Showing posts with label மகேந்திரன். Show all posts
Showing posts with label மகேந்திரன். Show all posts

Sep 9, 2012

Hey Ram - 2000 \ திரை மொழி இலக்கணம் \ ஹேராம்=022

நண்பர்களே...
ஹேராம்=020  ‘வாதமா?பிடிவாதமா?’ பதிவில்...
திரு.ராஜா சுந்தர்ராஜன் அவர்கள் புரிந்த...
கமல் மற்றும் மகேந்திரனுக்கு எதிரான வாதங்களையும்...
நண்பர் கருந்தேள் ராஜேஷின்  ‘ஆமாம்...சாமியையும்’
இடம் பெறச்செய்தேன்.
அந்தப்பதிவில் விவாதம் செய்ய மறுத்திருந்தேன்.
ஏனென்றால் சமீபத்தில்தான்  ‘இயற்கை விஞ்ஞானி’ ஐயா...நம்மாழ்வார் அவர்கள் எழுதியதை படித்திருந்தேன்.
“ விவாதம் செய்யாதீர்கள்...
நண்பர்களை இழந்து விடுவீர்கள் ”

இருந்தாலும் தீவிர சினிமா வேட்கை உடைய இருவர் அதில் இடம் பெற்ற திரை நுட்பங்களை பற்றிய விளக்கம் கேட்டனர்.

///நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.////

சார்... இதைப்பற்றி விளக்க முடியுமா?

எனது விளக்கம் :
 “ இரண்டும் ஒன்றே...
 ‘ஸ்கீரின்ஸ்பேஸ் ஆக்குபைடு’ ரஷ்ய திரை மொழி.
 ‘சைஸ் ஆப் கம்போசிஸேசன்’ ஹாலிவுட் திரை மொழி ”.

///திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.///

எனது விளக்கம் :

முதலில் சினிமா மொழி தெரியாதவர்கள் கமல்,மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களை விமர்சிக்க கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

 ‘எனது இலக்கணம்’ என ஒன்றை அவர் அவருக்குள் வைத்துக்கொள்வதில் யாரும் ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் இலக்கணம் பொதுவானது.
 ‘சினிமாவின் இலக்கணம்’....
 கிரிபித்,ஐஸன்ஸ்டைன்,புதோவ்கின்,கோடார்டு என ஜாம்பவான்கள் எழுதியது.
அதில் கை வைக்க முடியாது.

ஏற்க்கெனவே இருக்கின்ற இலக்கணத்தை உடைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால்...
திரு ரா.சு. அவர்கள்  ‘திரை வலது-திரை இடதுக்கு’ அவராக எழுதிய  இலக்கணப்படி ...  ஒரு படம்  எடுத்துக்காட்டி காவியமாக்கட்டும்.
இரு கரம் தட்டி வரவேற்கலாம்.

உலகசினிமா ஜாம்பவான்கள் பலரும் கடைப்பிடிக்கும் சினிமா மொழியின்படி,
எனது விளக்கம்... 
நாம் எழுதும் போதும்,படிக்கும் போதும்  ‘இடதிலிருந்து வலதுக்கு’ இயங்குவோம். 
எனவே நமது சப்-கான்ஸியஸ் மைண்ட் ‘முக்கியவற்றை’ இடதிலும், முக்கியமல்லாதவைகளை வலதிலும் குறித்துக்கொள்ளும்.
[ அரபு,ஜப்பான் போன்ற இடதிலிருந்து வலது பழக்கமுடைய நாட்டவர்களுக்கு எதிர் மறையாக இருக்கும்.]
எனவே படைப்பாளிகள்  ‘திரை வலது-திரை இடதை’ ஹீரோ-வில்லன் என்பதை வைத்து தீர்மானிக்க மாட்டார்கள்.
திரைக்கலையின் பல்வேறு அம்சங்கள் தீர்மானிக்கும் விஷயம் அது.

அவற்றில் முக்கிய சிலவற்றை மட்டும் சொல்கிறேன்....
காட்சியின் தன்மை...
அடுத்து வரும் காட்சிக்கு தொடர்பு படுத்துவது...
காரெக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
டைரக்டர் பாய்ண்ட் ஆப் வியூ...
கன்டெண்ட் பாய்ண்ட் ஆப் வியூ...
ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப்  வியூ...
கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ...
*********************************************************************************


Titanic-1997 \ English \ Directed by James Cameron
 ‘கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ ஷாட்’ டைட்டானிக் படத்தில் வருகிறது.
கப்பலை படைத்தவர்...
 “ இக்கப்பலை கடவுளால் கூட ஒன்றும் செய்ய முடியாது ” என கொக்கரிப்பார்.
 ‘‘கடவுள் சிரித்தார்’.

கப்பல் மூழ்கும் போது,  ‘எக்ஸ்ட்ரீம் டாப் ஆங்கிளில்’....
 கடவுளின் பாய்ண்ட் அப் வியூவில் அந்த ஷாட்டை படைத்திருப்பார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

*********************************************************************************
இப்படி பல விஷயங்கள் திரை வலது-திரை இடதை தீர்மானிக்கும்.



இப்போது உதாரணத்துக்கு ஹேராமுக்குள் நுழைவோம்.
அபயங்கரை திரை இடதிலும்...
ராமை திரை வலதிலும்  ‘எண்ட்ரி’ கொடுத்து கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர் கமல்.

ஏன் அப்படி செய்தார்?
 ‘கில்ட்டி கான்சியஸ்ஸில்’ இருக்கும் ராம்...
  ‘தெளிவற்ற மனநிலையில்’ இருப்பதால் திரை வலதிலும்,
சிந்தையிலும்...சித்தாந்தத்திலும் தெளிவாக இருக்கும் அபயங்கரை...
 திரை இடதிலும் இடம் பெறச்செய்தார் இயக்குனர் கமல்.

