Nov 25, 2012

ரம்யா கிருஷ்ணன் கைதாவாரா ?

நண்பர்களே...
தினத்தந்தியில் [ 25- 11- 2012 ]
 ‘ எனது திருமணத்துக்காக நகை திருடினேன்’
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் திருடிய வேலைக்காரி வாக்குமூலம்
- என தலைப்பிட்ட செய்தியை படித்தேன்.


அதிலுள்ள முக்கிய அம்சம்...
ஆந்திர மாநிலம் குண்டூரைச்சேர்ந்த ஜோதி என்ற 21 வயதுப்பெண்,
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்திருக்கிறார்.
கடந்த 18ம் தேதி ஊருக்கு போய் விட்டார்.
அவர் சென்றதும் வீட்டு பீரோவில் இருந்த 30 பவுண் நகை திருட்டு போயிருந்ததைக்கண்டு ரம்யா கிருஷ்ணன் பெற்றோர் கண்டு பிடித்து போலிசில் புகார் செய்தனர்.

போலிசார் ஜோதியை கைது செய்து விசாரித்தனர்.
ஜோதி போலிசாரிடம் சொன்ன வாக்குமூலம்...
நான் 7 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்.
எனக்கு சம்பளம் கிடையாது.
சாப்பாடு போட்டு ,துணிகள் வாங்கித்தருவார்கள்.
ஊருக்கு போகும் போது பணம் தருவார்கள்.
எனது வீட்டில் எனக்கு திருமணம் செய்ய திட்டமிட்டனர்.
இதற்கு பணம், நகை தேவைப்பட்டது.
இதனால் ரம்யா கிருஷ்ணன் வீட்டிலிருந்து சிறுக சிறுக நகைகளை திருடினேன் ” .

ஜோதி 14 வயதில் ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால்,
ரம்யா கிருஷ்ணன் மீது.
‘குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டப்படி’
[ CHILD LABOUR PROHIBITION & REGULATION ACT 1986 ] நடவடிக்கை எடுக்கலாம்.

The Child Labour (Prohibition and Regulation) Act, 
1986 is one the most debated acts regarding children in India. 
It outlines where and how children can work and where they can not. 
The provisions of the act are meant to be acted upon immediately after the publication of the act, 
except for part III that discusses the conditions in which a child may work. 
Part III can only come into effect as per a date appointed by the Central Government (which was decided as 26th of May, 1993).

The act defines a child as any person who has not completed his fourteenth year of age. 

7 ஆண்டுகளாக முறையான சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கி ‘உழைப்பை திருடியதற்காக’ ,
 ‘ தொழிலாளர் சட்டப்படி’ குற்றம் சாட்டி நிரூபித்து ரம்யா கிருஷ்ணனுக்கு தண்டனை வழங்கலாம்.
இந்திய தொழிலாளர் சட்டம் பற்றிய விக்கிப்பீடீயா செய்தி....

Individual labour law

All India Organisation of Employers points out that there are more than 55 central labour laws and over 100 state labour laws.[1]
  • The Contract Labour Act (1970) aims at regulating employment of contract labour so as to place it at par with labour employed directly.[4] Women are now permitted to work night shifts too ( 10pm to 6am).[4]
  • Minimum Wages Act 1948
  • Weekly Holidays Act 1942
  • The Payment of Wages Act, 1936
  • The Workmen’s Compensation Act, 1923
திருடியதாக  குற்றம் சாட்டப்பட்ட ஜோதி மீது,
பாய்ந்து நடவடிக்கை எடுத்த போலிஸ்...
ரம்யா கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்குமா ?
சட்டம் ஒரு இருட்டறை என்ற வாதத்திற்கு வலு சேர்க்குமா ?

நடிகை ரம்யா கிருஷ்ணன்  ‘பிராம்மண’ வகுப்பை சார்ந்தவ்ர்.
மேலும் திரு.சோ அவர்களது அக்கா மகளும் ஆவார்...
என்ற செய்தியைச்சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

30 comments:

  1. நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘அய்யங்கார்’ வகுப்பை சார்ந்தவ்ர்.மேலும் திரு.சோ அவர்களது அக்கா மகளும் ஆவார்...என்ற செய்தியைச்சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்

    சிண்டுமுடிந்துவிட்டாச்சா? பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னா இருக்கும் போங்கோ.

