Showing posts with label எம்ஜியார். Show all posts
Showing posts with label எம்ஜியார். Show all posts

Jun 24, 2013

நாடகம் போட்டு...நாட்டை ஜெயித்தவர்கள்.


நண்பர்களே...
இன்று தமிழ்நாட்டில்,
நாடகக்கலை ... நகைச்சுவை தோரணங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதனால்  ‘ஆக்சிஜன்’ பெற்று  உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \ 
[ பதிவின் பாகம் - 2 ]


தீவிர நாடகங்கள்,
கூத்துப்பட்டறை, பரிக்‌ஷா போன்ற அமைப்புகளாலும்,
பொதுவுடமைக்கட்சியினரின் கலை, இலக்கிய மன்றத்தினராலும்
மட்டுமே நடத்தப்பட்டு...
‘கை சுடப்பட்டு’ வருகிறது.

1960 -70 வரைக்கும் நாடகம் தமிழ்நாட்டில் செழித்திருந்தது எனலாம்.
நாடகத்திலிருந்து வந்து திரை உலகில் கொடி கட்டிப்பறந்த ஜாம்பவான்களால் நாடக உலகம் செழித்திருந்தது.

திராவிட இயக்கத்தில்,
திரு.பேரறிஞர் அண்ணாத்துரையும்...
திரு.கலைஞர் கருணாநிதியும்...
திரு.பொன்மனச்செம்மல் எம்ஜியாரும்...
நாடகம் மற்றும் சினிமா மூலமாக தங்களது இயக்கத்தையும்,
தங்களையும் வளர்த்துக்கொண்டது மாற்ற முடியாத வரலாறு.


திரு.என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்,
தனது துணைவியார் டி.ஏ. மதுரத்துடன் இணைந்து...
சொந்தமாக நாடகக்கம்பெனி நடத்தி சீர்திருத்தக்கருத்துக்களை மக்களிடம் நாடகம் மூலமாக பரப்பி வந்தார்.
திரை உலகையும், நாடக உலகையும் இரு கண்களாகவே பாவித்தார்.


திரு.எம்ஜியார் அவர்கள் திரை உலக நட்சத்திரம் ஆன பிறகும் கூட,
தனக்கென ஒரு நாடகக்குழு அமைத்து...
நாடகங்கள் நடத்தி வந்தார்.
ஒரு நாடகத்தில், உடல் பருமனான நடிகரை...
தலைக்கு மேல் தூக்கி நடிக்கும் போது,
விபத்து ஏற்பட்டு கால் முறிவானது.
அந்த விபத்துக்குப்பிறகு அவர் நாடகம் நடிக்கவில்லை.


திரு. சிவாஜி கணேசன் அவர்கள் தனது சிவாஜி நாடகக்குழுவின் மூலமாக வீரபாண்டிய கட்டபொம்மன், வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் போன்ற நாடகங்களை எழுபதுகள் வரை நடத்தி வந்தார்.
அதே போன்று எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.ராமதாஸ், சுருளிராஜன்,
மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஜி.சகுந்தலா, மனோரமா போன்ற முன்னணி நடிக, நடிகையர்கள் சொந்தமாக நாடகக்குழு அமைத்து  நாடகத்திற்கு செழுமையூட்டினர்.

திரு.டி.கே.சண்முகம் அவர்கள் நாடகக்கம்பெனி அறுபதுகளில் கொடி கட்டிப்பறந்த நிறுவனம்.
திரு.கமல்ஹாசன் இந்தக்கம்பெனியில்தான் பால்ய வயதில் நடிப்பு பயிற்சி பெற்றார்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் டி.கே.எஸ் நாடக கம்பெனிக்கு கதை எழுதி  உள்ளார்.


நமது இயக்குனர்களில் கே.பாலச்சந்தர், விசு, மவுலி போன்றவர்களும்
நாடக உலகில் பங்காற்றி தனித்துவம் பெற்றவர்கள்தான்.
அரசியல் நாடகங்களுக்கு திரு.சோ அவர்களும்,
புராண நாடகங்களுக்கு திரு.ஆர்.எஸ்.மனோகர் அவர்களும்
எழுபதுகளில் கொடி கட்டிப்பறந்தார்கள்.