[ இயக்குனராக மகேந்திரனும்...ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவும் இணைந்து உருவாக்கிய  ‘முள்ளும் மலரும்’ படத்திலும்...
இதே சிச்சுவேஷன்தான்...
இதே நிலைப்பாடுதான்.]

இரு தரப்பு வாதங்களை கேட்ட உங்களுக்கு...
 சினிமா மொழி தெரியாத காரணத்தால் மட்டுமே ஹேராமை புரியாமல் விமர்சிக்கின்றனர் என்ற முடிவு கிடைக்கிறதா!

இனி திரைக்கதையிலிருந்து...
*********************************************************************************

           l edit this paper.
lt has my address on it.

Come and meet me.
We have a lot to do. 

Don't go like this. 

People won't know what you are. 

Good hunting.
************************************************************
 குங்குமத்தை நெற்றியிலிட்டு  ‘ஹிந்து’ என அடையாளப்படுத்தி அனுப்புகிறான் அபயங்கர்.

இனி அடுத்த பதிவில்... ‘ஹாலிவுட் பாலா மேட்டரோடு’  சந்திக்கிறேன்.





Sep 6, 2012

Hey Ram \ 2000 \ வாதமா ? பிடிவாதமா ?-ஹேராம்=020

நண்பர்களே...கடந்த பதிவுக்கு முதல் இரண்டு நாள்... ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை.
குழம்பி விட்டேன்.
 ‘அவுட்ஸ்டேண்டிங்’ என நான் கருதிய சில பதிவுகளுக்கு பின்னூட்டமே போடாமல் மானசீகமாக‘பேனாவை கீழே வைத்து விட்டு’ சத்தம் இல்லாமல் வந்து விடுவேன்.
 ‘பேனாவை கீழே வைத்தல்’ என்ற சொல்லாடல்  ‘பியூட்டிபுல் மைண்ட்’ படம் பார்த்தவர்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள்.
பார்க்க  வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த எளிய விளக்கம்....

படத்தின்  ‘நிஜ நாயகன்’ பல்கலை கழக பேராசிரியர்.
அவரது சாதனையை மெச்சி சக பேராசிரியர்கள் தங்களது பேனாவை அவர் முன்னால் வைத்து விட்டுப்போவார்கள்.
 ‘ஹாலிவுட் பாலா’ பாணியில் சொன்னால்  ‘கெலிச்சுட்டே வாத்யாரே’.

அதே போன்று  ‘குப்பை’ எனக்கருதும் பதிவுகளுக்கும் ‘சைலண்டா’ நழுவி வந்திருவேன்.

எனவே நீங்க சைலண்டா வந்துட்டு போனது எந்த ரகம்?
இந்தப்பதிவின் பின்னூட்டம் வாயிலாக தெரிந்து கொள்ள ஆவல்.

கடந்த பதிவு பற்றி நண்பர் ராஜேஷ் பேஸ் புக்கில் நடத்திய விவாதம் கீழே காண்க...

கீழே உள்ள வாதத்திற்கு பதிலளிக்க விரும்பவில்லை.

“ புகழ்வோம் பழிப்போம்....புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டோய் இவை

என்று திருமாலையே,உம்மை நாங்கள் புகழ்வோம்,பழிப்போம்,பதிப்போம்,மதிக்க மாட்டோம்
இதற்கெல்லாம் கோபப்படாதே என்று சொல்லும் அருமையான வெண்பாதான் எனக்கு வழிகாட்டி”.
என்று  ‘சுஜாதா’ எழுதியதே இனி என்றும் எனக்கு வழிகாட்டி.

முதல் கருத்து ராஜா சுந்தரராஜன் எழுதியது...
  • நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.

    நான் இலக்கண விதிகளை மதிக்காத ஆள் ஒன்றும் இல்லை. ஆனால், அதைக் குறுக்கி, சமைக்கத் தெரிந்தவன்தான் சாப்பாட்டுச் சுவை பற்றிப் பேச வேண்டும் என்பவனும் இல்லை. எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அதற்கு என் கைவசம் சான்றிதழ்கள் எல்லாம் கிடையாது.

    “ஹே ராம்” ஒரு குழப்பமான படம். கமல் அதில் நிரம்ப உள்ளுறைகள் (subtext) வைத்து யாத்திருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் காந்தியைப் புகழ்ந்து assimilate பண்ணுவது என்பது ஆர்.எஸ்.எஸ். பிற்காலத்தில் எடுத்த கொள்கைகளில் ஒன்று. சொல்லப்போனால் இது ஹிந்து தர்மத்தின் சர்வசதாக் கொள்கை (எ.டு. சக்தியை சிவனின் மனைவி என்றது; புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்றது). அதைத்தான் ‘ஹே ராம்’ செய்கிறது. (ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’யும்).

    திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.

    ||எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

    உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

    அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)||

    இது என்னுடைய கலைக்கொள்கை. நேசமித்ரன் கவிதைகளுக்காக எழுதியது.

  • Rajesh Da Scorp ஓகே. உங்க நிலைப்பாடு தெளிவா புரியுது. திரை-வலது பற்றிய கருத்து எனக்கு ரொம்பப் புதுசு. அதேபோல, படுபொருள் பற்றிய கருத்து அருமை. ஆனா, நான் ஏன் இந்தக் கேள்வியை உங்க கிட்ட கேட்டேன்னா, இப்போ ஒரு இயக்குநர் இதெல்லாம் நினைச்சே பார்க்காம எடுத்துருக்காருன்னு வெச்சிக்கிட்டா, அதை நாம ‘ஆஹா ஓஹோ’ என்று விளக்கி, அதைப் படிப்பவர்கள் அப்படி எண்ணிக்கொண்டு, ஒரு மோசமான படைப்பு, நல்ல படைப்பு என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு பல காலத்துக்குப்பிறகு வெளிவந்துவிட்டால்?

    சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது சரி. ஆனால் மோசமான கலைப்படைப்பு என்பது சிறந்ததாக ஆக்கப்பட்டுவிட்டால்?

  • Raja Sundararajan நமக்கு ஓர் அரசியற் சார்பு இருந்தால் ஒழிய (அல்லது அந்த இயக்குநர் பால் என்னென்று விளங்காத ஒரு பக்தி இருந்தால் ஒழிய) ஒரு படத்தை அதன் தகுதிக்கு மீறிப் புகழ மாட்டோம். ஒரு வெள்ளந்தியான மனிதர், எப்போதும், தன் ரசனை சார்ந்தே ஒன்றைப் பரிந்துரைக்கிறார். அவருடைய ரசனை நேர்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எனக்கு மிஷ்கின் பால் ஒரு மரியாதை இருந்தது. ("தமிழினி'யில் "அஞ்சாதே" பற்றி ஓஹோ என்று எழுதி இருந்தேன்). ஆனால் "யுத்தம் செய்" படத்தில் அவர் முன்வைத்த தகுதிக் கோட்பாடு அவரிடம் இருந்து என்னை முற்றாக விலக்கிவிட்டது, (மலம் அள்ளுபவன் மகனும் மந்திரம் ஓதுபவன் மகனும் வெறும் 'ஒன்று' அல்லது 'அரை' மதிபெண்ணுக்காக உயர்கல்வி நுழைவில் அடித்துக்கொள்வது நடைமுறை ஆகையால்). அது காரணம் எனது "முகமூடி" விமர்சனம் ஒருதலையானதோ என்று நான் அஞ்சினேன். ஆனால் உங்களைப் போன்ற திரைப்ப்ட ரசனை விற்பன்னர்களும் 'முகமூடி'யைக் கைவிட்டபோது என் விமர்சனம் வெள்ளந்தியானதுதான் என்று தெளிந்தேன். மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும். 'தினத்தந்தி'யில் "முகமூடி" விமர்சனம் எழுதிய ஆள் அப்படிப்பட்டவர்.

  • Rajesh Da Scorp ‎//மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும்// - இதை முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன். நீங்க சொன்னமாதிரி, இயக்குநர் அல்லது நடிகர்களின் மேல் இருக்கும் அளவுகடந்த பக்தியே சில சராசரி படங்கள் தகுதிக்கு மீறிப் புகழ் பெறுவதன் காரணம் என்பதை நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் அதில் என்ன விஷயம் என்றால், அதுவரை அந்தப் படத்தை விரும்பியவர்களே கூட, இப்படிப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனங்களை படித்து அந்தப் படத்தை வெறுக்க ஆரம்பித்ததும் நடந்திருக்கிறது (நடந்தும் கொண்டிருக்கிறது). பொறுத்திருந்து பார்ப்போம்

Sep 3, 2012

Hey Ram- கமல் இந்துத்வா வெறியரா? \ 2000 \ ஹேராம் =019

நண்பர்களே...
‘ மீண்டு ’ வந்து விட்டேன்....

ஹேராமில்...
இப்போது நாம் காணவிருக்கும் காட்சிமிக முக்கியமானது...
கமல் ஒரு இந்துத்வா  வெறியர் என்பதற்கு முக்கிய சாட்சியாக இக்காட்சியையே  ‘கமல் எதிர்ப்பாளர்கள்’ குறிப்பிடுவார்கள்.
இது உண்மையா ? என ஆராய்ந்ததில் இரண்டு உண்மைகள் கிடைத்தன.
அந்த உண்மைகளை பதிவின் இறுதியில் சொல்கிறேன்... வாருங்கள்.

பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமியிடம் இருந்து கிடைத்த  ‘ஞானத்தால் ’
சாகேத் ராமின்  ‘ வெறி ’ அடங்கி  ‘ நெறி ’ ஆக்கிரமிக்கும் நேரம்...
தடை போட வருகிறது  ‘விதி’ அல்லது  ‘தருணம் ’.


சாகேத்ராமும்...அபயங்கரும்...துப்பாக்கியோடு ஒருவரை ஒருவர் எதிர் கொள்கிறார்கள்.
அபயங்கருக்கு பக்கபலமாக வந்திருக்கும் கூட்டத்தின் கைகளில் ஆயுதங்கள் பளபளக்கின்றன...கண்களில் வன்முறை பளபளக்கின்றன.
யார் இவர்கள் ?

சரித்திரத்தை பக்கம் ...பக்கமாக படித்து நான் தெரிந்து கொண்டதை சில வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்.

மனித சரித்திரத்தில்...முக்கிய பங்கு வகிக்கிறது மதம்.
 ‘ மிஷினரி ’ அமைப்பு கொண்ட  ‘ மதமே ’...தோன்றிய காலத்திலிருந்து  தொடர்ந்து உயிரோடு இயங்கி வருகிறது .
இந்த உண்மையை தெரிந்து கொண்டவர்கள்....
‘ இந்து மதத்திற்கும் ’ இப்படி ஒரு மிஷினரி அமைப்பை 1925 ல் தொடங்கி இருக்கிறார்கள்.
அதுவே  ‘ஆர்.எஸ்.எஸ் ’.


ராணுவப்பயிற்சியும்...கட்டுப்பாடும்...ஒரு சேர கற்பிக்கப்பட்டு...
செலுத்தப்பட்ட கூட்டத்தை...  சாகேத்ராம்   எதிர் கொள்வதை...
‘ இயக்குனர் ’ கமலின்,  ‘ ஷாட் கம்போஷிசனை ’ வர்ணிக்க எனது ஒட்டு மொத்த திரையறிவும் தேவைப்படுகிறது.
ஆயுதங்களோடு, ஆயத்தமாக ராணுவ அணிவகுப்போடு...
அணி வகுத்திருப்பதை...
கேமராவின்  ‘பேணிங் ஷாட்டும்’...
இளையராஜாவின்  ‘பேங்க் பேங்க் ’ இசையும்...
பார்வையாளர்களுக்கு ‘ வந்திருப்பவர்கள் யார் ? ’என அடையாளம் காட்டுகிறது.

