Showing posts with label கமீனோ. Show all posts
Showing posts with label கமீனோ. Show all posts

Jul 18, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை குற்றவாளியாக்கிய காவியம்-Part 3


நண்பர்களே...ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட... பதினோரு திரைப்படங்களையும் எழுதி விட்டு, ஹேராமை தொடர எண்ணியுள்ளேன்.
அனைவரும் பொறுத்தருள்க.

கமீனோ படத்தில் காட்டப்படுவது போல்...நம்மூரிலும் கார்ப்பரேட் சாமியார்கள் ஆசிரமங்களில் மூளைச்சலவை செய்யப்படுகிறது.
முதல் நாள்  ‘நானே கடவுள்’ என்கிறான்.
அடுத்த நாளே கைதானதும்... ஜாமீனுக்கு விண்ணப்பிக்கிறான்.
கடவுளுக்கு எதற்கு ஜாமீன்? என யோசிக்க வேண்டாமா...செம்மறியாடுகள்.?
 ‘மூளைச்சலவை’ யோசிக்க விடாது.

கமீனோவை பார்க்க வரும் தோழியோடு, நாமும் இணைந்து கொள்வோம்.
நோயாளிகளுக்கு நண்பர்கள் வருகை, என்றுமே உவகைதான்.
கமீனோ,நாட்டிய நாடகம் பற்றி விசாரிக்கிறாள்.
பாய் பிரண்ட் ஜீசஸ்... அதில்தானே இருக்கிறான்!.
நாடகக்குழுவினர் அனைவரும், அதே காஸ்ட்யூமோடு கமீனோவை பார்க்க வருவதற்கு... ஜீசஸ் திட்டமிட்டுள்ளான் என்ற செய்தியை தோழி சொல்கிறாள். அந்தக்கணமே...கமீனோ  கற்பனை உலகத்தில் பிரவேசிக்கிறாள்.
அந்த பரவச உலகை காண...நமது கற்பனை குதிரையை தட்டச்சொல்லி,சாதுர்யமாக  ஒதுங்கி விடுகிறார் இயக்குனர்.

நோயின் தீவிர பரவலை தடுக்க, கீமோதெரபி சிகிச்சை நடக்கவிருப்பதாக தந்தை கனிவோடு தெரிவிக்கிறார்.
நண்பர்கள் வருகைக்கு பிறகு அச்சிகிச்சையை  ஆரம்பிக்க ஆசைப்படுகிறாள்.
காரணம்...தலை முடியை இழக்க வேண்டியது வரும் என்ற அச்சத்தால்.
 “உன் விருப்பப்படியே செய்வோம்” என ஆதுரவாக தலையை தடவுகிறார்.
முடி கொத்தாக... கையோடு வருகிறது.

கிளாஸ்மேட்களை...பள்ளி அறையிலேயே சந்திக்க வருகிறாள்...முடி இழந்த கோலத்தோடு.
தோழியை பார்த்து... கண்ணடிக்கிறாள்.
இங்கே, கண்ணடித்தல்...கமீனோவின் உற்சாக மனநிலைக்கு குறீயீடாகிறது.
இக்குறியீட்டின் கனோட்டேஷன்...
பார்வையாளர்களை, துன்ப நிலைக்கு தள்ளுகிறது.
நண்பர்களை கடிதம் எழுதச்சொல்லி...வேண்டி விடை பெறுகிறாள்.

அதே நேரத்தில் தந்தை, வீட்டில் கமீனோ ரகசியமாக வைத்திருந்த பொருட்களை கண்டெடுக்கிறார்.
தான் பிறந்த நாள் பரிசாக வாங்கி கொடுத்த  ‘குட்டி மியுசிக் பாகஸ்’...
‘கமீனோவின் கனவுக்காட்சியில் காட்டப்பட்ட நூரியின் காதலன்’ புகைப்படம்...
அவன் நூரிக்கு எழுதிய காதல் கடிதங்கள்...

மருத்துவமனைக்கு முதன் முதலாக அக்கா நூரி வருகிறாள்.
வந்திருப்பவள்  ‘அக்கா ’ அல்ல...
மூளைச்சலவை செய்யப்பட்ட  ‘கன்னியாஸ்திரி’...
எனப்புரிந்து கொள்கிறாள் கமீனோ.

