Showing posts with label செக்கோஸ்லோவாக்கியா. Show all posts
Showing posts with label செக்கோஸ்லோவாக்கியா. Show all posts

Jan 24, 2011

The Shop on Main Street -இனத்தை கருவருத்தல்

இப்படத்தை ஏற்க்கெனவே டிவிடியில் பார்த்திருந்தாலும் கோணங்கள் பிலிம் சொசைட்டியில் நேற்று அகன்ற திரையில் பார்த்தபோது புது அனுபவமாக இருந்தது.அரங்கம் வேறு ஹவுஸ்புல்.மிகமிக சந்தோஷமாக இருந்தது.ஆனால் படத்தின் முடிவு??????????
1965ல் இப்படத்தை இயக்கி சிறந்த வெளிநாட்டுப்படத்திற்க்கான ஆஸ்கார் பரிசை அள்ளியிருக்கிறார்கள் Jan Kadar&Elmar Klos

இப்படத்தின் கதை அமைப்பு தமிழக மீனவர்களை சிங்களப்பேய்கள் வதைப்பது போல் வலிக்கும்.வலிக்கவில்லையென்றால் உங்கள் பெயர் கலைஞர்.
இரண்டாம் உலகப்போரில்.... இன்று ஸ்லோவாக்கியாவாக இருக்கும்.... அன்றைய செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த இனப்பேரழிவை படம் போட்டு காட்டுகிறது கதை.
நகரமா..கிராமமா..என இனம் பிரிக்க முடியாத அழகிய இடம்.யூதர்களை ஒழித்து அனைத்தும் ஆர்ய மயமாக்கும் படலம்.திட்டம் போட்டு சட்டமாக்கிவிட்டார்கள் யூதர்கள் சொத்தை ஸ்வாகா பண்ண.ஆர்யர்கள் அல்லவா...ஆக்கிரமிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்களாயிற்றே!எல்லா இனத்திலும் நல்லவர்கள் உண்டே!அப்படி ஒருவன்தான் நம் நாயகன் டோனிபிரட்கோ.ஆர்யனாக இருந்தாலும் மிக மிக நல்லவன்.அவனுக்கு பரிசாக மெயின் ரோட்டில் ஒரு யூதருடைய கடையை வழங்குகிறான் அவனது சகலை[லோக்கல் போலிஸ் உயர் அதிகாரி...சுருக்கமாக நாஜி அடிமை]
உரிமை வழங்கப்பட்ட கடிதத்துடன் வருகிறான் டோனி.... கடைக்கு....கடையின் உரிமையாளர் முதிய விதவை ரோஸலியா.டெய்லரிங்கிற்க்கு தேவையான ஊசி,நூல்,பட்டன் விற்க்கும் கடை.டோனி கடிதத்தை காட்டி கரடியாக கத்துகிறான்.மூதாட்டிக்கு பார்வை வீக்...கேட்க்கும் திறன் அதைவிட வீக்....கடைக்கு வந்த கஸ்டமராக டீரீட் செய்கிறாள் பாட்டி.இந்த காமெடியிலிருந்து காப்பாற்ற வருகிறார் ஒரு ஆரியர்ஆனால் மனிதகுல மாணிக்கம்.பாட்டியின் குடும்ப நண்பர்.பாட்டியிடம் டோனியை கடை வேலைக்கு வந்த உதவியாளனாக அறிமுகம் செய்து வைக்கிறார்.பாட்டிக்கு பரம திருப்தி.பாட்டி இருவருக்கும் டீ கொண்டு வர உள்ளே போகிறாள்.கடையின் நிலமையை காட்டுகிறார் நண்பர்.சரக்கேயில்லை.காலிப்பெருங்காய டப்பா...சகலை ஏமாற்றி விட்டதாக கொதிக்கிறான் டோனி.சமரசம் செய்கிறார் நண்பர்.
பாட்டியிடம் வேலை செய்வது போல் நடி.....
வருமானத்துக்கு யூதர்கள் நல நிதியிலிருந்து வாராவாரம் கணிசமான தொகை தருவதாக வாக்களிக்கிறார்.மனிதாபத்துடன் ஏற்றுக்கொள்கிறான் டோனி.இதற்க்கப்புறம் வருகின்ற காட்சிகளெல்லாம் அன்பேவா காமடிதான்.
யூதர்களை விட யூதர்களுக்கு உதவும் ஆரியர்களுக்கு தண்டனை அதிகம்.நண்பரை கடித்து குதறுகின்றன சிங்கள வெறிநாய்கள்.... ஸாரி....நாஜி நாய்கள்.டோனி இக்காட்சியை பார்த்து பதறுகிறான்.....பயப்படுகிறான்....
யூதப்பாட்டியை காப்பாற்றினானா?
காட்டிக்கொடுத்தானா?
இதுதான் கிளைமாக்ஸ்.
ஆனால் ஒன்று இந்த டோனி கலைஞர் மாதிரி புத்திசாலியில்லை.அண்ணாசமாதியில் உண்ணாவிரதம் இருக்கத்தெரியவில்லை.

