Showing posts with label பிரெஞ்ச். Show all posts
Showing posts with label பிரெஞ்ச். Show all posts

Apr 29, 2012

Tomboy-2011[பிரெஞ்ச்]எங்க ஏரியா...உள்ளே வரலாம்.


புதிய தொழில் தொடங்கிய நாள் முதல்.... உலக சினிமாவை பார்க்க முடியவில்லை.
பழைய நினைவுகள்....அனுபவங்களை வைத்து பதிவு போட்டுக்கொண்டிருந்தேன்.
இருந்தாலும் உள்ளுக்குள்.... உறுத்தல் முள்... குத்திக்குடைந்து கொண்டிருந்தது.
இன்று பார்த்த டாம்பாய்....
 அந்த முள்ளின் முனையை மழுங்கச்செய்து விட்டது.

ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் தனது கர்ப்பிணி மனைவியோடும்...
தனது இரு பிள்ளைகளோடும்... புதிய ஊருக்கு குடிவருகிறார்.
மூத்த பிள்ளைக்கு... பக்கத்து பிளாட்டில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.

ஹாய்...என் பெயர் லிசா...உன் பெயர் என்ன?

மைக்கேல்...என் பெயர் மைக்கேல்...
நாங்க இங்க புதுசா குடி வந்திருக்கோம்.

வா...இங்க எல்லோர் கூடவும் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்..

புதிய இடத்தில்...புதிய நண்பர்களோடு...புதிய வாழ்க்கை கிடைக்கிறது...
பத்து வயது மைக்கேலுக்கு.
மற்ற நண்பர்களை விட லிசா ஸ்பெசலாக இருக்கிறாள்.

இருவருக்கும் பப்பி லவ் தொடங்குகிறது.
லிசா கொடுக்கும் முதல் முத்தம்... சொர்க்கத்தை தொட்டு விடும் தூரத்தில் காட்டுகிறது.

சரி...ஒரு பத்து வயது சிறுவனும்...சிறுமியும் காதலிப்பதில் என்ன புதுமை இருக்கிறது?

ஆனால் பத்து வயது மைக்கேல்...சாரா...என்கிற பெண்....
என அறியப்படும் போது படம் விஸ்வரூபம் எடுக்கிறது.

மைக்கேலாக வாழ்கின்ற சாராவின் அகவாழ்க்கை பயணத்தையும்...
புற வாழ்க்கை பயணத்தையும்...படத்தில் அழகாக....கவிதை நயமிக்க காட்சிகளாக்கி விருதுகளை அள்ளியிருக்கிறார் இயக்குனர்... Celine Sciamma.
இயக்குனர் படத்தை பார்த்தால்... சொந்த அனுபவத்தை படமாக்கியுள்ளார் என நினைக்கிறேன்.

தமிழில் பள்ளிப்பருவக்காதலை கலை நயத்துடன் சொன்னபடம்...
பன்னீர் புஷ்பங்கள்.
இப்படத்தை இயக்கியவர்கள் யார் தெரியுமா?
பாரதி-வாசு என்ற இருவர்கள்.
வெகு விரைவில் இருவருமே பிரிந்து...
ஒருவர்...சந்தானபாரதியாகவும்....
மற்றொருவர் பி.வாசுவாகவும்...
மசாலாப்பட இயக்குனர்களாக உருமாறி விட்டனர்.

இப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள்...

ஆனந்தராகம்.... கேட்கும்.... காலம்
கீழ் வானிலே....ஒளிதான் தோன்றுதே...
*************************************************
பூந்தளிர் ஆட...
பொன்மலர் சூட...
**************************************************
இவ்விரண்டு பாடலை கேட்டு ரசிக்காத தமிழர்களை நாடு கடத்தி விடலாம்.


டாம்பாய் பெற்ற விருதுகள்[தகவல் உபயம்:விக்கிப்பீடியா]
Awards
  • Tomboy won the Jury award at the 2011 Teddy Awards, given for the best film with LGBTthemes at the Berlin film festival.
  • Tomboy won the Golden Duke, the main prize of the official competition of the 2011 Odessa International Film Festival.
  • Tomboy won the Audience Award at the 2011 San Francisco Frameline Gay & Lesbian Film Festival.
  • Tomboy won Best feature Film at the 2011 Philadelphia QFest Lesbian and Gay Film Festival.
  • Tomboy won the competition at the 2011 Torino Lesbian and Gay Film Festival.
  • Tomboy was nominated for the GLAAD Media Award as Outstanding Film - Limited Release.
  • Zoé Héran was nominated for the Young Artist Award as Best Leading Young Actress in an International Feature Film. Winners will be announced on May 6, 2012.[3]



Mar 9, 2012

Love like Poison-2010[French]பதினான்கு வயதுக்கேள்விகள்....


