tag:blogger.com,1999:blog-3755770263884541343.post2774293222093410462..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: அண்ணா நூற்றாண்டு நூலகம்-மாற்ற வேண்டாம் தாயேஉலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-56445977032020449022011-11-10T09:32:41.953+05:302011-11-10T09:32:41.953+05:30புத்தகம் என்பது அனுபவ பதிவு. வாழ்கை வழிகாட்டி. உடல...புத்தகம் என்பது அனுபவ பதிவு. வாழ்கை வழிகாட்டி. உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ மனை என்றால், மன ஆரோக்கியத்திற்கு புத்தகம். எனவே அய்யா சொன்னது போல பத்து மா நகராட்சிகளில் மட்டுமல்லாமல் எல்லா ஊர்களிலுமே நல்ல கட்டமைப்பு வசதி கொண்ட சிறந்த நூலகங்களை அமைத்தால் சமூக அமைதி ஏற்பட வழி கிடைக்கும்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-48937789971128689742011-11-07T09:55:27.465+05:302011-11-07T09:55:27.465+05:30நானும் வந்துவிட்டேன். நூலகப் பிரச்னையில், எனது கரு...நானும் வந்துவிட்டேன். நூலகப் பிரச்னையில், எனது கருத்து, கொஞ்சம் வேறு மாதிரியானது. என்னைவிட, அதனை சாரு மிக அருமையாக நேற்று எழுதியுள்ளார். அது - இங்கே.<br /><br />//பல ஆண்டுகளுக்கு முன்பு மூர் மார்க்கெட் எரிந்தது போல் நூலகத்தை யாரும் எரித்து விடவில்லை. இடமாற்றம் செய்கிறேன் என்று மட்டுமே சொல்கிறார் ஜெயலலிதா. இதுபற்றிக் கூச்சல் போடும் பலரும் சும்னாச்சுக்கும் தங்களைப் போராளிகளாகவும் சமூக அக்கறை உள்ளவர்களாகவும் காட்டிக் கொள்ள மட்டுமே விரும்புகிறார்கள். உண்மையில் அவர்கள் மழைக்காகக் கூட நூலகத்தின் பக்கம் ஒதுங்கியவர்கள் அல்ல. நான் எல்லோரையும் சொல்லவில்லை. கூச்சல் போடுபவர்களில் பலர் அப்படி.<br /><br />தமிழ்நாட்டிலிருந்து தமிழை விரட்டி அடித்தவர் திரு கருணாநிதி. இன்றைய இளைஞர்கள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆங்கிலம்தான் படிக்கிறார்கள். தமிழ் அல்ல. தமிழ்நாட்டில் குடிசைத் தொழிலைப் போல் கான்வெண்ட் பள்ளிகள் திறக்கப்பட்டு தமிழ் புதைகுழிக்குப் போனது கருணாநிதி ஆட்சியில்தான். அவர்தான் இன்று அண்ணா நூலகத்துக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அந்தக் கோட்டூர்புர இடம் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் வேறு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம். அதைத்தான் கருணாநிதி நூலகமாக மாற்றினார். அதை இப்போது ஜெ. இடமாற்றம் செய்கிறார். இதில் என்ன பிரச்சினை? இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவிக்கும் பல எழுத்தாளர்கள் திமுக தொண்டர்களை விட தீவிர திமுக பற்று உள்ளவர்கள். அவர்களுக்குத் தங்கள் திமுக விசுவாசத்தைக் காட்ட இது ஒரு சாக்கு. அவ்வளவுதான்…<br /><br />இன்றைய நிலையில் மிக அடிப்படையான தேவை, மாணவர்களுக்கு நல்ல தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டும். அதற்கடுத்ததுதான் நூலகம் எல்லாம். தமிழே படிக்கத் தெரியாமல் ஒரு தலைமுறையை வளர்த்து வைத்து விட்டு நூலகம் கட்டினால் என்ன பயன்? மேலும், அண்ணா நூலகத்துக்கு ஒன்றும் மூடுவிழா நடத்தி விடவில்லை. இடமாற்றம் மட்டுமே செய்கிறார்கள். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஏன், கன்னிமாரா நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் எல்லாம் என்ன ஆயிற்று?<br /><br />முதலில் தமிழர்களாகிய நாம், சினிமா கலாச்சாரத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும். புத்தகம் வாங்கக் காசு இல்லை என்பது வீண்வாதம். காசு இல்லை என்று சினிமா பார்க்காமலா இருக்கிறோம்? சினிமாவை விட புத்தகம் மலிவானதுதான். நூலகத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை, தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நூலகங்களுக்குச் செல்வதுதான். அப்படிச் செய்தால்தான் சினிமா தியேட்டர்களை விட நூலகங்கள் பெருகும். வெறுமனே வாய்ப்பேச்சில் வீரம் காண்பிக்கக் கூடாது.//<br /><br />இது - http://charuonline.com/blog/?p=2602 என்ற லிங்க்கில் உள்ளது.<br /><br />இதுவேதான் என கருத்தும். நன்றி.கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-64106993742436806482011-11-06T22:48:28.369+05:302011-11-06T22:48:28.369+05:30மிக அருமையான, அவசியமான பதிவு...........
