Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

May 22, 2013

அவள் அப்படித்தான் = கூட்டு முயற்சி.


நண்பர்களே...
1978ம் வருட தீபாவளி அன்று,
கமல் நடித்த மூன்று படங்கள் வெளியாகியது.
1 சிகப்பு ரோஜாக்கள் - இயக்கம் : பாரதிராஜா
2 மனிதரில் இத்தனை நிறங்களா - இயக்கம் : ஆர்.சி. சக்தி
3 அவள் அப்படித்தான் - இயக்கம் : ருத்ரையா
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியானாலும்,
காலத்தை வென்றது ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே!

கதைக்கான மூலக்கருவை ருத்ரையா உருவாக்க,
திரைக்கதையாக்கத்தில் இயக்குனர் கே.ராஜேஷ்வர் பணியாற்ற,
வசனத்தை அனந்து அவர்களும், எழுத்தாளர் வண்ண நிலவனும் சேர்ந்து
எழுதி இருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் அர்ப்பணிப்போடு உழைத்த...
பல நல்ல கலைஞர்களை இப்பதிவில் அடையாளம் காணலாம்.

‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கிய ருத்ரையா,
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
அப்போதே கமலிடம் நட்பாக இருந்த காரணத்தால்,
அவரிடம் எளிதாக கால்ஷீட் வாங்கி விட்டார்.
கமல்தான் அன்று தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரம்.
தனது  ‘பிஸி ஷெட்யூலில்’...கிடைத்த  நேரத்தை,
‘அவள் அப்படித்தானுக்கு’ ஒதுக்கி கொடுத்து...
படத்தை முடிக்க உதவி இருக்கிறார்.


படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஸ்ரீப்ரியாவிடம் கமலே பேசி,
அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீப்ரியாதான் அன்று முன்னணி நட்சத்திரம்.
அவர் நடித்த ஆட்டுக்கார அலமேலு வெள்ளிவிழா கொண்டாடிய நேரம்.
அவர் அப்போது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.
‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வெறும் முப்பதாயிரம் ரூபாய் மட்டும் சம்பளமாக  பெற்றிருக்கிறார்.

சூட்டிங் முதல் நாள் அன்று,
அன்றைய கால வழக்கப்படி தனது வீட்டிலிருந்து சேர் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.
ஆனால் கமல்,ரஜினி உட்பட யாருக்குமே சேர் கிடையாது.
சூழலைப்புரிந்து கொண்டு அடுத்த நாள் முதல் சேர் கொண்டு வராமல் எல்லோரையும் போல் தரையில் அமர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

சாதாரண மெஸ்ஸில் இருந்து கொண்டு வரப்பட்ட,
சுமாரான சாப்பாடையே அனைவரும் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

கமலும்,ஸ்ரீப்ரியாவும் சூட்டிங், டப்பிங் அனைத்திலும் ரீடேக் போகாமல்,
ஒரே டேக்கில் முடித்துக்கொடுத்து பங்காற்றி இருக்கிறார்கள்.


ரஜினியும் அப்போது வளர்ந்து வரும் கலைஞராக இருந்தாலும் அவரும் பிஸியான நடிகர்தான்.
இயக்குனர் கே. பாலச்சந்தரின் வலது கரமும்,
கமலின் ஆசானுமான அனந்து அவர்கள்,
ரஜினியிடம் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

அந்தக்காலத்தில் இசையமைப்பாளர்தான்,
தயாரிப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும்.
இசையமைப்பாளர் இளையாராஜா அலுவலகத்துக்கு வருகிறார் என்பதற்காக அவசரம் அவசரமாக பேன் வாங்கி மாட்டி இருக்கிறார்கள்.
அது வரை படத்தயாரிப்பு அலுவலகத்தில் பேன் கூட கிடையாது.
ஆனால் அவர் வரும் நேரம் கரண்ட் இல்லை.
அந்த புழுக்கத்திலேதான்,
இன்றும் குளிர்ச்சியையும் இனிமையையும் தரும் டியூனை உருவாக்கி இருக்கிறார்.
இசைக்கருவிகளில்... பியானோதான் இளையாராஜாவுக்கு ‘பெட்’.
அவர் பியானோ இசையில் போட்ட ‘மாஸ்டர் பீஸ்களில் ஒன்று’ ...
‘உறவுகள் தொடர் கதை’ என்ற பாடலும் ஆகும்.
[ மற்றொன்று ‘ஹேராம்’ படப்பாடலான ‘நீ பார்த்த பார்வை’]
இப்பாடலில், இளையராஜாவின் இசையில் ‘மோனாலிஸா’ தன்மையை உணரலாம்.
கதையின் மையக்கருத்து,
ஆண்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்.
அந்த கருத்தாக்கம் , இப்பாடலில் மெல்லிய இழையாக நெய்யப்பட்டிருக்கும்.

