Nov 4, 2012

முக்தா சீனிவாசனுக்கு நன்றி.

நண்பர்களே...

நாயகன் \ 1987 \ தமிழ் \ இந்தியா \ இயக்கம் : மணிரத்னம்.

உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிக்கையால்,
உலகின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றானது நாயகன் திரைப்படம்.
படத்திற்கு வெள்ளிவிழா வயதான 25ம் ஆகி விட்டது.
ஆனால் அது பற்றி பேச்சு மூச்சின்றி இருந்தபடியால்...
நாயகன் திரைப்படமும்...பங்கேற்ற வல்லுனர்களும் மவுனமாக அழுது கொண்டிருந்தார்கள் போலும்.
அது யாருக்கு கேட்டதோ தெரியவில்லை... ஹிந்து பத்திரிக்கைக்கு கேட்டு விட்டது.

தொடக்க தயாரிப்பாளர் மறந்து போயும்...
உரிமை வாங்கிய தயாரிப்பாளர் மறைந்து போய் விட்ட நிலையில், அப்படத்தின் கதாநாயகனான கமலிடம் ஒரு கட்டுரை வாங்கி பிரசுரித்தது.
நாயகன் உருவாக்கத்தில்...
மணிரத்னத்தின் சிறப்பான பங்கையும்...
தானும், சக தொழில் நுட்ப மேதைகளும் கலா பூர்வமாக உழைத்ததை
நினைவு கூர்ந்து எழுதினார் கமல்.
எழுதலாமோ!

நாயகன் என்ன ஈ புக்கா ?...
'நாயகன்' உலக சினிமா.
நான் மட்டும் சொல்லவில்லை...நாடே சொல்கிறது.
டைம் பத்திரிக்கையும் அங்கீகரித்து பெருமை தேடிக்கொண்டது.

டைம் பத்திரிக்கை வழங்கிய கவரவுத்தையும் கொண்டாடவில்லை.
வெள்ளி விழா ஆண்டையும் கொண்டாடவில்லை.
 ‘தமிழை’ உயர்த்திப்பிடிக்க, 
தமிழ்த்திரை ரசிகர்களாகிய  ‘நாமும்’ தயாராக இல்லை.
கொண்டாட வேண்டிய உரிமையும், கடமையும் தயாரிப்பாளருக்கு மட்டுமே.
ஆனால், ஏன் தயாரிப்பாளர் தரப்பு மவுனம் காத்தது?
ஏனென்றால், தொடக்க தயாரிப்பாளர்
திரு. முக்தா சீனிவாசன் அவர்கள்...
படத்தை தயாரித்த மொத்த செலவையும்...வட்டியோடு சேர்த்து கணக்கிட்டு நியாயமான லாபத்தையும் பெற்று...
சகல உரிமையையும் மறைந்த திரு.ஜீ.வி அவர்களிடம் விற்று விட்டார்.

நாயகன் படத்திற்கு பெருந்தொகை பைனான்ஸ் செய்து...
படம் முழுமை பெற உதவிகரமாக இருந்த ஜீ.வி...
நாயகன் அவார்டும் பெறும்...ரிவார்டும் பெறும்...
எனக்கணக்கிட்டு
நம்பிக்கை வைத்து வாங்கினார்...ஜெயித்தார்.
படத்தாயாரிப்பில் கூடவே இருந்து...
பல படங்களை தாயாரித்து இயக்கிய அனுபவசாலியான
திரு. முக்தா சீனிவாசன்...
நம்பிக்கையில்லாமல் விற்றார்...தோற்றார்.

உலகமே கொண்டாடும் நாயகன் திரைப்படம்,
தயாரிப்பாளரால் கொண்டாடப்படாமல் நிர்கதியாக நிற்கும் அவலத்தை நினைத்து  வருத்தத்தில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இருந்திருக்கலாம்.
இந்த வருத்தமே கமல் பேட்டியில்...
தொடக்க தயாரிப்பாளராகிய திரு முக்தா சீனிவாசன் மேல் உரசலாக வெளிப்பட்டிருக்கிறது.

இனி, கடந்த பதிவின் தொடர்ச்சியாக சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

When Velu is taken to a brothel in a song sequence,
I expressed my exasperation by rolling my eyes.
Mani told me that this was a very Western thing,
and asked if I could give a more Indian expression.
That was a very happy day for me.
Suddenly I had someone who noticed these small things that make up a performance.
கமலின் நடிப்பில் உள்ள குறையை கண்டு பிடித்து...
சரியாக வேலை வாங்கிய இயக்குனர் மணிரத்னத்தின் ஆளுமையை வியந்து சொல்லப்பட்டிருக்கிறது.


