Nov 7, 2012

HAPPY BIRTH DAY KAMAL \ நாயகன் காப்பியா ? காப்பியமா ?

நண்பர்களே...
கலைத்தாயின் இளைய மகனுக்கு நவம்பர் 7  பிறந்த நாள்.
கமல் பிறந்த நாள் பரிசாக இப்பதிவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.



கடந்த பதிவுகளின் சாரம்...
கமல் V \ S முக்தா பிரச்சினையில் மையமாக இருப்பது...
இரு தனி நபர் பேதமல்ல...
ஆர்ட் V \ S பிசினஸ் என்ற பேதமே.


Nayagan \ 1987 \ Tamil \ Directed by Mani Rathnam 
மணிரத்னம்,கமல்& நாயகன் படத்துக்கு வந்த எதிர்வினைகளில்...
நாயகன் காட்பாதரின் காப்பி என்ற அடிநாதமிருந்தது.
இந்த பரப்புரையை திட்டமிட்டவர்களின் எதிரொலி அது.
பொய் பரப்புரையை தகர்க்க...இப்போது வந்த வாய்ப்பை சிக்கென பற்றினேன்.

முதலில் காட்பாதரை பார்ப்போம்.
THE GODFATHER \ 1972 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA
THE GODFATHER 2  \ 1974 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA

அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவத்துவத்தின் சாரங்களை பயின்று தேறி  ‘இணை அரசாங்கம்’ நடத்துகின்ற அளவிற்கு பலம் பொருந்தி விட்டார்கள்.
இந்த  ‘மாபியாக்கள்’ தயவிருந்தால்தான், அமெரிக்க அரசின் உயர் பதவிக்கு
வர முடியும்...நீடித்திருக்க முடியும்.

அமெரிக்க - இத்தாலிய மக்களின்  ‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை’...
நிழல்-உலக வியாபாரங்கள்,..அதற்கான போரட்டங்கள் என அனைத்துக்காரணிகளையும் ஆராய்ந்து...
எழுத்தாளர் மரியோ புஸோ [ MARIO PUZO ] காட்பாதர் என்ற நாவலை வெளியிட்டார்.
அதன் விற்பனையும், புகழும் உலகே அதிர்ந்தது.
காட்பாதரை திரைப்படமாக்க பாரமவுண்ட் நிறுவனம் திட்டமிட்டது.
இக்கதையை திரைக்கதையாக்கும் கருத்தாக்க - போட்டியில்
மரியோ புஸோ பின் தங்கினார்.
கொப்பல்லோ ஜெயித்தார்.
கருத்தாக்கம் = பேமிலி V \ S பிசினஸ்

கொப்பல்லோவின் இயக்கத்தில் காட்பாதர் காப்பியமாக [ Epic ] உருவெடுத்தது.
வசூலிலும் வரலாறு படைத்தது.

உலகத்தையே கவர்ந்த காட்பாதர்...
கமல், மணிரத்னம், & திரு.முக்தா சீனிவாசனையும் ஈர்த்ததில் வியப்பில்லை..
திரு.சிவாஜி கணேசன் - கமல் இணைப்பில் காட்பாதரை தழுவி
படமாக்கும் முயற்சி...
திரு.அனந்து அவர்களால் நிறுத்தப்பட்டது என...
திரு.முக்தா சீனிவாசன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
 ‘இத்திருப்பணிக்காக’ திரு.அனந்து அவர்களுக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
காட்பாதர் இன்ஸ்பிரேஷனில்...  ‘தேவர் மகனாகி’  சிவாஜி -  கமல் பெருமை சேர்த்தது  வரலாறு.
தேவர் மகனுக்கு பின்னால் பதிவிடுகிறேன்.

நாயகனும், தேவர் மகனும் காட்பாதர் இன்ஸ்பிரேசனில் வடிவமைக்கப்பட்டவையே.
ஆனால் மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை.

காட்பாதரும் நாயகனும் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.

காட்பாதரில் இருப்பது பவர் ஸ்டிரகிள் 
[ Power Struggle \ அதிகார போராட்டம் ] .
நாயகனில் இருப்பது கர்மிக் ஸ்டிரகிள் 
[ Karmic Struggle \ கர்மவினைப்போராட்டம் ] .

 ‘அண்டர்ஸ்டாண்டிங் மூவிஸ்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...
Understanding Movies=Louis Giannetti=Fifth Edition=1990= Prentice Hall,
New Jersey 07632

Page=325
THE GOD FATHER =(USA.1972)=Paramount Pictures=Directed by: Francis Ford Coppola

Genre films are generally profuse in archetypal elements. 
In this, 
the most famous gangster film in history, 
the very title resonates with larger-than-life forebodings. 
In Italian-American culture, 
a godfather is a respected authority figure, 
a revered parental surrogate. 
In the subculture of the Mafia, 
“Godfather” is what criminal chieftains are often called.
The Brando figure is also a benevolent patriarch to the members of his immediate family,
a legendary hero, 
a God-Father.

