Aug 15, 2013

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் !




           சு         சுதந்திர தின வாழ்த்துக்கள்                             

இன்று காலையில் ஜெயா ப்ளஸ்ஸில் ‘பாரதி’ திரைப்படம் திரையிட்டார்கள்.
இயக்குனர் ஞான சேகரன் அற்புதமான குறியீடுகளை உருவாக்கி படைத்துள்ளார்.


# பாரதியின் உணவை அஹ்ரகாரத்து அக்கிரமக்காரர்கள், 
தடுத்து  உண்டு விடுகிறார்கள்.
ஊரை விட்டு ஒதுக்குப்புறத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பார். 
தனது உணவை தட்டிப்பறித்த சேதி கேட்டதும்...
அருகில் கால்நடைகளை மேய்த்து கொண்டு இருக்கும் சிறுவர்களிடம் சாப்பிட வருகிறேன் என்பார்.
அவர்கள் சம்மதித்ததும் கன்றுக்குட்டி போல் துள்ளி எழுந்து 
‘ஒரு குட்டிச்சுவரை’ அலட்சியமாக ஜம்ப் பண்ணி தாண்டிச்செல்வார்.
அய்யா பாரதி.... ‘குட்டிச்சுவரை’ இன்னும் உயரமாக வளர்த்து விட்டார்கள் எங்கள் அரசியல் வியாதிகள்.
## சொந்த ஊரில் பாரதியை வெள்ளைகாரர்களுக்கு அஞ்சி புறக்கணிப்பார்கள் சொந்த மக்கள்.
அப்போது இளையாராஜா பின்னணி இசையை அற்புதமாக குறியீடாக்குவார்.
பின்னணி இசை = நல்லதோர் வீணை செய்தே நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ...

### காந்திஜியை சந்தித்து தனது பொதுக்கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைப்பார் பாரதி கம்பீரமாக.
மகாத்மா, ‘நாளை வேண்டுமானால் வருகிறேன்’ என்பார்.
‘அது முடியாது...உங்கள் போராட்டத்தை நான் ஆசிர்வதிக்கிறேன்’ என சிங்கம் போல் பீடு நடை போட்டு வருவார். அப்போது ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் பாரதியை விஸ்வருபமாக கம்போஸ் செய்து பாரதியின் பிம்பத்தில் மகாத்மாவை மறையச்செய்திருப்பார்.
வாவ்...

பாரதி படம் உருவாக காரணமாக இருந்த என் ஆசான் சுஜாதாவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

2 comments:

  1. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வெள்ளிப்பனி மலை மீது உலாவுவோம்.
      மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
      பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்.
      எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
      நாம் தோள் கொட்டுவோம்.

      வாழ்த்துக்கள் நண்பரே.

      Delete

Note: Only a member of this blog may post a comment.