    ReplyDelete
  2. குற்றம் சாட்டியவர்கள் செய்த குற்றம் + அவர்களின் பின்னணியை சொல்ல நினைத்தேன்.
    அவ்வளவே.

    சிண்டு முடிய எனக்குத்தெரியாது.

    ‘வழக்கு எண்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ஜோதிதானே ?

    ReplyDelete
  3. என்னங்க சார் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு. லைக் போட்டாலே கைது என்னும் நிலையில் உள்ளது நம் ஜனநாயகம்

    ReplyDelete
    Replies
    1. இந்தப்பதிவை என் வக்கீல் நண்பனிடம் அனுப்பி...
      அவன் சொன்ன கரெக்‌ஷனெல்லாம் செய்த பிறகுதான் பதிவேற்றினேன்.
      இருந்தும் கைதாவதை தடுக்க முடியாது.
      ஜாமீனில் வரலாம் என்றுதான் தைரியம் கொடுத்திருக்கிறான்.

      எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்.

      Delete
  4. இந்த பிரபலங்களை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்,,,,

    ReplyDelete
    Replies
    1. /// பிரபலங்களை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் ///

      உண்மை.
      உண்மையை தவிற வேறொன்றும் இல்லை.


      Delete
  5. ethuvum keyttaal thaan kidaikkum enbaargal ! adhubol appenmani (Velaikari) avaridam (actress) keytrikalaamey ?

    kettal kidaikaathathu edhuvumillai!

    Iraivanidam Aludhum, porumaiyaagavum Kelungal !
    manidharidam Seyyum Veylaikkaa Kooli Kelungal !!

    ReplyDelete
    Replies
    1. /// எதுவும் கேட்டால்தான் கிடைக்கும் என்பார்கள்.
      அது போல் அப்பெண்மணி[வேலைக்காரி]
      அவரிடம்[நடிகை] கேட்டிருக்கலாமே ?

      கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை!.

      இறைவனிடம் அழுதும் பொறுமையாகவும் கேளுங்கள் !
      மனிதரிடம் செய்யும் வேலைக்கு கூலி கேளுங்கள்!!///

      நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்த தத்துவங்களை தமிழில் மொழி பெயர்த்தேன்.

      ஜோதி போன்று பல பெண்கள் சென்னை பணக்கார வீடுகளில் இருக்கிறார்கள்.
      அவர்கள் செய்கின்ற வேலைக்கு என்ன சம்பளம் கிடைக்கும் என்பதறியா கொத்தடிமைகள்.

      அவர்கள் தாங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என எண்ணும் அப்பாவி நரகவாசிகள்.
      இருபத்தி நாலு மணி நேரமும் உழைத்து...
      ‘மீந்து’ போன உணவை உண்டு
      எஜமானிகள் தரும் பழைய துணியை புதுத்துணி போல் அணிந்து
      மகிழும்...
      அந்த திக்கற்ற தேவதைகளுக்கு உங்கள் தத்துவம் தெரியாது...புரியாது.

      Delete
  6. சில திருத்தங்கள் : திரு. சோ அவர்கள், ஐயங்கார் இல்லை (ஹை!).
    மேலும் செல்வி. ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தற்போது திருமதி. ரம்யா கிருஷ்ண வம்சி ஆகி ரொம்ப நாட்களாகிறது. எனவே அவர் இந்த திருவாளர். சோ குட்டையிலிருந்து வெளியேறி தி சோ கால்ட் திராவிட குட்டையில் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். இதன் பின்னணி முழுதும் அறிந்த பின்தான் மற்றவை பற்றிய கருத்து கூற முடியும்
    இந்த அடிப்படையில் பார்த்தாலும் கூட க்யூ (que) மிக நீண்டதாகவே தெரிகிறது. எல்லா "க" (K) குடும்ப உறுப்பினர்கள் மேலுள்ள வழக்குகளையும் எடுத்துக்கொண்ட பின்பு வரவேண்டுமென்றால் மிக நீண்ட நாட்களாகும் போலவே. ஒருவேளை இதிலும் 50:50 அல்லது 69:31 கேட்கிறீர்களோ?
    மேலும் உங்கள் வக்கீல் நண்பரிடம் சொல்லுங்கள், குற்ற பரம்பரை சட்டங்கள் எல்லாம் இப்போது நடைமுறையில் இல்லை, வழக்கொழிந்துபோய் பல காலமாகி விட்டது என்று - :)

    ReplyDelete
  7. /// திரு. சோ அவர்கள், ஐயங்கார் இல்லை (ஹை!).///

    அய்யா...திருத்தி விட்டேன்.