Page=384
THE GOD FATHER, Part II =(USA.1974)=Paramount Pictures=
Directed by: Francis Ford Coppola

A Marxist reading of a movie doesn’t necessarily exclude other interpretations.
Critic  JOHN HESS  has argued that Coppola comes closer to a Marxist analysis of American Society than any other Hollywood filmmaker:
 “The film’s all pervasive theme is the warmth,
strength,
and beauty of family ties which,
in bourgeois society, 
alone appear to meet the desperate need we all feel for human community.
The counter theme and the real strength of the film is its demonstration that the benefits of the family structure and the hope for community have been destroyed by Capitalism"

பவர் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட காட்பாதரின்
செண்டர் பாண்ட் பேமிலி V \ S  பிசினஸ்.
இந்த சூத்திரத்தை கண்டு பிடித்து திரைக்கதை அமைத்ததால்தான்
மரியோ புஸோவை முந்தினார் கொப்பல்லோ.

காட்பாதர்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் ஆகிய
3  கருத்தாக்கங்களில் இயங்குகிறது.

மாமேதை மார்க்ஸ் இறப்புக்குப்பின் மாமேதை ஏங்கெல்ஸ் [ Friedrich_Engels ]  ‘மனித குல வரலாற்றின் மீது’ ஆய்வு செய்த கருத்தாக்கங்கள்.
The Origin of the Family.- Private Property - and the State - 1884 ] =  “ PRIMITIVE - COMMUNAL SYSTEM = CHANGES IN THE FORMS OF MARRIAGE & FAMILY = ECONOMIC PROGRESS OF SOCIETY = ECONOMIC CAUSES = CAPITALISM = STATE = FUTURE HUMAN SOCIETY "
காட்பாதர் + ஏங்கல்ஸ் கருத்தாக்கங்களில் இந்திய தத்துவமான  'கர்மா' இல்லை.
*********************************************************************************
ஆர்ஜின் ஆப் த பேமிலி.... பற்றி விரிவாக தெரியவும்...புரியவும்
 ‘எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன்’  ‘பொதிந்து’எழுதிய...
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை படிக்கவும்.
அழகிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது...
திரு.சுஜாதா நாவல் போல் 100 % விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.
*********************************************************************************
நாயகன்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் - கர்மா ஆகிய
4  கருத்தாக்கங்களில் இயங்குகிறது.

கர்மிக் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட நாயகனின் செண்டர் பாய்ண்ட் பேமிலி V \ S  கர்மா.

ஸ்டேட் = அரசாங்கம்
காட்பாதரில் மாபியாக்களொடு இசைந்து ஸ்டேட் இயங்குகிறது.

நாயகனில் ஸ்டேட் [ நாசர் காரெக்டர் ] வேலுநாயக்கரையும்...
அவரது கூட்டத்தையும் வேட்டையாடுகிறது.


மணிரத்னம்...
‘பம்பாய் ரியல் காட்பாதர்’ வரதராஜ முதலியார் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு...நாயகன் திரைக்கதையை அமைத்தார்.
எனவேதான் வேலு நாயக்கர் என்ற ஒற்றை கதாபாத்திரத்தை பிரதானப்படுத்தி நாயகன் திரைக்கதை பயணப்பட்டது.
மார்லன் பிராண்டோ, அல்பசினோ என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வழியே காட்பாதர் திரைக்கதை பயணப்பட்டிருக்கிறது.

வேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான்  போலிஸ்காரன்.
போலிஸ்காரனை கொல்கிறான் வேலு.
வேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...
என ஒரு வட்டத்தில் முடித்து....
இந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
இப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது.

பாலியல் தொழிலாளியான விளிம்பு நிலைப்பெண்ணை வேலுவிற்கு மனைவியாக்கியது...
மகளே சட்டத்தின் பெயரால் தந்தையை எதிர்ப்பது...
மகள் தந்தையை விட்டுப்பிரிந்து தனது குடும்பத்தை
தானே அமைத்துக்கொள்வது...
மருமகனே வேலு நாயக்கரை நீதியின் முன் நிறுத்துவது...
இவையெல்லாம் காட்பாதரிலிருந்து நாயகனை
வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் போராட்டத்தில்
தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன காட்பாதரில்.
மனைவியை கொன்றதற்காக தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன நாயகனில்.

