Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Oct 9, 2013

இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ‘நினைத்தாலே இனிக்கும்’!.



நண்பர்களே...
நேற்று பதிவுலக நண்பர் ‘மின்னல் வரிகள்’ பால கணேஷ்  எச்சரிக்கையை புறக்கணித்து...
நானும் நண்பர் ‘கோவை நேரம்’ ஜீவாவும்  ‘நினைத்தாலே இனிக்கும்’
படத்தை பார்த்து விடத்துணிந்தோம்.
கோவை ராயல் தியேட்டரின்,  ‘சோமலியா பிரஜை’ போன்ற தோற்றம் அச்சமூட்டியது.
பால்கனி டிக்கெட் கட்டணமான  ‘30 ரூபாய்’ ஆச்சரியமூட்டியது.

பாதிக்கு மேல் இருக்கைகள் உடைந்து கிடந்தது.
மூட்டை பூச்சியும், கொசுவும் இணைந்து இடையறாமல் தாக்கிக்கொண்டு இருந்தது.
ஒரு வித ‘முடை நாற்றம்’ நாசியை பதம் பார்த்தது.
இவைகள் அனைத்தும் தங்கள் பணியைச்செய்ததை நான் உணர்ந்தது...
‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற டைட்டில் போடும் வரைதான்.
அதற்குப்பிறகு என்னைச்சுற்றி இருந்தது
‘இயக்குனர் கே.பாலச்சந்தரின் பரிவாரங்கள்தான்’.


எம்.எஸ்.வி, தன் நண்பரோடு இணைந்து...
என் காதுகளை நிரப்பிக்கொண்டு இருந்தார்.
இயக்குனர் கே.பாலச்சந்தர், மனம், மணம் எல்லாவற்றிலும் நிரம்பி ததும்பிக்கொண்டு இருந்தார்.




இப்படம் வெளியான தருணம் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.
இப்படத்தை கிட்டத்தட்ட பத்து தடவைக்கு மேலே நண்பர்களுடன் சென்று பார்த்து இருக்கிறேன்.
இப்படத்திலுள்ள ஒரு காட்சியை,  அப்போது புரியாமல் நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன்.
இன்று பார்க்கும் போது ‘எப்பேற்பட்ட குறியீடை’ துணிந்து அந்த காலத்தில் ரசிகப்பெருமக்களை நம்பி இயக்குனர் கே.பி. வைத்துள்ளார் என வியக்காமல் இருக்க முடியவில்லை.


ஜெயப்ரதா தனக்கு ரத்த புற்று நோயால் மரணம் நெருங்கி விட்டதை அறிந்து கமலிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறார்...
சாகும் வரை கமலின் இசைக்குழுவோடு இனைந்து பாடிக்கொண்டு இருக்க வேண்டும் என.
 ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு...
இதுல உனக்கு கவலை எதுக்கு...
லவ்லி பேர்ட்ஸ்...’ என்ற கவிஞரின் வார்த்தைகளில்...
எம்.எஸ்.வியின் துள்ளல் இசை பிறக்கிறது.
வெவ்வேறு ஊர்களில் நிகழ்ச்சி நடைபெறுவதை பாடலின் இடையே வரும் பின்னணி இசையில் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர்.
பாடலின் நடுவில் ஜெயப்ரதா வலி தாங்க முடியாமல் திணறுவதை காட்சிப்படுத்துவார்.
அடுத்த ஷாட்டில் வெண் திரையில் ‘பிலிம்’ எரிந்து கருகி சுருள்வதை காட்சிப்படுத்துவார்.
அடுத்த ஷாட்டில் ‘ஜெயப்ரதா’ தவிர மீதி அனைவரும் கருப்பு ஆடை அணிந்து மேடையில் நின்று கொண்டு இருப்பார்கள்.
சில நொடிகள் ‘கனத்த மவுனம்’ இருக்கும்.
கருப்பு வண்னம் பிரதானப்படுத்தப்பட்ட மேடை அலங்காரத்தில்,
‘பாடலின் எஞ்சிய பகுதி’...
 மென் சோகம்+ துள்ளிசை கலந்த கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஒரு மரணத்தை எவ்வளவு கவித்துவமாக கே.பி. காட்சிப்படுத்தி உள்ளார்!

‘பிலிம் எரியும்’ குறியீட்டுக்கு வருகிறேன்.
அப்போது ‘பிலிம் எரியும்’ காட்சி வந்ததும் தியேட்டரே ‘ஓவென’ அலறி ஆப்பரேட்டரை திட்ட ஆரம்பிப்பார்கள். ஆனால் படம் தொடர்ந்து நடைபெறுவதைக்கண்ட பிறகு அமைதி காப்பார்கள்.
காரணம் அந்த காலத்தில் ‘கார்பன் சூட்டில்’ பிலிம் எரிந்து படம் தடை பட்டு நின்று விடும்.
இதை...ஜெயப்ரதாவின் மரணத்துக்கு குறியீடாக பயன்படுத்திய பாலச்சந்தரின் மகிமை அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இன்றும் சிலருக்கு தெரிவதில்லை.

இக்குறியீடை அன்று எனது நண்பர்களுக்கு நான் இப்படித்தான் விளக்கினேன்.
“ மாப்ளே...ஜெயப்ப்ரதா சாவுறது...
சுடுகாட்டுல வச்சு எரிக்கிறது...
இதை எல்லாத்தையும் விலாவரியா காட்டாம...பாலச்சந்தர் சிக்கனமா ஒரே ஒரு பிலிம் துண்டை எரிய வச்சு நமக்குக்காட்டிட்டாரு!”


இந்த பிலிம் துண்டு எரியும் காட்சி இயக்குனர் இங்மர் பெர்க்மன் இயக்கிய ‘பர்சோனா’ படத்தில் வரும்.
அவர் வேறு அர்த்தம் வருகின்ற வகையில் இக்காட்சியை அமைத்து இருப்பார்.
ஆனாம் நம்ம கே.பி. மிக அற்புதமாக இக்குறியீட்டை கையாண்டுள்ளார்.
பெர்க்மனை விட ‘பவர்புல்லாக’ கையாண்டு உள்ளார் கே.பி.
இது உண்மை.
நான் மிகைப்படுத்தவில்லை.

Persona | 1966 | Swedish | Directed by : Ingmar Bergman.




