Sep 29, 2010

The chorus-டீச்சருக்கு மரியாதை


கோரஸ் ஜாலியான 10000வாலா.....

நான் மிகவும் ரசித்த ப்ரெஞ்ச் படம்..இயக்கம் Christophe Barrtier.

இந்தப்படம் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்களை வீழ்த்தி விடும்.....ஆட்டோகிராப் மாதிரி....

நீங்கள் படித்த பள்ளிக்கு கூட்டிச்செல்லும்..உங்கள் ஆசிரியரை ஞாபகப்படுத்தும்..

இப்படத்தின் வசியத்தன்மைக்கு...வெற்றிக்கு இதுதான் காரணம்...

நான் கல்விஅமைச்சரானால் இப்படத்தை எல்லா டீச்சர்களையும் பார்க்க ஆணையிடுவேன்..

குட் டீச்சர்..பேட் டீச்சர் இரண்டுக்குமே உதாரணம் இப்படத்தில் இருக்கிறது.

கிட்டதட்ட சிறுவர் ஜெயில் மாதிரி ஒரு ஸ்கூல்.அதற்க்கு நல்லாசிரியராக வருகிறார் நம்ம கதாநாயகன்.இம்மென்றால் அடி...ஏனென்றால் உதை கொடுக்கும் தலைமை ஆசிரியர்தான் வில்லன்...அத்தனை அராத்து மாணவர்களையும் இசையால் வசமாக்குகிறார் நம் நாயகன்..தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி மட்டும் பரிசாகப்பெறும் நாயகன் ஒரு மாணவனுக்கு வெற்றி விருந்தளிக்கிறார்...

இப்படம் என் ஆசிரியரை ஞாபகப்படுத்தி உணர்ச்சிப்பெருக்கில் தத்தளிக்க வைத்தது.என் வகுப்பில் என்னோடு ஆறு பேர் ஆங்கிலத்தில் புலமை படைத்தவர்கள்..35 மார்க் எடுத்தால்தான் பாஸென்ற கொடுமையான சட்டம் நிலவி வந்த அந்தக்கால SSLC நான்..15 நாள் எங்களை அவரது வீட்டில் சிறை வைத்து சாப்பாடும் போட்டு பாடம் எடுத்து பாஸாக்கினார் கடமை கண்ணியம் மிக்க எனது ஆசான் திரு.ராஜ்குமார்.

வருடாவருடம் மீசை,கிருதா கெட்டப் சேஞ்ச் செய்வார் கமல் மாதிரி..

அப்பாடா...கமலை கொண்டு வந்துவிட்டேன்..கமலைப்பற்றி பேசுவது... நினைப்பது... சுகம்..

சென்னையில் நானும் விக்ரம் தர்மாவும் பக்கத்துவீடு..மருதநாயகம் பற்றி பேசும் போது சொன்னார் இந்தச்செய்தி.....மலை உச்சியில் இருந்து குதித்து தண்ணீருக்குள் மறைந்து போவதாகக்காட்சி..லொக்கேசன் ஒகனேக்கல்..வெள்ளம் பெருக்கெடுத்துக்கொட்டும் அருவி...ஒயர் கட்டி டம்மி வைத்து ஒத்திகை பார்த்தால்..... ஒரே ஒரு இடத்தில்.....மட்டும்...... சரியாக குதித்தால்..... மேலே இருந்து விழுகின்ற வேகத்தை..... உள் வாங்குகின்ற ஆழம் இருந்தது .மற்ற இடத்தில் விழுந்தால் தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் பாறையில் மோதி மரணம் நிச்சயம்.டூப்பும் ரெடி..12 காமிராவும் ரெடி..டேக்கிற்க்கு ரெடியாகும் போது.... கமல், நான் ரெடி ...டூப் வேண்டாம்..... என்றார்..மொத்த யூனிட்டும் நடுங்கிவிட்டது...யார் சொல்லியும் கேட்காமல் குதித்தேவிட்டார்..அது மட்டுமல்ல...விழும் வேகத்தில் சற்று ஸ்விங் செய்து ஒரு பாறையில் காலை ஊன்றி மிதித்து....கரணம் போட்டு... சரியாக பள்ளத்தில் குதித்தார்..இன்றும் நம்மிடையே இருக்கிறார்..ஜாக்கிச்சான் கூட இந்த ஸ்டண்ட் செய்தது இல்லை..அனைத்து ஹாலிவுட் படத்துக்கும் இந்த ஒரு காட்சியில் சவால் விட்டிருந்தார்..எடிட் செய்து பார்த்தால் அத்தனை அழகு அந்தக்காட்சி.இந்தப்படம் வெளிவரவில்லையே என்று கலங்கினார் விக்ரம் தர்மா..

