Showing posts with label பாலா. Show all posts
Showing posts with label பாலா. Show all posts

Mar 28, 2013

‘எரியும் பனிக்காடை’ ஏன் படமாக்கவில்லை ?


நண்பர்களே...
1969ல்  ‘ரெட் டீ’ என்ற நாவலை பி.எச்.டேனியல் உருவாக்கினார்.
அதை 38 ஆண்டுகள் கழித்து தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார் இரா.முருகவேள்.
இத்தனை ஆண்டுகள் இக்கதை திரைப்படமாக்கவில்லை.
ஏன் முருகவேளோ...அல்லது அவர் சார்ந்துள்ள இயக்கமோ கூட அதைச்செய்யவில்லை.
இத்தனை நாள் குறட்டை விட்டுக்கொண்டிருந்த முருகவேள் இப்போது பாலாவின் பரதேசியை பார்த்து ‘தாம் தூம்’ என குதிக்கிறார்.
இயக்கிய பாலாவுக்கும், கதை-வசனம் எழுதிய நாஞ்சில் நாடனுக்கும் ஜாதீய வர்ணம் பூசுகிறார்.
இன்று கொதிக்கும் முருகவேள் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தது ஏன் ?
அட்லீஸ்ட்...ஒரு குறும்படம் கூட எடுக்கவில்லையே முருகவேள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்கள் முயற்சியால் ‘தேநீர்’ என்றொரு படம் உருவாகி வெளியானது.
கம்யூனிஸ்ட்காரர்கள் கூட அந்த படத்தை பார்க்கவில்லை.
அப்படி ஒரு தரத்தில், படத்தை படுத்தி எடுத்திருந்தார்கள்.
தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் வரலாற்று  அவதிக்கு இணையாக... திரைப்படத்தை காண வந்தவர்கள் வதை பட்டார்கள்.
இந்த வெளக்குமாறுக்கு, கே.பாக்யராஜ் என்ற பட்டுக்குஞ்சலம் கதை-வசனம்.

‘ரெட் டீ’ என்ற நாவல்  மறைந்த ‘விடியல் பதிப்பகம்’ சிவா இல்லையென்றால் தமிழில் எவனும் படித்திருக்க முடியாது.
‘முருகவேள்’ மொழி பெயர்த்து முழி பிதுங்கி அவரே படித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.



தமிழ்நாட்டில்  ‘எரியும் பனிக்காடு’ மூவாயிரம் புத்தகம் கூட இன்று வரை விற்பனை ஆகவில்லை.
அப்படிப்பட்ட ஒரு நாவலை படமாக்க எவனுக்கு துணிச்சல் வரும் ?
பாலாவுக்கு வரும்.

 ‘ரெட் டீ’யை உருவாக்கிய பி.எச்.டேனியல் ஒரு கிருத்துவர்.
தேயிலைத்தோட்டத்தொழிலாளிகள் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட வரலாற்றை மறைத்து நாவலை உருவாக்கி உள்ளார்.
‘ரெட் டீயை’ முனுசாமியோ கந்தசாமியோ உருவாக்கி இருந்தால் அந்த வரலாறு தேயிலைத்தோட்டத்தொழிலாளியின் துயர வரலாற்றோடு சேர்த்தே பதிவு செய்யப்பட்டிருக்கும்.
டேனியல் தூய கிருத்துவர்.
அவரால் எப்படி அந்த வரலாறு எழுத முடியும்.
ஒவ்வொரு வரலாறும்... எழுதுபவன் வரலாறு,சிந்தனை, கொள்கை. கோட்பாடுகள் கட்டாயம் இணைந்தே இருக்கும்.

‘எரியும் பனிக்காட்டில்’ மறைக்கப்பட்டிருந்த வரலாற்றையும் சேர்த்து பாலா படமாக்கி உள்ளார்.
இதில் என்ன தவறு ?
ஆயிரக்கணக்கானோர் அறிந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர் வரலாற்றை கோடிக்கணக்கான தமிழர்கள் அறியும்படியாக ‘பரதேசியை’
பாலா படைத்தது குற்றமா ?

இன்று பாலாவை குறை சொல்லும் இலக்கிய வியாதி கோஷ்டிகள் டேனியல் வாழ்க்கை வரலாற்றை படமாக்குங்களேன் !.
யார் உங்கள் கையை பிடித்து தடுக்கிறார்கள்?
இந்த நாட்டில் கிருத்துவர்கள் எப்படி தோன்றி வளர்ந்தார்கள் என்பதை பதிவு செய்யுங்கள்.
தென் தமிழகத்தில் கடற்கரையோர மீனவக்கிராமங்கள் ஒட்டு மொத்தமாக கிருத்துவர்களாக மாறிய வரலாற்றை படமாக்குங்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், மெஞ்ஞானபுரம் என கிருத்துவ நாடார்கள்
வசிக்கும் ஊரின் வரலாற்றை தோண்டுங்கள்.
ஆயிரம் திரைக்கதைகள் அங்கே கிடைக்கும்.
குறை சொல்லி காலம் ஓட்டாதீர்கள் ‘இலக்கிய வியாதிகளே’.

1969ல் உருவாக்கப்பட்ட ரெட் டீயை 2012ல் படமாக்கிய பாலாவை போற்ற வேண்டாம்.
குறை  சொல்லாதீர்கள்  ‘கோட்டிக்காரர்களே’.
கோட்டிக்காரர்கள் = மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

Mar 22, 2013

மத மாற்றத்தை படமாக்கலாமா பாலா ?


நண்பர்களே...
பரதேசியை பாராட்டிய அன்பர்கள் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர்... கிருத்துவ மதத்துக்கு கொத்தடிமைகளை மாற்ற முயற்சித்ததை படமாக்கியதற்கும்...
படமாக்கிய விதத்திற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
எரியும் பனிக்காட்டில் அப்படி ஒரு வரலாறு எழுதப்படவில்லை என்ற வாதத்தையும் வைத்துள்ளார்கள்.
பாலா ஒரு வரலாற்று தவறை செய்தது போல் சித்தரித்து உள்ளார்கள்.
மிக நுட்பமாக பாலா  ‘மத மாற்ற வரலாற்றை’ பதிவு செய்திருப்பதை பெரும்பாலும் கவனிக்க தவறி விட்டனர்.