இப்போது இந்தப்படம் பார்க்கும் போது எத்தனை அழகாக
‘இயற்கையான நடிப்பை’ எளிமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்
ரஜினிகாந்த் என வியந்தேன்.
அற்புதமான நடிகனை ‘சூப்பர் ஸ்டாராக்கி’ சினிமாக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் ‘பின்னாள் இயக்குனர்கள்’.

இந்தப்படம் ‘தேனிசை மழை’ என விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியது.
விளம்பரங்கள்  ‘உண்மை பேசியது’...இந்த படத்திற்கு மட்டும்தான்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Sep 28, 2013

மிஷ்கினை, நேற்று மட்டம் தட்டினோம்...இன்று கை தட்டுவோம்.

நண்பர்களே...
படம் பார்க்காதவர்கள் என் பதிவை படிக்கலாம்.
காரணம், படத்தில் உள்ள ஒரு பிரேமைப்பற்றி கூட எழுதப்போவதில்லை.


மிஷ்கின், தனது படைப்புகளை விட அதிகமாக பேசி வாங்கி கட்டியவர்.
தன் தவறை உணர்ந்து எதுவுமே பேசாமல், தன் படைப்பை பேச விட்டிருக்கிறார்.
தனது பாணியை, மிகச்சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
வாழ்த்துக்கள் மிஷ்கின்.


‘சரக்கு காலி’...
‘அவர்கிட்ட இனிமே விஷயம் இல்ல’...
என்ற குரல்கள் ஓங்கி முன்னணியில் ஒலித்து கொண்டிருந்தது.
அனைத்திற்கும் இப்படத்தின் பின்னணி இசை மூலம் பதில் சொல்லி இருக்கிறார் ராஜா.
பின்னணி இசையில், அன்றும்...இன்றும்....என்றுமே ராஜா என்பதை
இன்றைய தலைமுறைக்கு நிரூபித்து இருக்கிறார்.


பாலா, மிஷ்கின் போன்றவர்கள் படைப்புகளில் அபூர்வமான மனிதர்களை தரிசிக்க முடியும்.
அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.
அந்த கதாபாத்திரங்கள் தரும் அனுபவம்...
பார்வையாளனுக்கு கிடைக்கும் வரம்...அதுவே ரசனையின் பேரானந்தம்.
அதை கெடுக்க விரும்பவில்லை.

படத்தில் எல்லோருமே தங்கள் திறமைகளை நிரூபித்து இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கிடைக்க வேண்டிய நியாமான வெற்றியை தருவதன் மூலம் ரசிகர்கள்  ‘ரசனையை’ நிரூபிக்க வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jul 25, 2013

மரியான் - திரைப்படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம்.


நண்பர்களே...
மரியான் படத்தில் இடம் பெற்ற கோளாறுகளை விவரித்து,
‘தொடர்’ பதிவுகள் எழுத முடியும்.
தமிழ்ப்படங்களை திட்டி எழுதக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்.
இருந்தும் சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு,
நான் நேசிக்கும் இயக்குனர் சொதப்பும் படங்களில்,
‘இயக்குனரை’ சாடி எழுதுவேன்.
உ.ம்:  அவன் - இவன் இயக்கியது எவன்?.

நான்  நேற்று ‘மரியான்’ ஓடும் திரையரங்கு பக்கம் போனேன்.
1000 பேர் அமரும் தியேட்டரில், மொத்தம் 20 பேர் மட்டும் காத்திருந்தனர்.
எத்தனை பேருடைய உழைப்பு, பணம் காலாவதியாகி போய் விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்த படம்.
தயாரிப்பு பட்ஜெட் 25 கோடி என கேள்விப்பட்டேன்.
ஏற்கெனவே படம் இயக்குனர் வைத்த நெருப்பில்  ‘எரிந்து’ கொண்டிருக்கிறது.
நானும் என் பங்குக்கு பெட்ரோல் ஊற்ற விரும்பவில்லை.


‘மரியான்’ பார்க்கும் போதுதான்,
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை முழுமையாக முதன்முதலாக கேட்டேன்.
மிக அற்புதமாக இசையமைக்கப்பட்ட ‘என்ன செய்ய ராசா’ பாடல்,
அப்படியே என்னுள் ஒட்டிக்கொண்டது.
இது வரை அந்தப்பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.
இனியும் கேட்பேன்.
நான் இந்தப்பாடலுக்கு என்னுள், ‘காட்சியமைத்து’ கொண்டு இருக்கிறேன்.
இந்த பயிற்சியை இது வரை ‘இளையராஜா’ பாடலுக்கு மட்டுமே செய்து இருக்கிறேன்.
முதன் முதலாக அந்த இடத்தை ரஹ்மான் பிடித்துக்கொண்டார்.
என்னால் இறக்கி வைக்க முடியாமல் அந்த அவலச்சுவையை அனுபவித்து வருகிறேன்.


இப்பாடலில் பிரிவின் துன்பமும் இருக்கிறது.
பிரிந்தவர் கூடி...காதலில் கிறங்கும் இன்பமும் இருக்கிறது.
மிகச்சவாலுடன் இப்பாடலை அமைத்து இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.
மிகச்சாதாரணமாக இப்பாடலை கெடுத்து இருக்கிறார் இயக்குனர்.

பதேர் பஞ்சலி, பை சைக்கிள் தீப் போன்ற காவியங்களை திரைப்படக்கல்லுரியில் பாடமாக வைத்திருப்பர்.
மரியானையும் பாடமாக வைக்க வேண்டும்.
எப்படி படமெடுக்கக்கூடாது என்பதை இப்படத்திலிருந்து மாணவர்களுக்கு பாடமெடுக்கலாம்.

உதாரணத்திற்கு  ஒரு காட்சியை விளக்குகிறேன்.
பாலைவனத்தில் ‘மரியான்’ தப்பித்து ஓடி களைத்து அமர்ந்திருப்பான்.
அப்போது ‘சிறுத்தைகள்’ சுற்றி வளைக்கும்.
இக்காட்சி ரசிகனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
நிஜமாகவே சிறுத்தைகள் வந்ததா?
மரியானின் கற்பனையில் வந்ததா?

குழப்பம் வந்ததற்கு காரணம் இயக்குனர்,
‘சிசோபர்ணியா சிச்சுவேஷன்’ [ Schizophrenia ] காட்சியை வடிவமைத்த விதம்தான்.
இக்காட்சியில் இரண்டு விதமான ‘ஷாட்’ கம்போசிஷேன்
இயக்குனர் பயன்படுத்தி இருக்கலாம்.