He wasn’t a bad man.
He was just from an older school.
And he did help at times.
I must give him his due.
The scene where Velu’s future wife studies for her exams in the brothel was suggested by him.

தொடக்க தயாரிப்பாளர் திரு.முக்தா சீனிவாசன் பங்களிப்பாக வந்த காட்சியை சுட்டிக்காட்டி அவருக்கும் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

என்றும் மனதில் நினத்தவுடன் காட்சியளிக்கும்... 
மனித நேய ஓவியம்...அக்காட்சி.
“ நாளைக்கு கணக்கு பரிட்சை...சீக்கிரம் விட்டீங்கன்னா...”
இப்போதும்...இக்கணமும்.... இக்காட்சியை நினைத்து பார்த்த நெகிழ்ச்சியோடு சொல்கிறேன்...
நன்றி...நன்றி....நன்றி....ஐயா திரு.முக்தா சீனிவாசன் அவர்களே !
அதே சமயத்தில் அவரை  ‘ஓல்டர் ஸ்கூல்’ என விளித்ததும் சரியானதே.
அவர்  ‘ஓல்டர் ஸ்கூல்’ என்பதற்கு சாட்சி....
நாயகனை ஜீ.விக்கு விற்ற செயல் ஒன்று போதும்.
மாடர்ன் ஸ்கூலில் இருந்ததால்தான் மணிரத்னம்,கமல்,பி.ஸி.ஸ்ரீராம், தோட்டா தரணி, இளையராஜா,ஜீ.வி உள்ளிட்ட அனைவரும் நாயகனை உருவாக்கினார்கள்.
வசூலையும்...அவார்டுகளையும் அள்ளினார்கள்.

ஆதாரமாக விக்கிப்பீடியாவின் தகவல் இதோ...

The film released on 21 October 1987 coinciding with Diwali and received critical acclaim worldwide. 
Kamal Haasan's performance as Velu Naiker earned him a National Film Award for Best Actor
The film also earned the National Award for Best Cinematography(P. C. Sriram
and Best Art Direction (Thotta Tharani). 
The film was sent by India for theBest Foreign Language Film category 
at the 60th Academy Awards.
[2] In 2005, the Time Magazine included Nayagan in its list of "All-Time 100 Best Films".
3][4] This has also been included in The Moving Arts Film Journal greatest films of all time
[5] Nayagan was also included as one of 20 greatest Indian films of all time. 
This list emerged from the 'T20 of Indian Cinema' poll in which 20 experts from around the country - 10 young filmmakers and 10 seasoned critics and scholars participated.[6]

இப்போதும் மாடர்ன் ஸ்கூலுக்கு மாறி படமெடுக்க வாருங்கள்.
உங்களைப்போல சமுதாய பொறுப்பு மிக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தமிழர்களுக்கு இன்று உடனடித்தேவை.
85 வயது இளைஞன்  ‘கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை’ முன் மாதிரியாகக்கொண்டு வாருங்கள்.
வெல்கம்... முக்தா சார். 

After wrapping the film,

I was so happy that I took Sarika and went for a walk 

around the empty set.

I remember just sitting there with a satisfied sigh.

வாவ்...என்ன ஒரு சொல்லாடல் !

ஒரு கலைஞன்...படைப்பில் ஈடுபாட்டுடனும் நம்பிக்கையுடனும்
உழைத்ததால்தான் பரவச நிலையை அடைய முடியும்.
கட்டுரையின் இப்பகுதியை கட்டுடைக்கும்போது...
ஒரு வரி பொதிந்திருப்பது புலப்படும்.

சரிகா...ஐ மிஸ் யூ...

என்று தோன்றவில்லையா.  

இனி திரு.முக்தா சீனிவாசனின் வார்த்தைகளை ஆய்வோம்.
When the film was completed and the first print was shown to me, the film ran for 3 hours. 
Both Kamal and Mani wanted me to release the film as it was, 
whereas I knew that the audience would never sit through the movie. 

I told the editor Lenin to edit several unnecessary scenes. 
This gave life to the movie, along with the theme music Thenpandi seemayilae
Had it not been for Ilayaraja and Lenin, the movie would have flopped.
இங்கே தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்தை...  
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள்.
மூன்று மணி நேரம் ரசிகர்கள் உட்கார மாட்டார்கள் என எந்த இலக்கணப்படி  யோசித்தீர்கள்?
காட்பாதர், டைட்டானிக், பென்ஹர், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன் போன்ற காவியங்கள் எல்லாம்... 
மூன்று மணி நேரத்திற்கும் மேற்பட்டவைதானே !  

