Nov 6, 2012

இணையச்சட்டம் வேண்டும்.

நண்பர்களே...
சின்மயி விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை பாராட்டி பதிவெழுதினேன்.
ஆனால் கார்த்தி சிதம்பரம் விவகாரத்தில் அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது.
இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்தி கருங்காலிகள் செய்யும் அக்கிரமங்களை தடுக்கும் வகையில் மட்டுமே சட்டம் செயல்பட வேண்டும்.
அதே நேரத்தில் நேர்மையான கருத்துச்சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலும் சட்டம் இயங்க வேண்டும்.

தெளிவான வழிகாட்டுதலுடனும், துஷ்பிரயோகத்திற்கு வழிவகை செய்யாத வகையில் சட்ட சீர்திருத்தம் வேண்டும்....என எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
இப்படிக்கு,
உலகசினிமா ரசிகன்.

திரு.தருமி அவர்கள் பதிவை இங்கே பகிர்கிறேன். 

*


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece
அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. 
ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! 
இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. 
இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். 
நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். 
இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். 
சரியான விசாரணை வேண்டும்; 
தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. 
ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


*

1 comment:

  1. தங்களின் இப்பதுதிவு இணைப்பு எனது வலைப்பூவில் இணைத்துள்ளேன் நன்ற்யுடன் http://parithimuthurasan.blogspot.in/2012/11/Tweets.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.