Jun 22, 2013

நடிகன் காப்பியடிக்க வேண்டும்.


நண்பர்களே...
 தமிழை...  இயல், இசை, நாடகம் என மூன்று வகைப்படுத்தினர் முன்னோர்.
1964 ல் பதினேழு ஆண்டுகள் தன் வாழ்நாளை அர்ப்பணித்து,
நாடகத்திற்காக ஒரு கலைக்களஞ்சியத்தை...
திரு. அ.பாபநாசம் அவர்கள்  உருவாக்கியுள்ளார்.
_________________________________________________________________________________

நூலின் பெயர் : நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \  [ பதிவின் பாகம் - 1 ]
ஆசிரியர் : அ.பாபநாசம், பி.ஏ.பி.எல்.
வெளியீடு : நாடக பதிப்பகம்,
28, பெருமாள் மேல ரதவீதி,
திருநெல்வேலி சந்திப்பு.
_________________________________________________________________________________

திரு.அ.பாபநாசம் அவர்கள் தன்னுடைய நூலில்,
முன்னுரையாக குறிப்பிடுவது...
“ நான் இலக்கியப்பட்டறையில் தொழிலாளியாக சேர்ந்து இன்றைக்கு
17 ஆண்டுகள் ஆகி விட்டன.
பல நாடகங்களை பல பத்திரிக்கைகளில் எழுதி விட்டேன்.
நான் நாடகத்துக்கென்றே தமிழ்நாட்டில் ‘இளவேனில்’ என்று ஒரு பத்திரிக்கையும் நடத்தி விட்டேன்.

என்னுடைய இந்த 17 ஆண்டுகள் இலக்கியப்பணியில் நான் பல தேசத்து நாடகங்களையும், நாடக விமர்சன நூல்களையும் படித்தேன்.
இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
அப்போது அவற்றிலிருந்து முக்கியமானவற்றை குறிப்புகள் எடுத்துக்கொண்டேன்.
அது நாளடைவில் விரிவடைந்து இந்த ‘நாடகக்கலைக்களஞ்சியமாக’ உருவெடுத்திருக்கிறது” - அ.பாபநாசம்.
நெல்லை,
13 - 4 - 1964.
_________________________________________________________________________________

திரு.அ.பாபநாசம் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளின்
நாடகக்கலை தோற்றம், வளர்ச்சியை இந்நூலில் அடக்கியுள்ளார்.
அதில் நமது இந்தியாவை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.
_________________________________________________________________________________

இந்திய நாடகம் :
இந்திய நாடகம் ஆரம்ப காலம் பிரம்மனால் உண்டாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.
சொர்க்கத்தின் சிற்பியைக்கொண்டு பிரம்மன் இந்தியாவில் முதல் நாடக அரங்கொன்றை நிறுவினான் என கூறப்படுகிறது.
அதன் காரணமாக பரதர் தனது நாடகங்களை அரங்கேற்ற முடிந்திருக்கிறது.
பரதரை இந்திய நாடகத்தின் ஸ்தாபகர் என்று கூடச்சொல்லலாம்.
பாவத்துடன் கலந்த நடனம் ஆண்டவன் முன்னால் இந்திர சபையில் ஆடிக்காட்டப்பட்டது.
சிவபெருமான் நடனத்தில் இரண்டு புது நடனங்களை உண்டாக்கினார்.

நாடக வசனங்களை ரிக் வேதத்திலேயே காணலாம்.
கிரேக்கர்களுக்கு முன்பே இந்தியாவில் சிறந்த நாடகங்கள் இருந்திருக்க வேண்டும்.
இந்திய நாடகத்தின் உச்சஸ்தாயியாக கி.பி.4லிருந்து கி.பி.9ம் நூற்றாண்டு வரை கூறலாம்.

