Aug 31, 2012

சிவாஜி நடித்தது....கமலுக்கு பிடித்தது....?

நண்பர்களே...
மனசு சரியில்லை...காரணம் நீங்க நினைக்கிறது இல்லை.
மதுரை புத்தகக்கண்காட்சியில் நான் இல்லை.
தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கிறது.
ஏன் வரல?

என்னா ஊர் தெரியுமா?
என்னை அங்கே கொண்டாடுவார்கள்...சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு.
பல்கலை கழக பேராசிரியர்கள் முதல் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வரை...
எல்லோரும் எனக்கு வாடிக்கையாளர்கள் அல்ல...ரசிகர்கள்.
நான் சொல்ற படத்தைதான்  வாங்குவாங்க...
சொல்ற பணத்தை தருவாங்க.

புதிதாக வந்திருக்கும்  ‘பப்பாசி’ நிர்வாகிகளுக்கு...உலகசினிமா  ‘கற்பூரம்’ என அறியாதவர்கள்.
முன்னாள் நிர்வாகிகள்...உலக சினிமாவும் இலக்கியமே...
அது மக்களை சென்றடைய வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்.
அதே போன்ற  ‘கொள்கை தங்கங்கள்’ பதவிக்கு வரும் வரை காத்திருக்கிறேன்.

ஹலோ மதுரை...வருவேன்...மீண்டும் வருவேன்.

கடந்த எனது பதிவுகள்...என்னை ஒரு ரவுடியாக...போக்கிரியாக சித்தரித்து விட்டது.
காரணம் நானேதான்.
என்னை ஒரு கோணத்தில் சித்தரித்து இருந்தேன்...
இப்போது... மற்றொரு கோணத்தில் நான்...

அதற்கு முன்பாக உங்களிடம் மூன்று கேள்விகள்.
1. ரோஷமான் பார்த்திருக்கிறீர்களா?
2. அந்த நாள்?
3.அட்லீஸ்ட்... விருமாண்டி?
பாத்தவங்க உள்ளே வந்து  ‘நாற்காலில’ உக்காருங்க...
பாக்காதவங்க என் முன்னாடி தரையில உக்காருங்க...

உண்மை... என்பது என்ன?
அதை தேடிய படங்கள்தான்...மேற் சொன்ன மூன்று படங்கள்.

எளிய உதாரணம்...
ரோட்டில்  ‘கார்-சைக்கிள்’ விபத்து.
போலிஸ்காரர் வருகிறார்.
எப்படி நடந்திச்சி... ?

நான் உடனே...
“ சார்... கார்காரன் மேலதான் தப்பு.
அவன் பயங்கர ஸ்பீடா வந்தான்.
சைக்கிள்காரரு...பாவமா...ஓரமாத்தான் போய்ட்டிருந்தாரு.
அவன் ஹார்ன் அடிக்கல..பிரேக்கும் பிடிக்கல..
இடிச்சு தள்ளிட்டு ஓடப்பாத்தான்.
நாந்தான்... குறுக்காட்டி மறிச்சு நிறுத்துனேன்....”
என  ‘உண்மையை’ ஹிட்&ரன்னாக்கினேன்.

பேசும் போது எனது கையிலிருந்த  ‘சேகுவேரா...வாழ்வும் போராட்டமும்’ என்ற புத்தகத்தை போலிஸ்காரர் கண்ணில் படாமல் தவிர்த்தேன்.

சம்பவத்தை முழுவதும் கண்ணால் பார்த்த அய்யர்...
“ நேக்கு ஒண்ணும் தெரியாது...பகவான் சாட்சியா நான் எதுவும் பாக்கல ”

கார்க்காரன் உண்மை...
“ நான் நார்மல் ஸ்பீட்லதான் வந்தேன்.
ஹார்ன் அடிச்சேன்.
சைக்கிள்காரன் அவனா உள்ளே வந்து விழுந்தான் ”.

சைக்கிள்காரன் உண்மை...
“ நான் சிவனேன்னு ஒரமா போயிட்டிருந்தேன்.
இந்த கார்காரன் கொலை வெறியோட வேகமா வந்து இடிச்சு தள்ளிட்டு ஓடப்பாத்தான்.
அய்யாதான் நிறுத்துனாங்க... ”

இப்படி பத்து பேர்...பத்து உண்மையை சொல்கிறார்கள்.

விவரமான போலிஸ்காரர்...
கார்காரரை தனியே தள்ளிக்கொண்டு போகிறார்.
இப்போது ரிசர்வ் பேங்க் நோட்டுகள்..ஒரு உண்மையை எழுதுகிறது.

அப்புறம் உண்மை... பத்திரிக்கை,லோக்கல் டிவி,வக்கீல்கள்,ஜட்ஜ் என பல்வேறு வடிவமெடுக்கிறது.

இப்படி ஒரு சம்பவத்தை...  ‘புளோஅப்’ படத்தில் இயக்குனர் அண்டனியோனி..ஒரு உண்மையை எழுதுவாரு...
 ‘சம்பவமே நடக்கல’

கடவுளே வந்து ஒரு உண்மையைச்சொன்னாலும்...
இயக்குனர் மணிவண்ணன் மறுப்பாரு.
“ யோவ்...நீ மேல  ‘டாப் ஆங்கிள்ள’ உக்காந்துட்டு பாத்தா...
 எப்படி பெர்பக்டா தெரியும்.?
கண்ணுல... என்ன ஜூம் லென்ஸ் வச்சிருக்கியா?

இப்போ புரியுதா... ‘100% உண்மை’ என்ற ஒன்று கிடையாது.
உண்மைக்கு மிகநெருக்கமான ஒன்றைத்தான் நாம் உண்மை என உணருகிறோம்...அல்லது உணர வைக்கப்படுகிறோம்.

இப்போது நான் கடந்த பதிவில் குறிப்பிட்ட  ‘வெட்டுச்சம்பவத்துக்கு ’ போவோம்.
எனது நண்பன் பார்வையில்...
“ வருகைப்பதிவேடு ஐடியா அவனோடதுதான்.
ஆனா சண்டைக்கு..நாந்தான் அவனை இழுத்துட்டு போனேன்.
எல்லோர் கையிலயும் வெட்டருவா வச்சிருக்கோம்.
இவன் வச்சிருந்த அருவா இருக்கே...
ஒருத்தன் தலையை குனிஞ்சு வெட்டிக்கன்னு...தலையை குடுத்தாக்கூட துண்டாக்கிறதுக்கு பத்து நாளாகும்.
அவ்வளவு ஷார்ப்பான  அருவாளைத்தான் தேர்ந்தெடுத்து வச்சுகிட்டான்.
சண்டை ஆரம்பிச்சதும் அதைக்கூட வீசி எறிஞ்சிட்டு ஓடுன ஓட்டம் இருக்கே...ஒலிம்பிக்ல கூட ஓட முடியாது.

அவன் வீசி எறிஞ்ச அருவா...என் பெரியப்பா கையில பட்டு பெரும் காயம் ஆயிருச்சு,
அதுக்கு... பாண்ட் எய்டு ஒட்டி...காயத்தை மறைச்சோம்.”

