Dec 6, 2014

காவியத்தலைவலி !.

காவியத்தலைவலி தாங்க முடியாமல், முகநூலில் ஆற்றிய எதிர்வினைகள் இதோ...

எ.வி. 1.
கே.பி.சுந்தராம்பாள்,எம்ஜியார்,சிவாஜி கணேசன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து இருக்கிறேன்.
இவர்கள் எல்லோரையும் விட திரு.வி.கே.இராமசாமி அவர்கள், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் முழுக்க முழுக்க நாடக அனுபவங்களையே எழுதி இருந்தார்.
கிட்டத்தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் அடங்கிய ‘நாடக வரலாற்று’ பொக்கிஷம் அது.
அதிலிருந்து,அற்புதமான வரலாற்று காவியத்தை உருவாக்கலாம்.
இனி எவனுமே அதை செய்ய முடியாதபடி ‘அரைவேக்காடு காவியம்’
உருவாக்கப்பட்டு விட்டது.
வெயில், அங்காடித்தெரு வசந்தபாலன் காலில் விழலாம்..
அரவான், காவியத்தைலைவன் வசந்த பாலனை காறி உமிழலாம்.
தப்பில்லை.
எ.வி. 2.

சூரபத்மனை கதாநாயகனாக்கி நாடகம் போட்டு ஜெயித்தவர் ஆர்.எஸ்.மனோகர்.
ஆர்.எஸ்,மனோகர் நாடகம் போட்டது எழுபதுகளில்...
வெள்ளைக்காரன் காலத்துல ‘வள்ளித்திருமணம்’ நாடகம் அனைத்து ‘நாடகக்குழுக்களாலும்’ நடத்தப்பட்டது.
ராஜபார்ட் = முருகன்.
கள்ளபார்ட் = சூரபத்மன்.
கள்ளபார்ட் வசனத்தை பேச சொல்லி...ராஜபார்ட்டுக்கு ஆள் எடுக்குறாங்க!
கேட்டா ‘காவியத்தலைவன்னு’ சொல்றாங்க!.
என்னமோ போடா...நாராயணா!.
எ.வி.3.

சே...மதுரை வீரன் வரலாற்றை படமாக்கிட்டாங்க!.
ப்யூட்டி பார்லர்ல இருந்து இறங்கி வந்த ப்யூட்டி குயினை ‘பொம்மியாக்கி’ இருப்பாங்க.
ஏ.ஆர்.ரஹ்மான் சிந்தசைஸர்ல இருக்குற பட்டனை பூரா அமுக்கி மியூஜிக் போட்டுருப்பாரு.
டான்ஸ் மாஸ்டர் ‘பிரபுதேவா’ மூவ்மென்ட்ஸ் கொடுத்து மதுரை வீரனை ஆட வச்சிருப்பாரு!
பத்மினிக்கு பதிலா ஹன்சிகா வந்து பரதம் ஆடி இருக்கும்.
ஜெயமோகனுக்கும் லட்சம் லட்சமா கிடைச்சு இருக்கும்.
பிரேம்ல ஒத்தை பந்தம் எரியுறதுக்கு...100 எச்.எம்.ஐ. லைட்டை எரியவிட்டு லைட்டிங் பண்ணி ‘நீரவ் ஷா’ ஒளிப்பதிவுல கலக்கி இருப்பாரு...
வசந்தபாலன் இன்னும் பல கோடி பார்த்திருக்கலாம்.
போச்சு... எல்லாம் போச்சு!.
எ.வி.4.

நாடக வாழ்க்கையை சித்தரித்த திரைப்படங்களில்,
நான் பார்த்ததை...தர வரிசைப்படுத்தி இருக்கிறேன்.
1.காவியத்தலைவன் | சித்தார்த்-வேதிகா | இயக்கம் : வசந்த பாலன்.
2. தாயில்லாமல் நானில்லை | கமல்ஹாசன் - ஸ்ரீதேவி | இயக்கம் : தியாகராஜன் .
3.ராஜபார்ட் ரங்கதுரை | சிவாஜி கணேசன் - உஷாநந்தினி | இயக்கம் : பி.மாதவன்.
1 = படு திராபை = படு மோசம்.
2 = திராபை = மோசம்.
3 = மூன்றையும் ஒப்பிடும் போது இப்படம் ‘காவியம்’.
எ.வி.5.
ராஜபார்ட் ரங்கதுரையை நேற்று மீண்டும் பார்த்தேன்.
காவியத்தலைவன் ஏற்படுத்திய விளைவு,
இப்போது, ராஜபார்ட் ரங்கதுரையை ‘காவியம்’ என கொண்டாடத்தோன்றுகிறது.
சிவாஜி கணேசன் நாடகத்துறையிலிருந்து வந்தவர் என்பதால்,
அந்த அனுபவங்கள் அவரது அசைவில் அணுஅணுவாக வெளிப்படுகிறது.
‘அல்லி அர்ஜூனன்’ நாடகத்தில் அவர் காட்டும் ‘உடல் மொழி’ ஆஹா...ஆஹா...அற்புதம்.
ஒரு நாடக நடிகன், சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களை எவ்வாறு எதிர் கொள்வான் என்பதை அவர் நடிப்பில் தரிசித்தேன்.
வாத்தியாராக நடித்த வி.கே.ராமசாமிக்கும்...நாசருக்கும் உள்ள வித்தியாசத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக, ‘ஆச்சி’ மனோரமாவின் அட்ராசிட்டி அபாரம்.
சிவாஜி பிரேமில் இருக்கும் போது, அவரை தூக்கி அசால்டா முழுங்கி ஒரு ரியாக்‌ஷன் குடுக்குறாங்க..பாருங்க!.
எப்பேர்ப்பட்ட மாமேதைகளின் நடிப்பை பார்த்து வளர்ந்திருக்கிறேன் நான் !.
சிறு வயது சிவாஜியாக நடித்த பையன், சிவாஜியின் உடல் மொழி,பாடல் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் முக பாவங்களை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறான்.
அட...சின்ன வயசு ‘ஸ்ரீதேவி’ ...என்னா போடு போட்டு இருக்கு!.
அடிச்சு சொல்றேன்...
பக்கோடாக்காதர் நடிப்புக்கு பதில் இருக்காடா...
உங்க ‘காவியத்தலைவலியில’.
ராஜபார்ட் ரங்கதுரையை ‘சுமார்’ என மதிப்பிட்டதற்கு..
மன்னிக்க வேண்டுகிறேன்.
முந்தைய பதிவிலும் திருத்தி விடுகிறேன்.
காவியத்தலைவன், தாயில்லாமல் நானில்லை படங்களோடு ஒப்பிடும் போது ‘ராஜபார்ட் ரங்கதுரை’ காவியம்.
எ.வி.6.
நேற்று ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற குப்பை படத்தை மீண்டும் பார்க்க முயற்சித்தேன்.
முடியல.
பாத்த வரைக்கும் சொல்றேன்.
இந்த குப்பை படத்திலிருந்து காட்சிகளை அப்படியே காப்பியடிச்சு படம் பண்ணி இருக்கானுங்க!.
அடப்பாவிங்களா...
முழு படத்தையும் பாக்க எனக்கு, திராணி இல்லை.
யாராவது முழுசா பாத்து...பட்டியல் போடுங்க!.
எ.வி. இனியும் தொடரலாம் !.