# 1. ‘மரியான் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட்கள் அமைத்து சிறுத்தைகள் உலவும் காட்சியும், உறுமல் சத்தமும் வைத்திருக்கலாம்.

#2. ‘ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் அமைத்து
‘மரியான் சிறுத்தைக்கு பயந்து நடுங்குவதாக்’
காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சிறுத்தை பிரேமில் இருக்கக்கூடாது.
சிறுத்தையின் உறுமல் சத்தமும் இருக்கக்கூடாது.
இப்படி ஒரு ஷாட் ‘பவர்புல்லாக’ வைத்தாலே ஆடியன்ஸ் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
‘மரியானுக்கு மறை கழண்டு விட்டது’

ஆடியன்சுக்கு தெளிவு படுத்த தேவையில்லை என முடிவெடுத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் ஷாட் வைக்கலாம்.
சிசோபர்ணியா சிச்சுவேஷனுக்கு லாஜிக் கிடையாது.

மரியானில் ‘சிசோபர்ணியா’ சிச்சுவேசன்’ காட்சிகளும்,
அதை தொடர்ந்து வருகின்ற ‘ஹீரோயிச காட்சிகளும்’...
நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி அலைக்கழிக்கின்றன.

 ‘சிசோபர்ணியா’ என்ற மனநோயை அடிப்படையாக வைத்து அற்புதமாக வந்த இரு படங்கள்.

 [ 1 ] A Beautiful Mind \ 2001 \ English \ Directed by : Ron Howard.



[ 2 ] Shutter Island \ 2010 \ English \ Directed by : Martin Scorsese. 


படத்தில் மற்றொரு குழப்பம்.
கதை நடைபெறும் காலம்.
இது தெளிவாக்கப்படாமல் ரசிகனை அலைக்கழித்து சாவடிக்கிறார் இயக்குனர்.
படம் முழுக்க பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் 1960 - 1970 காலத்துக்கு அழைத்து செல்கிறது.
ரசிகனை, வில்லனின்  ‘லேட்டஸ்ட் மாடல் புல்லட் பைக்’ ...
‘2010’க்கு இழுத்து வருகிறது.
அதுவும்...வெஸ்டர்ன் படங்களில் குதிரையில் கட்டி தரையில் ‘தரதரன்னு’ இழுத்து  வருவது போல் வருகிறது.


செல்போன்  ‘மருந்துக்கும் இல்லை.
‘மியுசியத்தில் வைக்கப்பட்டு விட்ட கருப்பு டயல் போன்’ மட்டுமே இடம் பெறுகிறது.
ஆனால் இறுதிகாட்சியில்  ‘அம்மா ஆட்சி பச்சை மினி பஸ்ஸில்’
வந்து இறங்குகிறான் மரியான்.
 ‘மினி பஸ்’ கிராமத்திற்குள் வருவதற்கு முன்பே,
செல்போன் கிராமத்துக்குள் வந்தது...வரலாற்று உண்மை.

 ‘எம் மீனவர்கள்’ சுடப்பட்டு இறக்கும் வரலாற்று அவலத்தை கையாண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றம்...  இயக்குனரே.
இப்படத்திற்கு வசனம் எழுதியது மீனவ வாழ்க்கையை இலக்கியமாக்கிய  ‘ஆழி சூழ் உலகு’ ‘ஜே.டி.குரூஸ்!
யூ டூ புரூட்டஸ்!!

சர்க்கரையின் தாய் : “ அய்யோ...எந்தப்பாவி சுட்டான்னு தெரியலயே”

என்ன  ‘மயித்துக்கு’... இந்தக்காட்சிக்கு வசனம்?
கடலை நோக்கி மண்ணை அள்ளி தூற்றினாலே போதுமே...
 ‘ ஒரு தாய்... ‘சிங்களப்பேயை’...‘அறம் பாடுகிறாள்’, 
என எளிதாக புரிந்து கொண்டு...
என் ‘தமிழன் பொங்கியெழுந்து இந்த ஒரு காட்சிக்காவது கை தட்டி இருப்பானே!

சூடான் போராளிகளை காட்சிப்படுத்திய விதத்துக்கு ‘சுண்ணாம்பு காளவாயில வச்சு சுட்டாலும்’ தகும்.

பதிவை முடிச்சுக்குறேன்.
இனி எழுதுனா ‘தங்க வசனம்’ சரமாரியா வந்துரும்.


சூடான் போராளிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jul 19, 2013

வாலிப கவிஞருக்கு அஞ்சலி.


வாலி புறப்பட்டு போய் விட்டார்.

மெட்டுக்கு எழுதிய கவிஞனே...

[மன்னவனே அழலாமா?]

துட்டுக்கு ‘புழுகிய’ புலவனே...

[மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! = மு.க.முத்து.]

விகடனுக்கு எழுதிய ‘காவிய நாயகனே’...

போய் வா. 


கவிஞரின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ  நந்தலாலா(2)

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா


உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா


தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்


நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்


தகினதத ததம்தோம்

ஆடாத மேடை  இல்லை போடாத வேஷம் இல்லை(2)


சிந்தாத கண்ணீர்  இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை


கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)


உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)


பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று


பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)


நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )


________________________________________________________________________




Jul 11, 2013

கமலஹாசன் என்னை கோடிஸ்வரனாக்கியிருக்கிறார்.


நண்பர்களே...
நான் கமலின் திரை வாழ்க்கை வரலாறை,
தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன்.
ஆரம்பத்தில் லாபத்தோடு போய்க்கொண்டிருந்த தொடர்,
தேய்பிறையாகி நஷ்டமாகிக்கொண்டு வந்தது.
லாபம் வந்த காலத்தில்,
கமல் என்னை வெகுவாக ஆதரித்து கை தூக்கி விட்டார்.
தொடர் நஷ்டமாக போய்க்கொண்டிருந்த காலத்தில்,
ஏதோ சில காரணங்களால் என்னை புறக்கணித்தார்.
அந்த கோபத்தில் அந்தத்தொடரை நான் நிறுத்தி விட்டேன்.
1995ல் அவரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறியவன்,
இன்று வரை அவரை நான் சந்திக்கவேயில்லை.