1991ம்வருடம்..... ஒரு ஹிந்திப்பட சூட்டிங்...விஜிபி கோல்டன் பீச்சில்..நான் எட்டி பார்த்தேன்.ஒரு ஜீப் பானட்டில் இருந்து குதிக்கும் காட்சி..குதித்தவர் டூப்..நடித்தவர் ரஜினிகாந்த்.

Sep 22, 2010

The divingbell and the butterfly-தன்னம்பிக்கையின் உச்சம்


பட்டர்ப்ளை என்ற பெயர் வந்தாலே பிரெஞ்ச் இயக்குனர்கள் கலக்கி விடுவார்கள் போல.....இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் Julian Schnabel க்கு முதலில் ஒரு பிரஞ்ச் கிஸ்.

விடாமுயற்ச்சியுடன்...தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் உண்மைக்கதை.

42 வயதான Baubyக்கு தீடீரென்று ஸ்ட்ரோக் வந்து எல்லாமே செயல் இழந்து விடுகிறது....ஒன்றை தவிர....இடது கண் இமை மட்டும் துடிக்கிறது.இந்த நிலையில் தன்னுடைய சுயசரிதை எழுதி அதுதான் இந்தப்படம்..எப்படி எழுதினார்?????ஒரு நிமிசம் டைம் தருகிறேன்.கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கலைஞரிடம் சொல்லி கலைமாமணி வாங்கி தருகிறேன்..மனிதமுயற்ச்சியின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இக்கதாநாயகன்..

மருத்துவ உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாகசொல்லிக்கொண்டு வரும்போது தேவையான எழுத்தில் இடது கண்ணை பிளிங்க் செய்வார்...இப்படி எழுத்துக்களை கோர்த்து வார்த்தைகளை உருவாக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்ச்சி விவரிப்பதற்க்கே எனக்கு தலை சுற்றுகிறது.

அடிப்படையில் இந்த இயக்குனர் ஒரு ஒவியர்..எனவே படத்தையும் ஒவியமாக வரைந்து தள்ளிவிட்டார்..இக்கதாநாயகனின் நிலை வைத்து நம்மை பிழிய பிழிய அழ வைத்து இருக்கலாம்..மாறாக கதாநாயகனுக்கு வரும் காதல்,காமம்,கோபம்,பாசம்,வெறுப்பு என்று அனைத்தையும் நம் மீதேபடரவிட்டது இயக்குனரின் வெற்றி..

படத்தின் ஆரம்பக்காட்ச்சிகளில் காமிராதான் கதாநாயகன்..இக்காட்ச்சிகளின் நேர்த்திக்கு ஒளிப்பவாளருக்கு அனுஸ்க்காவை வைத்து ஒரு உம்மா...

இந்தப்படத்தை தேர்வுசெய்து எழுத காரணம் இருக்கிறது.மதுரையில் இருந்து வந்து படுத்து விட்டேன்.பத்து நாள் பேதி.. எல்லாபார்ட்சும் தகறாறு பண்ணுகிறது.மனைவி டிவி,இண்டர்னெட்,ரீடிங் எல்லாவற்றுக்கும் தடை போட்டுவிட்டாள்..காஸ்ட் அவே பட டாம்ஹேங்க்ஸ் போல ஆகிவிட்டேன்..இன்னும் உபாதைகள் தீரவில்லை.கொஞ்சம் தெம்பு வந்ததும் முதல் முயற்ச்சியாக இப்படத்தை எழுதிவிட்டேன்...சற்று சிரமப்பட்டு...

