Oct 21, 2012

Hey Ram - 2000 \ India \ ‘மதம்’ பிடித்த மதவாதிகள் \ ஹேராம் = 026

நண்பர்களே...
நாம் இப்போது ஹேராம் படத்தில் இடம் பெற்ற  ‘கல்கத்தா கலவரத்தின்’ விளைவுகளை...பாதிப்புகளை பார்த்து கொண்டிருக்கிறோம்.



வன்முறை என்பது எல்லா இனங்களிலுமே இருக்கிறது.
ஆனால்,விலங்குகளுக்கிடையே ஏற்படும் வன்முறை
 ‘முன் தயாரிப்புகளற்றது’.

மனிதர்களுக்கிடையே ஏற்படும் வன்முறை  ‘கருத்தாக்கங்களை’ கொண்டது.
 ‘கற்பனைச்செயல்’ மற்றும்  ‘நினைவு கூறல்’ என்ற
இரண்டு  ‘கருத்தாக்கங்களை’ அடிப்படையாகக்கொண்டு
‘சமூகம் சார்ந்த வன்முறை’ இயங்குகிறது..

*********************************************************************************
விடுதலை புலிகளை அழித்து  ‘தமிழ் ஈழத்தை’ நிறுத்தி விடலாம் என்ற... ‘கற்பனைச்செயல்’ கருத்தாக்க வன்முறையே
 ‘முள்ளி வாய்க்கால் படுகொலை’.
இச்சம்பவத்துக்கு பின்னணியாக செயல் பட்ட
 ‘இந்திய அரசின் வன்முறையை...’
‘நினைவு கூறல்’ கருத்தாக்க வன்முறைக்கு உதாரணமாக கொள்ளலாம்.
*********************************************************************************

 ‘கற்பனைச்செயல்’ மற்றும்  ‘நினைவு கூறல்’ என்ற
இரண்டு  ‘கருத்தாக்கங்களையும்’
அடிப்படையாகக்கொண்டு நடத்தப்பட்ட,
‘கல்கத்தா கலவரத்தின்’ கொடூர விளைவுகளை...
 ‘ஹேராமில்’ சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாலையோரங்களில் பிணங்கள், சமூக ஆர்வலர்கள் உதவியால்...
வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது.
உற்றார் உறவினர்கள்...அந்த வரிசையில் தங்கள் உறவுகளை தேடி,
கதறி பரிதவிக்கிறார்கள்.
ஒரு மரத்தில், வன்முறையாளர்களால் தூக்கிலிடப்பட்ட மனித உடல்...
கவனிப்பாரற்று தொங்கிக்கொண்டிருக்கிறது.

வன்முறையாளர்கள்... ஒருவரை தூக்கிலிட்டு கொன்றதின் கருத்தாக்கம் யாதெனில்...
‘இது எங்கள் தீர்ப்பு’ என மாற்றணிக்கு அறைகூவல் விடுத்த  ‘ஸ்டேட்மெண்ட்’.

ஒரு வேன்...  ‘வழிய வழிய’ பிணங்களை சுமந்து கொண்டு கடந்து செல்கிறது.
உறவுகளை தேடி அலையும் அபாக்கியசாலிகள்...
வேனையும் துரத்தி  தேடுகிறார்கள்.

இந்த கொடுமைகளை காணச்சகியாததை...
சாகேத் ராமின்  முக பாவத்திலும்,
போலிசைக்கண்டு  ‘குற்ற உணர்ச்சியின்’ காரணமாக
பயந்து பதுங்குவதை...
உடல் மொழியிலும் உணர்த்தியதில்
‘நடிகர் கமலின்’ விஸ்வரூபத்தை  காணலாம்.

 ‘ஹேராம்’ படத்தில் [ கல்கத்தா, ஆகஸ்ட் 16, 1946 ]
வேன் நிறைய பிணங்கள் வருகிறது.
 ‘காந்தி’ படத்தில் [ இந்திய - பாக் எல்லை, ஆகஸ்ட் 15க்கு பின், 1947 ]
ரயில் நிறைய பிணங்கள் வருகிறது.
இந்த வேறுபாட்டின் மூலம் கலவரத்தின்  ‘பரிமாணத்தை’ நாம் புரிந்து கொள்கிறோம்.



