Nov 4, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம்-மாற்ற வேண்டாம் தாயே


1977 லிருந்து என்னுடைய ஒட்டு உதய சூரியனுக்குத்தான்.
முதன்முறையாக கலைஞரின் மேல் வந்த எனது கோபத்தை இரட்டை இலைக்கு போட்டு எனது கோபத்தை தணித்து கொண்டேன்.

இரட்டை இலைக்கு ஒட்டு போட்ட உரிமையில் கேட்கிறேன்...
தாயே...

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.

இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...
                  


                   
                                               
பத்து மாநகராட்சியை தங்கள் காலடியில் சமர்ப்பித்த தமிழக மக்களுக்கு பரிசாகத்தாருங்கள்....

பத்தும் பத்தாயிரம் ஆண்டுகள் உங்கள் புகழைச்சொல்லிக்கொண்டே இருக்கும்
எங்கள் வேலு நாச்சியாரே!

உலகின்... டாப் 10 நூலகங்கள் எது? என கூகுளில் கேட்டால் ...
நீங்கள் உருவாக்கிய பத்து நூலகங்களைத்தான் அது காட்ட வேண்டும்.
உங்களால் முடியும்....உங்களால் மட்டும்தான் முடியும்.

நண்பர்களே!
நமது முதல்வர் அம்மாவிற்க்கு வேண்டுகோள் விடுத்து பின்னூட்டமிடுங்கள்.
அதை நான் இந்தப்பதிவிலேயே உடனுக்குடன் இணைத்து விடுகிறேன்.
தயவு செய்து விமர்சித்து பின்னூட்டம் இட வேண்டாம்.
மிக நாகரீகமாக ...நயமாக...பணிவாக ...பண்பாக உங்கள் பின்னூட்டம் அமையட்டும்.

முதல் கருத்தாக...  சுந்தர்ஜீ கூறியது....


please let it be a USEFUL LIBRARY lot of hospitals are there outnumbering libraries moreover it was built and meant for library so let it be a USEFUL LIBRARY to all.

please do not convert it into a multi speciality hospital instead facilities can be improved at GH, stanley and even in rural villages which has zero medical facilities. anti-snake venom, anti-rabies and other life saving medicines are required at many of the out of reach hilly rural villages of gullible people please do something which will be helpful for them. chennai is already a MECCA OF MEDICAL MIRACLES so please please no more hospitals but improve their standard, pathetic condition, good maintenance of all drugs and environment and the workers there. 
LET IT BE A USEFUL LIBRARY. 
ANBUDAN
SUNDAR G ( RASANAI )
********************************************************************************************
சூர்யஜீவா கூறியது....


இந்த போராட்டம் குறித்து எனக்கு மாற்று கருத்து இருந்தாலும், பெருவாரியான மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டுள்ளேன்... மேலே இணைப்பு கொடுத்திருக்கிறேன்... இந்த இணைப்பில் அம்மையாருக்கு உங்கள் கோரிக்கையை வைக்க வழி வகுத்து உள்ளார்கள்... போராடுவோம்.. இன்குலாப் ஜிந்தாபாத் 
*********************************************************************************************
நிரூபன் கூறியது....


நல்லதோர் வேண்டுகோள், ஒருமித்த மக்கள் பலத்தின் மூலமும், மக்களின் வேண்டுகோள் மூலமும் ஜெயலலிதாவின் மனதில் இக் கோரிக்கையையினை நிறைவேற்றும் எண்ணத்தினைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன்.


***********************************************************************************************
அபிமன்யூ கூறியது

நல்ல ஒரு தொடக்கம் நண்பரே.. இதை முழுமனதோடு வரவேற்கிறேன். நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.


*************************************************************************************************

arivin kuttai kalaithu vida vendam.