திரு. நடிகவேள். எம்.ஆர்.ராதா அவர்கள்,
நாடக உலகில் போராளியாக விளங்கியவர்.
அவரது நாடகங்களை தடை செய்ய முயன்ற ஆதிக்க சக்திகளை,
மக்கள் சக்தியோடு அவர் எதிர் கொண்டது பொன்னெழுத்து வரலாறு.
அவரது மாஸ்டர் பீஸ்  ‘ரத்தக்கண்ணீர்’.
இன்றும் இந்த வசனங்களுக்கு ‘கை தட்டல்’ வெடிக்கும்.
அவரது வாரிசுகளான எம்.ஆர்.ஆர். வாசுவும், ராதாரவியும்
நடிகவேளின்  நாடகங்களை முன்னெடுத்து சென்றனர்.

திருஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகக்குழுவை,
அவரது வாரிசு ஒய்.ஜி.மகேந்திரா பொன் விழாக்காணச்செய்தது சாதாரண வரலாறு அல்ல.

எழுபதுகளில் திரைத்துறைக்கு வந்து சாதித்தவர்கள் பெரும்பாலும் நாடகப்பின்புலம் மிக்கவர்கள்.
திரு.பாரதிராஜா, கே.பாக்யராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனச்சொல்லிக்கொண்டே போகலாம்.


திரு.கோமல் சுவாமிநாதன் அவர்கள்  ‘தண்ணீர் தண்ணீர்’,  
‘ஒரு இந்தியக்கனவு’ போன்ற புரட்சி நாடகங்களை நடத்தி நாடக உலகிறகு புது ரத்தம் பாய்ச்சியவர்.

எழுத்தாளர் திரு.சுஜாதாவின் நாடக புதுமை உத்திகளை...
நாடகத்தில் புகுத்தி புகழ் பெற்றார் திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள்.



எழுபதுகளில் நாடக உலகிற்கு வந்து இன்றளவும் கொடி கட்டிப்பறப்பவர்கள் எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும்தான்.
அடை மழையிலும், ரசிக வெள்ளத்தால் அரங்கை நிரப்பும் வல்லமை படைத்தவர்கள்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை இன்றைய காலம் வரை உள்ள நாடக உலகை காட்டி இருக்கிறேன்.
நான் அறியாமல் விட்டு விட்ட நாடகப்பெருந்தகைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Nov 21, 2012

மணிரத்னம் V \ S கோவைத்தம்பி...யார் சரி ?

நண்பர்களே...
 ' CONVERSATION WITH MANI RATHNAM' என்ற நூலை...
திரு.பரத்வாஜ் ரங்கன் [ஹிந்து பத்திரிக்கையாளர்] உருவாக்கி வெளியிட்டு உள்ளார்.
திரு. மணிரத்னத்தை பேட்டி கண்டு...அவரது படைப்புகளை பற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதியிருக்கிறார் நூலின் ஆசிரியர்..


வந்தது வினை...எதிர்வினை.
இந்த மாதம்...தயாரிப்பாளர்கள் V \ S படைப்பாளிகள் மாதம் போல் இருக்கிறது.
திரு.முக்தா சீனிவாசனின் தொடர்ச்சியாக கோவைத்தம்பி பொங்கியிருக்கிறார்.
தினத்தந்தியில் [ 20 - 11 - 2012 ] அவரது அறிக்கை வெளி வந்திருக்கிறது.

கோவைத்தம்பியின் அறிக்கையிலிருந்து....
"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. 
அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்' என்றும் 
28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். 

எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். 
அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று படத்துக்கான செலவு வைத்தார் இந்த மணிரத்னம். 

சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. 
என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். 
ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," .



\\\ சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது \\\ 



கோவைத்தம்பியின் இவ்வரிகளை...மவுன ராகம், நாயகன்,அஞ்சலி, இதயத்தை திருடாதே, தளபதி,ரோஜா, பம்பாய், அலைபாயுதே,உயிரே, குரு, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள்...
 “அடங்கப்பா...இது உலக காமெடிடா” என சிரித்து கும்மாளமிட்டு கும்மியடித்துக்கொண்டிருக்கிறதாம். 

\\\ அந்த காலகட்டத்தில், 
தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது \\\

மணிரத்னத்துக்கு இதயக்கோயில் நாலாவது படம். 
1 பல்லவி அனுபல்லவி [ கன்னடம் ]
2 உணரு [ மலையாளம் ]
3 பகல் நிலவு [ தமிழ் ]
தனது முதல் தமிழ் படமான பகல் நிலவு படத்திலேயே தனி முத்திரை பதித்து
தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர்.
கோவைத்தம்பிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
கோவைத்தம்பி தான்தான் தமிழ்நாடு என்ற நினைப்பில் வாழ்கிறார் போலும்.

\\\ திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது \\\


மணிரத்னம் படைப்பிலேயே மாஸ்டர்பீஸ் இருவர்தான்.