இக்காட்சியின் அனைத்து ஷாட்களிலும்... ‘ போர்ஸ் & பவர் ’ இருக்கிறது.
இது  ‘திருவின்’ திருவிளையாடல்.

ராமின் பூணூலை அடையாளம் கண்டு கொண்ட அபயங்கர்... ‘அபிவாதயே ’ சொல்ல ஆரம்பிக்கிறான்.
 ‘அபிவாதயே’ என்றால் என்ன ?... என்பதை எனது பதிவுலக நண்பர் தெளிவாக விளக்கினார்.
அவருக்கு என் நன்றி.
 ‘அபிவாதயே ’ என்பது பிராம்மணர்களின் விசிட்டிங் கார்டு.
தனது குலம்..கோத்திரம்...இன்னார் வாரிசு...எனச்சொல்லி பெரியவர்களை வணங்கும் பழமையான முறை.
இன்றைய தலைமுறை... ‘அபிவாதயேயை’ சுருக்கி   ‘ஹாய்’
என இரண்டெழுத்து மந்திரத்தால் வழிபடுகிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் நண்பர்.

 ‘அபிவாதே’ ஆங்கில மொழியாக்கம்....

Of Kaushik, son of Vishwamitra... 

Of Kaushik, thrice blessed... 

Of Kaushik, the high priest
of Yajur Veda...

Of Kaushik,
l bear my lineage.

அபயங்கர் அபிவாதயே சொல்லும் போது...
‘ செமி சர்க்கிள் ட்ராலி ஷாட்டில் ’படம் பிடித்து காட்டியுள்ளார்
‘ இயக்குனர் ’ கமல்.
 ‘ வந்திருப்பவர்கள் குறுகிய வட்டத்தில் இருப்பவர்கள் ’ என அடையாளப்படுத்தி உள்ளார்.
ஏன் ? அரை வட்டம் ஷாட் போட்டு நிறுத்தினார்?...
அந்த வட்டத்தில்  ‘ இது வரை ’ சாகேத்ராமும் இல்லை.
 ‘ படைப்பாளி ’ கமலும் இல்லை.
இருந்திருந்தால்...  ‘ முழு வட்டம் ஷாட் ’ போட்டு முடித்திருப்பார்
‘ இயக்குனர் ’ கமல்.
இந்த குறுகிய வட்டத்தில்  ‘ படைப்பாளி கமல் ’ இல்லாமல் இருப்பதை
‘ தெளிந்த ’ மனம் படைத்தவர்கள் மட்டுமே உணர முடியும் .
         Vande Materam
(Salutation to the Mother Goddess) 

Would you like
to hunt with us?

 ‘வேட்டை’ எனபது மன்னர் ஆட்சியின் குறியீடு.
மிருகங்களை வேட்டையாடுவது மன்னாராட்சி பொழுது போக்கு. ‘வேட்டையை’பற்றி... ஹேராமில் பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

 ‘வேட்டைக்கு’ வர விரும்பவில்லை என்பதை...
 ‘ பின்னோக்கி நகர்ந்து... உடல் மொழியால்’ உணர்த்துகிறார் நடிகர் கமல்.
முதலில் சாகேத்ராம்-அபயங்கரை  ‘ஷாட் கம்போசிஷேனில்’ நெருக்கமாக காண்பித்தவர்...
 ‘பின் வாங்கலுக்குப்பிறகு’....
 ‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போசிஷேன் ’ [Size Of The Shot ] மெத்தடை உபயோகித்து...
சாகேத்ராம்---------அபயங்கர் இடைவெளியை அதிகப்படுத்தி காண்பித்திருப்பார்.

 ‘ சைஸ் ஆப் த ஷாட் ’ என்பது சினிமா மொழியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு கதாபாத்திரம் எந்த அளவு கம்போஸ் செய்யப்பட வேண்டும் என்பதை கதைச்சூழலை பொறுத்து...இயக்குனர் தீர்மானிக்கும் விஷயம்.
ஹேராமில், ‘ படைப்பாளி கமல் ’....  ‘ சைஸ் ஆப் த ஷாட்’ மூலம் சொல்லும் விஷயம்...
 ‘ வன்முறையிலிருந்து விலகி நிற்க விரும்புகிறான் சாகேத்ராம் ’
ஏனென்றால் ஹேராமில்...இந்த காட்சிக்கு பிறகு... சாகேத்ராம்  ‘சுயநலத்துடன்’ எந்த இடத்திலும் வன்முறையில் இறங்கவில்லை.

*********************************************************************************

‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போஷிசனில் ’ என்னை மிகவும் கவர்ந்த
‘ இன்னொரு லட்டை’ ...
தின்ன ஆசை இருந்தால்.... தொடருங்கள்.

தமிழ் திரையுலகின் மாமேதைகளுள் ஒருவரான மகேந்திரனின்
 ‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் அக்காட்சி இருக்கிறது.
 “ என்னை அநாதையாக்கி விட்டுப்போகாதே ” என கெஞ்சி நிற்பார் ரஜினி.
இங்கே ரஜினியை பெரிதாக  ‘ஷாட் கம்போசிஷேன்’ செய்திருப்பார் மகேந்திரன்.
ரஜினியை விலக்கி ஷோபா செல்லும்போது...ஷோபாவை பெரிதாக்கி...ரஜினியை சிறிதாக்கி ஷாட் கம்போசிஷேசன் செய்திருப்பார்.
ஷோபா மனம் மாறி...  ‘ பாசமலர்கள்’  ஐக்கியமான பிறகு...
நார்மல் கம்போசிஷேஷன் செய்திருப்பார் மகேந்திரன்.

தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களில்  ‘முள்ளும் மலரும்’ ஒன்று என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

**********************************************************************************
இனி அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

 “ ஐயா...எங்களுக்கு இரண்டு உண்மை தெரிஞ்சாகணும் ”

“ அடடே..மறந்து விட்டேன்.

ஒன்று...கமல் ஜாதி,மத வெறியன்....
 என இக்காட்சியை வைத்து  ‘ கெக்கேபிக்கியவர்கள் ’....
நடிகர் கமல்...இயக்குனர் கமல்...படைப்பாளி கமல் என பிரித்துப்பார்க்க பழகாதவர்கள்....என்ற உண்மை.

இரண்டு... ‘அலைந்து திரிபவனுக்கு’....
‘சினிமா மொழி’.... தெரியாது என்ற உண்மை.

ஹேராமின் இக்காட்சியை... காணொளியில் காண்க....

முள்ளும் மலரும் காணொளி காண...

Jul 30, 2012

Hey Ram- சுஜாதா,கமல்,மகேந்திரன்... முட்டாள்களா? \ 2000 \ ஹேராம் =016


போன ஹேராம் பதிவு மிகவும் சூடாகி விட்டது.
அதை பற்றி கிளைமாக்சில் பார்ப்போம்.

 ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’
கவியரசரின் தெய்வ வாக்கு மீண்டும்...மீண்டும் என் வாழ்வில் தொடர்கிறது.
அவரது அடுத்த வரி...என்னை எப்போதுமே வெளியே கொண்டு போய் விட்டு விடும்.


ஹேராம் பதிவின் மிக முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.
இந்தக்காட்சியை நடந்து முடிந்த...
‘சரித்திரத்தின் ஆவணமாக’ எடுத்து கொள்ள வேண்டும்.

உணர்வுகளுக்கு தீனி போடும் களமாக ஆக்கி விடக்கூடாது என்பதை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால்...
Hey Ram Is An Experiment With Truth By Kamal Haasan

இப்பதிவின் தொடக்கமாக... வேறொருவரின்... பதிவின் தொகுப்பை...
முதலில் பார்ப்போம்.
*********************************************************************************
” ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.


1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. 


கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.


ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 


ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். 
அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.


என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்”.


முழுப்பதிவையும் படிக்க இங்கே செல்லவும்

வேறொரு தளத்தில் எழுதப்பட்ட இக்கருத்தை தனது பதிவில் வெளியிட்டவர்

திரு.அலி என்ற இஸ்லாமிய சகோதரர்.
பத்திரிக்கையாளர்.
இப்பதிவுதான் கமலுக்கு கிடைத்த ஆஸ்கார்.
**********************************************************************************

 வெள்ளைக்காரன் புத்தியை புரிந்து கொண்டு... எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில்  சாகேத் ராம் வீட்டுக்கு திரும்புகிறான்.
கூர்க்கா செத்து கிடப்பது வன்முறை வீட்டுக்குள் வந்து விட்டதை ராமோடு நாமும் புரிந்து கொள்கிறோம்.
சூழ்நிலையை இன்னும் சரியாக கணிக்க தவறியதால்...வெகு எளிதாக அடிக்கப்பட்டு வீழ்கிறான்.
 பியானோவில் கட்டி வைக்கப்படுகிறான்.

பியானோ ‘தீமட்டிக் எக்ஸிஸ்டெண்ட்டாக’ ஹேராம் படத்தில் தொடர்ந்து காட்டப்படுகிறது. 
‘படிப்பவன்’ என்றால் பிரேமில் புத்தகங்கள் இருக்கும்.
 ‘குடிப்பவன்’என்றால் டாஸ்மாக் சரக்கிருக்கும்.
ராம் ‘ இசைப்பவன்’ என்பதை காட்ட  பியானோ இருக்கிறது.
பியானோ, அம்ஜத்-ராம் நட்பின் சின்னமாக  ‘ராமரானாலும்,பாபரானாலும்’ பாடலில் காட்டப்பட்டது.
 மீண்டும் பியானோ,ராம்-அபர்னா காதலின் சின்னமாக இருவரும் இணைந்து வாசித்த கவிதை காட்சியில் பங்கு பெற்றது.

 வன்முறையாளர்கள், கண்களுக்கு பியானோவாக தெரியாது.... மரத்தாலான  மேஜையாகத்தான் தெரியும்.
ராம்-அபர்னா காதல் வாழ்க்கையை கட்டமைத்த பியானோவில்...  ராம் கட்டப்பட்டிருப்பது முரண்.

 அல்தாப் வாயில்  ‘கத்தியை’ கவ்விக்கொண்டு பால்கனி வழியாக போகிறான். 

‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேசனாக’ அபர்னாவின் அலறலும்....
 ‘இண்டர்னல் கம்போசிஷேனாக’ ராமின் கதறலை வடிவமைத்துள்ளார்  ‘இயக்குனர் கமல்’ .

இதையே  ‘இண்டர்னல் கம்போசிஷேனில்’ அபர்னா கற்பழிக்கப்படுவதையும்...  ‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேனில்’ கமல் கதறுவதையும்... காட்டத்தெரியாதா  ‘இயக்குனர் கமலுக்கு’?

வன்முறையை வலிந்து காட்டி காசு பார்க்கும் ஈனப்பிறவி அல்ல கமல்.

அவருக்குள்ள சமூக அக்கறைக்கு...பொறுப்பு உணர்ச்சிக்கு இந்த ஒரு  ‘ஷாட் கம்போசிஷேசன்’ போதும்.  

தனது நீண்ட நாள் ஆசையை தணித்து கொண்ட அல்தாப்...
இப்போது மற்றவர்களை வரவேற்கிறான்.

 ‘இவன் எனக்குப்போதும்’என்று ஒருவன் மட்டும் ராமோடு இருக்க மற்றவர்கள் அபர்னாவை சீரழிக்க செல்கிறார்கள்.

