Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Mar 23, 2012

மார்லன் பிராண்டோ-நிஜத்தில் நடிக்காதவன்


மார்லன் பிராண்டோ தனது நடிப்பால் என்னை வசீகரித்ததை விட அவரது சுய சரிதத்தை படித்ததின் மூலமாக என்னை முழுக்க ஆட் கொண்டார்.
படிக்க...படிக்க.... என்னுள் எழுந்த அவரது உயரம் இமயமலையை கடுகாக்கும் கம்பீரம் கொணடது.
தனது பலகீனங்களை,தவறுகளை அப்பட்டமாக சுய சரிதத்தில் சொன்ன நடிகன் வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன்.

அஜயன் பாலா மொழி பெயர்ப்பில் எதிர் பதிப்பகத்தார் வெளியிட்ட மார்லன் பிராண்டோ என்ற நூலில் எனக்கு பிடித்த அம்சங்களில் சிலவற்றை மட்டும் உங்களொடு பகிர்ந்து கொள்கிறேன்.

சூப்பர்ஸ்டார் இமேஜில் மிதக்கும் நடிகர்கள் கட்டாயம் இதை படிக்க வேண்டும்...

‘மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை தேவ தூதராக கருதுகின்றனர்.
அந்த ஒருவருக்கு இந்த தேவதூதப்பதவி பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் மக்கள் அதை வலுக்கட்டாயமாக அவர்களிடம் திணித்து விடுகின்றனர்.
தங்களுடைய உணர்வுகளின் தேவைகளில் அந்த நபருக்காக ஆழமான ஒரு இடத்தை உருவாக்கி தருகின்றனர்.
ஏனெனில் நாம் கடவுளைப்போல சாத்தான்களை குறித்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்’.

வளர்ச்சியடைந்த நாடுகள்.... வளரும் நாடுகளுக்கு உதவி செய்வது எத்தனை போலியான நாடகம் என்பதை தோலுரித்து காட்டுகிறார் தனது எழுத்தில்....

 “பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து,இந்தோனேசியா போன்ற தெற்க்காசிய நாடுகளுக்கு படப்பிடிப்பு நிமித்தம் சென்ற போது...
காலனியாதிக்கம் முடிந்த பின்னும்.... வளர்ச்சியந்த நாடுகள்...
அந்நாட்டின் பொருளாதாரங்களை சீரழிப்பதை என்னால் கண்கூடாக உணர முடிந்தது.
வெளிநாட்டு உதவி என்ற பெயரால் அந்த நாடுகளை வளர்ந்த நாடுகள் தங்களது அரசியல் சுய காரியங்களுக்கு பயன்படுத்தி சுரண்டி வருகின்றன”.

பிராண்டோவின் வார்த்தைகள் எத்தனை சத்தியம் என்பதற்க்கு...
கூடங்குளம் இன்றைய சாட்சி.

 “அதிகாரத்தில் இருக்கும் தனி மனிதனோ அல்லது அரசாங்கமோ மக்களை தேசம் என்னும் பெயரால் எவ்வளவு தூரம் அடிமைகளாக்கி தன்னிஷ்டத்திற்க்கு தவறான பாதைகளில் அவர்களை அழைத்து செல்கிறது”....
பிராண்டோவின் இந்த வரிகள் கடும் மின் வெட்டை ஏற்ப்படுத்தி தமிழெகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையை ஞாபகப்படுத்தியது என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

இந்தியாவில் பீகாரில் பயணித்து அங்கு நிலவும் சாதீயக்கொடுமைகளை ஆவணப்படமாக்கி உள்ளார் பிராண்டோ.
அதை அமெரிக்க திரையரங்குகளிலோ...தொலைக்காட்சியிலோ வெளியிட முடியவில்லை.
தனது விரக்தியை...கோபத்தை தனது வைர வரிகளில் பதிவு செய்துள்ளார்.
 “அமெரிக்க மனம் இதர மக்களின் துன்பங்களின் மீது ஒரு போதும் அக்கறை கொள்வதில்லை”.


காட்பாதர் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்க பிராண்டோ போகாமல் சச்சின் லிட்டில் பெதர் என்ற அமெரிக்க பூர்வீகக்குடிமகளை அனுப்பி புரட்சி செய்தார் பிராண்டோ...
இத்தனை காலமாக இனத்தின் பெயரால் அமெரிக்க பூர்வீகக்குடிமக்கள் எவ்வளவு தூரம் பழி வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிக்கையாக ஆஸ்கார் அரங்கில் வாசிக்க வைத்து உலகின் கவனத்துக்கு கொண்டு சென்ற மாபெரும் போராளி பிராண்டோ.
அது மட்டுமல்ல.... அந்த மக்களுக்காக தனது வாழ் நாளை செலவழித்துள்ளார் பிராண்டோ என்பதை அறிந்து கொள்ள முடிகிறது இந்நூலால்.