வேலு நாயக்கரின் மகன் வன்முறைப்பாதையில் ஈர்க்கப்பட்டு...
அதன் விளைவாக உயிரை துறப்பான்.
மகளோ, வன்முறை வாழ்க்கை முறையை வெறுத்து...
தந்தையை விட்டு விலகிச்செல்கிறாள்.
அவளது மகனுக்கு...அடுத்த தலைமுறைக்கு...
தனது  ‘கவசமான’ உத்திராட்சத்தை பரிசாக கொடுப்பார் வேலு நாயக்கர்.
உத்திராட்சம் = அன்பே சிவம்.
வன்முறை வழிமுறைகள் தன்னோடு முடிய வேண்டும் என
வேலு நாயக்கரின் விருப்பமாக நாயகனில் பல இடங்களில் சொல்லப்பட்டாலும்...
இக்காட்சிதான்  ‘மணிரத்ன சுருக்கம்’.
காட்பாதரில் வன்முறையை யாருமே மறுக்கவில்லை.
வன்முறையை சிறப்பாக செய்பவனே வாரிசாகிறான்.
காட்பாதர் 1,2,3 பாகங்களிலும் இது மீண்டும் மீண்டும் வலுவாக சொல்லப்படுகிறது.,

நாயகன் இறுதிக்காட்சியில் வேலு நாயக்கர் சுடப்பட்டு தரையில் கிடப்பதை வோர்ம்’ஸ் - ஐ - வியூ [ WORM'S EYE VIEW ] கோணத்தில் படமாக்கியிருப்பார் இயக்குனர் மணிரத்னம்.
வேலுநாயக்கரின் வாழ்க்கையில் நடந்த பாசிட்டிவ் நிகழ்ச்சிகளை தொகுத்து காட்டியிருப்பார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த  ‘டைட்டானிக்’ படத்திலும்...
Titanic \ 1997 \ English \ Directed by James Cameron
இங்மர் பெர்க்மனின் இயக்கத்தில் வந்த  ‘கிரைஸ் & விஸ்பர்ஸ்’ படத்திலும்...
Cries & Whispers \ 1972 \ Swedish \ Directed by Ingmar Bergman
இறுதிக்காட்சியில் இதே பாசிட்டிவ் தன்மையை காணலாம்.
காட்பாதரின் இறுதிக்காட்சி வேறு.

காட்பாதர், நியூயார்க் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
நாயகன், பம்பாய் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
எந்த நகரத்து நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தாலும்
ஒரே மாதிரிதான் வந்து சேரும்.

1970 -80களில்  ‘மஸ்தான்’ என்பவர் பம்பாயின் நிழல் உலக சக்ரவர்த்தியாக இருந்தார்.
அப்போது பம்பாயில் மாபியா குழுக்களிடையே தொழில் போட்டியில்
தொடர் கொலைகள் நிகழ்ந்தன.
மஸ்தானை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்
“ நடக்கும் நிகழ்வுகள் காட்பாதர் சிச்சுவேஷன் போல் உள்ளதே” எனக்கேட்டார்.
மஸ்தான்...“ உண்மைதான்...
ஆனால் காட்பாதர் பார்ட் 1 அல்ல...காட்பாதர் பார்ட் 2 சிச்சுவேஷன் ” என்றார்.
நிஜம் நிழலாகிறது...நிழல் நிஜமாகிறது.

காட்பாதரையும், நாயகனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொண்டதால் போர்ச்சுக்கல் விமர்சகர் பாராட்டுகிறார்.
டைம் பத்திரிக்கை காட்பாதர் ,காட்பாதர் 2, நாயகன் மூன்று படத்தையும்
உலகின் தலை சிறந்த நூறு படங்கள் வரிசையில் இணைத்து
கொண்டாடியது.



மணிரத்னம் தலைமையில்...
கமல்,இளையராஜா,பி.ஸி.ஸ்ரீராம்,தோட்டா தரணி,லெனின்,பால குமாரன் மற்றும்  
தமிழ் திரையுலகின் ஜாம்பவன்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய...
நாயகன் என்ற காப்பியத்தை... 
தமிழ் பதிவர்களில்  ‘சிலர்’ மட்டும்தான்...
காப்பிக்கும் - இன்ஸ்பிரேஷனுக்கும் வேறுபாடு புரியாமல் 
கண்ட மேனிக்கு எழுதுகிறார்கள்.
அவர்களுக்காக ஒன்று சொல்கிறேன்.
நியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
பம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
நியூயார்க் பெண்களை காப்பியடித்து...
பம்பாய் பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள் என யாரும் சொல்லவே முடியாது.