கொஞ்சமாவத...மிக அருமையான, அவசியமான பதிவு...........<br /><br />கொஞ்சமாவது இது அவர்களின் முடிவை அசைத்து பார்க்கும் என்பது நிச்சயம்....<br /><br />ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றை எதற்காக மாற்ற வேண்டும் என்ற லாஜிக்தான் புரியே மாட்டேங்குது..............கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43529444602212925212011-11-06T15:16:50.268+05:302011-11-06T15:16:50.268+05:30நல்ல முயற்சி...எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்நல்ல முயற்சி...எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-492783385627995502011-11-06T12:23:08.903+05:302011-11-06T12:23:08.903+05:30கலாப்ரியா: நூலகத்தை மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்த...கலாப்ரியா: நூலகத்தை மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதை 'கெட்டிக்காரத்தன மான’ செயலாக நினைக்கலாம் முதல்வர். ஆனால், நல்ல செயல் இல்லை. கெட்டிக்காரராக இருப்பது சுலபம், நல்லவராக இருப்பது கடினம். இது தப்பு, தவறு இல்லை. ''தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்..'' நான் சொல்லவில்லை எம்.ஜி.ஆர். சொன்னது.<br /><br />சிவகாமி: நூலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் இப்போது அரசுக்கு என்ன? கருணாநிதி காலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையாவது அரசால் சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் இந்தள வுக்கு அராஜகமாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?<br /><br />நாஞ்சில் நாடன்: நூலகம் சமுதாயத்தின் அத்தியா வசியமான ஓர் உறுப்பு. நம் மக்களுக்கு அதை பயன் படுத்தத் தெரியவில்லை என்பது உண்மை. அதனால் வாசிப்புப் பழக்கத்தை அதிக ரிக்க என்ன செய்யலாம் என்றுதான் ஒரு அரசாங்கம் யோசிக்கவேண்டும். அதை விட்டு, நூலகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுப்பது ஒரு சமூக அவலம்<br /><br />ஆ.சிவசுப்பிரமணியன்: நூலகம், மருத்துவமனை இரண்டின் உள்கட்டமைப்பு களும் வெவ்வேறு மாதிரி யானவை. ஒரு நூலகம் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இருந்தால் மட்டும் போதாது, அங்கு அமைதியான சூழல் வேண்டும். மேலும் புத்தகங்கள் என்பவை சிமென்ட் மூட்டைகளோ, வெங்காய மூட்டைகளோ அல்ல... நினைத்தால் இடம் மாற்றி விடுவதற்கு. எல்லா விஷயங்களையும் அரசியல் நோக்கத்துடனேயே பார்ப்பதும் அணுகுவதும் ஆபத்தானவை.<br /><br />சு.வெங்கடேசன்: இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்வில் எடுக்கப்பட்ட முடிவு. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. டி.பி.ஐ. வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட போதுமான இடங்கள் இல்லை. எப்படி லட்சக் கணக்கான புத்தகங்களைப் பராமரிக்கப் போகிறார்கள்?<br /><br />வ.கீதா:மன்னர் ஆட்சிக் காலங்களில் கூட, ஒரு மன்னன் வெற்றி பெற்ற பிறகு, பழைய அரசனின் கட்டடங்களை உடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஜெயலலிதா, முடியாட்சியை விட மோசமாக நடந்துகொள் கிறார்.<br /><br />அழகிய பெரியவன்: ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் வாசிப்பு குறைந்திருக்கிறது என்கிற ஆதங்கம் உண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த குறைபாடுகளுக்கு ஒரே மருந்து புத்தகங்கள்தான். ஆனால், தான் ஆட்சி செய்யும் மக்கள் அறிவுமயப் படுத்தப்பட்ட சமூகமாக மாறி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க அரசு. இருக்கிற மருத்துவமனைகளையே இன்னும் சிறப் பாகப் பராமரிக்காத தமிழக அரசு, மேலும் மருத்துவமனைகளை உருவாக்கப் போவதாகச் சொல்வது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் கூடிய அபத்தம்.