நண்பர்களே...
கலைத்தாயின் இளைய மகனுக்கு நவம்பர் 7 பிறந்த நாள்.
கமல் பிறந்த நாள் பரிசாக இப்பதிவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
கடந்த பதிவுகளின் சாரம்...
கமல் V \ S முக்தா பிரச்சினையில் மையமாக இருப்பது...
இரு தனி நபர் பேதமல்ல...
ஆர்ட் V \ S பிசினஸ் என்ற பேதமே.
Nayagan \ 1987 \ Tamil \ Directed by Mani Rathnam
மணிரத்னம்,கமல்& நாயகன் படத்துக்கு வந்த எதிர்வினைகளில்...
நாயகன் காட்பாதரின் காப்பி என்ற அடிநாதமிருந்தது.
இந்த பரப்புரையை திட்டமிட்டவர்களின் எதிரொலி அது.
பொய் பரப்புரையை தகர்க்க...இப்போது வந்த வாய்ப்பை சிக்கென பற்றினேன்.
முதலில் காட்பாதரை பார்ப்போம்.
THE GODFATHER \ 1972 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA
THE GODFATHER 2 \ 1974 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA
அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவத்துவத்தின் சாரங்களை பயின்று தேறி ‘இணை அரசாங்கம்’ நடத்துகின்ற அளவிற்கு பலம் பொருந்தி விட்டார்கள்.
இந்த ‘மாபியாக்கள்’ தயவிருந்தால்தான், அமெரிக்க அரசின் உயர் பதவிக்கு
வர முடியும்...நீடித்திருக்க முடியும்.
அமெரிக்க - இத்தாலிய மக்களின் ‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை’...
நிழல்-உலக வியாபாரங்கள்,..அதற்கான போரட்டங்கள் என அனைத்துக்காரணிகளையும் ஆராய்ந்து...
எழுத்தாளர் மரியோ புஸோ [ MARIO PUZO ] காட்பாதர் என்ற நாவலை வெளியிட்டார்.
அதன் விற்பனையும், புகழும் உலகே அதிர்ந்தது.
காட்பாதரை திரைப்படமாக்க பாரமவுண்ட் நிறுவனம் திட்டமிட்டது.
இக்கதையை திரைக்கதையாக்கும் கருத்தாக்க - போட்டியில்
மரியோ புஸோ பின் தங்கினார்.
கொப்பல்லோ ஜெயித்தார்.
கருத்தாக்கம் = பேமிலி V \ S பிசினஸ்
கொப்பல்லோவின் இயக்கத்தில் காட்பாதர் காப்பியமாக [ Epic ] உருவெடுத்தது.
வசூலிலும் வரலாறு படைத்தது.
உலகத்தையே கவர்ந்த காட்பாதர்...
கமல், மணிரத்னம், & திரு.முக்தா சீனிவாசனையும் ஈர்த்ததில் வியப்பில்லை..
திரு.சிவாஜி கணேசன் - கமல் இணைப்பில் காட்பாதரை தழுவி
படமாக்கும் முயற்சி...
திரு.அனந்து அவர்களால் நிறுத்தப்பட்டது என...
திரு.முக்தா சீனிவாசன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
‘இத்திருப்பணிக்காக’ திரு.அனந்து அவர்களுக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
காட்பாதர் இன்ஸ்பிரேஷனில்... ‘தேவர் மகனாகி’ சிவாஜி - கமல் பெருமை சேர்த்தது வரலாறு.
தேவர் மகனுக்கு பின்னால் பதிவிடுகிறேன்.
நாயகனும், தேவர் மகனும் காட்பாதர் இன்ஸ்பிரேசனில் வடிவமைக்கப்பட்டவையே.
ஆனால் மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை.
காட்பாதரும் நாயகனும் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.
காட்பாதரில் இருப்பது பவர் ஸ்டிரகிள்
[ Power Struggle \ அதிகார போராட்டம் ] .
நாயகனில் இருப்பது கர்மிக் ஸ்டிரகிள்
[ Karmic Struggle \ கர்மவினைப்போராட்டம் ] .
‘அண்டர்ஸ்டாண்டிங் மூவிஸ்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...
பவர் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட காட்பாதரின்
செண்டர் பாண்ட் பேமிலி V \ S பிசினஸ்.