    ///குற்ற பரம்பரை சட்டங்கள் எல்லாம் இப்போது நடைமுறையில் இல்லை, வழக்கொழிந்துபோய் பல காலமாகி விட்டது என்று - :)///

    அந்தச்சட்டத்தை விடக்கொடுமையாக ‘இணையச்சட்டம்’ கொண்டு வந்து விட்டார்களே !

    ReplyDelete
  8. இப்பொழுதெல்லாம் யாரையுமே நம்பமுடிவில்லை.. 7 வருடங்கள் ஒரே வீட்டில் வேலை செய்திருக்கும் அந்த பெண் திருடியது தவறு. சிறு பெண்ணை வேலைக்கு வைத்து ஏமாற்றி உழப்பை திருடியது அதை விட தவறு..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      ஏழு வருடம் விசுவாசமாக உழைத்தப்பெண்ணை திருடும் நிலையில்
      வைத்தது யார் குற்றம் ?...என்ற கோணத்தில்தான் இப்பிரச்சனையை அணுக வேண்டும்.

      Delete
  9. //நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘பிராம்மண’ வகுப்பை சார்ந்தவ்ர்.
    மேலும் திரு.சோ அவர்களது அக்கா மகளும் ஆவார்...//

    ஆகவே மிகப் பெரிய இடத்துச்(சோ) சமாச்சாரமான இது, அப்பெண்ணின் மேலே குற்றம் காணும், காவல் துறையும் அதற்குத் தாளம் போட்டு அப்பெண்ணை சீரளிக்க நிறைய வாய்ப்புண்டு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு பலிக்கவே வாய்ப்பிருக்கிறது.

      Delete
  10. ஆஹா அருமை. 21 வயது பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்கு வைத்தார் என்றால் அவருக்கு 14 வயது ஆகிவிட்டது என்று பொருள் இல்லையா? அப்போது எப்படி அது குழந்தை தொழிலாளர் பிரச்சனை ஆகும்?

    அவருக்கு தங்குவதற்கு இடம், உடைகள், சாப்பாடு ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. விடுப்பில் ஊருக்கு செல்ல அனுமதியும், அவ்வாறு செல்ல விடுப்பும், பணமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இது எல்லாம் போதவில்லை என்றால் அவர் வேலையை விட்டு நீங்கி இருக்கலாம். திருடியது எந்த வகையில் நியாயம்? ஒரு வேளை அவரை அடைத்து வைத்து கட்டாயமாக வேலை வாங்கி இருந்தால் ரம்யா மீது குற்றம் இருக்கிறது.

    எனது வேலைக்கு ஏற்ற ஊதியம் கிட்டவில்லை என்றால், நான் திருடினால் அதற்கு குறைந்த சம்பளம் தந்த எனது முதலாளியே காரணம். உங்கள் கண்டுபிடிப்பு தஞ்சை கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டியது.

    காரும் சைக்கிளும் மோதிக் கொண்டால் தவறு கார் ஓடியவன் மீது என்ற பொதுப்புத்தியில் இருந்து வெளியில் வாருங்கள்.

    //
    நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘பிராம்மண’ வகுப்பை சார்ந்தவ்ர்.
    மேலும் திரு.சோ அவர்களது அக்கா மகளும் ஆவார்...
    என்ற செய்தியைச்சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
    //
    அப்படியே சிவகாசியிலும், திருப்பூரிலும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தும் முதலாளிகளின் ஜாதிகளையும், அவர்கள் யார் யாருக்கு அக்கா மகன்கள்/மகள்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதே தான் சார் நானும் சொல்கிறேன். பிரச்சனை குறித்த தெளிவான தகவல்கள் தெரியாத நிலையில் திருடியவருக்கு சாதகமாக முதலாளி மீது தவறு என்று கூறும் ஒரு தலைபட்ச பதிவு எனக்கு தவறாக தெரிகிறது.

      கார்ல்மர்க்ஸ் காலத்தில் நடந்த கொடுமைகள் எல்லாம் வேறு தளத்தில் இருப்பவை. அவர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் சீனாவில் தொழிலாளிகளுக்கு நடக்காத அராஜகங்களா?