புராணக்கதைகளை அடிப்படையாக கொண்ட நாடகங்களே
இந்தியாவில் அதிகம்.
இந்திய நாடகத்தில், கதை அமைப்பில் குழப்பம் இல்லாமை,
மூவகை ஒற்றுமை, கவிதையும், வசனமும், மவுன நாடகமும், நகைச்சுவையும் மற்றும் பல் வகை சுவைகளும் கலந்திருந்தது.

வடமொழியில் 500 நாடகங்களும், தமிழில் 100 நாடகங்களும் உள்ளன.
மற்ற பிராந்திய மொழிகளிலும் உள்ளன.
_________________________________________________________________________________

காப்பிய காலம் - கி.மு.500 - கி.பி.320. [ The Epic Period ] :
இந்த காலத்தில்தான் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றியது.
இந்த இரண்டு இதிகாசங்களும் இந்திய நாடக ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் ஊற்றாக இருந்தது.
இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் என்றழைக்கப்பட்ட  ‘அஸ்வகோஷா’ இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார்.
இவரது நாடகங்களில் மூன்று நாடகங்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.
அதில் ஒன்று ‘ஷாரிபுத்ர பிரகனா’.
9 அங்கங்களை கொண்ட இந்நாடகம் ஷாரிபுத்ராவையும்,
அவனது நண்பன் மவுட்கலியானாவைப்பற்றியும்,
அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதைப்பற்றியும் கூறுகிறது.

இவ்வாறு இலக்கியகாலம் கி.பி.320- 800, கி.பி.800 -1000, கி.பி. 1000 -1300,
நவீன காலம் என எல்லா கால கட்டங்களிலும் உள்ள
இந்திய நாடக வளர்ச்சியை தொட்டுக்காட்டி உள்ளது இந்நூல்.

[ இந்நூலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் நாடக வளர்ச்சியை தனிப்பதிவாக தருகிறேன். ]

நடிப்பை பற்றி இந்நூலில் குறிப்பிட்டதை அப்படியே தருகிறேன்.
_________________________________________________________________________________

நடிப்பு : நடிப்பு ஒரு கலையாகும்.
வியாபாரமல்ல.
கலையாக இருப்பதால் நடிப்பை கற்பதற்கு நிறைய படிப்பும்,
உடல் உழைப்பும் தேவையாக இருக்கிறது.
ஹூயூபர்ட் [ Hubert ] என்பவர் ஒரு நல்ல நடிகனுக்கு தேவையானவை என கீழ்க்கண்டவைகளை குறிப்பிடுகிறார்.
_________________________________________________________________________________

1. நல்ல உடலமைப்பு.


2. பழுதில்லா ஜீரணத்தன்மை.


3. கவரக்கூடிய முகம்.


4. மனதை இழுக்கக்கூடிய குரல்.



5. பாசாங்குத்தன்மை.


6. அழுத்தம் திருத்தமான பேச்சு.


7.சரித்திர ஞானம்.


8. நல்ல படிப்பு.


9. ஆடை விஷயத்தை பற்றிய ஞானம்.


10. ஆடையில் சிக்கன ஞானம்.
[ இந்த விஷயத்தில் நமது நடிகைகள் படு சிக்கனம்.]

11.வியாபார தந்திரம்.



12. தளர்ச்சியில்லாத உழைப்பு.


13. நடுங்காத குறிக்கோள்.


14. விமர்சனத்தை, ஏச்சிலிருந்து பிரித்தெடுக்கும் தன்மை.


15. விளம்பர ஞானம்.


16. சந்தர்ப்பத்தை நழுவ விடாத தன்மை.


17. ஞாபக சக்தி.


18. அதிர்ஷ்டம்.

_________________________________________________________________________________

ஒரு நடிகனுக்கு மேலும் வேண்டியவை கீழ்க்கண்ட குணங்களாகும்...