 இளையராஜா, கே.பாலச்சந்தர், சுஜாதா, நாகேஷ் என நான் நேசித்த அத்தனை பேராலும் நான் நேரடியாக காயப்பட்டு இருக்கிறேன்.
ஆனால் அவர்கள் மேல் நான் கொண்ட காதல் என்றுமே அழியாது.
எனது பதிவுகளே இதற்கு சாட்சி.

சரி...விஷயத்துக்கு வருகிறேன்.
தொடரை நிறுத்தி விட்டு கணக்கு பார்த்ததில் கொஞ்சம் லாபம் மிஞ்சியது.
அந்தப்பணத்தில் கோவையில் ஒரு மூலையில் 16 செண்ட் இடம் வாங்கிப்போட்டேன்.
நான் வாங்கும்போது கிராமப்பஞ்சாயத்தாக இருந்த இடம்,
இப்போது கோவை மாநகராட்சியாகி விட்டது.

இப்போது அந்த இடத்தில் மூணே முக்கால் செண்ட் மட்டும் விற்றேன்.
அந்த மதிப்பின்படி, எனது இடம் கோடி ரூபாய் மதிப்பாகி உள்ளதை உணர்ந்தேன்.
எனவே கமலால் நான் இப்போது கோடிஸ்வரனாகி விட்டேன்.
[ கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள  ‘நிஜ கோடிஸ்வரர்கள்’,
என்னை மன்னிக்கவும்.
நீண்ட நாள் ஆசையின் காரனமாக,
என்னை நானே கோடிஸ்வரன் என அழைத்துக்கொண்டேன்.]


மேற்படி இடம் கோவை சரவணம்பட்டி அருகில் உள்ளது.
 ‘பி.பி.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி’க்கு எதிரில் அமைந்துள்ள மருதம் நகரில்
இருக்கிறது.
தொட்டடுத்து இருப்பது  ‘அல்கெமி பப்ளிக் ஸ்கூல்’...


என் இடத்தை சுற்றி வாங்கியவர்கள் வீடு கட்டி விட்டார்கள்.
இன்னும் ஐந்து வருடத்தில் இந்த இடம் மதிப்பில் இன்னும் பல மடங்காகும்.
காரணம் தற்போது கோவை மாநகராட்சி,
மிகப்பெரிய  ‘மேல்நிலை குடிநீர் தொட்டி’ கட்டி வருகிறது.
அடுத்த வருடம் முதல்வரே அதை திறப்பதாக திட்டமிட்டுள்ளார்கள்.
அதற்காக சாலை கட்டமைப்பு வசதிகள் செய்யவும் ஏற்பாடாகி வருகிறது.
மருதம் நகரையொட்டி உள்ள,
 ‘கோவை சக்தி ரோடு -அவினாசி ரோடு இணைப்புச்சாலை’...
நூறு அடி சாலையாக வெகு விரைவில் மாறும்.

என் இடத்தில் இன்னும் ஒரு சைட் மட்டும் விற்க எண்ணி உள்ளேன்.
இருபத்தைந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள்,           என்னை  90039 17667 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எனக்கு தகுந்த தயாரிப்பாளர் அமையா விட்டால்,
எனது இடத்தை விற்று,
எளிதாக ஒரு உலகசினிமா எடுக்க முடியும்.
இந்த நம்பிக்கைதான் இப்போது எனக்கு யானை பலத்தை தந்திருக்கிறது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 16, 2013

1981லேயே... மணிவண்ணனை, பாரதிராஜா கொலை வெறியோடு துரத்தினார்.


இயக்குனர் மணிவண்னன் போய் விட்டார்.
‘தம்பியை’ பார்க்க அவசரமாக போய் இருக்கிறார்.
அதுவும் புலிக்கொடியோடு புறப்பட்டு போய் இருக்கிறது...
 எங்கள் கொங்கு நாட்டுத்தங்கம்.

மணிவண்ணன் இளமையில்,
கோவையில் இருந்த காலத்தில்...
‘தீவிரமான கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக’ இருந்தார்.
போராளிகளை, போலிஸ் ‘நக்ஸலைட்’ என அழைக்கும்.
முக்கிய நக்சல்களை ‘என்கவுண்டரில்’ போட்டுத்தள்ள திட்டமிட்டது.
லிஸ்டில், முதல் பெயர் மணிவண்ணன்.
தகவலறிந்த நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்கு கடத்தினார்கள்.

அரசியல்...கலை....இரண்டும்தான்...  அவரது கண்கள்.
கோவையில் இருந்த போது ஏகப்பட்ட நாடகங்கள் நடத்தி இருக்கிறார்.
சென்னையில்  ‘கோடம்பாக்க’வாசியானார்.
பாரதிராஜாவுக்கு ராசியானார்.

பாக்யராஜ், பாரதிராஜாவை விட்டுப்பிரிந்து போய்...
இயக்குனர் ஆகி விட்ட்டார்.
அவரது இடத்தை நிரப்பி,
பாரதிராஜாவுக்கு கை கொடுத்தது மணிவண்ணனே.
மணிவண்னன் சத்யஜித்ரே, ரித்விக் கட்டக், ஷ்யாம் பெனகல் போன்ற மாமேதைகளின் தாக்கத்தில்
‘நிழல்கள்’ படக்கதையை உருவாக்கினார்.
இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் இருந்தும்,
அப்படம் தோல்வியை தழுவியது.
காரணங்களை இங்கே சொல்வதில் அர்த்தமில்லை.

நிழல்கள் \ 1980 \ தமிழ் \ கதை, வசனம் - மணிவண்ணன் \ 
இயக்கம் - பாரதிராஜா.

‘தமிழ் ரசிகர்களின்’ நாடி பிடித்து ‘இறங்கி அடித்த படம் ’
‘அலைகள் ஓய்வதில்லை’.
மணிவண்னன் - பாரதிராஜா கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம்.

அலைகள் ஓய்வதில்லை \ 1981 \ தமிழ் \ கதை, வசனம் - மணிவண்ணன் \ 
இயக்கம் - பாரதிராஜா.

