Showing posts with label புத்தகக்கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தகக்கண்காட்சி. Show all posts

Aug 14, 2012

கோவை புத்தகத்திருவிழா 2012


நண்பர்களே...
கோவையில் புத்தகத்திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 17 ம்தேதி முதல் 27 ம்தேதி வரை கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
போன வருடம் நடைபெற்ற அதே இடத்தில்...நஞ்சப்பா ரோடு,கைத்தறி மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த வருடம் விற்பனையில் மிகவும் பின் தங்கி நமது கோவை மானம் காற்றில் பறந்தது.
இந்த வருடம் விற்பனையில் சாதனை படைக்க எல்லோரும் பாடுபடுவோம்.

பதிவர்கள் அனைவரும் இச்செய்தியை தங்கள் பதிவுகளின் வழியாக இத்திருவிழாவை கோவை மக்களிடம் சேர்க்குமாறு தங்கள் தாழ் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
                               
                    புத்தகக்கண்காட்சிக்கு முந்து...
                               டாஸ்மாக்குக்கு பிந்து.

Mar 13, 2012

சிதம்பர ரகசியம்

பிப்ரவரி 24 முதல் மார்ச் 4ம்தேதி வரை சிதம்பரம் புத்தகக்கண்காட்சி... அண்ணாமலை பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
நானும் பங்கு பெற்றேன்.
உலகசினிமாவா!கிலோ என்ன விலை?எனக்கேட்டனர் சிதம்பரம் மக்கள்.
அது போக சிதம்பரத்தில்500ரூபாய்,1000 ரூபாய்க்கு கடுமையான தட்டுப்பாடு.
எல்லா ஊரிலும் 10 ரூபாய் நோட்டுக்குத்தான் சிரமப்படுவோம்.
சிதம்பரத்தில் 10 ரூபாய் நோட்டு மட்டும்தான் பார்க்க முடிந்தது.


சரி வந்தது வந்தோம்...
புண்ணியத்தை தேடுவோம்....
என சிதம்பரம் நடராஜப்பெருமானை தரிசிக்க ....
பவுர்ணமி இரவு அர்த்த ஜாம பூசைக்கு சென்றேன்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் வரும் நேரம் அது என ராம கிருஷ்ணா மட ஸ்டால் நண்பர் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
மிக அளவான கூட்டம்தான்.
வாத்தியங்கள் முழங்க பெருமான் பள்ளியறைக்குப்போகும் காட்சி சிலிர்ப்பை ஏற்ப்படுத்தவில்லை.
பவர்கட்டில் கோயிலே இருட்டாக....
பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில்...
குளிர்ந்த சூழலில்...
அந்தப்பிரகாரத்தில் தெய்வீகம் இருந்தது.
பிரசாதமாக தம்ளரில் பால் கொடுத்தார்கள்.
என் வாழ் நாளில் கண்டிராத சுவை அந்தப்பாலில் இருந்தது.

அடுத்த நாள் காலையில் கோயிலுக்குப்போனேன்.
முக்கிய சன்னிதானங்களில் அர்ச்சகர்கள் பெரிய நோட்டை வைத்துக்கொண்டு  பெயர்,முகவரி,பிறந்த நாள்,நட்சத்திரம் என... இறந்த நாளைத்தவிற மீதி எல்லா டேட்டாவையும் கேட்டு...
 விபூதி பிரசாதம் அனுப்ப...
 சர்வீஸ் சார்ஜாக 1000 ரூபாய் கேட்கிறார்கள்.
 “1000 ரூபாயா! நான் அதை சிதம்பரத்தில் பார்க்கவேயில்லை” என தப்பித்து வந்தேன்.
ஆளரவமற்ற மண்டபத்தில் ஒரு வெள்ளைக்காரன் மட்டும் அங்குள்ள தூண்களை சுற்றி சுற்றி வந்தான்.
அவனோடு நானும் இணைந்து பார்த்தேன்.
நம் முன்னோர்கள் செதுக்கி வைத்த பொக்கிஷங்களை கண்டேன். நாட்டியக்கலையின் அத்தனை அம்சங்களையும் சிற்பமாக்கி வைத்துள்ளார்கள்.
அதன் அழகை வர்ணிக்க கண்ணதாசன் பிறக்க வேண்டும்.


சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் பாண்டியன்... “ பகல் உணவுக்கு புத்தூர் என்ற கிராமத்துக்கு போவோம்” என்றார்.
டவுண்பஸ்ஸில் ஏறி புத்தூர் சென்றோம்.
கொள்ளிடம் தாண்டி இருக்கிறது புத்தூர் என்ற சிற்றூர்.
ஏகப்பட்ட கார்கள்...வேன்கள் என மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
பொறுமையாக காத்திருந்து இடம் பிடித்தோம்.
தலை வாழை இலை போட்டு சோற்றை கொட்டினார்கள்.
மிரண்டு போனேன்.
சைட் டிஷ்ஷாக சிக்கன்,இறால்,வஞ்சிர மீன் வறுவல் வாங்கி சாப்பிட்டேன்.
இதற்க்கு ஈடு இணையான சுவை உலகிலேயே இருக்காது எனச்சொல்லலாம்.
இன்றும் ஒலைக்கொட்டகையில் அமைந்திருக்கும் ஜெயராமன் சாப்பாட்டுக்கடை சுவையின் ரகசியத்தை கேட்டு தெரிந்து கொண்டேன்.
ஜெயராமன் சொந்தமாக படகு வைத்துள்ளார்.
அதில் போய் பிடித்து வரும் இறால்,மீன் மட்டுமே சமையலுக்கு உபயோகிக்கிறார்கள்.
அதனால்தான் பிரஷ்&ஸ்பெஷல் டேஸ்ட் கிடைக்கிறது.

சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சிதம்பரம் கீழ ரத வீதியில் கிருஷ்ண விலாஸ் ஒன்றே கதி... 

Feb 7, 2012

திருப்பூர் வெற்றி



திருப்பூர் புத்தகக்கண்காட்சி மிகப்பிரம்மாண்ட வெற்றி பெற்று விட்டது.
9 வருடங்களின் விடா முயற்சி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது.
வரும் வருடங்களிலும் இந்த வெற்றியை விரிவாக்க மேலும் உழைப்பார்கள் இதை நடத்துகின்ற நல்லவர்கள்.
அனைத்து கட்சியினரும் இணைந்து நடத்திய இந்த வேள்வியில்
எனக்கும் இடம் ஒதுக்கி மிகப்பெரிய கவுரவம் வழங்கி மகிழ வைத்தார்கள்.
திருப்பூர் மக்கள் என்னை கொண்டாடி விட்டார்கள்.
நன்றி திருப்பூர்.

இம்மாபெரும் வெற்றிக்கு திருப்பூர் வலைத்தள நண்பர்கள் மிகப்பெரிய சேவையை செய்துள்ளார்கள்.
எனது ஸ்டாலில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகையில் நண்பர் இயக்குனர் ரவிக்குமாரும்,பதிவுலக நண்பர் மோகன் குமாரும் அவர்களாகவே உள்ளே புகுந்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த அதிரடி உதவியை நான் மிக ரசித்தேன்.
கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு பெற்ற  ரவி.... திரைப்பட உலகில் மகேந்திரனாக ஜொலிக்க வாழ்த்துகிறேன்.
மோகன் எழுத்தாளராக....அதே நேரத்தில் பொருளாதாரத்தில் அம்பானியாக பிரகாசிக்க வாழ்த்துகிறேன்.

தினமும் மாலையில் எனக்கு மிகவும் பிடித்த உலகசினிமாக்களை திரையிட்டு மேலும் உலகசினிமாவுக்கு உரமூட்டினார் நண்பர் தாண்டவக்கோன்.
முதல் நாள் நிகழ்ச்சியாக...Turtles can Fly  எனப்பறந்தவர்கள் கடைசி வரை லாண்ட் ஆகவேயில்லை.
தாண்டவக்கோன் குறும் படங்கள் இனி கேன்ஸ் நோக்கி பறக்க வாழ்த்துக்கள்.
இவ்விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்கள்... புத்தக விழாவை திரைப்பட விழாவாக உருமாற்றம் செய்து விட்டது.
இதே போன்று ஈரோடு புத்தகத்திருவிழாவிலும் உலகசினிமாக்கள் திரையிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! என்ற ஏக்கம் என்னுள் மட்டுமல்ல...பல ஆர்வலர்கள் மத்தியிலும் உள்ளது.

திரையிடப்பட்ட படங்களின் விபரம் இதோ...
Turtles Can Fly
The Kid
Bal
Children Are Watching Us
The Kid with a Bike
Winged Migration
The Stoning of Soraya M
Quest For Fire
Come and See
Adaminte Makan Abu

