Nov 23, 2012

மதங்கொண்ட வேழம் \ HEY RAM \ 2000 \ INDIA \ ஹேராம் = 030

நண்பர்களே...
‘ ஒரு ஓவியத்தின் மொத்தத்திலிருந்துதான் அந்த  ஓவியத்திலுள்ள ஒரு சிறு வண்ணப்பகுதியின் அர்த்தத்தை உணர முடியும்.
ஒரு ராகத்தின் மொத்ததிலிருந்துதான் ஒரு ஸ்வரத்தை புரிந்து கொள்ள முடியும்.
ஒரு வாக்கியத்தின் மொத்ததிலிருந்துதான் ஒரு சொல்லை விளங்கிக்கொள்ள முடியும்.
இந்த, அடிப்படையில்தான், ஒரு மொத்தப்படத்தில்  ‘தனித்த ஒரு ஷாட்டின்’ பங்கு என்பதும் அமைந்துள்ளது.
‘தனித்த ஷாட்டுகள்’ தங்களுக்குள்ளே மறைந்திருக்கக்கூடிய அர்த்தங்களை
பொதிந்து வைத்திருக்கலாம்.
இந்த அர்த்தங்களெல்லாம் இன்னொரு ஷாட்டுடன் இணைக்கப்படும் போதுதான் மின்பொறி போல வெளிப்படும்’ - என  திரை மேதை ‘பேலபெலாஸ்’ தான் எழுதிய  ‘சினிமா கோட்பாடு’ என்ற நூலில் குறிப்பிட்டிருப்பார்.
இந்த இலக்கணத்துக்கு, இயக்குனர் கமல் எழுதிய விஷுவல் உரையை இப்பதிவில் காண்போம். 



ஹேராமில்,
ராம் இப்போது கல்கத்தா வீட்டை காலி செய்து புறப்படத்தயாராகிறான்.
ராமின் பொருட்கள் திணிக்கப்பட்ட வாடகைக்கார் தயாராக நிற்கிறது.
இதர தட்டு முட்டு சாமான்கள் அனைத்தும் இன்னொரு வண்டியில் ஏற்றப்பட்டு இருக்கிறது.
அந்த வண்டியின் வர்ணம்  ‘கரும் பச்சை நிறத்தில்’ இருக்கிறது.
 ‘கரும் பச்சை வண்டியில்’ தலையை கவிழ்ந்து கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருக்கும் ராம்,
தொழிலாளர்களின்  கூச்சல் கேட்டு நிமிர்கிறான்.

கலாசி தொழிலாளர்கள் : Slowly...Slowly...

பால்கனியிலிருந்து, பியானோ இறக்கப்படுவதை கவலையோடு கவனிக்கிறான் ராம்.
பியானோஆபத்தான நிலையில் ஊசலாடுகிறது.

கலாசி தொழிலாளர்கள் : Watch it!... lt's going to crash!

அதிலிருந்து எழும்  'அவல ஓசை' ராமை நிலை குலைய வைக்கிறது.
ராம் - அபர்னா இணைந்து வாசித்த காதல் புத்தகமல்லவா அந்த பியானோ!

பியானோ உடைந்து நொறுங்குவதை காணப்பிடிக்காமல் பதட்டத்துடன்  அவசரமாய் காரில் ஏறி...

ராம் : [ கெஞ்சுகின்ற குரலில் ] டிரைவர் சலோ .

டிரைவர் : மோல் பொத்தர் கேலா...[ Your Luggage...]

ராம் : ஐயா...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்யா...
என்னை இங்கே இருந்து கொண்டு போய்டு...

டிரைவர் : ஜீ...

ராம் : ப்ளீஸ் கெட் மீ அவுட் ஆப் ஹியர்...ப்ளீஸ்...
உடைந்து நொறுங்கிய உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளில் கண்ணீர் கசிந்திருப்பதை காண முடிகிறது.

கார் நகர்கிறது.
பியானோ தடாலென விழுந்து, தன் கடைசி சங்கீதத்தை சிதறுகிறது...
பியானோவும் இறந்து விட்டது.
திரை முழுக்க இருள் பரவுகிறது.


திரையில் இருள் விலகி...
 மதம் கொண்ட யானை தும்பிக்கையில் அங்குசத்தை தூக்கி பிடித்துக்கொண்டு வேகமாக நடை போடுகிறது.
ராம் காருக்குள்ளிருந்து யானையை உற்று பார்க்கிறான்.
இக்காட்சிக்கு பின்னணியாக ‘ஆழ்வார் பாசுரம்’ ஒலிக்கிறது.

‘பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை
மாவுத்தன் அவனும் இன்றி
கதம் கொண்டு துளைக்கும் வெய்ய
அங்குசம் அதுவும் இன்றி...’

On foot my life proceeds
without a mahout. 
Nor goad to pierce
and direct me about.

 ‘மத யானை’ தும்பிக்கையில் அங்குசத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு  
 நடை போடுகிறது = வன்முறை அருகாமை பிரதேசங்களுக்கு பரவியது.