ராமோடு இருக்க ஆசைப்பட்டவன் ‘ஹோமோசெக்ஸ்’விரும்பி.

அவன் ராமை தடவுவதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும்.  இக்காட்சியில் நடித்த நடிகர் பெயர் சத்யஜித்.
 ‘பதினாறு வயதினிலே’ படத்தில் டாக்டராக நடித்தவர். *********************************************************************************

இவரை, நான் தயாரித்து இயக்கிய  ‘ஆர்.எஸ்.தென்னமரக்குடி எண்ணெய்’ விளம்பர படத்தில் மாடலாக்கினேன்.
அப்போது ஹேராம் வெளியான நேரம். அந்த அனுபவத்தை இடைவேளையின் போது பகிர்ந்து கொண்டார்.

அவரிடம்  கமல்.... ‘ஹோமோ’காரெக்டர் பற்றி  சொல்லவேயில்லை..
அக்காரெக்டர் தன்மையை... சப்-டெக்ஸ்டாக காட்ட விரும்பியிருக்கிறார்
 ‘இயக்குனர்’ கமல்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகவும் நேசிக்கும் இஸ்லாமிய சகோதரர்களை மிக மோசமாக காட்ட விரும்பவில்லை.

இப்பதிவை படிக்கும் வரை சத்யஜித்துக்கு...தனது காரெக்டர் பற்றி தெரியப்போவதில்லை.

இக்காட்சியின் இறுதி கட்டமாக... மாடியிலிருந்து சத்யஜித் கீழே விழும் காட்சி பற்றி குறிப்பிடும் போது...
 “நான் நடிக்கப்பயப்பட்டேன்.
தைரியமா வாங்க...
நான் விழுந்து காண்பிக்கிறேன்.
அதை வந்து...முதல்ல  பாருங்க....என்று பால்கனியின் விளிம்புக்கு அழைத்துப்போய்....
தள்ளி விட்டு விட்டு போய் விட்டார்...பாவி மனுஷன் ”.
என்றார் சத்யஜித். 

**********************************************************************************

பல நேரங்களில் நடிகர்களை இப்படி ஏமாற்றித்தான் படமெடுக்க முடியும்.

நான் ஒரே ஒரு டயலாக்கை ஐம்பது டேக் எடுத்திருக்கிறேன்.
அந்த கஷ்டமான....நீளமான.... டயலாக்.... ‘வாவ்’
 அந்த  ‘பெரிய டயலாக்’ மாடலுக்கு எக்ஸ்பிரஸிவாக வரவேயில்லை.

கேமிராவை ஒட விட்டு... காமிரா பீல்டுக்கு வெளியே நின்று கொண்டு... காட்சிக்குறிய  ‘எம்மோட்டிவ்னஸ்ஸை’ கொண்டு வர ...
 கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
இப்போது கேமராவுக்கு வெளியே நின்று கொண்டு...
 நான் நடித்து கொண்டிருந்தேன்.
  “ அட நாயே...இந்த சின்ன டயலாக்கை... பேசத்தெரியாம... என்ன மயித்துக்கு... மாடல்னு வந்து... உயிரை வாங்குற” என்ற டயலாக்கை எனக்குள் பேசிக்கொண்டு...
 என் கோபத்தை ஒரு சதவீதம் கூட முகத்தில் காட்டாமல்....
“இதை பாரும்மா...ஐம்பது டேக்குமே... ஒ.கே டேக்குதான்...
ஆனா உங்கிட்ட இன்னும் பெட்டர்  ‘வாவ் ’ஒண்னு இருக்கு...
 எனக்கு அது வேணும்...”
இப்படி கால் மணிநேரம் கூசாம புளுகி தள்ளினேன்.
 இறுதியாக...
 “ உனக்கு எந்த ரெஸ்ட்டாரண்ட் பிடிக்கும்”
 “பார்க் ஷெரடன் தக்‌ஷின்”

 “ஆக்டர்ல யாரை பிடிக்கும்”
“ஷாருக்னா உயிரு”

 “உனக்கு பக்கத்து டேபிள்ள ஷாருக் வந்து உக்காந்தா உனக்கு எப்படி இருக்கும்?”
“வாவ்”
கட்...
டேக்... ஒ.கே.

இப்படி அனுபவப்பட்ட ஹிட்ச்ஹாக்,. “ நடிகர்கள் அனிமல்ஸ்”
என்று சொன்னார்.
இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை போட்டு உடைத்ததுக்கு வாங்கி கட்டிக்கொண்டது தனிக்கதை.

நடிப்பை பற்றி...சில வார்த்தைகள்....
நாடகத்தில்....நடிப்பை இரண்டு வகைகளாக பிரித்தார்கள்.
ஒன்று...மெத்தட் ஆக்டிங்.
இரண்டு....நேச்சுரல் ஆக்டிங்....
இவ்விரண்டையும் தனக்கே உரிய வகையில் உள்ளடக்கி
‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ உருவாக்கியது சினிமா.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்’ஷாட்டின் கால அளவுக்குள் அடங்க வேண்டும்.
இது சினிமா மீடியத்தின் நிர்ப்பந்தம்.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ நடிகர் மட்டும் தீர்மானிக்க முடியாது.
நடிகர்,இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,எடிட்டர்...ஏன் கலை இயக்குனர் கூட சேர்ந்து  உருவாக்குவதுதான்  ‘ஸ்கீரின் ஆக்டிங் ’
ஆனால், ரசிகர்கள் கை தட்டல்... கிடைப்பது நடிகனுக்கு மட்டுமே.

 ‘ஹ்யூமன் எமோஷன்சை’ எட்டு வகைகளாக மேற்கத்திய தத்துவம் பிரிக்கிறது.
நம் இந்தியாவில் ஒரு படி மேலே போய் ஒன்பது வகைகளாக பிரித்தார்கள்.   அதை ‘நவரசம்’என ஒரே பெயரில் அடக்கினார்கள்.