<br /><br />புனிதபாண்டியன்: சட்டசபைக் கட்டடத்தையும் தலைமைச் செயலகத்தையும் தன் ஆணவப் போக்கினால் மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், அப்போது 'இது ஏதோ கருணாநிதியின் சொந்தப் பிரச்னை’ என்பதைப் போலப் பலரும் மௌனமாக இருந்ததால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கை வைக்கிறார். சமச்சீர்க்கல்வி, அறிவை விரிவு செய்யும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது போன்ற தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களைச் சீர்குலைப்பது ஆகியவை ஜெயலலிதாவின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்!geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-9229158110587292612011-11-06T12:23:00.619+05:302011-11-06T12:23:00.619+05:30கீழே பிரபல எழுத்தாளர்கள் விகடனில் சொல்லுவதைக் கேளு...கீழே பிரபல எழுத்தாளர்கள் விகடனில் சொல்லுவதைக் கேளுங்கள்.<br /><br />சா.கந்தசாமி: சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது இந்த நூலகம். நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, 'இப்படி தமிழ்நாட்டில் ஒரு நூலகம் இல்லையே’ என்று ஏங்கியிருக்கிறேன். அண்ணா நூலகம் தமிழகத்தின் கனவு. எங்கே காற்று வேண்டும், எங்கே வெளிச்சம் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து, படிப்பதற்கும் எழுதுவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை, எப்படி மருத்துவமனையாக்க முடியும்? மருத்துவம் அவசியம்தான். ஆனால், அது சென்னைக்கு மட்டும்தானா? வேறு எந்த நகரத்திலும் குழந்தைகள் இல்லையா?<br /><br />பொன்னீலன்: மருத்துவமனை கட்ட இடமா இல்லை? இந்த அரசுக்குக் கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நடவடிக்கை. இது அறிவுல கத்துக்கு விடப்பட்டுள்ள சவால். எழுத்தாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தியுள்ளது. அறிவுலகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக ஒடுக்குமுறைக்கான ஒத்திகை. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது, சகிக்க முடியாதது.<br /><br />தொ.பரமசிவம்: தமிழ் அடையாளத்தை அழிப்பதே யாழ்ப்பாண நூலகத்தை அழித்ததன் நோக்கம். அண்ணா நூலகக் கட்டடத்தை மருத்துவமனை ஆக்குவதும், தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல்தான்!<br /><br />அசோகமித்திரன்: நன்றாகச் செயல்படும் ஒரு அமைப்பை கலைக்கக் கூடாது. படிப்பதற்குரிய உற்சாகமான ஒரு சூழலைத் தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கட்டப்பட்ட நூலகம் அது. பராமரிப் பில்லாத ஒரு அரசு மருத்துவமனையாக்குவதை விட இந்த நூல கத்தை நூலகமாகவே வைத்துக் கொள்ளலாமே.<br /><br />மேலாண்மை பொன்னுசாமி: முந்தைய அரசின் சாதனைகளை முறியடிப்பது என்பது சரி. ஆனால், அவற்றை ஒழித்துக் கட்டக்கூடாது. இது மிகவும் தவறான அணுகுமுறை. ஷாஜஹானுக்குப் பிந்தைய மன்னன் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு தாஜ்மஹால் இருந்திருக்காது. ராஜராஜசோழனுக்கு அடுத்து வந்த மன்னன் நினைத்திருந்தால்... தஞ்சை பெரிய கோயில் இருந்திருக்காது. கரிகால சோழனைத் தொடர்ந்தவன் அப்படி நினைத்திருந்தால் கல்லணை இருந்திருக்காது.<br /><br />கீரனூர் ஜாகீர் ராஜா: நூலகம் திறக்கப்படுகிறபோது, 'ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது’ என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் நடக்கிற கதை வேறு. ஏற்கெனவே, வாசிப்பில் பின்தங்கி உள்ள சமூகமாகவே தமிழ் சமூகம் மதிக்கப்படுகிறது. அரசின் இதுபோன்ற அதிரடியான செயல்பாடுகள் அதற்கு ஒரு மறைமுகக் காரணியாக அமைந்துவிடக் கூடாது.