*****************************************************************************************************************************

நல்ல முயற்சி, என்னது பாராட்டுகள் உங்களுக்கு. அந்த கட்டிடம் மருத்துவமனைக்கு ஏற்ற கட்டிடமாக கண்டிப்பாக இருக்க முடியாது. ''அம்மா'' இதனை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். நல்ல எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எல்லாம் நல்லதே நடக்கும், இந்த பதிவு அனைவரிடமும் சென்று சேரவேண்டும் , அனைவரும் பரிந்துரையுங்கள்.

*****************************************************************************************************************************************

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா. இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்... கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே... உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது சகோதரரே .நிட்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் .ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம் .இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத் தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.அதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன் சகோதரரே .மிக்க நன்றி பகிர்வுக்கு .

*********************************************************************************************************************************************


நல்ல ஒரு ஆக்கம் நண்பரே... என்னையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறேன். நம் அனைவருடைய கோரிக்கையும் அம்மையாரின் மனதை மாற்றும் என முழு நம்பிக்கையுடன் இயங்குவோம். அனைவருக்கு அறிவை வழங்கும் ஒரு (நூலகத்தை) கலஞ்சியத்தை போஸ்ட்மாடம் செய்யவேண்டாம் என்பதே எங்களின் தாழ்மையான வேண்டுகோள்...

***************************************************************************************************************************************
நானும் உங்களோடு சேர்கிறேன்,,,,

*****************************************************************************************************************************************
நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்... எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!
By Kousalya 

********************************************************************************************************************************************

கட்டாயம் நீங்கள் கூறிய கருத்தினை ஏற்றால் கட்டாயம் இந்த தலைவியால் பத்து நூலகங்கள் உருவாக்கி பத்தையும் கூகிள் முதல் பத்து இடத்தினை கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு அறிவும் அதிகாரமும் இருக்கிறது. செய்யலாம். செய்வார்கள் என்று நம்புவோமாக இப்பொதைக்கு முதலில் அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை கைவிட கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் இது போல குழந்தைகள் மருத்துவமனை கட்ட நிறைய இடம் இருக்கிறதே. அங்கு கட்டலாமே வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்

**************************************************************************************************************************************************
நல்ல ஐடியாதானே இது. . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.

********************************************************************************************************************************************************

புதிய மருத்துவமனைக; துவக்குவது வரவேற்கத்தக்கதுதான்! ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்??? எனக்கொரு சந்தேகம்- புதிய மருத்துவ மனைகள் துவக்குகிறேன் என்கிறீர்கள். தற்போது இயங்கிவரும் மருத்துவமனைகளின் நிலை அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறதா?இல்லை புதிய தலைமைச்செயலகத்தில் துவக்கப்படுவதாக அறிவித்த மருத்துவமனைக்கான செயல்முறைகள் எந்த நிலையில் இருக்கிறது?
By கோகுல்
****************************************************************************************************************************************************************

//அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.// எனது தாழ்மையான வேண்டுகோளும் இதுவே . நூலகங்களை உருவாக்குங்கள் வருங்கால சமுதாயம் உங்களை போற்றிபாராட்டும் .
By angelin 

**********************************************************************************************************************************************************************
நூலகம் மாற்றப்படக்கூடாது, அறிவுலகின் நுழைவாயிலாம் நூலகம் அதை உருவாக்க எவ்வளவு சிரமம், அழிப்பது எளிது, தயை கூர்ந்து மக்களின் கூக்குரலை கேட்டருள வேண்டும். மருத்துவமனை கட்ட ஆயிரம் இடங்கள் கிடைக்கலாம். நூலகத்தை விட்டு விடுங்கள்.

****************************************************************************************************************************************************************************
நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே....
********************************************************************************************************************************************************************************
அதை மிகச் சிறப்பாக அமைந்த ஒரு நூலகமாக மட்டுமே பாருங்கள், கலைஞரின் முயற்சியில் எழுந்த நூலகமாக தயவு செய்து பார்க்க வேண்டாம் "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது."
**************************************************************************************************************************************************************************************
Ungalathu Korikkayai Vinnapika Naanum Serkiraen.Like to join in this effort to be made as a Library in the name of Our Great Leader Kamarajar.
*****************************************************************************************************************************************************************************************
நான் மெயில் அனுப்பிவிட்டேன் ...

