
ஊசியிலைக்காடு கேள்விப்பட்டு இருப்பீர்கள்.மரணக்காடு???????????
Katyn என்ற இடத்தில் 22,000 பேர்களை விதைத்து ராணுவத்தினர் உருவாக்கியது.
ஒரு பெண்ணை ஏககாலத்தில் இரண்டு பேர் கற்பழித்தால்......இதே நிலைதான் இரண்டாம் உலகப்போரில் போலந்து பெற்றது.ஒருபுறம் ஜெர்மனி..மறுபுறம் சோவியத் ரஸ்யா.
இருநாடுகளுக்கிடையே சிக்கி சீரழிந்ததை படம் பிடித்து காட்டியிருக்கிறார் அந்திரே வாஜ்டா.

1940ல் அன்னா காத்திருக்கிறாள் சோவியத் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....

அன்னாவின் மாமியாரும் காத்திருக்கிறார் ஜெர்மன் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட கணவனுக்காக.....
காத்திருத்தல்தான் உண்மையான மரணதண்டனை என்கிறார் அ.முத்துலிங்கம் 'அங்கே இப்ப என்ன நேரம்?' நூலில்...[தமிழினி வெளியிடு]

உண்மையை.... அன்னாவின் கணவனது ரத்ததில் குளித்த டைரி..... படம் பிடித்து காட்டுகிறது.
இப்படுகொலையின் அலறலை....சிதிலத்தை.....ஆவணப்படித்தியிருக்கிறது Pawel Edelman ஒளிப்பதிவு....பக்கபலமாக Krzysztof Pendereeki பின்னணி இசை.இறந்தவர்களின் இறுதிக்கதறல் இசையில் கலந்திருப்பதை இதயம் உள்ளவர்கள் மட்டுமே உணரமுடியும்.அந்த கதறலில் இயக்குனர் வாஜ்டாவின் தந்தையின் குரலும் கலந்து இருப்பதை நாம் தெரிந்து கொண்டால் சோகம் நேரடியாக....அதிரடியாக.... தாக்கும்.இதனால்தான் இவரது பெரும்பான்மை படங்களில் போரின் பேரழிவே மையக்கருவாக இருக்கும்.படத்தினூடே வரும் குட்டிக்காதல் சிறுகதை அவலச்சுவையை அகப்படுத்துகிறது.
இப்படத்தை பார்த்துவிட்டு இடும் சிறப்பான பின்னூட்டத்திற்க்கு வாஜ்டாவின் டிரையாலஜி படங்களான
A Generation
Kanal
Ashes and Diamonds
டிவிடி பரிசாக குரியரில் அனுப்பி வைக்கிறேன்.
படம் பார்க்காதவர்களுக்கு கலைமாமணி ஜெயசித்ரா இயக்கத்தில் உருவான உலக்கசினிமா “நானே என்னுள் இல்லை”படத்தின் டிக்கெட் சிறப்பு பரிசாக வழங்கப்படும்.