பாலா கொத்தடிமைகளை கிருத்துவ மதத்துக்கு மாற்றப்பட்ட சரித்திரத்தை ஏன் படமாக்கினார் ? எனக்கேட்டவர்கள்...
ஏன் படமாக்கக்கூடாது எனச்சொன்னார்களா?
தேயிலைத்தோட்டத்தின் ரத்த சரித்திரத்தை பரதேசியில் பதிவு செய்த பாலா அதே கால கட்டத்தில் நிகழ்ந்த மத மாற்றத்தை பதிவு செய்யா விட்டால்தான் அது மாபெரும் வரலாற்று பிழையாகி இருக்கும்.

கொத்தடிமைகளை ஏன் கிருத்துவ மதத்துக்கு மாற்றினார்கள்?
இந்த  கேள்விக்கு விடை தெரிய வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும்.

[ 1 ] ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடங்குவோம்.
ரோம சாம்ராஜ்ஜியத்தில் கடவுளையும் மன்னனையும் இணையாக கருதி வழிபட்டார்கள் மக்கள்.
மன்னர்களுக்குள் நடந்த யுத்தங்களாலும், நிர்வாக சீர் கேடுகளாலும் மக்கள் சொல்லொணா துயரத்தில் இருந்தார்கள்.
மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
ரோம சாம்ராஜ்ய வரலாறைக்காண...

ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி புரட்சி செய்த மாவீரன் ஸ்பார்ட்டகஸ்.
முதல் புரட்சியே முற்றிலும் கோணலாகி ஸ்பார்ட்டகஸ் சிலுவையில் அறையப்பட்டான்.


SPARTACUS \ 1960 \ ENGLISH \ DIRECTED BY STANLEY KUBRICK.

ஸ்பார்ட்டகஸ் வரலாற்றை இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் அற்புதமாக படமாக்கி உள்ளார்.
[ இப்படத்தை தனது மகள் ஸ்ருதியுடன் 30 தடவைக்கு மேல் பார்த்ததாக கமல்
ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார் ]

[ 2 ] ஸ்பார்டகஸ் மறைந்து, சரியாக 71 வருடம் கழிந்து இயேசு கிறிஸ்து பிறந்தார்.
மனித குல அவலங்களை காணச்சகியாமல் தனது புரட்சிக்கருத்துக்களை மக்களிடையே பரப்பினார்.
அவரையும் சிலுவையில் அறைந்து கொன்றது மன்னராட்சி.


THE GOSPEL ACCORDING TO ST.MATTHEW \ 1964\ ITALY \ PIER PAOLO PASOLINI

இயேசு என்ற புரட்சியாளரின் வரலாற்றை இயக்குனர் பசோலினி மிகச்சரியாக படமாக்கி உள்ளார்.
இயேசு கனல் தெறிக்க உரையாற்றுவதையும்,
சாட்டையெடுத்து அக்கிரமக்காரர்களை விளாசித்தள்ளுவதையும் காட்டி இயேசு ஒரு புரட்சிக்காரன் என காட்சிப்படுத்தி இருப்பார் பசோலினி.

[ 3 ] இயேசு மறைந்த பின்னர் அவரை பின் தொடர்ந்தவர்கள் ரகசிய இயக்கமாகவே 300 ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த காலக்கட்டத்தை முதலாம் கிருத்துவக்காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

300 ஆண்டுகள் இரகசிய இயக்கமாக இருந்த கிருத்துவ மக்களை இணைத்து தனது சாம்ராஜ்யத்தை தக்க வைத்து விரிவு படுத்த...
‘கான்ஸ்டண்டைன்’ என்ற மன்னன் கிருத்துவ மதத்தை முதன் முதலாக  ‘அரசு மதமாக’ அங்கீகரித்தான்.
சர்ச் உருவானது.
இயேசுவை உயிர்த்தெழ வைத்து,
புரட்சியாளாரை புனிதராக்கி... கடவுளின் அவதாரமாக்கி...
புதிய பைபிள் உருவாக்கப்பட்டது.
அரசும் சர்ச்சும் இணைந்து இயங்கியது.
மக்களை மதம் மாற்றும் முயற்சியை சர்ச் முன்னெடுத்துச்சென்றது.

[ 4 ] கான்ஸ்டன்டைன் காலத்துக்கு பின்னர் உள்ள கிருத்துவத்தை
 ‘இரண்டாம் கிருத்துவக்காலம்’ என வரையறுக்கிறார்கள் வரலாற்றாளர்கள்.

ஐரோப்பிய கிருத்துவ நாடுகள், தங்கள் காலனிகளை விரிவு படுத்தினர்.
அங்கெல்லாம் சர்ச்சும் தன் ஆட்களை அனுப்பி மக்களை மத மாற்றம் செய்தது.
இந்த வரலாற்றை ஒரு  ‘உலக கவிஞன்’ பதிவு செய்தான் கவிதையில்.

அவர்கள் வந்தார்கள்.
எங்களை மண்டியிடச்சொன்னார்கள்.
மண்டியிட்டோம்.
கண்களை  மூடச்சொன்னார்கள்.
மூடினோம்.
ஜெபிக்கச்சொன்னார்கள்.
ஜெபித்தோம்.
ஜெபித்து விட்டு கண்களை திறந்து பார்த்தோம்.
எங்கள் கையில்  ‘அவர்கள் பைபிள்’ இருந்தது.
அவர்கள் கையில் ‘எங்கள் நாடு’ இருந்தது.

காலனியாதிக்கமும் மதமாற்றமும் ஏன் ஒருங்கே நிகழ்த்தப்பட்டதை ஆய்வு செய்தார்கள் தத்துவவாதிகள்.
இதுதான் வரலாறு.


[ 5 ] ஐரோப்பிய தத்துவ ஞானி  ‘கிராம்ஸ்சி’ [ ANTONIO GRAMSCI ] கூறுகிறார்...

“ ஒவ்வொரு அரசும் தனக்கான குறிப்பிட்ட வாழ்க்கை முறையை உருவாக்கி..
அதற்குறிய குண நலன்களோடு குடிமகனை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறது.
பழைய நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து உதறித்தள்ளி 
புதிய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் வளர்த்தெடுக்கிறது.
இந்தப்பணிகளை செவ்வெனச்செய்ய  இரண்டு வழிமுறைகளை கடைப்பிடிக்கிறது.  
  
[ A ] அரசு இயந்திரம் [ STATE APPARATUS ]  = அரசு, ராணுவம், காவல்துறை போன்றவைகள்.