<br /><br />சல்மா: மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட, அண்ணா படிப் பதில் ஈடுபாட்டோடு இருந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரின் பெயரில் அமைந்துள்ள நூலகத்தை இடமாறுதல் செய்வது அநீதியானது. அரசியல் விரோதம் அறிவை விருத்தி செய்யும் விஷயத்தில் தலையிடக் கூடாது.<br /><br />வண்ணதாசன்: இது இன்னொருவித 'யாழ் நூலக’ எரிப்பன்றி வேறில்லை. உயர் மருத்துவம் உடனடி யாகத் தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல; இந்த அரசுக்குத்தான். அசுரப் பெரும்பான்மை என்பது, சொல்லுக்கு சொல் உணரப்படுகிறது; பிணம் தின்னல் தொடர்கிறது.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-86810847625085453602011-11-06T12:22:19.843+05:302011-11-06T12:22:19.843+05:30என்னுடைய வேண்டுதலும் இது தான்,தயவுச் செய்து இதைவிட...என்னுடைய வேண்டுதலும் இது தான்,தயவுச் செய்து இதைவிட பெரிய நூலகத்தை ஆராய்ச்சி மையத்துடன் திறந்து தமிழனை தழைக்க விடுங்கள்,வெளி மாநில மாணவனும் எழுத்தாளனும் கூட இங்கே அதை தேடி வர செய்யுங்கள்,இதை இந்த பொக்கிஷத்தை விட்டுவிடுங்கள் அம்மா.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-88106543993085494852011-11-06T02:50:35.687+05:302011-11-06T02:50:35.687+05:30தங்கள் கருத்து நிச்சயமாக சிந்திக்க தகுந்தது. நம் ம...தங்கள் கருத்து நிச்சயமாக சிந்திக்க தகுந்தது. நம் முதல் அமைச்சரும் மக்கள் விருப்பத்தை புரிந்து கொள்வார். நூலகம் மூடியவர் என்று ஒரு போதும் சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்ப மாட்டார். நானும் பணிவன்பாக கேட்டு கொள்கின்றேன். நூலகம் சென்னையில் மட்டுமல்ல மாவட்டங்கள் தோறும் திறக்கப்பட வேண்டும். அது போன்றே நாட்டின் செல்வங்களான குழந்தைகள் பாதுகாக்கப் பட மருத்துவ ம்னைகளும் சிறந்த வசதியுடன் சுகாதாரத்துடன் கிராமங்கள் தோறும் திறக்க அம்மா ஆட்சியில் வழி திறக்க வேண்டும். நன்றி வணக்கம்!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51442261012930466652011-11-05T22:30:28.070+05:302011-11-05T22:30:28.070+05:30ஊட்டியில் நயாகரா மின்சார உற்பத்தி உட்பட உங்களின் ப...ஊட்டியில் நயாகரா மின்சார உற்பத்தி உட்பட உங்களின் பல நல்ல திட்டங்களை ( 2001 - 2006 ) அப்போதைய தி.மு.க சுற்றுப் புற சூழல் அமைச்சர் ராஜா செயல்படவிடாமல் செய்திருந்தாலும் , அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நீங்கள் மக்களுக்காக செயல்படுத்த வேண்டுமென்பதே என்னைப் போன்ற பல கோடி தமிழர்களின் வேண்டுகோள் ...ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-33062702991253749642011-11-05T18:43:44.713+05:302011-11-05T18:43:44.713+05:30பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் அதன் பக்கத்தில்
அ...பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் அதன் பக்கத்தில்<br />அதை விட பெரிய கோடை போட்டு பெரிய கோட்டை சின்னத்தாக்கிய மாதிரி அம்மாவும் செய்வார்கள் என்று நம்புவோம்.நூலகமும்,குழந்தைகள் மருத்துவமனையும் ஊர் தோறும் அமையட்டும்!அம்மாவின் புகழ் நிலைக்கட்டும்!!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20698528682323787422011-11-05T13:27:09.865+05:302011-11-05T13:27:09.865+05:30I Just remember this "Prevention is better th...I Just remember this "Prevention is better than cure" Hospital is a place to cure the patients. Library is a place where Doctors and healthy people are created. So, Im not saying that a Hospital is not essential but the library is more essential. Future healthy people will be from present learning. let them learn...jiff0777https://www.blogger.com/profile/04226650151711761088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32722361365139604052011-11-05T13:01:30.548+05:302011-11-05T13:01:30.548+05:30மக்களுக்கான நல்ல விஷயங்களை யார் நினைத்தாலும் தடுக்...