 “ டேய்... என் இமேஜ்ஜை டோட்டலா டேமேஜ் பண்ணிட்ட..
நான் கஷ்டப்பட்டு  ‘ரோஷமான் ஆங்கிள்’ போட்டு ரவுடி மாதிரி பார்ம் ஆனா... போட்டு உடச்சிட்டியே...”

 ‘ரோஷமான் ’ சொல்லும் நீதி என்னன்னா...
உண்மையை தேடுறதெல்லாம் தேடு....
ஆனா, மனித நேயத்தோடு வாழுன்னு முடிச்சிருப்பாரு அகிராகுரோசுவா.

என்னோட மனிதாபிமானத்தை... நான் அப்பப்போ..பதிவுகளில் சொல்றேன்.


இப்போ...நடிகர் திலகம்-கமல் மேட்டர்.
சாந்தி என்ற படம்.
கவியரசர் கண்ணதாசன் பாட்டெழுதி...மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி...இசையமைத்து...டி.எம்.எஸ் வசீகரக்குரலில் பாடி ரெக்கார்டிங் ஆகி விட்டது.
சிவாஜி சார்...சூட்டிங்குக்கு  ‘டேட்’ தரல...
இழுத்துகிட்டே போனாரு.

தயாரிப்பாளரும்...இயக்குனரும் நேரில போய் கேட்டதுக்கு...
 “ மூணு பேரும் மாஸ்டர் பீஸ் மாதிரி கொடுத்துட்டாங்க...
நான் சரியா பண்ணலன்னா...  ‘ஸ்கீர்ன்ல’ நான் காணம போயிருவேன்.
என்னை நான் காப்பாத்தியாகணும்.
என்ன பண்றதுன்னு முழிச்சுகிட்டு இருக்கேன்.
கொஞ்சம் டைம் கொடுங்க ” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 ‘ஐடியா’ கிளிக் ஆனதும்... கூப்பிட்டு  ‘டேட்’ கொடுத்தார்.
என்னா...ஆக்டிங்.
அவரு கையில இருக்கிற சிகரெட்...அந்தப்புகை..
அது கூட அற்புதமா நடிச்சிருக்கு..
பாட்டை பாருங்க...[ பாடல் பிரதியின் தரம்...பேய் பட எபெக்ட்ல...பயங்கரமா இருக்கு ]
இந்தப்பாட்டுதான் கமலுக்கு மிகவும் பிடித்த சிவாஜி பாடல். இந்தப்பாட்டை பல்வேறு நடிகர்களின் பாணியில் கமல் பாடி நடித்ததை... பாக்கணுமே... அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும். இந்தப்பதிவு எந்தப்பதிவரையும்...உள் குத்தவில்லை. ஏன்னா...நான் எந்த வீடீயோ பதிவையும் பார்க்கவில்லை. இனி யார் வீடீயோ பதிவு போட்டாலும்  ‘சூப்பர் ’ன்னு சொல்லப்போறேன். அடுத்தப்பதிவுக்கு...  ‘முகமூடி’ அணிஞ்சுட்டு வாரேன்.

Aug 30, 2012

செக்ஸ் பவர் பற்றி கமலும்...ராஜேஷும்.

நண்பர்களே...

இந்தப்பதிவு ஒரே ஜாலியாக இருக்கும்.
காரணம் உள்ளத்தில் இருப்பதுதான் எழுத்தில் இருக்கும்.

நடந்த கசப்புகளை...ஒரே ஒரு  ' இனிப்பு ' எல்லாவற்றையும் அடித்து தள்ளி விட்டது.
ஹாலிவுட் பாலா..அமெரிக்காவில் இருந்து ஒரே ஒரு போன் போட்டார்.
அவ்வளவுதான் எல்லாமே மாறி விட்டது.
அவரது பெருந்தன்மை என்னை சிறியனாக்கி விட்டது.
முடிவு... இருவருக்குமே  ' வெற்றி '.
புது  ‘கேம் தியரி ’ எழுதி விட்டோம்.
இந்தப்பதிவை ‘நட்புக்கு’ சமர்ப்பிக்கிறேன்.


நடிகர் ராஜேசும்...கமலும் நண்பர்கள்.
அவர் ஒரு தடவை கமலிடம் பேசும் போது...
  “ நான் ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன் ”.
 “ புரடக்‌ஷனா ?...டைரக்‌ஷனா...?
“ இரண்டும் ”

கமல்... இருக்கையிலிருந்து எழும்பி...இரண்டு கைகளையும் அகல விரித்து...
“ வெல்கம்...
இது கடல்...இங்கு எத்தனை திமிங்கலங்களும் இருக்கலாம் ”

என்ன ஒரு சொல்லாடல்...பாருங்கள் !.

இப்போது ஹேராம் ப்ரிவியூவுக்கு போவோம்.

படம் இடைவேளை.
கே.எஸ். ரவிக்குமார் சுற்றி இருந்த எல்லோரையும்  ‘ஒரு பார்வை’.
அதன் அர்த்தம்... “ எவனுக்காவது படம் விளங்கிச்சா ? ”.

பார்த்து விட்டு சொன்னது...
வானத்தை நோக்கி கை காட்டி... “அவர் எங்கேயோ...இருக்கார்”
தரையை நோக்கி கை காட்டி... “ நாம இங்க இருக்கோம் ”.

நடிகர் ராஜேஷ்...படம் முடிந்து காரில் போகும் போது சொன்னது...

“ கொன்னுட்டார்...
இண்டஸ்ட்ரியில இருக்குற எல்லோரையும் கொல்றதுக்குன்னே ஒரு படம் எடுத்திருக்கார்.
நான் கிராமத்துக்கே போகப்போறேன்.
நாலு மாடை வாங்கி... மேச்சு பொழச்சுக்கலாம்.
இனி நமக்கு எதுக்கு...  டைரக்‌ஷனு...புரடக்‌ஷனு... ”.

இன்று வரை அவர் படம் எடுக்கவில்லை.



நடிகர் ராஜேஷ்... கமலின் சினிமா திறமையை அப்படி சிலாகிப்பார்...கொண்டாடுவார்.
இருந்தாலும் கமல் மேல்....ஒரு வேளை பொறாமை கூட...இருக்கலாம்.
ஏன் தெரியுமா?
அவள் ஒரு தொடர் கதையில் இவர் நடிக்க வேண்டிய காரெக்டரை...
 ‘இயக்குனர் சிகரம் ’ கே.பி. கமலுக்கு தூக்கி கொடுத்து விட்டார்.

இருந்தாலும்...தகவல்களை பறிமாறிக்கொள்வதில்தான் போட்டி போடுவார்கள்.
ஒரு முக்கியமான தகவலை புத்தகத்தில் படித்து விட்டார்.
இனி அதை கமலிடம் சொன்னால்தான் தூக்கம் வரும்.
எடு காரை...விடு ஆழ்வார் பேட்டைக்கு...

[ இந்த மேட்டரை  ‘கோவை நேரம் ஜீவாவுக்கு’ அர்ப்பணிக்கிறேன்.]

