Dec 14, 2011

கேரளாவில் நான் பட்ட பாடு

டிசம்பர் 2லிருந்து 19 வரை எர்ணாக்குளத்தில் கொச்சி புத்தகக்கண்காட்சியில் இருந்தேன்.
ஊடகங்கள் முல்லைப்பெரியார் பிரச்சனையை, தினமும் தலைப்பு செய்திகளாக்கி வெடிமருந்தை நிரப்பிக்கொண்டே இருந்தது.
மேடைகளில் பேச்சாளர்கள் மனிதவெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் பேப்பர்களை பார்த்தால் இங்குள்ளவர்கள் அதே வேலையை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
தமிழ்நாட்டிலிருந்து பத்து பேர் ஸ்டால் போட்டிருந்தோம்.
உள்ளூர பயம் ரம்பம் போல் அறுத்து கொண்டிருந்தது.
ஆனால் கேரள மக்கள் எங்கள் பயத்தை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.
யாருமே எங்களை விரோதி போல் பாவிக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஸ்டாலில்நல்ல கூட்டம்...
நல்ல வியாபாரம்.
‘கேரள கவுமதி’என்ற நூற்றாண்டு கண்ட பத்திரிக்கை ஆசிரியர் என்னை பேட்டி கண்டு பத்திரிக்கையில் பிரசுரித்து என் ஸ்டாலை பிரபல்யபடுத்தி விட்டார்.

கேரளாவில் இன்றும் ஆட்டோ 15ரூபாய்க்கு வருகிறார்கள்.
அதே தூரத்திற்க்கு சென்னையில் 30ரூபாயும்...கோவையில் 40ரூபாயும் உரித்து விடுவார்கள்.
 தியேட்டரில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் 50ரூபாய்க்கு புல் ஏசி போடுகிறார்கள்.


சரவணபவன் மாதிரி ஏ கிளாஸ் ஹோட்டலில் 45 ரூபாய்க்கு புல் மீல்ஸ் சாப்பாடு.
மொத்த கேரளாவே மிடில் கிளாஸ் சொர்க்கமாக இயங்கி கொண்டிருக்கிறது.
கேயிஸ் என்ற ஹோட்டல் பிரியாணி உலகின் டாப்10ல் அடங்கும்.
அவர்கள் உணவையே மருந்தாக்கி ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
சாம்பார்,ரஸம் எல்லாவற்றிலும் பெருங்காயம்.
மீன் குழம்பில் இஞ்சி...
பாயாஸத்தில் சுக்கு...
இறால் வறுவலில் பூண்டு என சாமர்த்தியமாக இணைத்து விடுகிறார்கள்.

என்னடா ஒரே பாராட்டு மயமா இருக்கே....தலைப்புக்கு சம்பந்தம் இல்லியேன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே தலைப்புக்கு வந்துட்டேன்.
புதிய உலக சினிமா டிவிடி விற்ப்பதுக்கு படாதபாடு பட்டேன்.
இன்னும் அவர்கள் அகிரா குரோசுவா,சத்யஜித்ரே போன்ற இயக்குனர்களை தாண்டி வரவில்லை.
சமீபத்திய இயக்குனர்களில் கிம்கிடுக் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர்.
ரோடு ஹோம்,வே ஹோம் டிவிடி விற்ப்பதற்க்கு கதகளி ஆடவேண்டி வந்தது.
தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் புண்ணியத்தால் சர்வ சாதரணமாக உலக சினிமா அறிவுப்புரட்சியே நடந்துள்ளது என்பதை உணர முடிந்தது.

கடைசி நாள் கேரளத்து பைங்கிளி ஒன்று வந்து, ஹிரோசிமா மான் அமர் இருக்கா என்று கேட்டாள்.
சந்தோசமாக தேடி எடுத்து கொடுத்தேன்.
விஸ்காம் ஸ்டூடண்டா? எனகேட்டேன்.
ஆமாம் என்றாள் பெருமிதம் பொங்க...

மேன் வித் எ மூவி கேமரா டிவிடியை இலவசமாகக்கொடுத்தேன்....
வருங்கால மீரா நாயருக்கு... 

Dec 9, 2011

Beautiful-[Malayalam] 2011 சோதனையை சாதனையாக்கு...


