Sep 26, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ திக்கற்ற தாத்தாக்கள். \ பாகம் 03

நண்பர்களே...
 ‘புலம் பெயர்தல்’ இந்த நூற்றாண்டின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.
விருப்பமோ அல்லது பலவந்தமோ...
எதுவாகிலும்  ‘புலம் பெயர்தல்’ மனிதர்களுக்கு பதட்டத்தையும்...
மன உளைச்சலையும் தரும்.

இருப்பிடம்,
வேலை,
தட்ப வெப்பம்,
நட்பும் - உறவும் அற்றுப்போதல்,
உயிர் உத்திரவாதமின்மை,
பொருளாதார நிரந்தரமின்மை,
என அக,புற நெருக்கடிகள்
‘மெகா சீரியலாக’ வந்து கொண்டே இருக்கும்.

 ‘புலம் பெயர்தலை’ மையமாக வைத்து,
‘எழுத்துலக மாமேதை’ சுஜாதா அவர்கள்...
‘பிரிவோம் சந்திப்போம்’ இரண்டாம் பாகத்தை படைத்திருந்தார்.
எப்போது படித்தாலும், அதில் சொல்லப்பட்ட பிரச்சனைகள் உயிருடன் இருப்பதை உணர முடியும்.

வாருங்கள்...போவோம்...பெனிஸ் வீட்டுக்கு.
தாத்தாவுக்கும்,அவரது நண்பர்களுக்கும்  ‘அறுசுவை உணவு’ சமைக்கும் வாசம் மூக்கை துளைக்கிறதல்லவா !.



அடடா...பெனிஸ்  ‘தனக்குத்தானே’ பேசிக்கொண்டிருக்கிறானே !.

So grandpa will sit here

and his friends there...

No, grandpa will sit there.

Resembles the Last Supper...
No, grandpa will sit here...

Good... And now,
grandpa's friends...

Grandpa's friends are an unusual
clan because they're from lstanbul.

Their origin sets them apart both
historically and biologically.

தாத்தாவின் நண்பர்கள் ஒன்றாக நடந்து வருகிறார்கள்.
சிறுவனோடு வரும் ஒரு தாய் இவர்களிடம் வழி கேட்கிறாள்.

 Can you direct me
to Halcyone Street?

[ பெனிஸ்ஸின் பின்னணிக்குரலில்...]
தாத்தாவின் நண்பர்கள் காம்பஸ் முள் போல...
180 டிகிரிக்குள், வலது பக்கத்திலிருந்து-இடது பக்கத்துக்கும்,
இடது பக்கத்திலிருந்து-வலது பக்கத்துக்கும் திரும்பி பார்த்து...
ஒரு தீர்மானத்துக்கு வந்து... முகவரி சொல்வதை...
காட்சி ரூபமாக காணமுடிகிறது. 

First and foremost,
they are "magnetized."

It's like a compass that with
every geographical question...

it re-orients their identity.

Who they are, their origins
and where they are going.

-That way.

-Thank you...

This idiosyncracy is related
to their dietary habits.

For most, food involves the
sense of smell and taste.

For grandpa's friends it also
involves sound and sight.



தாத்தாவின் நண்பர்களை வரவேற்கிறான்.
வந்தவர்கள்  ‘டைனிங் டேபிளை’ பார்த்து மலைத்து நிற்கிறார்கள்.
நாமும் தான்.
பைவ் ஸ்டார் ஹோட்டல் நேர்த்தியுடன் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு
அலங்கரிக்கப்பட்டு தயாராக இருக்கிறது.

 Hello to you all! 
You all arrived at the same time. 
Come in!
-Did you find it easily?

-We came from THlSSEAS Street.

தாத்தாவின் நண்பர்கள்... தாங்கள் வந்த திசையை காட்டுகிறார்கள்.

But THlSSEAS Street isn't
that way, it's that way.

பெனிஸ்...நேரெதிராக... சரியான திசையை அடையாளம் காட்டுகிறான்.

He's right,
that's how we came.

ஒத்துக்கொள்கிறார்கள் தாத்தாக்கள்.

திக்கற்ற தாத்தாக்கள்.

இவர்கள் அந்த தாய்க்கு சரியான வழியை சொன்னார்களா ? 

இவர்கள், 
இஸ்தான்புல்லிலிருந்து பிடுங்கப்பட்டவர்கள் [ Uprooted ] ... 
ஏதென்ஸ் நகரத்திற்குள்  ‘நடப்பட்டவர்கள்’.
இவர்கள் இறுதி வரைக்கும்...திசை தெரியாமல் குழம்பத்தான் போகிறார்கள்.

‘புலம் பெயர்தலில்’ ...முதியவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை...
கவிதையாக...
நகைச்சுவை கலந்து வடிவமைத்துள்ளார் இயக்குனர். 

பெனிஸ்,
தாத்தாவின் நண்பர்களோடு அளவளாவும் காட்சியில்...
பெனிஸ்ஸின் குரலே, பின்னணியாக ஒலிக்கிறது.

I fear certain sounds when

they occur just before a meal.



Every major event in my life

began with the sound of a doorbell, 
or the sound of a phone.


பெனிஸ் வாழ்க்கையில்,
காலிங்பெல்லும்...
டெலிபோன் மணியும்...
முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னால்...
‘சங்கு’ ஊதுகின்றன.

இப்போது, டெலிபோன் மணி ஒலிக்கிறது.

டெலிபோன் உரையாடலை... அடுத்த பதிவில் கேட்போம்.

Sep 24, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ புலம் பெயர்ந்தவர்களின் வலிகள் \ பாகம் = 02


கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் இடம் பெற்ற
‘எ டச் ஆப் ஸ்பைஸ்’ படத்தின் மையக்கருத்தாக இருப்பது...
 ‘புலம் பெயர்தலின் வலிகள்’.

 ‘புலம் பெயர்தல்’...
சுயவிருப்பம், பொருளாதாரம், அரசியல்,
உள்நாட்டு-வெளிநாட்டுப்போர்கள், பிரிவினைகள் போன்ற...
பல்வேறு காரணிகளால்  ‘ சமைக்கப்பட்டு ’ திணிக்கப்படுகிறது.
இப்படத்தின் உள்ள  புலம் பெயர்ந்தவர்களின் வலியை...
 ‘புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்’ மட்டுமே நன்கு உணர முடியும்.
எனக்கு  ‘அந்த வரலாற்று சாபம்’ இல்லாததால்... புரிந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
ஏனெனில்  ‘மத்திய அரசின் பழுத்த பங்கில்’ நாம் இருக்கிறோம்.
இது ஒரு மாதிரியான  ‘இருத்தலியல்’ சூழல் [ Existential Situation ] .

 ‘பெனிஸ்’ என்ற கதாநாயகப்பாத்திரத்தின் பின்னணிக்குரலின் வாயிலாக இப்படம் துவங்குகிறது.
இருப்பினும், கதையில் உலாவும் பல்வேறு கதாபாத்திரங்களின்
‘ பாய்ண்ட் ஆப் வியூ’  மூலமாக  திரைக்கதை இயங்குவது...
இதன் தனிச்சிறப்பு.
இதுவே இத்திரைக்காவியத்தின் ‘ திரைக்கதை Presentation ’

போன பதிவில் நாம் பார்த்த காட்சியில்....
பெனிஸ்ஸின் குரலில் ஒலித்தது இதுதான்.

Granpa often said that the Greek word for
"dream" conceals within the word "belch". 

Initially, I paid no notice as
I could only do these 2 things.

Years after, I realised he was
referring to food and stories.

Both require an essential
ritual in order to be tastier.

That is, the presentation.