 “கமல்ஜி...
பெண்கள்தான்  ‘பலமானவர்கள்’.
ஆண்கள்  ‘பலமானவர்கள் போல் நடிப்பவர்கள்’.
என தான் தெரிந்து கொண்ட மருத்துவ விஞ்ஞான ஆய்வுத்தகவலை
சொன்னார்.

கமலுக்கு ஒரு புதிய தகவலை சொல்லி விட்ட சந்தோஷத்தில்...
ரோட்டோரக்கடையில் டீ சாப்பிட்டார் ராஜேஷ்.
உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்தால்...ராஜேஷ் நடத்தும் நிகழ்வு அது.
 ‘ரோட்டோரக்கடை டீ’

இந்த உண்மையை நானும்...புரிந்து கொண்டேன்.

பெண்கள் சக்திகள்.
ஆண்கள் சிவன்கள்.
சீக்கிரம்  ‘ஜீவன்’ போயிடும்.
ஆனா  ‘வீரன் ’ மாதிரி நடிப்போம்.

அடுத்தப்பதிவு...இன்னும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
  

Aug 28, 2012

புரட்சித்தலைவர்...திரையிட்ட நடிகர் திலகம் படம்.

நண்பர்களே...
கடந்த சில நாட்கள் நடந்த சண்டை... ‘தரம் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்டது.
நடப்பதை மிகுந்த கவலையுடன் நேரிலும்...போனிலும்...பின்னூட்டத்திலும் தெரிவித்தார்கள் நண்பர்கள்.
குறிப்பாக பதிவுலக நண்பர்கள் கீதப்பிரியன்,பேபி ஆனந்தன்,ராஜ்,கிஷோகர் ஆகியோர்.
நடந்த அனைத்திற்கும் நானே பொறுப்பு ஏற்றுக்கொண்டு காயப்பட்ட அனைவரிடமும் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அடிப்படையில்...நான் ஒரு மிருகம்.
எனது பள்ளி,கல்லூரி நாட்களில் நான் செய்த அராஜகம் அளவில்லாதது.
நானும் எனது நண்பர்களும்... ‘நோட்டரியஸ்’ என்றே அறியப்பட்டவர்கள்.
 ‘திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ’ இறுதி ஆண்டில்... ‘மாணவர் விழாவில்’ நானும்...எனது எட்டு நண்பர்களும் நடத்திய கலாட்டாவில்...
டிஸ்மிஸ் செய்யப்பட்டோம்.

ஏற்க்கெனவே... இரண்டாம் வருடத்தில் செய்த  கலாட்டாவினால்... ஹாஸ்டலை விட்டு தூக்கியெறியப்பட்டிருந்தோம்.
எனவே திருச்செந்தூரில்... வீடு எடுத்து தங்கி இருந்தோம்.
எங்களோடு தங்கி இருந்தவர் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர்.
அந்த தைரியத்தில் நாங்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல....
தினமும் புட்டி,குட்டி,வம்புச்சண்டையோடுதான்  வாழ்ந்தோம்.

[எனது  'A' ONE வாழ்க்கையை பதிவு போடவா?...நூறு பதிவுகளைத்தாண்டும்.]

கல்லூரி நாளில் நண்பர்களை வைத்து  ‘பிராக்ஸி’ கொடுக்க வைத்து...
 அதே நேரத்தில் நண்பனுக்காக... பங்காளிச்சண்டையில்...
ஒருவனை வெட்டி இருக்கிறேன்.

வழக்கில் சேர்க்கப்பட்டு... நானும் எனது நண்பனும் கல்லூரி
 ‘வருகைப்பதிவேட்டை’  சாட்சியாக வைத்து வெளியே வந்து விட்டோம்.
எனது நண்பன் இப்போது ஹைகோர்ட் பிரபல வக்கீல்.
அவனை ஏற்கெனவே எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
[என் ஒருவனைத்தவிற டிஸ்மிஸ் செய்யப்பட்ட எட்டு பேருமே  கிரிமினல் வக்கீலாகி விட்டர்கள்.]

சுருக்கமாக சொல்கிறேன்...கற்பழிப்பு என்ற ஒரு குற்றத்தை தவிர மீதி அனைத்துமே செய்து இருக்கிறேன்.
அவை அனைத்துமே கேவலமான மிருக வாழ்க்கை.
அதிலிருந்து தப்பிக்க தினமும் முயற்சி செய்கிறேன்.

திரைப்படத்துறைக்கு வந்த பிறகே மனிதனாக வாழ ஆரம்பித்தேன்.
இருந்தும் அந்த மிருகம் அவ்வப்போது உயிர் பெற்று ஆட்டம் போடுகிறது.

உலகசினிமாவை நேசித்தாலும்...தமிழ் சினிமாவை உயிராக சுவாசிப்பவன்.
அதை பழிப்பவர்களை எதிரியாக பார்க்கத்துவங்கி விடுகிறேன்.

எனது பதிவுலக நண்பர்களுக்கு...ஒரே ஒரு வார்த்தை.
நகைச்சுவையாக என்னை எவ்வளவு வேண்டுமானாலும் நக்கலடிக்கலாம்.
ரசித்து சிரித்து விட்டு போய் விடுவேன்.
இப்போதும் சொல்கிறேன்...  ‘கொழந்தை இந்தக்கலையில் மாஸ்டர்’.

ஆனால் என்னை சீரியஸாக்க, ஒரு வார்த்தை போதும்....
அதன் பிறகு நான் மிருகம்தான்.

கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்ட நடிகர் திலகம் நக்கல்கள் அனைத்தும் சென்னை மயிலாப்பூர் ஹ்யூமர் கிளப்பில் சொல்லப்பட்டவை...
[நான் அதில் மெம்பராக இருந்தவன்.
அந்த மேடையில் தமிழ் சினிமாவை நக்கலாக பேசியதற்காக...
‘பிராம்மண வெறியன்’ எஸ்.வி.சேகரோடு நேரடியாகவே சண்டை போட்டிருக்கிறேன்.]
முதலாவதை... கமலா தியேட்டர் அதிபரே சொன்னது.
இரண்டாவதை... சொன்னவர் நடிகர் ராஜேஷ்.

நடிகர்திலகமும்...மக்கள் திலகமும் இருவருமே நண்பர்கள்தான்.
ஆனால் தொழில் போட்டியில் இருவருமே எதிரிகளாக நடந்து கொள்வார்கள்.
பிரச்சனை என்று வந்து விட்டால் இருவருமே விட்டுக்கொடுப்பதில் போட்டி போடுவார்கள்.
அதனால் இருவருமே இறுதி வரை நண்பர்களாக வாழ்ந்தார்கள்.

பர்சனல் மேட்டரில் சிவாஜி... பிரபுவை துப்பாக்கியால் சுட்டதாக...
 ஒரு செவி வழி செய்தி ஒன்று உண்டு.
அப்போது புரட்சித்தலைவர்தான் முதல்வர்.

 ‘துப்பாக்கியை சிவாஜி துடைத்துக்கொண்டிருந்த போது...
 தவறுதலாக கை பட்டு... வெடித்து பிரபுவுக்கு காயம்...’
 என்று பத்திரிக்கை செய்தி வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..

எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் குணமாகி நலமுடன் திரும்பினார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை வரவைழைத்து மரியாதை செய்தார்.
அந்த நிகழ்ச்சி நிரலில் அவர்களுக்கு தமிழ் திரைப்படம் ஒன்றை திரையிட்டு காட்ட விரும்பினார்.
அவர் தேர்வு செய்த திரைப்படம் என்ன தெரியுமா?
  ‘தில்லானா மோகனாம்பாள்’
ஆச்சரியப்பட்ட அனைவருக்கும்... அவர் சொன்ன விளக்கம்...

 “ எனது படங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை தராது.
அவைகள் அனைத்துமே 
ஹாலிவுட் படங்களின் எளிய வடிவம்.
 ‘தம்பியின் தில்லானா மோகனாம்பாள்’...அவர்கள் ஹாலிவுட்டில் பார்த்திராத அனுபவத்தை தரும்.
அது மட்டுமல்ல...தம்பியைப்போல் நடிப்பதற்க்கு ஹாலிவுட்டில் எவனும் இல்லை என்பதையும்  காட்ட விரும்புகிறேன்.”
என்றார். 

அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.

Aug 15, 2012

முதல் மனித வெடிகுண்டு போராளி ‘‘குயிலி’


இந்திய விடுதலை போராட்டத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வேலுநாச்சியார்.
1772-ல் பான்ஜோர் என்ற ஆங்கிலேயனால்...
  ‘வேலுநாச்சியாரின் கணவர்’ முத்து வடுகநாதன்,அவரது மகள் கவுரி நாச்சியார் கொல்லப்பட்டனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை வேட்டையாடினான்.
அவனை தீர்த்து கட்ட சின்ன மருது,பெரிய மருது,வேலு நாச்ச்சியார் தலைமையில் மூன்று போராளி குழுக்கள் அமைக்கப்ப்பட்டன.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேச்வரம் கோவிலில் விஜயதசமி அன்று பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது ஐதீகம்.

அதைப்பயன்படுத்தி வேலுநாச்சியார் தலைமையில் பெண்கள் போராளி குழு உள்ளே நுழைந்து ஆங்கில நவாப் வீரர்களை தாக்கினர்.
முற்றிலும் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன பான்ஜோர் சுதாரித்து...கடும் எதிர் தாக்குதலை நடத்தினான்.
அரண்மனைக்கு உள்ளே வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்தது.

இது வரை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்யப்படாத சம்பவம் இக்கடும்போரில் நடைபெற்றது.
கரியநிறமுள்ள வீர தமிழச்சி தன் உடல் முழுவதும் எண்ணெய் ஊற்றிக்கொண்டு...
தனது உடலுக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்து மொத்தக்கிடங்கையும் பூண்டோடு அழித்தொழித்தாள்.
அந்த வீர மங்கையின் பெயர்தான்                                                                                                           ‘குயிலி’
இவர்தான் உலகில் முதல் தற்கொலைப்படை போராளி.

50 வயதான வேலுநாச்சியார் இடது கையில் வாளேந்தி போரிட்டு
போன்ஜோரையும்,அவனது படையையும் அழித்தொழித்தார்.
சிவகங்கை அரண்மனை மட்டுமல்ல...தொடர்ந்து திருபுவனம்,
மானா மதுரை,காளையார் கோவில் போன்ற பகுதிகளையும் போரிட்டு மீட்டார்.
ஜான்சிராணியை [1828-1858] மட்டும் துதி பாடும் இந்திய சரித்திரம்...
 ‘வீரத்தாய் வேலுநாச்சியார் ’ [1730-1790] புகழை இன்றும் மறைத்து வருகிறது.

வெள்ளையனுக்குகெதிராக போர் பிரகடனம் செய்த முதல் இந்திய முழக்கம் வீரத்தாய் வேலுநாச்சியாரிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது.
அது மட்டுமல்ல போரில் முதன்முதலாக வெள்ளயனை ஜெயித்த வீர வரலாறும் அவருக்கே சொந்தம்.
இந்த வரலாற்று உண்மைகள் வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணம் ஏன்?

வீரத்தாய் வேலுநாச்சியார் பற்றி நானறிந்த தகவல்களை தனிப்பதிவில் தொடர்கிறேன்.

இக்கட்டுரை இன்று தினத்தந்தியில் [15-08-2012] சுதந்திரதின மலரில் தஞ்சாவூர்.வெ.ஜீவக்குமார் எழுதி வெளியாகி உள்ளது.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Aug 14, 2012

கோவை புத்தகத்திருவிழா 2012


நண்பர்களே...
கோவையில் புத்தகத்திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 17 ம்தேதி முதல் 27 ம்தேதி வரை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
போன வருடம் நடைபெற்ற அதே இடத்தில்...நஞ்சப்பா ரோடு,கைத்தறி மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த வருடம் விற்பனையில் மிகவும் பின் தங்கி நமது கோவை மானம் காற்றில் பறந்தது.
இந்த வருடம் விற்பனையில் சாதனை படைக்க எல்லோரும் பாடுபடுவோம்.

பதிவர்கள் அனைவரும் இச்செய்தியை தங்கள் பதிவுகளின் வழியாக இத்திருவிழாவை கோவை மக்களிடம் சேர்க்குமாறு தங்கள் தாழ் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
                               
                    புத்தகக்கண்காட்சிக்கு முந்து...
                               டாஸ்மாக்குக்கு பிந்து.

Aug 11, 2012

Hey Ram \ 2000 \ கேள்வியும்...பதிலும்...வன்முறையே \ ஹேராம் =018


திரைப்படக்கலை உருவான பிறகு... ஏனைய கலைகளை பின்னுக்கு தள்ளி தனித்த பாதையில் இன்றும் பீடு நடை போட்டு வருகிறது.
திரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த ரஷ்ய மாமேதைகளுள் முக்கிய ஒருவரான ‘ஐஸன்ஸ்டைன்’ வகுத்த எடிட்டிங் இலக்கணம் இது....
  'A' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும்,
 'B' என்ற அர்த்தம் வரும் ஷாட்டையும் தொகுக்கும் போது...
 'C' என்ற புதிய அர்த்தம் உருவாகும்.

ஹேராமில், மனிதனாக இருந்த சாகேத் ராம் மிருகமாக மாறி அலறுவது ஒரு ஷாட்.
இஸ்லாமிய மதச்சின்னங்கள் இருக்கும் பகுதி...தீப்பற்றி எரிவது ஒரு ஷாட்.
பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சல்...இப்போது தீயாக பற்றி எரிகிறது என்ற  ‘காத்திரமான உரை’ பார்வையாளன் மனதில் எழுதப்படுகிறது. ‘கன்சப்சுவல் பார்ம் கட்டிங்’ [ Conceptual Form Cutting ] என்ற திரைக்கலை தொகுப்பின் உத்தியை பயன் படுத்தி இக்காட்சியை துவங்கிய...
 கமல் படைப்பாளியா?... ‘பீஸா’?
நீங்களே தீர்ப்பெழுதி கொள்ளுங்கள்.