*******************************************************************************************************************************************************************************************
ஏற்கனவே செயல்படும் நூலகத்தை மாற்றிதான் மருத்துவமனை உருவாக்க வேண்டுமா? இந்த ஆட்சி நினைத்தால் கண்டிப்பாக எத்தனையோ மருத்துவமனைகள் புதிதாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கட்ட முடியுமே?

********************************************************************************************************************************************************************************************
நூலகம் ஒரு இனத்தின் அடையாளம்.யாழ் நூலகத்தின் கொடுமை கண்ணுக்குள் தெரிகிறது.ஏன் இப்படியான விஷயங்களில் கை வைக்கிறார்கள்.உங்கள் ஆதங்கம் சரியே.ஒன்றுபட்ட குரல்களுக்கு ஆரோக்கியம் அதிகம்.தொடருங்கள் !

************************************************************************************************************************************************************************************************
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற வேண்டாம் அம்மா. இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்... கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் ... சகோதரரே, உங்கள் மனதின் கொந்தளிப்பு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது . நிச்சயம் உங்கள் வேண்டுகோளை அம்மா அவர்கள் ஏற்றுக்கொள்வார் என நானும் நம்புகின்றேன் . ஒன்றை அழிப்பது இலகு ஆனால் ஆக்குவது கடினம். இந்த அடிப்படையில் புகழ்பெற்ற இந்த நூலகம் பலரது நெஞ்சங்களிலும் ஓர் ஆலயமாக அறிவு தந்து பல நல் ஆசான்களையும் உருவாக வழிவகுத்த மறக்க முடியாத ஞாபகச் சின்னமாகத் தோன்றும்போது அதை எவ்வாறு அந்தத் தாயுள்ளத்தால் சட்டெனத் தகர்க்க முடியும்.? ஆதலால் மக்களின் ஒருமித்த குரலுக்கு அவர் செவி சாய்க்க வேண்டும் என்று வாழ்த்தி உங்கள் அழைப்பிற்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். சகோதரரே. மிக்க நன்றி பகிர்வுக்கு . வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
By VANJOOR 

********************************************************************************************************************************************************************************************
நல்லதொரு முயற்சிக்கு பாராட்டுகிறேன். வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துகிறேன். நூலகம் மாற்றபடகூடாது என்பதே என் விருப்பமும்... எல்லோரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் நம்புவோம்...காத்திருப்போம்...!// என் கருத்தும் இதுதான்...

************************************************************************************************************************************************************************************************
நல்ல ஐடியாதானே இது. . நானும் உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன். கண்டிப்பாக நூலகம் மாற்றபடாது என்று நம்புவோம்.

**************************************************************************************************************************************************************************************************

கண்களை விற்று ஒவியம் வேண்டாம்!! நல்லது நடந்தால் நல்லது!!

*****************************************************************************************************************************************************************************************************
நூலகத்தை மாற்ற வேண்டாம் என்ற உங்கள் கருத்து எனக்கும் உடன்பாடே. மருத்துவமனைக்கு வேறு இடம் பார்க்க வேண்டிக்கொள்கிறேன்.