[ B ] கருத்துருவ இயந்திரம்  [ IDEOLOGICAL APPARATUS ] = மத நிறுவனங்கள், நீதி மன்றங்கள்,
அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், 
மருத்துவ மனைகள், ஊடகங்கள், குடும்பங்கள் போன்றவைகள்.

[ ஊடகம் = பத்திரிக்கை,டிவி,சினிமா, இணையம் போன்றவைகள் ]

கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவிற்குள்
நுழையவும்.
கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

[ 6 ] வெள்ளையர்கள் வியாபாரிகளாக வந்து நாடு  பிடித்து நமது வளத்தை சுரண்டினார்கள்.
அந்தப்பணிக்காக இந்தியாவில் வைஸ்ராய், படைத்தளபதிகள், சிப்பாய்கள்,
மத குருமார்கள், தோலான் துருத்தி என தங்கி இருந்த மொத்த வெள்ளையினர் 7,000 பேர் மட்டுமே.

சுரண்டலின் ஒரு பகுதிதான் தேயிலைத்தோட்ட உருவாக்கம்.
அதற்காக கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்ட சாலூர் கிராமத்து மக்களின் வாழ்க்கையை ‘தீமாக’ உருவாக்கி பரதேசியை படைத்துள்ளார் பாலா.

[ 7 ] எனவே இத்திரைக்கதையை ‘சப்ஜக்ட் டிராஜிடி’ இலக்கிய பார்முலாவில் வடிவமைத்துக்கொண்டார்.
சப்ஜக்ட் டிராஜிடி = தனி மனிதன் தனது துன்பங்களிலிருந்து வெளியேற வழியிருந்தும் அதற்காக சிந்திக்காமலும் செயல்படாமலும் அத்துனபங்களுக்குள்ளேயே உழன்று கொண்டு இருப்பது .

[ 8 ] கொத்தடிமைகளை ‘பணப்பெட்டியை’ காட்டி குறுகிய காலத்திற்குத்தான் அடிமையாக வைத்திருக்க முடியும்.
நிரந்தரமாக வைத்திருக்க மதமாற்றமே மருந்து என ‘மருத்துவம்’ மூலமாக முயற்சி நடந்ததை பாலா படமாக்கி உள்ளார்.

[ 9 ] மருத்துவன் தனது ஐரோப்பிய காதலியுடன் வருகிறான்.
கொத்தடிமைகளின் மருத்துவ மனையும், குடிசைகளும்,சுற்றுப்புறச்சூழலும் சுகாதாரம் இல்லாமல் இருப்பதைக்கண்டிக்கிறான்.
விரைவில் சரி செய்து விட வேண்டும் என முழங்குகிறான்.
ஒன்றையுமே சரி செய்யாமல்...
மத மாற்றத்தை மட்டுமே செவ்வனச்செய்கிறான்.


[ 10 ] சாலூரில் விபூதி காட்சியளித்த நெற்றியில் சிலுவைக்குறியிடப்படுகிறது.
நாக்கிலும் இடப்படுகிறது.
அதற்காக நாக்கைத்தொங்கப்போட்டு அலையும் காரெக்டரை குள்ளமாகவும்...
வெள்ளைக்காரியை உயரமாகவும் போட்ட பாலாவின் குசும்பை மிகவும் ரசித்தேன்.

[ இத்தாலிக்காரியிடம் நாக்கைத்தொங்கப்பட்டதன் விளைவை
நாமும், ஈழத்தமிழர்களும் இன்றும் அனுபவித்து வருகிறோம்]

[ 11 ] மருத்துவனும் வெள்ளைக்காரியும் குத்தாட்டம் போட்டது எதற்காக ?
எந்த இசையில் நமது ஆட்கள் மயங்குவார்களோ...
அந்த இசையை இசைத்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து காரியம் சாதித்தவர்கள் மதமாற்றவாதிகள்.

[ 12 ] உணவை மருந்தாக்கி வாழும் கலாச்சாரத்தை உடைக்க,
‘பன் ரொட்டியை’ வீசுகிறார்கள்...பன்றிகளுக்கு வீசுவதைப்போல.
இதன் நீட்சியாகத்தான் இன்று பிஸ்ஸாவும்,பர்கரும் ஊடகம் வழியாக படையெடுத்து வந்து தாக்கி நம் உணவு கலாச்சாரத்தை அழித்துக்கொண்டிருகின்றன.

[ 13 ] வெள்ளைக்காரி,  நம்மவனை மயக்கி நாடகமாடுபவள் என்பதற்கு ‘குத்தாட்டப்பாடலில்’ அவளது  ‘டோப்போ’ கழந்து விழுவதை காட்சிப்படுத்தி இருப்பார் பாலா.
மருத்துவன் - வெள்ளைக்காரி இவர்களுக்குள் தாம்பத்ய உறவு கிடையாது என்பதை மருத்துவன் தனியாக இரவில் மருத்துவ மனையில் தூங்கிக்கொண்டிருப்பதை காட்சிப்படுத்தி இருப்பார்.

[ 14 ] கொள்ளை நோயில் கொத்தடிமைகள் பலியானதை சிரித்துக்கொண்டே அச்செய்தியை வெள்ளைக்காரர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒருவன் மகாத்மாவையும் தரக்குறைவாக பேசுவான்.
அப்போது ஒரே ஒரு பெண் குரல் அவர்களை கண்டித்து மகாத்மாவை துதிக்கும்.
வெள்ளையர்களில் ‘அன்னிபெஸண்ட்’ அம்மையார் போன்ற மாணிக்கங்களும் இருந்தார்கள் என பாலா பதிவு செய்துள்ளார்.

[ 15 ] பேஸ்புக்கில் நாக்கைத்தொங்கப்போட்டு அசிங்கப்பட்ட எழுத்தாளன் பரதேசியில் கிளைமாக்ஸ் காட்சியில் ‘ஒளிக்கீற்று’இல்லை என உளறியதை கண்டிருப்பீர்கள்.

கதாநாயகன் இறுதிக்காட்சியில் உயரமான மலைப்பாறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்துகிறான்.
கூலி கிடைக்காததால் கிராமத்து ஹோட்டல் முன்பாக தரையில் உட்கார்ந்து புலம்பியதற்கு நேர் மாறாக இக்காட்சியைப்படைத்துள்ளார் பாலா.
இறுதிக்காட்சியில் கதாநாயகன் பெருங்குரலெடுத்துக்கத்துவதை ஆங்கில இலக்கியத்தில் ‘கிளாரியன் கால்’ என குறிப்பிடுவார்கள்.
அந்தக்கத்தல் தொழிலாளர்கள் காதில் ஒலிக்கிறது என்பதை காமிரா காட்சிப்படுத்தி இருக்கிறது.