முதல் காட்சியின் முடிவில்... 
தொடரும் டைட்டில் காட்சியில்...
அகண்ட வான வெளியில், கோள்களுக்கு மத்தியில்...
 ‘சிவப்பு வண்ணக்குடை’ சுழன்று வருகிறது.
அற்புதமான சர்ரியலிசக்காட்சியில்...
 ‘சிவப்பு வண்ணக்குடையை’ மட்டும், நினைவில் பத்திரப்படுத்துங்கள்.

காலம் : கி.பி.2003 ; இடம் : ஏதென்ஸ் நகரம்.
படத்தின் நாயகன் பெனிஸ்,  ‘வானவியல்’ பேராசிரியர்.
மாணவர்களுக்கு வகுப்பெடுத்து கொண்டு இருக்கும் போது...
அவனைப்பார்க்க, தாத்தாவின் நண்பர் வருகிறார்.
வந்தவர், பெனிஸ்ஸின் தாத்தா...   ‘முதன் முறையாக’ ஏதென்ஸ் வரவிருப்பதை தெரிவிக்கிறார்.

“ நான் விமான நிலையம் சென்று அவரை அழைத்து வருகிறேன்.
உனது தாத்தாவின் நண்பர்களும் ஒன்று கூடி... அவரை வரவேற்க...
உனது வீட்டிற்கு  வருகிறார்கள்.
நீ எல்லோருக்கும் சமைத்து...உன் தாத்தாவை ஆச்சரியப்படுத்து ” என்கிறார்.

தாத்தா எங்கிருந்து வருகிறார் ?
துருக்கியிலிருக்கும்,
அன்றைய  ‘கான்ஸ்டாண்டிநோபில்’ [ Constantinople ] ...
இன்றைய  ‘இஸ்தான்புல்லிருந்து’ [ Istanbul ] ...
கிரேக்க நாட்டிலிருக்கும்,
 'ஏதென்ஸ்' [ Athens ] நகரத்துக்கு  ‘முதன் முறை’ வரவிருக்கிறார்.


பெனிஸ் கல்லூரியை விட்டு  வெளியே வருகிறான்.
கிரேக்க அரசியலின்,
‘பவர் சென்டராக’ விளங்கிய ‘அக்ரொபொலிஸ்’ [ Acropolis ]
கம்பீரமாக வீற்றிருக்கும்...
‘ஏதென்ஸ்’ நகரத்து எழில் மிகு காட்சியை கண் முன் விரிக்கிறார் இயக்குனர்.

*********************************************************************************
  ‘அக்ரொபொலிசை’, தமிழ் சினிமாவில்...
 சிம்ரன்,ஸ்நேகா இடுப்பை அசைப்பதற்கு பின்னணியாக்கி...
கொலை செய்திருப்பார்கள்.
சிம்ரன் \  படம் : 12 பி \ இயக்கம் :  ‘மறைந்த’ ஜீவா
சிநேகா \ படம் : ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே \ இயக்கம் : வசந்த்


*********************************************************************************


கடந்த பதிவில் இஸ்தான்புல் வரலாற்றை தெரிந்து கொண்ட நாம்...
இங்கே, ஏதென்ஸ் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
நமக்குத்தான்  ‘விக்கி பகவான்’ இருக்கிறாரே !.


ஏதென்ஸ்... ‘லாஜிக்கின்’ பிறப்பிடம்.
ஏன்?
எதற்கு?
எப்படி?
என கேட்க கற்பித்த...  ‘தத்துவ ஞானி’ சாக்ரடீஸ் [ Socrates ] அவதரித்த புண்ணிய பூமி.

********************************************************************************
சாக்ரடீஸ் என்றதும் எனக்கு எப்போதும் நினைவுக்கு வருவது...
நடிகர் திலகம்தான்.
ராஜாராணி என்ற திரைப்படத்தில் வரும் ஓரங்க நாடகத்தில்,  
‘கலைஞரின்’ சொல்லோவியத்தில்...  
‘நடிகர் திலகம்’ அவர்கள்...சாக்ரடீஸாக வாழ்ந்து காட்டியிருப்பார். 

இக்காட்சி யூ ட்யூப்பில் கிடைக்கவில்லை.
நண்பர்கள் யாராவது முயற்சித்து...யூ ட்யூப்பில் இணைக்கவும்.

*********************************************************************************
பெனிஸ் தாத்தாவை வரவேற்க நாமும் ...அடுத்த பதிவிற்கு செல்வோம். 

 ‘எ டச் ஆப் ஸ்பைஸ்’ பட முன்னோட்டம் காணொளியில் காண்க...






Sep 23, 2012

In A Better World - 2010 \ Denmark \ அன்பே ஆயுதம்



நண்பர்களே...பழைய பதிவுகளின் லேபல்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்தேன்.
தவறுதலாக இப்பழைய பதிவு...வெளியாகி விட்டது.
மன்னிக்கவும்.



பின்லேடனை ஒழித்து கட்டி விட்டதாக மார் தட்டுகிறது அமெரிக்கா.
பிணத்தைக்கூட கடலில் வீசி விட்டோம் என்று கொக்கரிக்கிறார்  ‘ஜனநாயகச்சக்ரவர்த்தி’ ஒபாமா.

இரட்டை கோபுரத்தை தகர்த்தது தீவிரவாதம் என்றால்
வியட்நாமில்....
ஆப்கானிஸ்தானில்....
ஈராக்கில்....
லிபியாவில்....
செய்ததற்கு பெயர் ஜனநாயகமா?

உலகத்தின் அனைத்து தீவீரவாதத்துக்கும் குத்தகைக்காரனான...
 ‘அமெரிக்கா’ திருந்தி...
அணு ஆயுதங்களையெல்லாம் அழித்து விட்டு...
அன்பை ஆயுதமாக தரித்தால்....?

இதைத்தான் In A Better World என்கிற திரைப்படம் பாடமாக போதிக்கிறது.
தனது இயக்கத்தால்...
இப்படத்திற்க்கு ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்
இரண்டு அவார்டுகளையும்...
ஒருசேர வாங்கி தந்திருக்கிறார் இயக்குனர் Sussanne Bier.
[நம்மூர் சுகாசினி,ரேவதி எங்கே?]


இப்படத்தின் கதை இரண்டு டிராக்கில் பயணித்து...
அன்பென்கிற ஜங்சனில் இணைந்து...
மனிதநேயம் என்கிற ஒரே டிராக்கில் பயணிக்கிறது.


அண்டன்... சூடானில் பணி புரியும் டாக்டர்.
இவர் பணி புரிவது அப்பல்லோ மாதிரி பைவ் ஸ்டார் மருத்துவமனை அல்ல.
புழுதி பறக்கும் வெட்ட வெளியில்...
சூரியனையும்,மழையையும்...பெயருக்கு மறைப்பது போல்...
பாவ்லா காட்டும்...  ‘ கொட்டகைதான்’ மருத்துவமனை.

அண்டன்,
கழுத்தில் ஸ்டெத்தும்...
இதயத்தில் மனித நேயமும் மட்டுமே வைத்து பணி புரிகிறார்.
கள்ளமில்லாத அந்த கருப்பின மக்களின் புன்னகையை  பீஸாக பெற்றுக்கொள்கிறார்.


அண்டனின் குடும்பம் டென்மார்க்கில்.
மனைவியும் டாக்டர் ஜாதியே...


இவர்களது விவாக பந்தம்... ‘ரத்து’ என்கிற புள்ளியை நோக்கி
பிடிவாதமாக நகருகின்றது.
இவர்களது மூத்த மகன்தான் எலியாஸ்.
இவனுக்கு துணையாக பள்ளியில் வந்து சேருகிறான் கிரிஸ்டன்.