      மற்றபடி மாற்றுக் கருத்துக்கு பொறுமையாக பதில் சொல்லியதற்கு நன்றிகள். இப்போதெல்லாம் மாற்று கருத்து சொல்கிறவனின் தாயாரின் கற்பை சந்தேகிக்கும் பதில்கள் தான் அதிகம் வருகிறது.

      Delete
    2. என்ன சார்? பதில் சொல்லுவதற்கு முன்பு உங்கள் பதில் காணாமல் போய்விட்டது? தவறுதலாக நீக்கி விட்டீர்களா?

      Delete
    3. ஐயா செந்தில் குமரன் அவர்களே...

      1 /// 21 வயது பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேலைக்கு வைத்தார் என்றால் அவருக்கு 14 வயது ஆகிவிட்டது என்று பொருள் இல்லையா? அப்போது எப்படி அது குழந்தை தொழிலாளர் பிரச்சனை ஆகும்? ///

      2 /// அவருக்கு தங்குவதற்கு இடம், உடைகள், சாப்பாடு ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. விடுப்பில் ஊருக்கு செல்ல அனுமதியும், அவ்வாறு செல்ல விடுப்பும், பணமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.///

      3 /// இது எல்லாம் போதவில்லை என்றால் அவர் வேலையை விட்டு நீங்கி இருக்கலாம். திருடியது எந்த வகையில் நியாயம்? ஒரு வேளை அவரை அடைத்து வைத்து கட்டாயமாக வேலை வாங்கி இருந்தால் ரம்யா மீது குற்றம் இருக்கிறது.///


      நான் குறிப்பிட்டுள்ளது ‘ஜோதியின் போலிஸ் வாக்குமூலம்’.
      ரம்யா கிருஷ்ணன் சிக்கலுக்கு ஆளாகாமல் தப்பிப்பதற்கு ஏதுவானதாக அந்த வாக்குமூலம் தயாரிக்கப்பட்டு இருக்கலாம்.

      நீங்கள் மேற்குறிப்பிட்ட மூன்று பாய்ண்டுகளுக்கும்...
      ஜோதியின் பாய்ண்ட் ஆப் வியுவில் ‘சட்டம் தனது கடமையை செய்தால்’ உண்மை வெளிச்சத்துக்கு வரலாம்.

      /// எனது வேலைக்கு ஏற்ற ஊதியம் கிட்டவில்லை என்றால், நான் திருடினால் அதற்கு குறைந்த சம்பளம் தந்த எனது முதலாளியே காரணம் ///

      உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்காத முதலாளிகள்தான் மிகப்பெரிய குற்றவாளிகள் என நான் சொல்லவில்லை.
      கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார்.

      /// காரும் சைக்கிளும் மோதிக் கொண்டால் தவறு கார் ஓடியவன் மீது என்ற பொதுப்புத்தியில் இருந்து வெளியில் வாருங்கள். ///

      நான் சிறு வயதிலிருந்தே சைக்கிள்தான் வைத்திருந்தேன்.
      வசதி வந்த பிறகு ஒன்றுக்கு இரண்டு கார் வைத்திருந்தேன்.

      1990களிலேயே எனது டிரைவருக்கு 8000 ரூபாய் சம்பளம் கொடுத்தவன்.
      நான் வீடு வாங்குவதற்கு முன்பாகவே, எனது டிரைவர் வீடு கட்ட இடம் வாங்கவும்...பின் வீடு கட்டவும் அட்வான்ஸ் அள்ளிக்கொடுத்தவன்.
      [அதே டிரைவர் நான் கஷ்டப்படும் காலத்தில்... எனது கஷ்டத்தை கேள்விப்பட்டு, வட்டிக்கு வாங்கி எனக்கு முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஆபத்பாந்தனாய்...பார்த்தசாரதியாய்...உதவி இருக்கிறான்.]

      எனது புத்தி பொதுப்புத்தியாக மாற வேண்டும் என்ற பேராசை கொண்டவன்.

      ///அப்படியே சிவகாசியிலும், திருப்பூரிலும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தும் முதலாளிகளின் ஜாதிகளையும், அவர்கள் யார் யாருக்கு அக்கா மகன்கள்/மகள்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள் ///

      நீங்கள் பிரச்சனையை ‘மைக்ரோ லெவலில்’ இருந்து...
      ‘மேக்ரோ லெவலுக்கு’ நகர்த்துகிறீர்கள்.
      அப்படி பார்த்தால் இரண்டே ஜாதிதான்....
      முதலாளி...தொழிலாளி.
      இதற்குள்தான் உலகமே இயங்குகிறது.