[ 16 ] ஓங்கி ஒலிக்கும் குரலோடு பல குரல்கள் இணையும் போது புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு.


[ 17 ] “ மார்க்ஸிய சித்தாந்தத்தை முன்னெடுக்கும் புரட்சிகர அமைப்புகள்...
வர்க்கப்போராட்டத்தை முன்நிறுத்தும் அமைப்புகள்... மூலமாக மட்டுமே 
அரசு இயந்திரங்கள் & கருத்துருவ இயந்திரங்களின் இடுக்கிப்பிடியிலிருந்து தப்பிக்க முடியும்”.
 - ஐரோப்பிய மார்க்சிய தத்துவ ஞானி ‘பவ்லண்ட்சாஸ்’  
[ NICOS POULANTZAS ]
பவ்லண்ட்சாஸ் பற்றி அறிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
பவ்லண்ட்சாஸ் பற்றி மேலும் படிக்க...

நடந்த வரலாறை யாராலும் மாற்றி எழுத முடியாது. 
‘பாலாவின் பரதேசி’ இது வரை இந்தியத்திரையில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்த ‘மார்க்ஸிய திரை இலக்கியம்’.

அடுத்தப்பதிவில் சந்திப்போம். 

Mar 20, 2013

‘பரதேசியின் குறையும்...நிறையும்.


நண்பர்களே...
பரதேசியை மூன்று முறை பார்த்து விட்டேன்.
ஒவ்வோரு முறை தரிசனத்திலும் எனக்கு வரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
பரதேசியை நிறை சொல்லி பாராட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையிலும்...
குறை சொல்பவர்கள்  'பெரியப்பாவுக்கு இருக்கும் வைப்பாட்டிகளை விட’ குறைவான எண்ணிக்கையில் இருப்பதையும் உணர முடிகிறது.
குறை சொல்லும் கூட்டத்தில்  கொடியேற்றுபவன் யார் எனவும்
அறிய முடிகிறது.

பாலாவின் படங்களில் பொதுத்தன்மை நிலவுகிறது என பொத்தாம் பொதுவாக
குற்றம் சொல்கிறார்கள்.
அப்படி பார்த்தால்...  ஹிட்ச்ஹாக், ராபர்ட் பிரஸ்ஸன்,குரோசுவா என அனைவரையும் இந்த வட்டத்துக்குள் கொண்டு வந்து சாத்தி சாகடிக்கலாம்.

குறை சொல்லும் கோமான்கள் ஆரண்ய காண்டத்தையும், ஆடுகளத்தையும்
ஒப்பிட்டு பரதேசிக்கு எஃப். ஐ. ஆர் எழுதுகிறார்கள்.
இவர்கள் எழுதும் எப்.ஐ.ஆர்களுக்கு  காலம் தீர்ப்பெழுதும்.


ஒரு ரசிகனாக பரதேசியில் உள்ள குறைகளை சொல்ல அனுமதியுங்கள்.
மிகப்பெரிய குறை வேதிகா.
அவளது நடிப்பும், உடல் மொழியும் சகிக்கவில்லை.
வேதிகா  பிதாமகன் லைலாவின் அப்பட்டமான ஜெராக்ஸ்.

 ‘பிதாமகன் லைலாவை’ ரசிக்க முடிந்தது.
காரணம் அந்த கதாபாத்திரம் பிரஷ்ஷாக இருந்தது.
 ‘நந்தா லைலாவிற்கு’ நேர் எதிராக இருந்தது.

அதர்வா கூட  ‘பிதாமகன் சூர்யாவை’ சில இடங்களில் பிரதிபலித்து கடுப்பேற்றினான்.
இவர்கள் குறை குடங்களாக காட்சியளித்த காட்சிகளுக்கு...
முழுப்பொறுப்பும் பாலாவையே சேரும்.

அதே போல் பந்தியில் உட்கார்ந்தவனுக்கு பறிமாறாமல் இருப்பதும்,
பரிகசிப்பதும் அபத்தக்காட்சிகள்.
பந்தியில் உட்கார்ந்து விட்டால் பரம எதிரியைக்கூட எழுப்ப மாட்டார்கள் .
 “காலையிலிருந்தே வெறும் வயித்தோட வேலை செய்றீயே” என
அதட்டும்  ‘ஒட்டுப்பெருக்கியின் பெரியம்மை’ போன்றவர்களைத்தான் யதார்தத்தில் சந்திக்க முடியும்.

இசையை பற்றி எல்லோருமே தர்ம அடி கொடுத்து விட்டார்கள்.
அந்தக்கூட்டத்தில் முதல் ஆளாக அடிக்க ஆசைப்பட்டது நாந்தான்.
இளையராஜாவை விட சிறந்த பின்னணி இசை,
அமைக்க ஆள் அமையும் வரை திரும்ப அவரிடமே போங்கள் பாலா.
தப்பில்லை.

மொத்தப்படத்தையே  குறியீடாக அமைத்த பாலாவிற்கு பலத்த கரகோஷம் செய்யுங்கள்.
இலங்கை தமிழர்கள்,
மலேசியா,சிங்கப்பூர் மற்றும் வளை குடா நாடுகளுக்கு வளைத்துச்செல்லப்படும் தமிழர்கள்,
கார்ப்பரேட் கங்காணிகளால் வதைக்கப்படும் சாப்ட்வேர் சந்ததிகள்...
என பாதிக்கப்படும் பாட்டாளிகளின் அனைவரது வாழ்க்கைக்கும்
இப்படம் குறியீடே.

எனக்கு கலைஞரும் கங்காணியும் ஒன்றாகப்படுகிறார்கள்.
காரணம் கலைஞரின் கடந்த கால வரலாறு.
இருந்தாலும் இப்போது,
வெள்ளைக்காரியை எட்டி மிதிக்க காலை ஓங்கியபடி
கூட்டணியை  முறித்ததும்...
‘கங்காணியின் பொட்டி காட்டும் நாடகமும்... ஒன்றா ?
காலம்தான் சொல்லும்.



பரதேசியை மீது வைக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் உள்ள அம்சங்களும் அதற்கான விளக்கங்களும்.

சாலூர் மக்கள் என்ன ஜாதி என்று காட்டப்படவில்லை.