இந்த சூத்திரத்தை கண்டு பிடித்து திரைக்கதை அமைத்ததால்தான்
மரியோ புஸோவை முந்தினார் கொப்பல்லோ.
காட்பாதர்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் ஆகிய
3 கருத்தாக்கங்களில் இயங்குகிறது.
மாமேதை மார்க்ஸ் இறப்புக்குப்பின் மாமேதை ஏங்கெல்ஸ் [ Friedrich_Engels ] ‘மனித குல வரலாற்றின் மீது’ ஆய்வு செய்த கருத்தாக்கங்கள்.
[ The Origin of the Family.- Private Property - and the State - 1884 ] = “ PRIMITIVE - COMMUNAL SYSTEM = CHANGES IN THE FORMS OF MARRIAGE & FAMILY = ECONOMIC PROGRESS OF SOCIETY = ECONOMIC CAUSES = CAPITALISM = STATE = FUTURE HUMAN SOCIETY "
காட்பாதர் + ஏங்கல்ஸ் கருத்தாக்கங்களில் இந்திய தத்துவமான 'கர்மா' இல்லை.
*********************************************************************************
ஆர்ஜின் ஆப் த பேமிலி.... பற்றி விரிவாக தெரியவும்...புரியவும்
‘எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன்’ ‘பொதிந்து’எழுதிய...
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை படிக்கவும்.
அழகிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது...
திரு.சுஜாதா நாவல் போல் 100 % விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.
*********************************************************************************
நாயகன்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் - கர்மா ஆகிய
4 கருத்தாக்கங்களில் இயங்குகிறது.
கர்மிக் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட நாயகனின் செண்டர் பாய்ண்ட் பேமிலி V \ S கர்மா.
ஸ்டேட் = அரசாங்கம்
காட்பாதரில் மாபியாக்களொடு இசைந்து ஸ்டேட் இயங்குகிறது.
நாயகனில் ஸ்டேட் [ நாசர் காரெக்டர் ] வேலுநாயக்கரையும்...
அவரது கூட்டத்தையும் வேட்டையாடுகிறது.
மணிரத்னம்...
‘பம்பாய் ரியல் காட்பாதர்’ வரதராஜ முதலியார் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு...நாயகன் திரைக்கதையை அமைத்தார்.
எனவேதான் வேலு நாயக்கர் என்ற ஒற்றை கதாபாத்திரத்தை பிரதானப்படுத்தி நாயகன் திரைக்கதை பயணப்பட்டது.
மார்லன் பிராண்டோ, அல்பசினோ என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வழியே காட்பாதர் திரைக்கதை பயணப்பட்டிருக்கிறது.
வேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான் போலிஸ்காரன்.
போலிஸ்காரனை கொல்கிறான் வேலு.
வேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...
என ஒரு வட்டத்தில் முடித்து....
இந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
இப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது.
பாலியல் தொழிலாளியான விளிம்பு நிலைப்பெண்ணை வேலுவிற்கு மனைவியாக்கியது...
மகளே சட்டத்தின் பெயரால் தந்தையை எதிர்ப்பது...
மகள் தந்தையை விட்டுப்பிரிந்து தனது குடும்பத்தை
தானே அமைத்துக்கொள்வது...
மருமகனே வேலு நாயக்கரை நீதியின் முன் நிறுத்துவது...
இவையெல்லாம் காட்பாதரிலிருந்து நாயகனை
வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் போராட்டத்தில்
தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன காட்பாதரில்.
மனைவியை கொன்றதற்காக தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன நாயகனில்.
வேலு நாயக்கரின் மகன் வன்முறைப்பாதையில் ஈர்க்கப்பட்டு...
அதன் விளைவாக உயிரை துறப்பான்.
மகளோ, வன்முறை வாழ்க்கை முறையை வெறுத்து...
தந்தையை விட்டு விலகிச்செல்கிறாள்.
அவளது மகனுக்கு...அடுத்த தலைமுறைக்கு...
தனது ‘கவசமான’ உத்திராட்சத்தை பரிசாக கொடுப்பார் வேலு நாயக்கர்.
உத்திராட்சம் = அன்பே சிவம்.
வன்முறை வழிமுறைகள் தன்னோடு முடிய வேண்டும் என
வேலு நாயக்கரின் விருப்பமாக நாயகனில் பல இடங்களில் சொல்லப்பட்டாலும்...
இக்காட்சிதான் ‘மணிரத்ன சுருக்கம்’.