உலகசினிமா ரசிகர்களும், சினிமா மொழி தெரிந்த திராவிட இயக்க பற்றாளர்களும் இருவர் படத்தை குறை சொல்ல மாட்டார்கள்.
திராவிட இயக்கதின் இரண்டு தலைவர்களின் நட்பையும், அதையொட்டிய வாழ்க்கையையும் பதிவு செய்த படம் இருவர்.
மதர்லேண்ட் பிக்சர்ஸ் லோகோவை  அதிமுக வண்ணத்தில் காட்டி காசு பார்த்தவ்ர் என உங்களைத்தான் கோடம்பாக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
திராவிட இயக்கத்தலைவர்களில் ஒருவர்  வரலாற்றையாவது  படமாக்கியிருந்தீர்கள் என்றால்...
அந்த நன்றிக்கடனுக்காக இக்கட்டுரையையே எழுதி இருக்க மாட்டேன்.

சர்ச்சைக்குறிய இதயக்கோயில் படம் பற்றி நான் கேள்விப்பட்ட
சில விவரங்களை கூறுகிறேன்.
இதயக்கோயில் படத்திற்கு கதை தயார் செய்து விட்டு...
அக்கதையை திரைக்கதையாக்கி இயக்க   ‘வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு’ வலை வீசி தேடினார்கள்.
அதில் ஒருவர் பாண்டியராஜன்.
பாண்டியராஜன்  ‘கன்னிராசி’ என்ற படத்தில் அறிமுக இயக்குனராக ஜெயித்த நேரம்.
கோவைத்தம்பி அதிமுகவில் செல்வாக்கோடு இருந்ததால்...
அவரது பட இயக்குனர்கள் அனைவரையும்  ‘படுத்துவார்’ என கோடம்பாக்கம் முழுக்க செய்தி பரவியிருந்தது.
அவரது படங்களை இயக்கியதில்...
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் [ பயணங்கள் முடிவதில்லை,நான் பாடும் பாடல்],
இயக்குனர் மணிவண்ணன் [இளமைக்காலங்கள்] முக்கியமானவர்கள்.

கோவைத்தம்பியின் வீர தீர பராக்கிரமங்கள் தமிழ்த்திரையுலகில் எல்லோருக்கும் தெரியும்.
பாண்டியராஜனுக்கு தெரியாதா ?...அவர் சிக்கவில்லை.
மணிரத்னம் மாட்டினார்... ‘அடி மாட்டு ’ சம்பளத்தில்.
கொத்தடிமையாகத்தான் மணிரத்னம் இதயக்கோயிலில் பணியாற்றினார்.

உச்ச கட்ட அராஜகம் ஒன்றை...இதயக்கோயில்  படம் வெளியான பிறகு கோவைத்தம்பி நடத்தி காட்டினார்.
படம் தியேட்டரில் வெளியான பிறகு கவுண்டமணி - செந்தில் காமெடியை மணிரத்னத்துக்கு தெரியாமல் ஷூட் செய்து இணைத்து விட்டார்.
பட விளம்பரத்திலும் கவுண்ட மணி- செந்தில் காமெடியை பிரதானப்படுத்தினார்.
ஒரு படத்தில் இயக்குனருக்கு தெரியாமல்  ‘ஒரு பிரேமை’ கூட நீக்கவோ சேர்க்கவோ எவனுக்கும் உரிமை கிடையாது....படத்தயாரிப்பாளர் உட்பட.
இந்த நியாய தர்மம் எல்லாம் ‘பிச்சைக்காரன்களுக்கு’ தெரியாது.

இப்போது கூட நீங்கள் அப்படத்தை பார்க்கும் போது...
கவுண்ட மணி  ‘காமெடி டிராக்’...
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட  ‘டெக்னிக்கல் தரம்’
படு மோசமாக இருப்பதை உணரலாம்.

கோவைத்தம்பி வீழ்ந்ததுக்கு காரணம் மணிரத்னம் இல்லை.
அவரது செயல்பாடுகள்தான்.
அவரது படங்களில் முதுகெலும்பாக இருந்த இளையராஜாவை புறக்கணித்தார்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியின் எந்தப்படமும் வெற்றிகரமாக ஓடவில்லை.
எல்லாமே அடிதான்.

ஒரு தயாரிப்பாளராக... திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு
அவர் தயாரித்த படங்கள் எல்லாமே வெற்றிகரமாக ஓடின.

படம் ஓடியதே தன்னால்தான் என்ற மண்டைக்கனம் யாருக்கு வருகிறோதோ அவர்கள் அத்தனை பேரும் ‘தொலைந்து போவார்கள்’ .
இந்த விதி,  தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் பொருந்தும்.