தனி மனிதர்கள்... இன,மத வாதத்தை பற்ற வைத்து  ‘மாஸ் வயலன்சை’ எளிதில் உருவாக்க முடியும்.
ஆனால்  ‘பற்றியெறியும் மாஸ் வயலன்சை’ அதை உருவாக்கிய தனி மனிதர்களாலேயே நிறுத்த முடியாது.
அது,அதற்குறிய பேரழிவை ஏற்படுத்தி விட்டுத்தான் அடங்கும்.

[ ஒரு  ‘ஸ்மால் ஸ்டேட்’ திட்டமிட்டு உருவாக்கிய  ‘முள்ளி வாய்க்கால் மாஸ் வயலன்சை’ அனைத்து உலக நாடுகள் அடங்கிய  ‘ஐக்கிய நாட்டின் மகா சபையே’ நிறுத்த முடியவில்லை ]

இப்போது,  ‘ஹேராமில்’ இடம் பெற்ற  ‘பதிலடி வன்முறை’ காட்சியை ஆராய்வோம்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்...  ‘ரியாக்‌ஷனில்’ இறங்கும் போது விளைவுகள் கடுமையாக இருக்கிறது.
வன்முறையை தூண்டி விட்டவர்களும்,அதை செயல்படுத்திய
காரணகர்த்தாக்களும்...  ‘பதிலடியாக’எழும் வன்முறையில் சிக்கி கொள்வதில்லை.
மாறாக அப்பாவி மக்கள் சிக்கி கொண்டு பலியாகிறார்கள்.

இந்தக்கொடூர உண்மையை... ஹேராமில் படம் பிடித்து காட்டி உள்ளார் கமல்.
‘ஒரே ஒரு  கத்தியை வைத்து உருவான வன்முறையை’ பார்வையாளருக்கு காட்டிய படைப்பாளி கமல்...
‘பதிலடியாக உருவான மகா வன்முறை’ காட்சியில்,
திரண்டிருக்கும் சீக்கிய மக்களின் கைகளில் நீண்ட நெடிய வாள்கள் அணி வகுத்திருப்பதை காட்டி உள்ளார்.
அவர்களிடம் சிக்கி கதறும்  ‘அப்பாவி இஸ்லாமிய பெரியவரின்’ கதறலிலும் இக்கருத்தை பொதிந்திருக்கிறார்  ‘வசனகர்த்தா’ கமல்.

We have paid with enough lives!
Please! Don't kill us!

 ‘பதிலடி வன்முறை’... ‘இஸ்லாமியச்சிறுவனைக்கூட’ தீக்கிரையாக்கியதை...
 மிகுந்த சமூக பொறுப்புணர்வுடன் படமாக்கிய கமலை போற்ற வேண்டாம்...
தூற்றாமலிருக்கலாம் அல்லவா...

கண் முன் நடக்கும் கொடூரங்களை...  ‘கண்டும்...காணாதது’ போல்...
ராம் இயங்குவதை தத்ரூபமாக காட்டி...  ‘முப்பரிமாணத்திலும்’ ஜொலிக்கிறார் கமல்.


ராமின் இலக்கு... மனைவியை பலவந்தப்படுத்திக்கொல்ல தூண்டுகோலாக செயல்பட்ட அல்தாப்பே...
தப்பி ஒடும் கும்பலில்,  ‘அல்தாப்பை’ மட்டும் முதலில் குறி பார்க்கிறது ராமின் துப்பாக்கி.
மற்றவர்கள் உயிரை பறிக்கும் போது,
 ‘ மனிதத்தன்மையே இல்லாமல் செயல் படும் மிருகம்...
 தன்னுயிருக்கு ஆபத்து வரும் போது எவ்வளவு கோழையாக....
கேவலமாக கீழிறங்குவான் ’
என்பதை அல்தாப்பின் வசனம் மூலம் தெளிவாக்குகிறார் கமல்.

No sir..! No..!
Forgive me sir!

l accept.
lt's the situation!

lt's driving everyone crazy.
l wasn't the only one!

The others were
involved too!

Forgive me sir! No sir! 

ராமின்,  ‘கொதிக்கின்ற உள்ளம் போல்’ துடிக்கும் துப்பாக்கி...
அல்தாப்பின் உயிரை குடிக்கிறது.
அப்போதிருந்த பதட்டத்தில், மற்றொரு  ‘அப்பாவி இஸ்லாமியப்பெரியவரை’ சுட்டுக்கொன்று விடுகிறான் ராம் .
காரணமேயில்லாமல் ஒரு அப்பாவி உயிரை பறித்த குற்ற உணர்வில் ராம் பாதிக்கப்பட்டு இயங்குவதை ஹேராமில் தொடர்ச்சியாக காணவிருக்கிறோம்..

மன வளர்ச்சியில்லாத ஒரு சிறுவன்...மற்றொரு இஸ்லாமியப்பெரியவரை சரமாரியாக கத்தியால் குத்துகிறான்.
துப்பாக்கியோடு வரும் ராமை பார்த்ததும்...
கோழையாகி இப்போது ‘முஸ்லீம்’ போல்  ‘தெளிவாக’ நடிக்கிறான்.
உயிருக்கு பயந்து அபயக்குரலெழுப்பும் இவனையும்...
அல்தாப்பையும் இணையாக்குகிறார்  ‘படைப்பாளி’ கமல்.

ராம் வானத்தில் சுட்டு எச்சரித்ததும் தப்பி ஒடுகிறான்.
குத்துபட்ட  ‘இஸ்லாமிய முதியவர்’...
 ‘ராம்- காப்பாற்ற வந்தவன்’ என எண்ணி நன்றி கூறும் பாங்கை வைத்து....
பெரியவர்,  ‘பார்வையற்றவர்’ என நாம் புரிந்து கொள்கிறோம்.
அவரையும் குறி வைத்து சுடும்  'மிருகமாக' ராம் இப்போது இருக்கிறான்.
சுடுகிறான்.
 குண்டு இல்லாததால்’கிளிக்’ என அமைதி காக்கிறது துப்பாக்கி .
குண்டை நிரப்பி,மீண்டும் சுட எத்தனிக்கையில்...துப்பாக்கிக்கு வேலை இல்லை.
தானாகவே உயிரை விட்டு விடுகிறார்  ‘முஸ்லீம் முதியவர்’.

வீட்டிற்குள்ளிருந்து வரும் சிறுமியின் குரல்... ராமின் கவனத்தை கலைக்கிறது.
 ‘பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமி’....கையில்  ‘மரப்பாச்சி பொம்மையை’ வைத்து நீட்டிக்கொண்டு...ஆதரவுக்கரம் நாடி...அபயக்குரலெழுப்பி அலைகிறாள்.
அலை பாயும் கரங்களுக்குள் சிக்காமல்... ராம் அலை பாய்கிறான்.

 ‘பார்வையற்ற இஸ்லாமிய சிறுமியின்’ கையில் இருக்கும்
‘மரப்பாச்சி பொம்மை’...
அம்ஜத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது.
இங்கே  ‘அம்ஜத்தின் டயலாக்’ கனோட்டேஷன் ஆகிறது.

அம்ஜத் : 

 கிரைஸ்ட் பொறக்குறதுக்கு பல 1000 வருஷம் முன்னாலே...
'சீவேஜ் சிஸ்டம்' வேணும்னு நெனச்ச ‘சிவிலைசேஷன்’.