கமல்- ரஜினி - ஸ்ரீப்ரியா - இளையாஜா கூட்டணியில் வந்த
‘இளமை ஊஞ்சலாடுகிறது'.... மெகா ஹிட் திரைப்படம்.
எனவே இப்படம் எளிதில் வியாபாரம் ஆகி விட்டது.
படம் வெளியான போது,
‘இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்ற படத்தை எதிர் பார்த்து சென்ற
பாமர ரசிகர்கள் தியேட்டரில் கத்தி கலாட்டா செய்திருக்கிறார்கள்.

படம் வெளியான நேரம்,
திரைப்பட மேதை மிருணாள் சென் சென்னைக்கு வந்திருக்கிறார்.
தற்செயலாக தியேட்டரில்  ‘அவள் அப்படித்தான்’ படம் பார்த்திருக்கிறார்.
ஒரு கலைத்திரைப்படம் இப்படி புறக்கணிக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு
மனம் வெதும்பி பத்திரிக்கையாளர்களை வரவழைத்து,
தனது மனக்குமுறலை வெடித்திருக்கிறார்.
‘நல்லதோர் வீணையை புழுதியில் கிடத்தியதை’ சாடி அவர் கொடுத்த பேட்டி பத்திரிக்கைகளில் வெளியானது.
பத்திரிக்கைகள் தொடர்ந்து கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,ருத்ரையாவிடம் பேட்டி வாங்கி வெளியிட்டு கலை ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்தன.
படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது.

ஒளிப்பதிவு மேதை  ‘மார்க்கஸ் பார்ட்லே’ ,
அந்த வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை
‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தை தேர்வு செய்து அறிவித்து விட்டார்.
காரணம் வண்ணப்படங்களுக்கு  மட்டும்தான்,
அப்போது விருது வழங்கி வந்தார்கள்.
எனவே  ‘அவள் அப்படித்தான்’ ,
மார்க்கஸ் பார்ட்லே பார்வைக்கே வரவில்லை.
ஆனால் ‘சிறந்த படத்திற்கான’ தேர்வுப்பட்டியலில் இருந்த படங்களை திரையிட்ட போது,
‘அவள் அப்படித்தானை’ பார்த்து இருக்கிறார் மார்க்கஸ் பார்ட்லே.
படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதை கண்டு,
இப்படத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட வேண்டும்
என அடம் பிடித்திருக்கிறார்.
எனவே முதன் முறையாக ‘கருப்பு - வெள்ளை’ படத்திற்காக
தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டது.
அதன்படி,  ‘அவள் அப்படித்தான்’ ஒளிப்பதிவாளர் நல்லுசாமிக்கு
விருது வழங்கப்பட்டது.
சிறந்த படமாக ‘அவள் அப்படித்தான்’ படத்தை,
தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.

அவள் அப்படித்தான் = நல்ல கலைஞர்களின் கூட்டு முயற்சி.

இப்பதிவில் இடம் பெற்ற தகவல்கள்,
ஒளிப்பதிவாளர் திரு.நல்லுசாமி பேட்டியாக,
அந்திமழை இதழில் வெளி வந்தவை.
அனைத்திற்கும் நன்றி.
மேலும் விரிவான தகவல் பெற கீழ்க்கண்ட இணைப்பிற்கு செல்லவும்.

http://andhimazhai.com/news/view/nallusamy-12-4-2013.html

இளையராஜாவின் பாடலை நல்லுசாமியும் ருத்ரையாவும் சேர்ந்து காவியமாக்கியதை காணொளியில் காண்க.