மது...மங்கை என கொண்டாட்டத்துடன் இருந்தாலும்...
உண்மையான புரட்சி கலைஞர் மார்லன் பிராண்டோதான்.

நூலின் பெயர் : மார்லன் பிராண்டோ
மொழி பெயர்ப்பு : அஜயன் பாலா
வெளியிடு : எதிர்
விலை :  ரூ.250.00
தகவல் தொடர்புக்கு : 04259 226012, 98650 05084.
   

Mar 18, 2012

கர்ணன்-காலத்தால் அழிக்க முடிந்த காவியம்


கர்ணன் வெளியான காலத்தில் வசூலில் நஷ்டத்தை ஏற்ப்படுத்திய படம்.
இருந்தாலும் 70,80,90 வரை எப்போது தியேட்டரில் போட்டாலும் லாபத்தை வாரிக்குவித்த படம்.
தனியார் தொலைக்காட்சி ஆதிக்கம் வந்த பிறகு இது போன்ற பழைய படங்கள் திரையிடுவது வழக்கொழிந்து போனது.
தீடிரென்று கர்ணன் படத்தை புதுப்படங்களுக்குறிய ஆரவாரத்துடன் ரீலிஸ் செய்யப்பட்டதும் என்னுள் இருந்த சிவாஜி ரசிகன் சிங்கமென கர்ஜித்து கிளம்பி விட்டான்.
ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் பார்க்க குடும்பத்தோடு புறப்பட்டு விட்டேன்.

புதிய படங்கள் ஹவுஸ்புல்லுக்கு திணறியபோது சர்வசாதரணமாக ஹவுஸ்புல்லாகி வசூல் மன்னனாக திகழ்ந்தான் கர்ணன்.
90 சதவீதம் மேட்டுக்குடி மக்களே நிறைந்த கூட்டத்தில் லுங்கி அணிந்து...  கம்பீரமாக வந்து கவனத்தை கவர்ந்தார் ஒரு சிவாஜி ரசிகர்.

டிஜிடலில் கர்ணனை பார்க்கப்போன எனக்கு டைட்டிலிலேயே ஏமாற்றம் தொடங்கி விட்டது.
கலரெல்லாம வெளிறிப்போய் மிகவும் பலகீனமாக காட்சியளித்தது படம்.
பழுதாகிப்போன நெகட்டிவை டிஜிட்டலுக்கு மாற்றும் போது பிரேம் பிரேமாக வேலை பார்த்து படத்தை தகதகவென மின்னச்செய்திருக்க முடியும்.
ஒன்றுமே செய்யாமல் அப்படியே படத்தை வெளியிட்டு காசு பார்த்து விட்டார்கள் வியாபாரிகள்.

கர்ணன் படத்தின் திரைக்கதை அமைப்பு பிரமிப்பு ஏற்ப்படுத்தியது.
சிவாஜியின் நடிப்பு இன்றும் என்னை வசீகரித்தது....
தனது மாமனாரால் அவமானப்படும்போது கையறு நிலையில் கர்ஜிப்பார் பாருங்கள்....இப்படி நடிக்க உலகில் எவனுமேயில்லை.
படத்தின் இறுதிக்காட்சிகளை ஆக்ரமித்தது என்.டி.ஆர்தான்...
அத்தை..அத்தை என குந்தி தேவியை அவர் அழைக்கும் அழகே தனிதான்.

மெல்லிசை மன்னர்கள் இசையில்... கண்ணதாசனது கற்பனையை....
 டிடிஎஸ் ஒலியில் கேட்க பரம சுகமாக இருக்கிறது.

சிவாஜியின் தேவர்மகன்,முதல் மரியாதை,வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற முக்கியமான படங்களை தெளிவாக டிஜிட்டலில் உருமாற்றம் செய்யப்படவேண்டும்.
நூறாண்டுகள் கழித்தும் ரசிகர்களால் அவை கொண்டாடப்படும்.

Mar 15, 2012

காவல் கோட்டம்-காவலும்...காதலும்...[பாகம் இரண்டு]


வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்ட பின் ஊமைத்துரையை பாளையங்கோட்டை சிறையில் அடைத்து வைத்தனர்.
2-2-1801 அன்று இரவு திருச்செந்தூர் முருகனுக்கு காவடி எடுப்பது போல் வந்த பக்தர் கூட்டமும்,ஊமைத்துரை உறவினர்களும் காவலர்களை தாக்கி ஊமைத்துரையை விடுவித்து வல்லநாட்டு மலைக்கு தப்பித்து சென்றுள்ளனர்.
பாஞ்சாலக்குறிச்சியில் காவலில் இருந்த கும்பினிச்சிப்பாய்களை கொன்று ஒரே வாரத்தில் அங்கு ஒரு மண் கோட்டையை எழுப்பி உள்ளார்.
மேலும் ஐந்து பாளையங்களில் வெள்ளையரை அழித்து கோட்டைகள் கட்டியுள்ளார்.
இப்படி பல இடங்களில் ஊமைத்துரை வெற்றிக்கொடி நாட்டிய சாகஸத்தை காவல் கோட்டம் படம் பிடித்து காட்டுகிறது.