1. கூர்ந்து நோக்கும் தன்மை, காப்பியடிக்கும் தன்மை :
நடிப்பு என்பது மனித நடத்தையை காப்பியடிப்பதாகும்.
அதற்காக நடிகன் தன்னுள்ளே கூர்ந்து நோக்கும் தன்மையை எப்போதும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


[ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திருவருட்செல்வர் படத்தில் திருஞான சம்பந்தராக நடிக்கும் போது காஞ்சி பெரியவாளை பிரதிபலித்தார்.]

ரயிலில், பஸ்ஸில், ஆபிசில், வீட்டில், கூட்டத்தில், கிளப்பில் இருக்கும் போது மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்,
எப்படி கொனஷ்டைகள் செய்கிறார்கள் என்பதை ஒரு நடிகன் கூர்ந்து பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

கூர்ந்து நோக்கும் தன்மை குணச்சித்திர நடிப்புக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.
உதாரணமாக 25, 55, 85 என பல்வேறு வயது மனிதர்களின்
நடக்கும் தன்மையையும், செய்கைகளையும் கூர்ந்து கவனிப்பது நல்லதாகும்.

முதலில் நடிகனொருவன் தான் நடிக்கும் பாத்திரத்தின் தன்மையை
தன் மனதில் படம் பிடித்து பார்க்க வேண்டும்.
அவன் எப்படி நடப்பான் ?
எப்படி பேசுவான் ?
அவனுக்கு எதெது பிடிக்கும் ?
என்பதையெல்லாம் மனதில் படம் பிடித்து பார்த்துக்கொண்ட பிறகு
நடிக்க வேண்டும்.

2 . நடையும் செய்கைகளும் [ Movement and gesture ] 
ஒப்பனை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்,
நடிப்போடு ஒப்பிடுகையில் ஒரு நடிகனுக்கு அது இரண்டாம் பட்சமே.
நடிகனின் நடைதான் மிக முக்கியம்.
சைகைகள் விஷயத்தில் மூன்று விதிகள் உள்ளன.
1. சைகை ஏதாவது அர்த்தத்தை அளிப்பதாக இருந்தால் மட்டுமே அதைச்செய்ய வேண்டும்.
2. செய்யும் சைகையை ஒழுங்காக செய்ய வேண்டும்.
3. அடுத்த பாத்திரங்கள் பேசும் போது சும்மா இருக்க வேண்டும்.
_________________________________________________________________________________

நண்பர்களே...
திரு.பாபநாசம் குறிப்பிடும் சில விதிகள்,
இன்றைய காலத்திற்கு பொருந்தி போகாமல் இருக்கலாம்.
ஏனென்றால், இன்று சினிமாவும், நாடகமும் எத்தனையோ மடங்கு
உயர்ந்த தளத்தில் இருக்கிறது.

சினிமாவுக்கு தேவையான ‘ஸ்க்ரீன் ஆக்டிங்’ பற்றி ஹேராம் பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
‘ஸ்க்ரீன் ஆக்டிங்’ பற்றி குறிப்பிட்ட ஹேராம் பதிவிற்கு செல்ல...
_________________________________________________________________________________

நாடக கலைக்களஞ்சியம் உருவாக்க 17 ஆண்டுகள் உழைத்த திரு.பாபநாசத்திற்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

4 comments:

  1. விதிகள் அவருக்கு பொருந்தலாம்...

    இருந்தாலும்..........................................






    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. விதிகள்... நன்கு நடிப்பவர் அனைவருக்கும் பொருந்தும்.

      Delete
  2. முதல் விதியில் நல்ல உடலமைப்பு என்கிற போட்டோவில் மிக சரியான ஜோடியைப்போட்டு இருக்கிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களிடமிருந்து இப்படி ஒரு கமெண்ட் வாங்கவே அப்படி ஒரு படத்தை தேர்வு செய்தேன்.

      அனுஷ்கா படத்தை பற்றி யாருமே கண்டு கொள்ளாதது...
      சற்று ‘வலிக்கிறது’.

      Delete

Note: Only a member of this blog may post a comment.