காட்பாதரில் வன்முறையை யாருமே மறுக்கவில்லை.
வன்முறையை சிறப்பாக செய்பவனே வாரிசாகிறான்.
காட்பாதர் 1,2,3 பாகங்களிலும் இது மீண்டும் மீண்டும் வலுவாக சொல்லப்படுகிறது.,
நாயகன் இறுதிக்காட்சியில் வேலு நாயக்கர் சுடப்பட்டு தரையில் கிடப்பதை வோர்ம்’ஸ் - ஐ - வியூ [ WORM'S EYE VIEW ] கோணத்தில் படமாக்கியிருப்பார் இயக்குனர் மணிரத்னம்.
வேலுநாயக்கரின் வாழ்க்கையில் நடந்த பாசிட்டிவ் நிகழ்ச்சிகளை தொகுத்து காட்டியிருப்பார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த ‘டைட்டானிக்’ படத்திலும்...
Titanic \ 1997 \ English \ Directed by James Cameron
இங்மர் பெர்க்மனின் இயக்கத்தில் வந்த ‘கிரைஸ் & விஸ்பர்ஸ்’ படத்திலும்...
Cries & Whispers \ 1972 \ Swedish \ Directed by Ingmar Bergman
இறுதிக்காட்சியில் இதே பாசிட்டிவ் தன்மையை காணலாம்.
காட்பாதரின் இறுதிக்காட்சி வேறு.
காட்பாதர், நியூயார்க் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
நாயகன், பம்பாய் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
எந்த நகரத்து நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தாலும்
ஒரே மாதிரிதான் வந்து சேரும்.
1970 -80களில் ‘மஸ்தான்’ என்பவர் பம்பாயின் நிழல் உலக சக்ரவர்த்தியாக இருந்தார்.
அப்போது பம்பாயில் மாபியா குழுக்களிடையே தொழில் போட்டியில்
தொடர் கொலைகள் நிகழ்ந்தன.
மஸ்தானை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்
“ நடக்கும் நிகழ்வுகள் காட்பாதர் சிச்சுவேஷன் போல் உள்ளதே” எனக்கேட்டார்.
மஸ்தான்...“ உண்மைதான்...
ஆனால் காட்பாதர் பார்ட் 1 அல்ல...காட்பாதர் பார்ட் 2 சிச்சுவேஷன் ” என்றார்.
நிஜம் நிழலாகிறது...நிழல் நிஜமாகிறது.
காட்பாதரையும், நாயகனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொண்டதால் போர்ச்சுக்கல் விமர்சகர் பாராட்டுகிறார்.
டைம் பத்திரிக்கை காட்பாதர் ,காட்பாதர் 2, நாயகன் மூன்று படத்தையும்
உலகின் தலை சிறந்த நூறு படங்கள் வரிசையில் இணைத்து
கொண்டாடியது.
மணிரத்னம் தலைமையில்...
கமல்,இளையராஜா,பி.ஸி.ஸ்ரீராம்,தோட்டா தரணி,லெனின்,பால குமாரன் மற்றும்
தமிழ் திரையுலகின் ஜாம்பவன்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய...
நாயகன் என்ற காப்பியத்தை...
தமிழ் பதிவர்களில் ‘சிலர்’ மட்டும்தான்...
காப்பிக்கும் - இன்ஸ்பிரேஷனுக்கும் வேறுபாடு புரியாமல்
கண்ட மேனிக்கு எழுதுகிறார்கள்.
அவர்களுக்காக ஒன்று சொல்கிறேன்.
நியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
பம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
நியூயார்க் பெண்களை காப்பியடித்து...
பம்பாய் பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள் என யாரும் சொல்லவே முடியாது.
பின்னூட்டங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
கலைத்தாயின் இளைய மகனுக்கு நவம்பர் 7 பிறந்த நாள்.
கமல் பிறந்த நாள் பரிசாக இப்பதிவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
கடந்த பதிவுகளின் சாரம்...
கமல் V \ S முக்தா பிரச்சினையில் மையமாக இருப்பது...
இரு தனி நபர் பேதமல்ல...
ஆர்ட் V \ S பிசினஸ் என்ற பேதமே.
Nayagan \ 1987 \ Tamil \ Directed by Mani Rathnam
மணிரத்னம்,கமல்& நாயகன் படத்துக்கு வந்த எதிர்வினைகளில்...