காஸாபிளாங்காவிலிருந்து வெளியேற ஒரு கிளுகிளுப்பான படம் தேடினேன்.
லவ் லைக் பாய்ஸன் டிவிடி கவர்... “என்னை உடனே பார்” என அழைப்பு விடுத்தது.
படம் ஏமாற்றவில்லை.படத்திலிருந்து கிடைத்த இளமை மின்சாரம் ஒரு மாதத்துக்கு தாங்கும்.
வயசுக்கு வந்தவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய விதத்தில்
இயக்கியவர் Katell Quillevere

அன்னா பதினான்கு வயது பருவப்புயல்.
அவளது பதின் வயது குழப்பங்கள்...கேள்விகள்....விடைகள்....அதனால் வரும் அதிர்ச்சிகள் இவற்றை மையப்படுத்தியே கதை சுழல்கிறது.

படத்தில் என்னைக்கவர்ந்த காட்சிகள்....
அன்னா தனது பதின் வயது தோழனுடன் பச்சை பசேல் காட்டுக்குள் அவுட்டிங் போகிறாள்.

தோழன் என்னைப்போலவே விவரமானவன்.
டி சர்ட்டை கழட்டி போட்டு விட்டு என்னைப்போலவே நீயும் கழட்டி காட்டு என்கிறான்.
அன்னா மறுக்கிறாள்.
ஆரியக்கூத்தாடி காரியத்தை சாதிப்பதில் குறியாய் இருக்கிறான் பொடியன்.
அன்னா ஒரு கண்டிசன் போட்டு விருப்பத்தை நிறைவேற்றுகிறாள்.
“காட்டுவேன்...தொடக்கூடாது...”
பதினாலு வயசுக்கு சற்று அராஜகமாக....பெரிதாக இருந்தது.
பையன் கேடி பத்மாஷ்...
கையால்தானே தொடக்கூடாது...உதட்டால் அன்னா உதட்டை தொடுகிறான்.
பெரிதாக ஒன்றும் எதிர்ப்பு வராததால் ...தொடுதல்...கவ்வுதலாக மாறிப்போகிறது.

அதற்க்குப்பிறகு...
கட்...
இயக்குனரும்...எடிட்டரும் மேற்க்கொண்டு காட்டாமல் என் சாபத்தை வாங்கிக்கொண்டனர்.

மற்றொரு காட்சி...
அன்னா தனது தாத்தாவிடம் மிகவும் பாசமாக இருக்கிறாள்.
80 வயதுக்கும் மேற்ப்பட்ட தொண்டுக்கிழத்தை நீரில் நனைக்கப்பட்ட துண்டால் உடம்பை துடைத்து விடுகிறாள்.
கிழவன்...எந்திரன் போலும்....
அந்த வயதிலும் எந்திரித்து விடுகிறது.
அதிர்ச்சியில் உறைந்து விடுகிறாள் அன்னா.
விஷக்கிழவன் சொல்கிறான்....”ஐ பீல் ஹேண்ட்ஸம்”
அதிர்ச்சி...ஆக்ரோஷமாகி ஒடிப்போய் விடுகிறாள்.

இன்னொரு காட்சி....

தாத்தா அன்னாவிடன் தான் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்கிறார்.
 “கிராமத்தை பார்க்க வேண்டுமா”
இல்லையென மறுக்கிறார் தாத்தா.
தாத்தாவின் ஆசை நிறைவேறியதா?
அது நியாயம்தானா?
விடையை படத்தில் தேடுங்கள்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஒரு சில விருதுகளையும் பெற்ற இப்படம் மரியாதைக்குறிய படம்தான்.
  

Feb 8, 2012

The Artist-2011[france]மவுனப்புரட்சி


பிரான்ஸ்காரர்கள் எல்லா நல்ல படத்தையும் தாங்களே எடுப்பது என்று குத்தகை எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!!!!!!.
அந்த வகையில் சமீபத்திய வரவு ஆர்டிஸ்ட்.
மவுனப்பட காலங்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரது வாழ்க்கையை 2011ல் கருப்பு வெள்ளையில்...அதுவும் மவுனப்படமாக எடுக்கும் துணிச்சல்...அடடா....
முதலில் தயாரிப்பாளர் Thomas Langmannக்கு என் முதல் மரியாதை.
இரண்டாவது இப்படத்தின் இயக்குனர் Michel Hazanavicius ...உள்ளிட்ட ஒட்டு மொத்த குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...பாராட்டுகள்.

சினிமாவில் மவுனப்படங்கள்தான் கலையின் உச்சம் என கொண்டாடுவார்கள் தீவிர சினிமா ஆர்வலர்கள்.
அதை நூற்றுக்கு நூறு சரி என உணர்ந்தேன்.
பாட்டில் ஷிப் பொட்டம்கின்,இண்டாலரன்ஸ் போன்ற மவுனப்படங்களை இது வரை பார்க்காதது மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்க்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை ?என்பது தெரியவில்லை.
பேசும் படங்களும்...வர்ணப்படங்களும் சினிமாவின் ஆன்மாவை சிதைத்து விட்டதாக தீவிர சினிமா ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவார்கள்.
இந்த குற்றச்சாட்டை உண்மை என ஒவ்வொரு ரசிகரும் ஆர்ட்டிஸ்ட் படம் பார்க்கும்போது உணர முடியும்.