ஆனால் எந்திரனுக்கு வரும் அதீத விளம்பரங்கள்,செய்திகள்,பில்டப்புகள் தரும் மரண அவஸ்தைக்கு மற்றதெல்லாம் ஜுஜுபி......
இந்தப்பதிவை என் இனிய மருத்துவர் டாக்டர் மனோகரனுக்கு காணிக்கையாக்குகிறேன்

Sep 15, 2010

மதுரை புத்தக்திருவிழா&கமல்

சிறுஇடைவெளிக்கு காரணம் மதுரை புத்தகதிருவிழா.
உலகசினிமாவுக்காக முதன்முறையாக எனக்கு ஸ்டால் தந்தார்கள்.
சற்று அலட்ச்சியமாகத்தான் சென்றேன்...
சால்ட் 30டிவிடி : பதேர்பஞ்சலி 5டிவிடி என்ற விகிதத்தில்.
மதுரை மக்கள் ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்கள்.
விற்றது சால்ட் 10 பதேர்பஞ்சலி 50.

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி ஒரு விவசாயி வந்தார்.
எங்கே புனுவல்?எங்கே தியோஎஞ்சலோபோலிச்?என்று என்னை மிரட்டிவிட்டார்.
என் ஸ்டாலுக்கு எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஸ்ணன்,ஜெயமோகன்,கலாப்ரியா,முத்துகிருஸ்ணன் ஆகியோர்வந்து வாங்கினார்கள்.
உலகசினிமா விற்பனை அபாரம்.
நன்றி மதுரை.....


இடைப்பட்டநாளில் கமல் பற்றி ஒரு உலகமகா யுத்தமே நடந்திருக்கிறது.
காட்பாதர்தான் தேவர்மகன்.
ஆனால் தரத்தில் காட்பாதருக்கு இணையானது.

அன்பேசிவத்தில் ஒரிஜினலை மிஞ்சியிருந்தார்.
ஒரிஜினலுக்கு ஏன் கிரிடிட் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு...
என் பதில் காப்பிரைட்தான் காரணம்.
ராயல்டி கொடுத்து மாளாது.
தமிழ்நாட்டையே எழுதிகேட்பார்கள் ஹாலிவுட் வியாபாரிகள்.

நூறாவது படமாக ராஜபார்வை எடுத்து ஹாமாம் வாங்க காசில்லாமல் தவித்தது சத்தியம்.
அவர் மட்டும் நடிக்காமல் இயக்கினால் அந்தப்படம் தமிழ்நாட்டுக்கு ஆஸ்கார்,கேன்ஸ் என்றுஅள்ளிக்கொண்டு வந்துவிடும்.

நடிப்புக்கு அவரது மெனக்கெடல் உலகில் எந்த நடிகனிடமும் கிடையாது.
உதாரணம் அபூர்வசகோதரர்கள்.
காலைமடக்கி இரும்புக்கம்பியால் கட்டி குள்ள அப்புவாக்கி நடித்து முடிந்தவுடன் சேரில் தூக்கி வைப்பார்கள்.
சூட்டிங் முடிந்து அனைவரும் சென்றுவிடுவார்கள்.
கமல் மட்டும் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார் ரத்தஓட்டம் சீராவதற்க்கு.
கமலது அவஸ்தை காணச்சகியாமல் ஆச்சிமனோரமா கதறியேவிட்டார்.

நான் கமலின் திரைஉலகவாழ்வை சகலகலாவல்லவர் என்ற பெயரில் ராஜ் டிவியில் 52 வாரம் தொடராக தயாரித்து வெளியிட்டேன்.
என் வாழ்க்கையின் வசந்த காலம் அது.