அடுத்து ஒரு மதம் பிடித்த யானையால்,
அதன் பாகனே கொல்லப்பட்டு கிடப்பதை காண்கிறான் ராம்.
இங்கே மதம் பிடித்த யானையை,
‘மதம் பிடித்த வன்முறையாளர்களுக்கு’ உருவகப்படுத்தப்பட்டிருப்பதை 
[ Metaphor ] 
புரிந்து கொள்ளலாம்.

‘அங்குசம்’ =‘அரசு அதிகாரம்’ 
பாகன் = ‘ பிரிட்டிஷ் அரசு + ஷராவதி அரசு ’
‘அங்குசத்தை கையில் பிடித்தவாறு உயிரை விட்ட பாகன்’ = 
‘குள்ள நரி பிரிட்டிஷ் அரசின்’ மதியூட்டத்தில் மயங்கிய 
இஸ்லாமிய முதலமைச்சர் ஷராவதி [ Huseyn Shaheed Suharawardy ] 

பாகனுக்கு பிடித்தது  ‘மதம்’...
யானைக்கும் பிடித்தது  ‘மதம்’...

‘அங்குசம்’ = ‘ செயலிழந்து கிடக்கிறது ’

ஆனால் யானை இன்னும் சங்கிலியை அறுக்காமல் இருக்கிறது.

இவ்வளவு அடர்த்தியாக...அர்த்தபுஷ்டியுடன் கட்டமைக்கப்பட்ட  'Metaphor' உலகின் எந்த சினிமாவிலும் இல்லை என்பது திண்ணம்..

மேற்கண்ட காட்சியை...பார்த்து கலங்கிய ராம்,
“அம்மா...அம்மா ” என அரற்றுகிறான்.
‘நடிகர் கமல்’,  ‘அம்மா...அம்மா’ என அரற்றிய விதம்...
‘துயரத்தின் ரிதம்’.

ஹேராமில் இப்போது வரும் காட்சி என்னை மிகவும் சோதித்த காட்சி.

ஒரு காட்சியின் வடிவமைப்பில் ஏன் ? எதற்கு ? எப்படி ? என்ற கேள்விகளை எழுப்பித்தான் அதற்குறிய கருத்தாக்கத்தை கட்டமைப்பது வழக்கம்.
இந்தக்காட்சியில் கமலின் சவால் கடுமையாக இருந்தது.

இருபது தடவைக்கு மேல் டிவிடியை  ‘போட்டு போட்டு’ பார்த்தேன்.
விடை கிடைத்ததும் ‘யுரேகா’ என கத்தியே விட்டேன்.

சாகேத்ராம்,  பதட்டத்துடன் தூணின் மறைவிலிருந்து எட்டிப்பார்க்கிறான்.
மிகப்பெரிய வராண்டா முழுக்க பிணங்கள் கிடக்கிறது.
சமூக சேவகர்கள் பிணத்தை எடுத்து செல்கிறார்கள்.
ஒரு நாய் குறுக்கே ஒடுகிறது.

என்ன சொல்லி இருக்கிறார் கமல் ?
என மூளையை கசக்கியது இக்காட்சிக்குத்தான்.

கிடைத்த  ‘யுரேகா விடை’...
நாயைத்தவிற வேறு யாரும் இந்த இடத்தில் உயிரோடு இல்லை. 

*********************************************************************************
கிடைத்த விடை...
சார்லஸ் டார்வினின்  ‘ஆர்ஜின் ஆப் ஸ்பீஸிஸ்’சிற்குள் அழைத்து செல்கிறது.
[ Charles Darwin = 'Orgin Of Species’ ]

அவரது  'நேச்சுரல் செலக்‌ஷனை' [ Natural Selection ] இரண்டாகப்பிரிக்கலாம்.