மக்களுக்கான நல்ல விஷயங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அதற்க்கு மிகச் சிறந்த உதாரணம், 'சமச்சீர் கல்வித் திட்டம்'. கண்டிப்பாக இந்த அரசால் அண்ணா நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமமனையாக மாற்ற விடமாட்டார்கள் பொதுமக்கள்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-37581958550893948482011-11-05T12:40:07.642+05:302011-11-05T12:40:07.642+05:30தெரியாத உண்மையில்லை..கலைஞர் கட்டிவிட்டார் என்ற ஒரே...தெரியாத உண்மையில்லை..கலைஞர் கட்டிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அதை மாற்ற துடிக்கும் நீங்கள் அவர் ஆண்ட மண்ணை மட்டும் ஆளத் துடிக்கிரீரே? இம்முறை உங்கள் ஆட்சியில் கரை இருக்காது என்பது தெரியும்..ஆனாலும் இது போன்ற கலகங்களும் செய்யாமல் இருந்தால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறி மாறி ஓட்டு குத்தும் தமிழகம் ஒருவேளை உங்கள் ஆட்சியைத் தொடர செய்யலாம்.. பிற மாநில மக்களும் சிகிச்சைக்கு வரும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சில காலம் பணியாற்றியவன் என்ற முறையில் அங்குள்ள குறைபாடுகளை அறிவேன்..அதை நேர்த்தியாக சரி செய்தாலே தாங்கள் மக்களுக்கும்,சீரிய மருத்துவ சேவைக்கும் பேருதவி செய்ததாய் இருக்கும்..<br />எங்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதே,..ஓட்டையும் போட்டுவிட்டு கெஞ்சவும் வேண்டியுள்ளது...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-9195895332948876602011-11-05T12:31:27.833+05:302011-11-05T12:31:27.833+05:30அப்பா ஒருவழியா நீதிமன்றம் தடை போட்டுட்டாங்க..அப்பா ஒருவழியா நீதிமன்றம் தடை போட்டுட்டாங்க..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-48498558896453452522011-11-05T10:34:43.515+05:302011-11-05T10:34:43.515+05:30அண்ணா நூலகத்தை மாற்ற வேண்டாம் என்பதில் எல்லோருக்கு...அண்ணா நூலகத்தை மாற்ற வேண்டாம் என்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துத்தான்... இதில் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு வேண்டுமென்றால் மாற்றுக் கருத்து இருக்கலாம்.<br />நீங்கள் சொல்லியிருப்பது போல் அண்ணாவோ அல்லது காமராஜரோ யார் பெயரில் வேண்டுமானாலும் மாநகராட்சிகளில் மட்டுமல்ல... மாவட்டம் தோறும் அமைக்கட்டும்... எல்லோரும் வாழ்த்துவோம்...<br />நண்பர் சொல்லியிருப்பது போல் நூலகம் என்பது கல்விக் கண் திறக்கும் ஆலயம்...<br />உங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள்.சே.குமார் (மனசு)http://vayalaan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-41655899696907120772011-11-05T10:32:02.086+05:302011-11-05T10:32:02.086+05:30நூலகம் இல்லா ஊரில் ககுடி இருக்காதே...என்பது புது ம...நூலகம் இல்லா ஊரில் ககுடி இருக்காதே...என்பது புது மொழி. நூலகம் ஒரு தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும். ஆகையால் உங்கள் ஆக்கத்திற்கு பூரண ஆதரவு என்றும் உண்டு.Anonymoushttps://www.blogger.com/profile/11677288239340163634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20095945121599397612011-11-05T10:13:37.646+05:302011-11-05T10:13:37.646+05:30நூலகத்திற்கு செல்லும் பழக்கம் நம் மக்களிடம் மறைந்த...