ஜாதிப்பெயரை சொல்ல சென்சார் இப்போது அனுமதிப்பதில்லை.
ஏனென்றால் நம் நாட்டில் இப்போது சாதிகள் இல்லை.
ஒழிந்து விட்டது.
எனவே இனி சினிமாக்கரன் ஜாதி பெயரை சொல்லி கதை விட முடியாது.
இருந்தாலும் சாலூர் மக்கள் எந்தப்பிரிவைச்சார்ந்தவர்கள் என்பதை பாலா
விசுவலாக காட்டி உள்ளார்.

அக்காலத்தில் நிலவிய ஜாதிக்கொடுமைகள் சொல்லப்படவில்லை.

தனது ஜாதியை சேர்ந்த  ‘ஒட்டுப்பெருக்கியை’  ‘அங்கம்மாவின் தாய்’ மருமகனாக ஏற்க மறுப்பது பொருளாதார ஏற்ற தாழ்வே.
ஆனால்  ‘ஒட்டுப்பெருக்கி’ வேலை தேடிப்போன இடத்தில்,
ஹோட்டலில்  ‘மேட்டுகுடியினர்  இடத்தில்’ உட்கார்ந்ததுக்கு அடி வாங்குகிறானே...அது ஜாதிக்கொடுமை.

தாழ்த்தப்பட்டவர்கள் தரையிலும், உயர் குடியினர் உயரத்திலும் உட்கார்ந்து சாப்பிடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தோளில் ஒட்டுப்பெருக்கி கை வைத்ததற்கு கங்காணி பார்க்கும் பார்வையில்
ஜாதீயக்கொடுமை இருக்கிறது.

எரியும் பனிக்காடை ஏன் அப்படியே படமாக்கவில்லை ?

எதற்கு அப்படியே எடுக்க வேண்டும் ?.

சினிமா என்பது விசுவல் மீடியா.
அதற்கு தோதுப்படும் காட்சிகள், கதாபாத்திரங்களை மட்டுமே ஒரு படைப்பாளி எடுத்துக்கொள்வான்.

எரியும் பனிக்காட்டிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் இது வரை அதற்கு ஒரு பதிவாகிலும் எழுதி வெளிச்சம் போட்டுள்ளீர்களா?

ஏன் சாலூர் மக்களை வறண்ட பகுதிகளிலேயே நடத்திக்கூட்டிப்போக வேண்டும்.

கங்காணிக்கு ஜெட் ஏர்வேசில் இடம் கிடைக்கவில்லை!.


 கங்காணி, தனது அடிமைகளை மற்றவர்கள் கண்ணில் படாமல்
அழைத்து செல்லவே விரும்புவான்.

தண்ணீரை ஏன் வாய் வைத்து குடிக்க வேண்டும்?

ஊரில் ‘தேங்காய் சிரட்டையில்’குடித்த மக்கள்,
மாக்களாக மாறி விட்டார்கள் என்பதற்கே,
நீர் நிலைகளில் வாய் வைத்து குடிகின்ற ஷாட்டை போட்டார் பாலா.

சாலூர் பஞ்சப்பிரதேசமா ?

நிச்சயமாக இல்லை.
அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
அவர்கள் ‘ரெமி மார்ட்டின்’ குடிக்க வழியில்லை என கத்தவில்லை.
விமர்சிப்பவர்கள் தங்கள் வாழ்வியலோடு சாலூர்வாசிகளை ஒப்பிட்டு தப்பாக கணிக்கிறார்கள்.

போகிற வழியில் ஒரு கோயில் கூடவா இல்லை ?

1930களில் இருந்த கோயில்கள் இன்று எப்படி இருக்கிறது ?
பார்த்தாலே வாந்தி வரும் வர்ணம் அடிக்கப்படாத கோயில்களை காட்ட முடியுமா உங்களால்?

அட... அட்லீஸ்ட்... டெம்ப்ளேட் இல்லாமல்... பதிவெழுதிக்காட்டுங்கள்.

மிக முக்கியமான ‘மத மாற்றம்’ பற்றிய விமர்சனங்களுக்கு
அடுத்தப்பதிவில் பதில்.

Mar 19, 2013

‘பரதேசி’ - சாருவுக்கு பதிலடி.


நண்பர்களே...
பரதேசி படத்தை காவியம் என நாடே கொண்டாடிக்கொண்டிருக்க
‘போலி  இலக்கியவாதி’ சாரு நிவேதிதா மட்டும் வழக்கம் போல் தனியாவர்த்தனம் வாசித்திருக்கிறார்.
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மலம் தின்னும் பன்றியின் வாயில் நரகல் வாடைதானே வீசும்.


பரதேசி படம் பாலாவின் படைப்புகளிலேயே உச்சம்.
இந்திய திரைப்படங்களின் உச்சம் எனக்கொண்டாடி இருக்கிறார்  ‘இலக்கியகர்த்தா’ எஸ்.ராம கிருஷ்ணன்.

உலகசினிமா என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதிய,
செழியனின் காமிரா கை வண்ணத்தில் பரதேசியை உலக சினிமாவாக்கி இருக்கிறார் பாலா.
அறிமுக கலை இயக்குனர் சி.எஸ்.பாலச்சந்தர் கை வண்ணத்தில் உருவான சாலூர் கிராமத்தில் செழியனின் ‘ஸ்டெடிகேம் காமிரா’...
கிராமம் முழுக்க சுற்றிப்பார்க்க  ‘இடுவை’ வழியாக பயணிக்கிறது.
இடுவை = வீடுகளுக்கிடையேயான குறுகிய சந்து.

1930களில் ஒரு தெக்கத்தி கிராமத்தின் அதிகாலைப்பொழுதை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
திண்ணை வைத்த வீடும், தூங்கி கொண்டிருக்கும் ஒரு பரதேசியும் கவனமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கோடாலி தூக்கி  ‘சோலிக்கு’ புறப்படுபவன்,
தெருவைப்பெருக்கி தண்ணி தெளிப்பவள்,
அம்மி அரைப்பவள் என மிக நுணுக்கமாக தெக்கத்தி கிராமம் ‘தினப்பொழுதுக்கு’ தயாராவதை செதுக்கி இருக்கிறார் பாலா.
இதைத்தான் ‘7 ஸ்டார் கிராமம்’ என கிண்டலடித்திருக்கிறது
‘இலக்கிய கூமுட்டை சாரு’.
 ‘ஆன் லைனில் பிச்சையெடுத்து’ தாய்லாந்துக்கு...
‘சோலி’ பாக்கப்போகும்  ‘பரதேசிக்கு’ கிராமத்தை பற்றி என்ன தெரியும்?.
*********************************************************************************
சோலி = வேலை, உடலுறவு
இரு பொருளில் பயன்படுத்தப்படும் கிராமத்து சொல்லாடல்.