      நான் ஜாதி அடிப்படையில் பிரச்சனையை அணுக மாட்டேன்.
      பிரச்சனையின் அடிப்படையில் ‘ஜாதி செயல்படும் போது’ அதைக்குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

      எனது பதிவுகளில் கமல்,மணிரத்னம்,சின்மயி அனைவருக்கும் ஆதரவு தெரிவித்தது ஜாதி அடிப்படையில் அல்ல.
      பிரச்சனையின் அடிப்படையில்.

      தனியார் பள்ளிகளில் நடந்த விபத்துக்களில் சட்டம் ஜாதீய அடிப்படையில் செயல்பட்டது என பெரும்பான்மை பதிவுகள் வந்தனவே !

      Delete
    4. /// என்ன சார்? பதில் சொல்லுவதற்கு முன்பு உங்கள் பதில் காணாமல் போய்விட்டது? தவறுதலாக நீக்கி விட்டீர்களா? ///

      ஸாரி...ஒரு வார்த்தை டைப் பண்ணும் போது விடுபட்டு விட்டது.
      அந்த தவறு நான் சொல்ல வந்த அர்த்தத்தையே அனர்த்தமாக்கி விட்டது.
      அதனால்தான் நீக்கினேன்.

      Delete
    5. /// பிரச்சனை குறித்த தெளிவான தகவல்கள் தெரியாத நிலையில் திருடியவருக்கு சாதகமாக முதலாளி மீது தவறு என்று கூறும் ஒரு தலைபட்ச பதிவு எனக்கு தவறாக தெரிகிறது ///

      நான் எனது பதிவில் ரம்யா கிருஷ்ணன் குற்றவாளி எனச்சொல்லவில்லை.
      ஜோதியின் ‘பாய்ண்ட் ஆப் வியுவில்’ சட்டம் ஆராய்ந்து செயல் பட வேண்டும் என்பதே எனது பதிவின் நோக்கம்.

      Delete
    6. /// கார்ல்மர்க்ஸ் காலத்தில் நடந்த கொடுமைகள் எல்லாம் வேறு தளத்தில் இருப்பவை. அவர் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் சீனாவில் தொழிலாளிகளுக்கு நடக்காத அராஜகங்களா? ///

      சீனா மாவோ ஆட்சி காலத்துக்குப்பின் மாறி விட்டது.
      இப்போது சீனாதான்...உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ வல்லரசு.

      Delete
    7. /// இப்போதெல்லாம் மாற்று கருத்து சொல்கிறவனின் தாயாரின் கற்பை சந்தேகிக்கும் பதில்கள் தான் அதிகம் வருகிறது. ///

      உண்மைதான்.
      எனக்கே அந்த கசப்பான அனுபவம் நேர்ந்தது.

      ஆரோக்கியமாக மாற்றுக்கருத்தை வெளியிட்ட உங்களுக்கும்
      எனது மனமார்ந்த நன்றிகள்.

      ஒரு வேளை எனது விருப்பப்படி போலிஸ் ஆராய்ந்து உண்மை வெளிப்பட்டு ரம்யா கிருஷ்ணன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் உங்களை விட நான் மகிழ்வேன்.

      Delete
  11. //எனது வேலைக்கு ஏற்ற ஊதியம் கிட்டவில்லை என்றால், நான் திருடினால் அதற்கு குறைந்த சம்பளம் தந்த எனது முதலாளியே காரணம். உங்கள் கண்டுபிடிப்பு தஞ்சை கல்வெட்டுகளில் செதுக்கப்பட வேண்டியது. //
    ஆம் தஞ்சையில் கல்வெட்டிலும், தாஷ் மகாலிலும் ஏன்? ஒவ்வொரு விமான நிலையங்களிலும் கல்வெட்டில் வடித்தால் வெளிநாட்டாரும் பார்ப்பார்கள்.
    நம் நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும், வாழ்க்கைச் செலவுக்குத் தகுந்த குறைந்த அடிப்படைச் சம்பளம் எந்த வீட்டு வேலை செய்வோருக்குக் கிடைக்கிறது.'அம்மா' வீட்டிலும் இல்லையென்பதே உண்மை!
    //அப்படியே சிவகாசியிலும், திருப்பூரிலும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தும் முதலாளிகளின் ஜாதிகளையும், அவர்கள் யார் யாருக்கு அக்கா மகன்கள்/மகள்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள். //

    தெரிந்தால் நீங்களே சொல்லுங்கள். ஒன்று தெரியுமா?
    ரம்யாவும் இவங்களும் ஏழைகளின் வயிற்றிலடிப்பதில்
    ஒரேரேரே..சாதி தான்.