********************************************************************************************************************************************************************************************************
எப்போதும் விழித்திருப்போம்' நமது எதிர்ப்பை உடனுக்குடனே சூடாக சொல்லிவிட்டோம். உங்களைப் போன்ற அல்லது நம்மை போன்ற எண்ணற்ற தன்னார்வ ஆர்வலர்களின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. இன்னும் 5 வருடங்கள் நமக்கு இதைபோன்று நிறைய வேலையிருக்கிறது. ஆகவே, நண்பர்களே 'எப்போதும் விழித்திருப்போம்' நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம்.
************************************************************************************************************************************************************************************************************
நல்லதொரு முயற்சி நண்பரே வெற்றி பெற வாழ்த்துக்கள். அறிவு கடலை வற்றவிட வேண்டாம்
*************************************************************************************************************************************************************************************************************
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றவேண்டிய அவசியம் என்ன?அரசால் ஒரு மருத்துவமனை தனியாக உருவாக்க முடியாதா?மக்களின் எதிர்ப்பையும் தாண்டி நீங்கள் நடைமுறைபடுத்தினால் அது மக்களிடம் உங்கள் மேல் வெருப்பு வராதா?சிந்தியுங்கள் அதிமுக தோழர்களே..!அம்மாவிடம் தெரிவியுங்கள் அது போதும்... உலகசினிமா ரசிகன் ரசிகனுக்கு நன்றி
By veedu
****************************************************************************************************************************************************************************************************************
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... நூல் நிலையம் என்பது ஆலயம் மாதிரி...ஒரு ஆலயம் ஆஸ்பத்திரி ஆக வேண்டாமே... >>> ரிப்பீட்டு
********************************************************************************************************************************************************************************************************************
மக்களுக்கான நல்ல விஷயங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. அதற்க்கு மிகச் சிறந்த உதாரணம், 'சமச்சீர் கல்வித் திட்டம்'. கண்டிப்பாக இந்த அரசால் அண்ணா நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமமனையாக மாற்ற விடமாட்டார்கள் பொதுமக்கள்.

***********************************************************************************************************************************************************************************************************************
தெரியாத உண்மையில்லை..கலைஞர் கட்டிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அதை மாற்ற துடிக்கும் நீங்கள் அவர் ஆண்ட மண்ணை மட்டும் ஆளத் துடிக்கிரீரே? இம்முறை உங்கள் ஆட்சியில் கரை இருக்காது என்பது தெரியும்..ஆனாலும் இது போன்ற கலகங்களும் செய்யாமல் இருந்தால் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறி மாறி ஓட்டு குத்தும் தமிழகம் ஒருவேளை உங்கள் ஆட்சியைத் தொடர செய்யலாம்.. பிற மாநில மக்களும் சிகிச்சைக்கு வரும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சில காலம் பணியாற்றியவன் என்ற முறையில் அங்குள்ள குறைபாடுகளை அறிவேன்..அதை நேர்த்தியாக சரி செய்தாலே தாங்கள் மக்களுக்கும்,சீரிய மருத்துவ சேவைக்கும் பேருதவி செய்ததாய் இருக்கும்.. எங்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதே,..ஓட்டையும் போட்டுவிட்டு கெஞ்சவும் வேண்டியுள்ளது...

*****************************************************************************************************************************************************************************************************************************