நாயகன் காட்பாதரின் காப்பி என்ற அடிநாதமிருந்தது.
இந்த பரப்புரையை திட்டமிட்டவர்களின் எதிரொலி அது.
பொய் பரப்புரையை தகர்க்க...இப்போது வந்த வாய்ப்பை சிக்கென பற்றினேன்.
முதலில் காட்பாதரை பார்ப்போம்.
THE GODFATHER \ 1972 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA
THE GODFATHER 2 \ 1974 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA
அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவத்துவத்தின் சாரங்களை பயின்று தேறி ‘இணை அரசாங்கம்’ நடத்துகின்ற அளவிற்கு பலம் பொருந்தி விட்டார்கள்.
இந்த ‘மாபியாக்கள்’ தயவிருந்தால்தான், அமெரிக்க அரசின் உயர் பதவிக்கு
வர முடியும்...நீடித்திருக்க முடியும்.
அமெரிக்க - இத்தாலிய மக்களின் ‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை’...
நிழல்-உலக வியாபாரங்கள்,..அதற்கான போரட்டங்கள் என அனைத்துக்காரணிகளையும் ஆராய்ந்து...
எழுத்தாளர் மரியோ புஸோ [ MARIO PUZO ] காட்பாதர் என்ற நாவலை வெளியிட்டார்.
அதன் விற்பனையும், புகழும் உலகே அதிர்ந்தது.
காட்பாதரை திரைப்படமாக்க பாரமவுண்ட் நிறுவனம் திட்டமிட்டது.
இக்கதையை திரைக்கதையாக்கும் கருத்தாக்க - போட்டியில்
மரியோ புஸோ பின் தங்கினார்.
கொப்பல்லோ ஜெயித்தார்.
கருத்தாக்கம் = பேமிலி V \ S பிசினஸ்
கொப்பல்லோவின் இயக்கத்தில் காட்பாதர் காப்பியமாக [ Epic ] உருவெடுத்தது.
வசூலிலும் வரலாறு படைத்தது.
உலகத்தையே கவர்ந்த காட்பாதர்...
கமல், மணிரத்னம், & திரு.முக்தா சீனிவாசனையும் ஈர்த்ததில் வியப்பில்லை..
திரு.சிவாஜி கணேசன் - கமல் இணைப்பில் காட்பாதரை தழுவி
படமாக்கும் முயற்சி...
திரு.அனந்து அவர்களால் நிறுத்தப்பட்டது என...
திரு.முக்தா சீனிவாசன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
‘இத்திருப்பணிக்காக’ திரு.அனந்து அவர்களுக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
காட்பாதர் இன்ஸ்பிரேஷனில்... ‘தேவர் மகனாகி’ சிவாஜி - கமல் பெருமை சேர்த்தது வரலாறு.
தேவர் மகனுக்கு பின்னால் பதிவிடுகிறேன்.
நாயகனும், தேவர் மகனும் காட்பாதர் இன்ஸ்பிரேசனில் வடிவமைக்கப்பட்டவையே.
ஆனால் மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை.
காட்பாதரும் நாயகனும் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.
காட்பாதரில் இருப்பது பவர் ஸ்டிரகிள்
[ Power Struggle \ அதிகார போராட்டம் ] .
நாயகனில் இருப்பது கர்மிக் ஸ்டிரகிள்
[ Karmic Struggle \ கர்மவினைப்போராட்டம் ] .
‘அண்டர்ஸ்டாண்டிங் மூவிஸ்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...
Understanding
Movies=Louis Giannetti=Fifth Edition=1990= Prentice Hall,
New
Jersey 07632
Page=325
THE GOD FATHER =(USA.1972)=Paramount
Pictures=Directed by: Francis Ford Coppola
Genre films are generally profuse in
archetypal elements.
In this,
the most famous gangster film in history,
the very
title resonates with larger-than-life forebodings.
In Italian-American culture,
a godfather is a respected authority figure,
a revered parental surrogate.
In
the subculture of the Mafia,
“Godfather” is what criminal chieftains are often
called.
The Brando figure is also a benevolent patriarch to the members of his
immediate family,
a legendary hero,
a God-Father.
Page=384
THE
GOD FATHER, Part II =(USA.1974)=Paramount Pictures=
Directed
by: Francis Ford Coppola
A
Marxist reading of a movie doesn’t necessarily exclude other interpretations.