தந்தை வருகிறார்.
பாசத்தோடு நூரியை விசாரிக்கிறார்.
 “உன்னிடம் சேர வேண்டிய பொருள்கள்...
காரில் இருக்கிறது.
எடுத்துக்கொள்”என்கிறார்.
 “அப்புறம் பார்க்கலாம் ”
 கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்...உடனே ஹாஸ்டல் போகவேண்டுமென இயந்திரமாக செயல்படுகிறாள் நூரி.
கமீனோ பகலிலிருந்தே தூங்கிகொண்டே இருக்கிறாள்...என தாயார் கூறி...நூரியோடு டின்னர் சாப்பிட கிளம்புகிறார்.

மகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெதுவாக மியூசிக் பாக்சை ஷெல்பில் வைக்கிறார்.
“கண்டு பிடிச்சிட்டீங்களா ” என்கிறாள் கமீனோ.
தாய்&சகோதரி... ' இரண்டு தீவிரவாதிகளிடமிருந்து ' தப்பிக்க தூங்குவது போல் கமீனா நடித்திருக்கிறாள் என்பது குறியீடாகிறது.
அக்கா,  காதலனை மறந்து ' பாதை ' மாறியது...தன் விஷயத்தில் நடக்காது என தெளிவாக உரைக்கிறாள் கமீனோ.

' Human Sensuousness ' என்ற இயல்பான அடிப்படையில் கமீனோவும். தந்தையும்...
முரணாக...
‘ Faith ’ என்ற அடிப்படையில் தாயும்,நூரியும் இயங்குகிறார்கள்.

முக்கியமான கடிதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறாள் கமீனோ.

 “ போஸ்டல் டிபார்ட்மெண்டை நம்ப முடியாது.
நானே அந்த லெட்டரை வாங்கி வருகிறேன் ”

 “ தாங்க் யூ...மிஸ்டர் போஸ்ட் மேன் ”
என கமினோ தந்தையின் கன்னத்தை தடவுவது,   என் கண்களி

எழுத முடியவில்லை.ஸாரி.

Jul 16, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை... குற்றவாளியாக்கிய காவியம்-Part 2

கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் சப்-டைட்டில் இல்லாமல் பார்த்த கமினோவை...நண்பரின் உதவியால் சப்-டைட்டிலோடு திரும்ப...திரும்ப...பார்த்து வருகிறேன்.
காரணம்...கருத்துப்பிழை வந்து விடக்கூடாது என்ற பயத்தால்..

நரை,திரை,பிணி,மூப்பு,சாக்காடு இவற்றை ஆராய்ச்சி செய்தார்... சித்தார்த்தன் என்ற ராஜகுமாரன்.
ஞானம் பிறந்தது.
புத்தரானார்.
புத்தமதம் கிடைத்தது.
புத்தமதம் மனிதநேயத்தை வளர்ப்பதாக அசோக சக்ரவர்த்தியால் பரப்பப்பட்டது.
புத்தமதத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு மனிதநேயத்தோடு நடந்ததா?
முள்ளிவாய்க்கால் சாட்சி சொல்லும்.

எல்லா மதங்களும் ஒரே அணிதான்.
எல்லா மக்களும் ஒரே அணிதான்...ஆனால் எதிர் அணியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வலியை ஏற்றுக்கொள்வதே கிருத்துவை அடையும் வழி என வலியுறுத்துகிறது மதம்.
மதத்தோடு... மருத்துவமும்... கை கோர்த்து கொண்ட  ‘முரண்பாட்டை’ கமினோவில் எடுத்துக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.

“மகளே...வலியை தந்த கர்த்தருக்கு நன்றி சொல்” எனக்கூறும்,
அதீத நம்பிக்கைகொண்ட கிருத்துவ தீவிரவாதியாக, தாயும்...
மதமோ...மருத்துவமோ...என் மகளை குணப்படுத்தினால் சரி...என சராசரி மனிதனாக தந்தையும்...இரு வேறு துருவங்களாக இயங்குவதை இப்படத்தில் காணமுடியும்.

மருத்துவமனையிலிருந்து கமீனோவும்,பொற்றோரும்...நூரியிடம் போனில் பேசுவதற்கு கூட ...கிறித்துவ தீவிரவாத அமைப்பு முன் கூட்டியே திட்டமிடுகிறது...கண்காணிக்கிறது....என்பதை காட்சி ரீதியாகவும்,
வசன ரீதீயாகவும் இயக்குனர் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருகிறார்கள்.
தாயால்,கமீனோவின் அறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.
தேவாலயத்தின்....இருண்ட பகுதி போல் இருக்கிறது.
கமீனோ மாற்றியமைக்கப்பட்ட அறையை விரும்பவில்லை என்பதை...அவளது கனவுக்காட்சி விளக்குகிறது.