கோவைத்தம்பிக்கு மரண அடி கொடுத்தது மணிரத்னம் அல்ல... புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.யார் அவர்கள்தானாம்.
தனது கட்சியில் இருக்கும் நபர்கள் அராஜகம் செய்தால்...
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும்  ‘காயடித்து’ விடுவாராம்.
கோவைத்தம்பிக்கும்  ‘அது’ நடந்ததாம்..
ஒரு பிரபல தியேட்டரை வாங்க அதன் உரிமையாளரை உருட்டி மிரட்டினாராம் கோவைத்தம்பி.
தியேட்டர் அதிபர் புரட்சித்தலைவரிடம் அடைக்கலம் போனாராம்.
எம்ஜியார்... கோவைத்தம்பியை அழைத்து நைசாக விசாரித்தாராம்.

“என்ன விலைக்கு வாங்கலாம் ? ”

“ பணத்தை என்னிடம் கொடு...
நானே அந்த தியேட்டரை வாங்கித்தருகிறேன் ” .

பணத்தை கொடுத்து காத்திருந்தாராம் கோவைத்தம்பி.
எந்த தகவலும் வராததால்...
நேரடியாக போய் கேட்டாராம்  கோவைத்தம்பி .
எம்ஜியார்... திருப்பி கேட்டாராம்...
எந்த பணம் ? எந்த தியேட்டர் ?
தியேட்டர்காரருக்கு பிரசனை தீர்ந்தது.
பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைவர் பாணியே தனிதான்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இதயக்கோயில் பாடலை காணொளியில் காண்க...




Aug 28, 2012

புரட்சித்தலைவர்...திரையிட்ட நடிகர் திலகம் படம்.

நண்பர்களே...
கடந்த சில நாட்கள் நடந்த சண்டை... ‘தரம் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்டது.
நடப்பதை மிகுந்த கவலையுடன் நேரிலும்...போனிலும்...பின்னூட்டத்திலும் தெரிவித்தார்கள் நண்பர்கள்.
குறிப்பாக பதிவுலக நண்பர்கள் கீதப்பிரியன்,பேபி ஆனந்தன்,ராஜ்,கிஷோகர் ஆகியோர்.
நடந்த அனைத்திற்கும் நானே பொறுப்பு ஏற்றுக்கொண்டு காயப்பட்ட அனைவரிடமும் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அடிப்படையில்...நான் ஒரு மிருகம்.
எனது பள்ளி,கல்லூரி நாட்களில் நான் செய்த அராஜகம் அளவில்லாதது.
நானும் எனது நண்பர்களும்... ‘நோட்டரியஸ்’ என்றே அறியப்பட்டவர்கள்.
 ‘திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ’ இறுதி ஆண்டில்... ‘மாணவர் விழாவில்’ நானும்...எனது எட்டு நண்பர்களும் நடத்திய கலாட்டாவில்...
டிஸ்மிஸ் செய்யப்பட்டோம்.

ஏற்க்கெனவே... இரண்டாம் வருடத்தில் செய்த  கலாட்டாவினால்... ஹாஸ்டலை விட்டு தூக்கியெறியப்பட்டிருந்தோம்.
எனவே திருச்செந்தூரில்... வீடு எடுத்து தங்கி இருந்தோம்.
எங்களோடு தங்கி இருந்தவர் திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர்.
அந்த தைரியத்தில் நாங்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல....
தினமும் புட்டி,குட்டி,வம்புச்சண்டையோடுதான்  வாழ்ந்தோம்.

[எனது  'A' ONE வாழ்க்கையை பதிவு போடவா?...நூறு பதிவுகளைத்தாண்டும்.]

கல்லூரி நாளில் நண்பர்களை வைத்து  ‘பிராக்ஸி’ கொடுக்க வைத்து...
 அதே நேரத்தில் நண்பனுக்காக... பங்காளிச்சண்டையில்...
ஒருவனை வெட்டி இருக்கிறேன்.

வழக்கில் சேர்க்கப்பட்டு... நானும் எனது நண்பனும் கல்லூரி
 ‘வருகைப்பதிவேட்டை’  சாட்சியாக வைத்து வெளியே வந்து விட்டோம்.
எனது நண்பன் இப்போது ஹைகோர்ட் பிரபல வக்கீல்.
அவனை ஏற்கெனவே எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
[என் ஒருவனைத்தவிற டிஸ்மிஸ் செய்யப்பட்ட எட்டு பேருமே  கிரிமினல் வக்கீலாகி விட்டர்கள்.]