‘டிக்...டிக்...டிக்...1981ல் வெளி வந்த படம்.
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்களுக்குப்பிறகு,
கமலோடு... பாரதிராஜா இணைந்த படம்.
இப்படத்தின் சூட்டிங் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
சரிகா, மும்பையிலிருந்து சென்னை ஏர்போர்ட் வந்து இறங்குவதை,
படம் பிடிப்பதாக ஏற்பாடு.
கமல் - சரிகா இருவரும் அப்போது காதலர்கள்.
ஏதும் சொதப்பலாகி விடக்கூடாது என மெகா டென்ஷனில் இருந்தார் பாரதிராஜா.
‘ஸ்கிரிப்ட் புக் எங்கே’ என உதவியாளர் மணிவண்னனிடம் கேட்டார்.
மணிவண்னன் மற்றொரு உதவியாளரான ‘மனோபாலாவை’ கை காட்டினார்.
மனோபாலா ‘ நீங்க கொண்டு வந்திருப்பீங்கன்னு நான் நெனைச்சேன்’ என்றார் மணி வண்ணனிடம்.
‘*$*#$*<#%#’ ...மதுரை கெட்ட வார்த்தையை வெடித்தார் பார்திராஜா.
மணிவண்ணனும், மனோபாலாவும்  ‘ஜெட் வேகத்தில்’ பறந்தனர்.
மீனம்பாக்கத்திலிருந்து...  ‘கத்திப்பாரா ஜங்ஷன்’ வரைக்கும்
கொலை வெறியோடு துரத்தி ஓடினார் பாரதிராஜா.
சிக்கவில்லை இருவரும்.

‘இங்கிருந்தால் இனி நாம் அவ்வளவுதான்...ஊரைப்பாக்க போவோம்’ என  தங்கியிருந்த அறைக்கு  ‘பொட்டி கட்ட’ வந்தார்கள்.
எரிமலை...பனிமலையாக அமர்ந்திருந்தது அறையில்.
‘சரி...சரி...காலையில் சூட்டிங் வந்து சேருங்க’ . 

டிக்...டிக்...டிக்...\ 1981 \ தமிழ் \ கதை, திரைக்கதை, இயக்கம் - பாரதிராஜா. 

சமீபத்திய பாராதிராஜாவின் பேட்டியால் மனங்கலங்கி மணிவண்ணன் கொடுத்த பேட்டியை இந்த இணைப்பில் சென்று கேளுங்கள்...

இயக்குனர் மணிவண்ணன் பேட்டிக்கு இங்கே செல்லவும்....



இளமைக்காலங்கள் என்ற படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் தயாரிக்க  திட்டமிட்டார் கோவைத்தம்பி.
ஆ. சுந்தர்ராஜன் உருவாக்கிய கதைக்கு,
அனைத்து பாடல்களையும்  இளையராஜா பதிவு செய்து கொடுத்து விட்டார்.
சில காரணங்களால் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்,
தயாரிப்பாளர் கோவைத்தம்பியோடு மனஸ்தாபம் ஏற்பட்டு
விலகி விட்டார்.

ரெகார்டு செய்யப்பட்ட அனைத்து பாடல்களையும் உள்ளடக்கி ,
புதிதாக... பொருத்தமாக... கதை எழுதி...
படத்தையும் வெற்றிப்படமாக்கினார் இயக்குனர் மணிவண்ணன்.

இளமைக்காலங்கள் \ 1983 \ தமிழ் \ 
கதை,திரைக்கதை, வசனம், இயக்கம் - மணிவண்ணன்.

இதே பாணியில்  ‘ஊமை வெயில்’ என்று ஒரு படம்.
பாடல் அனைத்தும் வெளியாகி,
ஆடியோ கேசட் சூப்பர் ஹிட்டாகி விட்டது.
ஆனால் படம் ‘ட்ராப்’ ஆகி விட்டது.


அந்தப்பாடல்களுக்கும் பொருத்தமாக கதை எழுதி,
‘இங்கேயும் ஒரு கங்கை’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார் மணிவண்ணன்.

இங்கேயும் ஒரு கங்கை \ 1984 \ தமிழ் \ 
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மணிவண்ணன்.


மணிவண்ணன் தனது இளமைக்கால நண்பர் சத்யராஜோடு இணைந்து,
பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
அதில் இன்றளவும் மாஸ்டர் பீஸாக இருப்பது  ‘அமைதிப்படை’.
அற்புதமான  ‘பொலிட்டிக்கல் சடையர் மூவி’.
இப்படத்தை இன்று வரை யாரும் மிஞ்சவில்லை.
ஏன்?...மணிவண்ணனாலேயே முடியாமல் போய் விட்டது.

அமைதிப்படை \  1994 \ தமிழ் \ 
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மணிவண்ணன்.

போய் வாருங்கள் மணிவண்ணன்.
நீங்கள் திரும்பி வர... உருவாகட்டும் ‘தமிழ் ஈழம்’.


Jun 11, 2013

கமலின் கான்செப்ட்...இரண்டு மனைவிகள்.


HEY RAM \ 2000 \ INDIA \ DIRECTED BY : KAMAL HASSAN \ ஹேராம் = 036

“ கமல் திரைக்கதை எழுதிய படங்களில் திரும்பத்திரும்ப வெளிப்படும் ஒரு விஷயம், அப்பா என்கிற படிமம்.
குறிப்பாக, அப்பாவிடமிருந்து விலகிப்போக விரும்பும் ஒருவன் எப்படி அப்பாவின் ஆளுமையிலிருந்து விலக முடியாதவனாக இருக்கிறான் என்பதே
அவரது ஆதார பிரச்சனை.
குடும்பத்திலிருந்து வெளியேற விரும்புவம் ஒருவனே அவரது கதாநாயகன்.
அவன் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண்ணோடு பழகுகிறான்.
அவளைக்காதலிக்கிறான்.
திருமணம் செய்து கொள்ளும் முன்பே அவளோடு நெருக்கமாக பழகி சேர்ந்திருக்கிறான்.
பிறகு சூழலின் காரணமாக அவளை கைவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறான்.

இது தேவர் மகனில் மட்டுமில்லாது, ஹேராமிலும் இடம் பெறுகிறது.
ஒரு வகையில் இந்த ஒப்புமை ஆச்சரியப்படக்கூடியது.
தேவர் மகன், ஹேராம்...
இரண்டிலுமே இரண்டு நாயகிகள் இடம் பெறுகின்றனர்.
ஒன்று, அவன் காதலி.
மற்றொன்று, அவன் மனைவி.
காதலி... அவன் விரும்பித்தேடிக்கொண்டது.
மனைவி...அவன் முழு விருப்பமின்றி மணந்து கொள்ளப்பட்டவள்.
தேவர் மகனில்...செங்கமலமும் [ ரேவதி ],
ஹேராமில்...மைதிலியும் [ வசுந்தரா தாஸ் ],
தனது கணவனோடு உள்ள உறவைப்புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.” - எஸ்.ராமகிருஷ்ணன்.
நூல் : கமல் நம் காலத்து நாயகன் \ முதல் பதிப்பு \ 2011.
தொகுப்பு : மணா.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
[ நூலில் எஸ்.ரா ஹேராம் பற்றிய கட்டுரைக்கு, 
எழுதப்பட்ட காலமும், 
கட்டுரை இடம் பெற்ற ஊடகமும் குறிப்பிடப்படவில்லை ] 

நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒப்பீட்டு ஆய்வை இப்பதிவின் முன்னுரையாக இடம் பெறச்செய்தது மிகப்பொருத்தமான ஒன்றே.

