நண்பர்களே...இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்.
அவர் ஆட்சிக்காலத்தில் போட்ட நலத்திட்டங்கள்தான்
தமிழ்நாட்டை இன்றும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
அவருக்கு பின்னால் வந்த அனைவருமே ஹிட்லர் வாரிசுகள்.
ஹிட்லர் யூதர்களை அழித்தான்.
இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை அழித்து வருகிறார்கள்.
இதில் ஒருவர், ஹிட்லருக்கே கற்றுக்கொடுக்கும் கலைஞராக வளர்ந்து விட்டார்.
மதுவை ஊற்றிக்கொடுத்து தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே ஊற்றி மூடி விட்டார்கள்.
கல்வியை வியாபாரமாக்கி ஏழைகள் கண் முழியை பிதுக்கி விட்டார்கள்.
குடிநீர்,மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் நாட்டையே முடமாக்கினார்கள்.
இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து,
இலஞ்சத்தை ‘நாட்டுடமை’ ஆக்கி விட்டார்கள்.
வாருங்கள்...
நாற்றமெடுத்த தமிழக அரசியலை விட்டு விட்டு...
‘ஆமெனுக்குள்’ செல்வோம்.
AMEN \ 2002 \ German, Romanian, French \ Directed by : Costa - Gavras \ Part - 4
'உலக நாடுகள் சங்கத்தில்',
‘யூத முத்துக்குமார்’ தற்கொலை செய்ததை பார்த்தோம்.
அதிர்ச்சியில் உறைய வைத்த அக்காட்சி,
‘ஆடம்பர பிரச்சார ஊர்வலத்தில்’ கரைந்து விடுகிறது.
‘பப்பரப்பாங்’ என பிரமாண்ட பேண்ட் வாத்தியங்கள் முழங்க,
அதற்கு பிரம்மாண்ட நாஜிக்கொடிகள் தலையசைத்து ஆட,
சிறுவர்களும் சின்னஞ்சிறு கொடியை தூக்கி ஊர்வலத்தை எதிர் கொண்டு, ஆடிக்கொண்டு... கும்மாளமிட்டு ஓட,
மக்களை மதி மயக்கும் உற்சாக காட்சியாக உருவெடுக்கிறது.
_________________________________________________________________________________
நாஜிக்கொள்கைகளை அப்படியே பின்பற்றினார்கள் நம் அரசியல் வியாதிகள்.
இது போன்ற ‘ஊர்வலம்’ கான்செப்டை,
‘கருந்தேள் பாணியில்’ சொல்வதென்றால்,
ஊர்வலத்தை ‘காப்பியடித்து’...
‘பிரம்மாண்ட பேரணி’ என்ற படத்தை உருவாக்கினார்கள் திராவிடக்கட்சிகள்.
அட..கொடியைக்கூட ‘நாஜிக்கொடியில்’ இருந்துதான் உருவாக்கினார்கள் போலும்.
_________________________________________________________________________________
ஊர்வலத்தை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்
‘மன வளர்ச்சியில்லாத’ சிறுவர்கள்,சிறுமிகள்.
அவர்களை அங்கிருந்து அகற்றி,
வரிசையாக நிற்க வைக்கிறார்கள் ‘கன்னியாஸ்த்ரீகள்’.
அங்கே ‘சிரித்த முகத்துடன்’ கருணை வழிய ஒரு டாக்டர் அனைவரையும்
தேர்வு செய்கிறார்.
எதற்கு?
இந்த டாக்டர் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவரை வைத்துதான் கிளைமாக்சை அமைத்திருக்கிறார்
இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.
‘அதாண்டா...இதாண்டா...அருணாச்சலம் நாந்தாண்டா...’
என ஆர்ப்பாட்ட அதிரடிகள் இல்லாமல்,
வெகு சாதாரணமாக ஒரு டெய்லர் முகாமில் அறிமுகம் செய்யப்படுகிறார் படத்தின் ஹீரோ ‘கர்ஷைன்’.
தனது அளவுக்கேற்ப தைக்கப்பட்ட ஆடையை போட்டு ‘டிரையல்’ பார்க்கிறார் கர்ஷைன்.
‘ஹிட்லர் பாணி’ ராணுவ சல்யூட் வைக்க சொல்கிறான் டெய்லர்.
ஒப்புக்கு சப்பாணியாக ‘அரைகுறை’ சல்யூட் வைக்கிறார் கர்ஷைன்.
அந்த சல்யூட்டில் திருப்தியில்லாத டெய்லர்,
அதே சல்யூட்டை பவர்புல்லாக செய்து காட்டுகிறான்.
அவனை பின்பற்றி ‘சல்யூட்’ செய்கிறார்.
‘அக்குள்’ பகுதியில் ‘கிழிந்து விடுகிறது’.
ஒரே காட்சியில்...
# 1 . ‘ஹிட்லர் பாணியை பின்பற்ற விருப்பமில்லாத ஜெர்மானியன்.
# 2. ஹிட்லர் பாணியை வேத வாக்காக கடைப்பிடிக்கும் ஜெர்மானியன்.
# 3.ஹிட்லர் பாணியை கடைப்பிடித்தால் ‘கிழிந்து விடும்’.
என ‘சட்டையர்’ செய்த காஸ்டா கவ்ராஸை,
‘இயக்குனர் இமயம்’ என கொண்டாடியது சரிதானே!
‘கர்ஷைன்’ ஒரு நிஜ ஹீரோ.
இவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்,
‘ஆமென்’ திரைப்படத்தை முழுமையாக உள்வாங்க உதவும்.
ஜெயமோகன் பாணியில்,
ஆமென் திரைப்படத்தின் ‘உள்ளொளியை’ தரிசிப்பீர்கள்.
எனவே கர்ஷனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...
மனநலம் வளர்ச்சியில்லாத குழந்தைகள் கதியை பார்க்க,
‘கல் நெஞ்சத்தோடு’ வாருங்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.




