                                                                                                                                                                                                         



CNN - IBN டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை இந்தியாவின் தலை சிறந்த  நூறு படங்களில் ஒன்றாக தேர்வு செய்து பெருமை சேர்த்துள்ளது.
இப்படம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பிடியாவை அணுகவும்.

http://en.wikipedia.org/wiki/Aval_Appadithan

இன்று முன்னணியில் இருக்கும் கலைஞர்கள் ஏன் இது போன்ற கலை படைப்புகள் வர உதவுவது இல்லை ?
காசு...பணம்...துட்டு...money...money... என்பதில் மட்டும் குறியா ??
சிந்திப்போம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Sep 3, 2012

Hey Ram- கமல் இந்துத்வா வெறியரா? \ 2000 \ ஹேராம் =019

நண்பர்களே...
‘ மீண்டு ’ வந்து விட்டேன்....

ஹேராமில்...
இப்போது நாம் காணவிருக்கும் காட்சிமிக முக்கியமானது...
கமல் ஒரு இந்துத்வா  வெறியர் என்பதற்கு முக்கிய சாட்சியாக இக்காட்சியையே  ‘கமல் எதிர்ப்பாளர்கள்’ குறிப்பிடுவார்கள்.
இது உண்மையா ? என ஆராய்ந்ததில் இரண்டு உண்மைகள் கிடைத்தன.
அந்த உண்மைகளை பதிவின் இறுதியில் சொல்கிறேன்... வாருங்கள்.

பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமியிடம் இருந்து கிடைத்த  ‘ஞானத்தால் ’
சாகேத் ராமின்  ‘ வெறி ’ அடங்கி  ‘ நெறி ’ ஆக்கிரமிக்கும் நேரம்...
தடை போட வருகிறது  ‘விதி’ அல்லது  ‘தருணம் ’.


சாகேத்ராமும்...அபயங்கரும்...துப்பாக்கியோடு ஒருவரை ஒருவர் எதிர் கொள்கிறார்கள்.
அபயங்கருக்கு பக்கபலமாக வந்திருக்கும் கூட்டத்தின் கைகளில் ஆயுதங்கள் பளபளக்கின்றன...கண்களில் வன்முறை பளபளக்கின்றன.
யார் இவர்கள் ?

சரித்திரத்தை பக்கம் ...பக்கமாக படித்து நான் தெரிந்து கொண்டதை சில வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்.

மனித சரித்திரத்தில்...முக்கிய பங்கு வகிக்கிறது மதம்.
 ‘ மிஷினரி ’ அமைப்பு கொண்ட  ‘ மதமே ’...தோன்றிய காலத்திலிருந்து  தொடர்ந்து உயிரோடு இயங்கி வருகிறது .
இந்த உண்மையை தெரிந்து கொண்டவர்கள்....
‘ இந்து மதத்திற்கும் ’ இப்படி ஒரு மிஷினரி அமைப்பை 1925 ல் தொடங்கி இருக்கிறார்கள்.
அதுவே  ‘ஆர்.எஸ்.எஸ் ’.


ராணுவப்பயிற்சியும்...கட்டுப்பாடும்...ஒரு சேர கற்பிக்கப்பட்டு...
செலுத்தப்பட்ட கூட்டத்தை...  சாகேத்ராம்   எதிர் கொள்வதை...
‘ இயக்குனர் ’ கமலின்,  ‘ ஷாட் கம்போஷிசனை ’ வர்ணிக்க எனது ஒட்டு மொத்த திரையறிவும் தேவைப்படுகிறது.
ஆயுதங்களோடு, ஆயத்தமாக ராணுவ அணிவகுப்போடு...
அணி வகுத்திருப்பதை...
கேமராவின்  ‘பேணிங் ஷாட்டும்’...
இளையராஜாவின்  ‘பேங்க் பேங்க் ’ இசையும்...
பார்வையாளர்களுக்கு ‘ வந்திருப்பவர்கள் யார் ? ’என அடையாளம் காட்டுகிறது.

