Aug 13, 2010

THE SONG OF SPORROW - ஈரான் புதுக்கவிதை


எனது ஆதர்ச இயக்குனர் மீண்டும் ஜெயித்திருக்கிறார் வழக்கமான மழலைப்பட்டாளங்களோடு.......

சில்ட்ரன் ஆப் ஹெவன்,கலர் ஆப் பாரடைஸ் வரிசையின் ஹாட்ரிக் இது.

குடும்பத்தோடு குதுகலிக்க....,குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க..... படம் எடுப்பதில் இணையாக மஜிதிக்கு இணையாக இந்த கிரகத்தில் யாருமே இல்லை .முன்னே ஒரு மகான் இருந்தார் ..அவர் பெயர் சாப்ளின்.

அழகிய கிராமத்து கவிதை ,நகரத்தின் நெருக்கடிகளில் குத்துப்பாட்டாகி, சீரழிவதை தன் பாணியில் நாகரீகமாக சொல்லியிருக்கிறார் மஜிதி .


ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே...ஈரானில் நான்குக்கும் மேற்ப்பட்ட இடத்தில் சென்சார் என்ற விபத்தை தாண்ட வேண்டும்..கதையில்...காட்சியில்...கவர்மென்டை கொஞ்சம் காயப்படுத்தினால் போதும்..ஜெயிலில் போட்டு காயடித்து விடுவார்கள்..

சமீபத்திய உதாரணம் ஜாபர் பனாகி...

அழகிய கவிதை ஒன்றை காட்சியாக்கி அதன் உள் அர்த்தத்தில் சாட்டை எடுத்து சாடியிருப்பார் மஜிதி....இது அவரது ஸ்டைல்....

உதாரணம் இப்படத்திலேயே இருக்கிறது.

சாக்கடை குழியாக இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றை சுத்தப்படுத்தி மினரல்வாட்டர் கிணறாக மாற்றி விடுவார்கள் இவரது

மழலைப்பட்டாளங்கள்..இந்தக்கிணற்றில் இ. ராஜாவின் இசையில் ஜானகி மாதிரி பாடுகிறது ஒரு சிட்டுக்குருவி....அடடா...என்ன ஒரு அழகு...இந்தக்காட்சி சாகும் வரை என்னுள் இருக்கும்..

இதன் உள்அர்த்தமாக எனக்குப்பட்டது....முன்னோர்களால் சாக்கடையாக்கப்பட்ட ஈரானை வருங்கால சந்ததியினர் சுத்தப்படுத்தி சிட்டுக்குருவி போல் பறக்கவிடுவார்கள்..அங்கு பழமை என்ற பெயரில் பயங்கரவாதம் இருக்காது . [உங்களுக்கு வேறு மாதிரி தோன்றலாம்.அதை எனக்கு எழுதுங்கள் ]

மஜிதி போன்ற இயக்குனர் வரும் வரை நாம் எந்திரன் பார்த்து சுகித்திருப்போம்.....

17 comments:

  1. எந்திரன் போன்ற படங்கள் நம் சாபக்கேடு. மஜிதி ஒரு திறமையான ஆள்.மேலும் ஈரானில் நிலவிய கடும் சட்டதிட்டங்கள் ஒருவேளை நல்ல பல சினிமாக்கள் வர காரணமாயிருந்ததோன்னு கூட சில சமயம் தோணும்.நன்றி பாஸ்கி சார்.

    ReplyDelete
  2. சார்..
    உங்க வலைபூவை கருந்தேள் அவர்களின் பதிவில் இருந்துதான் தெரிந்து கொண்டேன்.
    //குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க.. படம் எடுப்பதில் இணையாக மஜிதிக்கு இணையாக இந்த கிரகத்தில் யாருமே இல்லை.முன்னே ஒரு மகான் இருந்தார் ..அவர் பெயர் சாப்ளின்//
    அப்படியே வழிமொழிகிறேன். The Great Dictatorஐப் போல் குழந்தைகளுக்கும் புரியும் வகையில் இனப்படுகொலையை சொன்னவர் யாருமில்லை என்பது என் கருத்து. அந்தப் படத்தைப்பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.