“ சோலி முடிஞ்சதும் வீட்டுக்கு வரணும்.
சாராயக்கடைக்கு போனீரு... விளக்குமாறு பிஞ்சுரும்”

“ அந்த பச்சை புள்ளய சோலி பாத்து வயத்துல லோடை ஏத்திட்டான்”
*********************************************************************************
கலப்பை ஏந்தி ஒருவன் கூட கிளம்பவில்லை என்பதை பாலா காட்சி படுத்தி இருப்பது  ‘முண்டக்கலப்பை சாருவுக்கு’ தெரியுமா?

 ‘நுவான்ஸஸ்’ பரதேசியில் இல்லையென அங்கலாய்த்திருக்கிறது ‘நுனிப்புல்’சாரு.
ஒரு பானை சோத்துக்கு...இந்தா பிடி ஒரு சோறு.
மகளுக்கு கருப்பட்டியும் எள்ளும் போட்டு இடிப்பாள் கதாநாயகியின் தாய்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தேதியை கணக்கிட்டு கிராமத்து தாய் செய்யும்
‘எள்ளுருண்டை’ அது.
மாத விடாய் அசவுகரியங்களை போக்கும் அருமருந்து அது.
உணவையே மருந்தாக்கிய எளிய கிராமத்து வழி முறை.

இப்படி மகளை கண்ணும் கருத்துமாய் கிராமத்து தாய் கண்காணித்து வளர்ப்பதால்தான்...
‘தேதி தப்பியதை’ வைத்து  குழந்தை உருவானதை கணக்கிட முடிகிறது.
பொருளாதாரத்தால் தாழ்த்தப்பட்டவனாகிய  ‘ஒட்டுப்பொறுக்கி’ வாரிசை வயிற்றில் சுமப்பதைக்கண்டு கொதித்து தூக்கிப்போட்டு மிதிக்கிறாள் தாய்.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் சேர்ந்து கூத்தடிச்ச  ‘கூந்தல் பனை’ சாருவிற்கு
இது புரியுமா ?

கூந்தல் பனை = ஒரு பிரயோஜனம் இல்லாமல் ஆள் மட்டும் வளர்ந்து அறிவு வளராத ஜந்துக்களை கிராமத்தில் இந்த பெயரிட்டுதான் திட்டுவார்கள்.



எடிட்டர் கிஷோருடன் இணைந்து,
ரஷ்யத்திரை மேதை ஐஸன்ஸ்டைன் பாணியில் மாண்டேஜ் ஷாட்களை படைத்துள்ளார் பாலா.
சாலூர் கிராம மக்கள் பெரும்பாலோர் கங்காணி பேச்சை நம்பி ஊர்வலமாய் கிளம்பிப்போகும் காட்சி.
 [1 ] சூரியன் அஸ்தமிப்பதை அண்மைக்காட்சியாக்கி ஒரு ஷாட்.
[ 2 ] அடுத்த ஷாட்... அனைவரும் வெட்ட வெளியில் உறங்கிக்கிடப்பார்கள்.
இந்த இரு ஷாட்டையும் இணைத்து பாருங்கள்.

[ 3 ] இவர்கள் வாழ்வு அஸ்தமித்து...
செத்து சுண்ணாம்பாகப்போகிறார்கள் என்ற காவிய அர்த்தம் உதயமாகவில்லையா ?

ஐஸ்ன்ஸ்டைன் மாண்டேஜ் தியரியை விளக்கி எழுதப்பட்ட ஹேராம் பதிவைக்காண்க...
ஹேராம் = 018 பதிவைக்காண்க.

உலகின் தலை சிற்ந்த பத்து இயக்குனர்களில் ஒருவர் மைக்கலேஞ்சலோ அண்டனியோனி.

LA AVENTURA \ 1960 \ ITALY \ DIRECTED BY MICHELANGELO ANTONIONI.



இவரது காவியங்களில் ஒன்றான ‘லா அவென்சுரா’ என்ற படத்தில் கதாநாயகன் தனது காதலியுடன் ஒரு தீவுக்கு பிக்னிக் போவான்.
காதலி காணாமல் போய் விடுவாள்.
காவலர், நண்பர்கள், பொது மக்கள் அனைவரும் பரபரப்பாக தேடுவார்கள்.
ஊடகம் முதற்கொண்டு அனைவரும் அதைப்பற்றியே பேசுவார்கள்.
அவள் கிடைக்கவே மாட்டாள்.
படத்தின் ஆரம்பக்காட்சிகளிலேயே இப்பரபரப்பு தோன்றி மறைந்து விடும்.
படத்தின் எஞ்சிய காட்சிகளில் அவளைப்பற்றிய பேச்சோ செய்தியோ இருக்காது.

சாரு போன்ற குறைமதியுள்ள ஒரு ரிப்போர்டர் அண்டனியோனியிடம் கேட்டான்.
“அவள் என்னவானாள் ?”
அண்டனியோனியின் பதில்...
“எனக்கும் தெரியாது”.

ஏன் இது போன்று ஒரு காட்சி அமைத்தார் அண்டனியோனி ?
ஒரு விஷயத்தை பரபரப்பாக பேசுவோம்.எழுதுவோம்.
அதை விட வேகமாக மறந்து போவோம்.
அதைக்கடந்து புதிய பரபரப்புக்கு தாவி விடுவோம்.
உ.ம் : 2ஜி ஊழல்.

பரதேசியில் இப்படி ஒரு காட்சி அமைத்திருக்கிறாரே பாலா.
கண்ணுக்கு புலப்படவில்லையா ?
கதாநாயகனின் பெரியப்பா மரணமடைய அவரது சடலத்தை மறைத்து அவரது  மகள் திருமணத்தை ஊரே நடத்துகிறது.
பந்தி நடக்கிறது.
விருந்தாக  ‘நெல்லுச்சோறு’ படைக்கப்படுகிறது.

படத்தில் பெரியப்பா சடலத்தின் இறுதிச்சடங்குகள் காட்டப்படவில்லை.
காட்டப்பட்டிருந்தால் அது சாதாப்படம்.
காட்டப்படாததால்  ‘பரதேசி’ காவியப்படம்.