‘நவரசத்திலும்’ கொடி கட்டி பறந்தது உலகிலேயே இரண்டே பேர்தான்.
ஒன்று...நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இரண்டு...கமல்ஹாசன்.

அல்பசினோவாக இருக்கட்டும்...
மார்லன் பிராண்டோவாக இருக்கட்டும்...
உலகின் ஜாம்பவான்கள் அனைவருமே ஒரு சில வகை நடிப்பில் மட்டுமே கொடி கட்டி ஜெயித்தவர்கள்.
ஒனபதிலும் ஜெயித்தவர்கள் சிவாஜி,கமல் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட நான்கு நடிகர்களின் மாஸ்டர்பீஸ் படங்கள் அனைத்தையும் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

நடிப்பை பற்றி ஒரு தொடர் எழுத இருக்கிறேன்.
அப்போது கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல் அனைத்தையும் சொல்லித்தருகிறேன்.
காத்திருக்கவும்.
அது வரை அல்பசினோ மாதிரி நடிக்க வருமா என்று உங்கள் வட்டத்தில் ஜல்லி அடித்து கொண்டிருங்கள்.

நாடக நடிப்பை விட சினிமா நடிப்பு மிகக்கடினமானது.
சினிமாவில் ஷாட் பை ஷாட்டாக எடுக்கப்படுவதால்
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ தேவைப்படும்.
உதாரணமாக...ஹேராம் முந்தைய பதிவின் ஒன்றில் குறிப்பிட்டதை எடுத்துக்கொள்வோம்..


ராணி முகர்ஜி :  “கராச்சியில என்ன சாப்டீங்க”

அந்த ‘கிக்’ குரலில்  ‘டயலாக் டெலிவரி’, பேஸ் ரியாக்‌ஷன், பாடி லாங்குவேஜ் அனைத்திலும் சரஸக்கலையின் உச்சத்தை தொட்டிருப்பார் ராணி முகர்ஜி.

கமல் உடலுறவு முடிந்த களைப்பு...திருப்தி...அனைத்தையும் தனது
 ‘பேஸ் ரியாக்‌ஷன்’...மற்றும் ‘பாடி லாங்குவேஜில்’ கொண்டு வந்து
பக்கத்தில் படுத்திருப்பார்.
இது ஒரு ஷாட்.

[இப்பட ஷூட்டிங் நாட்களில் இருவருமே  ‘வாழ்ந்திருக்கிறார்கள்’.
இந்த விஷயத்தில் நம்ப ஆள்  ‘கிண்டன்’]

இதற்கு கவுண்டர் ஷாட்...


கமல் :  “அப்ப இண்ணைக்கு ராத்திரி பால்கனியில படுத்துக்கலாம் ”

என்று வழிவார் பாருங்கள்....
சான்ஸே கிடையாது...அப்படி ஒரு நடிப்பு...

இந்த இரண்டு ஷாட் எடுப்பதற்க்கு நடுவில் இடைவெளியில் பல மணி நேரம் தேவைப்பட்டிருக்கும்.
இயக்குனர் கமலும்,ஒளிப்பதிவாளர் திருவும் மட்டுமே அறிந்த உண்மை.
பல மணிநேர இடைவெளியில் நடிகர் கமலும், ராணி முகர்ஜியும்  ‘நடிப்பை’ விட்டு வெளியில் வந்து...
மீண்டும் அடுத்த ஷாட்டில்... ‘ நடிப்பிற்குள்’ வந்து...
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ மெய்ன்டெய்ன்ட் பண்ணத்தெரிந்தால் மட்டுமே அடுத்த ஷாட்டில் நடிக்க முடியும்.  

இது போன்ற அவஸ்தைகள் பற்றி...
கொஞ்சம் கூட தெரியாத காரிகன் வகையறாக்கள்...  கமல்,சுஜாதா,மகேந்திரன்னு...
ஆரம்பிச்சு தமிழ் சினிமா ஜாம்பவான்கள் அனைவரையும் முட்டாள்கள் என தீர்ப்பெழுத முடிகிறது.
முழு விபரம் அறிய எனது முந்தைய பதிவின் பின்னூட்ட யுத்தத்தை காண்க...    

*********************************************************************************

இந்தப்பதிவில் நாம் யாரும் காரிகன் வகையறாக்களை காயப்படுத்தி பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

 நானும் காரிகனும் நடத்திய யுத்தம்...
‘ கிளேடியேடர் ஸ்டைல்’
 இருவரில் ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்.

நான் காமெடி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து கொண்டு... தப்பித்து போய் ஆடியன்ஸோடு உட்கார்ந்து கொண்டேன்.
ஆடியன்சாக வந்த கிஷோகரையும் அவன் பகைத்தது... வெற்றி சுலபமாகியது. அதற்கு பிறகு தர்ம அடிதான்.

 ஆனால் இந்த யுத்தம்...எனக்கு பிடிக்கவில்லை.
என்னுடைய கிரியேட்டிவ் எனர்ஜி போய்... முழுக்க நெகட்டிவ் எனர்ஜி இயங்கியது.

இனி இது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்கப்போவதில்லை.

 பின்னூட்ட யுத்தம் காண... கிளிக்கவும். 

**********************************************************************************  

ஆனால் நேர்மையான கருத்து மோதலை வரவேற்கிறேன்.

நான் கருந்தேள் பதிவில்  ‘சைனாவை கட்டமைத்த மாமேதை’ மாவோவை... பற்றி அவரிடம் வாதிட்டேன்.
 எனக்கு ஆதரவாக கணேசன் வந்தார்.
கருந்தேளும் பெருந்தன்மையாக ஒத்து கொண்டார்.