    ReplyDelete
  3. hi sir,
    கோவையில் உலகசினிமா பட DVD எங்கு கிடைக்கும்.

    ReplyDelete
  4. எனக்கு இது சிறந்த தத்துவப் படமாகத் தோன்றியது!!

    இரண்டு சாதாரண நிகழ்ச்சிகளுக்கிடையில் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை ஒரு கவிதையைப்போலக் காட்டியிருப்பார்.

    சிறுவர்களைக் காட்டிலும் அதிகமாகப் பாம்புக்குப் பயப்படுவது; புது Antenna வந்தவுடன் ஒருவிதப் பெருமிதத்துடன் மற்றவர்களின் வீடுகளைப் பார்ப்பது; தன் தம்பிக்காகத் தன் மகள் பொய் சொல்லும்போது கோபப்படும் தந்தை, பின் தனக்காகப் பொய் சொல்லுகையில் கண்கலங்குவது; சிரமமான நிலையிலும் சாலையில் சந்திக்கும் சிறுமிக்கு உதவமுதல்வது, என்று ஒரு மிக இயல்பான மனிதனாக Amir Naji கலக்கியிருப்பார்.

    ஹெல்மெட்டின் நிழலில் ஒளிந்திருக்கும் அவரின் சோகமான முகம் என்றைக்கும் எனக்கு மறக்காது.

    ReplyDelete
  5. பார்த்திருக்கிறேன்,
    மிக அருமையான படம்

    ReplyDelete
  6. நண்பரே,

    கிணற்று நீர் குறித்த உங்கள் பார்வை மிகவும் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நண்பா..எந்திரன் படத்துக்கு நான் எதிரி இல்லை...நம்ம ஊருக்கு அதுதான் ஜேம்ஸ்பாண்ட் படம்..நல்லா இருந்தா ரசிப்போம்.ஆனால் அது போன்ற படங்க மட்டும் நமக்கு பார்வைக்கு கிடைக்குமானால் அது சாபக்கேடு..

    ReplyDelete
  8. மிஸ்டர் தெய்வம்...சாப்ளின் பற்றி எழுதுங்கள்...ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. மிஸ்டர் கிருஸ்ணா..என்னுடைய ஹாலிவுட் டிவிடி கடையில் கிடைக்கும்...

    ReplyDelete
  10. சு.மோ உங்கள் பின்னூட்டமே அழகான கவிதைதான்

    ReplyDelete
  11. கீதப்பிரியன் & க.கா பின்னூட்டத்துக்கு நன்றி

    ReplyDelete
  12. நிறைய படங்களை அறிமுகப்படுதுகிறீர்கள்..மிக்க நன்றி! :)

    ReplyDelete
  13. I am going to see this movie today. Your review this nice. i have seen many movies of majid. hi is a genius.

    ReplyDelete
  14. அருமையான திரைபடம்! ஆனால் போகிற போக்கில் எந்திரனை ஏன் இழுக்குறிங்க? மனித மனத்தின் ஆச்சிரியமே .. மாற்றங்களை தேடி போவதுதான். இட்லி நல்லதுதான்.. ஆனால் வாரம் ஒரு முறை பூரி சாப்பிடுவது தவறில்லயே... எந்திரன் பூரி ... ஒரு நாள் சந்தோஷம். இட்லி - THE SONG OF SPORROW. நெடு நாள் சந்தோசம்!

    ReplyDelete
  15. நன்றி முகம்மது ..மயில்ராவணன் பின்னூட்டத்தின் பதிலே தங்களுக்கும்

    ReplyDelete
  16. sir, muthala ungaluku nandri solanum eana.. thamil cinema ipo sabathulathan iruku.. ana sila nall apadangalum varuthu kalavani, venila kabadikulu mathiri.. song of sprw nan konangla pathuruken... wat a movie.. no words to explain that. majith majithi ena vithamani aal apppaa.. manusan konruparu.. athe mathiri nenga mahendran avarkalin padangalaiyum recomend panalam nama thamil nalla rasikarkaluku.. paal abisekam panravangalu vendam..inum ungal thedal thodaranum.. antha valiyaha nangalum payanikanum..

    kaviji
    cbe 25

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.