வாழைப்பழத்தை உரித்து வாயில் சவைத்து மென்று...
அதைத்தான் சாரு போன்ற மசாலா மண்டைகளுக்கு வாயில் ஊட்ட வேண்டும்.
பாலா போன்ற படைப்பாளிகளின் படம்...
சாரு போன்ற மர மண்டைகளுக்கு புரியாமல் கதறும் ரகசியம் இதுதான்.


‘பரதேசி’ கிளைமாக்சில் ‘ஒளிக்கீற்று’ இல்லையென புலம்பிய
‘கருத்துக்குருடன்’ சாருவுக்கு பதில் அடுத்தப்பதிவில்.

இலக்கியகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணனின் பரதேசி பற்றிய படைப்பைக்காண...
எஸ்.ராவின் பரதேசி பற்றிய பதிவு

Mar 15, 2013

பரதேசி = பாலாவின் பிரதேசம்


நண்பர்களே...
பாலாவின் பரதேசியை முதல் காட்சி பார்த்து விட்டேன்.
கதி கலங்கிப்போய் இருக்கிறேன்.
என்ன எழுதுவது ?
எதை எழுதுவது ?
இப்படி ஆரம்பித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
எல்லோரும் சற்று விலகி நில்லுங்கள்.
பாலாவிடம் நான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.


அவன் இவன் பார்த்து விட்டு...கோபத்தில் ‘அவன் இவன் இயக்கியது எவன் ?என எக்காளமாக கேட்டவன் நான்.
‘வாடா வக்காளி’ என என்னை  ‘வதைத்து’ அனுப்பி விட்டார் பாலா.
 ‘பாலாவுக்கு கிரியேட்டிவ் இம்பொடன்ஸ் வந்து விட்டது’ என எழுதிய என்னை எட்டி உதைத்து  ‘என் கிரியேட்டிவிட்டியை பாரடா’ என பறையடித்து விட்டார்.
எனக்கே இப்படியென்றால்  ‘டீஸரை’ பார்த்து கொதித்த  ‘மனிதகுலமாணிக்கங்கள்’ கதி...

இது வரை வந்த தமிழ் சினிமாவின் குப்பைக்கோபுரங்கள்  அனைத்தையும் மண்ணோடு மண்ணாக்கி
அந்த களத்து மேட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் பாலா.
தமிழ் சினிமாவின் போலி படைப்பாளிகளை குறைப்பிரசவமாக்கி
சவமாக்கி இருக்கிறார் பாலா.

நம் வாழ்வையும் வளத்தையும் சூறையாடிய வெள்ளைப்பேயை விலா எலும்பு முறிய வேப்பிலையால் விரட்டி விரட்டி அடித்து வெளுத்தெடுத்திருக்கிறார் பாலா.
மாரியின் பெயராலும்...
மேரியின் பெயராலும்...
பாட்டாளிகளை சுரண்டிய பாதகர்களின்  பட்டையை உரித்தெடுத்திருக்கிறார்.
கூட்டணி போட்ட ‘பாயையும்’ விடவில்லை பாலா.

‘பீல் குட் மூவி’ மட்டுமே பார்க்கும்  ‘பால் குடி ரசிகர்கள்’ பரதேசி ஓடும் தியேட்டர் இருக்கும் சாலையில் கூட செல்லாதீர்கள்.
நீலகிரி மலையில்...நீளமான வரிசையில் பாலா அடுக்கி வைத்திருக்கும் பிணங்களின் வாடையிலேயே மயக்கம் போட்டு விடுவீர்கள்.

தமிழ் ரசிகர்கள் ஒரு தடவையாவது இப்படத்தை தியேட்டரில் பார்த்து
பாலாவிற்கு மரியாதை செய்யுங்கள்.
இப்படம் தோற்றால் மீண்டும் பாலா ‘அவன் - இவன்’ எடுக்க வேண்டிய நெருக்கடி வரும்.
ஏற்க்கெனவே 14 கோடி நஷ்டத்தை சரிக்கட்டவே ‘அவன் - இவன்’ எடுத்தார் பாலா என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் சொன்னார்.


உலக சினிமா போல்...தமிழ் சினிமா ஒன்று கூட இல்லை என்று ‘பண்டிதர்கள்’
புளுத்தினால் அவர்கள் புடுக்கை அறுத்து பாலா கையில் கொடுங்கள்.
அதுவே பாலாவிற்கும்...
அவரது குழுவினருக்கும்...
மிகச்சிறந்த பாத காணிக்கை.

இப்படம் பார்த்தவர்கள்...
இனி டீ குடிக்கும் போது...டீயில் ‘பரதேசிகளின்’ இரத்தம் கலந்திருப்பதை கண்டால்...
கோப்பையின் கீழ் பாலா என பெயர் இருப்பதையும் காணலாம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Mar 14, 2013

பாலாவை பாராட்டுகிறேன்.


நண்பர்களே...
தமிழ் சினிமாவை உலக சினிமா தரத்துக்கு உயர்த்திப்பிடிக்கும் வல்லமைகளில் பாலாவும் ஒருவர்.
நான் கடவுள் தந்த அதிர்ச்சிக்கு இணையாக...
உலகில் எந்த உலக சினிமாவும் இது வரை தந்ததில்லை.

செம்பட்டையன், கறை படிந்த பல்லன், மாறு கண்ணன், நர மாமிச பட்சிணி என அவர் வீதியோர விளிம்புகளையே கதாபாத்திரங்களாக காட்சிப்படுத்துவதை வழமையாக கொண்டவர் பாலா.
கமல் - ரஜினி கையில் கிடைத்தால் கூட அவர்களையும் மாற்றிச்சித்தரிக்கும்
மந்திரக்காரன் பாலா.



படைப்பாளிகள் உள்ளும் புறமும் வேறாகத்தான் இருப்பார்கள்.
புறத்தோற்றத்தை புனுகு பூசி காட்டுபவர்கள் மத்தியில் பாலா மட்டும்தான் தனியாக நிற்கிறார்.
தன்னைப்பற்றிய பிம்பத்தை தானே உடைத்தெறிவதில் அந்த போராளிக்கு  நிகர் யாருமே கிடையாது.
‘ தனக்கு  ‘மனநிலை பிறழ்வு’ இருக்கு’
‘கஞ்சா பழக்கம் இருக்கு’
என அதிரடியாக தன்னை எழுத்தில் வெளிப்படுத்தியவர் பாலா.