தினமணி இத்திருவிழாவை வர்ணித்து அரைப்பக்க அளவில் செய்தியாக வெளியிட்டு பத்திரிக்கை தர்மத்துடன் செயல் பட்டது.
தினத்தந்தி,தினமலர் இத்திருவிழாவை பற்றிய செய்தியை புறக்கணித்து அதர்மத்துடன் செயல் பட்டது கண்டிக்க தக்கது.
விளம்பரம் தந்தால்தான் செய்தி வெளியிடுவோம் என்ற அராஜகப்போக்கு அநாகரீகமானது.
செக்ஸ் டாக்டர் விஜயத்தை விளம்பரத்தோடு செய்தி வெளியிடும் நீங்கள் அதே பாணியை புத்தகக்கண்காட்சி நடத்துபவர்களிடமும் எதிர்பார்த்தால் எப்படி? கைபேசியில் செய்திகள் விரைந்து வரும் உலகில் படிக்கும் பழக்கத்தை மறந்து விடாதே...படி..படி..எனத்தூண்டுவதே இது போன்ற புத்தக்கதிருவிழாக்களே!
காலையில் காப்பியுடன் பத்திரிக்கை படிக்கும் தொட்டில் பழக்கம்....
என் தலை முறை... சுடுகாடு போனதும் மறைந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு இப்பழக்கத்தை கடத்த உங்களுக்குத்தான் அதிக கடமை உண்டு.
பத்தாண்டுகளுக்கு மேல் விடாமல் நடத்தப்படும் புத்தகத்திருவிழாக்களுக்கு தினமும் கால் பக்கம் ஒதுக்குங்கள்.
வரவேற்பு அறையில் தமிழக மக்கள் தினமும் உங்களுக்கு இடம் ஒதுக்குவார்கள்.

Sep 15, 2010

மதுரை புத்தக்திருவிழா&கமல்

சிறுஇடைவெளிக்கு காரணம் மதுரை புத்தகதிருவிழா.
உலகசினிமாவுக்காக முதன்முறையாக எனக்கு ஸ்டால் தந்தார்கள்.
சற்று அலட்ச்சியமாகத்தான் சென்றேன்...
சால்ட் 30டிவிடி : பதேர்பஞ்சலி 5டிவிடி என்ற விகிதத்தில்.
மதுரை மக்கள் ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டார்கள்.
விற்றது சால்ட் 10 பதேர்பஞ்சலி 50.

மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி ஒரு விவசாயி வந்தார்.
எங்கே புனுவல்?எங்கே தியோஎஞ்சலோபோலிச்?என்று என்னை மிரட்டிவிட்டார்.
என் ஸ்டாலுக்கு எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஸ்ணன்,ஜெயமோகன்,கலாப்ரியா,முத்துகிருஸ்ணன் ஆகியோர்வந்து வாங்கினார்கள்.
உலகசினிமா விற்பனை அபாரம்.
நன்றி மதுரை.....


இடைப்பட்டநாளில் கமல் பற்றி ஒரு உலகமகா யுத்தமே நடந்திருக்கிறது.
காட்பாதர்தான் தேவர்மகன்.
ஆனால் தரத்தில் காட்பாதருக்கு இணையானது.

அன்பேசிவத்தில் ஒரிஜினலை மிஞ்சியிருந்தார்.
ஒரிஜினலுக்கு ஏன் கிரிடிட் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு...
என் பதில் காப்பிரைட்தான் காரணம்.
ராயல்டி கொடுத்து மாளாது.
தமிழ்நாட்டையே எழுதிகேட்பார்கள் ஹாலிவுட் வியாபாரிகள்.

நூறாவது படமாக ராஜபார்வை எடுத்து ஹாமாம் வாங்க காசில்லாமல் தவித்தது சத்தியம்.
அவர் மட்டும் நடிக்காமல் இயக்கினால் அந்தப்படம் தமிழ்நாட்டுக்கு ஆஸ்கார்,கேன்ஸ் என்றுஅள்ளிக்கொண்டு வந்துவிடும்.

நடிப்புக்கு அவரது மெனக்கெடல் உலகில் எந்த நடிகனிடமும் கிடையாது.
உதாரணம் அபூர்வசகோதரர்கள்.
காலைமடக்கி இரும்புக்கம்பியால் கட்டி குள்ள அப்புவாக்கி நடித்து முடிந்தவுடன் சேரில் தூக்கி வைப்பார்கள்.
சூட்டிங் முடிந்து அனைவரும் சென்றுவிடுவார்கள்.
கமல் மட்டும் அசையாமல் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார் ரத்தஓட்டம் சீராவதற்க்கு.
கமலது அவஸ்தை காணச்சகியாமல் ஆச்சிமனோரமா கதறியேவிட்டார்.

நான் கமலின் திரைஉலகவாழ்வை சகலகலாவல்லவர் என்ற பெயரில் ராஜ் டிவியில் 52 வாரம் தொடராக தயாரித்து வெளியிட்டேன்.
என் வாழ்க்கையின் வசந்த காலம் அது.