இக்காட்சியின் அனைத்து ஷாட்களிலும்... ‘ போர்ஸ் & பவர் ’ இருக்கிறது.
இது  ‘திருவின்’ திருவிளையாடல்.

ராமின் பூணூலை அடையாளம் கண்டு கொண்ட அபயங்கர்... ‘அபிவாதயே ’ சொல்ல ஆரம்பிக்கிறான்.
 ‘அபிவாதயே’ என்றால் என்ன ?... என்பதை எனது பதிவுலக நண்பர் தெளிவாக விளக்கினார்.
அவருக்கு என் நன்றி.
 ‘அபிவாதயே ’ என்பது பிராம்மணர்களின் விசிட்டிங் கார்டு.
தனது குலம்..கோத்திரம்...இன்னார் வாரிசு...எனச்சொல்லி பெரியவர்களை வணங்கும் பழமையான முறை.
இன்றைய தலைமுறை... ‘அபிவாதயேயை’ சுருக்கி   ‘ஹாய்’
என இரண்டெழுத்து மந்திரத்தால் வழிபடுகிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் நண்பர்.

 ‘அபிவாதே’ ஆங்கில மொழியாக்கம்....

Of Kaushik, son of Vishwamitra... 

Of Kaushik, thrice blessed... 

Of Kaushik, the high priest
of Yajur Veda...

Of Kaushik,
l bear my lineage.

அபயங்கர் அபிவாதயே சொல்லும் போது...
‘ செமி சர்க்கிள் ட்ராலி ஷாட்டில் ’படம் பிடித்து காட்டியுள்ளார்
‘ இயக்குனர் ’ கமல்.
 ‘ வந்திருப்பவர்கள் குறுகிய வட்டத்தில் இருப்பவர்கள் ’ என அடையாளப்படுத்தி உள்ளார்.
ஏன் ? அரை வட்டம் ஷாட் போட்டு நிறுத்தினார்?...
அந்த வட்டத்தில்  ‘ இது வரை ’ சாகேத்ராமும் இல்லை.
 ‘ படைப்பாளி ’ கமலும் இல்லை.
இருந்திருந்தால்...  ‘ முழு வட்டம் ஷாட் ’ போட்டு முடித்திருப்பார்
‘ இயக்குனர் ’ கமல்.
இந்த குறுகிய வட்டத்தில்  ‘ படைப்பாளி கமல் ’ இல்லாமல் இருப்பதை
‘ தெளிந்த ’ மனம் படைத்தவர்கள் மட்டுமே உணர முடியும் .
         Vande Materam
(Salutation to the Mother Goddess) 

Would you like
to hunt with us?

 ‘வேட்டை’ எனபது மன்னர் ஆட்சியின் குறியீடு.
மிருகங்களை வேட்டையாடுவது மன்னாராட்சி பொழுது போக்கு. ‘வேட்டையை’பற்றி... ஹேராமில் பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

 ‘வேட்டைக்கு’ வர விரும்பவில்லை என்பதை...
 ‘ பின்னோக்கி நகர்ந்து... உடல் மொழியால்’ உணர்த்துகிறார் நடிகர் கமல்.
முதலில் சாகேத்ராம்-அபயங்கரை  ‘ஷாட் கம்போசிஷேனில்’ நெருக்கமாக காண்பித்தவர்...
 ‘பின் வாங்கலுக்குப்பிறகு’....
 ‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போசிஷேன் ’ [Size Of The Shot ] மெத்தடை உபயோகித்து...
சாகேத்ராம்---------அபயங்கர் இடைவெளியை அதிகப்படுத்தி காண்பித்திருப்பார்.

 ‘ சைஸ் ஆப் த ஷாட் ’ என்பது சினிமா மொழியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு கதாபாத்திரம் எந்த அளவு கம்போஸ் செய்யப்பட வேண்டும் என்பதை கதைச்சூழலை பொறுத்து...இயக்குனர் தீர்மானிக்கும் விஷயம்.
ஹேராமில், ‘ படைப்பாளி கமல் ’....  ‘ சைஸ் ஆப் த ஷாட்’ மூலம் சொல்லும் விஷயம்...
 ‘ வன்முறையிலிருந்து விலகி நிற்க விரும்புகிறான் சாகேத்ராம் ’
ஏனென்றால் ஹேராமில்...இந்த காட்சிக்கு பிறகு... சாகேத்ராம்  ‘சுயநலத்துடன்’ எந்த இடத்திலும் வன்முறையில் இறங்கவில்லை.