அப்பா ஒருவழியா நீதிமன்றம் தடை போட்டுட்டாங்க..
*******************************************************************************************************************************************************************************************************************************
அண்ணா நூலகத்தை மாற்ற வேண்டாம் என்பதில் எல்லோருக்கும் ஒரே கருத்துத்தான்... இதில் கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு வேண்டுமென்றால் மாற்றுக் கருத்து இருக்கலாம். நீங்கள் சொல்லியிருப்பது போல் அண்ணாவோ அல்லது காமராஜரோ யார் பெயரில் வேண்டுமானாலும் மாநகராட்சிகளில் மட்டுமல்ல... மாவட்டம் தோறும் அமைக்கட்டும்... எல்லோரும் வாழ்த்துவோம்... நண்பர் சொல்லியிருப்பது போல் நூலகம் என்பது கல்விக் கண் திறக்கும் ஆலயம்... உங்கள் பதிவிற்கு பாராட்டுக்கள்.
*********************************************************************************************************************************************************************************************************************************
நூலகம் இல்லா ஊரில் ககுடி இருக்காதே...என்பது புது மொழி. நூலகம் ஒரு தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும். ஆகையால் உங்கள் ஆக்கத்திற்கு பூரண ஆதரவு என்றும் உண்டு.
************************************************************************************************************************************************************************************************************************************
நூலகத்திற்கு செல்லும் பழக்கம் நம் மக்களிடம் மறைந்து வரும் வேளையில் இது போன்ற அறிவிப்புகள் இன்னும் கிலியூட்டுகின்றன. சென்னையில் உள்ள நூலகம் போல நம்ம மதுரையிலும் வராதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் சென்னை நூலகமே மருத்துவமனையாக மாறப்போகிறது என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. அதிர்ச்சி வைத்தியம் வேண்டாம். இனி நாங்கள் நூலகத்திற்கு அடிக்கடி செல்கிறோம். தயவுசெய்து இந்த எண்ணத்தை கைவிடுங்கள். பகிர்விற்கு நன்றி. நல்லது நடக்கும்.
***************************************************************************************************************************************************************************************************************************************
I Just remember this "Prevention is better than cure" Hospital is a place to cure the patients. Library is a place where Doctors and healthy people are created. So, Im not saying that a Hospital is not essential but the library is more essential. Future healthy people will be from present learning. let them learn...
By jiff0777 
*******************************************************************************************************************************************************************************************************************************************
பீர்பால் பெரிய கோட்டை அழிக்காமல் அதன் பக்கத்தில் அதை விட பெரிய கோடை போட்டு பெரிய கோட்டை சின்னத்தாக்கிய மாதிரி அம்மாவும் செய்வார்கள் என்று நம்புவோம்.நூலகமும்,குழந்தைகள் மருத்துவமனையும் ஊர் தோறும் அமையட்டும்!அம்மாவின் புகழ் நிலைக்கட்டும்!!
********************************************************************************************************************************************************************************************************************************************
தங்கள் கருத்து நிச்சயமாக சிந்திக்க தகுந்தது. நம் முதல் அமைச்சரும் மக்கள் விருப்பத்தை புரிந்து கொள்வார். நூலகம் மூடியவர் என்று ஒரு போதும் சரித்திரத்தில் இடம் பிடிக்க விரும்ப மாட்டார். நானும் பணிவன்பாக கேட்டு கொள்கின்றேன். நூலகம் சென்னையில் மட்டுமல்ல மாவட்டங்கள் தோறும் திறக்கப்பட வேண்டும். அது போன்றே நாட்டின் செல்வங்களான குழந்தைகள் பாதுகாக்கப் பட மருத்துவ ம்னைகளும் சிறந்த வசதியுடன் சுகாதாரத்துடன் கிராமங்கள் தோறும் திறக்க அம்மா ஆட்சியில் வழி திறக்க வேண்டும். நன்றி வணக்கம்!
*************************************************************************************************************************************************************************************************************************************************
ஊட்டியில் நயாகரா மின்சார உற்பத்தி உட்பட உங்களின் பல நல்ல திட்டங்களை ( 2001 - 2006 ) அப்போதைய தி.மு.க சுற்றுப் புற சூழல் அமைச்சர் ராஜா செயல்படவிடாமல் செய்திருந்தாலும் , அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான திட்டங்களை நீங்கள் மக்களுக்காக செயல்படுத்த வேண்டுமென்பதே என்னைப் போன்ற பல கோடி தமிழர்களின் வேண்டுகோள் ...
******************************************************************************************************************************************************************************************************************************************************

































Nov 2, 2011

Nobody Knows-2004[Japanese] பசியை பகிர்ந்துண்ணும் குழந்தைகள்


மிக மெல்லிய இதயம் படைத்தவர்கள் இந்தப்படம் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
காரணம்....
 இது ஹாரர் படமா?
இல்லை ....அதை விட பயங்கரமானது.

கோணங்கள் பிலிம் சொசைட்டியில் படம் திரையிடும் போது பட முடிவில் கலந்துரையாடல் நடைபெறும்.
இந்தப்படத்திற்க்கு கலந்துரையாடல் நடைபெறவில்லை.
பேசும் நிலையில் யாரும் இல்லாமல்.... கனத்த இதயத்துடன் கலைந்து சென்றோம்.
ஜப்பானில் 1988ம் வருடம் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 2004ல் Hirokazu Koreeda எழுதி இயக்கிய துன்பியல் கவிதைதான் Nobody Knows.