Aug 22, 2010

Divided we fall -வீழ்வது மனிதம்..வாழ்வது உயிர்


சிலபடங்கள் ஏன் பார்த்தோம் என்ற பாதிப்பை ஏற்ப்படுத்தும்.பலபடங்கள் ஏண்டா பார்த்தோம் என்ற சலிப்பு வரும்.இந்தப்படம் முதல்ரகம்.

இப்படத்தின் இயக்குனர் Jan Hrebejk , இரண்டாம் உலகப்போரில் சிதிலமடைந்த செக்கோஸ்லோவோக்கிய வாழ்க்கை வரைந்திருக்கிறார்.நேரடியாகவே நம்மை காயப்படுத்துகிறார்...வஞ்சனையில்லாமல்...உயிர் வாழ மனிதன் எவ்வளவு கீழிறங்குவான் என்பதை இதை விட எந்தப்படமும் ஆணித்தரமாக சொல்லியதில்லை .இப்படத்தில் வரும் ஆதர்ச செக் இன தம்பதியருக்கு நேரும் நெருக்கடி.... என்னால் ...எழுத்தால்..... சொல்லவே முடியாது .

இதோ.... என்னுடைய மனைவி புணர்ந்து கொள்.... என்று நண்பனிடம் இறைஞ்சுகிறான் ஒரு செக் நாட்டு கணவன்.....இதுதான் காட்சி.....

இதைப்படமாக பார்க்கும் போதுதான் அதில் உள்ள கண்ணியம் புரியும்.அந்த மனைவியும் நண்பனும் சேரும் கலவிக்காட்சி கதற வைத்து விடும்..இதற்க்குப்பிறகுதான் இம்மூவரும் எனக்கு ராமபிரானாக....சீதாபிராட்டியாக...வீபிசணனாக.....காட்சியளித்தனர்.

யுத்தகளத்தில் காயப்படும் முதல் பொருள் பெண்தான் ..இன்று காஸ்மீர் நம்மிடையே இருப்பதற்க்கு காரணம் நம்முடையராணுவம் அல்ல......அரசியல்வாதிகளும் அல்ல...பதினான்கு கன்னியாஸ்திரிகள் பறிகொடுத்த கற்புதான்.[”நள்ளிரவில் சுதந்திரம்” என்ற புத்தகத்தில் முழு விபரம் இருக்கிறது .ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய புத்தகம்.மிகச்சிறப்பான தமிழாக்கம்.]

நமீதா மாரை எவ்வளவு காட்டினாலும் அனுமதிக்கும் சென்சார்,கீழ்வெண்மணி பற்றி காட்சி வரும் படத்துக்கு அனுமதி மறுத்து டிரிப்யூனலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்..பிறகு எப்படி வெளங்கும் தமிழ் சினிமா..

நமக்கு மானாட மயிலாட தவிர வேறு கதியில்லை.