*********************************************************************************

‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போஷிசனில் ’ என்னை மிகவும் கவர்ந்த
‘ இன்னொரு லட்டை’ ...
தின்ன ஆசை இருந்தால்.... தொடருங்கள்.

தமிழ் திரையுலகின் மாமேதைகளுள் ஒருவரான மகேந்திரனின்
 ‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் அக்காட்சி இருக்கிறது.
 “ என்னை அநாதையாக்கி விட்டுப்போகாதே ” என கெஞ்சி நிற்பார் ரஜினி.
இங்கே ரஜினியை பெரிதாக  ‘ஷாட் கம்போசிஷேன்’ செய்திருப்பார் மகேந்திரன்.
ரஜினியை விலக்கி ஷோபா செல்லும்போது...ஷோபாவை பெரிதாக்கி...ரஜினியை சிறிதாக்கி ஷாட் கம்போசிஷேசன் செய்திருப்பார்.
ஷோபா மனம் மாறி...  ‘ பாசமலர்கள்’  ஐக்கியமான பிறகு...
நார்மல் கம்போசிஷேஷன் செய்திருப்பார் மகேந்திரன்.

தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களில்  ‘முள்ளும் மலரும்’ ஒன்று என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

**********************************************************************************
இனி அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

 “ ஐயா...எங்களுக்கு இரண்டு உண்மை தெரிஞ்சாகணும் ”

“ அடடே..மறந்து விட்டேன்.

ஒன்று...கமல் ஜாதி,மத வெறியன்....
 என இக்காட்சியை வைத்து  ‘ கெக்கேபிக்கியவர்கள் ’....
நடிகர் கமல்...இயக்குனர் கமல்...படைப்பாளி கமல் என பிரித்துப்பார்க்க பழகாதவர்கள்....என்ற உண்மை.

இரண்டு... ‘அலைந்து திரிபவனுக்கு’....
‘சினிமா மொழி’.... தெரியாது என்ற உண்மை.

ஹேராமின் இக்காட்சியை... காணொளியில் காண்க....

முள்ளும் மலரும் காணொளி காண...

Apr 18, 2012

குருவுக்கு வாழ்வளித்த சிஷ்யன் ரஜினி


சிவாஜிராவ் என்ற கண்டக்டரை ரஜினிகாந்த் ஆக்கிய பிரம்மா கே.பாலச்சந்தர்.
அறிமுகப்படுத்திய இயக்குனர்களை... தயாரிப்பாளர்களை...
 திரும்பியே பார்க்காத தமிழ் திரை உலகில்....நன்றிக்கடன் செலுத்துவதில் கர்ணனாக இன்றும் ஜொலிப்பவர் ரஜினிகாந்தே.

கவிதாலயா என்ற நிறுவனம் மூலம்.... பல படங்களை தாயாரித்து இயக்கினார்  பாலச்சந்தர்.
ரஜினியை வைத்து இயக்குவதை தில்லு முல்லுவோடு நிறுத்தி கொண்டார்.
எஸ்.பி.முத்துராமன் போன்ற மசாலா பட இயக்குனர்கள் மூலம்...
 ரஜினி படங்களை தயாரிக்க மட்டுமே செய்தார்.

நூறு படங்களை தயாரித்த கவிதாலாயா நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது.
அத்தனை படங்களின் வரவு செலவை பார்த்தது கவிதாலாயா நடராஜன்.
அந்த ஊழல் பெருச்சாளி.... சமயம் பார்த்து பல கோடிகளை சுருட்டிக்கொண்டு பிரமிட் என்ற நிறுவனத்தை தொடங்கி படம் தயாரிக்க துவங்கியது.
[ஆனால் பாலச்சந்தர் வயிற்றில் அடித்து துவங்கிய... பிரமிட் நிறுவனம்... தயாரித்த ஒரு படம் கூட ஒடவில்லை]

.கடனுக்காக...கடல் மாதிரி இருந்த பங்களாவை விற்று...
 ஒரு பிளாட்டில் வாடகைக்கு சரஸ்வதி குடியேறினாள்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட அன்று நான் தூங்கவில்லை.
ஒரு வாரம் நான் விட்ட சாபங்கள் நடராஜனை எழு ஜென்மங்களுக்கும் துரத்தும்.
பாலச்சந்தர் ரசிகனான நானே கொதித்து போனேன்.
ரஜினிக்கு இருக்காதா!