இனி ஹேராம் திரைக்கதைக்குள் செல்வோம்.
_________________________________________________________________________________

தன் மகளை முதலிரவு அறைக்குள் அனுப்ப வந்த...

அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...

அறையினுள் ராம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து,
காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ ஆங்கிலப்புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறான்.

மைதிலி : [ என்ன பேசுவது என்றே புரியாமல் ] பால் அங்கே இருக்கு.

ராம் : இல்ல...நான் பாலே சாப்பிடறதில்ல.

மைதிலி : ஏன் ? டாக்டர்... ப்டாதுண்ட்டாரா ?

[ ராம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை பார்த்து ]

மைதிலி : இண்ட்ரஸ்டிங் இல்ல ?

ராம் புருவம் உயர்த்தி அவளைப்பார்க்கிறான்.

மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான்.

ராம் : ஓ !...ஸாரி.

புத்தகத்தை கீழே வைக்கிறான்.

மைதிலி : நோ...நோ...படிங்கோ.
‘டிட் யூ லைக் த புக்’

ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.

மைதிலி : நான் பொடவையை மாத்திண்டு வந்துட்றேன்.
பட்டுப்பொடவய கட்டிண்டு தூங்க வேண்டானுட்டா...அம்மா. 

பீரோவிலிருந்து வேறு புடவையை எடுத்துக்கொண்டு மைதிலி குளியலறைக்குள் போகிறாள்.
குளியலறைக்குள் புகுந்த மைதிலி, கதவை தாழ்ப்பாள் இட்டு விட்டு,
புடவையை களையத்துவங்குகிறாள்.
ஒரு பல்லி அவள் தோள் மீது விழுகிறது.
மைதிலி அலறி விடுகிறாள்.

மைதிலி : ஆ...ஆ...ஆ....

பல்லி கீழே விழுந்து ஓடுகிறது.
காலில் ஏறி விடுமோ என பயத்தில் கத்திக்கொண்டே குதிக்கிறாள் மைதிலி.
குளியலறைக்கு வெளியிலிருக்கும் ராம் குழப்பமைடைகிறான்.
மைதிலியின் அலறல், ராமை கல்கத்தா சூழலுக்குள் நினைவினில் உந்தித்தள்ளி விடுகிறது.

ராமின் கண்கள் திறந்திருந்தும், எதையும் பார்க்காத கண்களுடன்...
தூக்கத்தில் நடப்பவன் போல் பாத்ரூம் கதவை அடைந்து தட்டுகிறான்.

ராம் : அபர்னா...அபர்னா...

 ‘நிஜத்திற்கும்’... ‘நினைவிற்கும்’...பிரித்து பார்க்க முடியவில்லை ராமால்.  மைதிலி கதவை திறக்கிறாள்.
ராம், குரல் கொடுப்பதை நிறுத்தி விடுகிறான்.
ஜாக்கெட் தெரியும் கோலத்தில் இருக்கும் மைதிலி அவசரமாக புடைவையை
போர்த்தி மறைக்கிறாள்.

மைதிலி : அபர்னா யாரு ?

ராம் பதில் சொல்லாமல் குளியலறைக்குள் சென்று, மூடித்தாழிட்டுக்கொண்டு
நினைவில் சூழ்ந்துள்ள ‘கல்கத்தா துயரங்களுக்கு தலை முழுக’
குளிக்க ஆரம்பிக்கிறான்.
மைதிலி வெளியே குழப்பத்தோடு காத்திருக்கிறாள்.

நனைந்த உடலுடன், ராம் நிர்வாணமாக ஒரு மூலையில் போய் ஒடுங்குகிறான்.
மெய் மறந்த நிலையில் ராம் இருக்கிறான்.

[ வெளியிலிருந்த ] மைதிலி : ஏன்னா...உங்களுக்கு ஒண்ணுமில்லியே.
ஆர் யூ ஆல் ரைட்?

நிஜ மைதிலியின் குரலுடன் கலந்து,
நனவோடை கல்கத்தா அபர்னா - கற்பழிப்பாளர்களின் குரலும் கலந்து கேட்கும் பிரமை ராமுக்கு ஏற்படுகிறது.

அல்தாப் : [ குரல் மட்டும் ] மேம் சாப்...தார்வாசா கோலோ மூம்சாப்...
மெய்ன் அல்தாப் மேம்சாப்...ஆப்கா புரானா டெய்லர் மேம்சாப்...
நையா நாப் லேனே ஆயாஹூன்.

அபர்னா : [ குரல் மட்டும் ] ராம்...ஆர் யூ ஆல் ரைட் ராம் ?

ராம் தன் செவிகளை அடைத்துக்கொள்கிறான்.
கல்கத்தாவில் இறந்தவர்கள் உருவங்கள் பாத்ரூம் தரையில் தோன்றி மறைகின்றன.

அபர்னா, கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறாள்.
இரத்தம் குளமாக தேங்கி கிடக்கிறது.
ராமால் கொல்லப்பட்ட அனைவரும் அங்கே இருக்கிறார்கள்...
அவனது முதலிரவுக்கு வருகை தந்தவர்கள் போல...

பல்லி ரத்தம் குடிக்கிறது...
ராம் துடிக்கிறான்.
ரத்தச்சகதியின் மீது பல்லி ஊர்ந்தும்...நடந்தும் செல்கிறது.

_________________________________________________________________________________

திரைக்கதையை முழுக்க விவரித்ததன் மூலமாக,
நீங்கள் இக்காட்சியை மறுபடி மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்திருப்பீர்கள்.