இதுதாண்டா பின்னணி இசை என பின்னி எடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் Ludovic Bource.
பின்னணி இசை ...மோட்டிவேட்டிங் மியுசிக் என்ற தளத்தில் காட்சிக்கு காட்சி பரிணமித்து கொண்டே போகிறது.
உலகின் தலை சிற்ந்த பின்னணி இசையில் முதல் பத்து இடங்களில் தைரியமாக சேர்த்து விடலாம்.அப்பீலே வராது.



இப்படத்தின் நாயக,நாயகியரின் நடிப்புக்கு இணையாக....
நடிகர் திலகத்தையும்,நடிகையர் திலகத்தையும்தான் ஈடு இணையாக சொல்ல முடியும்.
21 இஞ்ச் டிவியில் பார்த்ததிலேயே இருவர் நடிப்பிலும் மயங்கி விட்டேன்... வெள்ளித்திரையில் பார்த்தால்.... அவ்வளவுதான்..... ரசிகர் மன்றமே தொடங்கி விடுவேன்.

இப்படம் பல் வேறு பிரிவுகளில்....
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும்....வெற்றி கிடைக்காது.
ஏனென்றால் இப்படம் மோதுவது Tree Of Life படத்தோடு.
Tree Of Life படத்திற்க்கு பக்க பலமாக உலகின் மிகப்பெரிய மதம் இருக்கிறது.
மதத்தின் முன்னால் எப்பேர்பட்ட கலையும் தோற்றுப்போகும்.
இதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஆஸ்கார் விருது பட்டியல் வெளியான பிறகு நீங்களே உணர்வீர்கள்.

80%நகைச்சுவையும்,20% சோகமும்,0%ஆபாசமும் கலந்து செய்த கவிதையாக இப்படம் இருப்பதால் குடும்பத்தோடு காண வேண்டிய U U U திரைப்படம்.

ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்து....
 தனது ஆஸ்தி,அந்தஸ்து,புகழ் அனைத்தும் கரைந்து....
 வெற்று மனிதனாக மரித்த தியாராஜ பாகவதர் வாழ்க்கையை...
 கருப்பு வெள்ளையில்...மவுனப்படமாகவே எடுக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்ற ஆசை பிறந்தது.
எனது ஆசை பேராசையா?
நிராசையா?

Jan 22, 2012

The Kid With A Bike-2011 [பிரெஞ்ச்] ஒடிப்போன அப்பாவை தேடிப்போன மகன்


File:Le-gamin-au-velo.png

2012ல் மிகச்சிறப்பான படத்துடன் துவங்க வேண்டும் எனது வேட்டைக்கு சரியான தீனியாக இப்படம் கிடைத்து விட்டது.
என் ரத்தத்தில் ஹீமோகுளொபினோடு இப்படம் கலந்து விட்டது.
ஒரு கொண்டாட்ட மன நிலையில் இப்பதிவை எழுதுகிறேன்.
இப்படத்தை எழுதி இயக்கி....
கேன்ஸ் பிலிம் பெஸ்டிவெலில் முதன்முதலாக திரையிட்டு கிராண்ட் பிரிக்ஸ் என்ற உயரிய விருதையும் பெற்று விட்டார்கள் இரட்டை சகோதரர்களான பெல்ஜியம் நாட்டு சகோதரர்கள் Jean Pierre & Luc Dardenne



11 வயது சிரில் என்ற சிறுவனது பார்வையிலேயே படம் நகர்கிறது.
அப்பா பையனை சிறுவர்கள் இல்லத்தில் ஒப்படைத்து விட்டு ஒடிப்போய் விடுகிறான்.
சிரில் தனது தந்தை பற்றிய துப்பு கிடைக்காதா?என ஏங்கி அலைகிறான்.
ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது.
ஆனால் தனது தந்தை விற்றுச்சென்ற சைக்கிள் கிடைக்கிறது.....
சமந்தா என்ற பியூட்டி பார்லர் பெண்மணி மூலமாக...
சிரிலுக்கு அது சைக்கிள் அல்ல...தந்தையின் அன்பின் வடிவம்.