கிரிஸ்டன் லண்டனில், தாயை கேன்சருக்கு தின்னக்கொடுத்து விட்டு தந்தையோடு தாயகம் திரும்பியவன்.
தாயை சரியாக பராமரிக்காமல் சாவில் தள்ளியது தந்தையே என்று உறுதியாக நம்புகிறான் கிறிஸ்டன்.


இந்த மன அழுத்தம்...
வன்முறையை வழிமுறையாக்குகிறது.
நண்பன் எலியாசை அடித்த...போக்கிரி மாணவனுக்கு ‘மரண அடியை’ பரிசளிக்கிறது.


வன்முறை பழக்கம்...வழக்கமாகி...எலியாசின் தந்தையை அடித்த ரவுடியின் காரை பாம் வைத்து தகர்ப்பதில் முடிகிறது.
எதிர்பார்த்தபடி... கார் வெடிப்பது நடக்கிறது.
எதிர்பாராதபடி... எலியாஸ் விபத்தில் சிக்கியதும் நடக்கிறது.

எலியாஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறான்.
எலியாஸ் உயிர் பிழைத்தானா?
கிறிஸ்டன் திருந்தினானா?
விடை தருகிறது கிளைமாக்ஸ்.

இப்படத்தில் வரும் இயற்கையழகு காட்சிகள்...
பல அர்த்தத்தை பொதிந்து வருகின்றது.
இதற்காகவும்...
ஆபாசமில்லா...காவியத்தன்மை இருப்பதாலும்... குடும்பத்தோடு பார்க்கலாம்.

 ‘உலக தாதா’ ஒபாமாவுக்கு... இப்படத்தின் டிவிடி அனுப்ப உத்தேசம்.

படம் பெற்ற விருதுகள் பட்டியல்...விக்கிப்பீடீயா உபயத்தோடு.

 On 19 January 2011, it made the short list for Best Foreign Language Film[11] and on 25 January, it was selected as one of the final five nominees[12] and won as the Danish entry for the Best Foreign Language Film at the 83rd Academy Awards.[13] The film also won for Best Foreign Language Film at the 68th Golden Globe Awards.[14] Additionally, it won:
  • Rome International Film Festival 2010:[15]
    • Marc’Aurelio Audience Award for Best Film
    • Marc'Aurelio Grand Jury Award
  • Sevilla Festival de Cine 2010:[16]
    • Best Director
    • Best Screenplay
  • Tallinn Tarta, Black Nights Film Festival 2010:[15]
    • Best Male Actor
  • Thessaloniki International Film Festival 2010:[15]
    • Creative Excellence Award

படத்தின் முன்னோட்டம்... கானொளியில் காண்க.


Sep 21, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ ‘ மசாலா ’ உலகசினிமா.\ பாகம் = 01

நண்பர்களே...
 ‘மசாலா’ தலைப்பிட்டு...
இங்கே உங்களை வரவழைத்ததற்கு காரணம் இருக்கிறது.
பதிவை படித்த பின்னும்...படம் பார்த்த பின்னும்...
இதை விட...
பொருத்தமான தலைப்பிருக்க முடியாது என ஒத்துக்கொள்வீர்கள்.

கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில்,
இடம் பெற்ற காவியங்களில்...
ஜூலை 12ம் தேதி திரையிடப்பட்ட
இக்காவியம்...பலத்த கரகோஷம் பெற்றது.



ஹேராமைப்போலவே,
இப்படத்தின் இயக்குனர் Tassos Boulmetis...நம்மை வரலாற்றின் பக்கம் அழைத்து செல்கிறார்.


இப்படத்தை பார்ப்பதற்கு முன்  ‘இஸ்தான்புல்’ நகரத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.

இஸ்தான்புல் வரலாற்றை தெரிந்து கொள்ள கிளிக்கவும்.

இது போன்ற உலகசினிமாக்கள் மூலமாகத்தான்...
கொஞ்சமாவது சரித்திரத்தை தெரிந்து கொள்ள முடிகிறது.
இல்லையென்றால் சரித்திரம் தெரியாத தரித்திரனாகவே இருந்திருப்பேன்.

இப்போது துருக்கியின்  ‘அரசியல் சரித்திர கேக்கிலிருந்து’ சிறு துண்டு இதோ...

By 18 September 1922, the occupying armies were expelled, and the new Turkish state was established. On 1 November, the newly founded parliament formally abolished the Sultanate, thus ending 623 years of Ottoman rule. The Treaty of Lausanne of 24 July 1923, led to the international recognition of the sovereignty of the newly formed "Republic of Turkey" as thesuccessor state of the Ottoman Empire, and the republic was officially proclaimed on 29 October 1923, in the new capital of Ankara.[11] The Lausanne treaty stipulated a population exchange between Greece and Turkey, whereby 1.1 million Greeks left Turkey for Greece in exchange for 380,000 Muslims transferred from Greece to Turkey.[39]

யோவ்...  ‘உ.சி.ர’ ! ...
[ என் பதிவுலக நண்பர்கள் வைத்த...எனக்கும் பிடித்த... செல்லப்பெயர் ]
ஏய்யா! உசிரை வாங்குற...
இந்த வரலாறு தெரியலன்னா...விளங்காதா ? என கோபிக்க உங்களுக்கு  ‘உரிமை’ இருக்கிறது.
விளக்கமளிக்க எனக்கு  ‘கடமை’ இருக்கிறது.

ஒருவர், “ இந்தாங்க திருப்பதி லட்டு ” எனத்தருகிறார்.
 ‘திருப்பதி’ எந்த திசை ? என அறியாதவராயிருந்தாலும்...
 ‘திருப்பதி லட்டு’ சுவையில் உங்களை வீழ்த்தி விடும்.
நீங்கள் திருப்பதி சென்றவராயிருந்தால்...
அந்த லட்டின் மகிமை,கிடைத்தலருமை,புனிதம் எல்லாம் உங்கள் சிந்தனையில் ஓடி..
கைகள் தானாக... பிரசாதம் வாங்க...பவ்யமாக... நீளும்.

வரலாறு படித்தவர்களும், ‘கட்டடித்தவர்களும்’ வாருங்கள்...
படத்திற்குள் செல்வோம்.

இப்படத்தின் முதல் ஷாட்,
இன்று முதல்...
உங்கள் சிந்தையில் பத்திரமாக இருக்கப்போகிறது.

அழகிய மார்பகங்கள்...
குளோசப்பில் பளீரென...பிரம்மாண்டமாக தெரிகிறது.
இக்காட்சியின் தீடீர் தாக்குதல்...
சிந்தையில்,  ‘உணர்ச்சிகள்’ கொப்பளிப்பதற்குள்...
ஒரு குழந்தை ‘திரை வலதில்’ காட்சிப்படுத்தப்படுகிறது.
முதல் ஷாட்டின் சில பிரேம்களிலேயே...
நம்மை காமுகனாக்கி...
அடுத்த சில நொடிகளில்,
நம்மை குழந்தையாக்கி...
‘மேஜிக்’ செய்திருக்கிறார் இயக்குனர்.

குழந்தை, பால் குடிக்க மறுக்கிறது.
தாயின் கரங்கள்...கொஞ்சம் சர்க்கரையை மார்பின் மேல் தூவுகிறது.
உடனே குழந்தை மார்புக்காம்பை கவ்வி பலமாக உறிஞ்சத்துவங்குகிறது.
 'A Touch Of Spice' என்ற தலைப்பு திரையில் ஒளிர்கிறது.