\\\ அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...\\\

இந்தியத்தாய்க்கும் - மகளுக்கும் இருக்கும் உறவு நெருக்கம்...
பாலியலுக்கு பக்குவப்படுத்துதல்...
இரண்டையுமே, இந்த  ‘ஒரு வரி வசனத்தில்’ வெளிப்படுத்தி... 
நம் குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு முதலிய பெருமைகளை உலகறியச்செய்துள்ளார் படைப்பாளி கமல்.
மேல் நாட்டு ‘டேட்டிங்’ கலாச்சாரத்தை இங்கே பரப்ப நினைக்கும் பன்னாடைகளுக்கு இக்காட்சி பாடம் புகட்டும்.


\\\  மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான். \\\

இந்த வசனத்தை உச்சரிக்கும் போது மைதிலியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிவதைக்காணலாம்.

\\\ ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.\\\

ராமின் குரலில் அலட்சியம் மேலோங்கி இருக்கும்.

‘காந்திஜீ பயாகிரபியை’... ‘செமி பிக்‌ஷன்’... என ராம் நக்கலடிப்பதை விரும்பாமல் மைதிலி அந்த இடத்திலிருந்து நகருவாள்.
இந்தக்குணம்... இந்தியப்பெண்களுக்கே உரித்தான பராம்பரிய குணம்!
காந்தியையும் விட்டுக்கொடுக்க முடியாமல்,
புருஷனையும் திட்ட முடியாத...
மைதிலியின் ஷண நேரத்தவிப்பை மிக அற்புதமாக தனது முகத்தில் பிரதிபலித்து காட்டியிருப்பார் வசுந்தரா தாஸ்.

பாத்ரூமிற்குள் மைதிலி,
பல்லிக்கு பயந்து அலறுகிறாள்.
ராமிற்கு, மைதிலியின் அலறல்,
நனவோடையினால் [ Stream Of Consciousness ]...
அபர்னாவின் கதறலாக கேட்கிறது.

பார்வையாளராகிய நமக்கு இருவரது அலறலும் கேட்கிறது.
திரையில் விஷுவலாக காட்டப்படும் மைதிலியின் அலறலுக்கு பின்னணி இசை அமைக்காமல்,
ராமின் நனவோடையில் ஒலிக்கும் அபர்னாவின் கதறலுக்கு ...
பின்னணி இசை கொடுத்து...
ரசிகர்களை நனவோடையில் ஆழ்த்தி ‘கல்கத்தாவுக்கு’ அழைத்து செல்கிறார் இளையராஜா.
இரண்டு ஜீனியஸ்கள் ஒன்றாக சங்கமித்ததால் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இந்தக்காட்சி.


அவலத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் ராஜாவின் இசை,
மைதிலி கதவைத்திறந்ததும்...நொடி நேரத்தில் மெல்லிசையாக மாறி சாந்தமாக ஒலிக்கும்.
மீண்டும் ராம் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு கதவடைத்ததும்,
ராஜாவின் ‘துன்பியல் இசை’ ...
காட்சியில் இடம் பெறும் சப்தங்களுக்கு...
இடையூறு செய்யாமல் ரசிகனுக்கு அவலச்சுவையை கூட்டுவதில்
தன் பங்கை செவ்வனே செய்கிறது.

அடித்துச்சொல்கிறேன்..
உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ்,
ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா.
இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க,
கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு.

ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள்,
தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.



அபர்னா நினைப்பு, கல்கத்தா துயரம் இவைகள் ஏற்படுத்திய  உள்ளக்கொதிப்பை தணிக்க ராம்  ‘தலை முழுகுகிறான்’.
இறுதியாக  ‘கரண்ட் ஷாக்கில்’ உடம்பு உதறுவது போல் உடல் மொழியை ஏற்படுத்தி நம்மை ஆகர்ஷிக்கிறார் கமல்.
இக்காட்சியில்  நடிகர் கமலை பாராட்டுவதா !
வடிவமைத்த இயக்குனர் கமலை பாராட்டுவதா !!
ஒரே வார்த்தை...கொன்னுட்டீங்க கமல்.

‘நனவோடைக்காட்சிகளை’ படமாக்குவதில் உலகிலேயே
ஈடு இணையற்ற மாஸ்டர் ‘ இயக்குனர் மாமேதை இங்மர் பெர்க்மன்’ மட்டுமே.
ராமின் குளியலறைக்காட்சியின் மூலமாக  ‘பெர்க்மனுக்கு’ இணையாக உயர்ந்து விட்டார் கமல்.


மைதிலியின் மீது விழுந்த பல்லியும்...
இரத்த சகதிக்குள் துடிக்கும் பல்லியும்...
ஒன்றல்ல.
ஏனென்றால் ராம் பார்க்கும் போது வெற்றுத்தரையாக இருப்பது...
மெல்ல மெல்ல இரத்தக்குளமாக உருவெடுக்கும்.
அதில் ஊர்ந்து போய் இரத்தத்தை குடிக்கிறது ‘பல்லி’.
இக்காட்சி சரியான ‘பெர்க்மன்தனம்’.

பல்லி = நனவோடை.
இரத்தம் = கல்கத்தா துயரம்.

இது போன்ற காட்சியை பாமர ரசிகன் புரிந்து கொள்வான் என நம்பி 2000ல் படமெடுத்த கமலுக்கு...
ராயல் சல்யூட்.

‘பெர்க்மனை’  உண்மையாக புரிந்து கொண்ட ரசிகன்,
இக்காட்சியை அமைத்த கமலைக்கொண்டாடுவான்.

‘நனவோடை’ பற்றி ஹேராமின் முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியுள்ளேன்.

ஹேராம் = 031 பதிவிற்குச்செல்ல...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


May 29, 2013

குரு - சிஷ்யன்.


நண்பர்களே...
இளையராஜாவும், அவரின் குரு தன்ராஜ் மாஸ்டரின் புகைப்படத்தை நான் வெகுநாட்களாக தேடி வந்தேன்.
இன்றுதான் இப்படத்தை காணும் பாக்கியம் கிட்டியது.
இப்படத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் இணையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
மேலும் இப்புகைப்படம் கிடைக்கப்பெற்ற பதிவின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.
இளையராஜாவைப்பற்றி 30க்கும் மேற்ப்பட்ட பதிவை எழுதி ஒரு தொடராக வெளியிட்டு வருகிறார்  ‘பால்ஹனுமான்’ என்ற பெயரில் எழுதி வரும் பதிவாளர்.
அவருக்கு என் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளையராஜா பற்றி பால்ஹனுமான் எழுதும் பதிவிற்கு செல்ல ‘சுட்டவும்’.


