்சியை ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்க்கின்றனர் கேரள மக்கள்.

படத்தின் நாயகன் ஜெய சூர்யா.
பல நூறு கோடி சொத்துக்களை படுத்திருந்து அனுபவிக்கிறான்.
ஆம்....கழுத்துக்கு கீழே எந்த பாகமும் இயங்காது.
பிறவிக்கோளாறு.
தன் நிலைமைக்கு கழிவிரக்கம் கொள்ளாமல் வாழ்க்கையை ரசித்து ருசித்து சாப்பிடுகிறான்.
அவனைக்கண்டு காலன்,எமன்,தூதன் மூவருமே பயந்து நடுங்கி ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.

படுத்துக்கொண்டே ஜெயசூர்யா அடிக்கும் சிரிப்பு சிக்ஸர்கள்
மொத்த தியேட்டரை அதிர வைக்கின்றன.
தனக்கு நர்சாக பணி புரிய...
இண்டர்வியூக்கு வரும் பெண்களை...
 தலையிலிருந்து மார்பு வரை மட்டுமே பார்க்கிறான்.
 பார்ப்பவரை திணற வைக்கும் கவர்ச்சியான பெண்ணின்...
வெளியே தெரியும் பிரா பட்டையை பார்த்து....
 “கருத்த பிரா போட்ட பெண் தவிர மற்றவர்கள் போகலாம்”

ஏமாந்து திரும்பும் பெண்களில் ஒருத்தியின் கமெண்ட் இது...
 “20,000 சம்பளம் கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கருத்த பிரா வாங்கி வெளியே தெரியிற மாதிரி மாட்டியிருப்பேன்”
இக்காட்சிக்கு நரசிம்மராவ் கூட சிரித்திரிப்பார்.

இறந்து போன நண்பனின் குரலின் பிரதியாக ஒலிக்கும்... வருமானமற்ற...ஆனால் தன்மானமிக்க பாடகன்[நடிகர் அனுப் மேனன்] ஒருவனை பிரத்யேகமாக பாட பணிக்கிறான்.
பாடகன், ஜெயசூர்யாவின் கட்டற்ற அன்பில் கரைந்து போகிறான்.

கருத்த பிரா ஒடிப்போக... புதிய புயலாய் பாய்ந்து வருகிறாள் கதாநாயகி.... வேலைக்காரியாக....

அவளின் காதலை பெறுவதில் நண்பர்களுக்கிடையே போட்டி நடப்பது போல்... சொத்துக்காக... சொந்தங்கள் ஜெயசூர்யாவை தீர்த்து கட்ட போட்டி போடுகின்றனர்.
உணவில் விஷம் வைத்து கொல்லும் முயற்ச்சியில் சிக்கி உயிருக்கு போராடும் ஜெய சூர்யா தப்பித்தானா?
குற்றவாளி யார்?
என்று பறக்கும் திரைக்கதை...
இயக்குனருக்கு தியேட்டரில் ஸ்டேண்டிங் ஒயேஸ்
பாராட்டை பெற்று தருகிறது.

கட்டாயம் பார்க்கவேண்டிய கமர்சியல் கவிதை.

Feb 27, 2011

கொடியேற்றம்-பின்னணி இசை இல்லாத காவியம்

கொடியேற்றம் படத்தின் டிவிடி மிகவும் மோசமான தரத்தில் இருந்தாலும் படத்தின் ஆன்மாவை தரிசிக்க முடிந்தது.சத்யஜித்ரேவின் ஆளுமையில் அடூர் கோபாலகிருஷ்ணன் வெளிப்பட்டாலும் ரித்விக் கட்டக்கின் நேரடி மாணவன்.அடூர் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் போது கட்டக்தான் ஆசிரியர்.கட்டக் பற்றி அடூரின் விமர்சனம்.... “அவரது நாளங்களில் சினிமாவும் மதுவும்தான் ஓடிக்கொண்டிருந்தது”.
1972ல் தனது முதல் படைப்பான சுயம்வரம் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்துதான் தனது இரண்டாவது காவியமான கொடியேற்றத்தை[1977] வெளியிட்டார்.

இப்படம் சங்கரன் குட்டி என்ற சாமான்யனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது.திருமணத்தையும் குடும்பவாழ்க்கையையும் மற்றொரு கோணத்தில் பார்க்கிறது.
திருமணமாகாத ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்க்கான உரிமை எப்போதும் உண்டு.ஆனால் திருமணமான ஒருவன்,திருமணமாகாதவனாக இருக்கும் சுதந்திரத்தை இழந்து விடுகிறான்.