*********************************************************************************
கல்கத்தா கலவரத்தின்,  ‘தொடர் வினையாக’ நவகாளியிலும், பீகாரிலும்,மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகளிலும் வன்முறை நிகழ்ந்தது.
விக்கிப்பீடியாவில் விபரம் காண்க.
நவகாளி கலவரம் பற்றி தெரிந்து கொள்ள... 

பீகார் மற்றும் இதர பகுதிகளில் பரவிய கலவரங்கள் பற்றி விக்கிப்பீடீயா செய்திகள் இதோ...
As a reaction to the Noakhali Genocide, a riot rocked Bihar towards the end of 1946.
Between 30 October and 7 November, mass communal massacres in Bihar brought Partition closer to inevitability.
Severe violence broke out in Chhapra and Saran district, between 25 and 28 October.
Very soon Patna, Munger and Bhagalpur also became the sites of serious turbulance.
Begun as a reprisal for the Noakhali riot,
it was difficult for authorities to deal with because it was spread out over a large area of scattered villages,
and the number of casualties was impossible to establish accurately: "According to a subsequent statement in the British Parliament,
the death-toll amounted to 5,000.
The Statesman's estimate was between 7,500 and 10,000;
the Congress party admitted to 2,000;
Mr. Jinnah claimed about 30,000."
However, By 3 November, the official estimate put the figure of death at only 445.
According to some independent source, the death toll was around 8000 human lives.

Some worst riot also took place in Garhmukteshwar in United Provinces where a massacre occurred in November 1946 in which "Hindu pilgrims, at the annual religious fair,
set upon and exterminated Muslims,
not only on the festival grounds but in the adjacent town" while the police did little or nothing; the deaths were estimated at between 1,000 and 2,000.
*********************************************************************************
 ‘அங்குசம் அதுவும் இன்றி’ என்ற வரிகள் பின்னணியில் ஒலிக்கும் போது யானையின் கரிய உடல் மட்டும் திரையில் வியாபித்திருக்க...
ராம் கண்களை இறுக மூட...
மெல்ல இருள் திரை முழுவதும் பரவுகிறது.

இருள் விலகி,
பெருமாள் கோவிலின் கோபுரம் குளோசப்பில் தெரிகிறது.
பின்னணியாக கீழ்க்கண்ட வரிகள் மந்திரம் போல் ஒலிக்கிறது.
கூடவே இளயராஜாவின் மங்களகரமான இசையும் கலக்கும் போது அமைதியான சூழலை உணர முடிகிறது.

மதங்கொண்ட வேழம் போல
திரிகின்றேன்... பண்டு நான்கு
விதம் கொண்ட மறைகள் போற்றும்
அரங்கமா நகரு ளானே’.  

Like a demented rogue elephant.
l roam. 
O'lord of Sriranga praised in
the four Vedas since times unknown. 
Unto thee l surrender.


காமிரா, 
‘வைஷ்ணவ நாமம்’ கம்பீரமாக காட்சியளிக்கும் கோபுரத்தை  ‘அண்மைக்காட்சியாக’ காட்டி,
மெ
ல்


கீ
ழே



ங்
கி,
 ‘பெருமாள் உற்சவ மூர்த்தியாக’ நகர்வலம் புறப்படுவதை காட்சிப்படுத்துகிறது.
யானை அமைதியாக நின்று கொண்டு இருக்கிறது.

வடக்கே வீசிய வன்முறைப்புயலை,
மதயானை மூலம் காட்சிப்படுத்தி...
தெற்கே வீசிய தென்றலை...
குறிப்பாக தமிழகத்தில் அமைதியான சூழல் இருந்ததை வேறொரு யானையின் மூலமாகவே காட்சிப்படுத்தியது  இயக்குனர் கமலின் அசகாய வேலை.

மதம் பிடித்த யானை ஷாட்டிலிருந்து...
அமைதியான யானை ஷாட்டிற்கு காட்சியை தொகுத்த விதம் 
 ‘கன்செப்சுவல் பார்ம் கட்டிங்’ [ Conceptual Form Cutting ] எனப்படும்.
இது பற்றி விளக்கமாக  ‘ஹேராம் = 018’ பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.


அடுத்த பதிவில் சந்திப்போம்.

இக்காட்சி காணொளியில் கிடைத்தால் தெரியப்படுத்தவும்.



4 comments:

  1. by reading your narration and words visuals are coming to my eys. thank tou

    ReplyDelete
  2. ஹேராம் என்னும் உலத்தரம் வாய்ந்த படத்துக்கு உங்களின் பதிவுகள் வைரங்கள்..உங்க எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை அண்ணா..மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹேராம் மாதிரி உலகத்திரைப்படம் இன்று வரை இந்தியாவில் எடுக்கப்படவில்லை.ஏன்?... கமலாலேயே எடுக்கப்படவில்லை!.

      ஊக்கமளித்ததற்கு நன்றி குமரா.

      Delete

Note: Only a member of this blog may post a comment.