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

May 26, 2013

அடித்தது போலிஸ்...தடுத்தது டி.எம்.எஸ்.


நண்பர்களே...
அரை நூற்றாண்டுகளாக தமிழர்களின் செவிக்குணவளித்த...
‘அழகிய தமிழ் மகன்’ நேற்று தனது இசை மூச்சை அடக்கிக்கொண்டான்.
இரண்டு திலகங்களுக்கு குரல் கொடுத்த நாவுக்கரசன் அவன்.
இனியும் அவர்களுக்கு குரல் கொடுப்பேன் என விண்ணுலகம் ஏகி விட்டான்.
அவன் விட்டுச்சென்ற குரலில் பாடி, மண்ணுலகம் என்றும் மகிழ்ந்திருக்கும்.


நான் ஆறாவது வகுப்பு படித்த நேரம்.
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி மாதத்திருவிழா.
டி.எம்.எஸ். கச்சேரி என்றதும் நெல்லை மாவட்டமே திரண்டு வந்து விட்டது.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஆணைப்படி டி.எம்.எஸ் அவர்கள் பக்தி பாடல்கள் மட்டும் பாடினார்.
வந்திருந்த கூட்டமோ, சினிமா ரசிகர்கள் கூட்டம்.
 ‘சினிமாப்பாட்டு பாடு’ என ஆர்ப்பரித்தது.
கூட்டத்தினரின் வெறிக்கூச்சல் கட்டுக்கடங்காமல் போகவே,
போலிஸ் தடியடி நடத்தியது.
கூட்டம் கலைந்து ஓடியது.
உட்கார்ந்து பாடிய டி.எம்.எஸ் எழுந்தார்.
மைக்கை கையில் எடுத்தார்....பாடினார்.
“ லவ் பண்ணுங்க சார்...நான் வேணாங்கல...
அது லைப் பிரச்சனை சார்...அது விளையாட்டல்ல...”
லத்தியால் துரத்தி அடித்த காவல்துறையினர் நின்றனர்.
திகைத்தனர்.
ஓடிய ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்து திரும்ப வந்தது.

பாடலை பாடி முடித்த டி.எம்.எஸ்,
ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“ நீங்கள் அடிபடுவதை காணச்சகியாமல்தான் சினிமா பாட்டைப்பாடினேன்.
உங்களுக்காக சினிமாப்பாடலையும் பாடுகிறேன்.
ஆனால், அடுத்த பாடல் எனக்காக என் முருகப்பெருமானை துதித்து பக்திப்பாடல் பாடுவேன்.
ஒத்துழைப்பு தாருங்கள்” என்றார்.
அதே போன்று மாற்றிமாற்றி பாடி விழாவை நிறைவு செய்தார்.
அதிலும் எம்ஜியார்,சிவாஜி படப்பாடல்களை சம அளவில் கலந்து பாடினார்.

 “ பாட்டும் நானே...பாவமும் நானே...”
பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...
உச்சரித்து நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த டி.எம். சவுந்தர் ராஜன்...”

ஆஹா...ஆஹா...பொற்காலத்தில் அல்லவா வாழ்ந்திருக்கிறோம் !
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த ‘சங்கங்களை’ ... 
என்றும் நினைவில் நிறுத்துவோம்.


Nov 2, 2010

Shine-1996 இசைமேதை



மேதைகள் பிறப்பதில்லை...உருவாக்கப்படுகிறார்கள் என்பார்கள்.இதற்க்கு சரியான உதாரணம் David Helfgott.

இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பியோனோ மேதையின் வாழ்க்கை பாடம்தான் படம்.

ஆஸ்திரேலியாவில் உருவான இப்படத்தை இயக்கியவர் Scot Hicks

கொட்டும் மழையில் டேவிட் அறிமுககாட்சியிலேயே அவரது காரெக்டரின் எக்ஸெண்ட்ரிக் தன்மையை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.பின்பு பிளாஷ்பேக் உத்தியில் டேவிட்டின் கடந்தகால வாழ்க்கை அற்ப்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.சிறு வயதிலேயே டேவிட் படிப்பது... விளையாடுவது... தூங்குவது.... எல்லாமே பியோனோ.உள்ளூர் போட்டிகளில் வெற்றி வாகை சூடியதன் பயனாக நல்ல பியோனோ டீச்சர் பரிசாக கிடைக்கிறார்.14 வயதில் அமெரிக்கா செல்ல வாய்ப்பு வருகிறது.தந்தை சர்வாதிகாரத்துடன் அனுப்ப மறுக்கிறார்.பியோனோடீச்சர் இவனை அனுப்பி வைக்க சர்வ வழிகளிலும் போராடுகிறார்.தாயாரும் மறுக்கிறார்... “அவனை விட்டுவிடுங்கள்...இன்னும் அவன் படுக்கையை ஈரமாக்குகிறான்”

19வயதில் லண்டன் ராயல் காலேஜ் ஆப் மியூசிக் அழைக்கிறது.இப்போது தந்தையின் எதிர்ப்பை மீறி புறப்படுகிறது இந்த பியோனோ புயல்.இவனது இசை திறமை வளர்கிறது..... கூடவே எக்ஸெண்ட்ரிக் தன்மையும்.உதாரணமாக ஒரு காட்சி... எதிரில் வரும் பெண்ணுக்கு வணக்கம் சொல்கிறான்.அந்தப்பெண்ணோ பேயைக்கண்டது போல் மிரண்டு ஓடுகிறார்.காரணம் மேலே புஃல்சூட் அணிந்த ஜேம்ஸ்பாண்ட்...கீழே ஜட்டி அணியாத ஆதாம்.

Rachmaninoffஎன்ற மேதையின் 3வது இசைக்கோர்வையை வாசித்து பதக்கம் வெல்கிறான்.ஆனால் முற்றிலும் மனநிலை பிறண்டு போகிறான்.மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடையாமல் திரும்புகிறான்.முறிந்த மனதிற்க்கு மூலிகையாக சில்வியா வருகிறாள்.இவனது வெற்றிக்கு பின்னால் நிற்க்கிறாள்.
இப்படத்தின் இளையராஜா David Hirschfelder .இவரது இசைக்காக ஒருமுறை.....

டேவிட்டாக வாழ்ந்தவர்Geoffrey Rush.இவரது நடிப்புக்காக ஒரு முறை..... என பலமுறை பார்க்கலாம்....தப்பில்லை.