    ReplyDelete
    Replies
    1. யோஹன் நீங்களுமா? உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை.

      சரி ஏழு ஆண்டுகளாக எதற்கு இவ்வளவு கஷ்டத்தில் அந்த பெண் இவரிடம் வேலை பார்க்க வேண்டும்?

      ஒரு முறை நடந்தால் அது கற்பழிப்பு. ஐம்பது முறை நடப்பது கற்பழிப்பு அல்ல.

      //
      ஆம் தஞ்சையில் கல்வெட்டிலும், தாஷ் மகாலிலும் ஏன்? ஒவ்வொரு விமான நிலையங்களிலும் கல்வெட்டில் வடித்தால் வெளிநாட்டாரும் பார்ப்பார்கள்.
      //
      இது ஒரு வகையான எஸ்கேப்பிஸம். தனது தவறை அடுத்தவன் தலையில் சுமத்துவது.

      //
      நம் நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும், வாழ்க்கைச் செலவுக்குத் தகுந்த குறைந்த அடிப்படைச் சம்பளம் எந்த வீட்டு வேலை செய்வோருக்குக் கிடைக்கிறது.'அம்மா' வீட்டிலும் இல்லையென்பதே உண்மை!
      //
      இது எல்லா நாடுகளிலும் உள்ள நிலைதான். நம் நாடு ஒன்றில் மட்டும் இல்லை. அமெரிக்காவில் குட நாள் முழுதும் விவசயம் செய்யும், குப்பை அள்ளும், உடல் உழைப்பை நம்பி வழும் மக்களுக்கு குறைந்த வருமானம் தான்.

      உங்கள் நெற்றியில் துப்பாக்கி வைத்க்டு வெலை வாங்காத வரை முதலாளி மீது ஒரு தப்பும் கிடையாது. வேலை பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு நீங்குங்கள். யார் உங்களை தடுப்பது?

      //
      ஒன்று தெரியுமா?
      ரம்யாவும் இவங்களும் ஏழைகளின் வயிற்றிலடிப்பதில்
      ஒரேரேரே..சாதி தான்.
      //
      எல்லாரும் அடுத்தவரின் உழைப்பை உடைமையை உறிஞ்சி தான் சார் வாழ வேண்டி இருக்கிறது. கால சுழற்சியில் பூச்சியை தவளை உண்கிறது, தவளையை பாம்பு, பாம்பை கழுகு, கழுகை மனிதன்.

      Delete
    2. /// ஒரு முறை நடந்தால் அது கற்பழிப்பு. ஐம்பது முறை நடப்பது கற்பழிப்பு அல்ல.///

      இந்த உதாரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
      பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருவருமே பெண்கள்.
      இருவருமே நமது சகோதரிகள்.
      கண்ணியத்தோடு உரையாட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

      அத்து மீறினால் பிரசுரிக்க மாட்டேன்.

      Delete
  12. //
    /// ஒரு முறை நடந்தால் அது கற்பழிப்பு. ஐம்பது முறை நடப்பது கற்பழிப்பு அல்ல.///

    இந்த உதாரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
    பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருவருமே பெண்கள்.
    இருவருமே நமது சகோதரிகள்.
    கண்ணியத்தோடு உரையாட வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

    அத்து மீறினால் பிரசுரிக்க மாட்டேன்.

    //

    அய்யா, இது உங்கள் தளம். பிரசுரிப்பதும் மறுப்பதும் உங்கள் இஷ்டம். தவறான கருத்தில் அதை நான் சொல்ல வில்லை. கான்டக்ச்டை புறிந்து கொள்ளுங்கள்.

    உதாரணத்திற்கு சமீபத்தில் மது பன்டார்கர் மீது ஒரு பெண் அவர் தன்னை மூன்று ஆண்டுகளாக அறுபது முறைக்கு மேல் கற்பழித்தார் என்று புகார் செய்தார்.