படத்தின் முதல் காட்சியிலேயே... தலைப்பின் மகிமையை உணர முடிகிறது.

இலக்கியம் [திரை இலக்கியம் & நூல் இலக்கியம்]
கலவி [ஹேராமில்...சாகேத்ராம் & அபர்னா சங்கமிப்பது.]
கவிதை
தாய்மை
இவை அனைத்துமே நம்மை மயங்கச்செய்வதில்...
சம வலிமை படைத்தவை.

பல்கேரிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள சில வாசகங்கள்...
 ' Motherhood is a Noble Function...
Because We All Have Mothers'...
தாய்மையின் பெருமையை உணர்த்துகிறது.

தாய்மைக்கு முதலிடம்...
குழந்தையின் தனித்தன்மை...
ஒரு சேர உணர முடிகிறது.

ஒரே ஒரு காட்சியை வைத்து...ஒரு பதிவை ஓட்டி விட்டான்...
என சிலர் நினைக்கக்கூடும்.

எழுத்துலக மாமேதை சுஜாதாவிடம்....
‘அணுகுண்டு செய்வது எப்படி?’ என அரைப்பக்கத்திற்குள் எழுதி தரச்சொன்னார் ஒரு பத்திரிக்கைக்காரர்.
சுருங்கச்சொல்லி விளங்கச்செய்வதில் மேதையான சுஜாதாவே... அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இந்தப்படத்திற்கும்...பல பதிவுகள் தேவைப்படுகிறது.

இதற்கான நியாயத்தன்மை காண...காணொளி காண்க...



  

Sep 17, 2012

Once Upon a Time in Anatolia - 2011 \ Turkey \ எங்கே தேடுவேன்...பிணத்தை, எங்கே தேடுவேன் ?

 ‘ஹேராம்’ என்ற  ‘உலகசினிமா ஆலமரத்திலிருந்து’ தாவ...
சரியான மரத்தை தேடிக்கொண்டிருந்தேன்.
 ‘கோண்ங்கள் பிலிம் சொசைட்டி’ அடையாளம் காட்டியது.
நன்றி... கோணங்களுக்கு.


 ‘துருக்கி’ சரமாரியாக உலகசினிமாவுக்கு...
‘தவப்புதல்வர்களை’ தந்து கொண்டே இருக்கிறது.
அவர்களில்  ‘தலைமகன்’ என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் இயக்குனர்
Nuri Bilge Ceylan.


 ‘முன்பு ஒரு காலத்துல’...என தலைப்பிலேயே கதை சொல்ல ஆரம்பித்தவ்ர் தான் ஒரு வித்தியாசமான  ‘கதை சொல்லி’ என...
தனது எல்லா படங்களிலும் நிரூபித்து வருகிறார்.

இவரது மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான   ' டிஸ்டண்ட் ' [ Distant ] என்ற படத்தை, செழியன் அவர்கள்  ஆனந்தவிகடனில் எழுதிய போதே நாம் இவரை
அறிந்திருந்தோம்.
2011ல் இப்படத்தை இயக்கி, கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய...
‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை... மீண்டும் அள்ளிக்கொண்டு போய் விட்டார்.
இனி அவரை, அள்ள விடாமல் தடுக்கும் பெரும் பொறுப்பு...
நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கைகளில் இருக்கிறது.

இருட்டில் மலைச்சரிவில் செதுக்கிய சாலையில் மூன்று வாகனங்கள் ஒளியை ஓவியமாக பாய்ச்சியபடி செல்கின்றன.
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர்,இரண்டு கைதிகள்,காவல்துறை வீரர்கள்,மற்றும் பணியாளர்கள் என ஒரு சிறு குழு ஒரு இரவு முழுக்க  'குற்றவாளிகளால்' புதைக்கப்பட்ட பிணத்தை தேடி அலைகிறார்கள்.
‘ இருக்கும் இடத்தை விட்டு...
இல்லாத இடம் தேடி...
எங்கெங்கோ அலைகிறார்கள்...
இந்த ஞானத்தங்கங்கள் ’.

அலைகிறார்கள்...அலைகிறார்கள்...அப்படி அலைகிறார்கள்.
அவர்களோடு நாமும் அலைந்து களைப்புறுகிறோம்.

ஆனால் அந்த களைப்பினூடே...
நீதித்துறை வல்லுனர்,காவல்துறை அதிகாரி,மருத்துவர் ஆகிய...
முக்கிய மூவருக்கிடையில் நடக்கும் உரையாடல்கள் மூலமாக...
இப்படம்...
உயர் தளத்தில் இயங்குவதை அடையாளம் கண்டு கொள்கிறோம்.


ஒரு கட்டத்தில் களைப்பாகி... அனைவரும் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று கிராமத்தலைவர் வீட்டில் தங்கி இளைப்பாறி பசியாறுகின்றனர்.
இங்கும்  ‘பவர் கட்’ வந்து சூழலை இருட்டாக்குகிறது.
 ‘இருட்டு’இப்படத்தின் மிக முக்கிய குறியீடாக  ‘பவர்ஃபுல்லாக’ பயன் படுத்தப்பட்டுள்ளது.

உலகத்தின் அத்தனை இருட்டையும் ஒரு நொடியில் போக்கும் வல்லமை படைத்த  ‘ஆதவன்’ எழும் நேரமான...
அதிகாலைப்பொழுதில்...
'இடம்' அடையாளம் காணப்படுகிறது.
எப்படி?

யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல்...
‘இருட்டையே’ துணையாகக்கொண்டு... ஒரே ஒரு நாய்...
அந்தப்பிணம் இருக்கும் இடத்தை  ‘கண்டு பிடித்து’...
தோண்டிக்கொண்டிருக்கும்.

‘கண்டு பிடித்த’ நாயை விரட்டி விட்டு...
இவர்களே... ‘அரும்பாடு பட்டு கண்டு பிடித்த ’
இடத்தை தோண்டுவார்கள்.
அப்போது  ‘ நாய் ’ பாய்ண்ட் ஆப் வியுவில் ஒரு ஷாட் போட்டிருப்பார் இயக்குனர்.
“ அட நாய்களா...
இந்த இடத்தை கண்டு பிடிக்கவா...
இவ்வளவு கஷ்டப்பட்டீங்க !”

கைகளும்,கால்களும் கட்டப்பட்ட நிலையில் பிணம் புதைக்கப்பட்டு இருக்கிறது.
இறந்தவனது உடல்... மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
அங்கே இறந்தவனது மனைவி,சிறு வயது மகனும் காத்திருக்கின்றனர்.


கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி மீது...
அச்சிறுவன் கல்லை தூக்கி அடிக்கிறான்.
வீசியெறியப்பட்ட கல்லில்... அச்சிறுவனின்  ‘கோபம்’ இருக்கிறது.
அவனது  ‘மொத்த கோபமும்’ அக்கல்லில் இறக்கி வைக்கப்பட்டு விட்டதை படத்தின் இறுதிக்காட்சி மூலம் நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்.

 ‘நீதியும்’, ‘காவலும்’ விடைபெற்றுச்செல்ல  ‘மருத்துவர்’ மட்டுமே இருக்கிறார்.

மருத்துவர்,
பிணத்தை அறுத்து பரிசோதிக்கும் மருத்துவர்,
போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை டைப் செய்பவர்,
மற்றும்  ‘இறந்தவர்’...
என இவர்களை மட்டுமே பிரதானமாக வைத்து...
இறுதிக்காட்சி பின்னப்பட்டுள்ளது.