தன்னை சரணடைந்த பரங்கிததளபதியின் மனைவி வேண்டுக்கோளை ஏற்று அவர்கள் உடமைகளோடு வெளியேற அனுமதித்த மாண்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஊமைத்துரையை வீழ்த்திய அக்னியூவின் வார்த்தைகள்....
 “காது கேளாத,வாய் பாச முடியாத ஒரு இளைஞனின் சாகஸங்கள் பிரமிப்பூட்டுகின்றன.
அவர் சைகைகளை தேவ கட்டளைகளாக ஏற்று எல்லோரும் கீழ்ப்படிகின்றனர்.
எல்லா தாக்குதல்களிலும் அவர் முன்னால் நிற்கிறார்.
தன்னை விட நூறு மடங்கு எதிரிகளை கண்டு அவர் அஞ்சவில்லை.
அவரது படையின் சக்தியைவிட.... சாதனைகள் பல மடங்கு பெரியவை”

மதுரை நகரத்தை தாதனூர்க்காரர்கள்தான் காவல் காத்து வந்திருக்கிறார்கள்.
அதற்க்காக ஒவ்வொரு வீட்டிலும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் மதுரை நகருக்குள் புதிய கட்டிடம் கட்டியுள்ளான்.
அதற்க்கும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள் தாதனூர்க்காரர்கள்.
அந்த புதிய கட்டிடம் போலிஸ் ஸ்டேசன்.

மதுரைக்கு முதன்முதலாக ரயில் வந்த போது மதுரை மக்களின் கமெண்ட்...
“அதுக்கு வடக்க காவிரி ஆத்துல தண்ணிய பிடிச்சு மூக்கு வழியா நெறையா ஊத்தி விட்றாங்ய...
நம்ம நாட்டு ஒட்டகம் எப்படி தண்ணிய உள்ள வச்சிருக்குமோ அதப்போல இந்த வெள்ளக்கார வண்டி...தண்ணியப்பூரா உள்ள வச்சுகிட்டு கரிய்ய தின்னுகிட்டு எவ்வளவு தூரம் வேணும்னாலும் ஒடும்”

“அப்ப நம்ம நாட்டு ஒட்டகம் மாதிரின்னு சொல்ற...
அது சரி...இது தலையிருக்கிற பக்கம்தான் குசு விடுதாமே... ஏன்?”

தாதனூர் கிழவிகள் பேச்சு அத்தனையும் அடல்ட்ஸ் ஒண்லி.
புதுமாப்பிள்ளைக்கு சொல்லும் அறிவுரை இது...
“ஏலேய்...மொட்டு கெட்ட பயலே...நீ என்ன தீத்தவளையா சரடு கட்டி கூட்டி வந்த?
இது உழுகாத வயக்காடுடா...எடுத்த எடுப்புல அமுக்கி உழுகணும்னு நெனச்சின்னா கலப்பையும் சேதப்பட்டு போகும்...மண்ணும் பெறளாது.
பதம் போயிரும்.
மே ஓட்டா ஓட்டி,அப்புறம் கலப்பய எடுத்து கட்டி,மேழிய அமுக்கி பிடிக்காம... மெல்ல பிடிச்சுகிட்டு.... அது நோக்கத்துக்கு... மாட்ட போக வுடு...
போறப்போ... அதுவா கிழிச்சுகிட்டு போகும்.
ரெண்டு ஓட்டு.. மூணு ஓட்டுல தன்னால புழுதி கிளம்பிரும்...
அத வுட்டுட்டு எடுத்த எடுப்புல...அமுக்கிதான் உழுவேன்னா எதுக்கும் ஆகாம போயிரும்”

“அவ எதுக்கு தீத்துட்டுப்போனா?”
 “அவ புருசன் சேவ மாதிரி ஏறுனதும் எறங்கிர்றானாம்....”
“அட தட்டு கெட்ட சிறுக்கி!ஆழம் பாத்தாதுன்னு அழுதுகிட்டு கிடந்தவ...
 ஒத்த வருசத்துல நீளம் பத்தாதுன்னு தீத்துகிட்டு போயிட்டாளா!”