Critic
JOHN HESS has argued that Coppola comes closer to a
Marxist analysis of American Society than any other Hollywood filmmaker:
“The
film’s all pervasive theme is the warmth,
strength,
and beauty of family ties
which,
in bourgeois society,
alone appear to meet the desperate need we all feel
for human community.
The
counter theme and the real strength of the film is its demonstration that the
benefits of the family structure and the hope for community have been destroyed
by Capitalism"
பவர் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட காட்பாதரின்
செண்டர் பாண்ட் பேமிலி V \ S பிசினஸ்.
இந்த சூத்திரத்தை கண்டு பிடித்து திரைக்கதை அமைத்ததால்தான்
மரியோ புஸோவை முந்தினார் கொப்பல்லோ.
காட்பாதர்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் ஆகிய
3 கருத்தாக்கங்களில் இயங்குகிறது.
மாமேதை மார்க்ஸ் இறப்புக்குப்பின் மாமேதை ஏங்கெல்ஸ் [ Friedrich_Engels ] ‘மனித குல வரலாற்றின் மீது’ ஆய்வு செய்த கருத்தாக்கங்கள்.
[ The Origin of the Family.- Private Property - and the State - 1884 ] = “ PRIMITIVE - COMMUNAL SYSTEM = CHANGES IN THE FORMS OF MARRIAGE & FAMILY = ECONOMIC PROGRESS OF SOCIETY = ECONOMIC CAUSES = CAPITALISM = STATE = FUTURE HUMAN SOCIETY "
காட்பாதர் + ஏங்கல்ஸ் கருத்தாக்கங்களில் இந்திய தத்துவமான 'கர்மா' இல்லை.
*********************************************************************************
ஆர்ஜின் ஆப் த பேமிலி.... பற்றி விரிவாக தெரியவும்...புரியவும்
‘எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன்’ ‘பொதிந்து’எழுதிய...
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை படிக்கவும்.
அழகிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது...
திரு.சுஜாதா நாவல் போல் 100 % விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.
*********************************************************************************
நாயகன்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் - கர்மா ஆகிய
4 கருத்தாக்கங்களில் இயங்குகிறது.
கர்மிக் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட நாயகனின் செண்டர் பாய்ண்ட் பேமிலி V \ S கர்மா.
ஸ்டேட் = அரசாங்கம்
காட்பாதரில் மாபியாக்களொடு இசைந்து ஸ்டேட் இயங்குகிறது.
நாயகனில் ஸ்டேட் [ நாசர் காரெக்டர் ] வேலுநாயக்கரையும்...
அவரது கூட்டத்தையும் வேட்டையாடுகிறது.
மணிரத்னம்...
‘பம்பாய் ரியல் காட்பாதர்’ வரதராஜ முதலியார் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு...நாயகன் திரைக்கதையை அமைத்தார்.
எனவேதான் வேலு நாயக்கர் என்ற ஒற்றை கதாபாத்திரத்தை பிரதானப்படுத்தி நாயகன் திரைக்கதை பயணப்பட்டது.
மார்லன் பிராண்டோ, அல்பசினோ என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வழியே காட்பாதர் திரைக்கதை பயணப்பட்டிருக்கிறது.
வேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான் போலிஸ்காரன்.
வேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...
என ஒரு வட்டத்தில் முடித்து....
இந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
இப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது.
பாலியல் தொழிலாளியான விளிம்பு நிலைப்பெண்ணை வேலுவிற்கு மனைவியாக்கியது...
மகளே சட்டத்தின் பெயரால் தந்தையை எதிர்ப்பது...
மகள் தந்தையை விட்டுப்பிரிந்து தனது குடும்பத்தை
தானே அமைத்துக்கொள்வது...
மருமகனே வேலு நாயக்கரை நீதியின் முன் நிறுத்துவது...
இவையெல்லாம் காட்பாதரிலிருந்து நாயகனை
வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் போராட்டத்தில்
தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன காட்பாதரில்.
மனைவியை கொன்றதற்காக தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன நாயகனில்.
வேலு நாயக்கரின் மகன் வன்முறைப்பாதையில் ஈர்க்கப்பட்டு...
அதன் விளைவாக உயிரை துறப்பான்.
மகளோ, வன்முறை வாழ்க்கை முறையை வெறுத்து...