 ‘லங்க்சை’ பரிசோதிக்கும் போது அதில் ‘மணல்’ இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.
எனவே உயிரோடு புதைக்கப்பட்டு கொல்லப்பட்டது
தெரிய வருகிறது.
ஆனால் மருத்துவர்... அந்த உண்மையை போஸ்ட்மார்ட்டம் ர்ப்போர்ட்டில் குறிப்பிடாமல் மறைக்கிறார்.
ஏன் ?

இது போல...
பல கேள்விகள்... படத்தில் எழுப்பப்படுகிறது.
விடைகள், படத்திற்கு...  ‘உள்ளேயும்...வெளியேயும்’ இருக்கிறது.
அவற்றில்,
வாழ்க்கையின் தத்துவங்கள்...யதார்த்தங்கள்...பரிகாசங்கள் இருக்கிறது.

நான் கண்டு பிடித்த கேள்விகளையும்...விடைகளையும் எழுதி...
எனது கோணத்தில்... இப்படத்தை நீங்கள் பார்ப்பது...
இப்படத்திற்கு நான் செய்யும் துரோகம்.


படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தனி  ‘அந்தாதியே’ பாடலாம்.
மலைச்சரிவுகளில் காமிராவை இடம் மாற்றி...
ஒவ்வொரு பிரேமையும் ஒவியமாக்கி இருக்கிறார்.
காட்சியில் இடம் பெற்ற வாகனங்களின்  ‘ஹெட்லைட்டை’ மட்டும் துணையாகக்கொண்டு இவர் வடித்திருக்கும் ஓவியங்கள்...
நமது  ‘இன்றைய’ ஓளிப்பதிவாளர்களுக்கு பாடங்கள்.


[ தமிழில்  ‘பாலுமகேந்திரா’ மட்டுமே... இந்த ஆளுமையில் வல்லவர்.]

அற்புதமான ஒரு உலகசினிமாவை...
உங்களுக்கு அறிமுகம் செய்த பெருமிதத்தோடு...
விடை பெறுகிறேன்...
அடுத்து,
கோவை ஐரோப்பிய திரைப்படத்திருவிழாவில் கண்ட...
மற்றொரு  ‘அற்புதத்தை’ காணத்தருகிறேன் !.

இப்படம் பெற்ற விருதுகள்...இயக்குனரின் ஏனைய படைப்புகள்...
விக்கிப்பீடீயா உபயத்தோடு...

Awards

[edit]Won

[edit]Nominations




Filmography

Films, Television & Video
YearTitleCredited asNotes
DirectorProducerWriter
1995Cocoon (OriginalKoza)YesYesYesShort film.
1998Small Town (OriginalKasaba)YesYesYesFeature debut.
2000Clouds of May (OriginalMayıs Sıkıntısı)YesYesYes
2002Distant (OriginalUzak)YesYesYes
2006Climates (Originalİklimler)YesYesYes
2008Three Monkeys (OriginalÜç Maymun)YesYesYes
2011Once Upon a Time in Anatolia (OriginalBir Zamanlar Anadolu'da)YesYesYes


படத்தின் முன்னோட்டம் காணொளி காண்க...




Sep 16, 2012

தமிழ்த்திரை மேதை பாலுமகேந்திராவை படியுங்கள்...


வலையுலகம்... இப்போது மேதைகளின் உலகமாகி விட்டது.
தமிழர்கள் நெஞ்சில் அழியாத கோலமிட்டவர்...வலையுலகத்தில் நர்த்தனமாட வந்து விட்டார்.
சிங்கம் கர்ஜிக்க தொடங்கி விட்டது.

திரையில் சாதித்த  ‘தங்கம்’.... வலையில்  ஜொலிக்க வந்து விட்டது.

கல்லூரிப்பருவத்தில் என்னை மயக்கிய திரை ஆசான்....
வண்ணத்தமிழில் வலைப்பக்கத்தில் வடிக்கும் சிற்பங்களை காண அழைக்கிறேன்.
பாலுமகேந்திரா வலைப்பக்கம் காண...கிளிக்கவும்.
அள்ளுங்கள்....பருகுங்கள்.

Sep 11, 2012

Hey Ram - 2000 \ இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் வெள்ளைக்காரா ! \ ஹேராம் = 023

நண்பர்களே...

ஹேராம் பட விமர்சனம் எழுதுவதற்கே எவ்வளவு எதிர்ப்புகள் ?.
படத்தை உருவாக்க கமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் ?.


படம் உருவாகும் போது மத்தியில் ஆட்சியிலிருந்தது பி.ஜே.பி.
தமிழகத்தில்...பிஜேபியோடு கூட்டணி போட்ட கலைஞர் ஆட்சி.
ஒவ்வொரு ஷாட் வைக்கும் போதும்...ஹிந்து,முஸ்லீம்,பிஜேபி,காங்கிரஸ்,கலைஞர்,இத்தனைக்கும் மேலாக சென்சார்.... இவை எல்லாம் மண்டைக்குள் ஓடும்.
சினிமா மொழி தெரிந்த காரணத்தால் தான் சொல்ல வந்த கருத்தை குறியீடாக்கி...அற்புதமாக பதிவு செய்து விட்டார்.
இன்னும் சொல்லப்போனால்... மேல குறிப்பிட்ட அனைவரையும்  ‘கடந்து’ விட்டார் கமல்.

சென்சாருக்கு மட்டும் ஒரு வேன் நிறைய ஆவணங்களை எடுத்துப்போய் வாதிட்டு சென்சார் வாங்கினார் எனக்கேள்விப்பட்டுள்ளேன்.

நல்ல படம் எடுக்க நாய் படாத பாடு படணும்.

 ‘பாடு பட்டு எடுத்த’...ஹேராமுக்குள் நுழைவோம்.


ஆர்.எஸ்.எஸ்ஸின்...
இரண்டாவது முக்கிய தலைவரான எம்.எஸ்.கோல்வால்கரை [M.S. Golwalkar ],  ‘அபயங்கராக’ ஜெராக்ஸ் எடுத்த மாதிரி தோன்றவில்லையா !.

 அபயங்கர், சாகேத்ராமை... ‘நல்லா வேட்டையாடு’ என வாழ்த்தியனுப்புகிறான்...
ஆயுதமேந்திய அபயங்கரின் தொண்டர்கள்...
இரு புறமும் விலகி வழி விடுவதில் ராணுவ ஒழுங்கு இருக்கும்.

பின்னணியில் மரண ஓலங்கள் ஒலிக்க...பற்றியெறியும் நெருப்புக்கு மத்தியில் ராம் ஓடுகிறான்.
சுற்றி நடக்கும் அவலங்களை காணச்சகியாமல் தப்பித்து ஒடுவது போல்  ‘நடிகர் கமலின்’ உடல் மொழி இருக்கும்.

நீண்ட நெடிய வாள்களுடன், சீக்கியர்கள் கூட்டமாக நின்று கொண்டு...
ஒரு இஸ்லாமிய இளைஞனை வெட்டிக்கொல்வதை பார்ப்பான் ராம்.
 ‘திலகமிட்ட ராமை’...  ‘ஹிந்து’ என அடையாளம் கண்டு சீக்கியர்கள் கையசைக்க... பதிலுக்கு ராமும் கையசைக்கிறான்.
இக்காட்சியின் மூலமாக  ‘பதிலடி வன்முறையில்’ ஹிந்து-சீக்கியர் கூட்டணியாக இயங்கிய வரலாறை
சொல்கிறார்  ‘இயக்குனர் கமல்’.

 ‘கலங்கலாக’ இருக்கும் வானத்தின் பின்னணியில் ...
வல்லூறுகள் வட்டமிடும்...ஒரு  ‘ஷாட்டை’ போட்டிருப்பார்
‘இயக்குனர் கமல்’.