NATURAL SELECTION = SURVIVAL OF THE FITTEST

1 இன்டர் - ஸ்பெசிபிக் காம்பெட்டிஷன்.
[ Inter - Specific Competition = Between Species ] 

2 இன்ட்ரா -  ஸ்பெசிபிக் காம்பெட்டிஷன்.
[ Intra - Specific Competition = Within Species ]

மனிதன் = Leading Specie of the Large Genus.
*********************************************************************************
‘கல்கத்தா கலவரம்’...
மனிதர்களுக்குள் மதத்தின் பெயரால் நடந்த,
‘கல்கத்தா மனித - இன்ட்ரா ஸ்பெசிபிக் காம்பெடிஷன்’.


 ‘கற்பனைச்செயல்’ மற்றும்  ‘நினைவு கூறல்’ என்ற
இரண்டு  ‘கருத்தாக்கங்களையும்’ அடிப்படையாகக்கொண்டு நடத்தப்பட்ட,
‘கல்கத்தா மனித - இன்ட்ரா - ஸ்பெசிபிக் காம்பெட்டிஷனில்’...

மனிதர்கள் இறந்து கிடந்தார்கள்.
நாய் பிழைத்து இருந்தது.

 ‘மத வேறுபாடுகள்... மனித மேம்பாடை கொண்டு வராது’ என்பதை ஹேராமில் கமல் ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

இந்த கருத்தாக்கத்தை, அடுத்த ஹேராம் பதிவிலும் காணவிருக்கிறோம்.

ஹேராம் காணொளி காண்க....



சார்லஸ் டார்வின் பற்றி மேலும் விரிவாக காண விக்கிப்பீடீயாவிற்குள் செல்க...
http://en.wikipedia.org/wiki/Charles_Darwin

5 comments:

  1. அந்த கலவரத்தில் காட்டப்பட்ட யானையை வேறொரு அர்த்தத்தில் புரிந்து வைத்திருக்கிறேன்.

    மிகப் பெரிய கலவரத்தில் கொல்லப்பட்ட பாகன், தான் சாகும் முன் அங்குசத்தால் கோடு கிழித்து அதை தரையில் குத்தி செத்துக் கிடக்கிறான். அந்த கட்டளைக்கு கட்டுப்பட்ட யானையானது அக்கலவரத்திலும் அமைதியாக நின்று கொண்டிருக்கும்.
    ஆறறிவு ஜீவனால் ஐந்தறிவு ஜீவன் பழக்கப் பட்டுள்ள முறை, ஆறறிவு ஜீவனிடம் செல்லுபடியாகவில்லை என அர்த்தப் படுத்திக் கொண்டேன்.
    விளக்கவும்.....

    ReplyDelete
  2. உங்கள் விளக்கமும் அருமையாக இருக்கிறது நண்பரே !

    இக்காட்சி ஒவ்வொருவருவருக்கும் அவரவர் பட்டறிவின் மூலம் அர்த்தத்தை கற்பிக்கும்.
    சில சமயம் பார்வையாளன் கற்பிக்கும் அர்த்தம்...
    படைத்தவனுக்கே புதிதாக இருக்கும்.

    ReplyDelete
  3. Good Analyse of every frame.. I did this kinda analyse for "Dasavathaaram".. May be i was too young wen Hey ram was released..

    ReplyDelete
  4. //மிகப் பெரிய கலவரத்தில் கொல்லப்பட்ட பாகன், தான் சாகும் முன் அங்குசத்தால் கோடு கிழித்து அதை தரையில் குத்தி செத்துக் கிடக்கிறான். அந்த கட்டளைக்கு கட்டுப்பட்ட யானையானது அக்கலவரத்திலும் அமைதியாக நின்று கொண்டிருக்கும்.//

    இதையேத்தான் நானும் சொல்ல நினைத்தேன். பாகனின் கையில் உள்ள அங்குசம் யானையில் பாதத்தில் பட்டிருப்பதால், யானை அமைதியாக இருக்கிறது.

    ReplyDelete
  5. ‘மத வேறுபாடுகள்... மனித மேம்பாடை கொண்டு வராது’ - excellent

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.