அவளது நேசத்திற்குரிய எலி வருகிறது.
ஜன்னல் வழியே தாவிக்குதித்து பறந்து போகிறது.
அருகிலேயே டிஸ்னி வோர்ல்ட் காட்சியளிக்கிறது.
அறையில் கட்டிலில் குதித்து கும்மாளமிடுகிறாள் கமீனோ.
அவளது அறை பழையபடி கலர்புல்லாக காட்சியளிக்கிறது.
அறை முழுக்க சிறகுகள் பஞ்சு போல் பறக்கின்றன.


தாயார் வருகிறார்.
பின்னணி இசை ஆக்ரோஷமாக மாறுகிறது.
காமிரா கோணங்களால் தாயார்...  ராட்ஷச உயரமாக காட்டப்படுகிறார்.                   கமீனோ :  “நான் நல்லாயிட்டேன்.டான்ஸ் கிளாஸ் போகப்போறேன்.”                                   தாயார் : “ நோ...உன்னால் முடியாது. அங்கே பார்.”                                                     சுட்டி காட்டிய இடத்தில் சக்கர நாற்காலி இருக்கிறது.
கமீனோ தடுமாறி விழுகிறாள்.
எழ முயல்கிறாள்.
மீண்டும்...மீண்டும்...மீண்டும்....மீண்டும் விழுகிறாள்.


மீண்டும்....
புதிய மருத்துவமனை...புதிய பரிசோதனைகள்.... 
‘ஸ்கேன்’நர்ஸ் கொடூரமாக நடந்து கொள்கிறாள்.
டூட்டி நர்ஸ் கருணையுடன் நடந்து கொள்கிறாள்.
கமீனோ : “ உங்களைப்போல் எல்லோரும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.”
‘புரிந்து கொண்ட’டூட்டி நர்ஸ்:  “ஸ்கேன் நர்ஸ் அப்படித்தான்...
ரூடாக நடந்து கொள்வாள்.
அவள் கணவன் பிரிந்து சென்றதால் அப்படி ஆகி விட்டாள்.”

மீண்டும் ஸ்கேன்...
கமீனோ : [அழுது கொண்டே] “என்னை மன்னியுங்கள்.
எனக்கு நோய்வாய்ப்பட்ட அனுபவமில்லை.
அதனால் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸாரி...உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபிப்பேன் "
பாறை இளகியது.
ஸ்கேன் நர்ஸ் : [கமினோவின் கன்னத்தை தடவியவாறு] “ நீ ஒரு தேவதை”

கமீனோவின் பிராத்தனை பலிக்கிறது.
 ‘ஸ்கேன் நர்ஸ்’ கணவன் வந்து சேர்ந்து விடுகிறான்.
கல்மிஷம் இல்லாத கருணை உள்ளம்...பிறருக்காக  ஜெபித்தால்...
கடவுள் செவி சாய்ப்பார் என்பது குறியீடாக்கப்பட்டுள்ளது.

கமீனோவின் அக்கா நூரியை...தங்கையை மருத்துவமனக்கு சென்று பார்ப்பதை... தள்ளிப்போடும் கிருத்துவ தீவிர வாத அமைப்பு, மாதம் தோறும் அத்தை வீட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதிக்கிறதே!
ஏன்?
விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
நூரியின் கூடவே வரும் அந்த அமைப்பின் உறுப்பினரிடம் கத்தையாக பணத்தை ஒரு கவரில் போட்டு கொடுக்கிறார் அத்தை.
அவரும் மூளைச்சலவை செய்யப்பட்டவரே!
இந்தக்காட்சி...  ‘மாமேதை’கார்ல் மார்க்ஸின் வரிகளை ஞாபகப்படுத்துகிறது.
 “சர்ச், தனது வழிபாடு மற்றும் கோட்பாடு முறைகளில்...பெரும்  மாற்றத்தை கொண்டு வர...கேள்வி எழுப்பப்பட்டால் கூட...பொறுத்துக்கொள்ளும்.
ஆனால்,அவர்களுக்கு வருகின்ற வருமானத்தை குறைக்கின்ற வகையில்...சிறு மாற்றத்தை கொண்டு வர... கேள்வி எழுப்பப்பட்டால், பொறுத்துக்கொள்ளாது.”

ஸ்பைனல் கேன்சர்...மருத்துவ சிகிச்சைக்கு அடங்காமல்...கமீனோவை மேலும்...மேலும் சிதைப்பதை,அடுத்த பதிவில் காண்போம்.