வார கடைசி நாட்களில் சிரிலோடு வசிக்க விரும்புகிறாள் சமந்தா என்ற அன்புக்கரசி.
சமந்தா சிரில் தந்தையின் இருப்பிடம் அறிந்து அவனை அழைத்து செல்கிறாள்.
அவனது தந்தை அவனை ஏற்க மறுக்கிறான்.
தனது பொருளாதார சூழல் காரணமாகத்தான் அவனை சிறுவர் இல்லத்தில் விட்டு வந்ததாக கூறுகிறான்.
ஏமாற்றத்தோடு திரும்பும் சிரில் மீது அன்பை மழையென பொழிகிறாள் சமந்தா.
அதில் நனைய மறுக்கிறான் சிரில்.
அந்த வயதுக்கே உரிய சாகச பண்பின் ஆக்கிரமிப்பில்...
 கயவன் ஒருவன் நட்பில் கரைகிறான்.

கூடா நட்பின் கேடாய் ஒரு திருட்டில் முக்கிய பாத்திரமேற்கிறான்.
பேஸ்பால் மட்டையால் நியூஸ் ஏஜென்டையும் அவரது மகனையும் அடித்து வீழ்த்தி விட்டு திருடிய பணத்தை கயவனிடம் ஒப்பக்கிறான் சிரில்.
சிறிய பங்கை சிரிலுக்கு கொடுத்து விட்டு கம்பி நீட்டி விடுகிறான் கூடாநட்பன்.

திருடிய பணத்தை தந்தையிடம் கொடுக்கிறான்.
தந்தை திட்டி பணத்தை குப்பை போல் வீசி எறிகிறான்.
இந்த இடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த தந்தை கதாபாத்திரம்...
 இமயமலையாக விஸ்வரூபமெடுப்பதை படம் பார்த்தால்தான் உணர முடியும்.

திருடிய பணத்தை அநாதையாக விட்டு விட்டு மனம் திருந்தி சமந்தாவிடம் அன்புக்கரம் நீட்டுகிறான்.
அவள் போலிசிடம் ஒப்படைக்கிறாள்.
பாதிக்கப்பட்டவரிடம் நஷ்ட ஈடு தருவதாக காம்ப்ரமைஸ் பேசி வழக்கிலிருந்து விடுவிக்கிறாள்.
அவரிடம் மன்னிப்பு கேட்கிறான் சிரில்.
அவர் மன்னிக்கிறார்....அவரது மகன் மன்னிக்க தயாரில்லை.

இந்தக்காட்சியில் பிரெஞ்ச் லா சிஸ்டம் என்னை வியக்க வைத்தது.
நமது ஊரில் ‘சிறுவர் சீர்திருத்தப்பள்ளி’ என்ற பெயரில் விளங்கும்...
 குற்றவாளிகளை உற்ப்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தள்ளி....
 ஆட்டோ சங்கராக....வீரமணியாக உருமாற்றி விடுவார்கள்.



சமந்தா தனக்கு மகன் கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாட திட்டம் போடுகிறாள்.
விருந்துக்கு தேவையான பொருளை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி வரும் வழியில்... சிரில் தாக்கிய தந்தையும், மகனும் எதிரில் வருகிறார்கள்.
மகன் கொலை வெறியோடு சிரிலை துரத்துகிறான்.
தப்பிக்க மரத்தில் ஏறுகிறான் சிரில்.
அவனை கல்லால் குறி பார்த்து எறிந்து வீழ்த்துகிறான்.
கீழே விழுந்த சிரில் அசைவற்று கிடக்கிறான்.
சிரில் பிணமாகி விட்டதை உணர்ந்து தனது மகன் வீசி எறிந்த ரத்தக்கறை படிந்த கல்லை வீசி எறிந்து தடயத்தை மறைக்கிறார்.
கொலையை விபத்தாக சித்தரிக்கும் அத்தனை காரியத்தையும் செய்கிறார்.
ஆனால் சிரில் அடைந்தது மரணமல்ல...மயக்கம்.....
மயக்கத்திலிருந்து எழுந்து இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு போவான்...பாருங்கள்...
இந்த இடம்தான் இப்படத்தை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிய இடம்.
இந்த ஒரு காட்சி வைத்து ஆயிரம் அர்த்தங்கள்...தத்துவங்கள் நீங்கள் எழுதலாம்.

படத்தில் பின்னணி இசை மூன்று இடங்களில் பட்டுமே ஒலிக்கிறது.
அந்த இடங்களில் இசை எரிமலையாக வெடித்து கிளம்புவதை அனுபவித்து உணருங்கள்.

இப்படத்தை குடும்பத்தோடு பாருங்கள்.குழந்தைகளோடு பாருங்கள்.

இப்படத்தின் உரிமையை வாங்கி தமிழில் சப் டைட்டில் போட்டு ஒரிஜினல் டிவிடி விற்க ஆசைப்படுகிறேன்.
பிரான்சிலிருக்கும் நண்பர்கள் உதவுங்கள்.
சென்னை புத்தகக்கண்காட்சியில் விற்ற பணம்....  கரைவதற்க்குள் விரைந்து உதவுங்கள்.