    அது எப்படி ஒருவர் மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்காமல், கை கால்களை கட்டிப் போடாமல் அறுபது முறைக்கு மேல் கற்பழிக்க முடியும்?

    ஏழு ஆண்டுகளாக ஒருவர் சுரண்டலுக்கு ஆளானால் அது அவரது வல்னரபிலிட்டியை தான் காமிக்கிறது. என்னை நானே சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டு விட்டு எனது முதலாளி 7 ஆண்டுகளாக எனது உழைப்பை சுரண்டுகிறார் என்று புகார் கூறுவது நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லை.

    ReplyDelete
  13. /// தவறான கருத்தில் அதை நான் சொல்ல வில்லை.
    கான்டக்ச்டை புறிந்து கொள்ளுங்கள் ///

    நண்பரே ...
    மீண்டும் வற்புறுத்தி சொல்கிறேன்.
    பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நமது கருத்துரையை வைக்கும் போது மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளை கையாள வேண்டும்.

    எனது விளம்பரப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
    மிகவும் ஒத்துழைத்து அவர் பணியாற்றினார்.
    எனக்கு பேரும்,புகழும்,பணத்தையும் சம்பாதிக்க உதவியவர் ரம்யா கிருஷ்ணன்.
    இருந்தாலும் இப்பிரச்சைனையை ஜோதியின் பாய்ண்ட் ஆப் வியூவில்
    பார்த்தேன்.
    போலிசும் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    வருங்காலத்தில் நிச்சயம் அவரை என்றாவது சந்திக்கும் வாய்ப்பு நேரிடும்.
    இப்பதிவை அவரிடம் நேரில் காட்டி இது குறித்து விவாதிக்க என்னால் முடியும்.

    நீங்கள் வைத்த கருத்துருவை ஜோதியிடம் காட்டி நீங்கள் நேரிடையாக
    விவாதிக்க முடியுமா ?

    /// ஏழு ஆண்டுகளாக ஒருவர் சுரண்டலுக்கு ஆளானால் அது அவரது வல்னரபிலிட்டியை தான் காமிக்கிறது. என்னை நானே சுரண்டலுக்கு உட்படுத்திக் கொண்டு விட்டு எனது முதலாளி 7 ஆண்டுகளாக எனது உழைப்பை சுரண்டுகிறார் என்று புகார் கூறுவது நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லை.///

    இந்திய தொழிலாளர் சட்டம்...உங்கள் பார்வையில் பார்க்காது.
    ஏழு ஆண்டுகள் இந்தியச்சட்டப்படி குறைந்த பட்ச ஊதியத்தை கொடுத்ததற்கு ரம்யா கிருஷ்ணந்தான் ஆதாரத்தை காட்ட வேண்டும்.
    இல்லாத படசத்தில் அந்த தொகையையும்...
    அதை காலக்கிரமத்தில் வழங்காததற்கு உரிய தண்டனையை அவர் பெற்றே தீர வேண்டும்.

    ஜோதி திருடியது, நீதி மன்றத்தில் நிரூபிக்கபடுமானால் அவரும் தண்டனையை அடைய நேரிடும்.

    /// சமீபத்தில் மது பன்டார்கர் மீது ஒரு பெண் அவர் தன்னை மூன்று ஆண்டுகளாக அறுபது முறைக்கு மேல் கற்பழித்தார் என்று புகார் செய்தார்.

    அது எப்படி ஒருவர் மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்காமல், கை கால்களை கட்டிப் போடாமல் அறுபது முறைக்கு மேல் கற்பழிக்க முடியும்? ///

    இந்தச்செய்தி எனக்கு புதிது.
    எனவே இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

    ReplyDelete
  14. Oh my God! That was a freaking analogy. I was not attempting here to say one of those is sexually assaulted.

    Okie change what I said to the following.

    If someone meets with an accident once he or she could be a victim of being at the wrong place at the wrong time. If he or she meets with accident 50 times it might not be the case.

    In the rarest of rare circumstances only one could be victimized by the same person in the same form umpteen times.

    And this is my last post regarding this. Bfn.

    ReplyDelete
  15. ithil engirunthu vanthathu Jaathi(caste) prachnai,
    antha pen seithathu thavaru enru theriyum patchathil antha pennukku thandanai vazhangapada vendum, illai Ms.Ramya krishnan seithathu thavaru enraal avarum thandikkapada vendum........
    Neethi (justice) anaivarkkum samam enbathu nirubikka pada vendum......

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.