12 வயது அகிராவும், அவனது தாயும் புது வீட்டுக்கு குடி வருகிறார்கள்....
சாமான் செட்டெல்லாம் இற்க்கி வைத்து விட்டு பேக்கர்ஸ்&மூவர்ஸ் சென்றவுடன் முதலில் பெரிய சூட்கேசை திறந்தால் 5 வயது யூகி, “அப்பா...என்ன ஒரு புழுக்கம்”என ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்குவது போல் வெளியே வருகிறாள்.

மற்றொரு பெரிய சூட்கேஸிலிருந்து ஷிகுரு என்ற பம்ப்ளிமாஸ் குண்டன், “ஹாய்”என அன்பே வா எம்ஜியார் போல் குதித்து வருகிறான்.
படத்தில் நம்மை குதூகலிக்க வைப்பது இந்த குட்டிப்பிசாசுதான்.
11 வயது க்யாகோ ரயிலில் வந்து....
 செகண்ட் ஷோ பார்த்து விட்டு திருட்டுத்தனமாக ஹாஸ்டலுக்கு வந்து சேருவதைப்போல வந்து சேருகிறாள்.

இவர்களெல்லாம் யார்?
எதற்க்கு இந்த திருட்டுத்தனம்?
என்ற கேள்விகள் விஸ்வரூபமெடுக்கின்றன.
இவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே!
ஆனால் தகப்பன் மட்டும் வெவ்வேறு!!!!!!!
இந்த ஜப்பான் குந்தியை ஏமாற்றுவது.... கடலை மிட்டாய் வாங்குவதை விட எளிதானது ஆண்களுக்கு.

பிள்ளைகள் ஒருவரைக்கூட இவள் பள்ளிக்கு அனுப்புவதில்லை.
தாய் :  “பெரிய மேதைகள் பள்ளிக்கே போனதில்லை”
அகிரா : “அதில் ஒரு ஆளைச்சொல்லு?”
 தாய் :  “காமராஜர்”
இவளது சமாளிபிகேசன் அனைத்துமே மதன் ஜோக்ஸ் அல்லது சிபியின் ‘அட்ரா சக்க’ ஜோக்ஸ்.
ஆனால் நாலு சுவற்றுக்குள் ஒரு மிடில் கிளாஸ் சொர்க்கத்தை அமைத்து தருகிறாள்.

தற்ப்போது ஒரு பாய் பிரண்டை பிடித்துள்ளதாகவும்...
 அவன் பெரிய வீட்டில் நம்மை ஒன்றாக வாழ வைப்பான் என நம்பிக்கையுடன் கூறுகிறாள்.
பிள்ளைகளோடு சேர்ந்து நாமும் அலறுகிறோம்....மறுபடியுமா?????

ஒரு நாள் கொஞ்சம் பணத்தை வைத்து விட்டு தாய் மாயமாகிறாள்.
கிறிஸ்துமசுக்குள் வந்து விடுகிறேன் எனக்குறிப்பு எழுதி வைத்து விட்டுப்போனவள் படத்தின் இறுதி வரை வரவேயில்லை... சண்டாளி.
படம் பார்க்கும்போது நீங்கள் அவளை இன்னும் மோசமாக திட்டுவீர்கள்.

அகிரா அந்தக்குழந்தைகளுக்கு தாயாக.... தந்தையாக.... நண்பனாக மாறுகிறான்.


யூகிக்கு பிறந்த நாள் என்பதால் ஸ்பெசலாக அவளை மட்டும் வெளியே அழைத்து செல்கிறான்.
அப்போது தலைக்கு மேலே மிக உயரமான பாலத்தில் ரயில் போல ஒன்று போகிறது.
யூகி: அது என்ன?
அகிரா:அதுதான் மோனோ ரயில்.அது ஏர்போர்ட்டுக்கு போகிறது.
யூகி:நாமும் அதுல போலாமா?
அகிரா:கட்டாயம் ஒரு நாள் உன்னை அழைத்துச்செல்கிறேன்.

ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் மோனோரயில் பறப்பதை காமிராமேன் வெகு அழகாக படம் பிடித்திருப்பார்.
[சென்னை ஏழைகளுக்கும் மோனோ ரயில் வரப்போகிறதாம்]

 காமெடிக்குண்டன் ஷிகுருவின் ஒரே லட்சியம் பால்கனிக்கு போய்...
 உலகத்தை பார்ப்பது...
ஒரு விளையாட்டு சாமானை பால்கனியில் எறிந்து விட்டு...
 அதை எடுப்பது போல் நைசாக பால்கனிக்குள் அடியெடுத்து வைக்கிறான்.
அவன் முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி...தமிழ் ஈழம் கிடைத்தது போல்!!!!!!!!

கையிலிருக்கும் பணம் காலியாக
வீட்டில் வாட்டர் கட்..
கரண்ட் கட்...
கேஸ் கட்....
கடைசியாக சாப்பாடும் கட்.
குண்டன் மட்டும் பபுல்கம் மெல்வது போல் வாயை அரைக்கிறான்.
துப்புடா... என அகிரா ஆணையிட வெள்ளையாக கொழகொழவென்று துப்புகிறான்.
“என்னடா இது?”
“பேப்பர்”

இந்தக்காட்சி என்னை எனது பால்ய பருவத்திற்க்கு தூக்கியெறிந்து விட்டது.
நான் எனது ஏழாவது வகுப்பு பெரியம்மா வீட்டில் இருந்து படித்தேன்.
அப்போது அவர்கள் வீட்டில் பகிர்ந்துண்ண வறுமையைத்தவிற வேறொன்றும் இல்லை.
காலையிலிருந்தே ஒன்றும் சாப்பிடவில்லை.
பெரியம்மா...அவரது பிள்ளைகள் மூவர்...ஆக ஐவரும் உண்ணா விரதம்.
 மாலையில் பசி பொறுக்க முடியாமல் சமையல் அறையை உருட்டினேன்.
அரிசிப்பானையில் ஐந்தாறு அரிசி கிடைத்தது.
வழித்தெடுத்து வாயில் போட்டு அரைத்தேன்.
பெரியம்மா பார்த்து விட்டார்கள்.
 “என்னடா வாயில்?”
 “அரிசி பெரியம்மா”என வாயை ஆவெனக்காட்டினேன்.
என்னைக்கட்டிப்பிடித்து அழுத பெரியம்மாவின் கண்ணீர் இன்றும் சுடுகிறது.

இனி வறுமை டான்ஸ் ஆடிய ஜப்பான் அப்பார்ட்மெண்ட் போவோம்

ஏற்க்கெனவே பசியால் பாதி உயிர் போயிருக்க....
ஸ்டூலில் இருந்து தவறி விழுந்து மீதி உயிரை துறக்கிறாள் யூகி.

என்ன செய்தான் அகிரா?
மிச்சமிருக்கும் குற்றுயிர்கள் என்னவானார்கள்?
படம் பாருங்கள்....குறிப்பாக தாய்மார்கள்.

[எனக்கு பிடித்த]
சூர்யா பிடித்து...
ரமணா,கஜினி பார்த்து.... முருகதாசையும் பிடித்ததால்....
ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்தவர்களே....
பிராயச்சித்தமாக இப்படத்தை பாருங்கள்.

இப்படம் பெற்ற விருதுகள்:
Yūya Yagira won the award for Best Actor at the 2004 Cannes Film Festival.[17] He was the first Japanese actor to win this category at theCannes Film Festival.[18] The film had also won the "Best One" award for Japanese film at the 78th Kinema Junpo Ten Best awards. [19]Additionally, at the same awards, You won the best supporting actress and Yūya Yagira won the best new actor award.[19]
At the 47th Hochi Film AwardNobody Knows won the best film award.[4] Director Hirokazu Koreeda also won the "Best Director" award.[4]

தகவல் உபயம்
விக்கிப்பீடீயா.
நன்றி.