அண்ணாமலையாக அவதாரம் எடுத்தார்.

குசேலன் மூலமாக மீண்டும் குருவை குபேரனாக்கிய கண்ணன் ரஜினி.

போன பதிவில் லகுட பாண்டி என்ற கொசு விடாமல் துரத்தியது.
விஷயத்தை.... முந்தைய பதிவின்.... பின்னூட்டத்தில் காண்க...
அலோ...மிஸ்டர் லகுட பாண்டி...
எம்.ஜி.யார் முதல்வராக இருந்த நேரம்...
மயிலை குருபாதம் என்றொரு தயாரிப்பாளர்....அதிமுக ரவுடி.
அவரை ரஜினி காரில்....ஒட...ஒட...  விரட்டி....
 கொல்ல முயற்ச்சித்தார்.
காம்பவுண்ட் சுவரில் மோதிநிறுத்தினார்.
ஜஸ்ட்... மிஸ்... குருபாதம்.
இந்த கொலை முயற்ச்சி கேஸ் பற்றி தெரியுமா?....லக்க்க்க்குட பாண்டி.

தனது கல்யாணம் பற்றிய செய்தியை பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தார்.
திருப்பதியில் நடக்கும் கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாது என்றார்.
 “வந்தால்”....எனக்கேட்ட பத்திரிக்கையாளரிடம் “செருப்பால் அடிப்பேன்” என்ற உண்மையான மனிதன் ரஜினி.
நிஜத்தில் நடிக்க தெரியாது.
அந்த திறமை அவருக்கு கிடையாது.
கமலுக்கும் கிடையாது.
அதனால்தான் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்கிறார்கள்.

தமிழ்நாடே கொதித்துப்போய் இருக்கும் மின்வெட்டு பிரச்சனைக்காக ரஜினி குரல் கொடுத்து போராடினால் தமிழ்நாடே அவரது பின்னால் திரண்டு நிற்க்கும்.
ஆனால் அவர் எப்போதும் போல...
 கோச்சடையானில் ஒளிந்து கொண்டார்..
இந்த ரஜினியை... எனக்கு என்றுமே பிடிக்காது.

Apr 16, 2012

ரஜினியை காப்பாற்றிய சிவாஜியும்...சிவாஜி வீட்டை காப்பாற்றிய ரஜினியும்...


ரஜினி குறுகிய காலங்களில் ஸ்டார் அந்தஸ்தை அடைந்து விட்டார்.
பட்டை சாராயம் சாப்பிட்ட மனிதனுக்கு.... ஸ்காட்ச், பாட்டில் பாட்டிலாக கிடைத்தது.
போதை, எதில் கிடைத்தாலும்... அதை தேடித்தேடி சுவைக்க ஆரம்பித்தார்.
கஞ்சா,ஜர்தா பீடா,ஜாதிக்காய்...என ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை மனிதன்.
ஒரு நாளைக்கு... மூன்று கால்ஷீட்டும் கொடுத்து விட்டு....
 [எட்டு மணி நேரம்... ஒரு கால்ஷீட்] 24 மணி நேரமும் ஒய்வறியா உழைப்பை வாரி வழங்கினார்.
ரசிகர்களும்...தயாரிப்பாளர்களும்...மீடியாவும் விடாமல் ரஜினியை துரத்தினார்கள்.
அவர் ஏறிய உயரத்தை தாங்க முடியாமல்... தள்ளாடினார்.