மிஸ்டர் மிஷ்கின்....
இப்படத்தையும் காப்பியடித்து நந்தலாலா 2 எடுக்க முயற்சிக்க வேண்டாம்.
தமிழ்நாடெங்கிலும் இது வரை 2000 டிவிடி விற்கப்பட்டுவிட்டது.

Nov 10, 2011

FAT GIRL-[A Ma Soeur ! -french] 2001 உலகசினிமா தரத்தில்.... உடலுறவு காட்சிகள்.

                        எச்சரிக்கை
21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் பார்க்க வேண்டிய XX படம்....
21 வயது மேற்ப்பட்ட வயதினர் மட்டும் படிக்க வேண்டிய XXX பதிவு...

சற்றே பிசகினாலும் மூன்றாம் தர படமாக உருவாகக்கூடிய கதைக்களத்தை மனோதத்துவ ரீதியில் காட்சியமைத்ததில் படத்தை உலகசினிமா தரத்துக்கு உயர்த்தியுள்ளார் ‘பிரான்ஸ் தீபாமேத்தா’ Catherine Breillat.

12 வயது குழந்தை அனயீஸ்.
உருவத்தில் நம்ம ஹன்சிகா சைஸ்.
இவள் மட்டும் எனது கல்லூரி நாட்களில் எதிரில் வந்திருந்தால்... வழக்கமான எனது கேள்வியை கேட்டு கிண்டலடித்திருப்பேன்.

 “நான் பி.ஏ எக்கானமிக்ஸ் படிக்கிறேன்.
பரிட்சையில விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன? ....
என்ற கேள்வி வந்தால்....
உங்க பெயரை எழுதினால் அதிக மார்க் கிடைக்கும்.
உங்க பெயர் என்ன? ”
என கேட்டு நண்பர்களை சிரிக்க வைத்திருக்கிறேன்.
எனது சாகசங்கள் அந்தப்பெண்களை எப்படிக்காயப்படுத்தி இருக்கும் என்பதை இப்படம் எனக்கு உணர்த்தியது.
அவர்கள் இட்ட சாபங்கள்தான்....
அன்று நாகேஷ் போல் இருந்தவன்....
இன்று இன்றைய பிரபு போல் இருக்கிறேன்.


அனயீசின் அக்கா எலினா டீனேஜ் குயின்.
அசின் மாதிரி அழகு தேவதை.
இந்த ஒல்லிப்பிசாசு தனது அழகாலும்...பேச்சாலும்....செயலாலும் அனயீசுக்கு இழைக்கும் கொடுமைகள்...வன்முறைகள் படம் முழுக்க தொடர்ந்து வருகின்றன.

பாய்பிரண்டுகளே இல்லாத தனது உலகத்தில் தனக்கென கற்பனை கதாநாயகர்களை உருவாக்கி கொஞ்சி விளையாடுகிறாள் அனயீஸ்.
காமத்தை கிளர்ந்தெழச்செயவதில்...
 நீச்சல் குளத்துக்கு....
 அலாதி சுகம் எப்போதுமே உண்டு.

அனயீஸ் நீச்சல் குளத்தில்,
இறங்க ....வெளியேற...
 உதவும் எவர்சில்வர் குழாயை கொஞ்சுகிறாள்.

 “எப்பவுமே அவசரப்படுற...
இதுதான்...உங்கிட்ட எனக்கு பிடிக்காத ஓண்ணு....
பொறுமையா...
நிதானமா....”
என தனது பூவிதழ்களால் முத்தமிடுகிறாள்.

ஆசை தீர முத்தமிட்டதும் அப்படியே நீச்சலடித்து மற்றொரு பக்கம் காத்திருக்கும் காதலனை தேடி போகிறாள்.
“ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் செல்லம்...
என்னோட ஸ்வீட் பாய்”
என அழுத்தி ஒரு கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அடிக்க அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மரக்கட்டையாக இருக்கும் அவளது காதலன்......யார்?
டைவிங் போர்டை தாங்கி நிற்கும் மரக்கம்பம்!!!!!


படத்தில் அப்பட்டமான உடலுறவுக்காட்சிகள் XXX தரத்தில் இருக்க...
என்னைக்கவர்ந்தது இந்த உடலுறவுக்காட்சிதான்.
காமத்தை அடக்க முடியாமல்....
அலைகள் விளையாடும் கடற்கரையில்...
 இரு கால்களையும் விரித்து பரப்பி உட்கார்ந்திருக்கிறாள் அனயீஸ்.
 கடலை ஆண்மகனாகவும்...
அலைகளை ஆண்குறியாகவும்...
உருவகப்படுத்தி இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து செய்த கலவிக்கவிதை எந்த உலக சினிமாவிலும் நான் பார்த்திராத ஒவியம்.