எடிட்டர் லெனின் துணையோடு அராஜகமாக...
மணிரத்னம் என்ற படைப்பாளி உருவாக்கிய காட்சிகளை... 
வெட்டி வீசி இருக்கிறீர்கள்.
காவியமான நாயகன் படத்தை... 
தேறாது என விற்ற வியாபாரி நீங்கள்...
வெட்டி வீசிய காட்சிகள் அனைத்துமே... 
காவியமாகத்தான் இருந்திருக்கும். 

தயாரிப்பாளர் செய்யும் அராஜகங்கள் காட்பாதரை உருவாக்கிய கொப்பல்லோவிற்கும் நிகழ்ந்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் படத்திலிருந்து தூக்கி வீசப்படுவோம் என்ற அச்சத்துடன்தான் கொப்பல்லோ செயல்பட முடிந்தது.
கொப்பல்லோவுக்கு மாற்றாக செட்டில் ஒரு  ‘ரெடிமேட் இயக்குனரை’ எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தது தயாரிப்பு நிறுவனம்.
விளைவு... ' THE GODFATHER' எனும்  'EPIC'


சினிமாவில் எடிட்டிங்கிற்கு  ‘இலக்கணம்’ எழுதிய... 
ஷ்ய திரை மாமேதை ஐஸன்ஸ்டைன் இயக்கிய படத்தை... 
தயாரிப்பாளரே எடிட்டிங் செய்து
வெளியிட்ட கொடுமையான வரலாறு இருக்கிறது.

ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

சீன சரித்திரத்தை கேப்ஸ்யூலாக்கி The Last Emperor திரைக்கதை அமைத்து இயக்கிய பெட்ரோலூசிக்கு [ Bernardo Betrolucci ] 
இசைந்த தயாரிப்பாளர் ஜெரமி தாமஸ் [ Jeremy Thomas ] போல் இருக்க வேண்டும். 

நாற்பது கோடி செலவழித்து உருவாக்கிய,  
‘இந்திய சரித்திரத்தின் கேப்ஸ்யூல்’ ஹேராம்...
தரத்தில் உயர்ந்தும் வசூலில் தோல்வியும் அடைந்த நிலையில் 
கமல் இடிந்து போயிருந்தார்.
“ விடுங்கள் கமல் ஜி...
நல்ல படத்தை தயாரித்த பெருமையும்...சந்தோஷமும்... 
எனக்குள் இருக்கிறது.
அது போதும்” என்ற பரத்ஷாதான் தயாரிப்பளர். 

உங்களை நாயகன் படத்தயாரிப்பாளர் என எப்படி சொல்வது ?
சட்டப்படியும் சொல்ல முடியாது...தார்மீகப்படியும் சொல்ல முடியாது.
நாயகன் என்ற காவியப்படத்தை தொடங்கிய தாயாரிப்பாளர் என்ற பெருமையை மட்டும்...வரலாறு என்றும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இறுதியாக உங்களுக்கு நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.
நீங்கள் தயாரிப்பில் போட்ட முட்டுக்கட்டைகள்தான்...
நாயகன் படைப்பாளிகளை இயக்கி... 
கிரியேட்டிவிட்டியாக வேலை செய்ய வைத்திருக்கிறது.
நெருக்கடியில்தான்  ‘கிரியேட்டிவிட்டி’ பிறக்கும்.
அந்த வகையில் உங்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றியோடு இருக்கும்.

இருவருடைய கட்டுரையிலும்... செண்டர் பாய்ண்ட் இருப்பது...

ஆர்ட் V \ S பிசினஸ்.
   
இந்த முரண்பாடு என்றும் இருக்கும்...
அதிலிருந்துதான் நல்ல படைப்புகள் வந்தன...இனியும் வரும். 

நாயகனின் நாயகர்களை போற்ற வேண்டாம்...
 ‘துருத்திக்கொண்டு’ வந்து தூற்றாமலிருக்கலாம் அல்லவா.

நாயகன் காட்பாதர் காப்பி என்ற கருத்துரையை வலியுறுத்தி...
ரொம்ப பேர் புளகாங்கிதம் அடைந்து வந்தார்கள்.
திரு.முக்தா சீனிவாசனும் இக்கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.
எனது பதிலுரையை விரிவாக அடுத்தப்பதிவில் காண்பீர்கள்.
அதற்கு உரம் சேர்க்க...வருண பகவானின் வரம் தேவை.

11 comments:

  1. நாயகன் டிலீட்டட் வேறு எங்கும் கிடைக்கவில்லையா? (ஒரிஜினல் டி.வி.டி?)

    *//அதற்கு உரம் சேர்க்க...வருண பகவானின் வரம் தேவை.//
    புரியலையே?

    ReplyDelete
    Replies
    1. ///நாயகன் டிலீட்டட் வேறு எங்கும் கிடைக்கவில்லையா? (ஒரிஜினல் டி.வி.டி?)///

      ஹாலிவுட் படங்களில் ‘நீக்கப்பட்ட காட்சிகள்’ டிவிடி அல்லது புளுரேயில் காணக்கிடைத்து விடும்.

