May 18, 2012

ஹேராம்-[Hey Ram-2000=001]இன்னும் பத்தாண்டுகள் கழித்து வர வேண்டிய படம்.


ஹேராம் வெளியான போது நான் வெறும் கமல் ரசிகன்.
சகலகலாவல்லவனை ரசித்து கிடந்தவன்....
பெர்க்மன் படம் காணக்கிடைக்கும் போது...
 எத்தகைய திகைப்பு...அச்சம்... ஆச்சரியம் ஏற்ப்படுமோ,
அதைத்தான் ஹேராம் எனக்கு ஏற்ப்படுத்தியது.

பட வெளியீட்டு விழா தண்ணீர் பார்ட்டியில் நடிகை ராதிகா அடித்த கமெண்ட் இது...
 “ டப்பிங் ரைட்ஸ் வாங்கி... தமிழ்ல டப் பண்ணி ரீலிஸ் பண்ணப்போறேன்”.

படம் புரியாத காரணத்தால் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான ரசிகர்களுக்கும் என் அனுபவம்தான் ஏற்ப்பட்டிருக்க வேண்டும்.
அதனால்தான் இப்படம் பெற வேண்டிய நியாயமான வெற்றியை பெற முடியாமல் போனது.

ஆனால் என் நண்பர் ஒருவர் இப்படத்தை எப்போதும் சிலாகித்துப்பேசுவார்.
“தமிழில் வந்த போஸ்ட் மாடர்ன் பொயட்டிக் ஹேராம்...
இந்திய சுதந்திர சரித்திரத்தை.... கேப்ஸ்யூலாக்கி கமல் தந்திருக்கிறார்.
ஒரு நாய்க்கும்... படம் விளங்காது.
ரிச்சர்டு அட்டன்பரோவின் காந்தியை விட... இப்படத்தின் உயரம் பல மடங்கு அதிகம்.
காந்தி படம்... வன்முறையை செலபரேட் செய்தது...
அதனால் அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.
ஹேராம்... வன்முறையை கண்டஸ்ட் செய்தது...
அதற்க்கு பாக்ஸ் ஆபிஸ் கிடைக்காது.
நிஜ காந்தி சரித்திரத்தில்... சாகேத்ராம் என்ற கற்பனை கதாபாத்திரத்தை ப்யூஷன் செய்து கலப்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது.
தமிழில் கமல் ஒருவர் மட்டுமே... சாத்தியப்படுத்தி சாதித்திருக்கிறார்.”

நண்பரது விமர்சனத்தால் உந்தப்பட்டு... ஹேராம் படத்தை இன்று பார்த்தேன்.
இந்த பத்தாண்டுகளில்....
 குரோசுவா,பெர்க்மன் ,அண்டோனியோனி,கோடார்டு,டிசிகா போன்ற உலகசினிமா பிரம்மாககளிடம் பெற்ற பட்டறிவு மூலம் நான் ஒரே ஒரு மில்லி மீட்டர்தான் வளர்ந்திருக்கிறேன்.
நான் இன்னும் வளர வேண்டிய உயரத்தை.... ஹேராம் எனக்கு சுட்டிக்காட்டியது.
இந்தப்படத்தை முழுதாக உள் வாங்க...
இன்னும் பத்தாண்டுகள் எனக்கு தேவைப்படுகிறது.
வருடத்திற்க்கு நூறு உலகசினிமா வீதம்...
 இன்னும் 1000 படம் பார்க்க வேண்டும்.

படம் என்னுள் வெடித்த அனுபவம் ...அடுத்த பதிவில்....

டிஸ்கி:ஆளவந்தான் படத்தில்...
நந்து காரெக்டர்.... காப்பகத்திலிருந்து தப்பித்து போய் போதை மருந்து எடுத்துக்கொண்டு பேசும் போது...
எதிரில் உள்ள காரெக்டர்... “புரியலயே...” எனச்சொல்லும்.
கமல்... “புரியலயா...சப் டைட்டில் போடுறேன்.பாரு...புரியும்.” என்பார்.

ராதிகா நக்கலுக்கு...ஒரு படைப்பாளியின் பதிலடி.