படத்தின் கிளைமாக்ஸ் ஏற்ப்படுத்திய அதிர்வு இன்னும் அடங்கவில்லை.
சாலை ஒரக்காட்டுக்குள்...
ஒரு காமக்கொடூரன் அனயீசை கற்ப்பழித்து சிதைத்து விடுகிறான்.
கண்டெடுத்த போலிஸ்...
உயரதிகாரியிடம் கூறுகிறான்...
"She was in the woods...
She says he didn't rape her"
வார்த்தைகள் வர்ணிக்க முடியாத உணர்ச்சி பிழம்புகள்....
முகத்தில் கொப்பளிக்க...
"Don't believe me...
If you don't want to"
என வார்த்தைகளை அமிலத்தில் கரைத்து ஊற்றும்.....
 அனயீசின் குளோசப் முகத்தை....
 ப்ரீஸ்ஸாக்கி...
புதிய மோனாலிசா ஒவியம் படைத்திருக்கிறார் இயக்குனர்.
அவருக்கு திருக்குறளின் காமத்துப்பாலை பரிசளிப்போம்.

இப்படத்தின் டிவிடி கோடம்பாக்கம் கரங்களில் சிக்காமல் போகட்டும் என சாபமிடுகிறேன்.
படம் பெற்ற விருதுகள்:
In 2001 the film won the Manfred Salzgeber Award at the Berlin International Film Festival and the France Culture Award at the Cannes festival.
நன்றி விக்கிப்பீடீயா...

Oct 29, 2011

The Page Turner-பிரெஞ்ச்[2006]பழி வாங்கும் பருவ மங்கை


பூ ஒன்று புயலாகி... ஒரு பியானோ மேதை வாழ்க்கையில்....
 சூறாவளியாக சுழல்வதுதான் இப்படம்.
சைக்கோ திரில்லர் வகையில் வந்த கிளாசிக் படம்.
இப்படத்தை எழுதி இயக்கியவர் Denis Dercourt.

மெலினா என்ற உலகசினிமாவை பார்க்காத உலகசினிமா ரசிகர்கள் இருக்க முடியாது.
அந்தப்படம் பார்த்தவர்கள் மெலினா என்ற அழகு தேவதையாக வந்த மோனிகா பெலுச்சியையும் மறக்க முடியாது.
மயக்கும் மோனிகாவின் கட்டழகுக்கு சற்றும் குறையாத கவர்ச்சியுடன் நம்மை கிறங்க வைக்கிறாள் மெலனி என்ற கதாபாத்திரத்தில் வரும் பருவப்புயல் Deborah Francois..
பிரான்சில் மட்டும் இது போன்ற தேவதைகள் அதிகமாக உற்பத்தியாவதின் ரகசியம் என்ன?

மெலனி தனது கல்வியின் ஒரு பகுதியாக ஒரு சட்ட நிறுவனத்தில் பணியாற்ற வருகிறாள்.
தனது முதலாளியின் வீட்டிற்க்கு உதவிக்கு ஆள் தேவை என்பதறிந்து விண்ணப்பித்து தேர்வாகி விடுகிறாள்.
முதலாளியின் மனைவி ஒரு பியோனா இசை மேதை.
மெலனியின் அழகும்....அர்ப்பணிப்பான சேவையும் எல்லோரையும் வசியப்படுத்துகிறது.
இசை நிகழ்ச்சியில், பியானோ இசைக்குறிப்பு அடங்கிய புத்தகத்தின் பக்கங்களை சரியாக புரட்டி....
வாசிப்பவருக்கு உதவும் பேஜ் டேர்னர் பதவிக்கு உயர்கிறாள்.

இதன் பிறகு மெலனியின் புதிரான நடவடிக்கள் பியானோ மேதையின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.

பியானோ மேதையின் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி மூச்சடக்கி பயிற்ச்சி பெறும் போது அச்சிறுவனது தலையை தண்ணீருக்குள்ளேயே வைத்து அழுத்துகிறாள்.
அவன் உயிர் பிரியப்போகும் தருணத்தில் விட்டு விடுகிறாள்.
ஏன் இந்த கொலை வெறி?

பியானோ மேதையின் இசை நிகழ்ச்சிக்கு பக்கவாத்தியமாக செலோ வாசிக்கும் கலைஞன் மெலனியிடம் வாலாட்டுகிறான்.
கைகளால் மார்பில் விளையாடியவன் கால்களை பஞ்சராக்கி விடுகிறாள் மெலனி.
செலோ என்ற வாத்தியக்கருவியின் அடியில் மிகக்கூர்மையான 8 m.m கம்பி சைசுக்கு ஆணி இருக்கிறது.
அதை வைத்து அவன் காலில் ஒரே.... ஏத்த்த்த்த்த்து.
இனி அவன் பொண்டாட்டி மார்பைக்கூட பிடிக்க மாட்டான்.

மிக முக்கியமான இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மாயமாகி விடுகிறாள் மெலனி.
மெலனி இல்லாமல் நிகழ்ச்சி சொதப்பலாகிறது.
இசை மேதையின் இசை வாழ்க்கையை மட்டுமல்ல...
 குடும்ப வாழ்க்கையையே சீரழித்து விடுகிறாள்.
மெலனியின் வஞ்சத்திற்க்கு காரணம் என்ன?
விடை படத்தில் பாருங்கள்.