நீண்ட நாட்களாக எழுத முடியவில்லை.
காரணம் விதி ஹெட் ஸ்பிரட்டிங்&டேன்சிங்.
பராசக்தி சிவாஜி கணேசனைப்போல ஒடினேன்...ஒடினேன்...வாழ்க்கையின் ஒரத்திற்க்கே ஒடினேன்.
அந்த துலாபார துயரத்தை தனிப்பதிவாக்குகிறேன்.
துன்ப தொடர் ஒட்டத்திலும் மூன்று சினிமா பார்த்து விட்டேன்.
1 மயக்கமென்ன
2 போராளி
3 பியூட்டிஃபுல்
மூன்றுமே என் துன்பத்தை கடக்க உதவிய காரணிகளாக இருந்த போதிலும்...
மொத்தமாக என் துன்பத்தை துடைத்து போட்டது பியுட்டிஃபுல்.
இப்படத்திற்க்கு மூலம்
Divingbell and the butterfly [நான் இப்படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்...காண்க]
My Left Foot [செழியன் ஆனந்த விகடனில் உலகசினிமா தொடரில் எழுதி உள்ளார்.] இருந்தாலும் அப்பட்டமாக காப்பியடிக்காமல்...சூரிய உதயத்தை பார்த்து ஒவியம் படைப்பது போல் காவியமாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ்.

ஐம்பது நாட்களை கடந்து விட்ட போதிலும் திங்கள் கிழமை இரவுக்காட்சியை ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்க்கின்றனர் கேரள மக்கள்.

படத்தின் நாயகன் ஜெய சூர்யா.
பல நூறு கோடி சொத்துக்களை படுத்திருந்து அனுபவிக்கிறான்.
ஆம்....கழுத்துக்கு கீழே எந்த பாகமும் இயங்காது.
பிறவிக்கோளாறு.
தன் நிலைமைக்கு கழிவிரக்கம் கொள்ளாமல் வாழ்க்கையை ரசித்து ருசித்து சாப்பிடுகிறான்.
அவனைக்கண்டு காலன்,எமன்,தூதன் மூவருமே பயந்து நடுங்கி ஒடிக்கொண்டே இருக்கிறார்கள்.

படுத்துக்கொண்டே ஜெயசூர்யா அடிக்கும் சிரிப்பு சிக்ஸர்கள்
மொத்த தியேட்டரை அதிர வைக்கின்றன.
தனக்கு நர்சாக பணி புரிய...
இண்டர்வியூக்கு வரும் பெண்களை...
 தலையிலிருந்து மார்பு வரை மட்டுமே பார்க்கிறான்.
 பார்ப்பவரை திணற வைக்கும் கவர்ச்சியான பெண்ணின்...
வெளியே தெரியும் பிரா பட்டையை பார்த்து....
 “கருத்த பிரா போட்ட பெண் தவிர மற்றவர்கள் போகலாம்”

ஏமாந்து திரும்பும் பெண்களில் ஒருத்தியின் கமெண்ட் இது...
 “20,000 சம்பளம் கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கருத்த பிரா வாங்கி வெளியே தெரியிற மாதிரி மாட்டியிருப்பேன்”
இக்காட்சிக்கு நரசிம்மராவ் கூட சிரித்திரிப்பார்.

இறந்து போன நண்பனின் குரலின் பிரதியாக ஒலிக்கும்... வருமானமற்ற...ஆனால் தன்மானமிக்க பாடகன்[நடிகர் அனுப் மேனன்] ஒருவனை பிரத்யேகமாக பாட பணிக்கிறான்.
பாடகன், ஜெயசூர்யாவின் கட்டற்ற அன்பில் கரைந்து போகிறான்.

கருத்த பிரா ஒடிப்போக... புதிய புயலாய் பாய்ந்து வருகிறாள் கதாநாயகி.... வேலைக்காரியாக....

அவளின் காதலை பெறுவதில் நண்பர்களுக்கிடையே போட்டி நடப்பது போல்... சொத்துக்காக... சொந்தங்கள் ஜெயசூர்யாவை தீர்த்து கட்ட போட்டி போடுகின்றனர்.
உணவில் விஷம் வைத்து கொல்லும் முயற்ச்சியில் சிக்கி உயிருக்கு போராடும் ஜெய சூர்யா தப்பித்தானா?
குற்றவாளி யார்?
என்று பறக்கும் திரைக்கதை...
இயக்குனருக்கு தியேட்டரில் ஸ்டேண்டிங் ஒயேஸ்
பாராட்டை பெற்று தருகிறது.

கட்டாயம் பார்க்கவேண்டிய கமர்சியல் கவிதை.