பின்னூட்டங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.



31 comments:

  1. வாழும் கலைஞன் கமலுக்கு இந்த ரசிகனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வணக்கம்...ரொம்ப அலசி இருக்கறீர்கள்.கமலின் பிறந்த நாள் பரிசு இது சரிதான்...

    ReplyDelete
    Replies
    1. எனது உழைப்பை கவுரவப்படுத்தியமைக்கு நன்றி.

      Delete
  3. //நியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
    பம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
    ///

    இந்த கருத்தில் "நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்." என்பது இரண்டு வரிகளிலும் ஒரே மாதிரி உள்ளது, என்வே பம்பாய் நியூயார்க்-ஐ காப்பியடித்துள்ளது என்பார்கள் பதிவுலக பண்டிதர்கள்....

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      பண்டிதர்கள் வார்த்தை விளையாட்டு சித்தர்கள்தான்.
      அவர்கள் தங்களது மொழி வளத்தை ஆக்கபூர்வமாக செலுத்தினால்
      தமிழ் பதிவுலகில் தரமான பதிவுகள் மேலும் கிடைக்கும்.

      Delete
  4. ada ethukunga ivvalavu menakedal.Nayagan,Godfather-in copy-a iruntha Times magazine top 100 movies list-a idam koduthirukuma?

    ReplyDelete
    Replies
    1. டைம் பத்திரிக்கை தனது பட்டியலை அறிவித்த பிறகும்
      நாயகன் மீது தொடர் தாக்குதல்...நக்கல்கள் வந்த வண்ணம் இருந்தன.
      எனவேதான் இந்த மெனக்கெடல்.
      இனி அவர்களது வாதம் நடுநிலையாளர்களிடம் எடுபடாது.

      Delete
  5. வாவ்.. இந்த கோணங்களில் எல்லாம் படம் பார்த்ததே இல்லை.. இனிமேல் படங்கள் பார்க்கும் போது கண்டிப்பாக இவற்றை பற்றியும் சிந்திப்பேன்.. நல்ல பதிவு/ தலைவருக்கு பிறந்த நாள் பரிசு..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே.

      Delete
  6. அண்ணே வழக்கம் போல கலக்கல்! என்ன ஒரு பார்வை, சிந்தனை?

    இதெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், காண்டோபோபியா இருக்குறவங்களுக்கும் புரியும்னு நினைக்கிறீங்க? புரிஞ்சாலும் அதுக்கும் குதர்க்கம் கண்டுபிடிப்பாங்க.

    வர்த்தக வெற்றிகளை மட்டுமே தேடாமல், வித்தக உயரங்களை நோக்கி பயணிக்கும் கமலின் பயணம் மேலும் சிறக்க இந்நாளில் வாழ்த்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூபத்தின் மூலம் புதிய தொழில் நுட்ப மேம்பாடுக்கு தமிழ் திரையுலகை நகர்த்துகிறார்.
      வெற்றி கிடைக்க வாழ்த்துவோம்.

      Delete
  7. It is sad that Ilayaraja is being missed out in your analysis of Nayagan ! enna sir :-(

    ReplyDelete
    Replies
    1. இந்த கட்டுரையில் இளையராஜாவை குறிப்பிட்டு சொல்ல ஒரு இடம்
      கண்டு பிடித்து சொல்லவும்.

      Delete
    2. Yes.. In this article you dont have a space to mention about Raja. It is a good attempt to compare two articles about Nayagan movie and provided in-depth analysis about Nayagan.
      In Kamal's article, he wanted to tell to the audience what difficulties they faced when the film was shot and that is the reason he touched the producer he didn't have an intention to show the bad face of the producer at all. I don't like 2 things in his article, especially about raja and though he appreciated Maniratnam , he had also done a self-trumpetting , is it not ?
      Muktha's article was not good. I think, he got tensed and provided his points in a hurry. Times has listed it in his list , It is a GREAT Honor. he tried to spoil it sadly !
      Your articles about Nayagan is very good. infact I learnt to watch movie from your articles. In your previous articles also you have mentioned in the comment section like, you will give about Ilayaraja in his coming articles.So being an ardent fan of Raja, I expected it in this article and asked that question. How can we forget his BGM in Nayagan especially !!

      Delete
    3. நண்பரே...இளையராஜாவைப்பற்றி தனிப்பதிவு நிச்சயம் எழுதுவேன்.
      ஹேராம் தொடரில்... அப்படத்தில் இளையராஜாவின் மிகச்சிறப்பான பங்களிப்பை வெகு விரைவில் எழுத இருக்கிறேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
    4. ராஜாவை பற்றி ஒரு வரி சேர்த்து விட்டேன்...
      நண்பர் ஆர்.கே.அவர்களே.