      தமிழ் தயாரிப்பாளர்கள் வெட்டி எறியப்பட்ட பிலிம் ரோலை
      ‘எடைக்கு போட்டு’ தண்ணியடித்து விடுவார்கள் கண்ணியவான்கள்.

      ///*//அதற்கு உரம் சேர்க்க...வருண பகவானின் வரம் தேவை.//
      புரியலையே?///

      போன பதிவின் பின்னூட்டம் காண்க...

      Delete
    2. ஆங்.. புரியுது!

      Delete
  2. விடுங்க பாஸ்.. இவங்கெல்லாம் எப்பவுமே இப்படிதான் பாஸு!!

    ReplyDelete
  3. அண்ணே ஒரே பால்ல எத்தனை சிக்சர் அடிச்சு இருக்கீங்க!

    சில 'வருண' பகவானுங்க வியாதி முத்தி போயி நாயகன் வணிக ரீதியாகவும் வெற்றி படம் இல்லைன்னு இப்போ சொல்லிக்கிட்டு திரியுதுங்க. காண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கோம். இதுக்கு காண்டுபோபியான்னு புதுசா ஒரு வியாதி பேரே வச்சுடலாம்னு எனக்கு தோணுது.

    இதுங்க வியாதி முத்தி போச்சுன்னா, கமல், நாயகன் படத்துக்கு தேசிய விருது வாங்கலை, Times பத்திரிக்கையில் இதை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்லலை அப்படீன்னு சொல்லுவாங்கன்னு தோணுது.

    இப்போ ஆங் லீ வேற கமலின் அறிவு கண்டு உறைந்து விட்டேன்னு சொல்லி இருக்காரு. இதுக்கு என்ன பதவுரை எழுத போகுதுங்களோ? இன்னும் இதுங்களுக்கு அவங்க அப்பா தீபாவளி துப்பாக்கி எல்லாம் வாங்கி கொடுக்கலை போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோபி...
      நீங்க ஒரு ஒவர்ல செஞ்சுரி போட்டுட்டீங்களே!

      Delete
  4. பதிவின் இறுதியில் வருண பகவானை எல்லாம் இழுத்துட்டீங்க அண்ணா..அருமையான பதிவு..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தம்பி குமரா...
      இந்த வருணபகவான்...
      கமல் எனும் ஓவியத்தின் மேல் மட்டும்...
      உடனடி அமில மழை பொழிவார்.

      Delete
  5. சிலருக்கு வயதானால் இப்படியான மன பிறழ்வு பிரச்சினைகள் ஏற்படும். அதுதான் இந்த முக்தா (முட்டாள் என்றும் சொல்லலாம்) சீனிவாசனின் புலம்பல்.
    இதெல்லாம் கணக்கில் எடுக்க கூடாது.
    நம்ம வருண பகவன் எதற்க்கும் எதிர்மறையான கருத்துகளை கூறி விதண்டாவதங்களை வைப்பதில் வல்லவர். அவருக்கு தொழிலே அதுதான். இவர்களை எல்லாம் திருத்த முடியாது.

    கமலுக்கு இருக்கும் இந்த அறிவுஜீவி வட்டம் இங்கு இருக்கும் சில போலி அறிவுஜீவிகளுக்கு (அப்படி காட்டி கொள்ளும் ) பொறாமை. உதாரணமாக இணைய பிச்சைகாரன் (*ரு )எழுத்தாளரை கூறலாம். பொறாமை தீயில் எரியும் இந்த கீழ்புத்திக்காரர் கமல் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.
    இதுகளுக்கு ஆதரவாக அவர்களின் அல்லக்கைகள் தமது கொடுக்குகளை (கரும்) இணையத்தில் கொட்டி வருகின்றன.

    ReplyDelete
  6. "இப்போ ஆங் லீ வேற கமலின் அறிவு கண்டு உறைந்து விட்டேன்னு சொல்லி இருக்காரு. இதுக்கு என்ன பதவுரை எழுத போகுதுங்களோ? இன்னும் இதுங்களுக்கு அவங்க அப்பா தீபாவளி துப்பாக்கி எல்லாம் வாங்கி கொடுக்கலை போல இருக்கு."

    முக்தா முட்டாள் தனமாக உளறிய பொது பாய்ந்து வந்து பதிவு போட்டு தமது அரிப்பை சொரிந்து கொண்ட தேள்கள் இப்போ ஆங் லீ கமல் பற்றி சொன்ன விடயத்துக்கு கள்ள மௌனம் சாதிக்கின்றன.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.