தந்தையை விட்டு விலகிச்செல்கிறாள்.
அவளது மகனுக்கு...அடுத்த தலைமுறைக்கு...
தனது ‘கவசமான’ உத்திராட்சத்தை பரிசாக கொடுப்பார் வேலு நாயக்கர்.
உத்திராட்சம் = அன்பே சிவம்.
வன்முறை வழிமுறைகள் தன்னோடு முடிய வேண்டும் என
வேலு நாயக்கரின் விருப்பமாக நாயகனில் பல இடங்களில் சொல்லப்பட்டாலும்...
இக்காட்சிதான் ‘மணிரத்ன சுருக்கம்’.
காட்பாதரில் வன்முறையை யாருமே மறுக்கவில்லை.
வன்முறையை சிறப்பாக செய்பவனே வாரிசாகிறான்.
காட்பாதர் 1,2,3 பாகங்களிலும் இது மீண்டும் மீண்டும் வலுவாக சொல்லப்படுகிறது.,
நாயகன் இறுதிக்காட்சியில் வேலு நாயக்கர் சுடப்பட்டு தரையில் கிடப்பதை வோர்ம்’ஸ் - ஐ - வியூ [ WORM'S EYE VIEW ] கோணத்தில் படமாக்கியிருப்பார் இயக்குனர் மணிரத்னம்.
வேலுநாயக்கரின் வாழ்க்கையில் நடந்த பாசிட்டிவ் நிகழ்ச்சிகளை தொகுத்து காட்டியிருப்பார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த ‘டைட்டானிக்’ படத்திலும்...
Titanic \ 1997 \ English \ Directed by James Cameron
இங்மர் பெர்க்மனின் இயக்கத்தில் வந்த ‘கிரைஸ் & விஸ்பர்ஸ்’ படத்திலும்...
Cries & Whispers \ 1972 \ Swedish \ Directed by Ingmar Bergman
இறுதிக்காட்சியில் இதே பாசிட்டிவ் தன்மையை காணலாம்.
காட்பாதரின் இறுதிக்காட்சி வேறு.
காட்பாதர், நியூயார்க் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
நாயகன், பம்பாய் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
எந்த நகரத்து நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தாலும்
ஒரே மாதிரிதான் வந்து சேரும்.
1970 -80களில் ‘மஸ்தான்’ என்பவர் பம்பாயின் நிழல் உலக சக்ரவர்த்தியாக இருந்தார்.
அப்போது பம்பாயில் மாபியா குழுக்களிடையே தொழில் போட்டியில்
தொடர் கொலைகள் நிகழ்ந்தன.
மஸ்தானை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்
“ நடக்கும் நிகழ்வுகள் காட்பாதர் சிச்சுவேஷன் போல் உள்ளதே” எனக்கேட்டார்.
மஸ்தான்...“ உண்மைதான்...
ஆனால் காட்பாதர் பார்ட் 1 அல்ல...காட்பாதர் பார்ட் 2 சிச்சுவேஷன் ” என்றார்.
நிஜம் நிழலாகிறது...நிழல் நிஜமாகிறது.
காட்பாதரையும், நாயகனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொண்டதால் போர்ச்சுக்கல் விமர்சகர் பாராட்டுகிறார்.
டைம் பத்திரிக்கை காட்பாதர் ,காட்பாதர் 2, நாயகன் மூன்று படத்தையும்
உலகின் தலை சிறந்த நூறு படங்கள் வரிசையில் இணைத்து
கொண்டாடியது.
மணிரத்னம் தலைமையில்...
கமல்,இளையராஜா,பி.ஸி.ஸ்ரீராம்,தோட்டா தரணி,லெனின்,பால குமாரன் மற்றும்
தமிழ் திரையுலகின் ஜாம்பவன்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய...
நாயகன் என்ற காப்பியத்தை...
தமிழ் பதிவர்களில் ‘சிலர்’ மட்டும்தான்...
காப்பிக்கும் - இன்ஸ்பிரேஷனுக்கும் வேறுபாடு புரியாமல்
கண்ட மேனிக்கு எழுதுகிறார்கள்.
அவர்களுக்காக ஒன்று சொல்கிறேன்.
நியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
பம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
நியூயார்க் பெண்களை காப்பியடித்து...
பம்பாய் பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள் என யாரும் சொல்லவே முடியாது.
பின்னூட்டங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.