ஹேராம் படத்தில்... வானம் நீல நிறமாக தோன்றுவதை காட்சிப்படுத்தவில்லை என  ‘ஒளிப்பதிவாளர் திரு’ ஒரு பேட்டியில் சொன்னதாக...  ‘ஹாலிவுட் பாலா’ போனில் பேசும் போது கூறினார்.
அவரிடம் பேசிய பிறகே அக்குறியீட்டை  ‘கவனித்தேன்’.
நன்றி பாலா.

கலங்கலான வானம் மேலே...
விக்டோரியா மகால் கீழே...  பின்னணியில் இருக்க...
முன்னணியில் பிணங்கள் கிடப்பதை குறியீடாக்கி உள்ளார்.
இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்                                                                                                                                                                                 வெள்ளைக்காரா...

உனது பிரித்தாளும் சூழ்ச்சியை... இன்றும் ஆளுகின்ற வர்க்கம் கையாள்வதை கூடங்குளத்தில் கண்கூடாக பார்க்கிறோம்.
 
அடுத்த பதிவில் சந்திப்போம்.

காணொளி காண்க...


Sep 9, 2012

Hey Ram - 2000 \ திரை மொழி இலக்கணம் \ ஹேராம்=022

நண்பர்களே...
ஹேராம்=020  ‘வாதமா?பிடிவாதமா?’ பதிவில்...
திரு.ராஜா சுந்தர்ராஜன் அவர்கள் புரிந்த...
கமல் மற்றும் மகேந்திரனுக்கு எதிரான வாதங்களையும்...
நண்பர் கருந்தேள் ராஜேஷின்  ‘ஆமாம்...சாமியையும்’
இடம் பெறச்செய்தேன்.
அந்தப்பதிவில் விவாதம் செய்ய மறுத்திருந்தேன்.
ஏனென்றால் சமீபத்தில்தான்  ‘இயற்கை விஞ்ஞானி’ ஐயா...நம்மாழ்வார் அவர்கள் எழுதியதை படித்திருந்தேன்.
“ விவாதம் செய்யாதீர்கள்...
நண்பர்களை இழந்து விடுவீர்கள் ”

இருந்தாலும் தீவிர சினிமா வேட்கை உடைய இருவர் அதில் இடம் பெற்ற திரை நுட்பங்களை பற்றிய விளக்கம் கேட்டனர்.

///நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.////

சார்... இதைப்பற்றி விளக்க முடியுமா?

எனது விளக்கம் :
 “ இரண்டும் ஒன்றே...
 ‘ஸ்கீரின்ஸ்பேஸ் ஆக்குபைடு’ ரஷ்ய திரை மொழி.
 ‘சைஸ் ஆப் கம்போசிஸேசன்’ ஹாலிவுட் திரை மொழி ”.

///திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.///

எனது விளக்கம் :

முதலில் சினிமா மொழி தெரியாதவர்கள் கமல்,மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களை விமர்சிக்க கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

 ‘எனது இலக்கணம்’ என ஒன்றை அவர் அவருக்குள் வைத்துக்கொள்வதில் யாரும் ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் இலக்கணம் பொதுவானது.
 ‘சினிமாவின் இலக்கணம்’....
 கிரிபித்,ஐஸன்ஸ்டைன்,புதோவ்கின்,கோடார்டு என ஜாம்பவான்கள் எழுதியது.
அதில் கை வைக்க முடியாது.

ஏற்க்கெனவே இருக்கின்ற இலக்கணத்தை உடைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால்...
திரு ரா.சு. அவர்கள்  ‘திரை வலது-திரை இடதுக்கு’ அவராக எழுதிய  இலக்கணப்படி ...  ஒரு படம்  எடுத்துக்காட்டி காவியமாக்கட்டும்.
இரு கரம் தட்டி வரவேற்கலாம்.

உலகசினிமா ஜாம்பவான்கள் பலரும் கடைப்பிடிக்கும் சினிமா மொழியின்படி,
எனது விளக்கம்... 
நாம் எழுதும் போதும்,படிக்கும் போதும்  ‘இடதிலிருந்து வலதுக்கு’ இயங்குவோம். 
எனவே நமது சப்-கான்ஸியஸ் மைண்ட் ‘முக்கியவற்றை’ இடதிலும், முக்கியமல்லாதவைகளை வலதிலும் குறித்துக்கொள்ளும்.
[ அரபு,ஜப்பான் போன்ற இடதிலிருந்து வலது பழக்கமுடைய நாட்டவர்களுக்கு எதிர் மறையாக இருக்கும்.]
எனவே படைப்பாளிகள்  ‘திரை வலது-திரை இடதை’ ஹீரோ-வில்லன் என்பதை வைத்து தீர்மானிக்க மாட்டார்கள்.
திரைக்கலையின் பல்வேறு அம்சங்கள் தீர்மானிக்கும் விஷயம் அது.

அவற்றில் முக்கிய சிலவற்றை மட்டும் சொல்கிறேன்....
காட்சியின் தன்மை...
அடுத்து வரும் காட்சிக்கு தொடர்பு படுத்துவது...
காரெக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
கன்டெண்ட் பாய்ண்ட் ஆப் வியூ...
ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப்  வியூ...
கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ...
*********************************************************************************


Titanic-1997 \ English \ Directed by James Cameron
 ‘கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ ஷாட்’ டைட்டானிக் படத்தில் வருகிறது.
கப்பலை படைத்தவர்...
 “ இக்கப்பலை கடவுளால் கூட ஒன்றும் செய்ய முடியாது ” என கொக்கரிப்பார்.
 ‘‘கடவுள் சிரித்தார்’.

கப்பல் மூழ்கும் போது,  ‘எக்ஸ்ட்ரீம் டாப் ஆங்கிளில்’....
 கடவுளின் பாய்ண்ட் அப் வியூவில் அந்த ஷாட்டை படைத்திருப்பார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

*********************************************************************************
இப்படி பல விஷயங்கள் திரை வலது-திரை இடதை தீர்மானிக்கும்.



இப்போது உதாரணத்துக்கு ஹேராமுக்குள் நுழைவோம்.
அபயங்கரை திரை இடதிலும்...
ராமை திரை வலதிலும்  ‘எண்ட்ரி’ கொடுத்து கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர் கமல்.

ஏன் அப்படி செய்தார்?
 ‘கில்ட்டி கான்சியஸ்ஸில்’ இருக்கும் ராம்...
  ‘தெளிவற்ற மனநிலையில்’ இருப்பதால் திரை வலதிலும்,
சிந்தையிலும்...சித்தாந்தத்திலும் தெளிவாக இருக்கும் அபயங்கரை...
 திரை இடதிலும் இடம் பெறச்செய்தார் இயக்குனர் கமல்.

[ இயக்குனராக மகேந்திரனும்...ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவும் இணைந்து உருவாக்கிய  ‘முள்ளும் மலரும்’ படத்திலும்...
இதே சிச்சுவேஷன்தான்...
இதே நிலைப்பாடுதான்.]

இரு தரப்பு வாதங்களை கேட்ட உங்களுக்கு...
 சினிமா மொழி தெரியாத காரணத்தால் மட்டுமே ஹேராமை புரியாமல் விமர்சிக்கின்றனர் என்ற முடிவு கிடைக்கிறதா!

இனி திரைக்கதையிலிருந்து...
*********************************************************************************

           l edit this paper.
lt has my address on it.

Come and meet me.
We have a lot to do. 

Don't go like this. 

People won't know what you are. 

Good hunting.
************************************************************
 குங்குமத்தை நெற்றியிலிட்டு  ‘ஹிந்து’ என அடையாளப்படுத்தி அனுப்புகிறான் அபயங்கர்.