 “ஓம்புருசன் பெரிய கெட்டிக்காரனாம்லடீ”
“அவங்கிடக்கான் தூமச்சீல...எடங்கண்டுபிடிக்கவே எட்டு நாளாச்சு”

காவல் கோட்டையில் இது போன்ற டயலாக்குகள் வெள்ளமெனெ பரவிக்கிடக்கிறது.
700 ஆண்டு பயணத்தை களைப்பிலாமல் கடக்க உதவும் வயகரா இவைகள்தான்.

Mar 14, 2012

காவல்கோட்டம்-வலிமை...பெருமை...[பாகம் ஒன்று]

ஜனவரியில் வாங்கிய காவல்கோட்டம் இப்போதுதான் படிக்க முடிந்தது.
சரித்திர நாவல் என்றாலே கல்கியும்...சாண்டில்யனும்தான் நமக்கு முன்னோடி தெய்வங்கள்.

சுஜாதா முதன்முறையாக ரத்தம் ஒரே நிறத்தில் புதிய பாதையை காட்டினார்.
சரித்திரமும் புதினமும் அற்ப்புதமாக கலந்து அவர் செய்த ரஸவாத வித்தையால் பிரிட்ஷ் காலத்து சென்னையை தரிசிக்க முடிந்தது.

பிரபஞ்சனது ‘வானம் வசப்படும்’... ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரியை உள்வாங்கி... பிரெஞ்சு காலத்து புதுவையை படம் பிடித்து காட்டியது.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் கிபி1370 க்கு இழுத்துச்செல்கிறது.
கிட்டத்தட்ட 700 ஆண்டு வரலாற்றில் நாம் பயணிக்க முடிகிறது.

காவல் கோட்டத்தின் சிறு பகுதிதான் அரவான்.
காவல் கோட்டத்தின் ஆன்மாவை அரவானில் தரிசிக்க முடியாது.
 பசுபதி காரெக்டர் கிணற்றில் விழுந்து மாட்டிக்கொள்கையில் ஆதி காரெக்டர் கிராபிக்ஸ் மாடுகளுடன் பவனி வந்து.... விஜய் பட ரேஞ்சில்....
 ஆக்‌ஷன் காட்சி தூள் பறக்க தப்பித்து போவார்கள்.

காவல் கோட்டத்தில் சு.வெங்கடேசன் சித்தரிந்ததை காட்டியிருந்தால் யதார்த்தம் வாழ்ந்திருக்கும்.
சின்னான் கோஷ்டியினர்.... பக்கத்து கிராமத்தில் போய்....
 வேகமாக ஒடக்கூடிய மாடுகளை தேர்வு செய்து... திருடி ஒட்டிக்கொண்டு வருவார்கள்.
மாட்டு வாலின் அமைப்பை வைத்து... மாடு ஓடும் திறத்தை கணிப்பதாக.... மாட்டு சாஸ்த்திரத்தை நுழைத்திருப்பார் வெங்கடேசன்.

களவு போன ஊரில்... காவலிருப்பவர்களிடம்...
மாட்டு வியாபாரிகள் என நம்ப வைத்து... இரவில் தங்கிச்செல்ல அனுமதி பெற்று தங்கி...கிணற்றுக்குள் கட்டிலை இறக்கி...காப்பாற்றி விடிவதற்க்குள் தப்பித்து செல்வதாக சித்தரித்திருப்பார்.

காவல் கோட்டத்தில் சின்னானுக்கு ஜோடி இன்னொருத்தன் மனைவி.
இவன் மேல் கொண்ட காதலால்...தாலி கட்டிய தாய் மாமனை அறுத்து ஒதுக்கி விட்டு...அதே தாய்மாமன் தலைமையில்... சின்னானது அரை ஞாண் கொடியை தாலியாக ஏற்று மனைவியாக வாழ்கிறாள்.
இவை படமாக்கப்பட்டிருந்தால் அரவான் டெம்ப்ளேட் காதல் காட்சிகள்...
பாடாவதி பாடல் காட்சிகள்... இம்சையில்லாமல் ஒரு புது அனுபவம்....
ஒரு பரவசம் கிட்டியிருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஒ.ஏ.கே.தேவர் ஊமைத்துரையாக வந்து கர்ஜிப்பார்.
காவல் கோட்டம் இவர் பிறவி ஊமை என்கிறது.
நமது பாடப்புத்தகத்தில் கட்டபொம்மன் வர்லாற்றில்....ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்துச்சென்ற போது வெள்ளையரால் கொல்லப்பட்டார் என்று ஒரு வரிச்செய்தியாக...வரலாறு சொல்லப்படும்.
அவரது வீரதீரச்செயல்கள் பக்கம் பக்கமாக காவல்கோட்டம் சித்தரிக்கிறது.
அவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன்.