உலகின் யதார்த்த சித்திரங்களும் சங்கரன்குட்டியின் வாழ்க்கையனுபவங்களும்...அனுபவங்களால் சங்கரன்குட்டி அடையும் மாற்றங்களும்தான் கொடியேற்றம்.
சங்கரன்குட்டி பற்றி அடூரின் பேட்டி இதோ....
சங்கரன்குட்டி பெருந்தீனிக்காரனோ மநத புத்திக்காரனோ அல்ல.நமது வெகுஜனத்திரளிலிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இவனும் ஒருவன்.தனக்கென ஒரு தனித்துவமோ சுயசிந்தனையோ இல்லாததுபோல் தோன்றும்.எனவே, அவனை நாம்,நம்மை விடக்கீழானவனாக நினைத்து தாழ்வாக மதிப்பிடுகிறோம்.நம்மிடையே வாழும் இப்படியான சங்கரன்குட்டிகளை நாம் அதிகமாக கண்டுகொள்வதில்லை.திருமணமாகும்வரை,குடும்பத்தைப்பற்றியோ குடும்பவாழ்க்கைக்கு அடிப்படை தேவையான பரஸ்பர அன்பைப்பற்றியோ அறியாத,வெற்றுத்தடியனாக திரிந்தவன்தான் சங்கரன்குட்டி.பல்வேறு விதமான வாழ்க்கைகளைப்பார்த்து,அதன் ஏமாற்றங்களையும்,வெறுப்புகளையும்,ஆபத்துகளையும்,துயரங்களையும்,ரகசியங்களையும்,
பொருத்தமின்மைகளையும் எல்லாம் அனுபவித்த அவனுக்குள் எங்கோ ஒளிந்து கிடந்த ஒரு தனித்துவம் மெல்லத்தலைதூக்குகிறது.உடனே மனத்தெளிவுடன் தனக்குச்சொந்தமான சிறு குடும்பத்தை நோக்கி அவன் நிறைந்த அன்புடனும் பாசத்துடனும் வந்து சேருகிறான்.
சத்யஜித்ரே முதன்முதலில் பார்த்த அடூரின் படம் கொடியேற்றம்.அந்த அனுபவம் அடூரின் வார்த்தைகளிலேயே......
ஒரு டஜன் பார்வையாளர்கள் மட்டும் அடங்கிய பிரத்யேகத்திரையிடல் அது...படம் தொடங்கி அதிகம் தாமதமாகவில்லை.சட்டென்று இறுக்கத்தை தளரச்செய்து ஒரு வெடிச்சிரிப்பு கேட்டது.அது ரேயிடமிருந்து.கதை முன்னேற முன்னேற மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள்.எல்லா சிரிப்பை விடவும் உரக்கக்கேட்டது ரேயின் உச்சமும் கனமுமான சிரிப்புதான்.

படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “பின்னணி இசையை சுத்தமாக ஒதுக்கிவிட்டீகளே,இனிமேலும் அதை பயன்படுத்த மாட்டீர்களா?” என்று கேட்டார்.
“இந்தப்படத்தில் அதற்க்கு இடம் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் பயன்படுத்தவில்லை அவ்வளவுதான்”.
அடூரின் முதல் படமான சுயம்வரத்தின் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனின் பாராட்டு இதோ... “கோபால் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தால் கூட இப்படத்தில் பின்னணி இசை சேர்ப்பதற்க்கான ஒரு இடத்தை கூட என்னால் கண்டுபிடித்திருக்க முடியாது”.

திரைப்படம் பேசத்தொடங்கிய பின்னர் பின்னணி இசை சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப்பு கொடியேற்றத்துக்கு உரியது.

இப்போது வந்திருக்கும் நடுநிசிநாய்கள் இந்த உண்மையை மறைத்து வந்த பம்மாத்து படம்.வக்கிரத்தை ...வக்கிரக்காரர்களுக்காக... வக்கிரக்காரக்காரன் எடுத்த படம் நடுநிசிநாய்கள்.
அடூரின் அனுபவங்கள் மேலும் அறிய....
அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா அனுபவம்-தமிழில்:சுகுமாரன்
அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை -அக்பர் கட்டில் [தமிழில்-குளச்சல் மு.யூசுப்]
இரண்டுமே காலச்சுவடு வெளீயீடு.