கொழந்தைக்கு வெளையாட பொம்மை வேணும்னு நெனச்ச சிவிலைசேஷன்.

நம்மள மாதிரி பெரியவங்க வெளயாட...
ஆளுக்கொரு சாமி வேணும்னு நெனக்கிற சிவிலைசேஷன் இல்லே...

ஆரியர்களோ...இஸ்லாமியர்களோ...கிருத்துவர்களோ...
வந்தார்களை எல்லாம் வாழ வைத்த சிவிலைசேஷன்.
குழந்தைகளுக்கு விளையாட பொம்மை கண்டு பிடித்த சிவிலைசேஷன்...
மதத்தின் பெயரால், குழந்தைகள் உயிரைக்கூட பறிக்கும் மிருகமாக மாறி விட்ட சிவிலைசேஷன்....
எங்கே போயிற்று நமது சிவிலைசேஷன்?
கேள்வி எழுப்பிய...  
‘ரௌத்திரன் கமல்தான்...கமல் மட்டும்தான்’.
 
மிருகத்தன்மையிலிருந்து... மனிதத்தன்மைக்கு... ராம் மீள்கின்ற... இக்காட்சிக்கு இணையாக ஒரு காட்சியை  ‘உலக சினிமாவில்’ சொல்ல முடியுமா?
சவால் விடுகிறேன்.
 ‘ஆயிரம் சாருக்கள்’ அணி வகுத்து வந்து... பாயிரம் பாடினாலும்...
 சந்திக்க தயாராய் இருக்கிறேன்.

ஹேராமின் அடுத்தப்பதிவில் இன்னும் சூடேற்றுவேன்.
காத்திருங்கள்.

இக்காட்சியின் மாட்சி காண... காணொளி காண்க...

        

Aug 5, 2012

மணிரத்னத்தை காப்பியடித்த... வெள்ளைக்காரன்


மணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன்.
ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்கை ...அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய உதாரணம்.

காப்பி...காப்பி...என்று நமது பதிவுலகில் தொடர்ந்து முழங்கி வருகிறார்கள் பலர்.
நானும் அவர்களை பின் தொடர முடிவு செய்து விட்டேன்.
காப்பியடிப்பவர்களை பிடிப்பதில்...தமிழ்நாடு போலிசுக்கு இணையாக செயல் பட்டு வருகிறார் எனது நண்பர்... ‘கருந்தேள்’ ராஜேஷ்.
அவருக்கு , ‘ஹாலிவுட்’... ‘கொழந்த’....மனசு.
நம்ம  பிள்ளையை... அடிச்சு வளர்த்தா போதும்னு நினைக்கிறாரு.
அவர் வழியில்... நானும் காப்பியடிக்கும் கனவான்களை காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஆனால்  ‘என் வழி தனி வழி’.

நான் ஹாலிவுட்  ‘காப்பியர்களை’ காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஏற்கெனவே சுஜாதா கதையை காப்பியடித்த  ‘அன் நோன்’
[Un Known]திரைப்படத்தை  ‘வெளுத்தெடுத்த’ அனுபவம் இருக்கிறது.


நம்ம மணிரத்னம்  ‘தில் சே’ - 1998 [ ஹிந்தி ] எடுத்து தமிழில்  'உயிரே'ன்னு டப் செய்து வெளியிட்டார்.
வட கிழக்கிந்திய மாநிலங்களில் இன்று வரை நிகழும்  ‘சிவில் யுத்தத்தை’
மெல்லிய இழையாக்கி..காதலை முதன்மையாக்கி எடுத்திருந்தார்.

ஷாருக்கான்  ‘சைய்யா...சைய்யா’ன்னு குதிச்சுகிட்டு...டிரெய்ன் மேல
ஆடுவாரு.
கூடவே மலாக்கான்னு ஒரு அக்கா இடுப்பை வெட்டுவாங்க...

ஊட்டி ரயில... பெயிண்ட் பண்ணி 15 நாள் சூட் பண்ணி எடுத்தாரு.
‘அகிலா’ன்னு ஒரு கிரேன் புதுசா வந்த நேரம்.
அந்த கிரேன் 150 அடி உயரம் மேலே போவும்.
‘அகிலாவுக்கு’...அந்த பாட்டுதான்  ‘டெமோ’.
இண்ணைக்கு வரைக்கும்  ‘ஒரு பய’ டிரெய்ன்ல பாட்டு ஷூட் பண்ண முடியாது.
அந்த பாட்டை ஒவர்டேக் பண்ணவே முடியாது.

அந்த பாட்டு உலகமெல்லாம் ஹிட்டடித்து ரஹ்மானுக்கு மிகப்பெரிய பிரேக். ஒரு வெள்ளைக்காரன் ரஹ்மான்கிட்ட  ‘ரைட்ஸ்’ வாங்கி... ‘இன்சைட் மேன்’ [Inside Man] என்ற ஹாலிவுட் படத்தில் அந்த பாட்டை பயன்படுத்தினான். 

இந்தப்படத்தின் கதையை Tigmansha Dhulisa , Maniratnam, Sujatha  மூணு பேரும் சேர்ந்து உருவாக்கியிருக்காங்க.
 மனிஷா கொய்ராலா... மலை வாழ் மகள்.
ஷாருக்கை காதலிச்சு..தீடிர்னு காணாம போயிருவா.
அந்த துக்கத்தை மறக்க, ‘பிரித்தி ஜிந்தான்னு’ ஒரு ஜாங்கிரியை கல்யாணம் பண்ற நேரம்...
திரும்ப மனிஷா  ‘எண்ட்ரி’.
ஷாருக்கை குழப்பி...நம்மையும் குழப்பி...
மனிஷா... ஒரு  ‘மனித வெடிகுண்டு’ன்னு முடிச்சிருப்பாங்க.


இந்தக்கதையை பட்டி பார்த்து  ' Luc Besson ' என்ற ஜாம்பவான்... காசு பாத்திட்டாரு.
அவன்  தயாரிப்பில்... ‘ஜான் டிரோவோல்டோவை’ நடிக்க வச்சு.. ‘ஃப்ரம் பாரிஸ் வித லவ்’-2010 \ ஆங்கிலம்    என்ற படத்தை எடுத்து ஹிட்டாக்கி கல்லா கட்டிட்டான்.

ஆனா...மணிரத்னம் கிளைமாக்ஸ் சூப்பீரியரா இருந்துச்சு.
இந்திய கலாச்சாரப்படி, காதலை விட்டுக்கொடுக்காத காதலனும்...கொள்கையை விட்டுக்கொடுக்காத காதலியும் இணைந்து உயிரை விடுவார்கள்.
ஹாலிவுட் படத்தில்...கொள்கைக்காக காதலியை மட்டும் சாகடிச்சு...காதலனை தப்பிக்க வச்சிருப்பாங்க.
இப்படி மசாலா கிளைமாக்ஸ் வச்சா... நல்லா கல்லா கட்டலாம்.