 ‘பரதேசியின்’ அதிரடியான டீஸரை வெளியிட்டு புயலை கிளப்பி உள்ளார்.
அனைத்துமே புனைவு காட்சிகள்தான்.
நிழலை நிஜமாக்கி அனைவரையும் நம்ப வைத்து...
கொதிக்க வைத்து...
ஜெயித்து விட்டார்.

இயக்குனர் இங்மார் பெர்க்மன் ஸ்டைலில் டீசரை அமைத்துள்ளார் பாலா.
உதாரணமாக ஒரு பெண் தனது  ‘குறியை’ உடைந்த பாட்டில் கொண்டு சிதைப்பதை காட்சிப்படுத்தி நம்மை பதற வைப்பார்.
அடுத்தக்காட்சியிலேயே அந்தப்பெண் ‘டாக் டாக்’கென்று  நடப்பதை காட்டி முந்தைய காட்சியை மறுப்பார் பெர்க்மன்.
பார்வையாளராகிய நாம்தான்...
‘ஓ..அந்தக்காட்சி...அவளது கற்பனைக்காட்சி’
என்ற விளக்க உரையை நமக்கு நாமே  எழுதிக்கொள்ள வேண்டும்.
அல்லது....பெர்க்மனுக்கு படமெடுக்கத்தெரியவில்லை என பதிவெழுத வேண்டும்.
விஸ்வரூபத்துக்கு அப்படித்தானே சிலர் பதிவெழுதினார்கள்.

இப்படி ஒரு விளம்பரத்தை...
எந்த படைப்பாளியும் கனவில் கூட கற்பனை செய்ய மாட்டான்.
பாலாவுக்கு மட்டும்தான் இந்த கற்பனை ஊற்றெடுக்கும்.
திரையில் வடித்துக்காட்டும் ஆண்மையும் இருக்கும்.

மாபெரும் அதிர்ச்சிக்கு ஆடியன்சை தயார் செய்யும் உத்தியாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
திரையில் வெடிக்கும்  நிபுணனின்... கதகளியாட்டத்தை காணத்தயாராகி விட்டேன்.

வெள்ளையன் கசக்கி பிழிந்த ரத்ததில் ஒரு துளியை
ஆவணப்படுத்த முனைந்திருக்கும் பாலாவுக்கு...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
பற்றியெறியும் பனிக்காட்டை வெள்ளித்திரையில் காணுங்கள்.

 ‘அவன் இவன்’ இயக்கியது எவன் ? என உரிமையோடு கோபித்த எனக்கு
பாசத்தோடு பாராட்ட கடைமையும் இருக்கிறது.
பரதேசியில் வாய்ப்பளித்திருப்பார் பாலா என ஆணித்தரமாக நம்புகிறேன்

சர்ச்சை கிளப்பிய காணொளி காண...


இந்திய இயக்குனர்  ‘அனுராக் காஷ்யப்’ பாலாவைப்பற்றியும்...
பரதேசி படத்தை பற்றியும் புகழ்ந்துரைப்பதை
தமிழ் சப்-டைட்டிலுடன் காணொளியில் காண்க...



அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 19, 2011

அவன் இவன்- இயக்கியது எவன்?

இன்று காலையில் அவன் இவன் பார்க்கப்போனேன்.
பாலா படம் என்றால் முதல் நாளே பார்த்து விடுவேன்.
வெள்ளிக்கிழமை பார்க்க முடியவில்யே என்ற ஏக்கம் சனிக்கிழமை ஜூரமாக வடிவெடுத்தது.
ஜன்னி வருவதற்க்குள் பார்த்து விட எண்ணி ஞாயிறு காலை பத்து மணிக்காட்சி பார்த்து விட்டேன்.
அரங்கு நிறைந்து வழிந்ததுசந்தோசமாக இருந்தது.
அந்த சந்தோசம் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வடிந்து விட்டது.

டைட்டிலிலேயே படத்தின் தலையெழுத்தை குறியீட்டாக காண்பித்தார்கள்.
ஒரு காங்கிரீட் சுவர் உதிர்ந்து நொறுங்கி குட்டிச்சுவரான பின் அவன் இவன் என்ற எழுத்து கிராபிக்சில் தோன்றியது.
முதல் காட்சியிலேயே ஆரம்பித்த சொதப்பல் படத்தின் இறுதி வரை நீடித்ததில் பாலாவின் கடின உழைப்பு தெரிந்தது.

விஜய்யின் குருவி,வேட்டைக்காரன்,சுறா போன்ற படங்களோடு போட்டி போட்டு ஜெயித்திருக்கிறார் பாலா.

பிதாமகனில் வரும் காட்சிகளை யாருமே காப்பியடிக்காத ஆதங்கத்தில் அக்காட்சிகளை மீண்டும் இப்படத்தில் நுழைத்து வெற்றி பெற்று இருக்கிறார் பாலா.
தனக்குத்தானே சூனியம் வைப்பதில் கலைஞரை மிஞ்சி விட்டார் பாலா.


விசாலை ஒண்ணரைக்கண்ணனாக்கி,ஆர்யா தலையில் காப்பர் கலர் பெயிண்ட் அடித்தால் படம் நூறு நாள்.... என்றுயாரய்யா உனக்கு சொன்னார்கள்?
நான் கடவுள் படத்தில் வரும் சிறு காரெக்டர்கள் இன்றும் மனதில் ஆட்சி புரிகையில் இப்படத்தில் வரும் அனைவரும் டெப்பாசிட் இழந்து விட்டார்கள்.

எனக்கு இந்தப்படத்தில் வந்த கோபம் ராம நாராயணன் படம் பார்க்கும் போது வராது.

காதல் ஒவியம்,நிழல்கள் தோல்வியடைந்த வேகத்தில்...ரசிகர்கள் மேல் உள்ள கோபத்தில் பாரதிராஜா வாலிபமே வா வா என்ற குப்பையை வீசீனார்.
அதற்க்கு நிகராக ஒரு படம் கொடுக்க ஆசைப்பட்டாயா பாலா?

இது என் கோபம் மட்டுமல்ல...ஒட்டு மொத்த தமிழர்களின் கோபம்.
இதை நீ உணர்ந்து நல்லபடம் கொடுப்பாய் என நம்புகிறேன்.

உனது குப்பை படம் ரீலிசாக மாணிக்கத்தை[ஆரண்யகாண்டம்] வெளியேற்றிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள்.

எந்த ஒரு படைப்பாளிக்கும் ஒரு கட்டத்தில் கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை வந்துவிடும்.
உங்களுக்கு வரவில்லை என்பதை அடுத்தப்படத்தில் நிரூபியுங்கள்.
.