இப்படம் என்னை மிகவும் கவர்ந்ததற்க்கு காரணம் பியானோ.
இதில் பிறக்கும் இனிய இசையில் மிக எளிதாக கரைந்து விடுவேன்.
பியானோவை மிகச்சரியாக தமிழ்ப்படங்களில் பயன்படுத்தியவர் நம்ம ராஜாதான்.
அதிலும் ஹேராம் படத்தில் வரும் பியானோ பாடல் மாஸ்டர் பீஸ்.
கமலும், ராணி முகர்ஜியும் கலந்து செய்யும் அந்தக்கலவிக்கவிதை....
தமிழ் சினிமாவின் கஜூரகோ.

பியானோ இசையை பிரதானப்படுத்தி வந்ததில் என்னைக்கவர்ந்த
பிற உலகசினிமாக்கள்
The Pianist
The Piano
 The Shine[இப்படத்திற்க்கு ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன்]

Oct 11, 2011

The Red Balloon-1956[France] 34 நிமிட வசனமில்லா கவிதை

ரெட் பலூன் குழந்தைகளுக்கான படம்.
நம்மை குழந்தைப்பருவத்திற்க்கு ஒரு உல்லாசப்பயணமாக அழைத்து செல்கிறது.
ஒன்றிரண்டு வார்த்தைகளைத்தவிர சுத்தமாக வசனமேயில்லாமல் இக்கவிதையை படைத்த பிதாமகன் Albert Lamorisse.

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தனது மகனையும்,மகளையும் நடிக்க வைத்து.... குடும்பத்தோடு நாம் பார்க்கும்படி ஒரு குதூகல அனுபவத்தை வழங்கிய இயக்குனருக்கு பலூன் பொக்கே பரிசாக வழங்க வேண்டும்.
அதுதான் ஆகச்சிறந்த பரிசு என்பதை படத்தை பார்த்த பிறகு நீங்கள் உணர்வீர்கள்.

குழந்தை முகத்தின் நேரே கிலுகிலுப்பையை ஆட்டினால் சிரிக்கிறது.
நம் முகத்தின் நேரே யாராவது கிலுகிலுப்பையை ஆட்டினால் சிரிப்போமா?
ஆட்டியவன் கையை முறித்து விட்டு வேண்டுமானால் சிரிப்போம்.
கிலுகிலுப்பையை போல ரெட் பலூன் திரைப்படமும் நம்மிடம் இருக்கும் குழந்தைதன்மையை அளக்கும் மீட்டராகச்செயல்படுகிறது.

பள்ளிக்கு செல்லும் சிறுவன்... மின் விளக்கு கம்பத்தில் சிக்கித்தவிக்கும் பெரிய சிவப்பு பலூனை மீட்டெடுக்கிறான்.


பலூனோடு வரும் சிறுவனை பேருந்தில் ஏற்ற மறுக்கிறார் நடத்துனர்.
பலூனைப்பிடித்தபடி ஒடியே பள்ளிக்கு செல்கிறான்.

பள்ளிப்பணியாளரிடம் ஒப்படைத்து விட்டு வகுப்பு முடிந்ததும் பெற்றுக்கொண்டு வீட்டிற்க்கு வருகிறான்.

அம்மா பலூனை தூற எறிந்து விட்டு பையனை மட்டும் வீட்டிற்க்குள் அழைத்து செல்கிறாள்.
பலூன் நைசாக வந்து சிறுவன் அறை ஜன்னலை தட்டுகிறது.


இந்தக்காட்சியிலிருந்து சிறுவனுக்கும் பலூனுக்குமான பாண்டசி உலகம் தொடங்குகிறது.
நம் மனதை கொள்ளையடிக்கும் காட்சிகள் வரிசையாக வந்து திணற வைக்கிறது.
ஹாரி பாட்டர் படமெல்லாம் இப்படத்தின் கால் தூசுக்கு பெறாது.




ரெட் பலூன் திரைப்படம் அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் நர்சரி பள்ளிகளில் கட்டாய படமாக காட்டப்பட்டு வருகிறது.
இப்படம் குழந்தைகளுக்காக....குழந்தைகளால்....குழந்தை மனம் படைத்த இயக்குனரால் படைக்கப்பட்ட திருக்குறள்.
ரெட்பலூன் பெற்ற விருதுகள்....

Wins
Other wins
  • Best Film of the Decade Educational Film Award.[19]
நன்றி விக்கிப்பீடீயா.