இனி அடுத்த பதிவில்... ‘ஹாலிவுட் பாலா மேட்டரோடு’  சந்திக்கிறேன்.





Sep 7, 2012

Hey Ram-2000 \ இரண்டு கைகளால் இமயத்தை மறைக்க முடியுமா? \ ஹேராம்=21

நண்பர்களே...
நாம் இப்போது அலசிக்கொண்டிருக்கும் காட்சி...
ஹேராமிலேயே மிக முக்கியமான காட்சியாக கருத வேண்டி உள்ளது.
சித்தாந்தத்தில் உந்தப்பட்ட அபயங்கரும்,எந்த சித்தாந்தத்தையும் பின்புலமாக கொள்ளாத சாகேத்ராமும் சந்திக்கும் இக்காட்சியை  ‘இருத்தலியல் சூழலில்’ படைப்பாளி கமல் வடிவமைத்துள்ளார்.

இருத்தலியல் [ Existentialism ] என்றால் என்ன?
விக்கிப்பீடீயாவை தேடி படித்துக்கொள்ளுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Existentialism

தமிழில் படிக்க....

இருத்தலியல் பற்றி தமிழ் விக்கிப்பீடீயா காண...

ஆங்கிலம் தெரிந்தவர்கள்....தமிழ் விக்கிப்பீடீயா பக்கம் போகாதீர்கள்.
உயிருக்கு உத்தரவாதமில்லை.

*********************************************************************************


இது போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு என் ஆசான் சுஜாதா அந்தாதியே பாடியிருக்கிறார்..

 “தத்துவங்களில் ஊறித் திளைத்தவர்கள், அந்தத் தத்துவங்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்க முயலும் போது, சில அபாயங்கள் நிகழும்.
 அவற்றில் ஒன்று, பெரும்பான்மையானோரைச் சென்றடையும் வண்ணம் சொல்ல வேண்டும் என்பதற்காக, எளிமையான, பொருத்தமற்ற உதாரணங்கள் மூலம் விளக்கி, தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வது. 
இரண்டு, தத்துவங்களைச் சுற்றி இருக்கும் ஆழமான அகழிகளில், இன்னும் அதிகம் கூரிய பற்கள் கொண்ட முதலைகளை விட்டு, அருகே அண்டவிடாமல் செய்வது, முடிந்தால் கடிக்கவும் விடுவது.”

***********************************************************************

இருத்தலியல் பற்றி... தமிழ் விக்கிப்பீடீயாவிலிருந்து, சிறு பகுதி ...

 தனி நபரே அவரது சொந்த வாழ்க்கைக்கு மற்றும் அவ்வாழ்க்கையை உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் வாழவும்,[7][8] பல இருத்தல் தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள் துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவை இருப்பினும் பொருளளிக்க பொறுப்பானவர் என்பதை நிலைநிறுத்தினார்.[9]
[என்னய்யா...மொழி பெயர்ப்பு இது....படிச்சுட்டு இருக்கும் போதே ஆசனவாயில் புகை வருது.]

ஹேராமில்,இருத்தலியல் எவ்வாறு பொருந்துகிறது?
சாகேத்ராம் தன் காதல் மனைவியுடன் ஒரு சாதரணனை போல வாழ ஆசைப்பட்டான்.
ஊரே ரணகளமாக இருக்கையில் இவன் கிளுகிளுப்பாக இருந்தான்.
ஆனால்  ‘காமப்பசி கொண்ட ஒருவனால்’ அழைத்து வரப்பட்டவர்கள் வந்தார்கள்...கொன்றார்கள்.
கோபத்தில் கொலைகளை செய்து மிருகமாக மாறிய நிலையில்
பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமி...  ‘சரேபேஸ்வரராக’ காட்சி கொடுத்து சாகேத்ராமனை சாந்தப்படுத்துகிறாள்.
[ சரேபேஸ்வரர்-இரணியனைக்கொன்று உக்கிர மூர்த்தியாக மாறி விட்ட நரசிம்மரை சாந்தப்படுத்திய சிவனின்அவதாரம் ]
நாகரீக மனிதனாக திருந்திய வேளையில் ‘வேட்டையாடலாம்...விளையாடலாம்... ’என அழைக்கிறான் அபயங்கர்.
இவ்வளவுதாங்க... ‘இருத்தலியலில்’ ஹேராமுக்குள் நாம் இது வரை பார்த்த காட்சிகள்...
இன்னும் காட்சிகளை தொடர்ந்து காணவிருக்கிறோம்.

*********************************************************************************

ஆனா,ஹேராமுக்குள் எதுவுமே இல்லைன்னு கருந்தேள் தொடர்ந்து  ‘நாட்டியமாடிகிட்டே’ இருக்காரு.
நான் அவர்  ‘முட்டியை உடைக்க’ தொடர்ந்து  ‘தில்லானா’ வாசிச்சுகிட்டே இருப்பேன்.
சத்தியமா சொல்றேன்... ‘இருத்தலியலை’ சொல்லாம ஹேராமை ஓட்டிடலாம்னுதான் நெனச்சேன்.
 ‘கருந்தேள்தான்’ விடல.

*********************************************************************************

 ‘இருத்தலியல்’ ஹேராமுக்குள் இருப்பது  ‘மைக்ரோ லெவல்’ [ Micro Level ].
 ‘காஸாபிளாங்காவில் ’ இருப்பது  ‘மேக்ரோ லெவல்’ [ Macro Level ] .
இரண்டாம் உலகப்போரில்  ‘பிரான்ஸ்’ இருந்தது...  ‘இருத்தலியல் சூழல்’.

எத்தனையோ போர்களில்...எத்தனையோ நாடுகளை வென்ற  ‘வல்லரசான’ பிரான்ஸ்,  ‘ஜெர்மனியிடம் அல்லது ஹிட்லரிடம்’  கம்ப்யூட்டர்  ‘ஆன்’ ஆக எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட விரைவாக சரண்டர் ஆனதை... தத்துவஞானிகள்
ஆராய்ந்தார்கள்....ஆராய்கிறார்கள்....ஆராய்வார்கள்.
இச்சூழலை மையமாக வைத்து பின்னப்பட்டதே  ‘காஸாபிளாங்கா’
 [Casablanca \ 1942 \ English \ Directed by Michael Curtiz ].
காசாபிளாங்காவை...  ‘அறிமுகப்படுத்தி’ ஏற்கெனவே பதிவிட்டுள்ளேன்.

சரித்திரத்தை... திரைக்கதையாக்க...  ‘ரிச்சர்ட் அட்டன்பரோவின்’ காந்தி மற்றும்  ‘பெட்ரோலூசியின்’ லாஸ்ட் எம்பரர் ஆகிய இரண்டு படங்களுக்கு...  தலா இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆனால் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே உழைத்து...ஹேராமை உருவாக்கி
தரத்தில்  ‘காந்தியை’ தாண்டினார்...
‘ லாஸ்ட் எம்பரரை ’ தொட்டார் கமல்...
இதை விரிவாக பின்னால் வரும் பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

பத்தாண்டுகள் கழித்து நான் இன்று ஹேராமை கொண்டாடி வருகிறேன்.
நூறாண்டுகள் கழித்து என்னை விட சிறப்பாக ஹேராமை கொண்டாட வேறொருவன் வருவான்.
அதற்கான தகுதி ஹேராமிற்கு இருக்கிறது.

அடுத்த ஹேராம் பதிவிற்கு...  நண்பர் ‘ஹாலிவுட் பாலா’ உதவியிருக்கிறார்.
ஏன்?எதற்கு? எப்படி?...அறிய காத்திருங்கள்.
  