மன நிலை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில்...
 நினைத்தாலே இனிக்கும் படத்துக்காக சிங்கப்பூர் சென்ற போது... பாலச்சந்தரையே அடிக்க கை ஒங்கி விட்டார்.
 அடிக்க வந்தது ரஜினி அல்ல...மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை.... எனக்கண்டு கொண்ட இயக்குனர் பாலச்சந்தரும்...சிவாஜியும் சேர்ந்து...
 தங்களுக்கு வேண்டிய டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளித்து நார்மலாக்கினார்கள்.
ஆனால் மீடீயாதொடர்ந்து பைத்தியக்கார பட்டம் கட்டி கொண்டே இருந்தது.

தயாரிப்பாளர்கள் ரஜினியை வைத்து படமெடுக்க தயங்கிய காலத்தில்...
 சிவாஜி, தன்னுடைய படங்களில் ரஜினியை நடிக்க வைத்து வாழ்வளித்தார்.

எம்ஜியார் முதல்வரானதால்... சிவாஜி, தமிழ் சினிமாவில்....
 ஏக போக சக்ரவர்த்தியாக கொடி கட்டி பறந்த காலம்.
ரஜினியை... நான் வாழ வைப்பேன் ...என கை கொடுத்த சிவாஜி...
 அதே பெயரில் ஒரு படமும் கொடுத்தார்.
அந்தப்படம் ரஜினிக்கு மறு வாழ்வு கொடுத்தது.

அதற்க்கு பிறகு வந்த நல்லவனுக்கு நல்லவன்... சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உறுதி செய்தது.
அதற்க்கு முன்னால் பில்லா,ரங்கா,பொல்லாதவன் என கொடியவர்கள் பெயரிலேயே ரஜினி நடித்தார்
ந.ந படத்துக்குப்பிறகு ரஜினியின் படப்பெயர்கள் மாறின .
தர்மதுரை,மனிதன்,கை கொடுக்கும் கை.... என பாசிட்டிவ் பெயர்களுக்கு மாறினார்.
படங்களின் பெயருக்கேற்றார் போல் தானும் மாறினார்.

சிவாஜியின் படங்களை... சிவாஜி பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரித்த போது அந்தப்பணிகளை சிறப்பாக செய்தவர் அவரது தம்பி.சண்முகம்.
அவரது மறைவுக்குப்பிறகு அந்தப்பதவிக்கு வந்தவர் சிவாஜியின் மகன்
ராம் குமார்.
இவரது நிர்வாகத்தில் சிவாஜி பிலிம்ஸ் அதல பாதளத்துக்கு வந்தது.
சிவாஜி என்ற சிங்கமும்,பிரபு என்ற சிங்கக்குட்டியும் வீட்டில் இருக்க...
 சின்னி ஜெயந்த் என்ற பூனைக்குட்டியை வைத்து எந்த மடையனாவது படம் எடுப்பானா?
ஆனால் ராம் குமார் எடுப்பார்.

சிவாஜியின் மறைவுக்குப்பிறகு இன்னும் மோசமாக செயல் பட்டதன் விளைவு சிவாஜியின் கனவு இல்லமான அன்னை இல்லம் விற்பனைக்கு வந்தது.
விஷயம் கேள்விப்பட்டு ஒடி வந்த ரஜினி கை கொடுத்தார்.
பிரபுவின் தயாரிப்பில் சந்தரமுகி வந்தது...
மற்றதை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.

ராம் குமார் நல்லவர்...மிகவும் நல்லவர்.
அந்த ஒரு தகுதி போதாதா...வியாபாரத்தில் தோற்க...!
யானை படுத்தாலும் குதிரை மட்டம்.
அவசரத்தேவைக்காக சிவாஜியின் தோட்டத்தை விற்றார்.
வாங்கிய ரியல் எஸ்டேட் வியாபாரி.... பல மடங்கு மேற்க்கொண்டு விற்று பல கோடிகளை பார்த்து விட்டார்.
அதில் சில கோடிகளை ராம் குமாரிடம் கொடுத்தார்.
“எங்களுக்கு உரிய தொகையை நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.
இது உங்கள் வியாபார த்திறக்கு கிடைத்த லாபம்.
இதில் எங்களுக்கு பங்கு தரத்தேவையில்லை” என திருப்பி கொடுத்த நல்லவர் ராம் குமார்.

குருவிற்க்கும் வாழ்வளித்த ரஜினியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.