 ஒரு வாதம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இருவருமே உதாரணமாக நடந்து கொண்டோம்.
எங்களது கருத்து மோதல்கள் எங்கள் நட்பை மேலும் வளப்படுத்துகிறது.


அவர் சமீபத்தில் எனது கடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
நிறைய பேசினோம்...
நிறைய சிரித்தோம்.
இப்படி பேசி சிரிக்க... இன்னும் மோதுவோம்.

அந்த ஆரோக்கிய மோதல் இருவருக்கும் நல்லது.

ஹேராம் படத்தின் காட்சியை காணொளியில் காண்க...

மீண்டும் ஹேராமை...அடுத்த பதிவில்... விரிவாக காண்போம். இப்பதிவில்  குறைகள் இருப்பின்  மன்னிக்க.

Oct 14, 2010

உதிரிப்பூக்கள்-தமிழில் உலகசினிமா



உதிரிப்பூக்கள் தமிழில் நான் பார்த்த முதல் உலகசினிமா.தமிழில் வந்த முதல் உலகசினிமா பாதை தெரியுது பார்.இயக்கியவர் இந்தியாவின் முதல் உலகசினிமாவான சின்னமோளை உருவாக்கிய நிமாய்கோஸ்.தயாரித்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள்.இப்படம் ஓடினால் தங்கள் தொழில் நாறி விடும் என்று கருதிய ஏ.வி.எம் போன்ற மசாலா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து படத்தை வாங்கி பிட் படங்கள் ஓடும் நாலாந்தர தியேட்டர்களில் ரீலிஸ் செய்து மக்களைச்சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர்.எம்.பி.சீனிவாசன் இனிய இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றும் நம் செவிக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.




தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.....




......................................................................




.............................................................................




சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டை துணை தேடுது......





சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்......





உதிரிப்பூக்களை உருவாக்கிய மகேந்திரன் உருவானது முள்ளும் மலரும் படத்தில்தான்.தங்கப்பதக்கம் போன்ற மசாலா படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த மகேந்திரனுக்கு கதையே கேட்க்காமல் வாய்ப்பளித்தார் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச்செட்டியார்.ஆனால் படத்தை பாதியில் நிறுத்தச்சொல்லிவிட்டார்.காரணம் கேட்டதற்க்கு,”ரஜினி கை,காலை ஆட்டி நடித்தால்தான் ரசிப்பார்கள்....நீ ரஜினிக்கு கை இல்லாமல் படமெடுக்குறீயாமே..என் காசை கரியாக்கவா..போ வீட்டுக்கு”என்றார். கமல் கேள்விப்பட்டு சமரசம் செய்தார்.படம் நட்டமானால் நான் அடுத்த படத்துக்கு கால்ஸீட் தருகிறேன் என்று உறுதியளித்தார் கமல்.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பெண்டிங்...இனி பைசா தரமுடியாது எனச்செட்டியார் முரண்டு பிடிக்க இப்போதும் கை கொடுத்தது கமல்.அந்தப்பாடல் படமாக்க கைக்காசை கொடுத்தார் கமல்.அந்தப்பாடல் ..செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்......





இவ்வளவு உதவி செய்த கமலும்...உதவி பெற்ற மகேந்திரனும் ஏன் இணைந்து ஒரு படம் கூட தரவில்லை????????




ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு மவுஸ் வேலை செய்யமுடியாது.





முள்ளும் மலரும் மகத்தான வெற்றிபெற்றதில் அப்படத்தின் ஒளிப்பவாளர் பாலுமகேந்திராவின் பங்கு அதிகம் என்று மீடியாவும்,சினிமா இண்டஸ்ட்ரியும் சேர்ந்து கதைத்தன.எனவேதான் அசோக்குமாரோடு கை கோர்த்தார்.இவர்களது கூட்டணியில் வந்த வெற்றி படைப்புகள்




நெஞ்சத்தை கிள்ளாதே,உதிரிப்பூக்கள்,மெட்டி.




தமிழ்சினிமா உலகசினிமா பாதையில் கூட்டிச்சென்ற டிரண்ட்செட்டர் மகேந்திரன்.அந்தப்பாதை அடைத்து மசாலா பாதையில் திருப்பிவிட்டது ஏவி.எம்.என்னின் முரட்டுக்காளையும்,சகலகலாவல்லவனும்.





மகேந்திரனின் மாஸ்டர்பீஸ் உதிரிப்பூக்கள்.இன்றளவும் இப்படத்தின் தரம் இமயம்.




மனைவியின் தங்கை அழகிய நங்கை....அவளை தாரமாக்க துடிக்கிறான் நாயகன்.இவனது ஆசைக்கு எண்ணெய் வார்க்கும் சுயநலமிகளால், பலியாகிறான்.இவனது குழந்தைகள் உதிரிப்பூக்களாகின்றன.




விஜயன்,அஸ்விணி,சாருஹாசன்,சரத்பாபு என அனைவருமே யதார்த்தப்பிரதிகள்.




இளையராஜா இசையில் மோனாலிசப்பாணி கடைப்பிடித்திருப்பார்..... அழகிய கண்ணே பாடலில்..ஒரு தாயின் சந்தோசமும்,மனைவியின் துக்கமும் சரிவிகிதக்கலவையாக ஒலிக்கும்.பின்னணி இசையாக அநேககாட்சிகளில் மவுனத்தை இசையாக வழியவிட்டிருப்பார்.




படத்தின் டைட்டிலில் கதை புதுமைப்பித்தன் என்று வரும்.கதை படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.மகேந்திரன் மகத்துவம் தெரியும்.
இப்படத்தின் பாக்ஸாபிஸ் வெற்றி எல்லா பொய்களையும் கலைத்துவிட்டது.ஈரான் நாட்டு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் இப்படம் பாடம்.இந்திய அரசும் இப்படத்தை பெருமைக்குறிய சொத்தாக வாங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.