      Delete
    5. Thanks a lot sir ! He deserves right ? . Waiting for an exclusive raja articles from you ! :)

      Delete
  8. "வேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான் போலிஸ்காரன்.
    போலிஸ்காரனை கொல்கிறான் வேலு.
    வேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...
    என ஒரு வட்டத்தில் முடித்து....
    இந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
    இப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது."

    மிகச்சரியான சிறப்பான கருத்து.
    கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பவியலாது.

    ReplyDelete
  10. அடுத்த பதிவில் ராஜா அவர்களை பற்றி கட்டாயம் சேர்க்கவும். அத்திரைப்படத்தின் முக்கிய தூண்.
    சிலவேளை இளையராஜா முக்தா சீனிவாசனை விமர்சனம் செய்திருந்தால் முக்தா சொல்லியிருப்பார் ராஜா மொக்கையாக இசை அமைத்தார். ஆனால் கமலின் நடிப்பால் அப்பாடல்கள் வெற்றி பெற்றது என்று.

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவிலேயே இளையராஜாவை பற்றி சேர்த்து விட்டேன்.
      வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  11. மிக சிறந்த பதிவு..Hats off... :)

    காட்பாதர் படத்தை செர்ஜியோ லியோனி இயக்கி இருக்க வேண்டியது. கொப்பல்லோவுக்கு எப்படியோ வாய்ப்பு போய் விட்டது..... :):)
    காட்பாதர் படம் பார்க்காதவரை நானும் நாயகன், காட்பாதர் தழுவல் என்றே நினைத்து இருந்தேன்.. காட்பாதர் பார்த்த பிறகு எனது எண்ணம் தவறானது என்று புரிந்தது.. இரண்டுமே வெவேறு தளத்தில் பயணம் செய்யும் படங்கள். ஒரு டானின் வாழ்கை வரலாறு என்ற புள்ளியை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இரண்டு படங்களுக்கு கிடையாது.
    காட்பாதர் படத்தை பார்க்காதவர்கள் தான் நாயகன் காட்பாதர் காப்பி என்று உளருவார்கள்..
    ராம்கோபால் வர்மாவின் "சர்க்கார்" தான் உண்மையான காட்பாதர் காப்பி, சீன் பை சீன் அப்படியே எடுத்து இருப்பார். படம் ஆரம்பிக்கும் போது "நன்றி காட்பாதர்" என்ற டைட்டில் மட்டும் வரும்...

    ReplyDelete
    Replies
    1. கொப்பல்லோ இயக்கத்தில் காட்பாதர் காவியமானது.
      காட்பாதர் தரத்தை ஹாலிவுட்டிலேயே நெருங்க முடியவில்லை.
      கொப்பல்லோ காட்பாதருக்கென்று பிறந்தவர்.

      கொப்பல்லோவின் மற்றொரு மாஸ்டர்பீஸ் ‘அப்பகலிப்ஸ் நவ்’.
      வியட்நாம் யுத்தம் பற்றிய மிகச்சிறந்த பதிவு அப்படம்.

      வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி ராஜ்.

      Delete
    2. In fact Khoon Pasina is the scene by scene copy of Godfather.

      Delete
  12. வித்தியாசமான கோணத்தில் அலசியுள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  13. நண்பரே.... உங்கள் கட்டுரை ஓகே தான்.. ஆனால் முக்தா வைக்கும் சில குற்றச் சாட்டுகளை பற்றிக் கூறவும் உதாரணமாக அவர் சொல்வது கொல்லப்பட்ட மகனை பார்த்து அழும் காட்சி காட் பாதரில் வரும் காட்சியா..

    ReplyDelete
    Replies
    1. எனது முந்தைய பதிவான ‘முக்தா சீனிவாசனுக்கு பதிலடியில்’ உங்கள் கேள்விக்கு விடை இருக்கிறது.

      Delete
  14. Kamalhaassan Avargalai pattri pesa vayadhu minimum 35 yrs aga irukka vendum, avarai pattri remarks pesubavargal kandippaga chinna pillaigal alladhu sillaraigalaga mattume irukka mudiyum, thalaivar sonnadai nyabagam vaithukolla vendum nanbargale, Thamizhargalin adippadai vimarsanam indru ulaga alavil 100 padangalil ondraga irukkiradhu endru, Ulaga cinema Thamizh makkalukku theriyum, Kamal pagutharivu vulla oru unnadha kalaizhnhan,

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.