 ‘மலை வாழ் மகளை’  ‘முஸ்லீம்னு ’ ஒரு  ‘சேஞ்சு’ கொடுத்தான்...
‘சேஞ்சை’ அள்ளிட்டான்.
டெரரிஸ்ட்னா... முஸ்லீம்தான்னு ஹாலிவுட்காரன் தொடர்ந்து ரூல் எழுதிகிட்டு இருக்கான்.    
‘பிர்பால பதிவருன்னு’ நக்கலடிக்கும்  ‘நல்லவர்கள்’ இதப்பத்தி மூச்சே வுட மாட்டாங்க...
ஆனா  ‘கமல்ஹாசன்’ முஸ்லீம் இன விரோதின்னு சொல்லிட்டுதான் டெய்லி  ‘மூச்சா’ போவாங்க.


உதாரணத்துக்கு  ‘தசாவதாரம்’ன்னு ஒரு சாதா மசால் தோசை படம். அதுல..பத்து அவதாரத்துல ஒண்ணா... உயரமா  ‘பீம்பாய்’ கேரக்டர் ஒண்ணு படைச்சிருப்பார் கமல்.
உயரத்துக்கேத்த மாதிரியே மிக உயர்வா படைச்சிருப்பாரு.
அவ்வளவு வெள்ளந்தியா அந்த கேரக்டர் இருக்கும்.
அந்த காரெக்டர், உலகத்தில் உள்ள அனைவரையும் நல்லவங்களா பாக்கும். அந்த காரெக்டருக்கு கெட்டதே தெரியாது. எப்பேர்பட்ட உயர் படைப்பு !.


 ‘தசாவதாரம்’ நாயுடு காரெக்டர் ஒரு சீன்ல சொல்வாரு...
“எல்லோரும் முஸ்லீம்களா...
அப்ப எல்லோரும் டெர்ரரிஸ்ட்தான்....
அவ்வளவு பேரையும் அரஸ்ட் பண்ணுங்க ”

முஸ்லீம் இன மக்கள் எல்லோரையும் தீவிரவாதிகள்தான் எனப்பார்க்கும் பொது புத்தியை நக்கலடித்தவர் கமல்.
நானும், ‘காது... கேட்காது’ எனத்தெரிந்தே...  தொடர்ந்து சங்கு ஊதுகிறேன்.
கண் மூடிய பூனைகள்... இருட்டென்றே புலம்பட்டும்.
 அடுத்த பதிவில்... நம்ம ரஜினி படத்தை காப்பியடிச்ச காப்பியரை...
காட்டி கொடுப்பேன்.
காத்திருங்கள்.

உயிரே படப்பாடலை காணொளியில் காண்க...

Aug 2, 2012

Hey Ram \ 2000 \ கல்கத்தா...கற்பழிக்கப்பட்ட நகரம் \ ஹேராம் =017


சுதந்திரத்துக்கு ஒரு வருடம் முன்பு,1946 ல் கற்பிழந்த கல்கத்தாவுக்கு இன்று வரை அந்த புண் ஆறாமல் வலியை கொடுத்து கொண்டு இருக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு இதோ விக்கிபீடியா....

Direct Action Day

From Wikipedia, the free encyclopedia

Dead and wounded after the 'Direct Action Day' which developed into pitched battles as Muslim and Hindu mobs rioted across Calcutta in 1946, the year before independence
Direct Action Day (Bengaliপ্রত্যক্ষ সংগ্রাম দিবস) (16 August 1946), also known as the Great Calcutta Killings, was a day of widespread riot and manslaughter in the city of Calcutta (now known as Kolkata) in theBengal province of British India.[1] The day also marked the start of what is known as The Week of the Long Knives.[2][3]
The Muslim League and the Indian National Congress were the two largest political parties in the Constituent Assembly of India in the 1940s. The 1946 Cabinet Mission to India for planning of the transfer of power from the British Raj to the Indian leadership proposed an initial plan of composition of the new Dominion of India and its government. However, soon an alternative plan to divide the British Raj into a Hindu-majority India and a Muslim-majority Pakistan was proposed by the Muslim League. The Congress rejected the alternative proposal outright. Muslim League planned general strike (hartal)[4]on 16 August terming it as Direct Action Day to protest this rejection, and to assert its demand for a separate Muslim homeland.[5][6]
In those days the situation in Bengal was particularly complex. In the province, Muslims represented the majority of the population (56%, as against 42% of Hindus) and were mostly concentrated in the Eastern part.[7] As a result of this demographic structure and specific developments, this Province was the only one in which a Muslim League government was in power under the provincial autonomy scheme introduced in 1935 in coalition with the Europeans, and against the hurdle of strong opposition from the Congress, the Communist Party of India and also from a Hindu nationalist party,the Hindu Mahasabha. The latter was supported by many members of the rich Marwari trading community, composed of immigrants from Rajasthan, who largely dominated the economy of central Calcutta (although European capital was still important).[8] For this, inhabitants of Calcutta comprising 64% Hindu and 33% Muslim were by then divided into two highly antagonistic entities.[7] Against this backdrop, the protest triggered massive riots in Calcutta.[9][10] In Calcutta, within 72 hours, more than 4,000 people lost their lives and 100,000 residents in the city of Calcutta were left homeless.[1][10] Violence in Calcutta sparked off further religious riots in the surrounding regions of Noakhali, Bihar, United Province (modern Uttar Pradesh), Punjab, and the North Western Frontier Province. These events sowed the seeds for the eventual Partition of India.

சாகேத்ராம்-அபர்னா நிலைமையை காண ஹேராமுக்குள் நுழைவோம்.
ராம்-அபர்னா கரங்களால் மீட்டப்பட்டு...காதல் ஸ்வரங்களை ஆனந்தமாக பாடிய பியானோ...ராமின் தலையால் முட்டு பட்டு... அபஸ்வரமாய் துடித்துஅழுகிறது,

ராம், தன்னை தடவும் ஆளை ஓங்கி மர்ம ஸ்தானத்தில் உதை விடுகிறான்.
வலி தாள முடியாமல் தவித்து கொண்டிருப்பவன் கண்களில் துப்பாக்கி படுகிறது.
துப்பாக்கியை கையில் கிடைத்ததும்... ‘மனதில் ஆண்மை ‘ துளிர்க்கிறது.

ஹேராம் படத்தில் துப்பாக்கி தொடர்ந்து குறியீடாக காட்டப்படுகிறது.
அந்தந்த இடங்களில் அக்குறியீடுகளை நாம் காணவிருக்கிறோம்.