Mar 19, 2011

Mouchette-1967 கன்னித்தாய்

முஸே திரையில் வடிக்கப்பட்ட சிற்பம்.சிற்பி ராபர்ட் பிரஸ்ஸான்.திரை உலகின் சிறந்த பத்து மேதைகளுள் ஒருவராக கொண்டாடப்படுபவர்.ரஷ்யமேதை தார்க்காவ்ஸ்கி தனக்கு மிகவும் பிடித்த பத்து படங்களில் ஒன்றாக இப்படத்தை சிறப்பிக்கிறார்.இப்படத்தின் டிரெய்லரை உருவாக்கியவர் கோடார்டு என்ற திரைமேதை.

கோணங்கள் பிலிம் சொசைட்டியில் இப்படத்தை திரையிட்டபோது திகைத்துவிட்டேன்.ஒரு அட்சரம் புரியவில்லை.இப்படத்தை புரியாத தற்குறியாக இருக்கிறோமே என்று வெட்கப்பட்டேன்.ஆனாலும் இப்படம் என் உள்ளத்தை உலுக்கியது.
படம் பார்க்கும் ரசிகனிடம் ஆயிரம் கேள்விகள் எழுப்பியுள்ளார் பிரஸ்ஸான்.அது மட்டும் புரிந்தது.கேள்விகளுக்கு விடை தெரிய படத்தை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்.படத்தை இரண்டாம் முறை டிவிடியில் பார்த்தேன்.லேசா படம் புரிந்த மாதிரி இருந்தது.டிவிடியில் பிரஸ்ஸான் பேட்டி இரண்டு இருந்தது. “என்னடா புரிந்து விட்டது உனக்கு...போடா ஞானசூன்யம்....”என்று காறி துப்பிவிட்டார் பேட்டியில்.


திரைக்கதை அமைப்பதில் சூரன் பிரஸ்ஸான்.சிறுவயதில் நாம் படித்த கதை இது.முருகன் ஆடு மேய்க்கும் சிறுவன் வேடத்தில் நாவல் மரத்தில் இருக்க....பசியுடன் வந்த அவ்வை பாட்டி நாவல் பழத்தை பறித்து போடும்படி கேட்கிறாள்.முருகன், “சுட்டபழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?”என கேட்கிறான்.
பிரஸ்ஸான் இக்கதையை படமாக்கினால்.....
இதற்க்கப்புறம் படமாக்கமாட்டார்.ரசிகர்களாகிய நம்மை மீதி திரைக்கதையை எழுத வைப்பார்.முருகன் பழம் பறித்து போட்டதையும் மண்ணில் விழுந்த பழத்தை அவ்வை ஊதித்தின்பதையும் முருகன் “பழம் சுடுகிறதா?”எனக்கேட்டு அவ்வையின் கர்வத்தை அடக்கியதை நம்மை உணர்ந்து புரிந்து கொள்ள வைப்பது பிரஸ்ஸான் ஸ்டைல்.
முஸே என்ற பதின்வயதுப்பெண்ணை கொலை செய்கிறது சமூகம்.இதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை.
முஸேயின் முகத்தில் எப்போதும் நிரந்தர சோகம் இருக்கும்.சமூகம் ஏற்ப்படுத்திய இறுக்கம் இருக்கும்.ஆனாலும்..... அவ்வப்போது அவளது குழந்தைத்தன்மை எட்டிப்பார்க்கும்போது மட்டும் கோடி சூரியனாய் பிரகாசிக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரே ஒரு காட்சி.....
நாமெல்லாம் ஒதுங்கி கடந்து போகும் சாலை நடுவில் இருக்கும் மழை தேங்கிய நிலத்தில் ஜங்கென்று குதிப்பாள்.தெறிக்கும் சேற்றை சந்தனமாய் நினைத்து மகிழ்வாள்.

பள்ளியில் டீச்சர் காயப்படுதுகிறாள். “ஏய் முஸே” எனக்கூப்பிட்டு அவள் திரும்பி பார்க்கும்போது தங்கள் ஆண் குறியை காட்டி கேவலப்படுத்துகிறார்கள் சமவயது சிறுவன்கள்.பாரில் பார்ட் டைமாக வேலை செய்து சம்பாதித்த காசை பிடிங்கி குடித்து கும்மாளம் போடுகிறார்கள் தகப்பனும் சகோதரனும்.அடைக்கலம் தந்து காத்தவனே கற்பழிக்கிறான்.

அவளது ஒரே ஆதரவு மரணத்திற்க்காக காத்திருக்கும் நோயுற்ற தாயும் அவளது பச்சிளம் பாலகனும்.


தாய் மரணமடைய.... முக்காலமும் இல்லாமல் தவிக்கிறாள்.ஒரு குளத்தில் உருண்டு உருண்டு போய் விழுந்து உயிரை மாய்க்கிறாள் முஸே.

ஒடிப்போய் பொத்தென்று விழுந்து தற்க்கொலை செய்திருக்கலாம்...உருண்டு உருண்டு போய் உயிரை விட்டது ஏன்?

படம் பார்த்து விளக்குங்களேன் ப்ளீஸ்....