சுருக்கமாக சொல்கிறேன்...கற்பழிப்பு என்ற ஒரு குற்றத்தை தவிர மீதி அனைத்துமே செய்து இருக்கிறேன்.
அவை அனைத்துமே கேவலமான மிருக வாழ்க்கை.
அதிலிருந்து தப்பிக்க தினமும் முயற்சி செய்கிறேன்.

திரைப்படத்துறைக்கு வந்த பிறகே மனிதனாக வாழ ஆரம்பித்தேன்.
இருந்தும் அந்த மிருகம் அவ்வப்போது உயிர் பெற்று ஆட்டம் போடுகிறது.

உலகசினிமாவை நேசித்தாலும்...தமிழ் சினிமாவை உயிராக சுவாசிப்பவன்.
அதை பழிப்பவர்களை எதிரியாக பார்க்கத்துவங்கி விடுகிறேன்.

எனது பதிவுலக நண்பர்களுக்கு...ஒரே ஒரு வார்த்தை.
நகைச்சுவையாக என்னை எவ்வளவு வேண்டுமானாலும் நக்கலடிக்கலாம்.
ரசித்து சிரித்து விட்டு போய் விடுவேன்.
இப்போதும் சொல்கிறேன்...  ‘கொழந்தை இந்தக்கலையில் மாஸ்டர்’.

ஆனால் என்னை சீரியஸாக்க, ஒரு வார்த்தை போதும்....
அதன் பிறகு நான் மிருகம்தான்.

கடந்த பதிவுகளில் நான் குறிப்பிட்ட நடிகர் திலகம் நக்கல்கள் அனைத்தும் சென்னை மயிலாப்பூர் ஹ்யூமர் கிளப்பில் சொல்லப்பட்டவை...
[நான் அதில் மெம்பராக இருந்தவன்.
அந்த மேடையில் தமிழ் சினிமாவை நக்கலாக பேசியதற்காக...
‘பிராம்மண வெறியன்’ எஸ்.வி.சேகரோடு நேரடியாகவே சண்டை போட்டிருக்கிறேன்.]
முதலாவதை... கமலா தியேட்டர் அதிபரே சொன்னது.
இரண்டாவதை... சொன்னவர் நடிகர் ராஜேஷ்.

நடிகர்திலகமும்...மக்கள் திலகமும் இருவருமே நண்பர்கள்தான்.
ஆனால் தொழில் போட்டியில் இருவருமே எதிரிகளாக நடந்து கொள்வார்கள்.
பிரச்சனை என்று வந்து விட்டால் இருவருமே விட்டுக்கொடுப்பதில் போட்டி போடுவார்கள்.
அதனால் இருவருமே இறுதி வரை நண்பர்களாக வாழ்ந்தார்கள்.

பர்சனல் மேட்டரில் சிவாஜி... பிரபுவை துப்பாக்கியால் சுட்டதாக...
 ஒரு செவி வழி செய்தி ஒன்று உண்டு.
அப்போது புரட்சித்தலைவர்தான் முதல்வர்.

 ‘துப்பாக்கியை சிவாஜி துடைத்துக்கொண்டிருந்த போது...
 தவறுதலாக கை பட்டு... வெடித்து பிரபுவுக்கு காயம்...’
 என்று பத்திரிக்கை செய்தி வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..

எம்ஜியார் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் குணமாகி நலமுடன் திரும்பினார்.
அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை வரவைழைத்து மரியாதை செய்தார்.
அந்த நிகழ்ச்சி நிரலில் அவர்களுக்கு தமிழ் திரைப்படம் ஒன்றை திரையிட்டு காட்ட விரும்பினார்.
அவர் தேர்வு செய்த திரைப்படம் என்ன தெரியுமா?
  ‘தில்லானா மோகனாம்பாள்’
ஆச்சரியப்பட்ட அனைவருக்கும்... அவர் சொன்ன விளக்கம்...

 “ எனது படங்கள் அவர்களுக்கு ஆச்சரியத்தை தராது.
அவைகள் அனைத்துமே 
ஹாலிவுட் படங்களின் எளிய வடிவம்.
 ‘தம்பியின் தில்லானா மோகனாம்பாள்’...அவர்கள் ஹாலிவுட்டில் பார்த்திராத அனுபவத்தை தரும்.
அது மட்டுமல்ல...தம்பியைப்போல் நடிப்பதற்க்கு ஹாலிவுட்டில் எவனும் இல்லை என்பதையும்  காட்ட விரும்புகிறேன்.”
என்றார். 

அடுத்த பதிவில் உலக சினிமாவோடு வருகிறேன்.