துப்பாக்கியில் புல்லட் இல்லாதது ராமிற்கும் தெரியும்...நமக்கும் தெரியும்.
 “என் கைகளை அவிழ்த்து விடு...நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் ‘” தந்திர வலையை விரிக்கிறான் ராம்.
துப்பாக்கி கையில் இருப்பதாலும்... ‘மனதில் ஆண்மை’ விழித்ததாலும் அவிழ்த்து விடுகிறான்.
விடுதலை பெற்ற ராம் ஹாக்கி ஸ்டிக்கை எடுத்து அவன் மர்மஸ்தானத்தில் ஒங்கி ஒரு அடி.
ஹாக்கி ஸ்டிக் இடி போல் தாக்கி நிலை குலைகிறான்.
மீண்டும் அதிலேயே ஒங்கி ஒரு அடி.
 ‘பச்சை பிரேமை’ உடைத்து கொண்டு தலை கீழாக வவ்வால் மாதிரி கேவலமாக தொங்குகிறான்.
வன்முறை உருவானதை  ‘பச்சை பிரேமை’ கொண்டு  குறியீடாக காட்டிய இயக்குனர் அதே  ‘பச்சை பிரேமை’ வன்முறை முடிவுக்கு வந்ததற்கும் குறியீடாக்கிய கமலின் ஆளுமை... ஐரோப்பிய ஆளுமைகளுக்கு விட்ட சவாலாக எனக்கு படுகிறது.
காலித்துப்பாக்கி இப்போது ராமிடம்.
போலிஸ் வேன் வருகிறது...சைரன் அலறலோடு...
 ‘தப்பு செய்றவனெல்லாம் தப்பிச்சு போய்டு ‘ என்ற செய்தி அந்த சைரனில் பொதிந்திருக்கிறது.
வந்து நின்ற வேனின் டாப் மீது... தலை கீழாக விழுந்து செத்துப்போகிறது  ‘வவ்வால்’


குற்றவாளிகள் அனைவரும் தப்பித்து ஒடுகிறார்கள்.
தப்பித்து ஒடும் அல்தாப்பின் கரங்களில்...கத்தி இருக்கிறது.

துப்பாக்கியில் புல்லட்டை திணித்து...வெறி கொண்டு சுடுகிறான் ராம்.
தப்பித்து போன திசையை மட்டுமே சுட முடிந்தது.
அபர்னா நினைவுக்கு வர அவளிருக்கும் அறைக்கு நொண்டிக்கொண்டு வருகிறான்.
கழுத்தறுக்கப்பட்டதால்....ரத்தம் பீறிட...வதை பட்டு பிரிகிறது அபர்னா உயிர்.


  வன்முறை ...எப்படி உருவாகிறது ? 
ஒரு காரணத்திற்காக மக்களை திரட்டுகிறார்கள்.
அப்படி திரண்ட நாலு பேர் குழுவாக ஒன்று சேரும் போது  ‘இம்பல்சிவ்’ [ Impulsive ]  ஆகி விடும்.
அதும் ஆயுதம் கையில் இருந்தா  ‘மெக்லோமேனியா’ [ Megalomania ] வந்துரும்.
மெக்லோமேனியா=நான் எல்லோரையும் விட பவர்புல் என்ற எண்ணம் மண்டைக்குள் வந்து  ‘ஆடுதல்’.
அப்புறம்  ‘கில்லிங் ஸ்ப்ரீதான்’.[ Killing Spree ]
 ‘முன்னாள் பிரதமர்’ இந்திரா காந்தி இறந்ததும்... காங்கிரஸ் குண்டர்கள் கண்ணில் பாக்குற சீக்கியர்களை போட்டுதள்ளியதுதான் .... ‘கில்லிங் ஸ்ப்ரீ’

 [ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தது...
  States' Organised Killing Spree ] 
இப்படி உருவான  ‘வன்முறைக்கு’ அபர்னாவை பறி கொடுத்த ராம் கதறுகிறான்.
தன்னால் மிகவும் நேசிக்கப்பட்டவள் அழிக்கப்பட்டபோது... ‘ நடிகர் கமல்’ தனது சோகத்தை வெளிப்படுத்திய பாங்கை உலகில் எந்த கொம்பனும் செய்யவில்லை.  
***************************************************************************************************************************************************************************************************
‘நடிகர் கமல்’ அழுவதில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட வகையை நமக்கு திரையில் காட்டியிருக்கிறார்.
ஆனால்  மாஸ்டர்பீஸாக நான் கருதுவது... ‘மகாநதி’அழுகைதான்.
கல்கத்தா ‘ சோனாகாச்சி’ அவஸ்தையை... தூக்கத்தில் மகள் புலம்புவதை கேட்டு... புரிந்து... தவித்து... வெடித்து... அழுவாரே...இன்றும் அந்தக்காட்சியை திரையில் பார்க்க நடுங்கி விடுவேன்.

இதற்கு இணையாக நாயகன் அழுகையை சொல்லலாம்.
நாயகன் படத்தின் வசனகர்த்தா பாலகுமரான் என்னிடம் சொன்னதை உங்களிடம் பகிர்கிறேன்.
“ மகனின் டெட் பாடியை பார்த்ததும் பேசுவதற்கு பக்கம்... பக்கமாக....எழுதி வைத்திருந்தேன்.
அந்த வசனத்தை பேசி நடித்து கொண்டிருந்த கமல் பாதியிலேயே நிறுத்தி விட்டார்.
 ‘இங்கே வசனம் சரியா இருக்குமா’ என்றார்.
ஆமா...இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கு...இங்கே வசனம் பேசிகிட்டு இருந்தா...தப்பா இருக்கும்...என்றேன்.
மணியும் ஆமோதித்தார்.
கமல் யோசித்து,நான் ஒண்ணு பண்றேன்...சரியா வருதான்னு பாருங்க...என்றார்.
மயில் அகவுவது போல் ஒரு குரல்...பிளிரலாக...பிசிறில்லாமல் ஸ்ருதியோடு ஒரு அழுகையை வெளிப்படுத்தினார்.
அந்த அழுகைதான் அவருக்கு இரண்டாம் முறை தேசியவிருதை பெற்றுத்தந்தது”
 என்றார்.

இதற்கு இணையாக ஹாலிவுட்டில் அல்பசினோவின் அழுகை காட்சி காட்பாதர் 3 ல் வருகிறது.
நாயகன் \ 1987
காட்பாதர்  3 \ 1990
கமலை பார்த்து அல்பசினோ காப்பியடித்தார் என நான் சொல்லவே மாட்டேன்.
இருவருமே மலைகள்...இந்த காட்சிகள் சிகரங்கள்.
**********************************************************************************************************************************

 இப்போது ஹேராமுக்குள் நுழைந்தால்... ஒளிப்பதிவாளர்‘திருவின்’ காமிரா, முதல் மாடியிலிருந்து ... ‘கிரேனில்’இறங்கும் போது அபார்ட்மெண்டில்   ‘வயதான பெண்’ கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை பதிவு செய்திருக்கிறது.

கமல் மாடியிலிருந்து வெறித்தனமாக அலறுவதை காமிரா தரையிலிருந்து அண்ணாந்து  'லாங் ஷாட்டில்' பதிவு செய்கிறது.
அடுத்தஷாட்டில்... இன்னும் நெருக்கமாக  'மிட்-லாங் ஷாட்டில்' அலறுவதை காட்டி ராம் வன்முறையை நெருங்கி விட்டான் என்று எடிட்டர் பதிவு செய்கிறார்.

 Direct Action Day  ‘ வன்முறைக்கு’ எதிராக,
 ‘ஆர்கனைஸ்டு வன்முறை கூட்டம்’ செயல் பட்டது  ‘வரலாறு’.
அதை கமல் படமாக்கிய விதத்தை... அடுத்து வருகின்ற பதிவுகளில் காண்போம்.

காணொளி காண்க....