நூலகத்திற்கு செல்லும் பழக்கம் நம் மக்களிடம் மறைந்து வரும் வேளையில் இது போன்ற அறிவிப்புகள் இன்னும் கிலியூட்டுகின்றன. சென்னையில் உள்ள நூலகம் போல நம்ம மதுரையிலும் வராதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் சென்னை நூலகமே மருத்துவமனையாக மாறப்போகிறது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. அதிர்ச்சி வைத்தியம் வேண்டாம். இனி நாங்கள் நூலகத்திற்கு அடிக்கடி செல்கிறோம். தயவுசெய்து இந்த எண்ணத்தை கைவிடுங்கள். பகிர்விற்கு நன்றி. நல்லது நடக்கும்.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-4874784199151973682011-11-05T08:19:02.718+05:302011-11-05T08:19:02.718+05:30அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவேண்டிய அவசியம்...அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவேண்டிய அவசியம் என்ன?அரசால் ஒரு மருத்துவமனை தனியாக<br />உருவாக்க முடியாதா?மக்களின் எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் நடைமுறைபடுத்தினால் அது மக்களிடம் உங்கள் மேல்<br />வெருப்பு வராதா?சிந்தியுங்கள் அதிமுக தோழர்களே..!அம்மாவிடம் தெரிவியுங்கள் அது போதும்...<br />உலகசினிமா ரசிகன் ரசிகனுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-77482337723833035582011-11-05T07:26:50.358+05:302011-11-05T07:26:50.358+05:30நூலகத்தை மாற்ற வேண்டாம் என்ற உங்கள் கருத்து எனக்கு...நூலகத்தை மாற்ற வேண்டாம் என்ற உங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே. மருத்துவமனைக்கு வேறு இடம் பார்க்க வேண்டிக்கொள்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-47908380257968204602011-11-05T06:30:04.749+05:302011-11-05T06:30:04.749+05:30'எப்போதும் விழித்திருப்போம்'
நமது எதிர்ப்...'எப்போதும் விழித்திருப்போம்'<br /><br />நமது எதிர்ப்பை உடனுக்குடனே சூடாக சொல்லிவிட்டோம். உங்களைப் போன்ற அல்லது நம்மை போன்ற எண்ணற்ற தன்னார்வ ஆர்வலர்களின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.<br /><br />இன்னும் 5 வருடங்கள் நமக்கு இதைபோன்று நிறைய வேலையிருக்கிறது. ஆகவே, நண்பர்களே 'எப்போதும் விழித்திருப்போம்' நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-61757500122854511532011-11-05T06:19:43.148+05:302011-11-05T06:19:43.148+05:30நல்லதொரு முயற்சி நண்பரே வெற்றி பெற வாழ்த்துக்கள்.
...நல்லதொரு முயற்சி நண்பரே வெற்றி பெற வாழ்த்துக்கள்.<br />அறிவு கடலை வற்றவிட வேண்டாம்டிலீப்https://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-56439437324277784382011-11-05T05:44:20.042+05:302011-11-05T05:44:20.042+05:30என் வேண்டுகோளுக்கு வார்த்தைகளால் வலு சேர்த்த அன்பு...என் வேண்டுகோளுக்கு வார்த்தைகளால் வலு சேர்த்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43224296122827135612011-11-05T01:55:49.660+05:302011-11-05T01:55:49.660+05:30கண்களை விற்று ஒவியம் வேண்டாம்!! நல்லது நடந்தால் நல...கண்களை விற்று ஒவியம் வேண்டாம்!! நல்லது நடந்தால் நல்லது!!பொதினியிலிருந்து... கிருபாகரன்https://www.blogger.com/profile/05572755797759557190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-84382179482454044622011-11-04T23:03:59.826+05:302011-11-04T23:03:59.826+05:30”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
நூல் நி...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...<br /><br /> நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே...<br />>>><br />ரிப்பீட்டுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-12548039901335327252011-11-04T20:05:22.779+05:302011-11-04T20:05:22.779+05:30நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத...நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.com