Sep 6, 2012

Hey Ram \ 2000 \ வாதமா ? பிடிவாதமா ?-ஹேராம்=020

நண்பர்களே...கடந்த பதிவுக்கு முதல் இரண்டு நாள்... ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை.
குழம்பி விட்டேன்.
 ‘அவுட்ஸ்டேண்டிங்’ என நான் கருதிய சில பதிவுகளுக்கு பின்னூட்டமே போடாமல் மானசீகமாக‘பேனாவை கீழே வைத்து விட்டு’ சத்தம் இல்லாமல் வந்து விடுவேன்.
 ‘பேனாவை கீழே வைத்தல்’ என்ற சொல்லாடல்  ‘பியூட்டிபுல் மைண்ட்’ படம் பார்த்தவர்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள்.
பார்க்க  வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த எளிய விளக்கம்....

படத்தின்  ‘நிஜ நாயகன்’ பல்கலை கழக பேராசிரியர்.
அவரது சாதனையை மெச்சி சக பேராசிரியர்கள் தங்களது பேனாவை அவர் முன்னால் வைத்து விட்டுப்போவார்கள்.
 ‘ஹாலிவுட் பாலா’ பாணியில் சொன்னால்  ‘கெலிச்சுட்டே வாத்யாரே’.

அதே போன்று  ‘குப்பை’ எனக்கருதும் பதிவுகளுக்கும் ‘சைலண்டா’ நழுவி வந்திருவேன்.

எனவே நீங்க சைலண்டா வந்துட்டு போனது எந்த ரகம்?
இந்தப்பதிவின் பின்னூட்டம் வாயிலாக தெரிந்து கொள்ள ஆவல்.

கடந்த பதிவு பற்றி நண்பர் ராஜேஷ் பேஸ் புக்கில் நடத்திய விவாதம் கீழே காண்க...

கீழே உள்ள வாதத்திற்கு பதிலளிக்க விரும்பவில்லை.

“ புகழ்வோம் பழிப்போம்....புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டோய் இவை

என்று திருமாலையே,உம்மை நாங்கள் புகழ்வோம்,பழிப்போம்,பதிப்போம்,மதிக்க மாட்டோம்
இதற்கெல்லாம் கோபப்படாதே என்று சொல்லும் அருமையான வெண்பாதான் எனக்கு வழிகாட்டி”.
என்று  ‘சுஜாதா’ எழுதியதே இனி என்றும் எனக்கு வழிகாட்டி.

முதல் கருத்து ராஜா சுந்தரராஜன் எழுதியது...
  • நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.

    நான் இலக்கண விதிகளை மதிக்காத ஆள் ஒன்றும் இல்லை. ஆனால், அதைக் குறுக்கி, சமைக்கத் தெரிந்தவன்தான் சாப்பாட்டுச் சுவை பற்றிப் பேச வேண்டும் என்பவனும் இல்லை. எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அதற்கு என் கைவசம் சான்றிதழ்கள் எல்லாம் கிடையாது.

    “ஹே ராம்” ஒரு குழப்பமான படம். கமல் அதில் நிரம்ப உள்ளுறைகள் (subtext) வைத்து யாத்திருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் காந்தியைப் புகழ்ந்து assimilate பண்ணுவது என்பது ஆர்.எஸ்.எஸ். பிற்காலத்தில் எடுத்த கொள்கைகளில் ஒன்று. சொல்லப்போனால் இது ஹிந்து தர்மத்தின் சர்வசதாக் கொள்கை (எ.டு. சக்தியை சிவனின் மனைவி என்றது; புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்றது). அதைத்தான் ‘ஹே ராம்’ செய்கிறது. (ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’யும்).

    திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.

    ||எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

    உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

    அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)||

    இது என்னுடைய கலைக்கொள்கை. நேசமித்ரன் கவிதைகளுக்காக எழுதியது.

  • Rajesh Da Scorp ஓகே. உங்க நிலைப்பாடு தெளிவா புரியுது. திரை-வலது பற்றிய கருத்து எனக்கு ரொம்பப் புதுசு. அதேபோல, படுபொருள் பற்றிய கருத்து அருமை. ஆனா, நான் ஏன் இந்தக் கேள்வியை உங்க கிட்ட கேட்டேன்னா, இப்போ ஒரு இயக்குநர் இதெல்லாம் நினைச்சே பார்க்காம எடுத்துருக்காருன்னு வெச்சிக்கிட்டா, அதை நாம ‘ஆஹா ஓஹோ’ என்று விளக்கி, அதைப் படிப்பவர்கள் அப்படி எண்ணிக்கொண்டு, ஒரு மோசமான படைப்பு, நல்ல படைப்பு என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு பல காலத்துக்குப்பிறகு வெளிவந்துவிட்டால்?

    சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது சரி. ஆனால் மோசமான கலைப்படைப்பு என்பது சிறந்ததாக ஆக்கப்பட்டுவிட்டால்?

  • Raja Sundararajan நமக்கு ஓர் அரசியற் சார்பு இருந்தால் ஒழிய (அல்லது அந்த இயக்குநர் பால் என்னென்று விளங்காத ஒரு பக்தி இருந்தால் ஒழிய) ஒரு படத்தை அதன் தகுதிக்கு மீறிப் புகழ மாட்டோம். ஒரு வெள்ளந்தியான மனிதர், எப்போதும், தன் ரசனை சார்ந்தே ஒன்றைப் பரிந்துரைக்கிறார். அவருடைய ரசனை நேர்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எனக்கு மிஷ்கின் பால் ஒரு மரியாதை இருந்தது. ("தமிழினி'யில் "அஞ்சாதே" பற்றி ஓஹோ என்று எழுதி இருந்தேன்). ஆனால் "யுத்தம் செய்" படத்தில் அவர் முன்வைத்த தகுதிக் கோட்பாடு அவரிடம் இருந்து என்னை முற்றாக விலக்கிவிட்டது, (மலம் அள்ளுபவன் மகனும் மந்திரம் ஓதுபவன் மகனும் வெறும் 'ஒன்று' அல்லது 'அரை' மதிபெண்ணுக்காக உயர்கல்வி நுழைவில் அடித்துக்கொள்வது நடைமுறை ஆகையால்). அது காரணம் எனது "முகமூடி" விமர்சனம் ஒருதலையானதோ என்று நான் அஞ்சினேன். ஆனால் உங்களைப் போன்ற திரைப்ப்ட ரசனை விற்பன்னர்களும் 'முகமூடி'யைக் கைவிட்டபோது என் விமர்சனம் வெள்ளந்தியானதுதான் என்று தெளிந்தேன். மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும். 'தினத்தந்தி'யில் "முகமூடி" விமர்சனம் எழுதிய ஆள் அப்படிப்பட்டவர்.

  • Rajesh Da Scorp ‎//மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும்// - இதை முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன். நீங்க சொன்னமாதிரி, இயக்குநர் அல்லது நடிகர்களின் மேல் இருக்கும் அளவுகடந்த பக்தியே சில சராசரி படங்கள் தகுதிக்கு மீறிப் புகழ் பெறுவதன் காரணம் என்பதை நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் அதில் என்ன விஷயம் என்றால், அதுவரை அந்தப் படத்தை விரும்பியவர்களே கூட, இப்படிப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனங்களை படித்து அந்தப் படத்தை வெறுக்க ஆரம்பித்ததும் நடந்திருக்கிறது (நடந்தும் கொண்டிருக்கிறது). பொறுத்திருந்து பார்ப்போம்